திராவிடத்துவஆட்சியில்மடத்தில்பிரச்சினை 25-02-2024ல்கொடுக்கப்பட்டபுகார்: தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கும் நேரங்களில் சர்ச்சைகள் எழுவது சாதாரண விசயம் எனலாம். அக்கட்சி சித்தாந்திகளுக்கு விருப்பமான செய்திகளாக அமையும் என்பது மட்டுமல்லாது, இதை வைத்த்க் கொண்டு ஒரு பக்கம் இந்து மதத்தைத் தூஷிக்க பயன்படுத்தும், இன்னொரு பக்கம், “இதோ பார், நாங்கள் தான் படங்களைக் காக்கிறோம்,” என்பது போலக் காட்டிக் கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளோம். மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது[1]. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்[2]. இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புகார் மனு அளித்தார்[4].
தலைமைமடாதிபதிதொடர்புடையஆபாசவீடியோமற்றும்ஆடியோ: அதில் கூறியிருப்பதாவது[5]: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்[6]. இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக் கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார்[7]. பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர்[8]. மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர்[9]. இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்[10]. அப்படியென்றால், கண்ணால் பார்த்த சாட்சிகளே நிறையே பேர் இருக்க வேண்டுமே. மடத்திற்குள் கேமராக்கள் எல்லாம் இல்லையா, அவர்கள் வந்து சென்றதற்கான ஆதரங்கள் இல்லையா?
உயிருக்குபயந்து, மடத்தில்உள்ளவர்களிடம்பணம்பெற்றுத்தருவதாகதெரிவித்தேன் – ஆதீனம்: அந்த அளவுக்கு என்ன நடந்தது என்றும் புதிராக உள்ளது. திராவிடக் கட்சிகள் மடத்து சொத்துகள் நிர்வாகம், குத்தகை, நிலம் வாங்குதல்-விற்றல்-பட்டா போடுதல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றெல்லம் கவனித்தால், அத்தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். கட்சிகள், ஆட்சிகள் மாறினாலும், சொத்துக்களை அனுபவிப்பத்தில் எந்த குறையும் ஏற்படாமல், சம்பந்த பட்டவர்கள் நன்றாகவே கவனமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, பகிர்வுகளில் பிரச்சினை எழும் பொழுதும், சமரசம் செய்து கொள்ளப் படுகிறது. எல்லைகளை மீறும் பொழுது, இத்தகைய “வெடிப்புகள்” காணப் பட்டு, உணரப்படுகிறது. இதற்கெல்லாம், மதம், தர்மம், நியாயம், முதலியவை தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசியல், அதிகாரம் தீர்வாக இருக்க முடியாது. பொது மக்கள் முன்பே, இவையெல்லாம் தொடர்ந்து, தங்களது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, ஆன்மீகம் என்று பேசிக் கொண்டு, மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால், பக்தர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.
குறிப்பிட்டநபர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கபோலீஸாரில்புகார்: பின்னர் இது தொடர்பாக –
செம்பனார்கோயில் தனியார் (கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,
திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க. அகோரம்,
திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்,
வினோத்,
விக்னேஷ் –
ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்[11]. மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம்[12]. அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார்[13]. இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர்[14]. எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றம்சாட்டப்பட்டசெந்தில்என்பவரின்பெயரைநீக்ககாவல்துறையிடம்விருதகிரிகொடுத்தமனு: இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். “அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை[15]. “நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்[16]..
[9] இடிவி.பாரத், மோடிக்குசெங்கோல்கொடுத்தஆதீனத்திற்குமிரட்டல் – பாஜகமாவட்டத்தலைவர்தலைமறைவு!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Feb 29, 2024, 12:39 PM IST; Updated : 19 hours ago.
[11] புதியதலைமுறை, ஆபாசவீடியோஇருப்பதாகதருமபுரம்ஆதினத்தைமிரட்டியவிவகாரம்; 4 பேர்கைது..முக்கியபுள்ளிகள்தலைமறைவு. Uvaram P, Published on: 29 Feb 2024, 7:43 pm.
23-02-2024 அன்றுதமிழகஅரசுக்குசென்னைஉயர்நீதிமன்றம்உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இரண்டு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. தமிழகத்தில் ‘பழமையான, பாரம்பரியம் மிக்க கோயில்களில் துாய்மைப் பணிகள் மற்றும் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்[2]. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் 23-02-2024 அன்று விசாரணைக்கு வந்தது. ஆன் லைனில் பதிவு என்று 2021ல் ஆரம்பித்தாலும், வழக்கம் போல, பிரச்சினை உண்டாக்கி, அனுமதி மறுப்பது, காலதாமதம் செய்வது போன்ற முறையில் இடைஞல் செய்து வருவதாக, உழவாரப் பணி குழுக்கள் தெரிவிக்கின்றன.
அறநிலையத்துறைசார்பில்சிறப்புபிளீடர்சொன்னதும், நீதிபதிகளின்கருத்தும்: அப்போது மனுதாரரான கே.கார்த்திகேயன், ”பொதுமக்கள், தன்னார்வலர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் வழங்குவதில்லை” எனக்கூறி மருதாநல்லுார் திருக்கருங்குடிநாதர் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில்கள், அங்குள்ள தெப்பக்குளங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்[3]. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”உழவாரப்பணிகளுக்குஅனுமதிகோரிசம்பந்தப்பட்டகோவில்களில்விண்ணப்பம்செய்தால்அதைபரிசீலித்துசெயல்அலுவலர்அனுமதிவழங்குவார். கோயில்களில்துாய்மைப்பணிகளுக்குஎவ்விதமறுப்பும்தெரிவிப்பதில்லை,” என்றார்[4]. பின் மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் 65 சதவீத கோயில்களில் சரிவர பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ‘பாரம்பரிய, பழமையான கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து அரசும் கவலை கொள்வதில்லை’ என வேதனை தெரிவித்தனர்.
உழவாரப்பணிபற்றியபுரிதல்இல்லாதஅமைச்சரா, துறையாஎது?: தமிழகத்தில் உள்ள ஒரு சில பெரிய கோவில்களை மட்டும் தன்னார்வ அடிப்படையில் பக்தர்கள் தூய்மைப்படுத்தும் பணியான உழவாரப்பணி செய்கின்றனர். பெரும்பாலான கோவில்களில் இந்தப்பணி நடப்பதில்லை. அதுவும் முறையாக மாதம் ஒரு முறை என்று இல்லாமல் எப்போதாவது இந்தப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனை அனைத்து கோவில்களிலும் முறையாக செய்வதற்காக தூய்மைப்பணியில் ஈடுபடுபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்ய பலர் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது[7]:- “கோவிலைசுத்தம்செய்யும்உழவாரப்பணிக்குஇணையதளத்தில்பதிவுசெய்யும்முறைதற்போதுசனிக்கிழமைமற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில்மட்டுமேஉள்ளது. பக்தர்களின்வரவேற்பைபொறுத்துதினசரிபதிவுசெய்யும்வகையில்மாற்ற, திட்டம்உள்ளது,”. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்[8].
