Archive for the ‘கேட்பாரற்று இருக்கும் கோவில்’ Category

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

மே13, 2023

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளை: தமிழகத்தில் திராவிடத்துவ ஆட்சியில் கடந்த 70 வருடங்களாக, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது, அபகரிப்பது, திருட்டுத் தனமாக பட்டா போட்டு வாங்குவது-விற்பது என்று பலகோடி வியாபாரம், ஊழல், முதலியவை நடந்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. இது பல கூட்டங்களுக்கு வியாபாரமாகி விட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பதிவுத்துறை, இந்து அறநிலையத் துறை போன்ற விசுவாசமான திராவிடத்துவ ஊழியர்களும், சேர்ந்துள்ளனர். இந்துக்களை விட கோவில் நிலங்கள், சொத்துகள் முதலிய விவரங்கள் இவர்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும். காலம்காலமாக அமைதியாக, 100-1000 என்று கொடுத்துக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். யாராவது கேட்டால், அவ்வப்பொழுது மாமூல் கொடுத்து சரிகட்டி வருகின்றனர். இதில் நாத்திகர், இந்துவிரோதிகள் ஏன், இந்துக்கள் அல்லாதவர், துலுக்கர், கிருத்துவார் என்றெல்லாம் கூட பங்கு கொண்டு, இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர். சங்கம் அமைத்து, நீதிமன்றங்களில் உரிமை கேட்டு போராடி வருகின்றன்றர். 

நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் கோவில் நிலத்தை அபகரித்துள்ளது: கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது[1]. இதில் கூட என்ன சகிப்புத் தன்மை, சகிப்பற்றத் தன்மை என்றெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேஸ்வர சாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு விட்டது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது[2]. ஆக, கோவில் நிலத்தை குத்தகை விட்டதிலிருந்தே ஊழல் ஆரம்பிக்கிறது. கோயில் நிலத்தை கோவூர் வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி விவசாயம் செய்வதற்காக உறுப்பினருக்கு பகிர்ந்து வழங்கியது[3].  “பகிர்ந்து வழங்கியது,” என்றால், அதன் பயன்பாடு விவரங்கள் “கட்டிடங்கள் கட்டலாமா கூடாதா என்ற-போன்ற விவரங்கள்” அவர்களுக்குத் தான் தெரியும். நிலத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை காலி செய்து கோயில் வசம் ஒப்படைக்க கடலூர் கோர்ட் உத்தரவிட்டது[4]. இந்த அழகில் வாடகையே கொடுக்காமல் அனுபவிக்கின்றனர் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் என்றெல்லாம் கண்டு கொள்லலாம்.

நிலம் மீட்கப் படும, வாடகை வசூலிக்க முடியுமா?: கடலூர் வருவாய் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் உள்பட 20 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[5]. அத்தகைய மஹா ஒழுக்கசீலர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றால், அவர்களது பராக்கிரமத்தையும் அறிந்து கொள்ளலாம். 4 வாரத்தில் நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது[6]. இப்பொழுது மே என்றால் ஜூன் மாதமும் வந்து விட்டு போகும். இந்த ஆணையை அமூல் படுத்துவார்களா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஜூன் வரைக்கும் பொறுங்கள் என்பார்கள், அதற்குள் மேல்முறையீடு செய்வார்கள். கோயில் நிலத்திற்கான குத்தகை நிலுவையை வசூலிக்க கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது[7]. இதற்கும் தங்களிடம் பணம் இல்லை என்பார்கள் அல்லது “வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி” என்பதால் ஹள்ளுப்டி செய்யுங்கள் என்று கேட்டாலும் ஆச்சரியப் பௌவதற்கு இல்லை. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்[8]. கூட்டுறவு சங்கத்துடன் மட்டுமே ஒப்பந்தம் என்பதால் உறுப்பினர்கள் வழக்கு தொடர அதிகாரமில்லை என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோயிலுடன் மனுதாரகளுக்கு எவ்வித ஒப்பந்தமும் இல்லை என்பதால் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.

நீதிமன்ற ஆணைகனம் நீதிபதிகளின் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “ரூ.50 லட்சம் பாக்கி கோவில் நிர்வாகம் தரப்பில் தங்களுக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், வழக்கு தொடர்ந்துள்ள உறுப்பினர்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கை தொடர அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதிடப்பட்டது. மேலும், ரூ.50 லட்சம் ரூபாய் அளவிற்கு குத்தகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளதாகவும், விவசாயத்திற்கு கொடுத்த நிலத்தை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்கிறேன். கோவில் நிர்வாகத்துக்கும், கூட்டுறவு சங்கத்துக்கும் இடையேதான் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் எதுவும் செய்யாமல், கோவில் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி உள்ளனர். வெளியேற்ற வேண்டும் இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்துள்ளது. அப்போது கூட குத்தகை தொகையை வழங்கவில்லை. கோவில் நிலத்தை அபகரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் சகித்துக்கொள்ள முடியாது. கோவிலுக்கு மனுதாரர்களால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் காஞ்சீபுரம் கலெக்டர் ஒப்படைக்க வேண்டும். குத்தகை பாக்கித்தொகையை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[10].

கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்[11]. புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்யப்பட்டது[12]. இதுகுறித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், போலி ஆவணம் தயாரிக்க உதவிய முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் சகாயராஜ்,62; லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெரு கருணாகரன் (எ) செந்தில்,37; பத்திர எழுத்தர் தேங்காய்த்திட்டு அருள்பெரும்ஜோதி நகர் மணிகண்டன்,46; முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகர் அசோக்,52; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர்,. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் கருணாகரன் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில் நிலம் கொள்ளை: வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், பாஸ்கரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு சரவணன், உதயச்சந்திரன், பூரணி ஆகியோரை டி.ஜி.பி., மனோஜ்குமார் லால், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், ஐ.ஜி., சந்திரன், சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா ஆகியோர் பாராட்டினர். நிலத்திற்கு ‘ஜீரோ’ மதிப்பு -கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி நிலத்தை விற்பனை செய்ய முடியாதபடி, போலீஸ் பரிந்துரையை ஏற்று, பத்திர பதிவுத்துறை ‘ஜீரோ’ மதிப்பு கொண்ட நிலமாக மாற்றியுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றி மீண்டும் கோவில் பெயரில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ் 13-05-2023


[1] தினகரன், கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது: சென்னை உயர்நீதிமன்றம், May 12, 2023, 5:54 pm.

