Archive for the ‘திராவிடர் கழகம்’ Category

தருமபுரம் ஆதீனமடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றது: விகடன் இதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது – இது குறித்து வழக்கு விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் எனவும் கூறி சிலர் தருமபுரம் ஆதீனம் தரப்பை மிரட்டியிருக்கின்றனர். எனினும், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்கள்.

மஹாபாரத யுத்தம் தான் நடந்து கொண்டிருக்கிறது: இவையெல்லாம் நிச்சயமாக அரசுக்கும், மடத்திற்கும் உள்ளே தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. குற்றம், விதிமுறைகள் மீறல், சட்டங்கள் மீறல் என்றெல்லாம் வந்தால், நிச்சயமாக அத்தகைய சட்டத்தை மீறும் நபர்கள் உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம், மக்களின் கவனத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்தப் படுவதில்லை. சட்டாமீறல்களுக்கும் அவ்வாறே உரிய தண்டனைகள் கொடுப்பதில்லை, கிடைப்பதில்லை. இதனால், சட்டங்கள் பிழையாவதில்லை, ஆனால், தருமம் மதிக்கப் படாததால், அநியாயம் உச்சத்தில் செல்கிறது. அந்நிலையில், அத்தகைய அநியாயம், அராஜகம், அதர்மம் என்றே எல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுகிறவன் பைத்தியக் காரன் ஆகிறான். யாரும் அவனை மதிப்பதும் இல்லை. இதனால் தான், பலர், நமக்கெதற்கு வம்பு என்று அமையாகவும் இருந்து விடுகின்றனர். 

வழக்குப் பதிவு, கைது முதலியன: இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 323, 307, 389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28), ஆடுதுறை வினோத் (32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[1]. மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[2].

முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்து: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[3]. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[4]. அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, உடனடியான நடவடிக்கை – கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எப்படியென்றால், இதெல்லாம் ஏதோ சொல்லி வைத்தால் போல நடந்த விவகாரங்களா அல்லது அப்படியே அமுக்கி விடலாம் என்று தீர்மானித்து, அமுக்க முடியாமல் போனதால், நடந்தேறிய நிகழ்வுகளா என்பதெல்லாம் ஆண்டவன் தான் பிரகடனப் படுத்த வேண்டும்.. 

2018ல் திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் புகார்: `பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் குள நிலத்தடி நீரைக் காக்கவும் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணிகளை அரசின் அனுமதியோடு செய்து வருகிறோம்[5]. இந்தப் பணியைச் செய்ய விடாமல் உள்நோக்கத்துடன்  பி.ஜே.பி நகரத் தலைவர் ராஜு உள்ளிட்ட சமூக விரோதிகள் எங்களை மிரட்டுவதோடு, வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரபரப்புகின்றனர். மேலும், நேரிலேயே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இப்பொழுதும், ஒரு பிஜேபி தலைவர் சம்பத்தப் பட்டுள்ளது தெரிகிறது. ஆக, இந்துமத்ததைக் காக்கிறோம் என்று சொல்கின்ற பிஜேபிகாரர்களும் இவ்வாறு மாறி விட்டனரா அல்லது திராவிடத்துவ வழியில் நடக்க முயற்சிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல், வானதி சீனிவாசன் வரை எங்களுக்கும், பெரியாருக்கும் சித்தாந்த ரீதியில் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டையும் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தலுக்காக சொன்னோம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது, அப்படியே நடந்துகொள்வது என்பது வேறு, அது முரண்பாடானது, பயங்கரமானதும் கூட.