ஊழவாரப்பணிஅனுமதிக்குபதிவுசெய்வதுஎப்படி?: ஹி கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது[9]. கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையதுறையின் http://hrce.tn.gov.in யில் சென்று, இ – சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும்[10]. அதில் உழவாரப்பணியை தேர்வு செய்ய வேண்டும்[11]. பின், கோவில்கள் பட்டியலில் விருப்பமான கோவில், பணி செய்வதற்கு உகந்த தேதி, நேரத்தை அட்டவணையில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்[12]. முன்பதிவு செய்யப்படாத சீட்டை தேர்வு செய்து, பணி செய்ய விரும்புவோரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்[13]. அதன்பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,யை பதிவு செய்தால் அனுமதி சீட்டு வரும்[14]. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்[15]. முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது[16]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், எவ்வாறு, அறநிலையத்துறை போர்வையில் உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது என்பதை ஏற்கெனவே விவரமாக பதிவு செய்துள்ளேன்[17]. ஔரங்கசீப் போலவே, சம்பந்தமே இல்லாத கிருத்துவர் கீதா ஜீவனையும் வைத்து, இச்சேவை ஆரம்பிக்கப் பட்டது[18].
ஸ்ரீவீரபத்ரசுவாமிகோவில்கொத்தவால்சாவடியில், ஆதியப்பாதெருமற்றும்கோவிந்தப்பாநாயக்கர்தெருசந்திப்பில்உள்ளது: தீபாவளி நேரத்தில் “டவுன்” எனப்படும் “பாரீஸ் கார்னரில்” கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். மற்ற இடங்களை விட, இங்கு கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர-சாதாரண மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, அப்படியே பஸ்-டிரைன் என்று ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் செல்வர். அதனால், மூன்று நாட்கள் விடுமுறை என்ற நிலையில் வெள்ளிக் கிழமை 10-11-2023 அன்று அனைவரும் சந்தோசமாக, கடைகளுக்குச் சென்று வந்தனர். பொருட்களை வாங்கி வந்தனர். அந்நிலையில் தான், இந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியான கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில், ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், சென்னை உயர் நீதிமன்றம் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அர்ச்சகர்களாக வெங்கட சுப்பிரமணிய அய்யர் உட்பட மூன்று பேர் பணிபுரிகின்றனர். 10-11-2023 அன்று காலை 7:00 மணிக்கு கோவிலை திறந்து, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு, அர்ச்சகர்கள் அலங்காரம் செய்தனர்.
பெட்ரோல்குண்டுடன்வந்தபக்தர்!: இந்த நிலையில், 8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில், அந்த நபர் கோவில் கருவறைக்குள் புகுந்து, ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை’ என, ஆவேசமாக கத்தியபடி, சுவாமி சிலை மீது பெட்ரோல் பாட்டில் குண்டில் தீ வைத்து வீசினார். அது, சுவாமி சிலைக்கு பக்கத்தில் விழுந்து, பலத்த சத்தத்துடன் வெடித்தது. பட்டப் பகலில் பலர் பார்க்கும் நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. தீ பற்றி எரிந்ததால், பக்தர்கள் அலறியடித்து கோவிலில் இருந்து வெளியேறினர். அர்ச்சகர்களும், உயிர் பயத்தில் செய்வதறியாது தவித்தனர். சுவாமி சிலைக்கு தீ பரவாமல் இருக்க, குண்டு வீசப்பட்ட இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடங்களில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பெட்ரோல்குண்டுவெடிப்புப்பற்றிவித–விதமானசெய்திகள்: சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது[1]. கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்[2]. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். இன்னொரு செய்தியில், “8:45 மணிக்குஅங்குள்ளடீகடைக்குகுடிபோதையில்வந்தமர்மநபர், திரியுடன்பீர்பாட்டில்வைத்திருந்தார். அதில், பெட்ரோல்நிரப்பிஇருந்தார். இதைபார்த்ததும்கடைக்காரர்கள்அதிர்ச்சியடைந்தனர்,” என்றுள்ளது. அதாவது, பலர் பார்த்துள்ளனர் என்றாகிறது. அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது[3]. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்[4]. மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன[5]. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, கோயிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது[6]. அவர் யார்… எதற்காக வீசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின[7].
முதலில்போலீஸார்விசாரித்துவருகிறோம், விசாரணைமுடிந்தபின்புவிவரங்கள்சென்னைகாவல்துறைமூலமாகவெளியிடப்படும்என்றுஅறிவித்தது: இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “பெட்ரோல்குண்டைவீசியவர்கோயில்அருகேகடைநடத்திவரும்முரளிகிருஷ்ணாஎன்பதுதெரியவந்தது. உடனடியாகஅவரைப்பிடித்துவிசாரித்தபோது, `கடந்தசிலஆண்டுகளாகஇந்தக்கோயிலுக்குவந்துசாமிகும்பிட்டுவருகிறேன். ஆனால்சாமிஎனக்குஎதுவும்செய்யவில்லை. அந்தவிரக்தியில்தான்கோயிலில்பெட்ரோல்குண்டைவீசினேன்‘ என்றுதெரிவித்தார். தொடர்ந்துஅவரிடம்விசாரித்துவருகிறோம்[8]. சம்பவத்தின்போதுமுரளிகிருஷ்ணாபோதையில்இருந்ததாகத்தெரிகிறது[9]. அவர்மீதுமூன்றுபிரிவுகளின்கீழ்வழக்குபதிவுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப்பிறகுமுரளிகிருஷ்ணாவைநீதிமன்றத்தில்ஆஜர்படுத்தவிருக்கிறோம்,” எனத் தெரிவித்தனர்[10]. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கோவிலுக்குள் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக பதிலளித்த அவர்[11], ” சென்னைகொத்தவால்சாவடிபகுதியில்கோவிலுக்குள்பெட்ரோல்வெடிகுண்டுவீசியசம்பவம்தொடர்பாகவிசாரணைநடைபெற்றுவருவதாகவும், விசாரணைமுடிந்தபின்புவிவரங்கள்சென்னைகாவல்துறைமூலமாகவெளியிடப்படும்” எனவும் தெரிவித்தார்[12].
பெட்ரோல்குண்டுபோட்டவன்ஜார்ஜ்–ஷீட்டர்–தொடர்குற்றவாளி: விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை எம்.கே.பி., நகர், 17வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 39 என்பதும், அவர் தற்போது, ஏழு கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவர், காவல் துறையின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். கொத்தவால்சாவடி, எம்.கே.பி., நகர், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி என, ஒன்பது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஒருவர், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் உள்ள கோவில் கருவறைக்குள் புகுந்து, பெட்ரோல் குண்டு வீசி அட்டூழியம் செய்திருப்பது, பக்தர்கள் மற்றும் அர்ச்சர்களின் உயிருக்குமான பாதுகாப்பில் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.
முரளிகிருஷ்ணன், போலீசாரிடம்அளித்துள்ளவாக்குமூலம்[13]: “ஸ்ரீவீரபத்ரசுவாமிகோவில்அருகே, ‘ஜி.கே.டிரேடர்ஸ்‘ எனும்பெயரில், முந்திரிவியாபாரம்செய்துவருகிறேன். தொழில்பெரும்நஷ்டம்ஏற்பட்டது. ரவுடிதொழில்ஓரளவுகைகொடுத்தது. கொஞ்சம்கடன்தொல்லையும்உள்ளது. இந்தகோவிலுக்குநான்குஆண்டுகளாகசென்றுவருகிறேன். சுவாமிஎனக்குஎதுவும்செய்யவில்லை. அதனால், பெட்ரோல்குண்டுவீசினேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்[14]. சரி, கொலை வழக்கு, ரவுடியிஸம், கைது, ஜெயில் எல்லாவற்றிற்கும் சாமி தான் அனுமதி கொடுத்ததா? இப்பொழுது கைவிட்ட்தா? இது போன்று வாக்குமூலம் கொடுக்கப் பட்டது என்றெல்லாம் செய்திகளாக வெளிவருவதே கேடிக்கையாக இருக்கிறது[15]. “கொலைவழக்கில்ஜெயிலுக்குபோவாராம்…..சாமிவரம்கொடுக்கலைன்னுபெட்ரோல்பாம்வீசுவாராம்……!.” என்று பாலிமர்.டிவி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமாகத்தான் இருக்கிறது[16]. நான்கு ஆண்டுகளாக குற்றங்கள் செய்து வருவதும், சாமி கும்பிடுவதும் எதனைக் காட்டுகிறது என்றும் ஆராய வேண்டியுள்ளது.