[2] https://www.dinakaran.com/attempts-expropriate-temple-land-any-rate-cannot-be-tolerated-madras-high-court/

[3] நியூஸ்.டி.எம், “நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாது!” Byஅருணா|12 May 2023 6:30 PM

[4] https://newstm.in/tamilnadu/–1905011

[5] மாலைமுரசு, நிலத்தை அபகரிக்கும் முயற்சியை சகித்துகொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்!!, webteam, May 12, 2023 – 20:48.

[6] https://www.malaimurasu.com/posts/district-news/Attempts-to-grab-land-cannot-be-tolerated

[7] தினமலர், கோவில் நிலத்தை மீட்கும்படி கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: மே 12,2023 22:05…

[8] https://m.dinamalar.com/detail.php?id=3318887

[9] தினத்தந்தி, கோவில் நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாதுஐகோர்ட்டு கண்டனம், தினத்தந்தி மே 13, 5:13 am

[10] https://www.dailythanthi.com/News/State/expropriation-of-temple-land-cannot-be-tolerated-court-condemns-963457

[11]  தினமலர், கோவில் நிலம் அபகரிப்பு மேலும் 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மே 11,2023 06:38…

[12] https://m.dinamalar.com/detail.php?id=3317727

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

வக்புவாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிப்பது–இந்துக்களை இம்சிப்பது (3)

செப்ரெம்பர்12, 2022

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிப்பது இந்துக்களை இம்சிப்பது (3)

தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது: ஜாபர்அலி கூறுவது, “முற்காலத்தில் இந்த சொத்துக்களெல்லாம் உயர்ந்த நோக்கங்களுக்காகத் தானமாக வழங்கப்பட்டாலும் தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதும், பிறருக்கு விற்பதும் சில இடங்களில் நடந்தது. இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, முத்தவல்லிகளை ஒழுங்காகச் செயல்பட வைக்க 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்பு வாரியம். ஒன்றியமாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்பு வாரியம், முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது”. “தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது” என்றால் அது துலுக்கப் பிரச்சினையே அன்று இந்துக்களுடன் தொடர்பு படுத்தப் படும் விசயமல்ல, அது விசமத்தனமானது.

வக்பு வாரியம், மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. ஜாபர்அலி கூறுவது, “இருந்தாலும், அது ஒரு அரசு சார்பு நிறுவனமாக இயங்குகிறது. அதே நேரத்தில், அது மாநில அரசு சொல்லும் எல்லாவற்றையும் கேட்டு நடக்க வேண்டும் என்பதில்லை. வக்பு வாரியம் கூடி என்ன முடிவெடுக்கிறதோ, அதுதான் முடிவு. அரசு இதில் சட்டரீதியாகத் தலையிட்டு, எந்த முடிவையும் எடுக்க வைக்கவோ, எடுத்த முடிவை மாற்றவோ முடியாது. வக்பு வாரியம் தன்னிச்சையான அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிர்வாகச் செலவுக்கு இன்று வரை அரசை எதிர்பார்த்தே உள்ளது.” இத்தகைய இருநிலைப் பாட்டில் இருக்கும் நிலை அவர்களது மோசடிகளுக்குத் துணை போகிறது. இது கிருத்துவர்களின் பிரச்சினை போன்றதே. பிஷப், பாதிரிகள் கோர்ட்டுக்குச் சென்றது போல, இவர்களும் கோர்ட்டுக்குச் செல்லலாம்.

வாரியத் தலைவர் பதவி, நியமனம், குற்றச்சாட்டுகள் _ இவையும் துலுக்கர் பிரச்சினையே: ஜாபர்அலி கூறுவது, “வக்பு வாரியம் கட்சி சாரா அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் வாரியப் பதவிகள் அனைத்தும், ஏலம் விடப்படாத குறைதான் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. வாரியத் தலைவர் பதவிக்கு ஆட்களை நியமனம் செய்யும் விஷயத்தில், ஆண்டாண்டு காலமாக அரசியல் தலையீடு இருப்பதாகவும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், திமுக அரசு ஒரு தெளிவான முடிவெடுத்திருக்கிறது. முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் வக்பு வாரியத்தைத் திறம்பட நடத்திச் செல்வதற்காக, நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற முன்னாள் எம்.பி. அப்துல் ரஹ்மானை வக்பு வாரியத் தலைவராக நியமித்திருக்கிறது. பொறுப்பேற்ற பின், அப்துல் ரஹ்மான் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகப் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவது நம்பிக்கை வெளிச்சத்தைத் தருகிறது”.

வக்பு வாரியச் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது துலுக்கரே: ஜாபர்அலி கூறுவது,  “இந்தியாவின் சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, (2008) வக்பு வாரியச் சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது. வாரியத்தின் சொத்துக்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை அந்த கமிட்டி கண்டறிந்தது. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் முறையாக மீட்கப்பட்டால், வாரியம் என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறும் என்று கமிட்டி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, ஏழை எளிய முஸ்லிம்களுக்கு உதவ முடியும் என்பது கமிட்டியின் பரிந்துரை”.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன: ஜாபர்அலி கூறுவது, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் மீட்க வாரியத்துக்குப் போதுமான சட்ட அதிகாரம் இல்லை. ஆகவே, வலுவான சட்டப் பாதுகாப்புடன் வக்பு வாரியம் கட்டமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சொத்துக்களையெல்லாம் மீட்டு, அவற்றிலிருந்து வருவாய் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்பட்சத்தில், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். வாரிய நிர்வாகத்தை நடத்துவதற்கு அரசிடம் கையேந்த வேண்டியதில்லை”. இப்படி சொல்லிக் கொண்டாலும், காபிர்கள் கொடுக்கும் பிச்சையில் தான் இந்த அரேபிய அடிமைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வக்பு வாரியம், வேறெந்தச் சமூகமும் பெற்றிருக்காத அளவுக்குச் சொத்துக்களைப் பெற்றிருக்கிறது. ஜாபர்அலி கூறுவது, ‘ஆனால், வறியவர்கள் அதிகம் இருக்கும் சமூகம் என முஸ்லிம் சமூகம் அடையாளம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது[1]. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் வைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், தொழிற்சாலைகள், குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்டவை எங்கெல்லாம் குறைவாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. முஸ்லிம் சமூகத்தை அரசும் பொதுச் சமூகமும் கைவிடக் கூடாது என்பது ஒரு புறம் இருக்க, முஸ்லிம் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக வக்பு வாரியம் தன்னலமற்றுச் செயல்பட வேண்டும் என்ற ஏக்கம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கிறது”.

