இந்தவிவகாரத்தைஅமைச்சர்சேகர்பாபுவிடம்கொண்டுசென்றது: விகடன் இதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது – இது குறித்து வழக்கு விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் எனவும் கூறி சிலர் தருமபுரம் ஆதீனம் தரப்பை மிரட்டியிருக்கின்றனர். எனினும், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்கள்.
மஹாபாரதயுத்தம்தான்நடந்துகொண்டிருக்கிறது: இவையெல்லாம் நிச்சயமாக அரசுக்கும், மடத்திற்கும் உள்ளே தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. குற்றம், விதிமுறைகள் மீறல், சட்டங்கள் மீறல் என்றெல்லாம் வந்தால், நிச்சயமாக அத்தகைய சட்டத்தை மீறும் நபர்கள் உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம், மக்களின் கவனத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்தப் படுவதில்லை. சட்டாமீறல்களுக்கும் அவ்வாறே உரிய தண்டனைகள் கொடுப்பதில்லை, கிடைப்பதில்லை. இதனால், சட்டங்கள் பிழையாவதில்லை, ஆனால், தருமம் மதிக்கப் படாததால், அநியாயம் உச்சத்தில் செல்கிறது. அந்நிலையில், அத்தகைய அநியாயம், அராஜகம், அதர்மம் என்றே எல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுகிறவன் பைத்தியக் காரன் ஆகிறான். யாரும் அவனை மதிப்பதும் இல்லை. இதனால் தான், பலர், நமக்கெதற்கு வம்பு என்று அமையாகவும் இருந்து விடுகின்றனர்.
வழக்குப்பதிவு, கைதுமுதலியன: இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 323, 307, 389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28), ஆடுதுறை வினோத் (32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[1]. மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[2].
முதலமைச்சரின்ஆணைப்படிதுரிதமாகசட்டநடவடிக்கைஎடுத்ததற்குதருமபுரம்ஆதீனம்நன்றிதெரிவித்து: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[3]. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[4]. அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, உடனடியான நடவடிக்கை – கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எப்படியென்றால், இதெல்லாம் ஏதோ சொல்லி வைத்தால் போல நடந்த விவகாரங்களா அல்லது அப்படியே அமுக்கி விடலாம் என்று தீர்மானித்து, அமுக்க முடியாமல் போனதால், நடந்தேறிய நிகழ்வுகளா என்பதெல்லாம் ஆண்டவன் தான் பிரகடனப் படுத்த வேண்டும்..
2018ல்திருவாவடுதுறைஆதீனம்திருவிடைமருதூர்கட்டளைசுவாமிநாதன்தம்பிரான்புகார்: `பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் குள நிலத்தடி நீரைக் காக்கவும் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணிகளை அரசின் அனுமதியோடு செய்து வருகிறோம்[5]. இந்தப் பணியைச் செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் பி.ஜே.பி நகரத் தலைவர் ராஜு உள்ளிட்ட சமூக விரோதிகள் எங்களை மிரட்டுவதோடு, வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரபரப்புகின்றனர். மேலும், நேரிலேயே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இப்பொழுதும், ஒரு பிஜேபி தலைவர் சம்பத்தப் பட்டுள்ளது தெரிகிறது. ஆக, இந்துமத்ததைக் காக்கிறோம் என்று சொல்கின்ற பிஜேபிகாரர்களும் இவ்வாறு மாறி விட்டனரா அல்லது திராவிடத்துவ வழியில் நடக்க முயற்சிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல், வானதி சீனிவாசன் வரை எங்களுக்கும், பெரியாருக்கும் சித்தாந்த ரீதியில் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டையும் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தலுக்காக சொன்னோம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது, அப்படியே நடந்துகொள்வது என்பது வேறு, அது முரண்பாடானது, பயங்கரமானதும் கூட.
ஆன்மீகக்கூட்டா, அரசியல்கூட்டா?: சாம-தான-தண்ட-பேத முறைகளில் கூட்டணி முயற்சிகள், பேரங்கள், வற்புருத்தல்கள் போன்றவையும் நடக்கலாம், நடத்தப் படலாம். அந்நிலையில், மதம் பந்தாடப் படுகிறது. மதத்தலைவர்கள் ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். தனித்திருக்கல்லாம், என்று ஒதுங்கியிருந்தாலும், ஏதோ ஒரு வழியில், முறையில், அவர்களும் இழுக்கப் படுகறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மடங்கள்-கோவில்களின் சொத்துக்கள் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் இருப்பதால், அவற்றை அனுபவிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்கார விவசாயிகள், போன்றவர்கள் தொடர்ந்து பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். ஆட்சி-அதிகாரம்-காலம் மாறும் பொழுது, அவ்வப்பொழுது, விசயம் வெளிவ்ரும் பொழுது, மற்றவர்களும் அதில் நுழைக்கின்றனர். அந்நிலையில் பங்கு போடும் நிலைக்கு வரும் பொழுது, புதிய சர்ச்சைகள், தகராறுகள், சண்டைகள் என்றெல்லாம் வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் சமரசம் ஆகவில்லை என்றால், அரங்கேறி விடுகிறது. ஆகவே, எது எப்படியாகிலும், மடங்கள் போற்றப் படவேண்டும். மடாதிபதிகளிம் கௌரவம் காப்பாற்றப் அடவேண்டும்.
பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.
திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..
இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:
பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12],
இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
சத்தியவேல் முருகனார்.
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.
“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].
சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!
[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.
[2] பதிரிக்கை.காம், இந்துசமயஅறநிலையத்துறைசார்பில் 108 பக்திநூல்களைவெளியிட்டார்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்..!, JAN 19, 2023
[4] தினமணி, மறுபதிப்புசெய்யப்பட்ட 108 அரியபக்திநூல்கள்: முதல்வா்மு.க.ஸ்டாலின்வெளியிட்டார், By DIN | Published On : 20th January 2023 03:08 AM | Last Updated : 20th January 2023 03:33 AM.
[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரியபக்திநூல்களைவெளியிட்டமுதலமைச்சர்ஸ்டாலின்! தூள்கிளப்பும்இந்துசமயஅறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]
படிப்பதுராமாயணம், இடிப்பதுபெருமாள்கோவில்என்பதுதிராவிடியன்மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!
அறநிலையத்துறையில்அதீதஈடுபாடுகொள்ளும்திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –
இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
தலபுராணங்கள்,
கோவில் தொடர்பான ஆகமங்கள் –
ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
பழமையான அரிய நூல்கள்,
கோவில் கட்டிடக்கலை,
செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.
ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….
செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….
நாத்திக–பெரியாரிஸ, திராவிடயன்ஸ்டாக்ஸ்டாலின்இப்புத்தகங்களைவெளியிடும்ரகசியம், அர்த்தம்அல்லதுதேவைஎன்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].
