தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?

தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?

தமிழகத்தில் பகுத்தறிவு, புத்தறிவு, புது-அறிவு என்றெல்லாம் பேசிக்கொண்டு தாலிகள் அறுக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கின்றனர், தாலிகள் அறுக்க விழாக்கள் நடத்தியதால், மரத்துவிட்டன போலும் மனங்கள். ஆகையால் கோவில் கொள்ளை என்றால், ஏதோ இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டது போன்ற மகிழ்ச்சி. என்னே திராவிடத்தின் அலங்கோலம், கோவில் நிலங்களை திருட்டுத் தனமாக பட்டாப் போட்டு விற்பதில்[1] அலாதியான மகிழ்ச்சி. குடிசை மாற்று வாரியத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு கோவில் நிலத்தை விற்பர்[2]. கருணாநிதி[3]-ஜெயலலிதா[4] என்று மாறி-மாறி ஆட்சி செய்தாலும், இந்த கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியன நிற்பதில்லை. ஆக, இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்ற கொடிய கொள்ளையர்கள், குரூரத் திருடர்களையும் மிஞ்சி விடுவர் போலும்[5]! இதில் ரோசய்யா வந்தாலும், பங்கு கேட்காமல் விடுவதில்லை[6]. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை  கொள்ளையடிக்கப்படுகின்றன[7] என்று எடுத்துக் காட்டியுள்ளேன். டிசம்பர் 2009ல் ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலியவை கொள்ளையடிக்கப் பட்டன[8]. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றான் தமிழன் அன்று, இன்றோ குடியிருக்கும் இடத்தில் கோவில் வேண்டாம் என்பதோடு, இருக்கின்ற கோவில்களையும் இடிக்க வேண்டும் என்கிறார்கள்[9]. கருணநிதியே ஒரு விஜய நகரக் காலத்து மண்டபத்தை இடிக்கச் சொன்ன போது[10] படை தளபதி வீரமணி சும்மா இருப்பாரா, கோவில்களை இடி என்று முழங்கினார். மடாதிபதிகள் பலர் மிரட்டப் பட்டனர்; பொய் வழக்குகள் போடப்பட்டன; இளையபட்டங்களைத் தூண்டி விட்டு பிரிக்க சதி செய்தன; மடங்களினின்று மடாதிபதிகள் துரத்தப் பட்டனர்; மடங்கள் அபகரிக்கப் பட்டன[11]. சில மடங்களில் பிரிவினை ஏற்படவும் வழி வகுத்தன[12]. இதனால் பயந்து போன சில ஆதீனங்கள் கருணநிதியின் அடியையும் வருட ஆரம்பித்தன[13], இவை மொத்தமாக கீழ் கண்ட இணைத்தளங்களில் காணலாம்: https://atheismtemples.wordpress.com/

ஜனவரி 10, 2012 – புதுகை அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளை கோவிலுக்குள் புகுந்து மர்ம கும்பல் கைவரிசை ; தினமலர் – ஜனவரி 11, 2012: புதுக்கோட்டை அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சுவாமி சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்

இவ்விவரங்கள் பல இணை தளங்களினின்று பெறப்பட்டுள்ளன. எங்கிருந்து பெறப்பட்டன என்ற குறிபுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய தமிழகக் கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியவற்றைப் பார்க்கும் போது, அதில் ஒரு முறை காணப்படுகிறது.

விராலிமலை அடுத்த விராலூர் கிராமத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை பாராமரிப்பில் உள்ள இந்த கோவில் மிகவும் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் விசேஷ நாளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருவீதியுலா வருவது வழக்கம். இதற்காக ஐம்பொன்னால் ஆன தனி உற்சவ மூர்த்தி சிலைகள் மூலஸ்தானத்துக்குள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயர் என்பவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கலைநயமிக்க இந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரம் உடையதும், பல லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும். நேற்றுமுன்தினம் இரவு பூஜைக்கு பின் வழக்கம்போல் நடைகளை அடைத்துவிட்டு கோவில் அர்ச்சகர் மணிகண்டன் பட்டாச்சாரியார் மற்றும் ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர். நேற்று அதிகாலையில் பூஜைக்காக அர்ச்சகர் மணிகண்டன் கோவிலுக்கு வந்தபோது மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்ததைக்கண்டு திடுக்கிட்டுள்ளார்.  கருவறைக்குள் சென்று பார்த்தபோது பெருமாள் அருகில் இருந்த இரண்டு தேவியர் சிலைகளும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர் இதுகுறித்து

பொதுவாக தமிழகத்தில் முன்னர், தாலியைத் திருட மாட்டார்கள். ஆனால், இப்பொழுது, தெருக்களில் நடந்து செல்லும் போது, வீட்டு வாசலில் குனிந்து கோலம் போடும் போது, கழுத்தில் இருக்கும் தாலியைப் பறித்துச் செல்கின்றனர். அந்த அளவிற்கு அவர்களது மனநிலை மாறியுள்ளது. அதற்குக் காரணம் என்ன?

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விராலிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு விரைந்த போலீஸார், கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முதலில் மூலஸ்தான மெயின் கதவுகளின் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்றபின் கருவறை கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கருவறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமாள் அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் மோப்ப நாய் மார்ஷல் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளை மோப்பம் பிடித்த நாய் மார்ஷல் விராலிமலை – மதுரை சாலையில் ஒரு கி.மீ., தூரம்வரை ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. இதுபோன்று கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியும் நடந்தது. “இரண்டு நாட்களில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு சிலைகள் மீட்கப்படும்,” என பக்தர்களுக்கு டி.எஸ்.பி., கலியமூர்த்தி உறுதியளித்துள்ளார்.

