Archive for the ‘சிவலிங்கம்’ Category

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

மே13, 2023

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளை: தமிழகத்தில் திராவிடத்துவ ஆட்சியில் கடந்த 70 வருடங்களாக, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது, அபகரிப்பது, திருட்டுத் தனமாக பட்டா போட்டு வாங்குவது-விற்பது என்று பலகோடி வியாபாரம், ஊழல், முதலியவை நடந்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. இது பல கூட்டங்களுக்கு வியாபாரமாகி விட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பதிவுத்துறை, இந்து அறநிலையத் துறை போன்ற விசுவாசமான திராவிடத்துவ ஊழியர்களும், சேர்ந்துள்ளனர். இந்துக்களை விட கோவில் நிலங்கள், சொத்துகள் முதலிய விவரங்கள் இவர்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும். காலம்காலமாக அமைதியாக, 100-1000 என்று கொடுத்துக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். யாராவது கேட்டால், அவ்வப்பொழுது மாமூல் கொடுத்து சரிகட்டி வருகின்றனர். இதில் நாத்திகர், இந்துவிரோதிகள் ஏன், இந்துக்கள் அல்லாதவர், துலுக்கர், கிருத்துவார் என்றெல்லாம் கூட பங்கு கொண்டு, இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர். சங்கம் அமைத்து, நீதிமன்றங்களில் உரிமை கேட்டு போராடி வருகின்றன்றர். 

நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் கோவில் நிலத்தை அபகரித்துள்ளது: கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது[1]. இதில் கூட என்ன சகிப்புத் தன்மை, சகிப்பற்றத் தன்மை என்றெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேஸ்வர சாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு விட்டது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது[2]. ஆக, கோவில் நிலத்தை குத்தகை விட்டதிலிருந்தே ஊழல் ஆரம்பிக்கிறது. கோயில் நிலத்தை கோவூர் வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி விவசாயம் செய்வதற்காக உறுப்பினருக்கு பகிர்ந்து வழங்கியது[3].  “பகிர்ந்து வழங்கியது,” என்றால், அதன் பயன்பாடு விவரங்கள் “கட்டிடங்கள் கட்டலாமா கூடாதா என்ற-போன்ற விவரங்கள்” அவர்களுக்குத் தான் தெரியும். நிலத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை காலி செய்து கோயில் வசம் ஒப்படைக்க கடலூர் கோர்ட் உத்தரவிட்டது[4]. இந்த அழகில் வாடகையே கொடுக்காமல் அனுபவிக்கின்றனர் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் என்றெல்லாம் கண்டு கொள்லலாம்.

நிலம் மீட்கப் படும, வாடகை வசூலிக்க முடியுமா?: கடலூர் வருவாய் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் உள்பட 20 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[5]. அத்தகைய மஹா ஒழுக்கசீலர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றால், அவர்களது பராக்கிரமத்தையும் அறிந்து கொள்ளலாம். 4 வாரத்தில் நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது[6]. இப்பொழுது மே என்றால் ஜூன் மாதமும் வந்து விட்டு போகும். இந்த ஆணையை அமூல் படுத்துவார்களா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஜூன் வரைக்கும் பொறுங்கள் என்பார்கள், அதற்குள் மேல்முறையீடு செய்வார்கள். கோயில் நிலத்திற்கான குத்தகை நிலுவையை வசூலிக்க கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது[7]. இதற்கும் தங்களிடம் பணம் இல்லை என்பார்கள் அல்லது “வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி” என்பதால் ஹள்ளுப்டி செய்யுங்கள் என்று கேட்டாலும் ஆச்சரியப் பௌவதற்கு இல்லை. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்[8]. கூட்டுறவு சங்கத்துடன் மட்டுமே ஒப்பந்தம் என்பதால் உறுப்பினர்கள் வழக்கு தொடர அதிகாரமில்லை என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோயிலுடன் மனுதாரகளுக்கு எவ்வித ஒப்பந்தமும் இல்லை என்பதால் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.

நீதிமன்ற ஆணைகனம் நீதிபதிகளின் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “ரூ.50 லட்சம் பாக்கி கோவில் நிர்வாகம் தரப்பில் தங்களுக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், வழக்கு தொடர்ந்துள்ள உறுப்பினர்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கை தொடர அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதிடப்பட்டது. மேலும், ரூ.50 லட்சம் ரூபாய் அளவிற்கு குத்தகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளதாகவும், விவசாயத்திற்கு கொடுத்த நிலத்தை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்கிறேன். கோவில் நிர்வாகத்துக்கும், கூட்டுறவு சங்கத்துக்கும் இடையேதான் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் எதுவும் செய்யாமல், கோவில் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி உள்ளனர். வெளியேற்ற வேண்டும் இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்துள்ளது. அப்போது கூட குத்தகை தொகையை வழங்கவில்லை. கோவில் நிலத்தை அபகரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் சகித்துக்கொள்ள முடியாது. கோவிலுக்கு மனுதாரர்களால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் காஞ்சீபுரம் கலெக்டர் ஒப்படைக்க வேண்டும். குத்தகை பாக்கித்தொகையை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[10].

கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்[11]. புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்யப்பட்டது[12]. இதுகுறித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், போலி ஆவணம் தயாரிக்க உதவிய முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் சகாயராஜ்,62; லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெரு கருணாகரன் (எ) செந்தில்,37; பத்திர எழுத்தர் தேங்காய்த்திட்டு அருள்பெரும்ஜோதி நகர் மணிகண்டன்,46; முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகர் அசோக்,52; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர்,. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் கருணாகரன் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில் நிலம் கொள்ளை: வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், பாஸ்கரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு சரவணன், உதயச்சந்திரன், பூரணி ஆகியோரை டி.ஜி.பி., மனோஜ்குமார் லால், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், ஐ.ஜி., சந்திரன், சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா ஆகியோர் பாராட்டினர். நிலத்திற்கு ‘ஜீரோ’ மதிப்பு -கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி நிலத்தை விற்பனை செய்ய முடியாதபடி, போலீஸ் பரிந்துரையை ஏற்று, பத்திர பதிவுத்துறை ‘ஜீரோ’ மதிப்பு கொண்ட நிலமாக மாற்றியுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றி மீண்டும் கோவில் பெயரில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ் 13-05-2023


[1] தினகரன், கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது: சென்னை உயர்நீதிமன்றம், May 12, 2023, 5:54 pm.

[2] https://www.dinakaran.com/attempts-expropriate-temple-land-any-rate-cannot-be-tolerated-madras-high-court/

[3] நியூஸ்.டி.எம், “நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாது!” Byஅருணா|12 May 2023 6:30 PM

[4] https://newstm.in/tamilnadu/–1905011

[5] மாலைமுரசு, நிலத்தை அபகரிக்கும் முயற்சியை சகித்துகொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்!!, webteam, May 12, 2023 – 20:48.