[1] தினமணி, ‘கடவுள்கைவிட்டதால்‘ கோயிலுக்குள்பெட்ரோல்குண்டுவீசியவர்சிக்கினார்!, By DIN | Published On : 10th November 2023 01:32 PM | Last Updated : 10th November 2023 01:32 PM |
[11] தமிழ்.நியூஸ்.18, கோவிலுக்குள்பெட்ரோல்வெடிகுண்டுவீசியசம்பவம் : சென்னைகாவல்ஆணையர்விளக்கம், FIRST PUBLISHED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST; LAST UPDATED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST.
பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?
பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!
திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.
இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.
நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.
நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.
ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான், மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில்கொலு.. மயிலாப்பூரில்சக்தியைபார்த்துபூரித்துப்போனதுர்காஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].
[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில்நவராத்திரிகோலாகலம்.. 10 நாட்கள்கொலுவைத்துகொண்டாடும்இந்துசமயஅறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].
சென்னிமலையின்சிறப்புகள்: கொங்கு நாட்டு பகுதியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிவன் மலையும் முக்கியத்துவம் வாய்ந்தவை[1]. இக்கோவில்களின் தெய்வீகத் தன்மைகளை முழுமையாக யாராலும் சொல்லி விடவோ விளக்கி விடவோ முடியாது[2]. சென்னிமலையானது ஒவ்வொரு யுகங்கள் தோறும் மகுடகிரி புஷ்பகிரி கனககிரி சிரகிரி என்னும் பெயரைக் கொண்டது. இம்மலையை சுற்றி 24 தீர்த்தங்கள் உள்ளன.அவற்றுள் செங்கழுநீர் தீர்த்தம் குமார தீர்த்தம் இடும்பன் தீர்த்தம் யம தீர்த்தம்பட்சி தீர்த்தம் போன்றவை பிரசித்தி பெற்றவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தெற்கு பகுதியில் உள்ளது. இடும்பனுக்கு பழநி செல்வதற்கு வழிகாட்டிய தலம். ஆதலால் இம்மலையை ஆதிபழநி என அழைப்பர். இங்கு இடும்பனுக்கு சன்னிதி கிடையாது. லட்சோப லட்சம் பக்தர்களின் உள்ளங்களில் வீற்றிருந்து அவர்களின் இல்லங்களில் நிறைவான அருளாட்சி செய்யும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை பாலன் தேவராய சுவாமிகள் அரங்கேற்றம் செய்த அருள் தலம். ஒரு ஜாதகருக்கு எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமாக இருந்தாலும் முருகப்பெருமான் சன்னிதிமுன் வந்து அவர் நின்றால் தோஷத்தை சுக்கு நுாறாக்கி தீவினைகளை பொடிபொடியாக்கி செவ்வாய் அனுக்கிரக்தை அவரே வழங்குவார். ஆதலால் இங்குள்ள நவக்கிரக சன்னதியில் செவ்வாய் இடம் பெறவில்லை. இப்படி பல்வேறு சிறப்பு பெற்ற தலம் தான் சென்னிமலை. இவ்வாறு அமைதியாக நிகழ்ந்து வரும் வேலையில், சில கிறிஸ்துவர்கள், இம்மமலையில் ஒரு சிறிய சர்ச்சைக் கட்டி பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.
சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்: இது கிறிஸ்துவர்களின் ஒரு திட்டமாகவே மாறிவிட்டது. திண்டிவனம் போகும் வழியில், அச்சரப்பாக்கம் மலையில், இப்படி ஒரு சர்ச்சைக் கட்டி, நாளடைவில் அதனை, அனைத்துலக கிறிஸ்துவ சுற்றுலா தலமாக்கி விட்டனர். இதே போல பல இடங்களில் முதலில் ஒரு சிலுவையை நடுவது, ஜெபம் செய்வது, கொட்டகை அமைப்பது, பிறகு கூரையுடன் ஒரு அறையை அமைப்பது, பிறகு அதனை கட்டிடமாக மாற்றுவது என்று படிப்படியாக செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்பதும் மர்மமாக இருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகள் அவ்வாறு பட்ட கொடுப்பது, மின்சாரம் இணைப்புக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார்கள். உள்ளூரில் புகார் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அச்சரப்பாக்கத்தில் சட்டங்களை மீறி கட்டப் பட்டுள்ள சர்ச்சை இடிக்க நீதிமன்றம் ஆணையிட்டப் பிறகுக் கூட, அதனை கிடப்பில் போட்டு அமைதியாக இருக்கிறார்கள். “சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்” ஆக, இது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பு செயல், அபகரிப்பு திட்டம் மற்றும் மதரீதியில் கலவரங்களை உண்டாக்கும் போக்கு போன்றவை வெளிப்படுவதை தெளிவாகக் கவனிக்கலாம்.
சென்னிமலையில்அனுமதியற்றஜெபக்கூடமும், தொந்தரவு–சர்ச்சைகளும்: சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 17-ந் தேதி 2023 17-09-2023 அன்று கிறிஸ்தவ போதகர் அர்ஜூனன் என்ற ஜான் பீட்டர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்தி கொண்டிருந்தார். இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொள்ளும் நிலைமை, அவசியம், அந்தஸ்து ஏன் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், எஸ்சி-இந்துக்களை மதம் மாற்றி, “தலித் கிறிஸ்தவர்” என்ற பிரச்சினையை கடந்த 40 ஆண்டுகளாக செய்து வருவதையும் கவனிக்கலாம். மதமாற்றம் செய்யும் நோக்கில், அனுமதியின்றி கிறிஸ்தவ அமைப்பு சார்பில், தொடர்ந்து ஞாயிறு தோறும் ஜெபக்கூட்டம் நடந்தது. வெளியூர்களில் இருந்தும் பலர் வந்தனர். ஒலிப்பெருகி மூலம் கூட்டம் நடத்துவதுடன், ஹிந்து தெய்வங்களை சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தி பேசினர். இதனால் அப்பகுதி ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டம் நடத்துவதால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வந்தனர். இவற்றையெல்லாம் எப்படி, ஏன், எவ்வாறு தமிழக அரசு அதிகாரிகள் அனுமதித்தார்கள் அல்லது தெரிந்தும், தெரியாத்து மாதிரி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
The church built…..
17-09-2023 அன்றுஇரு பிரினிடையே மோதல்: ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் ஜான் பீட்டர் குடும்பத்தினரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கிறிஸ்தவ முன்னணி சார்பில் 25-10-2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் தலைவர் டி.சரவணன் தலைமை தாங்கினார்[4]. ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ முன்னணி, இயேசுவின் நற்செய்தி இயக்கம் (ஈரோடு) மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[5]. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், ‘புஷ்பகிரி மலையை கல்வாரி மலையாக மாற்றவிட மாட்டோம்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது[6]. போலீஸார் நிச்சயமாக இவற்றை கண்டுகொண்டிருப்பர், வீடியோ பதிவும் செய்திருப்பர்.
