06-12-2022 அன்றுபிறப்பிக்க்கப்பட்டஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர்சுப்பிரமணியசுவாமிகோயில்அருகேதருமபுரம்ஆதீனமடத்துக்குசொந்தமான 3.5 ஏக்கர்நிலம்உள்ளது. இந்தநிலத்தைசிலர்ஆக்கிரமித்துவைத்துள்ளனர். ஆதீனநிலத்தைமீட்கவும், அந்தசொத்தைபாதுகாக்கவும்அறநிலையத்துறைக்குஉத்தரவிடவேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில்தருமபுரஆதீனத்திற்குசொந்தமானஇடங்கள்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்குசொந்தமானசொத்துகளுக்கு 1971 வரைவாடகைசெலுத்திவந்தனர். அதன்பிறகு, முறைகேடாகபத்திரப்பதிவுசெய்துள்ளனர்.….ஆதீனமடத்துக்குசம்பந்தம்இல்லாதநபர்கள்வசமிருக்கும்ஆதீனமடத்தின்சொத்துக்களைஅறநிலையத்துறைஆணையர்உடனடியாகமீட்டுஆதீனமடத்திடம்ஒப்படைக்கவேண்டும். இப்பணியை 12 வாரத்தில்முடிக்கவேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.
12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
2016ல்மேல்நிலைநீர்தேக்கதொட்டி – நாகப்பட்டினம்மாவட்டத்தில்மதுரைஆதீனத்திற்குசொந்தமானஇடத்தில்கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..
15-11-2022 – கோவில்நிலத்தைமீட்கஒத்துழைக்காவிடில்சிறை! அதிகாரிகளுக்குஉயர்நீதிமன்றம்எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில்தருமபுரம்ஆதீனமடத்துக்குசொந்தமானநிலங்களைமீட்கஅரசுக்குஐகோர்ட்உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.
[5] மாலை முரசு, மதுரைஆதீனத்திற்குசொந்தமானநிலத்தைசட்டவிரோதமாகபதிவுசெய்ததனியார்நிறுவனம்…! ரத்துசெய்யகோரியவழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.
[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.
[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST
13-05-2021 – திருவாரூரில்இந்துசமயஅறநிலையத்துறைசார்பில் – நோயாளிகளுக்குஉணவுவழங்கும்திட்டம்தொடக்கம் : இந்து சமய அறநிலையத் துறை மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் 13-05-2021 அன்று தொடங்கி வைத்தார்[1]. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில்கரோனாஊரடங்குஉத்தரவுஅமலில்இருப்பதால், மருத்துவமனைகளிலுள்ளநோயாளிகள்மற்றும்அவர்களுடன்இருப்பவர்களுக்குஉணவுகிடைக்காதநிலைஏற்பட்டுவிடக்கூடாதுஎன்பதைக்கருத்தில்கொண்டு, முதல்வர்ஸ்டாலின்உத்தரவின்பேரில், இந்தஉணவுவழங்கும்திட்டம்தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்குஅமலில்இருக்கும்வரைஉணவுதொடர்ந்துவழங்கப்படும்,” என்றார்[2]. இந்நிகழ்வில் திருவாரூர் கோட்டாட்சியர் பாலசந்திரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஹாஜீகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரத்தில்இந்துசமயஅறநிலையத்துறைசார்பில் – நோயாளிகளுக்குஉணவுவழங்கும்திட்டம்தொடக்கம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு, அறநிலையத் துறை சார்பில், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 375 பேர், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும்படி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்[3]. தொடர்ந்து, நேற்று காலை, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், கதம்ப சாதம் சமைக்கப்பட்டு, 500 பொட்டலங்களாக கட்டி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் செயல் அலுவலர்கள் குமரன், பூவழகி, வேதமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்[4]. அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘கோவில்களில் மதியம் அன்னதானம் வழங்குவதை தொடர்ந்து, தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு, உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை, இப்பணி தொடரும். ‘மேலும், காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது’ என்றார்.