[6] https://www.malaimurasu.com/posts/district-news/Attempts-to-grab-land-cannot-be-tolerated

[7] தினமலர், கோவில் நிலத்தை மீட்கும்படி கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: மே 12,2023 22:05…

[8] https://m.dinamalar.com/detail.php?id=3318887

[9] தினத்தந்தி, கோவில் நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாதுஐகோர்ட்டு கண்டனம், தினத்தந்தி மே 13, 5:13 am

[10] https://www.dailythanthi.com/News/State/expropriation-of-temple-land-cannot-be-tolerated-court-condemns-963457

[11]  தினமலர், கோவில் நிலம் அபகரிப்பு மேலும் 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மே 11,2023 06:38…

[12] https://m.dinamalar.com/detail.php?id=3317727

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

தொல்லியல்  துறை நிர்வாகம் சிறப்பாக இருக்குமா?: ”அப்படியும் சொல்ல முடியாது. முன்பெல்லாம் தொல்லியல் துறையில் உள்ள அனுபவம் மிக்க நிபுணர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வேலைகளும் நிதானமாக நடந்தது. ஆனால், தற்போது கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.  ஒதுக்கப்படும் நிதியை, நடப்பு நிதியாண்டுக்குள் செலவழித்து விடவேண்டும் என்பதற்காக வேகவேகமாக வேலை செய்து கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சை பெரியகோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான ஒப்பந்தம் ஆந்திராவில் உள்ள கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ராஜராஜசோழனுடைய நான்கு கல்வெட்டுத் தூண்களை உடைத்துவிட்டனர். இதற்கான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. 

முஸ்லிம்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்: 16 -ம் நூற்றாண்டில், வடஇந்தியாவில் இருந்து படையெடுத்து வந்து நம் கோயில்கள் பலவற்றை இடித்தனர். நம் வரலாறுகளை அழித்தனர். அவர்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்.  நம்முடைய வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவற்றின் நிதர்சனமான சாட்சியங்களாகவும், காப்பகங்களாகவும் திகழும் ஆலயங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் நம் கோயில்களைப் பாதுகாத்து நம் சந்ததியினருக்கும் விட்டுவைக்க முடியும். நம் கலை, கலாசாரம், தொன்மைப் பண்பாடு போன்றவை காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யமுடியும்” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

2019ல் விடுத்த பக்தர்களின் கோரிக்கை: நாகநாதசுவாமி கோயிலில் பழமைமாறாமல் திருப்பணி செய்ய தமிழக தொல்லியல் துறையும், அறநிலையத்துறையும் முடிவு செய்து அதற்கான பணிகளை 2015ம் ஆண்டு ரூ.35 லட்சத்தில் துவங்கியது. விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சை சாலையை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் பணியை துவங்கும்போது இந்த கோயில் சாலையில் இடையூறாக உள்ளதால் இடிக்க வேண்டுமென அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்[1]. அப்போது பழமையான கோயிலை இடிக்காமல் பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசிடம் வரலாற்று ஆய்வாளர்கள், சிவனடியார்கள் முறையிட்டனர். ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளனர். கோயில் திருப்பணியை விரைவில் துவங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்[2]. இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் தலைவர் திருவடிகுடில் சுவாமிகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது[3]: “…………இந்த இடம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், இடையூறாக உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தப்போவதாகவும் அறிகிறோம்.………………… கடந்த முறை இந்த சாலை அகலப்படுத்தப்பட்ட போதும் இதுபோன்ற வகையில் ஏற்கெனவே இருந்த பழமையான மதில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. சாலை ஒப்பந்ததாரர்கள் தான் தனது சொந்த செலவில் மீண்டும் புதிதாக வடக்குப் பகுதி மதிலை கட்டிக் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் மதில் இடிக்கப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக யாரும் தடுக்க முடியாமல் போய்விட்டது. ……… சுமார் 1000 ஆண்டுகளை கடந்தும், நமது பாரம்பரியத்தை பறைசாற்றியும் கல்வெட்டுகளால் பழம்பெருமைமிக்க வரலாறுகளையும் சான்றுகளுடனம் உள்ள இக்கோவிலை பாதுகாக்க வேண்டும் ……………….”  என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

2021ல் பக்தர்களின் கோரிக்கை:  இந்த கோவிலை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மகாமக திருவிழாவின்போது கருங்கற்களை பிரித்தனர்[5]. ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிலைகளை தொல்லியல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து தனிகொட்டகை அமைத்து அங்கு பாதுகாப்பாக வைத்தனர்[6]. அதன் பின்னர் கோவிலில் திருப்பணிகள் செய்ய தொடங்கினர். ஆனால் சில வாரங்களிலேயே அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த கோவில் தற்போது செடி, கொடிகள் மண்டி, புற்கள் முளைத்து புதர்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலில் கோபுரம் மற்றும் மதில் சுவர்களில் செடிகள், மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து பல்வேறு ஆண்டுகள் ஆனதால் திருப்பணி வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த பணிகள் தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் நடைபெற வேண்டும். முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர் திருப்பணி வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் தெரிவித்தனர். உடனடியாக இந்த கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை பாதுகாத்து, வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2014லிருந்து இக்கோவிலில் நடந்தவை[7]: பின்னர், இந்த ஆலயம் அரசு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது என்று பக்தர்கள் மன்றமான ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சுட்டிக்காட்டினார்[8]. இதையடுத்து, சுமார் ₹32 லட்சம் செலவில் கோயிலை புதுப்பிக்க மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கியது மற்றும் HR&CE துறை பணியை மேற்கொண்டது. “2014ல் பாலாலயம் நடத்தப்பட்டு, தெய்வ விக்கிரங்ங்கள் தற்காலிகக் கொட்டகைக்கு மாற்றப்பட்டு, புதுப்பித்தல் தொடங்கியது. ஆனால் ஒப்பந்ததாரருக்கு தேவையான நிபுணத்துவம் இல்லாததால், கோவில் கிட்டத்தட்ட இடிக்கப்பட்டது. அகற்றப்பட்ட கற்களுக்கு சரியான எண்கள் போடப்படவில்லை. அவை சிதறிக் கிடக்கின்றன,” என்று சுவாமிகள் கூறுகிறார். “கோயிலை ஆய்வு செய்த யுனெஸ்கோ குழுவினர் பணியின் மீது அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், 2016 ஆம் ஆண்டு மாநிலத்தில் உள்ள கோவில்களை சீரமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் நிபுணர் குழுவின் வழிகாட்டுதலுடன் கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே. சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இந்தக் கோயிலில் தமிழ்க் கூத்துக்கான தனித்துவம் உட்பட பழமையான கல்வெட்டுகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். சமீபத்தில் திருவடிக்குடில் சுவாமிகள் கேட்ட கேள்விக்கு, கும்பகோணத்தில் உள்ள மனிதவள HR& CE துறை, யுனெஸ்கோ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தொல்லியல் துறை மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. “நாங்கள் சமீபத்தில் கோவிலை சீரமைக்க கோரி நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டினோம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு கூட திட்டமிட்டோம், ஆனால் தொற்றுநோய் காரணமாக அதை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. புதிய அரசாங்கத்தின் மாநில பட்ஜெட்டில் கணிசமான ஒதுக்கீட்டைப் பெற்ற தொல்லியல் துறை, இந்த பழமையான கோவிலை பாதுகாக்க விரைவில் புதுப்பிக்கும் என்று நம்புகிறோம்,” என்று சுவாமிகள் கூறினார்.