ஓலைச்சுவடிகள் “கண்டறியப்பட்டனவா” அல்லதுஏற்கெனவேஇருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].
திருத்தொண்டர்சபைஎன்றஅமைப்பைச்சேர்ந்தராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!
36,590 கோயில்களுக்குக்கீழே 4,22,000 ஏக்கர்நிலங்களும் 56 மடங்களுக்குக்கீழேகிட்டத்தட்ட 56,000 ஏக்கர்நிலங்களும்இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.
2018ல்திருத்தொண்டர்சபைஎன்றஅமைப்பைச்சேர்ந்தராதாகிருஷ்ணன்தொடுத்தவழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடிமாவட்டம்நெடுங்குளத்தில்இருக்கிறது `செங்கோல்ஆதீனம்.’ இந்தஆதீனத்துக்குச்சொந்தமானநிலங்கள்தூத்துக்குடிமற்றும்திருநெல்வேலிமாவட்டங்களில்முறைகேடாகஆக்கிரமிப்புசெய்யப்பட்டிருக்கின்றன. இதனால்அரசுக்குமிகப்பெரியவருவாய்இழப்புஏற்பட்டிருக்கிறது. இந்தஆக்கிரமிப்புகளைஅகற்றிநிலத்தைஉடனடியாகமீட்கஅறநிலையத்துறைநடவடிக்கைஎடுக்கஉத்தரவிடவேண்டும்.’
உயர்நீதிமன்றமதுரைக்கிளைதமிழகத்தில்உள்ளஅனைத்துஆதீனங்கள்மற்றும்மடங்களையும்இந்தவழக்கில்எதிர்மனுதாரர்களாகஇணைக்க‘ உத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
மனுதாரர்ராதாகிருஷ்ணசொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர்நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும்கோயில், ஆதீனங்கள்மற்றும்மடங்களின்நிலங்களைஅளந்துஆய்வுசெய்துஆக்கிரமிப்புகளைமீட்கவேண்டும்’ என்றுஅறநிலையத்துறையினருக்குஉத்தரவிட்டது. ஆனால், எந்தஆக்கிரமிப்புமீட்புநடவடிக்கையையும்யாரும்மேற்கொள்ளவில்லை. மதுரைஉயர்நீதிமன்றக்கிளையில் `செங்கோல்ஆதீன’த்துக்குஉரியநிலங்களைமீட்கவேண்டும்என்றுகூறிபொதுநலவழக்கைத்தாக்கல்செய்தோம். நீதிமன்றமேமற்றஆதீனநிலங்களின்ஆக்கிரமிப்புதகவல்களைக்கேட்டறிந்து, அனைத்துஆதீனமடங்களையும்வழக்கில்எதிர்மனுதாரர்களாகஇணைத்துநோட்டீஸ்அனுப்பியிருக்கிறது. இந்துசமயஅறநிலையத்துறை, 55,820 ஏக்கர்நிலங்கள்ஆதீனங்கள்மற்றும்மடங்களுக்குச்சொந்தமாகஇருப்பதாகத்தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீனமடங்களுக்குஉரியநிலத்தைஅளந்தால்இதன்மதிப்புஇன்னும்அதிகமாகும். தனிப்பட்டவர்களின்சுயநலத்தால்நிலங்களைமீட்கமுடியாதசூழல்நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காகமீட்புநடவடிக்கைகளைமேற்கொண்டு, அனைவரையும்ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்அனைத்துநிலங்களையும்மீட்டுவருவாயைஒழுங்குபடுத்தினால், பல்வேறுநலத்திட்டப்பணிகளைமேற்கொள்ளமுடியும்.
கோயில்மற்றும்ஆதீன, மடநிலங்களைவிற்பவர்கள்தப்பித்துக்கொள்கிறார்கள். வாங்கும்நடுத்தரமக்கள்சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.
`சிவன்சொத்துகுலநாசம்‘ என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!
18-10-2022 அன்றுவிசாரணைக்குவந்தது, 28-10-2022 தேதிக்குஒத்திவைக்கப்பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீனமடத்தின்சொத்துகள்தனியாருக்குகுத்தகைக்குவழங்கியதுஅதிர்ச்சிஅளிக்கிறது. ஆதீனமடங்கள்மடங்களாகசெயல்படுகிறதா? இல்லை, வியாபாரநிறுவனங்களாகசெயல்படுகிறதா? ஆதீனமடத்தின்சொத்துகளைகுத்தகைக்குவிடுவதைஎந்தச்சட்டம்அனுமதிக்கிறது?ஆதீனமடங்கள்அனைத்தும்இந்துசமயஅறநிலைத்துறைக்குகட்டுப்பட்டவை. இதுபோன்றசெயல்களில்ஈடுபட்டால்மடத்தின்மீதுநடவடிக்கைஎடுக்கஇந்துசமயஅறநிலையத்துறைக்குஅதிகாரம்உள்ளது. அதிகாரம்உள்ளநிலையில்ஏன்நடவடிக்கைஎடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீனமடங்கள்இந்துசமயஅறநிலையத்துறைகட்டுப்பட்டவை – உயர்நீதிமன்றமதுரைகிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.
முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவில் மற்றும் சென்னை காளிகாம்பாள் கமடேசுவரர் தேவஸ்தானம் கோவிலில் புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடக்க விழா 22-03-2022 அன்று நடந்தது[1]. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்[2]. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய வெள்ளி திருத்தேர் செய்யும் பணியையும் தொடங்கி வைத்தனர்[3]. காளிகாம்பாள் கோவிலில் சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இது போன்ற செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன. ஆனால், “முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்”, என்ற தலைப்புடன் தினகரன் நாளிதழில் சிறியதாக செய்தி வெளிவந்துள்ளது[4]. “முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் இருந்து காளிகாம்பாள் கோவிலுக்கு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தன. அருகில், அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அறநிலயத்துறை ஆணையர் குமரகுருபரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.” தமிழ் முரசு என்ற நாளிதழிலும் இச்செய்தி வந்துள்ளது[5]. முரசொலியில் முழுவதுமாக செய்தி வந்துள்ளது[6].