கவனிக்க வேண்டிய விசயங்கள்: சரித்திர ரீதியில், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களிலிருந்து, இந்த மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்தும் பார்ப்பதில்லை. டிவி, செல்போன் பார்த்து பொழுதைப் போக்கிக் கொன்டிருக்கிறார்கள்.

  1. “ஆற்காடு நவாப்” என்று குறிப்பிடப் படும் ஒருவர் தான் தான் மயிலாப்பூர் கோவிலுக்கு நிலம் கொடுத்தேன் என்று கிருத்துவக் கூட்டங்களில் சொல்லிக் கொள்வார்.
  • இந்த நசரத் பேட்டை, அல்லாபுரம் ஸ்தலபுராணங்கள் எல்லாம் நாளைக்கு வேளாங்கன்னி, நாகூர் மாடல்களில் செல்லும். முழுங்கப் பார்க்கும்.
  • இறக்குமதி செய்யப் பட்ட மதங்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்துக்கள் நிலமாக இருக்கும்? அடிப்படையிலேயே ஏதோ மிகப்பெரிய மோசடி உள்ளது.
  • வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது. சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
  • யார் யாருக்கு தடையில்லா சான்றிதழ் கொடுப்பது என்ற விவஸ்தையே வேண்டாமா, இதென்ன புதிய அவஸ்தை, அதிலும் இவர்களிடம் தேவையா?
  • சொந்தமாக எதையும் இல்லாத இந்த மதங்கள், நம்பிக்கையாளர்கள் இந்தியாவில் எல்லாமே கடன் வாங்கி,  கடன் பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
  • பாரத மாதவை வைத அந்தப் பாதிரிப் பதரும், கோவில் நிலத்தை தனதெனும் இந்த அரேபிய அடிமைகளும் இந்துக்களின் சொத்தை அனுபவிக்க வேண்டாம்.
  • உண்மையில் தன்மானம், சூடு-சொரணை இருந்தால் இந்துக்கள் நிலத்தை, பூமியை விட்டு விலக வேண்டும், அம்மண்ணில் விளைவதைக் கூட உண்ணக் கூடாது.
  • வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு கீழ் நடக்கிறதா, அல்லது பத்திரப்பதிவு துறைக்கு கீழ் வக்பு வாரியம் செயல்படுகிறதா? ஆணையிட அதிகாரம் உள்ளதா?
  1. ஆக, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம் போல, கோவில் நிலத்திற்கும், இந்து நிலத்திற்கும், வக்பு வாரியத்திற்கும் என்ன சம்மந்தம்? (10)

© வேதபிரகாஷ்

12-09-2022


[1]  இதுவே பெரிய மோசடி எனலாம், பிறகு, ஏன் அத்தகைய துலுக்கர் உருவாக வேண்டும். யார் அவர்களை அவ்வாறு ஏழைகளாக வைத்திருக்கின்றனர். பிச்சைக் காரர்களில் அதிகமாக துலுக்கர் இருப்பது தெரிகிறது. அது உண்மையில் பிச்சை எடுக்கவா அல்லது வேறு யாதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html

கொள்ளுக்காடு சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? (1)

திசெம்பர்31, 2021

கொள்ளுக்காடு சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? (1)

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

சரித்திரத் தன்மை கொண்ட கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்?: சின்ன ஆவுடையார் கோவில், கொள்ளுக்காடு பற்றி மூன்று ஆண்டுகளுக்கு 2018 ஜூன் -முன்னர் தினத்தந்தி, பிறகு மாலைமலரில் செய்தி வந்தது….மறுபடியும் இப்பொழுது, சமூக ஊடகங்களில் பழைய புகைப் படங்களை பரப்பி / ஷேர் செய்து வருகின்றனர். 2021 -2022 காலகட்டத்திலும் இப்படி இருப்பது  இந்து விரோதத் தனத்தைத் தான் காட்டுகிறது…… ஏற்கெனவே உள்ளதை மறுபடி-மறுபடிபோட்டு வருகின்றனர், ஆனால், அக்கோவில் அவ்வாறு ஏன் சிதிலமடைந்து இருக்க வேண்டும், ஏன் அவ்வாறு சரித்திரத் தொன்மை வாய்ந்த கோவில் பல பகுதிகள், சிற்பங்கள் காணாமல், மரம்-செடி-கொடிகள் வளர்ந்து, இன்னும் இடிந்து விழுந்து மறைந்து விடும் நிலையில் விடப் பட்டுள்ளது என்று விளக்கக் காணோம். அவ்வாறு வீடுவிடுவதால் சாதகமா-பாதகமா, யாருக்காவது பலனா, லாபமா, நஷ்டமா என்று கூட சொல்வதில்லை. ஆனால், இதன் பின்னே, விசயங்கள், விவகாரங்கள் இருப்பது தெரிகிறது. ஒரு நாள் தேடலில் கிடைத்த விவரங்களை வைத்து, இதனை எழுதுகிறேன்.