2002 வரை இக்கோவில் விவகாரம் மாறாமல் இருப்பது: 2022ல் இப்பொழுது, ஶ்ரீரங்கம் நரசிம்மன், இக்கோவிலுக்குச் சென்று, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கோவில்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல், தொடர்ந்து வழக்குகள் போட்டு, நிலைமையை எடுத்துக் காட்டுதல் என்று சிறப்பான பணியை செய்து வருகிறார். ஆக, இத்தனை ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து, அக்கோவில் மேலும் மோசமான நிலைக்குச் சென்றுக் கொன்டிருப்பதை அவரது விளக்கத்திலிருந்து அறிய முடிகிறது. தமிழகத்தில், சோழர்களைப் பற்றி லவ்-ஹேட் / விருப்பு-வெறுப்பு அரசியல் தான் நடந்து கொன்டிருக்கிறது. ஒரு வகையான அத்தகைய முரண்பாட்டை சித்தாந்தம் ஆக்கி, அதையே அவ்வப்பொழுது பேசுவதும், எழுதுவதும், இப்பொழுது இணைதளங்களில் தமக்கு விருப்பமான வகையில் பதிவுகள் செய்வது,  வீடியோக்கள் போடுவதும் வழக்கமாகி விட்டது. அதையே வியாபாரமாக்கி, வணிகமாகவும் மாற்றி விட்டனர். அத்தகைய நிலையில், ஏதோ டிவி பட்டி மன்றங்கள், வாத-விவாதங்கள் போன்றாகி, பொழுது போக்கு அம்சமாகி விட்டது. படித்து-கேட்டு-ரசித்து மறந்து விடும் நிலைக்கும் போய் விட்டது.

வேதபிரகாஷ்

06-11-2022


[1] தினகரன், உலக புகழ்பெற்ற மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் திருப்பணி துவங்காவிட்டால் போராட்டம், 06:46 am Jun 14, 2019 | dotcom@dinakaran.com(Editor)

[2] https://m.dinakaran.com/article/news-detail/941127

[3] தினமணி, மானம்பாடி நாகநாத சுவாமி கோவிலை அகற்ற ஆட்சேபனை, By dn  |   Published On : 09th May 2013 03:42 PM  |   Last Updated : 09th May 2013 03:42 PM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/may/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-676406.html

[5] மாலைமலர், மானம்பாடி நாகநாதசாமி கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணி செய்ய பக்தர்கள் கோரிக்கை, By மாலை மலர்30 ஜூன் 2021 2:21 PM (Updated: 30 ஜூன் 2021 2:21 PM)

[6] https://www.maalaimalar.com/devotional/worship/2021/06/30142128/2782559/Temple-Renovation-devotees-request.vpf

[7] The Hindu, Heritage activists for resumption of Manambadi temple renovation, SPECIAL CORRESPONDENT,  TIRUCHI AUGUST 18, 2021 20:01 IST; UPDATED: AUGUST 19, 2021 08:28 IST

[8] https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/heritage-activists-for-resumption-of-manambadi-temple-renovation/article35981995.ece

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? அதற்கு காரணமானவர்களைப் பற்றி சொல்லத் தயங்குவதேன்? (2)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? அதற்கு காரணமானவர்களைப் பற்றி சொல்லத் தயங்குவதேன்? (2)

கங்கைகொண்ட சோழபுரம் போன்ற சிற்பம், சிவனின் மூன்று கைகளும் உடைக்கப் பட்டிருக்கின்றதைக் கவனிக்கலாம்.
ஒருபக்க்ம் இருந்த சிற்பத்தைக் காணோம், இன்னொரு பக்கம் இருக்கும் சிலையின் கை உடைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்!

கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்களா?: கோயிலின் நுழைவு வாயிலின் வலப்புறம் அதிகார நந்தியும், இடப்புறம் சிவபெருமான் அருச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவையும் தேவக்கோட்டத்தில் காணலாம். அம்பிகை கருவறை முகப்பு மண்டபத்தின் அருகிலேயே தெற்கு நோக்கி உள்ளது கங்கைகொண்ட சோழபுரம் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் ஒரு தேவக்கோட்டத்தில் காணப்படுகிறது. கோவிலில் அனுக்கிரக மூர்த்தி, கங்காவிசர்ஜனர், அர்த்தநாரிஸ்வரர், சண்டாள ரூபமூர்த்தி, அதிகார நந்தி, பிட்சாடனர் போன்ற மூர்த்திகள் காணக்கிடைக்காத தெய்வாம்சம் மிகுந்த கலைநயமிக்க மூர்த்திகளாக உள்ளனர். அளவுக்கு அதிகமான பெருங்கோயில்களை அருகாமையிலேயே கண்டு புழங்கி வருவதாலோ என்னவோ நம் மக்கள் இவற்றிக்கு உரிய மரியாதையை தராமல் உள்ளனர். காத்திருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை!, என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்கள் போன்ற லாஜிக் வூத்தேசம் / முடிவு தவறானது. சரித்திர ரீதியில் உண்மையினை தெரிவிக்க வேண்டும்.