பக்திபரவசத்துடன்விழாவில்அமைச்சர்சேகர்பாபுபேசியதாவது[7]: “குன்றக்குடிபொன்னம்பலஅடிகளார், பேரூர்சாந்தலிங்கசுவாமிகள்முன்னிலையில்காளிகாம்பாள்கோவிலில்ரூ.2.5 கோடிமதிப்பீட்டில் 11 அடிஉயரம் 6 அடிஅகலம்கொண்டபுதியவெள்ளித்தேர்செய்யும்பணிதொடங்கிவைக்கப்பட்டுள்ளது. தற்போது 10-க்கும்மேற்பட்டதிட்டங்களைமுதல்–அமைச்சர்அடுத்த 2 வாரங்களில்தொடங்கிவைக்கஉள்ளார். சிதம்பரம்கோவில்தொடர்பானபிரச்சினைகுறித்துஇணைகமிஷனர்தலைமையில்குழுஅமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிசாரணைசெய்துஅறிக்கைஅளித்தபின்புமேல்நடவடிக்கைஎடுக்கப்படும். பக்தர்கள்எந்தவகையிலும்துன்புறுத்தப்படாமலும்இறைவனைமகிழ்ச்சியோடுகாணுகின்றசூழ்நிலையைஉருவாக்குவதுதுறையின்நோக்கமாகும்,” இவ்வாறு அவர் பேசினார். ஒரு வேளை, துர்கா ஸ்டாலின் உத்தரவு கொடுத்திருப்பார் போலும்.
தொடர்ந்துபேரூர்சாந்தலிங்கசுவாமிகள்பேசியதாவது: “இந்துசமயஅறநிலையத்துறைபுதிதாகதொடங்கிஉள்ளகல்லூரிகள்மூலமாகஆன்மிகபயிற்சிவகுப்புகள்நடத்தப்படுவதுபாராட்டிற்குரியது. கோயில்களில்இருக்கக்கூடியஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள்படியெடுத்துஒலிவருடல்செய்துபாதுகாக்கவும்முடிவெடுக்கப்பட்டுள்ளதுஇதற்குஒருகுழுவும்நியமிக்கப்பட்டுள்ளது. ஆகமவிதிகள்தமிழ்மற்றும்ஆங்கிலத்திலும்மொழிபெயர்க்ககுழுநியமிக்கப்பட்டுள்ளதுவரவேற்கத்தக்கது. அறநெறிபாடசாலைதொடங்கமுயற்சிஎடுத்துள்ளமுதல்–அமைச்சருக்குநன்றிகூறுகிறேன்,” இவ்வாறு அவர் பேசினார்.
500க்கும்மேலானபக்தர்கள்பால்குடம்எடுத்தது: முன்னதாக சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவிலில் இருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் தனபால், கோவில் அறங்காவலர் சர்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈவேரா நாத்திகத்தில் ஊறி, பெரியாரிஸ போதையில் நனைந்து, இந்துவிரோத பேச்சுகளைப் பேசி, நெற்றியில் விபூதி என்றெல்லாம் வைத்தால் துடைத்தெறியும் ஸ்டாலினுக்கு எப்படி பால்குடம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு, இரண்டு மடாதிபதிகள் தலைமைத் தாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மதுரை ஆதீனம் திமுக ஆதரவாக இருந்தார். இப்பொழுதைய ஆதீனம் இந்து, தாமரை மலர வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்..
கூடியசீக்கிரத்தில், இந்துஅறநிலையத்துறை, “ஸ்டாலின்போற்றும்துறை“யாகமாறப்போகிறது: இதில் வேடிக்கை என்னவென்றால், திக, வீரமணி போன்றோரும், இந்துத்துவ வாதிகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. சேகர் பாபு, தன்னை இந்து என்று காட்டிக் கொண்டு, அறநிலையத் துறையை ஒட்டு மொத்தமாக திமுக ஆதரவு கோஷ்டிகளை நிரப்பி, கோவில் சொத்து, குத்தகை, வாடகை என்று எல்லாவற்றையும் சுரட்ட திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பக்தர்களுக்கு மொட்டை அடிக்க இலவசம் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதனால், கோடிக் கணக்கில் சொத்துக்களைக் கொண்ட மடாதிபதிகளைப் பிரித்து, திட்டத்தை அமூல் படுத்தி கொள்ள செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளன. இத்தகைய மடாதிபதிகள், திராவிடத்துவ போதையில் போற்றி………………….போற்றி அகவல் பாடப் போகிறார்கள்! முன்னால் ஒரு தடவை கருணாநிதிக்கு செய்தார்கள். முட்டாள் இந்துக்கள்,……..பிரஹஸ்பதி இந்துத்துவ வாதிகள்,……மற்ற காவி இத்யாதிகள்,……………….மேகதாது, டாஸ்மாக், ………….என்று பேசி காலந்தள்ளப் போகிறார்கள்! ஸ்டாலினுக்கு அரோகரா! வேல் பிடித்தவனுக்கு அரோஹரா!!!!!!! கருணாநிதி மைந்தனுக்கு அரோஹரா!!!!!!! முழக்கங்களும் அதிகமாகும்.
திருவாடுதுறைஆதீனமடத்திற்குசொந்தமானசொத்துக்கள் – மதம், தர்மம் மற்றும் ஆன்மீகம் விடுத்து அரசியல் சார்ந்த காரியங்களில் ஈடுபடக் கூடாது (4)
இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்’ என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீன’த்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக் கொள்கிறார்கள்.
திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு “தரும சாசன சொத்துகள்” ஆகுமா?: திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு “தரும சாசன சொத்துகள்” என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.`சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!
திருவாடுவதுரைமடாதிபதிஆக, இளைய–பெரியசட்டங்கள்சண்டைப்போட்டுக்கொண்டவிவகாரங்கள்[1]: இளைய தம்பிரான், பெரிய தம்பிரான், கொலைத் திட்ட வழக்கு என்றெல்லாம் கூட இருக்கின்றன. அவ்வழக்கின் சுருக்கம்[2]:
மார்ச் 24, 1997 – மீனாக்ஷு சுந்தரம் தம்பிரான் இளைய பண்டார சந்நிதியாக நியமிக்கப் படல்.
ஜூலை 6, 2002 – இளைய பண்டார சந்நிதியை கொலைசெய்ய திட்டம் போட்டதாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
15.7.2002 – நோட்டீஸ் அனுப்பப் பட்டது.
ஜூலை 24, 2002 – பதவிலிருந்து நீக்கப் பட்டார்.
24-12-2004 – நீக்கப் பட்டதற்கு எதிராகத் தொடுக்கப் பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.
ஆகஸ்ட் 1, 2011 – உயர்நீதி மன்றத்தில் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டார்.
நவம்பர் 22, 2012 – பெரிய பண்டார சந்நிதி காலமானார்.
நவம்பர் 22, 2012 ஆணை – மீனாக்ஷு சுந்தரம் தம்பிரான் திருவாவடுதுரை 24வது மடாதிபதி ஆனார்.
