தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன (2)
சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற மூவர் கைது:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53938
சென்னை, ஆகஸ்ட் 03,2010: மதுரை, நெல்லை பகுதிகளில் திருடிய சாமி சிலைகளை விற்க முயன்றவர்களை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிலை திருட்டு தடுப்புப்பிரிவு தனிப்படைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நிற்றுக் கொண்டிருந்த மருதுபாண்டி, ரவிச்சந்திரன் கைப்பைகளை சோதித்தனர். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருடப்பட்ட ஒரு அடி அம்மன் உலோக சிலை மற்றும் கேரளாவிலிருந்து கொண்டு வந்த பள்ளிகொண்ட பெருமாள் சிலை இருந்தது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் பிடிப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள புத்தர் சிலை கைப்பற்றப்பட்டது. இந்த மூவரும் கைது செய்யப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இச்சிலைகளை விற்க முயன்ற புரோக்கர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: அறநிலையத்துறை, அறநிலையத்துறை கட்டுப்பாடு, உலோக சிலை, கலைக் கொள்ளை, கோவில் திருட்டு, சாமி சிலை, சிலை, சிலைதிருட்டு
9:26 முப இல் ஓகஸ்ட்13, 2011 |
[…] https://atheismtemples.wordpress.com/2010/08/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A… […]
1:34 முப இல் மார்ச்24, 2012 |
[…] [7] https://atheismtemples.wordpress.com/2010/08/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A… […]
1:34 முப இல் மார்ச்24, 2012 |
[…] [7] https://atheismtemples.wordpress.com/2010/08/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A… […]
1:40 முப இல் மார்ச்24, 2012 |
[…] [7] https://atheismtemples.wordpress.com/2010/08/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A… […]