செய்யாரில்இந்துசமயஅறநிலையத்துறைசார்பில் – நோயாளிகளுக்குஉணவுவழங்கும்திட்டம்தொடக்கம் : செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள், உதவியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை தொகுதி எம்எல்ஏ ஒ. ஜோதி 13-05-2021 வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்[5]. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் ந.விஜயராஜ் தலைமை வகித்தார். 600 பேருக்கு உணவுப் பொட்டலம், குடிநீா், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன[6]. இப்படி, திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர், சேகர் பாபு சொன்னது போல, “இதுவரையில்அறநிலையத்துறைதமிழகவரலாற்றில்இல்லாதஅளவுக்குதமிழகமுதல்வர்வழிகாட்டுதலின்படிசிறப்பாகசெயல்பட்டுஅனைவரதுபுருவத்தைஉயர்த்திபார்க்கும்வகையில்செயல்பாட்டில்ஜொலிக்கும்என்றநம்பிக்கையில்எங்களதுபயணத்தைதொடங்கியுள்ளோம்”, என்பார்கள் போலிருக்கிறது!
மதுரையில்இந்துசமயஅறநிலையத்துறைசார்பில் – நோயாளிகளுக்குஉணவுவழங்கும்திட்டம்தொடக்கம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2,000 உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது[7]. அங்கு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கோ.தளபதி நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். “அரசுஉத்தரவின்பேரில்மீனாட்சிசுந்தரேசுவரர்கோவிலில்இருந்துஅரசுஆஸ்பத்திரிக்குதினமும் 2,000 பேருக்குஉணவுபொட்டலங்கள்வழங்கும்பணிதொடங்கப்பட்டுள்ளது. முதல்நாளில்தக்காளிசாதம்வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்துதினமும்ஒருவகையானசாதம்என்றவகையில்வழங்கப்படும். உணவுபொட்டலங்கள்மீனாட்சிஅம்மன்கோவிலில்தயாரிக்கப்பட்டுஅரசுமருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டுஅங்குநோயாளிகள்மற்றும்அவர்களுடன்இருப்பவர்களுக்குவழங்கப்படும். உணவுபொட்டலங்களுடன்குடிநீர், கபசுரகுடிநீர், முககவசம்போன்றவையும்வழங்கப்படும். கோவிலில்இருந்துவழங்கப்படும்உணவுபொட்டலங்களுக்குஅரசுஆஸ்பத்திரியில்நோயாளிகள்மற்றும்அவர்களதுஉறவினர்கள்மத்தியில்நல்லவரவேற்புகிடைத்துள்ளது,” இவ்வாறு அவர்கள் கூறினர்[8].
சிலைதிருட்டு, முறைகேடுமற்றவழக்குகள்–விவகாரங்களில்சிக்கிஇடம்மாற்றம்பெற்றஅதிகாரிகள்இந்தஉணவுபொட்டலவிநியோகத்தில்ஈடுபட்டுள்ளது: கோவில்களிலிருந்து உணவு பொட்டலங்கங்கள் விநியோகங்களில் ஏற்கெனவே இடம் மாற்றம் செய்யப் பட்ட, அதிகாரிகள் மறுபடியும் அதே இடத்திற்கு இந்த புனித காரியத்தில் ஈடு பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. சிலைகள் மாயம், பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 இணை ஆணையர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் ஐந்து இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து அரசு செயலாளர் விக்ரம் கபூர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி –
விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன்
கோவை இணை ஆணையர், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர் G.S. மங்கையர்க்கரசி ஈரோடு இணை ஆணையர்[9],
ஶ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் ஜெயராமன் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர்,
இணை ஆணையர் கஜேந்திரன் திருவண்ணாமலை
இணை ஆணையர், பாரதி திண்டுக்கல் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மயிலாடு துறை மண்டல இணை ஆணையராக கஜேந்திரன் இருந்த போது தான் கும்பகோணம் பந்தலூர் பசுபதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான 6 சிலைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. இந்த விவகாரம் காரணமாக கடந்த 2017ல் கஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே போன்று, திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையராக இருந்த பாரதி கோயில் கடைகளில் ஏலம் விடுவதில் முறைகேடு நடந்ததாக கூறியும், பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் மீது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கு மீண்டும் பணி வழங்கியிருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[11].
இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (1)
754 கோவில்களிலிருந்துஅன்னதானம்விநியோகம்: தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது[1]. “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 38,661 கோயில்கள் உள்ளன. இவற்றில் 754 கோயில்களில் அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது[2]. அன்னதானத் திட்டம் செயல்பாட்டில் உள்ள கோயில்கள் வாயிலாக சமூக இடைவெளி பின்பற்றபட்டு ஒவ்வொரு நாளும் சுமார் 45,200 பேருக்கு உணவு பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள முழு ஊரடங்குக் காலத்தில் அனைத்து கோயில்களில், அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து உணவு பொட்டலங்களாகப் பொதுமக்கள் மற்றும் குடிசை பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன”.
ரூ 30 லட்சம்செலவில் 1,00,000 மக்களுக்குகோவில்பிரசாதம் / அன்னதானம்: “கொரோனாநோய்பாதிப்புகுறையும்வரைபக்தர்கள்மற்றும்பொதுமக்களுக்குதேவைக்கேற்பஉணவுபொட்டலங்கள்உயர்த்திவழங்க, இந்துசமயஅறநிலையத்துறைமுடிவுசெய்துள்ளது. அதன்படிஒருலட்சம்பேருக்குரூ.30 லட்சம்செலவில்இந்துசமயஅறநிலையத்துறைமூலம்மதியஉணவுவழங்கப்படும். இந்தஉணவுபொட்டலங்கள்மாவட்டதலைமைஅரசுமருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டிருக்கும்நோயாளிகள், உதவியாளர்களுக்குவழங்கப்படும். அதேபோலஇந்துசமயஅறநிலையத்துறைக்கட்டுப்பாட்டில்உள்ளகோயில்மருத்துவமனைகள்மற்றும்சித்தமருத்துவமனைகளில்கபசுரகுடிநீர்மற்றும்முகக்கவசம்இலவசமாகவழங்கவும்நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வுகள்இன்றுமுதல்அமலுக்குகொண்டுவரமுயற்சிகள்மேற்கொண்டுள்ளோம். இதுவரையில்அறநிலையத்துறைதமிழகவரலாற்றில்இல்லாதஅளவுக்குதமிழகமுதல்வர்வழிகாட்டுதலின்படிசிறப்பாகசெயல்பட்டுஅனைவரதுபுருவத்தைஉயர்த்திபார்க்கும்வகையில்செயல்பாட்டில்ஜொலிக்கும்என்றநம்பிக்கையில்எங்களதுபயணத்தைதொடங்கியுள்ளோம்”, என்றார். இதில் முகத்திற்கு மாஸ்க் / முகக்கவசம், கபசுர குடிநீர் முதலியனவும் வழங்கப் படும் என்றுள்ளதால், அவற்றிற்கு, எங்கிருந்து நிதி வரும், செலவழிக்கப் படும் என்று தெரியவில்லை.
12-05-2021லிருந்துகோவில்அன்னதானம்திராவிடஅரசியல்வாதிகள்மூலம்விநியோகம்: கரோனா நோயாளிகளுக்கு 12-05-2021 முதல் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்[3]. இதுகுறித்து அவர் கூறியதாவது, “கரோனாவால்பாதிக்கப்பட்டுமாவட்டஅரசுமருத்துவமனைகளில்சிகிச்சைபெற்றுவரும்நோயாளிகள், உடனிருப்போருக்குநாளைமுதல்ரூ. 30 லட்சம்செலவில்இந்துசமயஅறநிலையத்துறைசார்பில்மதியஉணவுவழங்கப்படும். தமிழககோயில்கள்சார்பாகநாள்தோறும்ஒருலட்சம்உணவுப்பொட்டலங்கள்வழங்கப்படவுள்ளது,” என்றார்[4]. அன்னதானத்திற்காக எத்தனையோ பக்தர்களான புண்ணியவான்கள் கொடையளித்து ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனால், அவர்களை மக்கள், பக்தர்கள் அல்லது அவ்வுணவை உண்பவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களா, பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஸ்டாலின் பெய்ரால், ஆணையால், “இதுவரையில்அறநிலையத்துறைதமிழகவரலாற்றில்இல்லாதஅளவுக்குதமிழகமுதல்வர்வழிகாட்டுதலின்படிசிறப்பாகசெயல்பட்டுஅனைவரதுபுருவத்தைஉயர்த்திபார்க்கும்வகையில்செயல்பாட்டில்ஜொலிக்கும்என்றநம்பிக்கையில்எங்களதுபயணத்தைதொடங்கியுள்ளோம்”, என்று தமிழக இந்து அறநிலையத்துறை கூறியிருப்பது வேடிக்கைத்தான்!