05-06-2018 – இவ்விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது என்று உயர்நீதி மன்ற தீர்ப்பு[3]
அதாவது, ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய மடாதிபதிகள் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்றால், அடிப்படையிலேயே பல்லாண்டுகளாக ஏதோ தவறு இருந்து வருகிறது. கடவுளை மீறி நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே, அவர்களது போலித்தனத்தை வெளிப்படுத்தி விட்டது[4]. அதிகாரத்திற்காக, பட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காக, ஒரு தம்பிரான், இன்னொரு தம்பிரானை கொலைசெய்யத் துணிகிறார் என்றால், திராவிட அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அங்கு அரசியல் நுழைந்து விட்டது, இவர்கள் அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளார்கள் என்பது உறுதியாகின்றன. இதனால் தான், மடம்-கோவில் சொத்துகள் சட்டங்களை மீறி குத்தகைக்கு விடுவது, ஆக்கிரமிப்பது, விற்பது, பாட்டா போடுவது என்றெல்லாம் நடந்து வருகின்றன.
கோவில்–மடங்கள்இடங்கள்எவ்வாறுஆக்கிரமிக்கப்படுகின்றன?: குத்தகைகாரர்களாக இருந்து, எப்படி மடத்தை ஏமாற்றி வருகின்றனர் என்பதை, நீதிமன்ற தீர்ப்புகளே வெளிபடுத்திக் காட்டுகின்றன[5]. அதில் பல விவரங்கள் பெயர்களுடன், வெளியாகியுள்ளன[6]. இது உதாரணத்திற்குக் கொடுக்கப் படுகிறது. இது போன்று நூற்றுக் கணக்காண தீர்ப்புகள் உள்ளன. இருப்பினும், இவற்றையெல்லாம், ஒதுக்கி விட்டு, மறுபடி-மறுபடி சட்டமீறல்களை செய்து வருவது, ஒரு திட்டமிட்ட சதிவேலை எனலாம். திரும்ப-திரும்ப கோவில்-மடங்கள் நிலங்களையே குறி வைத்து, இவர்கள் வேலை செய்வதால், நிச்சயமாக அவை இந்துவிரோதமாகிறது. முதலில் திராவிடக் கட்சிகள் இந்திவிரோதிகளாக இருந்து கொண்டு செய்து வந்தன. இப்பொழுது, மற்ற கட்சிகள், குழுக்கள், முதலியவை அதே வேலையை செய்து வருகின்றன. நாளுக்கு நாள் நிலத்தின் விலை உயர்ந்து வருவதால், இத்தகைய மோசடிகள் அரசியல் பலத்தினால், சுலபமாக செய்யலாம் என்றாதால், எல்லோரும் இறங்கியுள்ளன. துலுக்கர், கிருத்துவர், மற்ற இந்துவிரோதிகள் இதில் இறங்கி கடந்த நூறாண்டுகளாக, இவ்வாறு செயல்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு, சொத்தை அனுபவித்தல், பிறகு சொத்தே தனது என்பது, பட்டாவிற்கு விண்ணப்பித்தல், ஊழல் அதிகாரிகள் முதலியவர்களின் உதவியால் பட்டா பெறுதல், பிறகு நீதிமன்றங்களுக்குச் சென்றாக் கூட, இழுத்தடிப்பது, போலி ஆவணங்களை உண்டாக்குவது, கைமாற்றி விற்பது என்ற ரீதியில், இழுத்தடித்து, சொத்துகளை அனபவித்து வருகின்றனர்.
[1]Madras High Court – His Holiness Kasiviswanatha … vs State Of Tamil Nadu, IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, Reserved on : 22.03.2018, Delivered on : 05-06-2018
CORAM THE HONOURABLE THIRU JUSTICE V. PARTHIBAN
W.P.No.31714 of 2012 and W.M.P.No.2672 and 2673 of 2018
His Holiness Kasiviswanatha Pandara Sannidhi, The Adheena Head of Thiruvavaduthurai Adheenam,
1. State of Tamil Nadu, represented by the Secretary, Hindu Religious and Charitable Endowments Department, Fort St.George, Chennai.
2. The Commissioner, Hindu Religious and Charitable Endowments Department, Chennai.
3. The Assistant Commission Hindu Religious and Charitable Endowments Department, Kumbakonam.
4. Sri Meenakshisundara Thambiran, Kattalai Thambiran at Thiruvidaimarthur Temple, now self declared as Head of Thiruvavaduthirai Adheenam, Mayiladuthurai taluk, Nagapattinam District. .. …Respondents
திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் – குத்தகை, வாடகை, வசூல் முதலியவற்றில் உண்டாகும் அதர்மங்கள் (3)
ஜூன் 2020, குரு பூஜையின் போது, விவரம் தெரிந்தவர் சொன்னது[1]: மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “…………ராமநாதபுரம் மன்னன் ஆதீன சீடராக விளங்கி, ஆதீனத்திற்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார்…அவற்றின் மூலம் கோவில் திருப் பணிகள் நடைபெற்றன….,”என்றெல்லாம் நடந்தன என்று விவரித்தார்[2]. ஆனால், அத்தகைய சொத்துகள் இன்றும் இருந்தும், திருப்பணிகள் நடக்காமல், நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு, தெய்வீகப் பணிக்கு எதிரான வேலைகள் நடைபெறுகின்றன என்பதை மறைமுகமாக உணர்த்துகிறார் போலும். வழக்கறிஞர் என்ற நிலையில், அதெல்லாம் அதெல்லாம் அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நிச்சயமாக, ஏனெனில், இவர் பலவித விவகாரங்களுக்குக் குரல் கொடுத்து வருகிறார்[3].
அக்டோபர் 2019- திருவாவடுதுறை ஆதீன மட சொத்துக்களை மீட்கக்கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது[4]: மதுரை மாவட்டம், சின்ன உலகாணியைச் சேர்ந்த மயில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: “திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள் பல இடங்களில் உள்ளன. மதுரை மாவட்டம், சின்ன உலகாணியிலுள்ள சில நிலங்களில் குத்தகை அடிப்படையில் சிலர் விவசாயம் செய்கின்றனர். தற்போது குத்தகைதாரர்களின் வாரிசுகள் விவசாயம் செய்கின்றனர். இது குத்தகை விதிக்கு எதிரானது[5]. இந்த நிலங்கள் 1972-ல் குருசாமி, பகவதி, ராமு, மற்றொரு குருசாமி என 4 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இவர்கள் இறந்த நிலையில் குத்தகை ஒப்பந்தம் செல்லாது[6]. ஆனால் குத்தகை ஒப்பந்தத்துக்கு மாறாக அந்த 4 பேரின் வாரிசுகளும், அவர்களின் வாரிசுகளும் நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஆதீன நிலங்களை சட்டவிரோதமாக ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்[7]. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இவர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்கவும், இதுவரை உபயோகப்படுத்தியதற்கான தொகையை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். தாரணி ஆகியோர் மனு குறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர், மதுரை கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2019, நவ. 12க்கு தள்ளி வைத்தனர். ஆக, இவ்விசயங்கள் நன்றாகவே தெரிந்திருக்கின்றன.