 மந்திரதந்திரயந்திர வழிபாடு, விசேஷமான சூலக்கல்[1]: மேலும் நுழைவு வாயிலின் அருகே சூலக்கல் ஒன்று காணப்படுகிறது. பொதுவாக இத்தகைய கற்கள் சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் நடப்பட்டிருக்கும். இங்கு காணப்படும் சூலக்கல்லில் சூலமும், அதன் மேற்புறம் சூரியன் – சந்திரன் வடிவமும் சூலத்தின் கீழ்ப்பகுதியில் பன்றியின் வடிவமும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது[2]. சோழர்கள் “மந்திர-தந்திர-யந்திர” வழிபாடுகளில், கிரியைகளில், பிரயோகங்களில் ஈடுபட்டபோது, இத்தகைய யந்திரங்கள், தேவதைகள், அவற்றிற்கான கோவில்கள் உருவாக்கப் பட்டன. உறையூரில் 850ல் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன் (846-881), தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் அமைத்து, குலதெவமாக்கினார். அதன் பின்பு சோழ நாட்டை சுற்றி எட்டு திக்கிலும் காவல் புரிய அஷ்டகாளிகளை பிரதிட்டை செய்தார். நிசும்பசூதனியை வழிப்பட்ட பின்பே ஒவ்வொரு போருக்கும் செல்வர். பின் சோழர்கள் திருப்புயம்போரில் பாண்டியர்கள், பல்லவர்களை வெற்றி கொண்டு சோழர்கள் பேரரசு நிர்மாணம் செய்யப்பட்டது. சாளுக்கிய மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் (வராகத்தை) பன்றியை அரசு இலச்சினையில் கொண்டிருந்தனர்.  இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை.

முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்த கோவில்: தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் அதிட்டானப் பகுதியில் மட்டும் கல்வெட்டு காணப்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை. அதாவது உடைக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிடுவதற்கு தயக்கம். கட்டடக்கலை, சிற்பக்கலையின் அடிப்படையில் இக்கோயில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். இவன் சுங்கம் தவிர்த்த சோழன், சோழன் திரிபுவன சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றவன். கீழைச் சாளுக்கிய மன்னனாகிய இராஜராஜ நரேந்திரனின் புதல்வன். இவனுடைய தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கைதேவியார் ஆவார். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலில் காணப்படும் சூலக்கல்லில் பன்றி (வராகம்) அரச சின்னம் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதமுடிகிறது.  

கலைநயம் மிக்க சிற்பத்தின் கை உடைக்கப் பட்டுள்ளது……இதனை கவனிக்காதவர்கள் கலைக் காவலர்கள் என்றுக் கூறிக் கொண்டு அலைகிறார்கள்!
இருகைகள் உடைக்கப் பட்டிருப்பதைக் காணுங்கள். சிற்பி அதனை உருவாக்க தனது முழு உழைப்பைக் கொடுத்திரிக்கிறான். ஆனால், உடைத்தவன் உடைத்து விட்டு சென்று விட்டான். இன்று உடைத்தவனைப் போற்றுகிறார்கள்!

சிற்பங்கள் உடைக்கப் பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டாலும் காரணம் சொல்வதில்லை: இக்கோயிலில் பல சிற்பங்களின் கைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் காணும்பொழுது கண்ணில் நீர் பெருகுகிறது, என்று ஒருவர் உணர்ச்சிப் பூர்வமாகக் குறிப்பிட்டாலும், என்ன காரணம் என்று சொல்லவில்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் மகாமண்டபத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அங்கே தேவியுடன் அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் மட்டும் அமர்ந்து சண்டேசுவரருக்கு சண்டீசபதம் அளிக்கும் காட்சியை அழகிய சிற்பவடிவில் காணலாம். சிவபெருமான் தலைக்கு மேலே குடை காணப்படுகிறது. சிவபெருமான் காலின் கீழே சண்டேசுவரர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கைகளை உடைத்திருக்கின்றனர், என்று புலம்புவதோடு சரி. கருவறை விமானச் சுதைச் சிற்பங்கள் நாயக்கர்காலக் கலைச்சிறப்புடன் காட்சி தருகிறது. விமானத்தின் மீதும் செடிகொடிகள் வளர்ந்துள்ளன.

ராஜராஜன்ராஜேந்திரனை போற்றுவது, தூற்றுவது: ராஜராஜன், ராஜேந்திரன் முதலியோரை பார்ப்பன வருடிகள் என்று தூசித்து, பிருகதீஸ்வரர் கோவிலில் இந்தி கல்வெட்டுகள் இருக்கின்றன என்று பொய்களை சொல்லி, தமிழில் குடமுழுக்கு என்று பிரச்சினை கிளப்பி, இவ்வாறு பிரச்சாரம் செய்யும் தமிழ்வெறியர்களின் குறிக்கோள் என்ன? ராஜராஜன், ராஜேந்திரன் பிராமணர்களுக்கு “பிரமதேயம்” கொடுத்து பார்ப்பனீயத்தை ஊக்குவித்தான். அடிமைகளை வைத்து கோவில்கள் கட்டினான். கோவில்களில் பல தேவரடியார்களை வைத்து சமூகத்தைக் கெடுத்தான் போன்று எழுதியுள்ளார்கள். இப்படி ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களை ஒரு பக்கம் தூஷிப்பது, இன்னொரு பக்கத்தில், பல நாடுகளை வென்றான், உலகத்தை ஆண்டான் என்றெல்லாம் புகழ்வது. இத்தகைய முரண்பாடும், இவர்களது போலித்தனத்தைக் காட்டுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் பிரிவை உண்டாக்கி, பிரச்சினைகளை உருவாக்கத்தான் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மேலும், இவர்களுக்கு உதவுவது அயல்நாட்டவர் என்று தெரிகிறது. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், சரித்திரம், அகழ்வாய்வு என்று எந்த ஆதாரமும் இல்லாமல், “உலகம் முழுவதும் தமிழ் மொழி இருந்தது, கல்வெட்டுகள் இருக்கின்றன, தமிழ் தான் முதல் மொழி” என்ற திட்டத்துடன், மொழிப் பற்றை மொழிவெறியாக்கி, புதிய மொழி-அடிப்படைவாதம் போன்ற பயங்கரவாதத்தை உண்டாக்க பார்க்கின்றனர். தமிழன் கடல், கடல்சார் விஞ்ஞானம், கப்பல் கட்டும் தொழிற்நுட்பம் இவற்றில் எல்லாம் பெரிய முன்னோடிகள், விற்பனர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்றால், ஏன் ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கவில்லை?