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

ஹிந்து மஹா சாகரம்,” “இந்துப் பெருங்கடல்,” என்ப்பட்டது, இன்றுஇந்தியப் பெருங்கடல்,” ஆகிவிட்டது நிலை: கடற்கரைப் பகுதிகள் முதலியவை சோழர்கள் காலத்து கடல் கடந்த பிரயாணம், கடற்படை, துறைமுகம், கப்பல் கட்டும் தொழில் முதலியவற்றை எடுத்துக் காடுகிறது. உண்மையில் மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க இப்பகுதிகளுக்கு வந்தது, அத்தகைய கடல் கடந்த வணிகம் முதலியவற்றை எடுத்துக் காட்டுகிறது. இப்பொழுது திரிபு விளக்கம் கொடுப்பது போன்று, குதிரைகளை கொண்டு வந்து விற்றவர்கள் எல்லோரும் அரேபியர், துலுக்கர், முஸ்லிம்கள் கிடையாது. ஒரு நாட்டில் பொருட்கள் தேவை என்றால் அவற்றை எடுத்துச் சென்று விற்பது, இந்தியர்களின் வழக்கமாக இருந்தது. இந்தியர்களின் கடல் ஆதிக்கத்தால் தான், “ஹிந்து மஹா சாகரம்,” “இந்துப் பெருங்கடல்,” என்ப்பட்டது, இன்று “இந்தியப் பெருங்கடல்,” ஆகிவிட்டது. இன்று அக்கடலுக்கு “இந்தியப்” பெயரை வைக்க முடியாது. ஆனால், பல்லாண்டுகளாக அழைக்கப் பட்டது என்றால், அக்கடலில் இந்துக்களின் / இந்தியர்களின் கலாச்சார, பொருளாதார, வணிக, வியாபார ஆதிக்கம் இருந்தது. அதனால் தான், பாரசீகர், கிரேக்கர், ரோமர், அரேபியர், துருக்கர், சீனர், ஐரோப்பியர் என்று எல்லோரும் இங்கு வர விரும்பினர். வியாபாரம் செய்ய ஆசைப்பட்டனர்.

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

சின்ன ஆவுடையார் கோவில், கொள்ளுக்காடு இருப்பிடம்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை-மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் கொள்ளுக்காடு உள்ளது. வடக்கில் கும்பகோணம், தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் கடல் மற்றும் இலங்கை, மேற்கில் மதுரை என்றுள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ளதால் உப்பளங்கள் அதிகமாக உள்ளன. கொள்ளுக்காடு (Kollukkadu) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள கிராமமாகும்.2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை- 1804 பேர் உள்ளனர். இதில் ஆண்கள்- 920 மற்றும் பெண்கள்- 884. பாலின விகிதம்  961 ஆக உள்ளது. கல்வியறிவு விகிதம் 72.88 உள்ளது என்று விகிபீடியா நிறுத்திக் கொள்கிறது.

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

ஒரு நேர பூஜை கூட இல்லாமல் இருக்கும் ஆத்மநாதசுவாமி சிவன் கோவில்: மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்து ஆட்கொண்டு திருவாசகம் பிறக்க காரணமாக இருந்த இடம் ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறை..  அந்த திருநாமத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்… பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.. திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான், அதே திருநாமத்தில் இங்கும் எழுந்தருளியுள்ளார்.. ஆலயம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து கீழே, விழும் நிலையில் உள்ளது[1]. ஆத்மநாதசுவாமியோ வெளியில் ஒரு கொட்டகையில், ஒரு நேர பூஜை கூட இல்லாமல், தன்னிடம் திருவடி தீட்சை வாங்குவதற்கு மாணிக்கவாசகர் போல வேறு யாரும் வர மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருக்கின்றார்……[2]

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

மாணிக்கவாசகர் கட்டிய கோவில்: மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது[3]. குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தள பதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்[4].

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

 இடிந்த நிலையிலும், இடிபாடுகளில் இருக்கும் மீதிகள்: இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது. திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையின் தென்புறம் விநாயகர், வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிர மணியரும் அருள்பாலிக்கின்றனர். முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் தெற்கு பிரகாரத்தில் தென்முகமாக யோக தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார்.

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

பல ஆண்டுகளாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது: வடக்கு பிரகாரத்தில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயம் தற்போது வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோலுக்கு, வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால் பல இடங்கள் சேதமடைந்து காணப்படும் இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது. பிறகு, இவ்வூரில் இந்துக்கள் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றது. ஆனால், மீனவர்கள் மீன் பிடிக்க முடியவில்லை போன்ற செய்திகள் வந்துள்ளன.

© வேதபிரகாஷ்

31-12-2021

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

[1] மாலைமலர், சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில், பதிவு: ஜூன் 26, 2018 10:36 IST.

[2] https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/06/26103658/1172675/chinna-avudayar-temple.vpf

[3] தினத்தந்தி, சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில் , – ஞான தங்கபாரதி, பட்டுக்கோட்டை , பதிவு: மே 23,  2018 11:09 AM

[4] https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/23110945/Special-Utmost-Chinna-Avudaiyar-Temple.vpf

இந்த புகைப் படங்கள் எல்லாம் இணைதாங்களிலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் படுள்ளன.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2)

உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது[1]: இவையெல்லாம், ஏதோ புதியதாக கண்டுபிடித்தவை போன்று அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. அதாவாது, கோவில் சம்பந்தப் பட்ட எல்லா விசயங்களிலும் நுழைவது என்று தீர்மானமாக இருப்பது தெரிகிற்து. முன்னர் உழவாரப் பணிக்குக் கூட புதியதாக கன்டிஷன்களுடன் அறிக்கை வெளியிடப் பட்டது[2]. அவற்றைப் படித்துப் பார்த்தால், உழவாரப் பணியையே நிறுத்திவிட அத்தகைய திட்டம் போட்டுள்ளது போன்றிருந்தது. இத்தனை ஆண்டுகளாக, மனமார தொண்டு செய்ய வேண்டும் என்று சிறுவர்-பெரியவர், ஆண்கள்-பெண்கள்; படித்தவர்-படிக்காதவர் என்று எந்த வித்தியாசமு இல்லாமல், ஏல்லோரும் சேர்ந்து திருப்பணி செய்து வந்தனர். இதனால், ஆயிரக் கணக்கான கோவில்களின் உட்புறம்-வெளிப்புறம் சுத்தமடைந்து கொண்டிருந்தன. தொலைவில் இருக்கும்கோவில்களில் கூட பணி செய்யப் பட்டது. இனி, அவ்வாறு நடக்காது போலிருக்கிறது. ஏற்கெனவே சுமார் இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பிரச்சினையால் உழவாரப் பணி நடௌபெறாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