கைதுகளில் பாரபட்சம் ஏன்?: இப்பொழுதெல்லாம் வெறுப்புப் பேச்சு பற்றி அதிகமாகவே செய்திகள் வந்துள்ளன். பல வழக்குகளும் நடந்து வருகின்றன. இதில் கூட கிறிஸ்தவர்கள் தாக்கப் பட்டதாக செய்திகள் வந்துள்ளனவேயன்றி, இந்துக்கள் கதி என்னவென்று இக்கட்சியினர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆக செக்யூலரிஸம் வேலை செய்கிறதா அல்லது இந்து விரோதம் செயல்படுகிறதா என்று கவனிக்கலாம். இந்த தாக்குதல் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டங்களை பதிவு செய்து உள்ளார்கள்[7]. போலீஸாரிடமும் மனு கொடுத்தனர்[8]. கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[9]. திருமாவளவன் கிறிஸ்துவர்களைத் தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் என்றார்[10]. கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!
விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டுமுறைகள்எல்லாமேகாலம்–காலமாகநடைமுறையில்உள்ளன: இந்து கோவில்களில் நடக்கும், நடந்து வரும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்-காலமாக நடைமுறையில் உள்ளன. சுருக்கமாக சொல்வதானால், ஜைன-பௌத்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவை இந்நாட்டு மதங்கள் மற்றும் பின்பற்றியவர் இந்தியர் என்ற நிலையில் ஓரளவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, பெருமளவில் பாதிப்பு ஏற்ப்பட்டது. கோவில்கள், விக்கிரங்கள் இடிக்கப் பட்டன. விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றிலும் நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் ஏற்பட்டன. அதனால், இடைகாலங்களில் அவர்களுடைய அக்கிரமான இடைஞல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டன. பிறகு ஐரோப்பிரர்களின் தலையீடுகளால், மறுபடியும் இடையூறுகள் ஏற்பட்டன. நடைமுறையில், நிர்வாகம் என்ற பெயரிலும் கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டன.
துலுக்கர்-ஐரோப்பியர் காலங்களில் இடையூறுகள் அதிகமாகின: ஜாதிய முறைகள், மதமாற்றம் போன்ற காரணங்களினால் இருக்கமாகின. அதன் படி, கோவில்களில் யார் நுழையலாம்-கூடாது போன்ற பிரச்சினைகளும் உண்டாகின. நவீனகாலங்களில், நகரமயமாக்கம் போன்ற காரணங்களினால், மேன்மேலும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றில் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், முதலியன ஏற்படுத்தப் பட்டன. மாற்று மதத்தினர் எண்ணிக்கை அடிகமாகிய போது, அவர்களும் இவற்றை எதிர்க்க ஆரம்பித்தார்கள். தடுக்க கலவரம் போன்ற முறைகளையும் கையாண்டார்கள். இதனால், சுதந்திரம் பெற்ற பிறகும். சட்டம்-ஒழுங்குமுறை என்ற ரீதியில் அடக்குமுறைகள் ஆரம்பித்தன.
1960களிலிருந்து திராவிட நாத்திகர்களால் தொந்தரவுகள்: 1960களிலிருந்து திராவிடம், பெரியாரிஸம், பகுத்தறிவு போர்வைகளில், முன்பில்லாத அளவுக்கு நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் அதிகமாகின. இந்துஅறநிலையத் துறையில் அத்தகையோர் நுழைய ஆரம்பித்தனர். இப்படியாக, கடந்த 60-70 ஆண்டுகளாக அவர்களின் தலையீடு மூன்று தலைமுறைகளாக உருமாறி பலவிதங்களில் செயல்பட்டு வருகின்றன. ஜாதிய அரசியல் நடத்துவதால் இந்துக்களும் அவ்வாறே பிரிந்து கிடக்கின்றனர். கோவில்களும் அவ்வாறே பிரிய ஆரம்பித்தன. இதற்கு ஜாதிவாரி அரசியல்-உள்-நுழைந்தவர்களும், ஜாதியவாதியினரும், காரணமாகினர். இதனால், கோவில் சம்பந்தப் பட்டவை வியாபார மயமாக்கப் பட்டன. முன்பெல்லாம் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் நடத்த யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனுமதி பெறுதல் போன்றவை இல்லை. ஆனால், இன்று, போக்குவரத்து, மற்றவர்களின் நிலை, சட்டம்-ஒழுங்குமுறை என்று பல நிலைகளில் கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ள. இம்மாதிரிதான், இப்பொழுது திராவிட மாடலில் இப்பிரச்சினைகள் வளர்க்கப் பட்டுள்ளன.
சீர்காழியில்உள்ளருத்ரமகாகாளியம்மன்கோவில்தீமிதிஉற்சவதிருவிழா, நடத்த போலீஸ்பாதுகாப்புகேட்டது: நிதானமாக யோசித்தால், போலீசுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம். கோவில் திருவிழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது[1]. வன்முறையை தவிர்க்க, கோவில்களை மூடி விடலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[2]. மயிலாடுதுறை மாவட்டத்தில், ருத்ர மகா காளியம்மன் கோவில் உள்ளது[3]. இதன் அறங்காவலரான தங்கராசு, 92, என்பவர், தன் மகன் நடராஜன் வாயிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு[4]: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, வரும் 23 முதல் ஆக., 1 வரை நடக்கவுள்ளது. விழா அமைதியாக நடக்கும் விதமாக, போலீஸ் பாதுகாப்பு கேட்டு, ஜூன் 21ல் எஸ்.பி.,க்கு மனு கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கவில்லை[5]. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. அப்படியென்றால் போலீஸார் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று நீதிமன்றம் கேட்கவில்லையே? அதனால், போலீஸ் ஷ்டேஷன்களை ஊடிவிடலாமா என்று கேட்கவில்லையே?
சமாதானபேச்சுநடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வுஏற்படவில்லை: வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது[7]. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ”இந்த கோவிலில் திருவிழா நடத்துவதில், இரண்டு குழுக்களுக்கு இடையே பிரச்னை உள்ளது[8]. ”சீர்காழி தாசில்தார் தலைமையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை,” என்றார். அப்படியென்றால், பிரச்சினை அங்கும் உள்ளது. தாசில்தார், போலீஸார் முதலியவர்களையும் மீறும் அந்த “இரு பிரிவினர்” யார், அத்தகைய பலம் பொறுந்திய கூட்டத்தினர் யார், எந்த கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கலாமா? இல்லை எந்த ஜாதியினர் என்று கேட்கவேண்டுமா?
பிரச்சினை செய்யும் இரு பிரிவினர் தலைவர்களை கோவில் பொறுப்பிலிருந்து நீக்கி விடலாமே?: இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு[9]: தினமும் இதுபோன்ற வழக்குகளை, இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது[10]. அதாவது, அந்த அலவுக்கு அடிக்கடி வழக்குகள் தொடுக்கிறார்கள் போலும். அப்படியென்றால் கடவுளை விட இதில் தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பிறகு இவர்களை கோவில்களினின்று வெளியேற்றி விடலாமே? திருவிழாவை யார் நடத்துவது என, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இரு குழுக்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகிறது[11]. கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி, ஏராளமான வழக்குகள் தாக்கலாகின்றன[12]. கடவுளை பிரார்த்தித்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பெற தான் கோவில்கள் உள்ளன[13]. ஆனால், துரதிருஷ்டவசமாக கோவில் விழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாகின்றன[14]. கோவில் திருவிழா என்பது, யார் தங்கள் பகுதியில் பெரிய நபர் என்பதை நிரூபிக்கும் ஒரு களமாக உள்ளது[15]. இதுபோன்ற கோவில் திருவிழாவில், பக்தி என்பதற்கு இடமே இல்லை[16]. மாறாக, இரண்டு தரப்பினரின் பலத்தை நிரூபிப்பதாக அமைகிறது. இது, திருவிழாக்களின் உண்மையான நோக்கத்தை சிதைக்கிறது. இதுபோல வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, வன்முறையை தவிர்க்க, கோவில்களையே மூடி விடலாம்.” இங்கு தான் பிரச்சினை அணுகுமுறை முரண்பாடாக இருக்கிறது.
