ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ரோசையா- கருணாநிதி சமரசம்!

ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில்நிலம் ஆக்கிரமிப்புவிவகாரம்: ரோசையாகருணாநிதி சமரசம்!

மாநிலங்களுக்கிடையில் உள்ள கோவில் நில பிரச்சினை: ஆந்திராவுக்கு சொந்தமான சிவன் கோயில் நிலம் தமிழகத்தில் உள்ளதால். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ரோசையா, தமிழக முதல்வர் கருணாநிதியை இன்ற சந்தித்து பேசுகிறார். ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி கோயிலுக்கு சொந்தமான நிலம் தமிழகத்தில் உள்ளது. இந்த நில விவகாரம் தொடர்பாக உரிய இழப்பீடு வழங்க கோரி அம்மாநில முதல்வர் ரோசையா ,தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்[1].

ரூ. 5,000 கோடி மதிப்பிலுள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது அமராவதி கோயில் மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமான 470 ஏக்கர் நிலம் 1850-ம் ஆண்டு வசியரெட்டி ராஜா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய சந்தையின் மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலம் தமிழகத்தில் சென்னை அருகே மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலப்பகுதியில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப மென்பொருள், நிறுவனங்கள், மெகா கட்டடங்கள் உள்ளன. இவற்றிற்காக நிலங்களை விற்கும்போது, கோடிகளில் பணத்தை அள்ளினர் குறிப்பிட்ட தனிநபர்கள்[2], அரசியல்வாதிகள், கோவில்நில ஆக்கிரமிப்பு திராவிட நாத்திக சக்திகள்.

ஆந்திரா தமிழ்நாட்டின் மீது தொடுத்துள்ள வழக்கு: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த நிலத்தின் மீது ஏற்கனவே ஆந்திர அரசு செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் உரிமையியல் வழக்கும் தொடர்ந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமானது 470 ஏக்கர் நிலம்[3], இதன் மதிப்பு ரூ. 5,000/- கோடிகளுக்கு மேல். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்படாத நிலையில் எஞ்சிய 200 ஏக்கர் நிலத்தினை மீட்பதற்காக ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் திவாகர் ரெட்டி தலைமையிலான குழவினர் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

ஸ்டாலின் பேச மறுத்த மர்மம் என்ன? ஸ்டாலினுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்று தெரிவித்தபோது, இதற்கு துணை முதல்வர் மறுத்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட நில அபகரிப்புக் கூட்டம், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் அல்லது ஆளுங்கட்சிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று தெரிகிறது. மேலும் ஏற்கெனெவே பல நிருவனங்கள் கட்டிடங்களைக் கட்டியாகிவிட்டது, பல மக்கள் வீடுகளையும் கட்டிக் கொண்டுள்ளனர், என்றெல்லாம் கூட பேசியாதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் ரோசையா தமிழக முதல்வருக்கு எற்கெனெவே கடிதம் எழுதியுள்ளார். அதில் நிலத்திற்கு தற்போதைய அரசு நிர்ணயவிலையில் இழப்பீடு தர வேண்டும் எனகோரியுள்ளார். இப்படி இந்த விஷயம் வெளியே வர, சம்பந்தப்பட்டவர்கள் உஷாராகி விட்டனர். கருணாநிதியும் இது குறித்து ஆக.7-ம் தேதி (இன்ற) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறியுள்ளதை தொடர்ந்து முதல்வர் ரோசையா , தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்.

கருணாநிதி தெலுங்குக்காரர் என்று ரோசய்யா நினைத்தது தப்பாகி போய்விட்டது: கருணாநிதி ஆந்திராவிலிருந்து வந்து குடியேரியவர். இதனால், ஓரளவிற்காவது, ஆந்திர மக்கள் / தெலுங்கு பேசும் மக்களின் எஅலனில் அக்கரை இருக்கும் என்று ரொசய்யா எதிர்பார்த்ததாகத் தெரிந்தது. ஆனால், “முதலமைச்சர்” ரீதியிலேயே பேசியது, ரோசய்யாவிற்கும், மற்ற ஆந்திர மாநில அதிகார்களுக்கும் வியப்பாக இருந்தது. ஓசூரில் உள்ள தெலுங்கு பேசும் மக்களின் நிலை பற்றியும் பேசியுள்ளதாக தெரிகிறது[4].

நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம்: அதாவது கோவில் நிலம் அம்பேல்: கடைசியில் விஷயம் வெளிவரக்கூடாது என்ற நிலையில், கருணாநிதி இவ்விஷயத்தை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்கு ரோசய்யாவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதன்படி சிவன் கோவிலுக்கு சொந்தமான 470 ஏக்கர் நிலத்தில் ஏற்கெனெவே ஆக்கிரமித்த நிலத்தை விட்டுவிட்டு, பாக்கி 200 ஏக்கர் நிலத்திற்கு தமிழ்நாடு ஆந்திராவிற்கு இழப்பீடு கொடுக்கும்,  பதிலுக்கு, ஆந்திர இந்து ஆறநிலையத்துறை தனது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும்[5]. ஆக, சிவன் கோவில் நிலம் அம்பேல்! கருணாநிதி இந்து மதத்திற்கு இவ்வாறாக, மற்றொரு துரோகத்தையும், தனது கடைசி காலத்தில் செய்துள்ளார்.