  1. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கொண்டாட்டம் தான். தினம்-தினம் கும்பாபிஷேகம் நடத்துவர்கள் வசூல் செய்வார்கள். ஆனால், ஆகமங்கள், விதிமுறைகள் தடுக்கின்றன.
  2. அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.
  3. பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.
  4. மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
  5. இப்படியெல்லாம் நடந்து கொண்டே இருந்தால், ஜாலியாகத்தான் இருக்கும். அதனால் தான், அதிகாரிகள், ஊழியர்கள் கழுத்துகளில் தொங்கும் நகைகளின் விட்டம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
  6. நூதனம், கும்பாபிஷேகம், புனருத்தாரனம் முதல் மற்ற எந்த புனித காரியமாக இருந்தாலும் சரி, கமிஷனர் வரைக் கூட பார்த்து கவனிக்க வேண்டியுள்ளது. பலதடவை சென்று வர வேண்டியிருக்கும். குறிப்பிட்ட நாளில் வாருங்கள் என்று சொல்லி அவர் இல்லை என்றால், எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். கவனிக்கப்படவில்லை என்றால் பலதடவை நடக்கவேண்டியிருக்க வேண்டும்.
  7. பிறகு அனுமதி ஆணை வாங்கவேண்டும், அதை வாங்குவதற்கு கீழுள்ள அதிகாரிகள் கவனிக்கப் படவேண்டும். சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்திலிருந்து, கோவில் உள்ள இடம் வரை அறநிலயத்துறை ஆட்கள் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள்.
  8. யாரிடம் எப்படி வாங்குகிறீர்கள், என்றெல்லாம் கேட்பது, வாங்கும் லஞ்சத்தின் அளவை நிர்ணயிக்கும். அயல்நாட்டிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது என்றால், லஞ்சம் தவிர மற்ற எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் வெளிப்படும், வரும்.
  9. முன்பே விசாரிக்கவும் செய்வார்கள் – எவ்வளவு தேரும் என்ற கணக்கீடு. பழைய ஆவணங்களை, முந்தைய விண்ணப்பங்கள் முதலியவற்றையும் எடுத்துப் பார்த்து கணக்குப் போட்டு வைப்பார்கள்.
  10. கஷ்டப்பட்டு, லட்சங்கள் கோடிகள் வசூல் செய்து, வேலை ஆரம்பித்து முடிக்கும் வரையில் ஏகப்பட்ட இடையூறுகள், இடைஞல்கள்………உண்டாக்குவார்கள்.
  11. அந்தந்த வேலைகள் செய்ய, எங்கள் ஆட்களை வைக்க வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற தொல்லை……..வட்டம், மாவட்டங்கள் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
  12. கோவில் உள்ள கிராமத்தில், இடத்தில் உள்ளூர் கோஷ்டிகள் தொல்லைகள், மிரட்டல்கள்…..அங்கும் காசு கொடுக்க வேண்டும்…..
  13. சப்ளை செய்யும் மண், செங்கல், கம்பி, பெயின்ட் …….எல்லாவற்றிற்கும் பணமாக / கேஷாக கொடுத்துவிட வேண்டும்….பில்கள், இன்வாட்ஸ்கள் பற்றி சொல்ல வேண்டாம்…..
  14. இதற்கெல்லாம் ஒத்துழைக்கவில்லை என்றால், இரவோடு இரவாக கட்டுமானப் பொருட்கள் காணாமல் போய்விடும், கோவில் வேலைகளைப் பொறுபேற்று செய்யும் சேவகர்கள் மிரட்டப் படுவார்கள், அவர்கள் வீட்டில் திருடுகள் நடக்கும், பொய் வழக்குகள் போடப் படும். அந்த அளவுக்கு இடையூறுகள், பாதிப்புகள் இவற்றையெல்லாம் மீறி, சாமர்த்தியமாக, திருப்பணி செய்ய வேண்டும்.
  15. எல்லாம் முடிந்து விழா ஏற்பாடு என்றால், அந்த நோட்டிஸுகளில், சுவரொட்டிகளில், விழா அழைப்பிதழ்களில் உண்மையான / உண்மையாக உழைத்தவர்கள் பெயர்களை விட அந்த லஞ்சக்காரன், கொள்ளைக்காரன், ரௌடி, அரசியல்வாதி, சம்பந்தமே இல்லாத இதே வகையறாக்கள்…….. அதற்கும் மேலாக நாத்திக-இந்துவிரோதி அமைச்சர், முதலம்மைச்சர் படங்கள் முன் அட்டையில் பக்கத்தில் இருக்க வேண்டும், ஆனால், அக்கோவில் சாமி படம் பின்னால் இருக்க வேண்டும்.
  16. முதலமைச்சர் படம் இல்லையென்றால், அவ்வளவுதான், நிகழ்ச்சியே ரத்து செய்யப் படும் அளவுக்கு காரியங்கள் நடந்துள்ளன. மறுபடியும் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டுள்ளன.
  17. விழா அன்றோ இவர்களுக்கு வண்டி ஏற்பாடு, சாப்பாடு செலவு எல்லாம் செய வேண்டும். கோவில் விழா என்றாலும் அசைவ சாப்பாடு கேட்பார்கள், ஏற்பாடு செய வேண்டும்….சில இடங்களில் மற்றவையும் கேட்பார்கள்…..
  18. பூஜாரிகள், குருக்கள், சிவாச்சாரியார்கள், பட்டர்கள், போன்றவர்களை ஒருமையில் பேசுவார்கள், விளிப்பார்கள், உரையாடல்களில் குறிப்பிடுவார்கள்.
  19. ஆக இத்தனை இடையூறுகள், அவமானங்கள், பாதிப்புகள் முதலிய கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும்போதும், கோவில்கள் நலம், ஆகமங்களைப் போற்றும் கடமை, அவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகள் முதலியவற்றைக் கவனத்தில் கொண்டு பொறுமையோடு கடமைகளை ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செய்து வருகின்றனர்.
  20. ஆனால், நாத்திகம், இந்துவிரோதம் மற்றும் ஆட்சியாளர்களின் சார்பு என்று கொண்டுள்ளவர்கள் உண்மைகளை மறைத்து பிரச்சாரம் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்[3]. கருணாநிதி இந்துமதத்தின் நண்பன் என்றேல்லாம் எழுதுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஔரங்ஜசீப் கோவில்கள் கட்ட மானியம் கொடுத்தான் போன்ற கதைகள் தான்[4].