அமைதியானமுறையில்நடத்தும்பொறுப்பை, அந்தகுழுக்களுக்கேவிட்டுவிடுகிறேன்: “அகங்காரம்இல்லாமல், கடவுளின்அருளைபெறவிரும்பாவிட்டால், கோவில்கள்இருப்பதன்நோக்கமேபயனற்றதாகிவிடும்.கடவுள்பக்தியைகருத்தில்கொள்ளாததிருவிழாக்களில், இருகுழுவினர்இடையேஏற்படும்தேவையற்றபிரச்னையைதீர்க்க, போலீசாரும், வருவாய்அதிகாரிகளும்எடுக்கும்அனைத்துநடவடிக்கைகளும்வீணாகின்றன. அவர்கள்தங்கள்நேரத்தையும், சக்தியையும்வீணடிக்கின்றனர். போலீஸ், வருவாய்அதிகாரிகளுக்குஇதைவிடமுக்கியமானபலபணிகள்உள்ளன. எனவே, கோவில்திருவிழாவுக்குபாதுகாப்புவழங்கதேவைஇல்லை. கோவில்திருவிழாவை, அகங்காரத்தைமுன்னிறுத்தாமல், அமைதியானமுறையில்நடத்தும்பொறுப்பை, அந்தகுழுக்களுக்கேவிட்டுவிடுகிறேன். சட்டம் – ஒழுங்குபிரச்னைஏற்பட்டால், அதற்குகாரணமானநபர்கள்மீதுபோலீசார்நடவடிக்கைஎடுக்கவேண்டும்,” வழக்கை முடித்து வைக்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். உண்மையில் நீதிபதி சரியாகத்தான் தீர்ப்புக் கொடுத்துள்ளார். ஊடகங்கள் தான் அதைத் திரித்து வெளியிட்ட ரீதியில் தோன்றுகிறது.
[7] தினமணி, கோயில்திருவிழாக்கள்நடத்துவதில்உண்மையானபக்திஇல்லை: உயா்நீதிமன்றம்வேதனை, By DIN | Published On : 22nd July 2023 05:32 AM | Last Updated : 22nd July 2023 05:32 AM.
[15] நக்கீரன், யார்பெரியவர்எனநிரூபிக்கவேகோவில்திருவிழாக்கள்நடத்தப்படுகிறது” – நீதிமன்றம்அதிருப்தி, செய்திப்பிரிவு, Published on 21/07/2023 (16:32) | Edited on 21/07/2023 (16:52)
ஆரணி–செய்யாறுநெடுஞ்சாலையில்விநாயகர்கோவில்இடிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.வி., நகரத்திலிருந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன[1]. மேலும், சாலை மையத்தில் விநாயகர் கோவிலும் இருந்தது. மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்[2]. மேலும் விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கபட்டது[3]. விநாயகர் கோவிலை இடித்து தரை மட்டமாக்கினார்கள்[4]. இதனால், ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில், வருவாய்த்துறையினர் சாலையின் மையத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்[5]. பழமை வாய்ந்த கோவிலை இடித்து தரைமட்டாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதட்டத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்[6].
18ம்நூற்றாண்டுகோவில்இந்தியதொல்லியல்துறைஅனுமதிஇல்லாமல்இடிக்கமுடியுமா?: 300 ஆண்டுகளாக இருக்கும் கோவில் எனும்பொழுதே, அந்த சாலைகள், பேரூந்து நிலையம், வீடுகள் எல்லாமே பிறகு தான் வந்துள்ளன. அப்படியென்றால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தான், அவை கட்டப் பட்டிருக்க வேண்டும். கோவில் மதிற்சுவற்றை நீக்கித் தான், ஆக்கிரமிப்பே ஆரம்பிக்கிறது. எனவே, கோவில் ஆக்கிரமிக்கப் பட்டது என்பது பொய்யாகிறது. முன்பு செய்யாறில் இதே போன்று ஒரு கோவிலை இடிக்க சில ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற போது, கைது செய்யப் பட்டனர். இவர்கள் எல்லோரும் இந்துக்கள் தான் எனலாம். ஆமாம், ஆனால், திராவிடத்துவத்தால், நாத்திகத்தால், ஊறிப்போன, இந்துவிரோதிகளாகச் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் என்றால், 18ம் நூற்றாண்டு கோவில் என்றாகிறது. பிறகு, அதனை இவர்கள் எப்படி இடிக்க முடியும். 100 ஆண்டு காலம் தொன்மை என்றால் இந்திய தொல்லியல் சட்டத்தின் கீழ் புராதனமானது என்றாகிறது. பிறகு, இந்திய தொல்லியல்துறை அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஆனால், 300 ஆண்டுகளாக, ரோடு போடுவது என்றெல்லாம் நடந்தேறியுள்ளன.
கோவில்கள் இடிப்பது சட்டப்படி அல்லது திட்டப் படியான செயலா?: இப்பொழுது தான் கோவில் இடைஞ்சலாக இருப்பது தெரிகிறது போலும் தொடர்ந்து இப்படி கோவில்களை இடித்து வருவது, ஏதோ ஒரு அசாதாரணமான செயல் போலத்தான் தென்படுகிறது. முன்பு திமுக ஆரம்ப காலத்தில் ஈவேரா / பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்து வந்தது, ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, ஊர்வலம் சென்றது முதலியவை ஊக்கப்படுத்தப் பட்டது எனலாம். அதே போல, இப்பொழுதும், திமுக ஆட்சிக்கு வந்ததும், இத்தகைய செய்திகள் தினம்-தினம் வருகின்றன. இந்து அறநிலையத் துறை என்பது கூட அறநிலையத் துறை என்று தான் குறிப்பிடப் படுகிறது. ஏதோ, இது செக்யூலரிஸ ரீதியில் பொதுவானது, அனைவருக்கும் பொதுவானது போன்ற விதத்தில் குறிப்பிடப் படுகிறது. அதே போல கோவில் ஊழியர் சங்கங்களும் பெயர் வைத்துக் கொண்டு செயல்படுகின்றன.
திமுகஆட்சியில்கோவில்கள்இடிக்கப்படுவதுதற்செயலானவிசயமா, அசாதரணமானநிகழ்வா?: திமுக ஆட்சியில் இடிக்கப் பட்டது எத்த்னை கோவில் என்ற பேச்சு எழுந்த போது, 100, 120, 150 என்றெல்லாம் கணக்குப் போட்டு, பிறகு குறைக்கப் பட்டது. ஆனால், கோவில்களை இடித்தது ஒப்புக் கொள்ளப்பட்டது. கோவில் இடிக்கப் பட்ட விவரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்[7]. இதில் அக்கிரமித்துக் கட்டப் பட்டது, நூறாண்டுகளுக்கு முன்னரே கட்டப் பட்டது என்பதை சுலபமாகப் பிரித்துக் காணலாம்[8]. நிச்சயமாக 1947-க்கு முன்னர் இப்பிரச்சினை வராது-வரக்கூடாது. பிறகு எப்படி 100-ஆண்டுகளுக்கு மேலான கோவில்களையும் இடிக்கின்றனர் என்பது புரியவில்லை. செம்மொழி மாநாட்டின் போதும் சில கோவில்கள் இடிக்கப் பட்டன[9]. செந்தமிழ் மாநாட்டிற்காக சாலை அகலப் படுத்த வேண்டும் என்று கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின[10].