கோவில்களை சீரழிக்கும் திராவிடத்துவ வெறுப்பு, காழ்ப்பு அரசியல், நிர்வாகம்: திராவிட மேடைகளில் திராவிட தோள்களை பார்த்தீர்களா, சேரன் செங்குட்டுவன் வீரத்தை கேளீர், ஈழம் சென்று கங்கை வென்று, கிடாரம் கொண்ட சோழனின் வீரத்தை பாரீர் என்றெல்லாம் மார் தட்டி வீராப்புப் பேசுவது வழக்கம்.. கருணாநிதி தன்னை ராஜராஜன் போலக் காட்டிக் கொண்டாலும், பெருங்கோவிலுக்குள் நுழைய பயந்தார். மதிலை உடைத்து, வழி செய்து கொண்டு உள்ளே நுழைந்தார்.. ஏ..ராஜா தஞ்சை கோவில் விழாவிலேயே ‘என் தலைவர் ராஜராஜசோழன், தளபதி ஸ்டாலின் ராஜேந்திர சோழன்’ என்றே பேசினாலும், ராஜராஜன் பார்ப்பன அடிவருடி, பார்ப்பனீயத்டைத் தூக்கிப் பிடித்தவன் என்ற் மற்ற மேடைகளில் பேசுவது வாடிக்கையான விசயமாக உள்ளது..  2021 வரை இத்தகைய கதைகளை புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்[3]. ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?, ராஜராஜ சோழனின் மறுபக்கம் என்று தலைப்புகளில் வெளிவரும் இந்த புத்தகங்களில், சரித்திரத் தன்மையே இல்லாமல், ஏதோ குழாயடி வம்பு, கிசுகிசுப்பு போன்று எழுதப்பட்டுள்ளனர்[4]. சரித்திர ஆதாரம் இல்லாமல், கட்டுக் கதைகளை இவ்வாறு பரப்புவதை, மெத்தப் படித்த மற்றவர்களும் கண்டிக்காமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இத்தகைய செயல்கள் துலுக்கர்களின் கோவில் இடிப்புகள், கலை-அழிப்புகள், இலக்கிய எரிப்புகளை விட மோசமாக இருப்பதைக் கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] கி.ஸ்ரீதரன், திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில், இதழ் 114, டிசம்பர் 16, 2014.

[2] http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1310

[3] டி.எஸ்.கிருஷ்ணவேல், ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா? தமிழ் நூல் மன்றம், 2019.

[4] துரை.இளமுருகு, ராஜராஜ சோழனின் மறுபக்கம், நுண்மை பதிப்பகம், 2021. 

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

ஜனவரி3, 2022

பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? (1)

10ம் நூற்றாண்டு ஏனாதிமங்கலம் 17ம் நூற்றாண்டில் பவுண்டரீகம் ஆனது- அப்பெயர் என்ற பெயர் வர காரணம்: பவுண்டரீகபுரம் கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது[1]. தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது[2]. முதலாம் குலோத்துங்க சோழரின் (1070-1120 CE) காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.  ஆனால், சிற்பங்கள், கோவில் அமைப்பு ராஜராஜன் (985-1014 CE) – ராஜேந்திரன் (1012-1044 CE) கோவில் அமைப்பைக் காட்டுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (c.17th cent.CE), தஞ்சாவூரை ஆண்ட ராஜாக்களுக்கு, அய்யா குமார தத்தா தேசிகர் என்ற ராஜகுரு இருந்தார்[3]. அவர் வெண்ணார் நதிக்கரையில் பௌண்டிரிகம் என்ற விசேஷ யாகம் செய்தார். அந்த நினைவாக இக்கோவில் பௌண்டரிகபுரம் கோவில் என்று அழைக்கப் படுகிறது[4].

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில்[5]: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் இக்கோவில் இந்நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடந்த நிலையில் உள்ளது[6]. செடி-கொடிகள் மண்டி, இடிந்துள்ள கோவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் வலர்ந்துள்ளன. அவ்வப்போது, உழவாரப் பணி என்று சுத்தம் செய்யப் பட்டு வந்தாலும், அவை வளர்ந்து விடுகின்றன. இது நிச்சயமாக திராவிடத்துவ நாத்திக ஆட்சியாளர்களின் அலட்சியம், வெறுப்பு மற்றும் துவேச குணாதசியங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், நிர்வாகம் என்ற முறையில் பாரபட்சமில்லாமல் மராமத்து, சரிசெய்தல், நிர்வாகம் என நடவடிக்கை எடுத்திருந்தாலே, ஒழுங்காக இருந்திருக்கும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக இருந்தாலும், சொல்லி வைத்தால் போன்று சோழர்கால கோவில்கள் இவ்வாறு விடப் பட்டது, கேள்விக் குறியாக உள்ளது. ஒரு புறம் சோழர்களை போற்றுவது, இன்னொரு பக்கம் சோழர்களைத் தூற்றுவது என்று சித்தாந்த ரீதியில் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது[7]. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

சிலைகள் உடைந்திருப்பது மற்றும் கோவில் சிதிலம்டைந்த நிலை ஏன்?: பொதுவாக இக்கோவில் நிலைப் பற்றி பலருக்குத் தெரிந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா செஒலவர்கள், உழ்வாரப் பணி செய்பவர்கள் வந்து செலிகிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள், இணைதளங்களில் போடுகிறார்கள். ஆனால், யாரும், அதற்கு மேலாக எதையும் செய்வதில்லை. அதாவது அரசாங்கம், கண்டு கொள்வதே இல்லை. ஒருவேளை துலுக்கர் வந்து, சிலைகளைச் சிதைத்துள்ளதால், அக்கோவில் வழிபாட்டிற்கு உகந்ததல்ல, என்று ஒதுக்கி வைத்தனரா என்ற கோணத்தில் யாரும் பதிவு செய்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு ஒதுக்கப் பட்ட கோவில் என்றால், இருக்கும் சிலைகளை அபகரிக்க கூட்டங்கள் தயாராக இருக்கின்றன. இணைதளத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் முந்தைய புத்தகங்களில் உள்ள விவரங்களை வைத்து கவனிக்கும் போது, இருக்கின்ற விவரங்களை திரும்ப-திரும்ப நாளிதழ்களிலும், இணைதளங்களிலும் விவரித்துள்ளனர். கல்வெட்டுகள் காணப்படவில்லை என்பதும் அதிர்ச்சியாக உள்ளது, ஏனெனில், சோழர்கால கோவில்களில் கல்வெட்டுகள் இல்லை என்பது பொய்யாகும். மேலும், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் யாவை போன்ற விவரங்களும் அறியப் படவேண்டும்.

கோவில், விக்கிரங்கள், சிலைகள் விவரங்கள்: தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது[8]. நந்தி, பலிபீடம் மூலவரை நோக்கி பிரகாரத்தில் உள்ளன. கர்ப்பகிருகம் ஒரு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மூலவர் உறையும் இடம் என்றுள்ளன. கோவிலின் பிரதான சுவாமி ஶ்ரீ சோமநாதர் ஆவார். லிங்க உருவத்தில் இருக்கும் விக்கிரகம் / லிங்கம் கிழக்கு பார்த்து இருக்கிறது. கர்ப்பகிருகத்திற்குச் செல்ல, இரண்டு பக்கம் படிகளும் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி. இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமீ தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது. மொத்தம் 22 கோஷ்ட விக்கிரங்கள் உள்ளன.

