Archive for the ‘கோவில் உண்டியல் திருட்டு’ Category

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

ஒக்ரோபர்18, 2022

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

நாத்திகர் மற்றும் இந்துவிரோத திராவிடத்துவ வாதிகளின் கட்டுப் பாட்டில் கோவில்கள்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அளவுக்கு அதிகமாக, தினம்-தினம் கோவில் பற்றிய செய்திகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், திராவிட ஸ்டாக்குகள், என்றெல்லாம் பறைச் சாட்டிக் கொண்டு, இந்துவிரோதிகளாகத் தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்துக்களுக்கும் இதில் ஒன்று சந்தேகம் இல்லை. கோவில் திருப்பணிகளுக்கு வல்லுநர் குழு அமைத்தது. வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: “ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது”.

அரசு தனது கட்டுப்பாட்டை அதிகமாக்கி, அறிக்கைகள் விடுவது: “திருப்பணிகள் முடிவடைந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில்திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம் வாரியாக கோயில்களைத் தேர்வு செய்து, விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொண்டு, திருப்பணிக்கான வேலைகள் முடிவுற்றபின், குடமுழுக்கு நடத்துவதற்குபக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கலாம்,” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு, எல்லா விசயங்களிலும் தலையிட்டு, திராவிடக் கட்சிக்காரர்கள் தங்களது ஆதிக்கம், அதிகாரம், முதலியவற்றைக் காட்ட் வருகிறார்கள். ஊழலில் கைதான அறநிலையத் துறை அதிகாரிகள் மறுபடியும் பதவியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இதனால், ஊழல் ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்ற மனப்பாங்கும் வளர்ந்து விட்டது.

கோவில் திருப்பணிக்கு லஞ்சம் வாங்க வேண்டு என்ற மனோதத்துவம் என்ன?: இந்நிலையில் தான், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[1] என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. திருச்சி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[2]. கோயில் திருப்பணி தொடங்குவதற்கு உரிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டிய குழுவில் உள்ள தொல்லியல் துறை வல்லுநர்,  அதற்காக 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அவரை பொறி வைத்து பிடித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், என்றெல்லாம் விவரிக்கவும் செய்கின்றன. கோவில் திருப்பணி சேவை செய்ய, அரசு மாதம் சம்பளம் கொடுக்கிறது. ஓய்வு பெற்ற இவர்கள் பென்சனும் பெற்று வருகின்றனர். அதனால், பணம் இல்லை என்ற நிலை இல்லை. ஆகையால், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்க வேண்டும், அதிலும், கோவில் சேவைக்கு வாங்க வேண்டும் என்ற இவர்களின் அனோதத்துவம் ஆராய வேண்டியுள்ளது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பணிகள் ஆரம்பம்: கோவில் திருப்பணிகள் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்[3]. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். இந்த கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர்[4]. இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள்[5]. அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்[6]. இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சுமணி ஐயங்கார், இந்து அறநிலையத்துறையில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்[7]. இதில் கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை மாநில அளவிலான நிபுணர் குழு பரிசீலித்து வழங்கி வருகிறது[8]. இந்த குழுவில் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர் தலைமையில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

02-06-2022 மற்றும் 12-10-2022 தேதிகளில் மூர்த்தீஸ்வரி வந்தது: இது தொடர்பாக அந்த நிபுணர் குழு கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி கோவிலில் ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை அதிகாரி இந்த நிபுணர் குழுவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜா நகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி ஆவார். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர். இவர் கடந்த 12-ந்தேதி மீண்டும் கோவிலுக்கு வந்து அறங்காவலர் குழுவினரை சந்தித்து ஆய்வு அறிக்கை வழங்க ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் ரூ.10 லட்சம் அதிகமாக உள்ளது என்றார். இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ரூ.5 லட்சம் தாருங்கள், ஆய்வறிக்கை வழங்குகிறேன் என்று கூறினார். “இதனையடுத்து ஐந்து லட்ச ரூபாய்  குறைத்துக் கொண்டு மீதி ஐந்து லட்ச ரூபாயாவது  கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்று கறார் காட்டிய மூர்த்தீஸ்வரி  முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறு  கேட்டுள்ளார்,” என்கிறது காமதேனு[9]

புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை  கொடுத்தது, மூர்த்தீஸ்வரி மாட்டிக் கொண்டது: போலீசார் அதிரடி கைது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார்[10]. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார்[11]. இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிச்சுமணி ஐயங்காரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதனை மூர்த்தீஸ்வரியிடம்  கொடுக்குமாறு கூறினர்.  அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைபடி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து மூர்த்தீஸ்வரியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார்[12]. அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சேவியர் மேரி உள்ளிட்ட போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்[13]. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூர்த்தீஸ்வரி காரில் ரூ ஐந்து லட்சம் இருந்தது: அவரிடம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோயில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்திருக்கிறது[14].   மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில்  கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது. ஒருவேளை மற்ற இடங்களுக்குச் சென்று வசூல் செய்த பணம் போலிருக்கிறது. எது எப்படியாகிலும், கோவில் என்றும் பார்க்காமல், இவ்வாறு பலர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கோவில் பணத்தை, அதாவது பக்தர்களின் காணிக்கையை இவ்வாறு பலவிதங்களில் கொள்ளையடிப்பது, பங்கு போட்டுக் கொள்வது, முதலியவற்றை நிச்சயமாக, கடவுள் பார்த்துக் கொன்டிருக்கிறார், மற்றும் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பார் என்று ஒவ்வொரு பக்தனும் நம்பிக் கொண்டிருக்கிறான். அது உண்மை.

© வேதபிரகாஷ்

18-10-2022.


[1] தினத்தந்தி, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது, தினத்தந்தி அக்டோபர் 18, 1:40 am.

[2] https://www.dailythanthi.com/News/State/charity-department-woman-officer-arrested-for-accepting-bribe-of-rs1-lakh-817094

[3] நக்கீரன், கோவில் ஆய்வறிக்கைக்கு லஞ்சம்! பிடிபட்ட தொல்லியல் துறை வல்லுநர்!, மகேஷ்,Published on 18/10/2022 (12:34) | Edited on 18/10/2022 (12:51).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bribe-temple-thesis-arrested-archeologist

[5] குணசீலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள லட்ச ரூபாய் லஞ்சம்… பெண் அதிகாரி அதிரடி கைது…, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 18, 2022, 15:50 IST, TIRUCHIRAPPALLI, INDIA

[6] https://tamil.news18.com/news/trichy/female-officer-arrested-for-bribe-lakhs-of-rupees-to-carry-out-repairs-of-gunaselam-temple-820666.html

[7] தினமலர், கோயில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது, Updated : அக் 18, 2022  10:41 |  Added : அக் 18, 2022  10:34.