ஔரங்கசீப்பின் ஜெஸியாவை நோக்கி செல்லும் திமுகவின் நாத்திகஇந்துவிரோத ஆட்சி[5]: ஔரங்கசீப் ஆட்சியில் ஜெஸியா முறை பின்பற்றப் பட்டு வந்தது. அத்தகைய வரிமுறைப்படி, இந்துக்கள் கடுமையாக அடக்கி வைக்கப் பட்டனர். தங்களது தினசரி பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், பண்டிகைகள் எத்வும் பின்அர்ர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் படி, யாரும் (இந்துக்கள்) புதியக் கோவிலைக் கட்டக் கூடாது. இருக்கும் கோவில்களைப் புதுப்பிக்கக் கூடாது. பழுதடைந்தாலும், ரிப்பேர் செய்யக் கூடாது. இந்துக்கள் கோவில்களுக்குச் செல்லக் கூடாது, ஆனால், முகமதியர்களுக்கு அனுமதி கொடுக்கப் படவேண்டும்[6]. அவர்கள் தங்குவதானாலும், இடம் கொடுக்க வேண்டும். பக்தர்கள் அளிக்கும் காணிக்கை முழுவதும் அரசுக்கு வரவேண்டும். விலையுயர்ந்த சிலைகள், பொருட்கள் முதலியன, சுல்தான் கொள்ளையிட்டு செல்வான். யாரும்தடுக்கக் கூடாது. கூட்டம்சேர்க்கக் கூடாது, விழாக்கள் கொண்டாடக் கூடாது. 

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] இது நிச்சயமாக உள்நோக்கத்துடன் உண்டாக்கப் பட்ட தடை தான், இத்தகைய அடக்குமுறைகளில் உழவாரப் பணியே நடக்காமல் போய் விடும், ஒருவேளை அதுதான், ஆட்சியாளர்களின் திட்டம் போலும்.

[2] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 06:19 AM.

https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[3] பாரி ஜோஸ்-சிவகுமார், கலைஞரே இந்துமதத்தின் உண்மை நண்பன், PARI JOSE; A Sivakumar,  JUNE 14, 2020.

[4]https://ilovedmk.wordpress.com/2020/06/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/

[5] நிச்சயமாக ஔரங்கசீப்பின் அட்சிமுறை மக்களுக்குத் தெரிந்திருக்காது, ஆனால், இந்த இந்த ஆறாண்டு மாத கால ஆட்சி அனைத்தையும் தன்னுள் கொண்டு, எடுத்துக் காட்டிவிட்டது.

[6] இப்படித்தான் கருணாநிதி குடும்பத்தினர் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர், கிரிவலம் வருகின்றனர், நேர்த்திக்கடன் செல்லுத்தி வருகின்றனர்.

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

ஒக்ரோபர்12, 2021

ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (1)

காலமுறை அறிக்கை சமர்ப்பிக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு: அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் காலமுறை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்[1]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[2]:  அறநிலையத்துறை நிர்வாக நலன் கருதி இத்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து தலைமை அலுவலகத்திற்கு கால முறை அறிக்கைகள் அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடம் இருந்து கால முறை அறிக்கை பெற்று தொகுத்து சரிபார்த்து ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேலும், காலமுறை அறிக்கையில் அளிக்கப்படும் விவரங்களுக்கு இணை ஆணையர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள். 2021 செப்டம்பர் மாதம் வரையிலான விவரங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் அடுத்து வரும் மாதத்திற்கான கால முறை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

பணியாளர் விவரங்கள்பணியில் உள்ளவர், ஊழலில் மாட்டிக் கொண்டவர், ஓய்வு பெறப் போகிறவர் முதலியன: அதில்,

  • எத்தனை மாவட்டங்களில் மாவட்ட குழு ஏற்படுத்தி உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது,
  • பரம்பரை உரிமை வழக்கு நிலுவையாக உள்ளவை எவ்வளவு,
  • நிர்வாக திட்டம் இல்லாத கோயில்களின் எண்ணிக்கை,
  • அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டிய கோயில்களின் எண்ணிக்கை,
  • பரம்பரை அறங்காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இனங்களின் எண்ணிக்கை,
  • கோயில்களில் பணியிடங்கள் விவரங்கள்,
  • எத்தனை பணியாளர்கள் ஓழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
  • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்,
  • 4 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை விவரம்,
  • அடுத்த 5 ஆண்டுகளில் 50-55 வயது அல்லது 25/30 வருட பணி நிறைவு செய்யும் நபர் கட்டாய ஓய்வு பரிசீலினைக்கு உட்பட்ட பணியாளர் விவரம்,
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி காலி பணியிட விவரம்,
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பணியில் சேர்ந்து 3 மாதங்களுக்கு சொத்து விவர பட்டியல் தாக்கல் செய்ய வேண்டிய பணியாளர்கள் எண்ணிக்கை, …….

கோவில் பணி, நிதி, திருப்பணி பற்றிய விவகாரங்கள்: கடந்த மாதம் (செப்டம்பர் 2021) வரை

  • -எத்தனை கோயில்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்ட விவரம்,
  • கோயில்களின் திருப்பணிக்காக ஆசிய வளர்ச்சி வங்கி,
  • சுற்றுலாத்துறை,
  • திருப்பணி நிதி,
  • தேர் திருப்பணி நிதி,
  • ஆலய மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்ட விவரம்

உட்பட 485 விவரங்களைய அனுப்ப வேண்டும். உரிய காலத்திற்குள் கால முறை அறிக்கை விவரங்களை அனுப்பாத, அனுப்ப தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவையெல்லாம் திடீரென்று கேட்கப் படவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அலுவலகத்தில், அந்தந்த பிரிவில் வேலைசெய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள், எழுத்தர்கள் என்று கோப்புகளை வைத்திருப்பவர்களுக்கு விவரங்கள் தெரிந்திருக்கும். மாதாந்திர, வருட அறிக்கைகள் மண்டலங்கள், கோவில்கள் அனுப்பாமல் இருக்காது. அவற்றைத் தொகுத்து முழு அறிக்கைத் தயாரிக்கவேண்டியது, நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாகும். ஆகவே, இவையெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.

கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகை: கோயில்களில் ஒரே மாதிரியான முறையில் திருப்பணிகளை செயல்படுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது[3]. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது[4]: கோயில்களில் கட்டப்படவிருக்கும் மண்டபம், பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டிட பணிக்கு முறையே மண் பரிசோதனை செய்யப்பட்டு வடிவமைப்பு கணக்கீடு தயார் செய்து கட்டப்படவிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமாக இருக்க வேண்டிய சர்வே எண்ணுடன் கூடிய சர்வே வரைபடம் இணைத்தல் வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு, ஒப்பந்த நகல் மற்றும் தொடர்புடைய வரைபடங்கள், வடிவமைப்பு கணக்கீடுகள் போன்றவற்றின் நகல்கள் தளத்தில் வைத்திருத்தல் வேண்டும். ஆணையர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆய்வின் போது பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.

* நடைபெற்றும் வரும் பணிகளை மாதம் ஒரு முறை செய்பொறியாளர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகள் முடிவுற்ற பின் பணியின் மதிப்பீட்டு தொகை என்னவாக இருப்பினும் பணி முடிவடைந்ததற்கான சான்றினை செயற்பொறியாளரிடம் பெற்று பின்னரே இறுதியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

* பணியின் மதிப்பு ரூ.2 கோடி வரை என்றால் 15 நாட்கள், ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் ரூ.30 நாட்கள் வரை குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியாக அழைக்க ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

* ஒப்பந்தபுள்ளி திறப்பு முதல் பணி ஆணை வழங்கும் நாள் வரை கால அவகாசம் 90 நாட்களுக்கு அதிகமாக இருக்க கூடாது.

100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இப்படி தினம்-தினம் ஆணைகள் பிரப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்:

* கோயில் பணிகளான கோபுரம், விமானம் போன்ற ஸ்தபதிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும்போது தொல்லியல் துறை, மாநில அளவிலான கமிட்டி, உயர் நீதிமன்ற கருத்து ஆகியவற்றின் கருத்துகளின் அடிப்படையிலும், வரைபட குழுவின் அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின் அடிப்படையிலும் திருப்பணிக்கான மதிப்பீட்டில் தொல்லியல் துறையினரால் அவ்வபோது வழங்கப்படும் கருத்துருவின் அடிப்படையில் தொன்மை மாறாமல் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.

* கட்டுமான பணிகளுக்கு சான்றினை பெற்று தரமுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். இரும்பு கம்பிகள், ஜிஐ ஷீட், அலுமினியம் ஷீட் ஆகிய இனங்களுக்கு தொடர்புடைய தரச்சான்று பெற்று அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில்களின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்[5].

* கோயில் கட்டுமானங்களில் சுண்ணாம்பு, வண்ணப்பூச்சு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[6].

இவையெல்லாம் கோவில் பணிகள் அனைத்தும் முடக்கும் செய்யும் திட்டம் போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

12-10-2021


[1] தினகரன், கோயில்களின் திருப்பணி உட்பட 485 தலைப்புகளின் கீழ் விவரம் அளிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை, 2021-10-11@ 00:04:07.

[2]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711498

[3] தினகரன், பணிகள் முழுவதும் முடிந்த பிறகே பணம் பட்டுவாடா கோயில்களில் திருப்பணிகளை செயல்படுத்த விதிமுறைகள் வெளியீடு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை, 2021-10-04@ 02:53:37.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=709797

[5] தினகரன், 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் எந்த வகையிலான கட்டுமானங்களையும் ஏற்படுத்த கூடாது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு, 2021-10-12@ 12:45:30.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=711977

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி ஐ.பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! (2)

ஜூலை17, 2021

பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி .பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! (2)

திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை (திலவதியின் கட்டுரை): வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர். இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றி ருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியாளர் இறை நம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகிறதா என்பதுமே முக்கியம். இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்குத் தீங்கானதும் ஆகும், என்று திலகவதி முடித்திருக்கிறார்.

திலவதி முடிவாகக் கொடுத்துள்ள அம்சங்களை, கீழ்கண்டவாறு பட்டியல் இடப் பட்டு, அலசப் படுகிறது:

  1. வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை.
  2. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்.
  3. இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றிருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது.
  4. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது.
  5. ஆட்சியாளர்கள் இறைநம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா என்பதும் முக்கியம்.
  6. இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்கு தீங்கானதும் ஆகும்.

இனி, இந்த குறிப்பிட்ட அம்சங்கள் கீழ்கண்டவாறு அலசப் படுகின்றன.

சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்: சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான், என்று ஒப்புக் கொண்டுள்ளது நல்லது தான். “ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்”, என்று நியாயப் படுத்த முடியுமா? அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான் சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறது என்பது பெருமை அல்லவே. “பொருளாதாரக் குற்றப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ராஜசேகரன் நாயர் இருந்தபோதும், பிரதீப் வி பிலீப் இருந்தபோதும், ராஜேந்திரன் இருந்தபோதும், நான் இருந்தபோதும் களவு போயிருந்த ஏராளமான சிலைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லையே”, என்று வாதிடும் போது, மற்றவர்களை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.  ஐஜி பொன் மாணிக்கவேல் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. துறை சார்ந்தவர் எனும்போது, அவரைக் குறிப்பிடாமல், அவரது பணியைப் போறாமல், அமைதி காத்தது, பாரபட்சத்தைத் தான் காட்டுகிறது. .  ஐஜி பொன் மாணிக்கவேல் பொறுபெடுத்த போது, அவரை வேலை செய விடாமல், ஏன் வழக்குக் கூட போடப் பட்டது.  ஒருநிலையில், அவரது பதவிக் காலம் முடிந்தவுடன், நீட்டிக்காமல், அப்படியே, அவ்வேலை முடக்கப் பட்டது. அமைதியானது. இப்பொழுது, ஸ்டாலின் என்ன செவார் என்று பார்ப்போம்.

