பூசாரியிடம் தகராறு இருவர் கைது: இதுவும் அவன் செயலா?
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57531
தினமலர், ஆகஸ்ட் 08,2010,
குடும்பத்துடன் பூஜை செய்யச் சென்றவர்: விருத்தாசலம் : கம்மாபுரம் அருகே கோவில் பூசாரியிடம் தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கம்மாபுரம் அடுத்துள்ள சின்னகோட்டிமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவிகாந்தி. இவர் அதே ஊரில் உள்ள வீரன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்தக் கோவிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை (50) குடும்பத்துடன் பூஜை செய்யச் சென்றார்.
பூஜை செய்யாமல் காலம் கடத்துவதாக சண்டை: அப்போது பூசாரி சஞ்சீவிகாந்தி பூஜை செய்யாமல் காலம் கடத்துவதாக கூறி அய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் அருள்பிரகாசம், அருள்தாஸ் ஆகியோர் பூசாரியிடம் தகராறு செய்து தாக்கினர். [கூட்டமாக இருந்ததா, பூஜையை வேகமாக நடத்தவில்லையா என்ற விவரங்கள் தெரியவில்லை. பூஜாரியை அடிக்கும் வகையில் என்ன நடந்தது?].
பூஜாரியை அடித்தவர்கள் கைது: இதுகுறித்து சஞ்சீவிகாந்தி கொடுத்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து அய்யாதுரை, அருள்பிரகாசம் ஆகிய இருவரையும் கைது செய்து அருள்தாஸை தேடி வருகின்றனர் [இத்தகைய தாக்க்தல்களின் பின்னணியை ஆராய வேண்டும் – பூசை செய்வது தாமதம் ஆனதா, அல்லது வேறு காரணங்களுக்காக தாக்காப்பட்டாரா முதலிய விவரங்க்ளை ஆராயவேண்டும்].