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=3148843

[9] காமதேனு, 5 லட்சம் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை; பேரம் பேசிய பெண் தொல்லியல் வல்லுநர் கையும் களவுமாக சிக்கினார்!, காமதேனு, Updated on : 18 Oct, 2022, 9:33 am

[10] தினகரன், ரூ1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது, 2022-10-18@ 14:58:17

[11] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=807670

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருச்சி கோயில் திருப்பணிக்காக ஆய்வறிக்கை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம்: தொல்லியல் பெண் நிபுணர் கைது, Written by WebDesk, Updated: October 18, 2022 10:30:34 am.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-woman-archaeologist-arrested-for-taking-rs-10-lakh-bribe-for-temple-restoration-527004/?utm_source=newsstand&utm_medium=Referral

[14] https://kamadenu.hindutamil.in/national/archaeologist-arrested-by-anti-bribery-police-for-demanding-bribe-at-gunaselam-temple

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்! ஆனால், அதே நேரத்தில் பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன!!

திசெம்பர்25, 2021

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்! ஆனால், அதே நேரத்தில் பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன!!

தொல்லியல் ஆலோசகா்கள்  (Archaeological Advisor) நியமனம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதி ஏற்படுத்தப்பட்டு பொறியியல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுள்ளன[1]. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் பிறபிக்கப்பட்ட உத்தரவில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களின் தரவரிசைப்படுத்தி முறையாக பரமாரித்து புனரமைப்பது குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது[2]. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான தொல்லியல் ஆலோசகா்கள்  (Archaeological Advisor) நியமனம் செய்யப்பட்டுள்ளனா்[3]. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு[4]:  “நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களின் தரவரிசைப்படுத்தி முறையாக பராமரித்து புனரமைப்பது குறித்து பல்வேறு உத்தரவுகளை சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுஇந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இத்திருக்கோயில்கள் கட்டடக் கலையின் சிறப்புகளை பறைசாற்றுவதுடன், தமிழா்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூா், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் கடலூா் : அறிக்கை தொடர்கிறது[5], “மேலும் பல்வேறு திருக்கோயில்களின் மூலிகை ஓவியங்களை பழைமை மாறாமல் புதுப்பித்து பராமரிப்பது அவசியமாகும். இப்பணியை தொல்லியல் துறையினை சாா்ந்த வல்லுநா்களின் ஆலோசனை பெற்று அவா்களது மேற்பார்வையில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் பழைமையினை பாதுகாக்க இயலும் என்ற நோக்கத்தில் தொல்லியல் ஆலோசகராக காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூா், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் கடலூா்  ஆகிய இணை ஆணையா் மண்டலங்களுக்கு, நிபந்தனைகளுக்குட்பட்டு நியமனம் செய்யப் பட்டுள்ளனா்தொல்லியல் ஆலோசகா்களாக நியமனம் செய்யப்பட்டவா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையா் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தி சம்பந்தப்பட்ட இணை ஆணையா் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்,” என்று கூறுகிறது[6].

கோவிலை இடிக்க வந்தபோது, பெண்கள் சாமியாடி விரட்டினர். அதாவது, நாத்திக ஆட்சியாளர்கள் அந்த அளவுக்குக் கூட பெண்களின் உணர்வுகளை மதிக்கவில்லை

ஆலோசக வேலை செய்யவேண்டும்: அறிக்கை தொடர்கிறது[7],தொல்லியல் ஆலோசகா்கள், ஆணையா், இணை ஆணையா் மற்றும் உதவி ஆணையா்  ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் திருக்கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். தங்கள் பகுதிகளின் பழைமை வாய்ந்த திருக்கோயில்களை அவ்வப்போது ஆய்வு செய்து திருக்கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தொல்லியல்துறை ஆலோசகா்கள் அறிக்கை அனுப்ப வேண்டும். தொல்லியல்துறை ஆலோசகா்கள் மேற்கொள்ள  வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது அறிவுரை வழங்கப்படும்,”என்று கூறுகிறது[8].

இதன்படி நியமிக்கப் பட்டுள்ள தொல்துறையினர் பின் வருமாறு[9]: யார்-யார் நியமிக்கப் பட்டுள்ளனர்?

  1. காஞ்சிபுரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன்,
  2. ஈரோடு மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன்,
  3. சேலம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் செல்வராஜ்,
  4. தஞ்சாவூர் மண்டல அலுவலகத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் வாசுதேவன்,
  5. வேலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை பதிவு அலுவலர் கலைவாணன்,
  6. விழுப்புரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் தண்டபாணி,
  7. திருவண்ணாமலை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன்,
  8. திருச்சி மண்டலத்துக்கு மாநில தொல்லியல்துறை உதவி இயக்குனர் கணேசன்,
  9. மதுரை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம்,
  10. கடலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை காப்பாட்சியர் பரணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்[10].

ஆலோசகர்களின் வேலை என்ன?: * தொல்லியல் ஆலோசகர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையர் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்திட சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

*  இந்த அலுவலர்கள் ஆணையர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

* அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது வரையறை செய்ய வேண்டும்.

* மேலும் தங்கள் சரகத்திலுள்ள பழமைவாய்ந்த கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

* தொல்லியல் ஆலோசகர்கள் ஓராண்டிற்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்னதோ அதுவரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

* வல்லுநர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படுகிறது. வல்லுநர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியத்தினை கோயிலின் நிதியிலிருந்து வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. பின்னர் தொகுப்பூதியத்தினை ஆணையர் பொதுநல நிதியிலிருந்து பெற்று கோயிலுக்கு திரும்ப வழங்கிட விதிகளின்படி உரிய முன்மொழிவினை அனுப்ப சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*  நிர்வாக நலன் கருதி இந்த தொல்லியல் ஆலோசகர்களை முன்அறிவிப்பின்றி ஆணையர் பணி நீக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோயில்களை புனரமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர்கள் ‘தொல்லியல் ஆலோசகராக’ நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணி: இவையெல்லாம் ஏதோ புதியது போலவும், கட்ந்த ஆண்டுகளில் நடக்காதது போலவும் இருக்கிறது. இடைகாலத்தில், துலுக்கர்களின் கோவில் இடிப்புகள், அழிப்புகளுக்குப் பிறகு, விஜயநகர, நாயக்க மன்னர்கள், வணிகர்கள், செல்வந்தர்கள், பக்தர்கள் செய்யாத புனரமைப்பு சேவைகளை இவர்கள் செய்து விடப் போகிறார்களா என்று தெரியவில்லை இதை வைத்து கான்ட்ராக்ட் கொடுக்கும் போது கமிஷன் அடிக்க, கொள்ளையடிக்க திட்டம் போடுவது போல இருக்கிறது. ஏனெனில், கருணாநிதி காலத்தில் காஞ்சிபுரத்தில் புராதன மண்டங்கள் இடிக்கப் பட்டன. அதனை ஆர்.நாகசாமியே எடுத்துக் காட்டியுள்ளார். அவர் மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன், பல கோவில்கள் இடிக்கப் பட்டு விட்டன. பிறகு, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதி ஏற்படுத்தப்பட்டு பொறியியல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுள்ளன[11],” என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