‘மானவ்மித்ராசேவாசமிதி‘ செய்யும்சேவையைஸ்டாலின்செய்வதுபோலக்காட்டிக்கொள்ளலாமா?: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்,” என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்[5]. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ‘மானவ் மித்ரா சேவா சமிதி’ என்ற தொண்டு நிறுவனம், 24 மணி நேர இலவச உணவு சேவையைதுவக்கியது. இச்சேவையை துவக்கி வைத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி[6]: “கொரோனாதொற்றின்இரண்டாவதுஅலைபாதிப்பைதடுக்க, முதல்வர், முழுஊரடங்குபிறப்பித்துள்ளார். இதனால்மக்கள்பாதிக்காதவகையில், அனைத்துஅரசுமருத்துவமனைகளிலும்உணவுவழங்கப்படஉள்ளது. முதற்கட்டமாக, சென்னைராஜிவ்காந்திஅரசுமருத்துவமனையில்இத்திட்டம்துவக்கப்பட்டது. மேலும்கொரோனாபரவலைதடுக்க, அரசுசார்பில்பல்வேறுநடவடிக்கைகள்எடுக்கப்பட்டாலும், கட்சிசார்பில்நோய்தடுப்புபணிகளில்ஈடுபடமுதல்வர்உத்தரவிட்டுள்ளார். அதன்படிதி.மு.க.,வினர்செயல்படுவர். நிலஅபகரிப்புபுகாரில், எங்கு, யார்தவறுசெய்தாலும், எங்கள்கவனத்திற்குவந்தால், தி.மு.க., ஆட்சியில்கடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.ஹிந்துசமயஅறநிலையத்துறைகூட்டம்நடக்கஉள்ளது. அதில், ஸ்ரீரங்கம்ஜீயர்தேர்வுதொடர்பாகஆலோசிக்கப்படும்.தி.மு.க., ஆட்சிவெளிப்படையானஆட்சியாகஇருக்கும். ஹிந்துசமயஅறநிலையத்துறைசெயல்பாடுகளும், எந்தவிதஒளிவுமறைவுஇன்றிவெளிப்படையாகஇருக்கும்,” இவ்வாறு அவர் கூறினார்.
மற்றநகரங்களிலும்கோவில்உணவுப்பொட்டலங்கள்விநியோகம், ஆனால், செய்வதுநாத்திகதிமுகவினர்: தமிழக அரசின் உத்தரவின்படி, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கரோனா தொற்றாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது[7]. இதன்படி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவா்களது உதவியாளா்கள் பயன்பெறும் வகையில் சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சார்பில் 100, செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் சார்பில் 50 மற்றும் பெரம்பலூா் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில் சார்பில் 50 என மொத்தம் 200 பேருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன[8]. பெரம்பலூா் வட்டாட்சியா் சரவணன், கரோனா தொற்றாளா்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்..
இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு!
பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மீகம், என்றெல்லாம் வளர்த்து வரும் கோவில்கள் சீரழையும், சீரழைந்து வருகின்ற நேரத்தில், எப்படி அரசியல் மற்றும் நாத்திகக் கொள்கைகள் சார்ந்த மனிதர்கள், புற்றுநோய் கிருமிகள் போல நுழைந்து, உடலைக் கெடுத்து, இறப்பினை நோக்கி அழைத்துசெல்லும்,
திமுக, கருணாநிதி, கருப்புப் பரிவார் முதலிய என்றுமே இந்துக்களுக்கு விரோதிகளாகத்தான் இருக்கின்றன. நாத்திகப் போர்வையில், இந்துவிரோத சக்த்களுடன் சேர்ந்து கொண்டு கோவில்களை கொள்ளையடித்து வருகின்றன. அந்நுஇலையில் கோவில் பூசாரி சங்கம் திமுகவை ஆதரிப்பதில் வியப்பில்லைதான்!