இந்துக்களால்என்னசெய்யமுடியும்?: ஒரு பக்கம் கோவில் கும்பாபிஷேகம், இன்னொரு பக்கம் கோவில் இடிப்பு. இந்துக்கள் என்ன செய்ய முடியும்?
தினமும் பேப்பரை / டிவியைப் பார்த்தால், ஏதோ கோவில்களில் தான் பிரச்சினை என்பது போல செய்திகள் வெளியிடப் படுகின்றன.
கோவிலில் தகராறு, போலீஸார் நுழைந்தனர், பக்தர்கள் அவதி, அறநிலைத் துறையினர் தலையீடு, அமைச்சர் எச்சரிக்கை,
கோவிலில் சிலைகள் உடைப்பு, உண்டியல் திருட்டு, அம்மன் நகைகள் காணோம், கோவில் கொள்ளை, திருட்டு, இப்படி……
கோவில் இடிப்பு, ஜேசிபி / பொக்லைன் எந்திரம் வைத்து இடிப்பு, கோவில் தரை மட்டம், பக்தர்கள் எதிர்ப்பு, போலீஸார் குவிப்பு…..
பக்தர்களுக்குள் சண்டை, கலவரம் எற்படும் நிலை, கோவிலுக்கு பூட்டு, அதிகாரிகள் சீல் வைப்பு,…..கோர்ட் ஒப்புதல்..
300 வருட பழமையான கோவில் என்றாலே, ஏ.எஸ்.ஐ.யிடம் (இந்திய தொல்லியல்) அனுமதி தேவையே, பெற்றார்களா?
எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், ஆகமம் இல்லையென்றால் சாதகம் தான், பாதகம் இல்லை, சோதனை காலம் தான்!
நாத்திகர்களுக்குத் தான் கோவில் மீது, எவ்வளவு அக்கரை, அல்லேலூயா என்று கத்தி, இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுகிறான்!
கோவிலுக்குள் கக்கூஸ், பாத்ரூம் கட்டிக் கொண்டு வாழவா அறநிலையத் துறை? பிறகு உள்ளே வராதே என்று ஏன் கத்துகிறாய்?
எந்தவிதத்திலும், உனக்கும், கோவிலுக்கும் ஒத்துப் போவதில்லையே, பாவம் பெண்டாட்டி தான் சாம் கும்பிடவும் தேவையாகிறது!
நாத்திகனே, பெரியாரிஸ இந்து விரோதிகளே, பிள்ளையார் சிலை உடைத்தவர்களே, வெளியேறு என்ற கோஷம் செயலாகும்!
நகரமயமாக்கம் போர்வையில் கோவில்களை குறிவைத்து இடிப்பது என்ன?: நகரமயமாக்கம் நோக்கில், ரீதியில், சாலைகளை விரிவு படுத்துதல், புதிய சாலைகளை போடுதல், இடையில் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகள் கடந்த 30-35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தனியார் வீடுகள், நிலங்கள் என்று வரும்பொழுது, அவற்றிற்கு இழப்பீடு கொடுத்து, கையகப் படுத்தப் படுகிறது. புராதன கட்டிடங்கள், கோவில்கள் போன்றவை வரும் பொழுது, பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்து, திட்டம் போடுவது, வேலை செய்வது பணிக்கப் பட்டுள்ளது. இல்லை, அவை இடம் மாற்ற வேண்டும். அதாவது, அப்படியே கட்டித்தரவேண்டும். இவ்வாறு தான் ஒப்பந்தம் போடப் படுகிறது. இருப்பினும், பெருவாரியாக, இச்சரத்துகள் மீறப் படுகின்றன. ஒப்பந்தக் காரர்கள் அரசியல்வாதிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்-நண்பர்களாக இருக்கும் பொழுது மீறப் படுகின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் கோவில்களுடைது தான். அவற்றை அபகரித்து தான், ரோடுகள், பேரூந்து நிலையங்கள், கட்டிடங்கள் எல்லாம் கட்டப் படுகின்றன. ஆகவே, கோவில்கள் என்றும் இடைஞ்சலாக இருப்பதில்லை. அவற்றின் நிலங்கள் ஆக்கிரமிக்கப் படும் பொழுது, அவை அவ்வாறு காணப் படும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. யாரும் நடுத்தெருவில் கோவிலைக் கட்ட மாட்டார்கள். ஆகவே, அத்தகைய பேச்சு, வாதம், முழுப்பொய்யாகிறது. எனவே, கடைசியில் இவையெல்லாம் என்ன அன்று ஆராயும் பொழுது, இந்துவிரோதம் தான் வெளிப்படுகிறது.
70 வருடங்களாகத்தொடரும்தமிழககோவில்கொள்ளை: தமிழகத்தில் திராவிடத்துவ ஆட்சியில் கடந்த 70 வருடங்களாக, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது, அபகரிப்பது, திருட்டுத் தனமாக பட்டா போட்டு வாங்குவது-விற்பது என்று பலகோடி வியாபாரம், ஊழல், முதலியவை நடந்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. இது பல கூட்டங்களுக்கு வியாபாரமாகி விட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பதிவுத்துறை, இந்து அறநிலையத் துறை போன்ற விசுவாசமான திராவிடத்துவ ஊழியர்களும், சேர்ந்துள்ளனர். இந்துக்களை விட கோவில் நிலங்கள், சொத்துகள் முதலிய விவரங்கள் இவர்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும். காலம்காலமாக அமைதியாக, 100-1000 என்று கொடுத்துக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். யாராவது கேட்டால், அவ்வப்பொழுது மாமூல் கொடுத்து சரிகட்டி வருகின்றனர். இதில் நாத்திகர், இந்துவிரோதிகள் ஏன், இந்துக்கள் அல்லாதவர், துலுக்கர், கிருத்துவார் என்றெல்லாம் கூட பங்கு கொண்டு, இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர். சங்கம் அமைத்து, நீதிமன்றங்களில் உரிமை கேட்டு போராடி வருகின்றன்றர்.
நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள்கோவில்நிலத்தைஅபகரித்துள்ளது: கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது[1]. இதில் கூட என்ன சகிப்புத் தன்மை, சகிப்பற்றத் தன்மை என்றெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேஸ்வர சாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு விட்டது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது[2]. ஆக, கோவில் நிலத்தை குத்தகை விட்டதிலிருந்தே ஊழல் ஆரம்பிக்கிறது. கோயில் நிலத்தை கோவூர் வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி விவசாயம் செய்வதற்காக உறுப்பினருக்கு பகிர்ந்து வழங்கியது[3]. “பகிர்ந்து வழங்கியது,” என்றால், அதன் பயன்பாடு விவரங்கள் “கட்டிடங்கள் கட்டலாமா கூடாதா என்ற-போன்ற விவரங்கள்” அவர்களுக்குத் தான் தெரியும். நிலத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை காலி செய்து கோயில் வசம் ஒப்படைக்க கடலூர் கோர்ட் உத்தரவிட்டது[4]. இந்த அழகில் வாடகையே கொடுக்காமல் அனுபவிக்கின்றனர் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் என்றெல்லாம் கண்டு கொள்லலாம்.