25-12-2021


[1] மாலைமலர், திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம், பதிவு: டிசம்பர் 12, 2021 15:43 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/12/12154342/3282565/Archaeological-Consultants-Appointed-for-Temple-Renovation.vpf

[3] தினமணி, புனரமைப்பு பணிக்கான தொல்லியல் ஆலோசகா்கள் நியமனம், By DIN  |   Published on : 13th December 2021 05:39 AM.

[4]https://www.dinamani.com/tamilnadu/2021/dec/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3753816.html

[5] தமிழ்.இந்து, பழைய கோயில்களை சீரமைக்க தொல்லியல் ஆலோசகர் நியமனம், செய்திப்பிரிவு, Published : 13 Dec 2021 03:07 AM; Last Updated : 13 Dec 2021 03:07 AM

[6] https://www.hindutamil.in/news/todays-paper/regional01/746484-.html

[7] இ.டிவி.பாரத், 100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் –  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்!, Published on: Dec 12, 2021, 7:40 PM IST.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/100-years-old-temples-hr-and-ce-department-appoints-archaeologists-to-restore-temples/tamil-nadu20211212194000330

[9] தினகரன், நூற்றாண்டு பழமையான 8 ஆயிரம் கோயில்கள் புனரமைப்பு பணி தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை, 2021-12-13@ 00:09:46. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=726978

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=726978

[11] மாலைமலர், திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம், பதிவு: டிசம்பர் 12, 2021 15:43 IST.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது[1]: இவையெல்லாம், ஏதோ புதியதாக கண்டுபிடித்தவை போன்று அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. அதாவாது, கோவில் சம்பந்தப் பட்ட எல்லா விசயங்களிலும் நுழைவது என்று தீர்மானமாக இருப்பது தெரிகிற்து. முன்னர் உழவாரப் பணிக்குக் கூட புதியதாக கன்டிஷன்களுடன் அறிக்கை வெளியிடப் பட்டது[2]. அவற்றைப் படித்துப் பார்த்தால், உழவாரப் பணியையே நிறுத்திவிட அத்தகைய திட்டம் போட்டுள்ளது போன்றிருந்தது. இத்தனை ஆண்டுகளாக, மனமார தொண்டு செய்ய வேண்டும் என்று சிறுவர்-பெரியவர், ஆண்கள்-பெண்கள்; படித்தவர்-படிக்காதவர் என்று எந்த வித்தியாசமு இல்லாமல், ஏல்லோரும் சேர்ந்து திருப்பணி செய்து வந்தனர். இதனால், ஆயிரக் கணக்கான கோவில்களின் உட்புறம்-வெளிப்புறம் சுத்தமடைந்து கொண்டிருந்தன. தொலைவில் இருக்கும்கோவில்களில் கூட பணி செய்யப் பட்டது. இனி, அவ்வாறு நடக்காது போலிருக்கிறது. ஏற்கெனவே சுமார் இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பிரச்சினையால் உழவாரப் பணி நடௌபெறாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