எமதூதர்களாக மாற நேரிடும் என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது, இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு! முன்னுக்கு முரணாக தமிழகத்தில் நடந்து வரும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று நினைத்துவிட முடியாது. ஏனெனில், மக்கள் தேவநாதனுக்கும் இந்த வாசுவிற்கும் உள்ள ஒப்புமை அல்லது வேற்றுமை உணர வேண்டிய நிலையுள்ளது.
திமுகவுக்கு ஆதரவு: கோவில் பூசாரிகள் சங்கம்[1]: இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு என்பதே விநோதமாக உள்ளது. ஏற்கெனெவே கற்ப்பைப் பற்றி நடிகைகள் விளக்கம் கொடுத்துள்ளதால், இனி கருணாநிதியிடமிருந்துதான், கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய நிலையும் வரலாம். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு,
மகளிர் சுய-உதவிக்குழு மாதிரி கோவில் சங்கங்களிலும் திமுக தனது வேலையை ஆரம்பித்துவிட்டது என்று தெரிகின்றது[2]. வரிசையாக மாவட்டங்களில் சங்கக்கூட்டங்கள் நடந்ததின் பின்னணி இதுதான் போலிருக்கிறது.
தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு கூறினார். தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்க 33வது மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. திருக்கோவில் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பசலி என்ற சொல்லுக்கு பதிலாக நிலவரி ஆண்டு, நில வருவாய் ஆண்டு என்று மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும், வறுமை நிலையில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, குடியுரிமை பட்டா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் ஆகியவை வழங்க வேண்டும், பூசாரி நலவாரியத்தில் திருமண நிதியுதவியை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது,
கோவில்களில்பெண்அர்ச்சகர்களைநியமிக்கவேண்டும்‘: தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்’ போன்ற தீர்மானங்களும் நிறைவேறின. மாநாட்டிற்கு பிறகு சங்க மாநிலத் தலைவர் பி.வாசு கூறியதாவது: “கோவில் பூசாரிகளுக்கு
இனி தேவநாதனுக்கும், வாசு போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்ட பிறகு, மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவேண்டும் என்று பணித்தாலும், அவர்கள் செல்லவேண்டியிருக்கும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!
நலவாரியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல நலத்திட்டங்களை அள்ளி வழங்கிய தமிழக முதல் அமைச்சருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை 6 வது முறையாக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை கொண்டு வர தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் பாடுபடும்”, என்றார்[3].
எல்லா வழிபாட்டு ஸ்தலங்களில் இனி பெண்கள் சம-உரிமையோடு வேலை செய்வார்கள்: அதே செக்யூலரிஸ அடிப்படையில் இனி சர்ச், மசூதிகளிலும் பெண்கள் பிஷப்புகளாக, இம்மாம்களாக பவனி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்! பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு செய்கிறார்களோ இல்லையோ, கோவில்களில் பெண்களை பூசாரிகளாக நியமிக்கலாம் என்று தமிழகத்தில் மக்கள் தீர்மானங்களைப் போடுகின்றனர். இப்படி செய்து விட்டால், பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவ குருமார்கள் இனிமேல் அடிக்கடி செக்ஸ் களியாட்டங்களில் ஈடுபடுவது குறையுமா அல்லது அதிகமாகுமா என்பதை ஆராயலாம். மசூதிகளில் பெண்களே நுழையக் கூடாது என்ற நிலையில், பெண்கள் எப்படி காஜியாக, இமாம்களாக வேலை செய்வர் என்பதையெல்லாம் இனி வரப்போகின்ற கருணாநிதி ஆட்சியில் பார்க்கலாம்!
[2]கோவில் பூசாரிகள் நலச் சங்க கூட்டம்: பிப்ரவரி 28,2011,, கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கோவில் பூசாரி ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதற்கும், கோவில் திருப்பணிக்கு அரசு மானியம் 3 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தியதற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அறநிலைத் துறை அமைச்சர் மற்றும் மாநில தலைவர் வாசுவிற்கு விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாவட்ட ஆலோசனைக்குழு தலைவர் வெங்கடேசன் உட்பட பலர்
கருணாநிதியின் அடிவருடும் ஆதினங்கள், இன்னொரு ஆறுமுக நாவலர் வந்துதான் சைவத்தைக் காக்க வேண்டும்!