2018- ஆதீனத்துக்குபிடிவாரண்டுபிறப்பித்துநீதிபதிவானதிஉத்தரவு: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சைவ வேளாளர் சமுதாயத் தலைவர் சேதுராமலிங்கம் பிள்ளை ராஜபாளையம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராஜபாளையம் அருகே உள்ள மடத்துப் பட்டியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 40 வருடங்களாக இந்த நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது[8]. இங்கு நூலகம் அமைக்க அன்று இருந்த 23-வது குருமகா சன்னி தானத்தை அணுகினோம். அப்போது அவர் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை சட்டப்படி நீங்கள் மீட்டால் நூலகம் அமைக்க இடம் அளிக்கிறேன் என்று உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தி மடத்துப்பட்டியில் இருந்த ஆதீன இடத்தை மீட்டோம். இதனிடையே 23-வது மகா சன்னிதானம் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து 24-வது திருவாவடுதுறை சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணர் தேசிக பரமாச்சாரி சுவாமிகள் பொறுப்பேற்றார். அவரிடம் மடத்துப்பட்டியில் உள்ள நிலத்தில் நூலகம் அமைக்க இடம் கேட்டோம். அவர் இடம் தர முடியாது என தெரிவித்து விட்டார். அந்த நிலத்தை மீட்க ரூ. 20 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். தற்போது ஆதீனம் நிலத்தை தர மறுக்கிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 29-ந் தேதி ஜூன் 2018, விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் ஜூன். 3-ந் தேதி (03-07-2018 அன்று) ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆதீனம் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆதீனத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வானதி உத்தரவிட்டார்[9].
கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான “தரும சாசன சொத்து”களை வாங்கலாமா?[10]: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.
திருத்தொண்டர்சபைஎன்றஅமைப்பைச்சேர்ந்தராதாகிருஷ்ணன்என்பவர்மதுரைஉயர்நீதிமன்றக்கிளையில்பொதுநலவழக்குஒன்றைத்தாக்கல்செய்தது: இந்தச் சூழலில் அண்மைக்காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது… `தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ‘இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
[3] டாஸ்மார்க கடை திறப்பு, பொது மக்கள் பாதுகாப்பு போலீஸ், கோவில்கள் திறப்பு என்று பல விசயங்களில் குரல் கொடுப்பதாக, ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், இவ்விசயத்தில் அமைதி காக்கிறார் போலும்.
இந்த மூன்று குளங்களில் தூர்வாரும் என்ற பெயரில் திருவாவடுதுறை திருவிடைமருதூர் கட்டளை தம்பிரான் சுவாமிநாதன் 20 அடி ஆழத்திற்கு அதி நவீன இயந்திரங்களை வைத்து கொண்டு அதிக அளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு சுமார் 15 கோடிக்கு மேல் பணம் பார்த்து உள்ளார். கட்டளை தம்பிரான் வேலை தான் கட்டளை இருக்கும் சிவாலயங்களில் 6 கால பூசை / நெய்வேத்தியம் / சுவாமி திருமேனிகள் பராமரிப்பு / இது தான் இதை எல்லாம் விட்டு விட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தம்பிரான் உடனே மடத்தை விட்டு நீக்கம் செய்ய இல்லையேல் திருவாவடுதுறை மடம் முற்றுகையிட படும். மற்றும் திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் – ராஜேந்திரன் /திருவிடைமருதூர் தாசில்தார்-இராஜேஸ்வரி துணை கொண்டு கட்டளை தம்பிரான் எதிர்த்து கேள்வி கேட்க திருவிடைமருதூர் மக்களை காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரனிடம் லஞ்சமாக 5 லட்சம் ரூபாய் தந்து பொய் வழக்கு பதிவு செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிநாதன் கூலிப்படை வைத்து மக்களை மிரட்டி உள்ளார் தம்பிரான் வேலை இதுவா?
மணல் அள்ளும் இடத்தில் புகைப்படம் எடுக்க சென்ற ஒருவரை காரில் உடனே வந்து கேள்வி கேட்கும் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் சுவாமிநாதன் வீடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. சிவாலயத்தை விட்டு விட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்ட திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிநாதன் உடனே மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் இல்லையெனில் திருவாவடுதுறை ஆதீனம் மடம் முற்றுகையிட படும்,” இவ்வாறு அந்த இணைத்தளம் முடிக்கிறது[2]. “அரசியல்.டைம்ஸ்,” தோரணை, இது வெவ்வேறாக இருக்கின்றன.
குளங்கள்தூர்வாருவதில்அரசியல், குற்றச்சாட்டுகள்: திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில். இக்கோயிலில் கட்டளை தம்பிரானாக இருந்தவர் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள். கோயில் நிர்வாகத்தை கவனிப்பது, காணிக்கையாக வரும் நன்கொடைகளை முறைப்படுத்திச் செயல்படுத்துவது மற்றும் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பது போன்ற பணிகளைச் செய்துவந்தார். இந்தநிலையில், இவர் கடந்த ஒரு வருடமாக மகாலிங்கசுவாமி கோயிலுக்குச் சொந்தமான குளங்களைத் தூர்வாரும் பணியைச் செய்து வந்தார். அப்போது அரசின் உரிய அனுமதி இல்லாமல் மணல் எடுத்து விற்பதாக திருவிடைமருதூர் பா.ஜ.க நகரச் செயலாளர் ராஜ் என்பவர் குற்றம்சாட்டினர். ஆதீனத்திற்கு சொந்தமான, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலின் கீழ் 32 தீர்த்த குளங்கள் உள்ளன. இதில் திருவிடைமருதூர் ஆதீன மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சிங்கநீர் குளம், 15 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டது. கான்ட்ராக்ட் விவகாரத்தால் தான், அரசியல்வாதிகள், இவரை பலிக்காடா ஆக்கினர் போலிருக்கிறது.
பிஜேபி நகரச் செயலாளர் ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு, கைது முதலியன[3]: இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த தம்பிரான், குளத்தை தூர்வாருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பி வருவதாகவும் புகார் தெரிவித்தார்[4]. இந்தநிலையில் குளம் தூர்வாரியபோது மணல் திருட்டு நடந்ததாக கூறி திருவிடைமருதூர் நகர பா.ஜனதா கட்சி தலைவர் ராஜூ (வயது 45) பிரச்சினை செய்து, இதுசம்பந்தமாக திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதற்கிடையே கட்டளை தம்பிரான் சுவாமி குறித்து தரக்குறைவாக விமர்சித்து ராஜூ தனது பேஸ்புக்கில் பதிவிட்டு, மேலும் ஆதீனத்துக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் ஆதீனம் சார்பில் புகார் செய்யப்பட்டது[5]. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா நகர தலைவர் ராஜூவை கைது செய்தனர்[6], என்றெல்லாம் செய்திகள் உள்ளன.