  1. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கொண்டாட்டம் தான். தினம்-தினம் கும்பாபிஷேகம் நடத்துவர்கள் வசூல் செய்வார்கள். ஆனால், ஆகமங்கள், விதிமுறைகள் தடுக்கின்றன.
  2. அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.
  3. பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.
  4. மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
  5. இப்படியெல்லாம் நடந்து கொண்டே இருந்தால், ஜாலியாகத்தான் இருக்கும். அதனால் தான், அதிகாரிகள், ஊழியர்கள் கழுத்துகளில் தொங்கும் நகைகளின் விட்டம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
  6. நூதனம், கும்பாபிஷேகம், புனருத்தாரனம் முதல் மற்ற எந்த புனித காரியமாக இருந்தாலும் சரி, கமிஷனர் வரைக் கூட பார்த்து கவனிக்க வேண்டியுள்ளது. பலதடவை சென்று வர வேண்டியிருக்கும். குறிப்பிட்ட நாளில் வாருங்கள் என்று சொல்லி அவர் இல்லை என்றால், எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். கவனிக்கப்படவில்லை என்றால் பலதடவை நடக்கவேண்டியிருக்க வேண்டும்.
  7. பிறகு அனுமதி ஆணை வாங்கவேண்டும், அதை வாங்குவதற்கு கீழுள்ள அதிகாரிகள் கவனிக்கப் படவேண்டும். சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்திலிருந்து, கோவில் உள்ள இடம் வரை அறநிலயத்துறை ஆட்கள் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள்.
  8. யாரிடம் எப்படி வாங்குகிறீர்கள், என்றெல்லாம் கேட்பது, வாங்கும் லஞ்சத்தின் அளவை நிர்ணயிக்கும். அயல்நாட்டிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது என்றால், லஞ்சம் தவிர மற்ற எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் வெளிப்படும், வரும்.
  9. முன்பே விசாரிக்கவும் செய்வார்கள் – எவ்வளவு தேரும் என்ற கணக்கீடு. பழைய ஆவணங்களை, முந்தைய விண்ணப்பங்கள் முதலியவற்றையும் எடுத்துப் பார்த்து கணக்குப் போட்டு வைப்பார்கள்.
  10. கஷ்டப்பட்டு, லட்சங்கள் கோடிகள் வசூல் செய்து, வேலை ஆரம்பித்து முடிக்கும் வரையில் ஏகப்பட்ட இடையூறுகள், இடைஞல்கள்………உண்டாக்குவார்கள்.
  11. அந்தந்த வேலைகள் செய்ய, எங்கள் ஆட்களை வைக்க வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற தொல்லை……..வட்டம், மாவட்டங்கள் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
  12. கோவில் உள்ள கிராமத்தில், இடத்தில் உள்ளூர் கோஷ்டிகள் தொல்லைகள், மிரட்டல்கள்…..அங்கும் காசு கொடுக்க வேண்டும்…..
  13. சப்ளை செய்யும் மண், செங்கல், கம்பி, பெயின்ட் …….எல்லாவற்றிற்கும் பணமாக / கேஷாக கொடுத்துவிட வேண்டும்….பில்கள், இன்வாட்ஸ்கள் பற்றி சொல்ல வேண்டாம்…..
  14. இதற்கெல்லாம் ஒத்துழைக்கவில்லை என்றால், இரவோடு இரவாக கட்டுமானப் பொருட்கள் காணாமல் போய்விடும், கோவில் வேலைகளைப் பொறுபேற்று செய்யும் சேவகர்கள் மிரட்டப் படுவார்கள், அவர்கள் வீட்டில் திருடுகள் நடக்கும், பொய் வழக்குகள் போடப் படும். அந்த அளவுக்கு இடையூறுகள், பாதிப்புகள் இவற்றையெல்லாம் மீறி, சாமர்த்தியமாக, திருப்பணி செய்ய வேண்டும்.
  15. எல்லாம் முடிந்து விழா ஏற்பாடு என்றால், அந்த நோட்டிஸுகளில், சுவரொட்டிகளில், விழா அழைப்பிதழ்களில் உண்மையான / உண்மையாக உழைத்தவர்கள் பெயர்களை விட அந்த லஞ்சக்காரன், கொள்ளைக்காரன், ரௌடி, அரசியல்வாதி, சம்பந்தமே இல்லாத இதே வகையறாக்கள்…….. அதற்கும் மேலாக நாத்திக-இந்துவிரோதி அமைச்சர், முதலம்மைச்சர் படங்கள் முன் அட்டையில் பக்கத்தில் இருக்க வேண்டும், ஆனால், அக்கோவில் சாமி படம் பின்னால் இருக்க வேண்டும்.
  16. முதலமைச்சர் படம் இல்லையென்றால், அவ்வளவுதான், நிகழ்ச்சியே ரத்து செய்யப் படும் அளவுக்கு காரியங்கள் நடந்துள்ளன. மறுபடியும் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டுள்ளன.
  17. விழா அன்றோ இவர்களுக்கு வண்டி ஏற்பாடு, சாப்பாடு செலவு எல்லாம் செய வேண்டும். கோவில் விழா என்றாலும் அசைவ சாப்பாடு கேட்பார்கள், ஏற்பாடு செய வேண்டும்….சில இடங்களில் மற்றவையும் கேட்பார்கள்…..
  18. பூஜாரிகள், குருக்கள், சிவாச்சாரியார்கள், பட்டர்கள், போன்றவர்களை ஒருமையில் பேசுவார்கள், விளிப்பார்கள், உரையாடல்களில் குறிப்பிடுவார்கள்.
  19. ஆக இத்தனை இடையூறுகள், அவமானங்கள், பாதிப்புகள் முதலிய கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும்போதும், கோவில்கள் நலம், ஆகமங்களைப் போற்றும் கடமை, அவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகள் முதலியவற்றைக் கவனத்தில் கொண்டு பொறுமையோடு கடமைகளை ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செய்து வருகின்றனர்.
  20. ஆனால், நாத்திகம், இந்துவிரோதம் மற்றும் ஆட்சியாளர்களின் சார்பு என்று கொண்டுள்ளவர்கள் உண்மைகளை மறைத்து பிரச்சாரம் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்[3]. கருணாநிதி இந்துமதத்தின் நண்பன் என்றேல்லாம் எழுதுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஔரங்ஜசீப் கோவில்கள் கட்ட மானியம் கொடுத்தான் போன்ற கதைகள் தான்[4].

ஔரங்கசீப்பின் ஜெஸியாவை நோக்கி செல்லும் திமுகவின் நாத்திகஇந்துவிரோத ஆட்சி[5]: ஔரங்கசீப் ஆட்சியில் ஜெஸியா முறை பின்பற்றப் பட்டு வந்தது. அத்தகைய வரிமுறைப்படி, இந்துக்கள் கடுமையாக அடக்கி வைக்கப் பட்டனர். தங்களது தினசரி பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், பண்டிகைகள் எத்வும் பின்அர்ர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் படி, யாரும் (இந்துக்கள்) புதியக் கோவிலைக் கட்டக் கூடாது. இருக்கும் கோவில்களைப் புதுப்பிக்கக் கூடாது. பழுதடைந்தாலும், ரிப்பேர் செய்யக் கூடாது. இந்துக்கள் கோவில்களுக்குச் செல்லக் கூடாது, ஆனால், முகமதியர்களுக்கு அனுமதி கொடுக்கப் படவேண்டும்[6]. அவர்கள் தங்குவதானாலும், இடம் கொடுக்க வேண்டும். பக்தர்கள் அளிக்கும் காணிக்கை முழுவதும் அரசுக்கு வரவேண்டும். விலையுயர்ந்த சிலைகள், பொருட்கள் முதலியன, சுல்தான் கொள்ளையிட்டு செல்வான். யாரும்தடுக்கக் கூடாது. கூட்டம்சேர்க்கக் கூடாது, விழாக்கள் கொண்டாடக் கூடாது. 

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] இது நிச்சயமாக உள்நோக்கத்துடன் உண்டாக்கப் பட்ட தடை தான், இத்தகைய அடக்குமுறைகளில் உழவாரப் பணியே நடக்காமல் போய் விடும், ஒருவேளை அதுதான், ஆட்சியாளர்களின் திட்டம் போலும்.

[2] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 06:19 AM.

https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[3] பாரி ஜோஸ்-சிவகுமார், கலைஞரே இந்துமதத்தின் உண்மை நண்பன், PARI JOSE; A Sivakumar,  JUNE 14, 2020.

[4]https://ilovedmk.wordpress.com/2020/06/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/

[5] நிச்சயமாக ஔரங்கசீப்பின் அட்சிமுறை மக்களுக்குத் தெரிந்திருக்காது, ஆனால், இந்த இந்த ஆறாண்டு மாத கால ஆட்சி அனைத்தையும் தன்னுள் கொண்டு, எடுத்துக் காட்டிவிட்டது.