நிலம்மீட்கப்படும, வாடகைவசூலிக்கமுடியுமா?: கடலூர் வருவாய் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் உள்பட 20 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[5]. அத்தகைய மஹா ஒழுக்கசீலர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றால், அவர்களது பராக்கிரமத்தையும் அறிந்து கொள்ளலாம். 4 வாரத்தில் நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது[6]. இப்பொழுது மே என்றால் ஜூன் மாதமும் வந்து விட்டு போகும். இந்த ஆணையை அமூல் படுத்துவார்களா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஜூன் வரைக்கும் பொறுங்கள் என்பார்கள், அதற்குள் மேல்முறையீடு செய்வார்கள். கோயில் நிலத்திற்கான குத்தகை நிலுவையை வசூலிக்க கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது[7]. இதற்கும் தங்களிடம் பணம் இல்லை என்பார்கள் அல்லது “வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி” என்பதால் ஹள்ளுப்டி செய்யுங்கள் என்று கேட்டாலும் ஆச்சரியப் பௌவதற்கு இல்லை. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்[8]. கூட்டுறவு சங்கத்துடன் மட்டுமே ஒப்பந்தம் என்பதால் உறுப்பினர்கள் வழக்கு தொடர அதிகாரமில்லை என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோயிலுடன் மனுதாரகளுக்கு எவ்வித ஒப்பந்தமும் இல்லை என்பதால் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.
நீதிமன்றஆணை – கனம்நீதிபதிகளின்உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “ரூ.50 லட்சம்பாக்கிகோவில்நிர்வாகம்தரப்பில்தங்களுக்கும், கூட்டுறவுசங்கத்திற்கும்மட்டுமேஒப்பந்தம்போடப்பட்டதாகவும், வழக்குதொடர்ந்துள்ளஉறுப்பினர்களுக்கும், தங்களுக்கும்எந்ததொடர்பும்இல்லை. இந்தவழக்கைதொடரஅவர்களுக்குஉரிமைஇல்லைஎன்றுவாதிடப்பட்டது. மேலும், ரூ.50 லட்சம்ரூபாய்அளவிற்குகுத்தகைபாக்கிநிலுவையில்வைத்துள்ளதாகவும், விவசாயத்திற்குகொடுத்தநிலத்தைவணிகநோக்கத்திற்காகபயன்படுத்துவதாகவும்கோவில்நிர்வாகம்தரப்பில்கூறப்பட்டது. இதைஏற்றுக்கொள்கிறேன். கோவில்நிர்வாகத்துக்கும், கூட்டுறவுசங்கத்துக்கும்இடையேதான்குத்தகைஒப்பந்தம்செய்யப்பட்டுஉள்ளது. ஒப்பந்தம்எதுவும்செய்யாமல், கோவில்நிலத்தைவர்த்தகரீதியாகபயன்படுத்திஉள்ளனர். வெளியேற்றவேண்டும்இந்தவழக்கு 10 ஆண்டுகளுக்குமேலாகநிலுவையில்இருந்துள்ளது. அப்போதுகூடகுத்தகைதொகையைவழங்கவில்லை. கோவில்நிலத்தைஅபகரிக்கும்எந்தஒருமுயற்சியையும்சகித்துக்கொள்ளமுடியாது. கோவிலுக்குமனுதாரர்களால்பெருத்தவருவாய்இழப்புஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தில்இருந்துஅனைவரையும்வெளியேற்றி, நிலத்தைகோவில்நிர்வாகத்திடம்காஞ்சீபுரம்கலெக்டர்ஒப்படைக்கவேண்டும். குத்தகைபாக்கித்தொகையைவசூலிக்ககூட்டுறவுசங்கங்களின்துணைபதிவாளர்உள்ளிட்டஅதிகாரிகள்சட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[10].
கோவிலுக்குசொந்தமானரூ.12.49 கோடிமதிப்புள்ளநிலத்தைபோலிஆவணம்தயாரித்துவீட்டுமனையாகமாற்றிவிற்பனை: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்[11]. புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்யப்பட்டது[12]. இதுகுறித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், போலி ஆவணம் தயாரிக்க உதவிய முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் சகாயராஜ்,62; லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெரு கருணாகரன் (எ) செந்தில்,37; பத்திர எழுத்தர் தேங்காய்த்திட்டு அருள்பெரும்ஜோதி நகர் மணிகண்டன்,46; முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகர் அசோக்,52; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர்,. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் கருணாகரன் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவில்நிலம்கொள்ளை: வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், பாஸ்கரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு சரவணன், உதயச்சந்திரன், பூரணி ஆகியோரை டி.ஜி.பி., மனோஜ்குமார் லால், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், ஐ.ஜி., சந்திரன், சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா ஆகியோர் பாராட்டினர். நிலத்திற்கு ‘ஜீரோ’ மதிப்பு -கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி நிலத்தை விற்பனை செய்ய முடியாதபடி, போலீஸ் பரிந்துரையை ஏற்று, பத்திர பதிவுத்துறை ‘ஜீரோ’ மதிப்பு கொண்ட நிலமாக மாற்றியுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றி மீண்டும் கோவில் பெயரில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-03-2923 – காஞ்சனாமனநிறைவுடன்கூறியது: காஞ்சனா, கும்பாபிஷேகம் நடந்த பிறகு[1], “அந்தகாலத்தில்நான்பிரபலநடிகையாகஇருந்தாலும்அவருடன்நானும்திருப்பதிசெல்வதைவழக்கமாககொண்டிருந்தேன். என்தங்கைகடவுளுக்காகதன்னையேஅர்ப்பணித்தவர். சிலகாரணங்களால்பெற்றோர், எனக்குஎதுவும்செய்யவில்லை. அவர்களின்சொத்துக்கள்எல்லாம்கைவிட்டுபோகும்நிலைஏற்பட்டது. நான்சம்பாதித்தசொத்துக்கள்கூடபறிபோகும்நிலைவந்தது. இந்தசூழலில்தான்தி.நகர்சொத்துக்களைகோவிலுக்குஎழுதிவைக்கநான், என்தங்கை, மைத்துனர்மூவரும்ஒருமனதாகதீர்மானித்துகோவிலுக்குதானமாகவழங்கினோம்.தற்போதுஅந்தஇடத்தில்பத்மாவதிதாயார்கோவில்எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம்எங்களின்ஜென்மம்சாபல்யம்அடைந்துவிட்டது.என்னைஒவ்வொருநொடியும்பெருமாள்தானகாப்பாற்றிவருகிறார். வாழ்நாள்முழுவதும்அவர்நினைவுஒன்றேபோதும்…,” இவ்வாறு கூறினார்[2].
காஞ்சனாஏன்நிலத்தைதானமாகக்கொடுத்தார்?: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திருமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலான வெங்கடேஸ்வராவை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர்[3]. காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை TTD நிர்வாக அதிகாரி I.Y.R-யிடம் ஒப்படைத்ததாக கோயில் வட்டாரங்கள் PTI இடம் தெரிவித்தன[4].. நிலமும் அதில் உள்ள ஒரு பழைய அமைப்பும் ஜி.என். சென்னையில் உள்ள செட்டி தெருவில் உள்ள அந்த இடத்தில் கல்யாண மண்டபம்/திருமண மண்டபம் கட்ட TTDயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன[5]. ஆனால், காஞ்சனா எப்படி திடீரென இறைவனின் இருப்பிடத்திற்கு ஒரு பெரிய காணிக்கையை அளித்தார் என்பது மர்மமாகவே உள்ளது. நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்ததை நினைவுகூரலாம், மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் அவரை வெளியேற்றியதால் அவருக்கு வீடு இல்லை என்று செய்திகள் வந்தன. டிடிடிகளின் இணைச் செயல் அலுவலர் டாக்டர் என்.யுவராஜ், எஸ்டேட் அலுவலர் ஸ்ரீ சேஷய்யா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[6].வழக்கைத் தாக்கல் செய்யும் போது அவருக்கு வயது 41 மற்றும் வழக்கில் வெற்றி பெறும் போது 72 வயது. சொத்து அவர்களின் பெற்றோரால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது, பின்னர், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உயில் செல்லாது, அது சட்டப்பூர்வ வாரிசுகளான காஞ்சனா மற்றும் அவரது சகோதரிக்கு வந்தது. இந்த 31 ஆண்டுகளில், இது பலரால் கைப்பற்றப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, சகோதரிகள் வழக்கை வென்றனர், அவர்கள் அதை TTDக்கு நன்கொடையாக வழங்கினர்.