பின்னர் தம்பிரான் சுவாமிகள் தரப்பில் சிம்மராஜா என்பவர் மூலம் ராஜ் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ராஜ் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தனர் போலீஸார். சுவாமி நாத தம்பிரான் சுவாமிகள் மீது ராஜ் புகார் கொடுத்தும் எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்நிலையில் தற்போது தம்பிரான் சுவாமிகள், தமது உடல்நிலையைக் காரணம் காட்டி ஆதீன தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து விலகுவதாக ஆதீன தலைமை மடத்துக்குக் கடிதம் அளித்தார்[7]. ராஜ் வெளிவந்தாரா, என்ன செய்தார் என்று தெரியவில்லை.
அரசியல்வாதிகள்நுழைவு, தூர்வாரும்மண்விற்கும்உரிமை[8]: சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் தரப்பினரிடம் பேசினோம். “மடத்துக்குச் சொந்தமான 10 குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை மீட்டு தூர்வாரி அதில் நீரை நிரப்பினார் தம்பிரான் சுவாமிகள். இதனால் அவருக்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். அதனுடன் ஒரு சில அரசியல் கட்சியினர் குளம் தூர்வாரும் ஒப்பந்தத்தையும் தூர்வாரும் மண்ணை விற்கும் உரிமையை தங்களுக்குத் தர வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். ஆனால் தம்பிரான் சுவாமிகள் இதற்கு அடிபணியாமல், `கோயில்நிர்வாகமேநேரடியாகஇந்தப்பணியைச்செய்கிறதுதூர்வாரப்படும்மண்கரையைபலப்படுத்தவும்பயன்படுத்தப்படுகிறது‘ என்று தெரிவித்தார். தம்பிரான் சுவாமிகளின் விலகல் தொடர்பாக, பா.ஜ.க பிரமுகர் ராஜிடம் பேசினோம், “தம்பிரான்சுவாமி, சிம்மராஜாஎன்பவரின்துணையோடுகுளங்களைதூர்வாருகிறேன்என்கிறபெயரில்மண்எடுத்துவிற்றுபெரியஅளவில்பணம்சம்பாதித்துவந்தனர். இதைத்தட்டிக்கேட்டஎன்மீதுபுகார்அளித்தனர். அவரைபற்றித்தற்போதுதான்மடத்துக்குத்தெரியவந்திருக்கிறது. அவர்விலகலுக்குஅவரின்செயல்பாடேகாரணம். எந்தஅரசியல்அழுத்தமும்இல்லை,” என்றார்[9]. இதன் மூலம் ராஜின் ஆசையும், விருப்பமும் இதில் வெளிப்படுகிறது. இவரும் அந்த கான்ட்ராக்ட் வேண்டும் என்று ஆசைபட்டார் போலும்.
தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன?
தமிழகத்தில் பகுத்தறிவு, புத்தறிவு, புது-அறிவு என்றெல்லாம் பேசிக்கொண்டு தாலிகள் அறுக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கின்றனர், தாலிகள் அறுக்க விழாக்கள் நடத்தியதால், மரத்துவிட்டன போலும் மனங்கள். ஆகையால் கோவில் கொள்ளை என்றால், ஏதோ இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டது போன்ற மகிழ்ச்சி. என்னே திராவிடத்தின் அலங்கோலம், கோவில் நிலங்களை திருட்டுத் தனமாக பட்டாப் போட்டு விற்பதில்[1] அலாதியான மகிழ்ச்சி. குடிசை மாற்று வாரியத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு கோவில் நிலத்தை விற்பர்[2]. கருணாநிதி[3]-ஜெயலலிதா[4] என்று மாறி-மாறி ஆட்சி செய்தாலும், இந்த கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியன நிற்பதில்லை. ஆக, இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்ற கொடிய கொள்ளையர்கள், குரூரத் திருடர்களையும் மிஞ்சி விடுவர் போலும்[5]! இதில் ரோசய்யா வந்தாலும், பங்கு கேட்காமல் விடுவதில்லை[6]. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன[7] என்று எடுத்துக் காட்டியுள்ளேன். டிசம்பர் 2009ல் ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலியவை கொள்ளையடிக்கப் பட்டன[8]. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றான் தமிழன் அன்று, இன்றோ குடியிருக்கும் இடத்தில் கோவில் வேண்டாம் என்பதோடு, இருக்கின்ற கோவில்களையும் இடிக்க வேண்டும் என்கிறார்கள்[9]. கருணநிதியே ஒரு விஜய நகரக் காலத்து மண்டபத்தை இடிக்கச் சொன்ன போது[10] படை தளபதி வீரமணி சும்மா இருப்பாரா, கோவில்களை இடி என்று முழங்கினார். மடாதிபதிகள் பலர் மிரட்டப் பட்டனர்; பொய் வழக்குகள் போடப்பட்டன; இளையபட்டங்களைத் தூண்டி விட்டு பிரிக்க சதி செய்தன; மடங்களினின்று மடாதிபதிகள் துரத்தப் பட்டனர்; மடங்கள் அபகரிக்கப் பட்டன[11]. சில மடங்களில் பிரிவினை ஏற்படவும் வழி வகுத்தன[12]. இதனால் பயந்து போன சில ஆதீனங்கள் கருணநிதியின் அடியையும் வருட ஆரம்பித்தன[13], இவை மொத்தமாக கீழ் கண்ட இணைத்தளங்களில் காணலாம்: https://atheismtemples.wordpress.com/
ஜனவரி 10, 2012 – புதுகை அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளை கோவிலுக்குள் புகுந்து மர்ம கும்பல் கைவரிசை ; தினமலர் – ஜனவரி 11, 2012: புதுக்கோட்டை அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சுவாமி சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்
இவ்விவரங்கள் பல இணை தளங்களினின்று பெறப்பட்டுள்ளன. எங்கிருந்து பெறப்பட்டன என்ற குறிபுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய தமிழகக் கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியவற்றைப் பார்க்கும் போது, அதில் ஒரு முறை காணப்படுகிறது.