[6] இப்படித்தான் கருணாநிதி குடும்பத்தினர் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர், கிரிவலம் வருகின்றனர், நேர்த்திக்கடன் செல்லுத்தி வருகின்றனர்.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

காலமுறை அறிக்கை சமர்ப்பிக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு: அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் காலமுறை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்[1]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[2]:  அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி இத்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து தலைமை அலுவலகத்திற்கு கால முறை அறிக்கைகள் அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடம் இருந்து கால முறை அறிக்கை பெற்று தொகுத்து சரிபார்த்து ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேலும், காலமுறை அறிக்கையில் அளிக்கப்படும் விவரங்களுக்கு இணை ஆணையர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள். 2021 செப்டம்பர் மாதம் வரையிலான விவரங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அடுத்து வரும் மாதத்திற்கான கால முறை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பணியாளர் விவரங்கள்பணியில் உள்ளவர், ஊழலில் மாட்டிக் கொண்டவர், ஓய்வு பெறப் போகிறவர் முதலியன: அதில்,

  • எத்தனை மாவட்டங்களில் மாவட்ட குழு ஏற்படுத்தி உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது,
  • பரம்பரை உரிமை வழக்கு நிலுவையாக உள்ளவை எவ்வளவு,
  • நிர்வாக திட்டம் இல்லாத கோயில்களின் எண்ணிக்கை,
  • அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டிய கோயில்களின் எண்ணிக்கை,
  • பரம்பரை அறங்காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இனங்களின் எண்ணிக்கை,
  • கோயில்களில் பணியிடங்கள் விவரங்கள்,
  • எத்தனை பணியாளர்கள் ஓழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
  • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்,
  • 4 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை விவரம்,
  • அடுத்த 5 ஆண்டுகளில் 50-55 வயது அல்லது 25/30 வருட பணி நிறைவு செய்யும் நபர் கட்டாய ஓய்வு பரிசீலினைக்கு உட்பட்ட பணியாளர் விவரம்,
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி காலி பணியிட விவரம்,
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பணியில் சேர்ந்து 3 மாதங்களுக்கு சொத்து விவர பட்டியல் தாக்கல் செய்ய வேண்டிய பணியாளர்கள் எண்ணிக்கை, …….

கோவில் பணி, நிதி, திருப்பணி பற்றிய விவகாரங்கள்: கடந்த மாதம் (செப்டம்பர் 2021) வரை

  • -எத்தனை கோயில்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்ட விவரம்,
  • கோயில்களின் திருப்பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி,
  • சுற்றுலாத்துறை,
  • திருப்பணி நிதி,
  • தேர் திருப்பணி நிதி,
  • ஆலய மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்ட விவரம்

உட்பட 485 விவரங்களைய அனுப்ப வேண்டும். உரிய காலத்திற்குள் கால முறை அறிக்கை விவரங்களை அனுப்பாத, அனுப்ப தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவையெல்லாம் திடீரென்று கேட்கப் படவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அலுவலகத்தில், அந்தந்த பிரிவில் வேலைசெய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள், எழுத்தர்கள் என்று கோப்புகளை வைத்திருப்பவர்களுக்கு விவரங்கள் தெரிந்திருக்கும். மாதாந்திர, வருட அறிக்கைகள் மண்டலங்கள், கோவில்கள் அனுப்பாமல் இருக்காது. அவற்றைத் தொகுத்து முழு அறிக்கைத் தயாரிக்கவேண்டியது, நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாகும். ஆகவே, இவையெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.

கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகை: கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது[3]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[4]: கோயில்களில் கட்டப்படவிருக்கும் மண்டபம், பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டிட பணிக்கு முறையே மண் பரிசோதனை செய்யப்பட்டு வடிவமைப்பு கணக்கீடு தயார் செய்து கட்டப்படவிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமாக இருக்க வேண்டிய சர்வே எண்ணுடன் கூடிய சர்வே வரைபடம் இணைத்தல் வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு, ஒப்பந்த நகல் மற்றும் தொடர்புடைய வரைபடங்கள், வடிவமைப்பு கணக்கீடுகள் போன்றவற்றின் நகல்கள் தளத்தில் வைத்திருத்தல் வேண்டும். ஆணையர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆய்வின் போது பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.

* நடைபெற்றும் வரும் பணிகளை மாதம் ஒரு முறை செய்பொறியாளர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகள் முடிவுற்ற பின் பணியின் மதிப்பீட்டு தொகை என்னவாக இருப்பினும் பணி முடிவடைந்ததற்கான சான்றினை செயற்பொறியாளரிடம் பெற்று பின்னரே இறுதியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

* பணியின் மதிப்பு ரூ.2 கோடி வரை என்றால் 15 நாட்கள், ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் ரூ.30 நாட்கள் வரை குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியாக அழைக்க ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

* ஒப்பந்தபுள்ளி திறப்பு முதல் பணி ஆணை வழங்கும் நாள் வரை கால அவகாசம் 90 நாட்களுக்கு அதிகமாக இருக்க கூடாது.

100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இப்படி தினம்-தினம் ஆணைகள் பிரப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்:

* கோயில் பணிகளான கோபுரம், விமானம் போன்ற ஸ்தபதிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும்போது தொல்லியல் துறை, மாநில அளவிலான கமிட்டி, உயர் நீதிமன்ற கருத்து ஆகியவற்றின் கருத்துகளின் அடிப்படையிலும், வரைபட குழுவின் அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின் அடிப்படையிலும் திருப்பணிக்கான மதிப்பீட்டில் தொல்லியல் துறையினரால் அவ்வபோது வழங்கப்படும் கருத்துருவின் அடிப்படையில் தொன்மை மாறாமல் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.

* கட்டுமான பணிகளுக்கு சான்றினை பெற்று தரமுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். இரும்பு கம்பிகள், ஜிஐ ஷீட், அலுமினியம் ஷீட் ஆகிய இனங்களுக்கு தொடர்புடைய தரச்சான்று பெற்று அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில்களின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்[5].

* கோயில் கட்டுமானங்களில் சுண்ணாம்பு, வண்ணப்பூச்சு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[6].

இவையெல்லாம் கோவில் பணிகள் அனைத்தும் முடக்கும் செய்யும் திட்டம் போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] தினகரன், கோயில்களின் திருப்பணி உட்பட 485 தலைப்புகளின் கீழ் விவரம் அளிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை, 2021-10-11@ 00:04:07.