பொய்-பிரச்சாரங்களினின்று மக்கள் விழித்துக் கொண்ட நிலை: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அபூர்வ சிற்பங்களின் கைகளை முழுவதுமாக இடித்து இருப்பது, இடித்தவர்களின் குரூரமான எண்ணங்கள், அரக்கக் குணங்கள் மற்றும் கலையழிப்பு தீவிரவாதங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. துலுக்கரின் அத்தகைய மிகக்கொடிய அழிப்புகளை இந்தியா முழுவதும் பதிவாகி உள்ளது. அதேபோல, மாலிகாபூர் தெற்கே வந்தபோது, பற்பல கோவில்களை இடித்து செல்வத்தை சூரையாடியுள்ளான். ஆனால், அந்த உண்மைகளை சொல்ல தமிழக சரித்திராசிரியர்கள், தொல்லியல் வல்லுனர்கள், கோவில் வல்லுனர்கள் தயங்குகிறார்கள் மறைக்கிறார்கள். இளம்.முருகு, கிருஷ்ணவேல் போன்ற மறைப்பு சித்தாந்திகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வாறு தான் தமிழக சரித்திரம், சரித்திரவரைவியல் உண்மை-பொய்மைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. போதாக்குறைக்கு, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத, பெரியாரிஸ, பகுத்தறிவு, கம்யூனிஸ, இந்தியதேச விரோத சித்தாந்திகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல் படுவதால்ணொருதலைப் பட்சமாகவே கடந்த 70 ஆண்டுகள் சரித்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, உடைந்த சிலைகள், சிற்பங்கள், விக்கிரங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, உண்மையினை அறியத்தான் செய்கின்றனர். அதனால் தான், இன்றைக்கு கொஞ்சம்-கொஞ்சமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகின்றது.

© வேதபிரகாஷ்

03-01-2022


[1] விகிமேபியா, பவுண்டரீகபுரம் சிவன் கோயில், India / Tamil Nadu / Tiruvidaimarudur / முருக்கன்குடி ரோடு.

[2]http://wikimapia.org/36155075/ta/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

[3] Tamilnadu Tourism, Somanatha Swamy Temple, Poundarigapuram, Thanjavur, Thursday, September 12, 2019.

[4] https://tamilnadu-favtourism.blogspot.com/2019/09/somanatha-swamy-temple-poundarigapuram-thanjavur.html

[5] Ramanan P Ranganathan, Pundarikapuram Temple, Rare Temple in ruins uncared for – Somanatha Swamy Temple, Poundarigapuram, Tamilnadu, 9 July 2020,

[6] https://sites.google.com/site/reclaimtemplesindia/home/pundarikapuram-temple

[7] தினமணி, பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!, – கடம்பூர் விஜயன், Published on : 17th January 2017 04:19 PM.

[8] https://www.dinamani.com/religion/religion-articles/2017/jan/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2633857.html

தேவூர் கோவிலில் புதைக்கப் பட்ட 17 விக்கிரங்கள், 36 பூஜைப் பொருட்கள் கிடைத்துள்ளது எதனைக் காட்டுகிறது?

செப்ரெம்பர்27, 2021

தேவூர் கோவிலில் புதைக்கப் பட்ட 17 விக்கிரங்கள், 36 பூஜைப் பொருட்கள் கிடைத்துள்ளது எதனைக் காட்டுகிறது?

4ம் நூற்றாண்டில் கோசெங்கட் சோழன் கட்டிய தேவூர் கோவில்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ளது தேன்மொழி உடனுறை தேவபுரீஸ்வரர் கோயில். குலோத்துங்க சோழர் (1070-1120) கால கோயிலான இங்கு திருப்பணிக்காக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[1]. கோயிலில் திருப்பணிக்கு குழி தோண்டிய போது பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது[2]. இக்கோயில் 4ம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும்[3]. கோச்செங்கணான் காலம் க 400-600க்கு இடைப்பட்டதென்பதை உறுதி செய்யும் என்று இரா. கலைக்கோவன் எடுத்துக் காட்டுகிறார்[4]. மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. முதலாம் குலோத்துங்கன் எல்லா மதங்களையும் மதித்தான். நாகப்பட்டினத்தில் விகாரம் கட்டிக் கொள்ள இடமும், மானியமும் அளித்தான். ஆனால், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்தில் சமணர்கள், பௌத்தர்கள் அதிக தொல்லைகள் கொடுத்தனர். பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரையில் உள்ள 85-ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார்[5].

கோசெங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் தேவூர் கோவிலும் ஒன்று: கோசெங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்[6]. மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராசசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால் கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார். இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார்.

அம்மன் சிலை கண்டதும் குழியை மூடியது ஏன்?: திமுக ஆட்சிக்கு வந்ததும், திடீரென்று கோவில்களின் மீது அக்கரைக் கொண்டுள்ளது போலக் காட்டிக் கொள்வது திகைப்பாக இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்றுமுன்தினம் 25-09-2021 அன்று கோயிலில் ஒரு பகுதியில் நவக்கிரக சாமிகள் வைக்க மண்டபம் கட்ட பில்லர் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டது[7]. இந்நிலையில், கோயிலில் உள்ள நவக்கிரக பீடத்தின் அருகே கான்கிரீட் அமைக்கும் பணிக்காக நேற்று நிலத்தை தோண்டியபோது, அங்கு ஐம்பொன்னாலான சில சுவாமி சிலைகள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன, என்கிறதுதமிழ்.இந்து. அப்போது 4 அடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், சிலை இருந்த இடத்தை உடனடியாக மூடி வைத்து விட்டனர்[8]. இந்த தகவல் தேவூர் பகுதியில் கசிய தொடங்கியது.

பூஜைப் பொருட்கள் கிடைத்தது 30 / 36 என்று வேறுபடுகின்றன: தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தை தொழிலாளர்கள் மீண்டும் தோண்டினர். அப்போது தோண்டத் தோண்ட அரை அடி முதல்  4 அடி வரையிலான 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதில் பெரும்பாலானவை அம்மன் சிலைகளாக இருந்தன. மேலும் தோண்டியபோது திருவாச்சி, சூலம், அடிபீடம், பத்திமடம், தண்ணீர் கடம் (சங்குவடிவில்) தூபம், தூபக்கால் என 30 பூஜை பொருட்களும் கிடைத்தது. மேலும், ஐம்பொன்னாலான தாம்பூலம், கமண்டலம், துாபக்கால், விசிறி போன்ற 36 வகையான பூஜை பொருட்களும் அடுத்தடுத்து கிடைத்தன என்கிறது தினமலர்[9]. தேவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக வந்து, சிலைகளை வணங்கி சென்றனர்[10]. பின்னர் அந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது[11]. அவை கோயிலில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது[12]. இந்த சிலைகள் அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலிகாபூர் படையெடுப்பின் (1310-11) போது தமிழக கோவில்கள் சூரையாடப் பட்டது: மாலிகாபூர் (1310-11) படையெடுத்து, கோவில்களைக் கொள்ளையடிக்க வந்த போது, தென்னிந்தியாவில் பெரும்பாலான முக்கியமான கோவில்கள் சூரையாடப் பட்டன. முகமதிய நூல்கள் இவற்றை விளக்குகின்றன. அது மட்டுமல்லாது, கோவில்கள் இடிந்து கிடக்கும் நிலை, சிற்பங்கள் மூளியாக்கப் பட்ட நிலை, கை-கால்கள் உடந்த நிலை என்று பார்க்கும் போதும் தெரிந்து கொள்ளலாம். பூஜாரிகள், அடியார்கள், பக்தர்கள் விக்கிரங்களைக் காக்க பல தியாகங்களை செய்தனர், வழிமுறைகளைக் கையாண்டனர். செய்தி வரும் போதே அவசரம்-அவசரமாக மூலவர் விக்கிரகத்தை மறைக்க அரும் பாடு பட்டனர். அது போலவே, உற்சவர் மற்ற விலையுயர்ந்த சிலைகள், பூஜா பாத்திரங்கள், விளக்குகள், என்று பற்பல கிரியைகளுக்கு உபயோகப் படும் உலோக வஸ்துக்களை மறைத்து வைத்தனர். பல நேரங்களில் கோவில் வளாகங்களிலேயே புதைத்து வைத்தனர்.