1817 ஆங்கிலேயர் காலம் முதல் திராவிடர் ஆட்சி 2021 வரை கோயில் நிர்வாகத்தில் ஊழல் நடப்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, சுதந்திரம் பெற்ற பிறகு கருணாநிதி ஆட்சிவரை இருந்த கோவில்-மடங்கள் நிர்வாக சட்டங்களைப் பற்றி விவரிப்பதில் எந்த புதிய விசயமும் இல்லை. அப்பொழுது ஊழல் இருந்தது என்றாதால், இப்பொழுதும் ஊழல் இருக்கிறது என்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு, அதைப் பற்றிக் குறிப்பிட்டு, எழுத வேண்டிய அவசியமும் இல்லை. குறிப்பிட்டதால், ஊழல் பிரச்சினை இந்து அறநிலையத் துறையில் அதிகமாகியுள்ளது அவரை உருத்துவது புரிகிறது. அப்பொழுது தர்மகர்த்தாக்கள் ஊழல் செய்தார்கள் என்றால், இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் திக-திமுக-அதிமுக என்றுதான் இருக்கிறார்கள். ஓமந்தூரர் குத்தகையை நிறுத்தினார் என்றால், பிறகு ஏன் வந்தது என்று விளக்கவில்லை. திருச்செந்தூர் வேல், கோவிலில் கொலை, பால் கமிஷன்  போன்றவை மறைக்கப் பட்டன. வாடகை-குத்தகைகளில் கோடானு கோடிகள் ஏய்ப்பு, நீதிமன்ற வழக்குகள் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தாலும் குறிப்பிடவில்லை.

அர்ச்சகரை குறைகூறும் திலகவதி: திலகவதி சொல்கிறார், “பருத்தியூர் நடராஜர் சிலை மாற்றி வைக்கப்பட்டு அசல் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டது. அன்றாடம் அந்தச் சிலையைத் தொட்டு அபிஷேகம் செய்த அர்ச்சகர் அதைச் சொல்லவில்லை. ஆராய்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் (ஒரிஜினல் சிலையின் போட்டோ அவரிடம் இருந்தது) சிலை மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்”. அர்ச்சகருக்கு ஆகமங்களின் படி பூஜை, அபிஷேகம் முதலியவற்றைத் தான் செய்ய முடியுமே தவிர, சிலை மாற்றப் பட்டதா-இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. மாக்ரோ போட்டோ பார்த்து கண்டு பிடிக்கும், தடயவியல் நிபுணர் அல்லர். மேலும், இங்கு பதூர் என்பதனை பருத்தியூர் என்கிறார் போலும். ஏனெனில், பதூர் நடராஜர் சிலை தான், கடத்தப்பட்டு, பிரிடிஷ் மியூஸியத்திற்கு விற்க்கப் பட்டது. டாக்டர் ஆர். நாகசாமி, அப்பொழுது லண்டன் கோர்ட்டுக்குச் சென்று, ஆதாரம் கண்பித்து, 1991ல் அவ்விக்கிரகம் திரும்பக் கொடுக்கப் பட்டது[1].

வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை: இது போல யாரும், எப்பொழுதும் சொன்னதில்லை. 1970லிருந்து 2021 வரை திராவிட-நாத்திக ஆட்சி காலத்தில் கோவில்களில் ஊழல் பெருகியது, சிலைகள் என்பதைத் தான் எடுத்துக் காட்டப் பட்டது. இக்காலகட்டத்தில் வலதுசாரிகள் இல்லை, அதாவது, இப்பொழுது போன்ற பிஜேபி கட்சி-ஆதிக்கம் என்றெல்லாம் இல்லை. இவ்விவரங்கள், விவகாரங்கள், வழக்குகள் பற்றி அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆக, இவ்வாறெல்லாம், திலகவதி வாதிப்பது, அவர்களுக்கு ஆதரித்து, பேசுவது போலிருக்கிறது. “வலதுசாரி ஆதரவாளர்கள்” என்று குறிப்பிட்டுள்ளதும், அரசியலாக்கும் நோக்கு வெளிப்படுகிறது. பிறகு “இடதுசாரி ஆதரவாளர்கள்” நிலை என்ன என்றும் கேட்கலாம்.மறைந்தது, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அத்தகைய மோசடிகளில் ஈடுபட்டது, கைதானது, சஸ்பெண்ட் செய்யப் பட்டது, சிறைக்கு போனது என்பன நடந்துள்ளன

அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்: சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி நடப்பதை யாரும் எதிர்க்க முடியாது. அதே போல ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றையும் மாற்ற முடியாது. “இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்,” என்பது வேறு, கோவில்களில் அர்ச்சகர் வேலைகளுக்கு, “பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்வது,” என்பது வேறு. இது பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பிரச்சினை அல்ல. சிதம்பர தீக்ஷிதர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இருக்கின்ற லட்சக் கணக்கான கோவில்களில் ஆகமங்கள் மற்றும் ஆகமங்கள் அல்லாது செயல்படு கோவில்களில் பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பாரம்பரியம்-பரம்பரை வழக்கம்-உரிமைகளோடு பூஜாரிகளாக இருந்து வந்துள்ளனர்-வருகின்றனர். அதையும் யாராலும் மாற்ற முடியாது. இட-ஒதுக்கீடு போர்வையில் இந்துக்கள்-அல்லாதவர்களும் வரமுடியாது. இதெல்லாம் திகவதிக்கு தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

17-07-2021


[1] In 1991, Tamil Nadu retrieved a Pathur Nataraja idol, which had ended up at the British Museum, London, for restoration, en route to a private buyer in Canada. The idol is under lock and key in a temple vault in Tiruvarur district. Sand particles sticking to the idol were the clinching evidence to prove that the idol belonged to the Pathur temple. Chandrasekaran said macro photography of idols and careful documentation it with details of age and weight will be the best way to prevent theft. Macro photography captures minute details of the object and is especially useful when trying to differentiate between two similar idols.