விராலிமலை அடுத்த விராலூர் கிராமத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை பாராமரிப்பில் உள்ள இந்த கோவில் மிகவும் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் விசேஷ நாளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருவீதியுலா வருவது வழக்கம். இதற்காக ஐம்பொன்னால் ஆன தனி உற்சவ மூர்த்தி சிலைகள் மூலஸ்தானத்துக்குள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயர் என்பவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கலைநயமிக்க இந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரம் உடையதும், பல லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும். நேற்றுமுன்தினம் இரவு பூஜைக்கு பின் வழக்கம்போல் நடைகளை அடைத்துவிட்டு கோவில் அர்ச்சகர் மணிகண்டன் பட்டாச்சாரியார் மற்றும் ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர். நேற்று அதிகாலையில் பூஜைக்காக அர்ச்சகர் மணிகண்டன் கோவிலுக்கு வந்தபோது மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்ததைக்கண்டு திடுக்கிட்டுள்ளார். கருவறைக்குள் சென்று பார்த்தபோது பெருமாள் அருகில் இருந்த இரண்டு தேவியர் சிலைகளும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர் இதுகுறித்து
பொதுவாக தமிழகத்தில் முன்னர், தாலியைத் திருட மாட்டார்கள். ஆனால், இப்பொழுது, தெருக்களில் நடந்து செல்லும் போது, வீட்டு வாசலில் குனிந்து கோலம் போடும் போது, கழுத்தில் இருக்கும் தாலியைப் பறித்துச் செல்கின்றனர். அந்த அளவிற்கு அவர்களது மனநிலை மாறியுள்ளது. அதற்குக் காரணம் என்ன?
அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விராலிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு விரைந்த போலீஸார், கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முதலில் மூலஸ்தான மெயின் கதவுகளின் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்றபின் கருவறை கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கருவறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமாள் அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் மோப்ப நாய் மார்ஷல் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளை மோப்பம் பிடித்த நாய் மார்ஷல் விராலிமலை – மதுரை சாலையில் ஒரு கி.மீ., தூரம்வரை ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. இதுபோன்று கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியும் நடந்தது. “இரண்டு நாட்களில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு சிலைகள் மீட்கப்படும்,” என பக்தர்களுக்கு டி.எஸ்.பி., கலியமூர்த்தி உறுதியளித்துள்ளார்.
ஜனவரி, 28, 2012 குரும்பூரில்கோயில்பூட்டைஉடைத்துஉண்டியல்கொள்ளைதினமலர் – ஞா, 29 ஜன., 2012: குரும்பூரில் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:குரும்பூர் அருளானந்தபுரத்தில் முனியசாமி கோயில் உள்ளது. இங்கு வழக்கம்போல் கோயில் பூட்டியிருந்தது. சம்பவத்தன்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் குரும்பூர் சப்இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்.
பிப்ரவரி 19, 2012, பரஞ்ஜோதி அம்மன் கோயில், காஞ்சிபுரம்[14]: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பரஞ்ஜோதி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அப்படி வரும் பக்தர்கள், கோயில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள உண்டி யலில் பணம், காணிக்கை செலுத்துவார்கள். நேற்று மதியம் 11 மணிக்கு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதையறிந்த பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். சில நபர்கள் மதில் சுவர் ஏறி குதித்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடுகின்றனர்.
பிப்ரவரி 24, 2012 – குலசேகரன்பட்டினம் கோவிலில் கொள்ளை போன அம்மன் சிலை மீட்பு: வாலிபர் கைது[15]: கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்த நகை வியாபாரி முருகன். இவர் கோவை டவுன் ஹாலில் இருந்து சித்ரா செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அவர் தனது கைப்பையில் 1 கிலோ வெள்ளி நகைகளை வைத்திருந்தார்.பஸ் நவ இந்தியா அருகே சென்ற போது அவரிடம் இருந்த கைப்பையை ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு இறங்க முயன்றார். சுதாரித்து கொண்ட முருகன் சத்தம் போட்டார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் (26) என்று தெரிய வந்தது.மேலும் விசாரணையில் அவர் திருச்செந்தூர் குலசேகரன் பட்டினம் வீர மனோகரி அம்மன் கோவிலில் இருந்து பழமையான ஐம்பொன் சிலையை திருடி இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பாலசுந்தரத்தை கைது செய்தனர்.பாலசுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவையில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் 4? கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலசுந்தரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிப்ரவரி 25, 2012 – சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில், தூத்துக்குடி: தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பிரபல கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறு நாள்காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து திருவைகுண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க தாலி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய 79 கிராம் வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள், பூஜை பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.
மார்ச் 6, 3012- பெரியகுளம் அருகே காளியம்மன் கோவிலில் நகை, சிலைகள் கொள்ளை: போலீசார் விசாரணை[16]: தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அருகே உள்ள மேல்மந்தை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை பூசாரி சந்திரசேகரன் கோவிலுக்கு வந்தபோது கோவில் கதவுகள் உடைக்கப் பட்டு சாமி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மற்றும் வெண்கல சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சந்திரசேகரன் தேவதானபட்டி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தேவதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற “மர்ம” ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். சமீப காலமாக பெரியகுளம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மார்ச் 7, 2012 – விநாயகர் கோவிலில் பணம் கொள்ளை, கொடுங்கையூர், சென்னை[17]: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலில்
மூன்று மாதங்களில் தமிழகத்தில் இத்தனை கோவில் கொள்ளைகள் நடக்கின்றன என்றால், அது நாத்திகத்தின் விளைவா அல்லது பகுத்தறிவாளர்களின் சதியா?
நவக்கிரக சன்னதி அமைக்கப்படுகிறது. தங்கராஜ் நாடார் திருப்பணியை செய்து வருகிறார். செவ்வாய்கிழமை பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கோவில் அர்ச்சகரும் பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்று விட்டார். புதன்கிழமை காலை அர்ச்சகர் சுப்பிரமணி, நிர்வாகி கணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் விநாயகருக்கு எதிரே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கராஜ் நாடாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். கோவில் உண்டியல் 4 மாதமாக திறக்கப்படவில்லை. இதனால் ரூ.8 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என கருதப்படுகிறது. போலீசார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மார்ச் 8, 2012, ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன்கோயில்: பெர்ங்குடி, சென்னை: சென்னை அடுத்த பெருங்குடி சீவரம் ராஜீவ்காந்தி சாலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது[18]. காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். சுற்றியுள்ள பகுதி மக்கள், அம்மனை வழிபடுவார்கள். வழக்கம் போல நேற்றிரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் பூசாரி சுப்பிரமணி (41). இன்று காலையில் மீண்டும் நடையை திறக்க வந்தார். அப்போது கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் உள்ள பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் குப்புசாமி, அங்கசாமியிடம் தெரிவித்தார். உடனே அவர்கள், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மார்ச் 18, 2012: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு[19] – பதிவு செய்த நேரம்:2012-03-20 12:55:44: வாடிப்பட்டி: கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலுள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை இப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு கோயில் நிர்வாகி ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மார்ச் 23, 2012 – மாரியம்மன் கோவில் – ஊத்துக்கோட்டை, திருப்பேர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம்[20]: கோவில் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பூண்டி ஒன்றியம், திருப்பேர் ஊராட்சிக்கு உட்பட்டது பங்காருபேட்டை கிராமம். இங்கு, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, மக்கள் இந்த அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம், வழக்கம்போல, கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை, கோவிலைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. கோவில் பூசாரி சுப்பிரமணி பென்னலூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சிலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!