தமிழகத்தில் நாத்திக அரசுதான் கோவில் நிர்வாகத்தை நடத்தி வருகிறது என்பது தெரிந்த விஷயமே. ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கோவிலில் திருட்டு முதலியன நடந்து வருவதும் தெரிந்த விஷயம்தான். மேலும் கருணாநிதியே கடவுள் என்று ஆஸ்தான கவிஞர்கள், வித்வான்கள், புலவர்கள் எல்லோரும் ஏற்கெனவே அறிவித்தாகி விட்டது. அரசு துறையில் கருணாநிதியை சிவனான உருவகப்படுத்தி விளம்பரங்களும் கொடுத்தாகி விட்டது. ஒருவர் கோவிலையும் கட்டிவிட்டார். தமிழகத்தை கருணை பூமியாக மாற்றப் போவதாக வேறு சொல்லிவிட்டார் கருணாநிதி! இந்நிலையில், ‘எல்லாம் அவன் செயல்”, என்று வீரமணி கிண்டல் அடிக்கிறாரா, அல்லது, “நாங்கள் சொல்லியதை செய்வோம், செய்வதைச் சொல்வோம்”, என்ற பாணியில், திகவினரே அறைகூவல் விடுகிறார்களா? கருணாநிதி சொல்வது போல, பெரியார்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்!


[1] தினமலர், கோயில்நிலவிவகாரம் : ரோசையாகருணாநிதிஇன்றுசந்திப்பு, ஆகஸ்ட் 07, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56974

[2] http://ibnlive.in.com/generalnewsfeed/news/tn-to-depute-official-to-discuss-ap-temple-land-encroachment/213565.html

[3] http://www.deccanchronicle.com/chennai/tn-officials-help-ap-resolve-land-row-740

[4] http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=12315&id1=10

[5] http://www.deccanchronicle.com/hyderabad/ap-settle-temple-land-row-tn-388

குறிச்சொற்கள்: , , , , , , , ,

10 பதில்கள் to “ரூ.5,000/- கோடி மதிப்புள்ள சிவன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ரோசையா- கருணாநிதி சமரசம்!”

  1. vedaprakash Says:

    Government’s land grab causing much distress
    Sangeetha Neeraja
    First Published : 30 Nov 2009 04:18:00 AM IST
    Last Updated : 30 Nov 2009 12:14:45 PM IST
    http://expressbuzz.com/Cities/Chennai/governments-land-grab-causing-much-distress/126103.html

    In August this year 2009, Deputy Chief Minister M K Stalin, who also holds the Industries portfolio, revealed that the State with 49 notified SEZs had generated an investment of Rs 30,512 crore, beating its own target of Rs 30,000 set in the 2008-2009 policy note of the Industries Department.

    Apart from the SEZs, the State intends to use SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu Ltd) to develop a land bank of 20,000 acres within a period of five years. The land bank will be used to draw corporates to set up industries.

    No problems with that. But one wonders whether the deputy CM is aware of the plight of those whose agricultural lands were acquired by hook or by crook using The Tamil Nadu Acquisition of Lands for Industrial Purposes Act 1997, which experts claim is a draconian law. “The lands were mindlessly acquired by using the ‘public purpose’ clause in the Act,” said Sanjay Parikh, senior advocate who practises at the Supreme Court, adding, “The law is unconstitutional as it overrides the Central Land Acquisition Act, 1894.”

  2. saintthomasfables Says:

    The Land prices On OMR near Sirseri to Sholinganallur is around Rs.20 Crores per Acre.

    A Sipcot Auction got a price of Rs.10 Crores for a lease hold land.

    Government now should put all the datas of properties of all Temples on net, so that people would know the truth.

  3. கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு! « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

    […] https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-enc… […]

  4. S. K. Ambalavanan Says:

    In Tamil, there is a proverb “Sivan sothu, kula nasam” i.e, if anybody grabs the property of Siva temple, his family-lineage would be ruined.

    But, now most of the properties of Siva temples in tamilnadu have been grabbed by the politicians, their benamies, local councilars, ward member, panchayat leader and so on.

    Where the temple land cannot be sold, the lans have been leased to big people and the revenue is not reaching the temples.

    In fact, many Siva temples in rural areas and villages have been in ruins, whereas, the acres of temple lands are being enjoyed by others.

    Ironically, they have no courtesy or decency even to give money for temple repairs, pujas or important celebrations.

  5. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [1] https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-enc… […]

  6. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [1] https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-enc… […]

  7. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [1] https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-enc… […]

  8. தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? « நாத Says:

    […] [1] https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-enc… […]

  9. கோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா? « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் Says:

    […] https://atheismtemples.wordpress.com/2010/08/09/%E0%AE%B0%E0%AF%82-5000-crores-valued-siva-temple-enc… […]

  10. SEETHARAMAN Says:

    now not only DMK INVOLVING IN THIS TRADE, BUT ALSO THE VIDUTHALAI SIRUTHAIGAL KATCHI IS MORE KEEN ON THIS KIND
    OF LAND GRABBING ACTIVITIES AND CHEATING POLICY under the guise of HELPing OF SPECIAL PROVISION GIVEN TO SC AND ST’S IN OUR CONSTITUTION. BUT ONE SHOULD UNITE ATLEAST HEREAFTER TO PROTECT NOT ONLY THE TEMPLE LANDS BUT
    ALSO THAT of the mutts and other affected communities………

பின்னூட்டமொன்றை இடுக