துலுக்கருக்குப் பிறகு ஐரோப்பியர், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனி பலவற்றை வாரிக் கொண்டு சென்றனர்: முகமதிய, துலுக்கர்களுக்குப் பிறகு, ஐரோப்பியர் கொள்ளையடித்துச் சென்றனர். கிழக்கிந்திய கம்பெனிகளும் சூரையாடி அள்ளிச் சென்றன. இன்றைக்கு, ஆயிரக் கணக்கன ஐரோப்பிய-அமெரிக்க அருங்காட்சியகங்களில் தமிழக பஞ்சலோக சிலைகள், கோவில் பகுதிகள், தூண்கள், சிற்பங்கள் எல்லாம் கோடிக் கணக்கில் இருக்கின்றன என்பதே ஆதாரம் ஆகிறது. பிறகு, ஆயிரம் ஆண்டுகளாக, சிலை திருடும் கூட்டம் இதை அறிந்து கொண்டு பற்பல சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றைக் கொள்ளையடுத்துச் சென்றனர். பிறகு 1970களிலிருந்து, நாத்திக-இந்துவிரோத அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என்று அத்தகையோரின் கூட்டுடன், தொலைவில் அடிக்கடி யாரும் வராத கோவில்களில் கொள்ளையடுத்து வந்தனர். அதற்காக, லட்சங்கள் லஞ்சமாக வாங்கிக் கொண்டனர். இவ்வாறெல்லாம் போக, மிஞ்சியவைத் தான் இப்பொழுது கிடைக்கின்றன.

கீழடி புராணம் ஓடிக் கொண்டிருக்கும் போது, இது பெரியாரிஸ்ட்நாத்திகதிராவிடத்துவவாதிகளைக் கலக்குகிறது: நவக்கிரக சாமிகள் வைக்க மண்டபம் கட்ட பில்லர் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது 4 அடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், சிலை இருந்த இடத்தை உடனடியாக மூடி வைத்து விட்டனர். பொதுவாக அம்மன் சிலைகளுக்கு மிகுந்த பக்தியும், மரியாதையும், கிராம, நகர்ப்புற மக்கள் செல்லுத்துவது உண்டு.  அச்சிலைக்ளை / விக்கிரங்களைத் தொடுவதற்கும் பயப்படுவர். அந்நிலைதான், இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், அகழாய்வுத்துறை / தொல்லியல் துறைக்கு தெரிவிக்காமல் இருப்பது தான்.  தினம்-தினம் கீழடி பாட்டு பாடும் இவர்களுக்கு அது கூட தெரியாமல் போகுமா என்பது ஆச்சரியமே. மேலும் தோண்டியபோது திருவாச்சி, சூலம், அடிபீடம், பத்திமடம், தண்ணீர் கடம் (சங்குவடிவில்) தூபம், தூபக்கால் என 30 / 36 பூஜை பொருட்களும் கிடைத்தது. அதனால், ஒரு ஆபத்தான நிலையில், விக்கிரங்களுடன், பூஜைப் பொருட்கள், சாமான்கள் என்று எல்லாவற்றையும் புதைத்திருப்பது தெரிகிறது. கீழடி புராணம் ஓடிக் கொண்டிருக்கும் போது, இது பெரியாரிஸ்ட்-நாத்திக-திராவிடத்துவவாதிகளைக் கலக்குகிறது எனலாம். இதைப் பற்றி டிவிசெனல்களில் விவாதங்கள் நடத்துவார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

27-09-2021


[1] தமிழ்.இந்து, தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில் திருப்பணியின்போது ஐம்பொன்னாலான 14 சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டெடுப்பு, செய்திப்பிரிவு, Published : 27 Sep 2021 03:20 AM; Last Updated : 27 Sep 2021 05:44 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/720366-aimpon-statues-found-in-devapureeswarar-temple.html

[3] தினமணி, தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 சுவாமி சிலைகள், பூஜை பொருள்கள் கண்டெடுப்பு!, By DIN  |   Published on : 27th September 2021 07:42 AM.

[4] இரா. கலைக்கோவன், கோச்செங்கணான் யார் – 3, http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=73

[5] https://www.dinamani.com/tamilnadu/2021/sep/26/idols-of-swami-found-and-ambal-found-at-thevur-devapureeswarar-temple-3706769.html

[6]  முக்குல மன்னர்கள், https://mukkulamannargal.weebly.com/29903006297529653021296530192997300729943021296529953021-1.html

[7] தினகரன், கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு, 2021-09-27@ 00:54:59.

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=708062

[9] தினமலர், நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்,  Updated : செப் 27, 2021  04:03 |  Added : செப் 27, 2021  03:55.

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=2854368&Print=1

[11] தினத்தந்தி, நாகை தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு, பதிவு : செப்டம்பர் 26, 2021, 04:57 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/09/26165702/2742741/Discovery-of-17-idols-at-Nagai-Devapuriswarar-Temple.vpf.vpf

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!: இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி[1], “தமிழ்நாடு அர்ச்சகர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் அர்ச்சகர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்[2]. இதைத்தான், “அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி! ,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் இந்துமதத்தை தூஷித்து, 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி, எழுதி வருகின்றனர். இவற்றை எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறது. இப்பொழுது, அரசியல் ஆட்சி, அதிகாரம், பலம் மற்றும் ஊடக அசுர பிரச்சாரம் எல்லாம் இருப்பதால், இத்தகைய யுக்திகளும் கையாளப் படுகின்றன.