2012 முதல் 2018 வரைஆக்கிரமிப்பில்இருந்தது: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்வாமி அறக்கட்டளைக்கு வாடகைக்கு விட்டபோது, 11.7.2012 தேதியிட்ட குத்தகைப் பத்திரத்தை, குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தினசரி பூஜை செய்யும் பூசாரி, அந்த குடியிருப்பில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. , இது சுமார் 600 சதுர அடி அளவிலான ஒற்றை படுக்கையறை பிளாட் ஆகும். அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் குடியிருப்பில் இருப்பதாக அறக்கட்டளை பத்திரம் காட்டினாலும், அந்த குடியிருப்பை குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு வைத்தது போல் எடுக்க முடியாது. இதனால், அந்த இடம் 11-07-2012 மற்றும் 10-04-2018 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது[7].
இந்நிலம்ஆக்கிரமிப்புபற்றியசரிபார்க்கமுடியாதசெவிவழிகதைகள்: ஆக்கிரமிப்பு பற்றி சொல்லப் படும் செவிவழி செய்திகள், இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனனில் அவையெல்லாம் மறைக்கப் பட்டு விட்டன போலிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் மற்றவர் இத்தகைய கதைகளை அளந்து விடுகிறார்கள்……………நாயுடு டீக்கடை வைத்திருந்தார்……….சசிகலா கூட்டம் அபகரித்துக் கொண்டது……….மூவேந்தர் கட்சி, சேதுராமன் அபகரித்து (மீனாக்ஷி மருத்துவமனை, காஞ்சிபுரம்), மீனாக்ஷி ஹோடல் கட்டினார்……………முன்பே கோவில் இருந்தது…………பிறகு நீதிமன்ற ஆணை மூலம் அது இடிக்கப் பட்டது. இருப்பினும், மீனாட்சி பவன், மற்றும் சம்பந்தப் பட்ட கம்பெனிகள் அவ்விடத்தில் இருந்திருக்கின்றன[8]. ஜூலை 3ம்தேதி, 2011 அன்று, “பொன்னியின் செல்வன்” கூட்டமும் நடந்திருக்கிறடது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம். இது பற்றியும் ஒரு வழக்கு உள்ளது. காஞ்சனா போன்ற நிலை அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. தியாகராயநகர் தான் சம்பந்தப் படுகிறது.
சேதுராமன்குடும்பம்சம்பந்தப்பட்டநிலவழக்கு: மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது[9]. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்[10]. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.
கோவில்நிலங்கள்அபகரிப்பு, ஆக்கிரமிப்புமுதலியவைதடுக்கப்படுமாஅல்லதுதொடருமா?: எது எப்படியாகிலும், சமீப காலங்களிலும் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளிக்கும் சேவை தொடர்கிறது. முன்பு கல்வெட்டுகளில் பதிவாகி, பிறகு முகமதியர், கிருத்துவர், விடுதலைக்குப் பிறகு பகுத்தறிவு பெரியாரிஸ்ட், அண்ணாயிஸ நாத்திகர் போன்றோர் ஆக்கிரமிப்புகளையும் கடந்து இருக்கும் நிலங்கள் முறையாகப் பயன்படுத்தினால், அந்நிலங்கள் மூலம் வருவாயும் கிடைக்கும், கோடிக்கணக்கில் மக்கள் பயனடைவ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்ல்லாம் பேசும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தைப் பற்றி பேசுவதில்லை. அதாவாது, எங்கெல்லாம் பெரும்பான்மையில் நன்மை பொது மக்களுக்குச் சென்றடையுமே, அங்கெல்லாம் அவர்கள் மட்டும் பலனடைய வேண்டு, சம்பாதிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் நடிகை காஞ்சனாவாக இருந்தாலும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டேயாக இருந்தாலும், நீதி மன்றங்களில் போராடத்தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது!
[3] Indian Express, Kanchana donates Rs 15 cr land to Tirumala Tirupati Devasthanam, Written by Agencies, Tirupati | First published on: 26-10-2010 at 12:11 IST; October 26, 2010 12:11 IST.
[8] MEENAKSHI BHAWAN at 44/1 GN Chetty Road, T. Nagar, The Place is located between the Jain Temple and Residency Towers in GN Chetty Road. 3rd July 2011, 28155155
MEENAKSHI HOTELS & ENTERTAINMENT PRIVATE LIMITED’s Corporate Identification Number (CIN) is U55101TN1992PTC022336.- Nalliah Servai Sethuraman and Ramesh Sethuraman – Directors.
Smile Amusement & Hospitality private limited was at the first floor; directors are – Sethuraman Gurushankar, Chandrasekharan Kamini and Nalliah Servai Sethuraman.
[9] தமிழ்.ஒன்.இந்தியா, டாக்டர்சேதுராமனின்மூத்தமகன், மகள், மருமகனுக்குநீதிமன்றம்பிடிவாரண்ட்!, By Jayachitra Updated: Friday, June 28, 2013, 17:55 [IST]
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?
.
திராவிடத்துவஆட்சியில், திராவிடமாடலில், திராவிடஸ்டாக்குகளின்இந்துவிரோதசெயல்பாடுகள்அதிகமாகவேவெளிப்பட்டுவருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.
சத்தியவேல்முருகனைநியமித்ததைஎதிர்த்துவழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.
தாக்கல்செய்தமனுவில்உள்ளது[7]: “ஆகமகோவில்களைகண்டறிவதற்காகஅமைக்கப்பட்டகுழுவின்தலைவருடன்ஆலோசித்து, உறுப்பினரைநியமிக்கவேண்டும்என, உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைமீறும்வகையில், சத்தியவேல்முருகனைநியமித்து, உத்தரவுபிறப்பிக்கப்பட்டுஉள்ளது. உத்தரவில், குழுதலைவருடன்ஆலோசித்ததாகஎதுவும்இல்லை. ஆலோசனைநடத்தியிருந்தால், உத்தரவில்குறிப்பிடப்பட்டுஇருக்கும். எந்தஅடிப்படையில், குழுஉறுப்பினராகநியமிக்கசத்தியவேல்முருகன்தகுதிபெறுகிறார்என்பதைவெளிப்படுத்தவில்லை. ஆகமவிதிகளைபற்றிபொய்தகவலைபரப்புவதுதான், அவரதுநோக்கம். இதை, அரசுபரிசீலிக்கதவறிவிட்டது. சமஸ்கிருதம்பற்றிசத்தியவேல்முருகனுக்குதெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருதமொழியில்தான்உள்ளன. எனவே, நியமனஉத்தரவுக்கு, தடைவிதிக்கவேண்டும்; ரத்துசெய்யவேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.
விசாரணையில் நீதிமன்றம் தடைவிதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.
சத்தியவேல்முருகன்யார்? – தற்சிறப்புக்குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].
சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.