[2]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711498

[3] தினகரன், பணிகள் முழுவதும் முடிந்த பிறகே பணம் பட்டுவாடா கோயில்களில் திருப்பணிகளை செயல்படுத்த விதிமுறைகள் வெளியீடு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை, 2021-10-04@ 02:53:37.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709797

[5] தினகரன், 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு, 2021-10-12@ 12:45:30.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711977

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

செப்ரெம்பர்14, 2021

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

2015ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்: கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது[1]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2]. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

2015 முதல் 2021 வரை: இரட்டை வேடம் போட்டு வரும் திராவிட கட்சிகள், ஒரு வருட அர்ச்சகர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அர்ச்சகர் வேலை கொடுக்கிறோம் என்று, விளம்பரத்திற்காக அரசியல் செய்து வருகின்றன. அதிமுக சட்டப் பிரச்சினையை அறிந்து, ஆகமங்கள் இல்லாத கோவில்களுக்கு இருவரை அர்ச்சகராக நியமித்து அமைதியானது. இப்பொழுது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வேண்டுமென்றே, சட்டமீறலைச் செய்ய, இவ்வாறு செய்துள்ளது. நீதிமன்றங்களுக்குச் சென்று, வருவதற்குள் ஆண்டுகள் ஆகிவிடும், அதுவரை பார்த்துக் கொள்ளலாம் என்ற வீம்புடன் வேலைக்கு வைத்துள்ளது தெரிகிறது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மாநிலத்தில் உள்ள 38 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது[3]. இது தொடர்பான வேறு வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதால், இம்மனுவை அவற்றோடு சேர்த்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இந்த சமர்ப்பித்தலைப் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை முதல் பெஞ்சிற்கு அனுப்புமாறு பதிவகத்திற்கு உத்தரவிட்டது[4].

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[5]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[6]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[7]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[8]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

© வேதபிரகாஷ்

14-09-2021


[1] விகடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, Published: 16 Dec 2015 11 AM; Updated:16 Dec 2015 11 AM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/56403-only-qualified-people-can-become-priests

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முறையாக பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம்; உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம், Written By WebDesk, Updated: August 17, 2021 11:51:03 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/trained-persons-can-be-priest-tamilnadu-govt-said-to-high-court-333167/

[5] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[7] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

மு.க.ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

ஓகஸ்ட்11, 2021

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம்: கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும். என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்[1]. சேகர்பாபு, இவ்வாறு கூறி, அத்திட்டத்தை அமூல் படுத்த திட்டம் தீட்டியுள்ளது தெரிகிறது[2]. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது[3]. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்[4]. ஆனான பட்ட, மோடியே, இத்தகைய ஆலோசனை சொன்ன போது, பெரும்பாலான கோவில்கள் ஒப்புக் கொள்ளவில்லை[5]. பக்தர்களின் காணிக்கைக்களை அவ்வாறு உருக்குவது, மிகப் பெரிய பாவம் என்றும் எடுத்துக் காட்டினர்[6]. ஏனெனில் நம்பிக்கைக்கு உகந்த விசயங்களில், நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தலையிட உரிமை இல்லை.

திராவிட-நாத்திக-இந்துவிரோத-விக்கிரங்களை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை: பக்தர்கள் கடவுளுக்கு பிரியமுடன், பக்தியுடன் கொடுக்கும் நகைகள் பயன்பாட்டுடன் உள்ளது-இல்லை என்பதை ஆட்சியாளர் தீர்மானிக்க முடியாது. லட்சக் கணக்கான பக்தர்கள், ஏழை-பணக்காரன், படித்தவன்– படிக்காதவன் போன்ற நிலைகளைத் தாண்டி, பக்தியுடன் கடவுள்ளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் படும் நகைகளை அவ்வாறேல்லாம் மாற்றுவது, வியாபாரரீதியில் பயன்படுத்துவது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது, போன்றவற்றை செய்ய ஆட்சியாளர்களுக்கு, அதிலும், நாத்திகம் பேசி, இந்து மத்த்தைத் தொடர்ந்து பழித்து வரும் திராவிடத் தலைவர்கள் அத்தகைய விவகாரங்களில் மூக்கை உழைக்க எந்த முகாந்திரமோ, யோக்கியதையோ இல்லை என்பது மிக சாதாரணமாகத் தெரிகிறது.. தானம் கொடுத்த பக்தர்களின் உணர்வுகளை மீறிய செயல்களைச் செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சேகர் பாபுவை புகழும் சில ஊடகங்கள்: சமயம் TOI (Times of India) என்று சொல்லிக் கொண்டாலும், அது சேகர் பாபு புகழ் பாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கைகளின் பரவலுக்கான தீவிர முயற்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய சூழலில், மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பம்பரமாக சுழன்று சேகர் பாபு களப்பணியாற்றி வருகிறார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது, ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் பணியில் அமர்த்த நடவடிக்கை, கொரோனா காலத்தில் கோயில்களில் தயாரிக்கப்படும் உணவுகளை மருத்துவமனைகளுக்கு அளிப்பது என சேகர் பாபுவின் நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு தெரிவித்துள்ளார்[7]. மேலும், தமிழ்நாடு திருக்கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பார் என்றும் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்[8].

2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன: ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள, 2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன[9]. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும்[10]. இதன் மூலம் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். இதனை உடனடியாக மேற்கொள்ளத் தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என, அமைச்சர் கூறியுள்ளார். இக்குழுக்களில் இந்துவிரோதிகள், ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட நியமிக்கப் படுவர். இப்பொழுது, தமிழ்நாடு பாடநூல் துறை நிறுவனமே அதனை மெய்ப்பித்துள்ளது. நமக்கு விபரம் தெரிந்த வரையில், வங்கியில் நகையை அடமானமாக பெற்று, வட்டிக்கு கடன் கொடுப்பர். தங்க நகையை, ‘டிபாசிட்’ ஆக பெற்று, அதற்கு வட்டி வழங்குவதாக தெரியவில்லை[11]. மேலும், தமிழக கோவில்களில் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிமாக இருக்கும் என்றும், 2,000 கிலோ எனக் குறிப்பிடுவதில், ஏதும் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது[12]. இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில், ‘ஹிந்து’ என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது: தினமலரில், இதனை விமர்சித்து, கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. “ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது. நடப்பதை பார்த்தால், மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும், ‘குளோஸ்செய்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்னும் சில வாரங்களில் ஆயுத பூஜை வரவுள்ளது. இதை அரசு அலுவலகத்தில் கொண்டாட கூடாது என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பினாலும் ஆச்சரியமில்லை. வரும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் பொங்கல், தமிழ் ஆண்டு பிறப்பு, தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்காது என்று கருதலாம். இரண்யன் ஆட்சியில், ‘இரண்யாய நமஹஎன்று தானே சொல்லியாக வேண்டும். ‘ஓம் நமோ நாராயணாஎன சொல்ல முடியுமா என்ன?” விபூதி-குங்குமம் வைத்தே இந்துக்கள ஏமாற்றி விடுவோம் என்று சொன்னவரும் இன்று அமைச்சராக இருக்கிறார். ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, வீடியோ, புகைப் படங்கள், செய்திகள் எல்லாம் இன்றும் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கோவில்களில் தங்க நகைகள், தங்க விக்கிரகம் முதலியவற்றில் எல்லாம் மோசடிகள் நடந்துள்ளன. ஆகவே, இந்நிலையில், தங்க அகைகளை உருக்குகிறேன் என்றால், அதில் கோடிகளில் ஊழல் செய்வர் என்பது திண்ணம். ஆகவே, இத்தகையோர், கோவில் விவகாரங்களிலிருந்து, தூரத்தில் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