பணியில் உள்ள அர்ச்சகர் வெளியேற்றப் பட்டனர்: பணி ஆணையை பெற்ற அவர்கள் 15-08-2021 அன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது[3]. அதில் பேசும் குருக்கள் ஒருவர், “நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம், நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா[4]. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும், சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது[5]. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா? ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்[6]. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினை போன்று விவரிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், “இந்துக்கள்” போர்வையில், நாத்திகர்-இந்துவிரோதிகள் “அர்ச்சகர்” போர்வையில் கோவிலுக்குள் நுழைவது தான்.

ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது[7]. அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்[8]. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார். 60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

19-08-2021 – கருணாநிதி –  கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது[9]: முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.  ‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது. இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.

19-08-2021 முரசொலி தலையங்கம்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறதுசேகர் பாபு:. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே,’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது[10].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] கலைஞர் செய்திகள், அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!, Vignesh Selvaraj, Aug 18, 2021 |11:58:20 am.

[2] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/subramanian-swamy-on-dmk-govts-all-castes-become-priest/a83248fd-b108-4bc0-b7f4-a54a8a66bcc7/paytm

[3] தினசரி, திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல், செங்கோட்டை ஶ்ரீராம், 17-08-2021. 12.27 PM.

[4] https://dhinasari.com/latest-news/220137-temple-archagas-unlawfully-evacuated-from-temples-in-tamilnadu-hrnce.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளியேற்றப்படும் பிராமணர்கள்கோயில் குருக்களின் வைரல் ஆடியோகுஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST; Last Updated Aug 16, 2021, 1:04 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/brahmins-to-be-expelled-viral-audio-of-temple-priests-qxx91w

[7] நியூஸ்.7.தமிழ், அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில், by EzhilarasanAugust 19, 2021

[8] https://news7tamil.live/not-the-intention-to-expel-priest-on-duty-minister-sekarbabu.html

[9] கலைஞர் செய்திகள், ஆகமம்பின்னால் இருப்பதுஆரியமே’.. சு.சுவாமி மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது” : முரசொலி!, Prem Kumar – Aug 20, 2021 | 08:58:49 am.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/murasoli-editorial-said-this-is-not-a-government-that-is-afraid-of-all-the-threats-of-subramaniam/24245a8d-23ee-4322-a4bf-1dfdc7d3ca62

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை-பொய்மை; தமிழக சட்டம்-அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

ஜூன்11, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்உண்மைபொய்மை; தமிழக சட்டம்அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

2006ல் திமுக சட்டம்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர். அப்படியென்றால் திட்டத்துடன் உறுதியாக இருக்கிறார்கள் என்றாகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் 2006ல் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

2007ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் ஆனது: ரங்கநாதன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். அவற்றை வைத்து, ஊடகங்களும், சட்டப்படியுள்ள நிலைமையை எடுத்துக் காட்டாமல், ஏதோ உணர்ச்சிப் பூர்வமாக, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். “இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன். “இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை,” என்கிறார் ரங்கநாதன்.

சாதியில் பிரிந்து கிடந்தவர்களுக்கு, சாதி சங்கத்தினர் வகுப்பு எடுக்க மறுத்தது: ரங்கநாதன் சொன்னது, “எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது”. அரசாணைக்கு எதிராக அவர்கள் “மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது,” என்று சொல்லியிருந்தால், அரசோ, கருணாநிதியோ, இப்பொழுது கூவுகின்ற சித்தாந்திகளோ, உடனடியாக, சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனல், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு புறம்பாக வகுப்புகளை விடாப்பிடியாக நடத்த வேண்டிய போக்கில் தான் விவகாரம் இருக்கிறது. கர்நாடகாவை எதிர்த்து வரும் தமிழகர்களுக்கு, பெங்களூரிலிருந்து ஒரு பார்ப்பனர் வர அவசியம் ஏன்? அதிலும் செத்த மொழியில் பயிற்சியளிக்க அவசியம் என்ன? உடனே, அவர்கள் செட்த மொழியில் பாண்டித்யம் பெற்று விடுவார்களா?

கடவுளின் திருவுருவங்களைச் செய்து, தரச் சொன்னது: ரங்கநாதன் சொன்னது, “அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்துதரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்துவைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்,” என்கிறார் ரங்கநாதன். பிள்ளையாரை உடைத்த ஈவேரா சிலைக்கு மாலை போட்டு, ரங்கநாதன் இவ்வாறெல்லாம் 07-06-2021ல் பேட்டிக் கொடுப்பது வேடிக்கைத் தான்! இவர்கள் கடவுள் உருவங்களை உடைப்பார்களா என்று தான் மற்றவர் நினைத்திருப்பர். இரட்டை வேட போட்டுக் கொண்டு, போலித் தனமாக இவர்கள் நடந்து வந்ததும் வெளிப்படுகிறது. அதாவது, முரண்பாடுகளுடன், அரைகுறையாகத் தான் இவர்கள் பயின்றுள்ளார்கள். உண்மையில் பூசாரி / அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கற்கவில்லை என்பது தெரிகிறது. எப்படியாவது, கோவில்களுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற வெறித்தான் தெரிகிறது. சிலைகளை உடைத்த ஈவேராவைப் போற்றி, இவர்கள் கோவில்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?

ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது”. பிறகு சங்கம் மேல் முறையீட்டிக்கு செல்வது தானா? ரங்கநாதன் சொன்னது, “இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன,: இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன். கடவுளுக்கு பூஜை செய்யப் படித்தவர்கள், கோவிலுக்குள் சென்று முறைப் படி, மாலையை கடவுளுக்குப் போட்டிருக்கலாமே? இதிலிருந்தே, இவர்கள் திக-திமுக ஆட்கள் என்று தெரிகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, 2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்,” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை”. அதாவது, சட்டநிலை அறிந்து விட்டதால், உள்ள பிரச்சினைகளுடன், இதையும் ஒரு தேவையற்றப் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்று அமைதியாக இருந்தார்கள் எனலாம்.

இரு கோவில்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப் பட்டது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை. இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். “பயிற்சி பெற்ற 207 பேரில் 2 பேர் சிறிய கோவில்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் இறந்து போய்விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேருக்கு வேறு அரசு வேலைகள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள 196 பேர் தொடர்ந்து இதற்காகப் போராடிவருகிறோம்,” என்கிறார் ரங்கநாதன். அதாவது, உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, இந்த இருவருக்கு பணி நியமனம் கொடுக்கப் பட்டது தெரிகிறது.  அரசியல் ரீதியில் நாளைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், இருவருக்கு பணி  கொடுத்து விட்டோம், மற்றவர்கள் ஒரு மாதிரியாக செயல்பட்டு வருவதால், பரிசீலித்து வருகிறோம் என்று சொல்லி முடிக்க தோதுவாக செய்துள்ளனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

11-06-2021