109 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் மடம்: கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் (1890-1994), சென்ற மடாதிபதி 109 ஆண்டுகள் வாழ்ந்த பெருமைப் பெற்றவர். இதைப் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத்தெரியவில்லை. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம். கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் தோன்றியது இம்மடம். சுமார் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது கும்பகோணத்திற்கு மற்றப்பட்டது. நீலகண்ட சாரங்கதேசிக சுவாமி கடக் மடத்தில் சில வருடங்கள் இருந்தார்[1]. இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன[2].
1989லிருந்து இருக்கும் வழக்கு[3]: சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் மடாதிபதியாக இருக்கும் போது, 1989ல் நிலத்தை விற்றதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1994ல் சுவாமிகள் தனது 109 வயதில் காலமானார். அப்பொழுது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கை, சிறிய தவறு நிமித்தம் தள்ளுபடி செய்தது. 1989ம் ஆண்டு மறுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது மடாதிபதி அல்லது அவர் தரப்பில், யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் இல்லாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு, முதன்மை துணை நீதிபதியிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், மடத்தின் மடத்தின் தேர் காணப்படவில்லை என்று அறநிலையத்துறை புகார் கொடுத்ததாக போலீஸார் வந்தனர். பூஜை செய்து கொண்டிருந்ததால், மடாதிபதி வரவில்லை. இதனால், உள்பக்கமாக போலீஸார் கதவைப் பூட்டினர். இதிலிருந்தே, எந்த அளவிற்கு, அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர் என்ரு தெரிகிறது. இருப்பினும் சைவர்கள் கூட ஒன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவரவில்லை.
வீரசைவ பெரிய மடத்து சுவாமிகள் அரசு நடவடிக்கையை குறைகூறினார்: சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்படி வலுக்கட்டாயமாக, பூஜை செய்து கொண்டிருந்த மடாதிபதியை வெளியேற்றியதற்காக கண்டித்து பேசினார். பூஜை செய்து கொண்டிருக்கும்போதே 15 அதிகாரிகள் உள்ளே நுழைந்து தம்மை வெளியேறுமாறு கட்டளையிட்டனர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்ரும், அதில் முறைகேடு எதுவும் இல்லையென்றும், மேலும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்ரும் எடுத்துக் கட்டினார்.
நிதி முறைகேடுகள் – அரசு குற்றச்சாட்டு: மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாக அமல்படுத்தப்படவில்லை.
வெளியேற மடாபதிக்கு உத்தரவு: இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.
போர்டு தொங்குகிறது: தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.
நான் பெங்களூர் போறேன்: மடாதிபதி : மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுத்துக் கொண்டது நியாயமற்ற செயல். என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்? நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார். (வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)
அவராகவே வெளியேறினார்: ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாக ஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார். அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.
விஸ்வ இந்து பரிஷத், பிஜேபி எதிர்ப்பு: இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார். இல. கணேசன் பிஜேபி தலைவரும் இதே கருத்தைச் சொல்லிருக்கிறார்[4].
வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்: இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார். அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இந்து மடங்களுக்கு எதிராக நாத்திக / திராவிட அரசு செயல்பட்டது என்பதுதான் உண்மை: அரசியல் ரீதியில், ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடலாம் அல்லது பொய் வழக்குப் போட்டு உண்மையினை மறைத்து விடலாம் என்ற போக்கு இதில் தெரிந்துள்ளது. 109 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீரசைவ மடாதிபதிக்கு மரியாதை செய்ய, இந்த தமிழகத்திற்கு, திராவிட நாட்டிற்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று வந்த அதிகாரிகள் அவர் நிலமோசடி செய்து விட்டார் என்று வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், அவரது அடுத்த மடாதிபதியையும் விரட்டியடித்துள்ளனர். இதுதான், தமிழர் பண்பாடு போலும். 1342ம் ஆண்டு, இதேபோல, வீரவல்லாளன்[5], வல்லாள தேவன், பல்லாளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட, திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய, முகமதியர்களின் தாக்குதல்களினின்று தென்னகத்தை, குறிப்பாக தமிழகத்தைக் காத்த, அந்த அரசன் மதுரையில் தோலுரித்து, தனது என்பதாவது வயதில் கொல்லப்பட்டபோது, எந்த வீரம், மானம், சூடு, சொரணையுள்ள மன்னனும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது வீரமுடன் திருவண்ணாமலை கோவிலைக் காத்த அருள்திரு தெய்வசிகாமணி தேசிகர் (1291-1348) தான் மனம் நொந்து வருந்தினார்[6].
தமிழர்கள், தமிழ்-இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும்: இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்பேசும் இந்துக்கள், தமிழகத்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் என்றேகூட சொல்லலாம். இருப்பினும், அவ்வாறு சொன்னால் விழித்துக் கொள்வார்களா என்ற சபலம் தான். சைவமடங்கள் அல்லது வைணவ மடங்கள் எதுவாக இருந்தாலும், இந்து நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு கருணாநிதி-ஜெயலலிதா என்ற தனிமனிதரை நாம் குற்றஞ்சாட்டவில்லை, ஆனால், அவர்கள் தமிழகத்தில் உள்ள எட்டுகோடுக்கும் மேலாக உள்ள இந்துக்களுக்கு எதிராக கடந்த 50-60 ஆண்டுகளாக செயல்பட்டு வௌகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டப்படுகிறது. “ஆட்சியாளர்” என்ற முறையில், இத்தனை கொவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, வெள்ளையெடிக்கப்பட்டது என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கொடுப்பதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் அவற்றை மக்களே செய்து கொள்வார்கள். அப்படித்தான் கோவில்கள் வளர்ந்துள்ளன. ஆனால், மடங்களையும், கோவில்களையும், சட்டத்தின் பிடியில் வைத்துக் கொண்டு, சீரழித்து வருவதுதான் திராவிட ஆட்சியின் வேலையாக இருந்ர்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
[5] ஹொய்சள அரசன் வீர வல்லாளன் (1291-1342) திருவண்ணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, முகமதியர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் செய்திய மாஒஎரும் வீரன். தனது எண்பதாவது வயதில் முகமதியர் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு, குரூரமாக தோலுரித்து மதுரையில் கொல்லப்பட்டார். இதேபோல 90 வயதில் 1565ல் ராமராயர் போரில் கொல்லப்பட்டார். அப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.
[6] அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்சைப் பெற்ற ஆதிசைவ மரபில் தோன்றிய, திருவண்ணாமலை மடத்தை நிறுவிய வீரசைவர் ஆவர். அதாவது உண்மையிலேயே வீரம் மிக்க சைவ மடாதிபதி ஆவர்.