11-08-2021


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் தங்க நகைகள்.. முதல்வர் மு..ஸ்டாலின் வகுத்த திட்டம்.. புதிய தகவல் சொன்ன சேகர்பாபு!, By Rayar A Updated: Sunday, July 18, 2021, 10:19 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sekarbabu-has-said-that-more-than-rs-560-crore-of-temple-lands-have-been-recovered-durin-427355.html

[3] தினத்தந்தி, கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில்டெபாசிட்செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்., ஜூலை 27, 09:29 AM

[4] https://www.dailythanthi.com/amp/News/State/2021/07/27092913/Minister-Sekarbabu-informed-that-the-decision-was.vpf

[5] India Today, The Modi government wants gold idling in temple vaults to be part of the India growth story. The trusts aren’t enthusiastic , Amarnath K Menon, April 30, 2015; ISSUE DATE: May 11, 2015UPDATED: May 1, 2015 12:49 IST.

[6] https://www.indiatoday.in/magazine/religion/story/20150511-gold-akshaya-tritiya-world-gold-council-temple-818296-2015-04-30

[7] சமயம், கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டி: தமிழக அரசிடம் புதிய திட்டம்!, Manikandaprabu S | Samayam TamilUpdated: 23 Jul 2021, 11:35:00 AM

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/new-money-earning-scheme-to-be-implemented-from-temple-gold-in-tamilnadu/articleshow/84669132.cms

[9] சமயம், கோயில்கள் வருவாய் பெருக்க திமுக அமைச்சர் சேகர்பாபு சூப்பர் திட்டம்!,  Akash G | Samayam TamilUpdated: 24 Jul 2021, 08:28:00 AM.

[10] https://tamil.samayam.com/latest-news/salem/hindu-temples-gold-will-be-made-as-biscuits-will-be-kept-deposit-which-generates-income-minister-sekar-babu-new-plan-salem-byte/articleshow/84677474.cms

[11] தினமலர், இது உங்கள் இடம் : ‘இரண்யாய நமஹசொல்லணுமோ!, Updated : ஆக 03, 2021  03:15 |  Added : ஆக 03, 2021  03:12.

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2815320

இப்படி வேடம் போட்டு, ஓட்டுக் கேட்டு இந்துக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியில் பேச்சு, உருதுவில் போஸ்டர் இத்யாதிகள்.
இன்றைக்கு இவர் அமைச்சராக உள்ளார்!

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி ஐ.பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பதில் (3)

ஜூலை17, 2021

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி .பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பதில் (3)

இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றிருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது:  அதாவது, இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்கள் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக சேர்க்கப் பட்டார்கள் என்கிறார் போலும். அவ்வாறே, பெண்களும் பூஜாரிகள் ஆகலாம் என்ற பீடிகை, தொணி புரிகிறது. அமைச்சரும் அதை வெளிப்படையாக சொல்லி விட்டார். அவர் சிக்ஸர் அடித்தார் என்று செய்தி வெளியிடப் பட்டது, இப்பொழுது திலகவதி சென்சுரி அடிக்கப் பார்க்கிறார் என்று தெரிகிறது. இதுவும் அதே, சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி நடப்பதை யாரும் எதிர்க்க முடியாது. அதே போல ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றையும் மாற்ற முடியாது, என்றவற்றிற்குப் பொருந்தும். செக்யூலரிஸத்தனமாக பார்த்தால் கூட, மற்ற மதங்களில் அவ்வாறு செய்ய முடியுமா போன்ற கேள்விகளை எழுப்பலாம். ஆகவே, இத்தகைய தேவை இல்லாத வாதங்கள், செய்திகள் முதலியவற்றை தவிர்க்கலாம்.

கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது: “கடவுளின் முன் அனைவரும் சமம்,” என்பதனை முதலமைச்சர் முதல், அறநிலையத் துறை கடை-ஊழியர் வரை, பற்பல முறை, பல கோவில்களில் அத்து மீறியிருக்கிறார்கள். சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி, ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றை மீறியிருக்கிறார்கள். மேலும், நாத்திக-திராவிடத்துவ வாதிகள் நிலை-நிலைகள் தான் இங்கு கேள்விக்குறியாக்கும். ஆத்திகர் போர்வையில் நாத்திகரும், இந்து போர்வையில் இந்து-அல்லாதோரும் கோவில்களில் நுழைந்துள்ளன. அவர்கள் “கடவுள் இல்லை,” “கடவுள் இருக்கிறார்” மற்றும் “எக்கடவுள்” போன்ற போலித் தனங்களில் வெளிப்படுகிறார்கள். இந்துவிரோத நாத்திகர், திராவிட நாத்திகர், துலுக்கர், கிருத்துவர் கம்யூனிஸ்டுகள் என்றும் அவர்கள் “இந்து கடவுள்” முன்பு சமமாக இருந்து, கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு திலகவதி என்ன பதில் சொல்வார்?

ஆட்சியாளர்கள் இறைநம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா என்பதும் முக்கியம்: அப்படியென்று சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி, ஆகமசாத்திர நெறிப்படி எங்கும் சொல்லப் படவில்லை. அதனால் தான், ஔரங்கசீப் போல, கருணாநிதி காலத்தில் கோவில்கள், கோவில் மண்டபங்கள் இடிக்கப் பட்டன. மாலிக்காபூர் போல பல கோவில்கள் சிதைக்கப் பட்டன, கொள்ளையடிக்கப் பட்டன, சிலைகள் மாயமாகின.  இறைநம்பிக்கை கிஞ்சித்தும் இருந்திருக்குமேயானால்,ஆவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான். 100 கோவில்களை கொள்ளையடித்தாலும், 10 கோவில்களை விட்டிருப்பான். அடுத்தது, “ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா,” என்றால், இல்லை என்று நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. “பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா,” என்றால், நிச்சயமாக இல்லை என்ற பதில்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான், “அறநிலையத் துறையிலிருந்து கோவில்களை மீட்போம்,” என்ற கோஷம் 40 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்து விட்டது, தொடர்கிறது. அதிகமாகியுள்ளது. மக்கள் ஆதரவு இல்லையென்றால் அவ்வ்வாறு நிலைமை மாறி இருக்க முடியாது. இப்பொழுது திலவதியும் இதைப் பற்றி, எழுதியிருக்க மாட்டார்.

இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்கு தீங்கானதும் ஆகும்: 70 ஆண்டுகளாக அப்படி என்ன “இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தப்,” படவில்லை என்று விளக்கவில்லை. அதேபோல, “அத்துறையை வலுப்படுத்தப்” படவில்லை என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளில், ஆண்கள்-பெண்கள் என்று அறநிலையதுறையில் நுழைந்தாலும், பெண்களும் ஆண்களுக்கு இணையாக ஊழல், குற்றம் புரிந்து கைதாகியுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். எவ்வளவோ கணினிமயமாக்களில் முன்னேற்றம், ஏற்பட்டு விட்டப் பிறகு, இப்பொழுது, ஆவணங்களை இணைதளங்களில் ஏற்றுவோம் என்று வந்துள்ளனர். இவையெல்லாம் நிர்வாகம் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது. ஒருவேளை, அதைத்தான் குறிப்பிட்டு, “இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டும்,” என்கிறார் போலும்! அப்படியென்றால், அர்ச்சகர் பயிற்சிக்கு பதிலாக, இவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். கொடுத்திருந்தால், 70 ஆண்டுகளில் அவர்களது நிர்வாகத் திறமை, மேன்மை அடைந்த நிலை முதலியவை வெளிப்பட்டிருக்கும். ஆனால், ஊழல், திருட்டு, மோசடி, கைது, சஸ்பென்ட் என்று நடந்து வருவதால், நிலைமை வேறு விதமாக உள்ளது.

பக்தர்கள் தனியார் இல்லை: “கோவில் நிர்வாகத்தை அறநிலைத்துறையிடம் இருந்து விடுவித்து (பக்தர்கள் பெயரில்) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன[1]” என்று திலகவதி எழுதியிருப்பது தவறு. பக்தர்கள் பெயரில் தனியார் என்று குறிப்பிடுவது அபத்தமானது. இத்தகைய இயக்கங்களில் பொறுப்புள்ள ஆச்சாரியார்கள், அரசாங்க அதிகாரிகள், ஓய்வு பெற்ற நிபிணர்கள் மற்றுமல்லாது, லட்சக் கணக்கான மக்கள் ஆதரவும் சேர்ந்துள்ளது. முன்னமே குறிப்பிட்டபடி, அறநிலயத் துறை ஊழல், குற்றங்கள் முதலியனவே, அத்துறை அதிகாரிகளை வெளிப்படுத்தி விட்டது. வேலியே பயிரை மேய்கிறது என்பது மட்டுமல்லாது, வேலியை நீக்கி, நிலத்தையும் அபகரிக்க வேலைகள் நடந்து விட்டன, நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கட்சிகளில் சேர்ந்து கொண்டிருப்பதால், திலகவதி இவ்வாறு அரசு சார்பாக, திராவிடத்துவத்தை ஆதரித்து, இடதுசாரிகள் பாணியில் வலதுசாரிகளை குறைசொல்லி, சட்டம் போர்வையில் பார்ப்பனத்தையும் தாக்கி, ஒட்டு மொத்தமாக, இத்தகைய கட்டுரை வெளியிட்டிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.  

  1. கோவில் நிர்வாகம் நிச்சயமாக இந்துக்கள், கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் பொறுப்பில் இருக்க வேண்டும். கசாப்புக் காரன்கள் அஹிம்சைவாதிகளாக இருக்க முடியாது. இதற்கு மேலாகவும் இதனை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
  2. செக்யூலரிஸம் எனும் போதே, மற்ற வழிபாட்டு ஸ்தல நிர்வாக போல, கோவில் நிர்வாகமும், இந்துக்களால் நிர்வகிக்கப் படவேண்டும்.
  3. திமுக அமைச்சர், திடீரென்று 24 x 7 திட்டத்தில் வேலை செய்வது போல தினம்-தினம் செய்திகள் வந்துள்ளதைக் கவனித்திருக்கலாம், கவனிக்கலாம்.
  4. அறநிலைய அமைச்சர் முதல், ஆணைய அதிகாரி மற்ற ஊழியர்கள், எறும்புகள் போல, சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம், கோவில்-கோவிலாக விசிட், டிவி செய்திகள் முதலியன.. வருகின்றன.
  5. கோவில் சொத்துக்கள் பற்றிய விவரங்களையெல்லாம் இணைதளத்தில் வெளியிடுவோம் என்று ஆரம்பித்தாலும், அவை முழுமையாக இல்லை.
  6. பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்புகள், ஆணைகள், உத்தரவுகள், அறநிலையத் துறை செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் அமைந்திருந்தன.
  7. சிலைதிருட்டு, விக்கிரகக் கடத்தல், முதலியவை, வழக்குகள், கைதாகிய அதிகாரிகள், முதலியவற்றைப் பற்றி மூச்சுக் கூட விடக் காணோம்.
  8. ஆனால், குற்றஞ்சாட்டப் பட்ட, வழக்குகள் நிலைவையில் உள்ள, சஸ்பென்ட் செய்யப் பட்ட அதே அதிகாரிகள், கூட்டங்கள், விஜயங்கள் முதலியவற்றில் இருப்பது கனிக்கப் படுகிறது.
  9. இரண்டு வருடமாக கோரோனா, கோவில் அடைப்பு போன்ற விவகாரங்களினால், ஆறுகால பூஜைகள், தினசரி, பட்ச, மாத கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்தனவா-இல்லையா என்று தெரியவில்லை.
  10. திராவிடத்துவ அரசியல்வாதிகள் அந்நிலையில் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், பெண்கள் அர்ச்சகர் என்றெல்லாம் கிளப்பி விட்டு, வேடிக்கைப் பார்க்கின்றனர்.இக்கட்டுரையும், அதே பாணியில் இருக்கிறது.

. © வேதபிரகாஷ்

17-07-2021


[1] குங்குமம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருக்க வேண்டும்!, திலகவதி ஐபிஎஸ் (முன்னாள் காவல்துறை அதிகாரி), 11 Jul 2021.