கபாலீஸ்வரர் கோவில் இடித்த போது சைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கபாலீஸ்வரர் கோவிலில் நுழைவோம் என்று சென்னையில் கேடுகெட்ட கிருத்துவர்கள் அடவடித்தனம் செய்து, கலாட்ட செய்தபோது, இந்த சைவ ஆதினங்களைக் காணோம், லிங்கத்தைத் தொட்டு வழிபாடு செய்வோம் என்று ஆர்பரித்தபோது, எந்த சுரணையுள்ள சைவனையும் காணோம். ஆனால், இப்பொழுதோ, இந்த கூட்டங்கள் வந்து இப்படி பேசுகின்றன! தேவையில்லாமல் கோவிலில் எந்த மொழியில் அர்ச்சனை செய்யவேந்தும் எனும் போது, ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று, பேசி, வழக்குகளை வேறு போட்டுள்ளனர்.
சைவ ஆதினங்கள், மடாதிபதிகள் உயர்ந்து நிற்கவேண்டும்: சைவ ஆதினங்கள் நாளுக்கு நாள் மிகவும் தங்களது நிலையை விட்டுக் கொடுத்து அரசியல்வாதிகளின் அடிமைகளாக, கைப்பாவைகளாக செயல்படுவது சைவ நம்பிக்கையாளர்களை வருத்தம் கொள்ளச் செய்யும். சைவ ஆதினங்கள், மடாதிபதிகள் உயர்ந்து நிற்கவேண்டும், நாத்திக ஆட்சியாளர்களிடம் அவர்கள் பணிந்து போவது, பயப்படுவது……………..முதலிய மிகவும் அவமானமான செயல்களாகும். ஏற்கெனவே, கோவில்-மடம் நிலங்கள் எல்லாம் இதே கருணாநிதி-அரசு நயவஞ்சமாக கவர்ந்து விற்றுவருவதை எடித்துக் காட்டியுள்ள நிலையிலும் அதனைத் தட்டிக் கேட்காமால், அவருக்கே பட்டங்கள் கொடுத்து தமாஷாக்கள் செய்து வருவது மிகவும் கேவலமாக இருக்கிறது. அதனால் தான் மாற்று மதத்தினர், குறிப்பாக, முஸ்லீம்கள் மதுரை ஆதினத்தை மிரட்டியுள்ளார்கள்.
இதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்: திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,””பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை. திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்” என்றார்.
தமிழ்-வியாபாரிகள், தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள் : காந்தளகம் சத்திதானந்தம்சிட்னி தமிழ்ப் பேராசிரியர் கந்தையா, முதலியோர் தமிழை வைத்துக் கொண்டு நன்றாக வியாபாரம் செய்து வருகின்றனர். இப்பொழுது மாநாட்டிற்கு வந்துள்ள கூட்டத்தில் அதிகமாக உள்ளது, இத்தகைய வியாபாரக் கூட்டமே. முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளபடி, மின்னாக்கம் செய்வேன் என்றெல்லாம் காசு பண்ண கிளம்பியுள்ளனர். இவர்கள் எல்லோரும், தமிழை எப்படி காத்தார்கள் என்று காலம் தான் பதில் சொல்லும்.
“பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்’
கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது: சென்னை : “”கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்,” என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார். சென்னை தமிழ்க் கணினி மொழியியல் கழகம் மற்றும் “காந்தளகம்’ வெளியீட்டகம் சார்பில், ஒலியியல் அறிஞர் புனல் க.முருகையன் எழுதிய “பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு’ நூல் வெளியிட்டு விழா சென்னைப் பல்கலையில் நேற்று நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் நூலை வெளியிட, திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு: விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு. கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
ஞானக் கருவூலமான பன்னிரு திருமுறையை, வேற்று மொழியாளர் அவர் மொழி வடிவிலேயே பயிலும் வகையில் ஒலி பெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. இது தமிழுக்கு ஒரு புதிய வகை இலக்கிய படைப்பு. தற்காலிக கணினி ஆளுமையில், இந்நூல் தமிழுக்கு புதிய பரிமாணத்தைத் தரும். இவ்வாறு பெரியகருப்பன் பேசினார்.காந்தளகம் பதிப்பக உரிமையாளர் சத்திதானந்தம் பேசும்போது,””திருமுறைகளை அனைத்து மொழிகளிலும் எடுத்துச் சென்றுள்ளோம். ஏழு மாத உழைப்பில் வந்துள்ள பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல், புது அத்தியாயத்தை ஏற்படுத்தும். தமிழில் 97 ஒலிகள் உள்ளது கண்டறிந்தது வரலாற்றுப் பணி” என்றார்.
திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை: திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,””பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை. திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்” என்றார். முடிவில் நூலாசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மவுன குமாரசாமி தம்பிரான், சென்னைப் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் தெய்வசுந்தரம், சிங்கப்பூர் சிம் பல்கலை தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிட்னி பல்கலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் இந்துவிரோத செயல்: சேலம்: “சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்த தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில், பாரம்பரியமிக்க அரசு முத்திரையை பயன்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக்கான முத்திரையை இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்தி உள்ளது. முத்திரையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது’ என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
இந்து விரோதிகளே கோவில் விழாக்களில் கலந்து கொல்வது: சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா 16ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பண் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். உண்மையில் நாத்திகவாதியாக இருந்தால், இக்காரியத்தில் இந்த ஆள் செய்திருக்கக் கூடாது. முன்னம் கருணநிதி, ஒரு திமுக ஆள், குங்குமம் வைத்திருந்தபோது, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்று கிண்டலாக-நக்கலாகக் கேட்டது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உண்மையிலேயே தைரியம் இருந்தால், தனது மனைவி-துணைவி-மகள்-சகோதரி-மற்ற சொந்தமான பெண்களை பார்த்து அப்படி கேட்பதுதானே? இல்லை, குங்குமத்தை அழிக்கவேண்டியதுதானே?
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் அரசு முத்திரைக்கு பதில், செம்மொழி மாநாட்டு முத்திரை இடம் பெற்றிருந்தது. இதுவே அயோக்கியத்தனம்தாம். கடந்த 1946 முதல் தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சியினரும், “ஒரு மதத்தை சார்ந்தவாறு முத்திரை இருப்பதால், செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் உருவம் கொண்ட முத்திரையை இனி அரசின் முத்திரையாக பயன்படுத்தலாம்’ என, கூறி வருகின்றனர். அதை நிறைவேற்றும் பொருட்டே அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் செம்மொழி முத்திரை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இது ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டிய கேள்வி: இந்நிலையில், “அரசு முத்திரையை மாற்றாக பயன்படுத்தி, மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்’ என, கூறி சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதி பழனிசாமி, உதவி ஆணையர் வரதராஜன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் கூறினார்.
தமிழகத்தின் அரசு முத்திரை மாற்ற சதி: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அரசு முத்திரையாக கோபுர சின்னம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு முத்திரையை அனைத்து தரப்பிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சுகவனேஸ்வரர் கோவில் தங்கரத விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செம்மொழி மாநாட்டு முத்திரையே அதிகம் இடம் பெற்றுள்ளது. அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் மறைமுகமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல: இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதி பழனிசாமி கூறியதாவது: இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல. எந்த முத்திரையையும் நாங்கள் பயன்படுத்துவோம். கோவில் விழா தானே தவிர அரசு விழா அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இதுபோன்று செய்து வருகின்றனர். செம்மொழி முத்திரைக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. கோவில் தங்கரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதை பாராட்டாமல் இதுபோன்று தேவையில்லாதவற்றை கூறி வருகின்றனர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். உதவி ஆணையர் வரதராஜனை தொடர்பு கொண்டபோது, “”தங்கரத விழா அரசு சார்ந்தது. செம்மொழி முத்திரையை உபயதாரர்கள் வழங்கியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்,” என, கூறி முடித்துக் கொண்டார்.