ஜனவரி, 28, 2012 குரும்பூரில்கோயில்பூட்டைஉடைத்துஉண்டியல்கொள்ளைதினமலர் – ஞா, 29 ஜன., 2012: குரும்பூரில் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:குரும்பூர் அருளானந்தபுரத்தில் முனியசாமி கோயில் உள்ளது. இங்கு வழக்கம்போல் கோயில் பூட்டியிருந்தது. சம்பவத்தன்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் குரும்பூர் சப்இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்.

பிப்ரவரி 19, 2012, பரஞ்ஜோதி அம்மன் கோயில், காஞ்சிபுரம்[14]: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பரஞ்ஜோதி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அப்படி வரும் பக்தர்கள், கோயில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள உண்டி யலில் பணம், காணிக்கை செலுத்துவார்கள். நேற்று மதியம் 11 மணிக்கு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதையறிந்த பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். சில நபர்கள் மதில் சுவர் ஏறி குதித்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

 பிப்ரவரி 24, 2012 – குலசேகரன்பட்டினம் கோவிலில் கொள்ளை போன அம்மன் சிலை மீட்பு: வாலிபர் கைது[15]: கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்த நகை வியாபாரி முருகன். இவர் கோவை டவுன் ஹாலில் இருந்து சித்ரா செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அவர் தனது கைப்பையில் 1 கிலோ வெள்ளி நகைகளை வைத்திருந்தார்.பஸ் நவ இந்தியா அருகே சென்ற போது அவரிடம் இருந்த கைப்பையை ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு இறங்க முயன்றார். சுதாரித்து கொண்ட முருகன் சத்தம் போட்டார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் (26) என்று தெரிய வந்தது.மேலும் விசாரணையில் அவர் திருச்செந்தூர் குலசேகரன் பட்டினம் வீர மனோகரி அம்மன் கோவிலில் இருந்து பழமையான ஐம்பொன் சிலையை திருடி இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பாலசுந்தரத்தை கைது செய்தனர்.பாலசுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவையில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் 4? கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலசுந்தரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிப்ரவரி 25, 2012 – சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில், தூத்துக்குடி: தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பிரபல கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறு நாள்காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து திருவைகுண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க தாலி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய 79 கிராம் வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள், பூஜை பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

 மார்ச் 6, 3012- பெரியகுளம் அருகே காளியம்மன் கோவிலில் நகை, சிலைகள் கொள்ளை: போலீசார் விசாரணை[16]: தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அருகே உள்ள மேல்மந்தை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை பூசாரி சந்திரசேகரன் கோவிலுக்கு வந்தபோது கோவில் கதவுகள் உடைக்கப் பட்டு சாமி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மற்றும் வெண்கல சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சந்திரசேகரன் தேவதானபட்டி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தேவதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற “மர்ம” ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். சமீப காலமாக பெரியகுளம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மார்ச் 7, 2012 – விநாயகர் கோவிலில் பணம் கொள்ளை, கொடுங்கையூர், சென்னை[17]: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலில்

மூன்று மாதங்களில் தமிழகத்தில் இத்தனை கோவில் கொள்ளைகள் நடக்கின்றன என்றால், அது நாத்திகத்தின் விளைவா அல்லது பகுத்தறிவாளர்களின் சதியா?

நவக்கிரக சன்னதி அமைக்கப்படுகிறது. தங்கராஜ் நாடார் திருப்பணியை செய்து வருகிறார். செவ்வாய்கிழமை பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கோவில் அர்ச்சகரும் பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்று விட்டார்.  புதன்கிழமை காலை அர்ச்சகர் சுப்பிரமணி, நிர்வாகி கணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் விநாயகருக்கு எதிரே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கராஜ் நாடாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். கோவில் உண்டியல் 4 மாதமாக திறக்கப்படவில்லை. இதனால் ரூ.8 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என கருதப்படுகிறது. போலீசார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்ச் 8, 2012, ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன்கோயில்: பெர்ங்குடி, சென்னை: சென்னை அடுத்த பெருங்குடி சீவரம் ராஜீவ்காந்தி சாலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது[18]. காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். சுற்றியுள்ள பகுதி மக்கள், அம்மனை வழிபடுவார்கள். வழக்கம் போல நேற்றிரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் பூசாரி சுப்பிரமணி (41). இன்று காலையில் மீண்டும் நடையை திறக்க வந்தார். அப்போது கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் உள்ள பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் குப்புசாமி, அங்கசாமியிடம் தெரிவித்தார். உடனே அவர்கள், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மார்ச் 18, 2012: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு[19] – பதிவு செய்த நேரம்:2012-03-20 12:55:44: வாடிப்பட்டி: கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலுள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை இப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு கோயில் நிர்வாகி ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மார்ச் 23, 2012 – மாரியம்மன் கோவில் – ஊத்துக்கோட்டை, திருப்பேர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம்[20]: கோவில் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பூண்டி ஒன்றியம், திருப்பேர் ஊராட்சிக்கு உட்பட்டது பங்காருபேட்டை கிராமம். இங்கு, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, மக்கள் இந்த அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம், வழக்கம்போல, கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை, கோவிலைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. கோவில் பூசாரி சுப்பிரமணி பென்னலூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சிலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

வேதபிரகாஷ்

24-03-2012


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?”

  1. கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா? « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

    […] […]

பின்னூட்டமொன்றை இடுக