ஆன்மீகக் கூட்டா, அரசியல் கூட்டா?: சாம-தான-தண்ட-பேத முறைகளில் கூட்டணி முயற்சிகள், பேரங்கள், வற்புருத்தல்கள் போன்றவையும் நடக்கலாம், நடத்தப் படலாம். அந்நிலையில், மதம் பந்தாடப் படுகிறது. மதத்தலைவர்கள் ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். தனித்திருக்கல்லாம், என்று ஒதுங்கியிருந்தாலும், ஏதோ ஒரு வழியில், முறையில், அவர்களும் இழுக்கப் படுகறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மடங்கள்-கோவில்களின் சொத்துக்கள் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் இருப்பதால், அவற்றை அனுபவிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்கார விவசாயிகள், போன்றவர்கள் தொடர்ந்து பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். ஆட்சி-அதிகாரம்-காலம் மாறும் பொழுது, அவ்வப்பொழுது, விசயம் வெளிவ்ரும் பொழுது, மற்றவர்களும் அதில் நுழைக்கின்றனர். அந்நிலையில் பங்கு போடும் நிலைக்கு வரும் பொழுது, புதிய சர்ச்சைகள், தகராறுகள், சண்டைகள் என்றெல்லாம் வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் சமரசம் ஆகவில்லை என்றால், அரங்கேறி விடுகிறது. ஆகவே, எது எப்படியாகிலும், மடங்கள் போற்றப் படவேண்டும். மடாதிபதிகளிம் கௌரவம் காப்பாற்றப் அடவேண்டும்.

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: தருமபுர ஆதீனத்தை மிரட்டிய பா.. பிரமுகர்; 4 பேர் கைது, Web Desk, 29 Feb 2024 12:55 IST

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-search-bjp-secretary-who-threats-dharumapuram-aadheenam-with-sexual-tape-release-4126860

[3] தினகரன், போலி வீடியோ தயாரித்து மிரட்டல்: முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி, February 29, 2024, 5:52 pm

[4] https://www.dinakaran.com/chief-minister-dharumapuram-atheenam-thank-you/

[5] விகடன், `பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்!’ – திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு, கே.குணசீலன், Published:17 Oct 2018 3 PM; Updated:17 Oct 2018 3 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/139957-thiruvavaduthurai-aadheenam-files-complaint-against-bjp-cadre

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

திராவிடத்துவ ஆட்சியில் மடத்தில் பிரச்சினை 25-02-2024ல் கொடுக்கப் பட்ட புகார்: தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கும் நேரங்களில் சர்ச்சைகள் எழுவது சாதாரண விசயம் எனலாம். அக்கட்சி சித்தாந்திகளுக்கு விருப்பமான செய்திகளாக அமையும் என்பது மட்டுமல்லாது, இதை வைத்த்க் கொண்டு ஒரு பக்கம் இந்து மதத்தைத் தூஷிக்க பயன்படுத்தும், இன்னொரு பக்கம், “இதோ பார், நாங்கள் தான் படங்களைக் காக்கிறோம்,” என்பது போலக் காட்டிக் கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளோம். மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது[1]. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்[2]. இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புகார் மனு அளித்தார்[4].

தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ: அதில் கூறியிருப்பதாவது[5]: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்[6]. இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக் கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார்[7]. பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர்[8]. மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர்[9]. இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்[10].  அப்படியென்றால், கண்ணால் பார்த்த சாட்சிகளே நிறையே பேர் இருக்க வேண்டுமே. மடத்திற்குள் கேமராக்கள் எல்லாம் இல்லையா, அவர்கள் வந்து சென்றதற்கான ஆதரங்கள் இல்லையா?

உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்ஆதீனம்: அந்த அளவுக்கு என்ன நடந்தது என்றும் புதிராக உள்ளது. திராவிடக் கட்சிகள் மடத்து சொத்துகள் நிர்வாகம், குத்தகை, நிலம் வாங்குதல்-விற்றல்-பட்டா போடுதல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றெல்லம் கவனித்தால், அத்தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். கட்சிகள், ஆட்சிகள் மாறினாலும், சொத்துக்களை அனுபவிப்பத்தில் எந்த குறையும் ஏற்படாமல், சம்பந்த பட்டவர்கள் நன்றாகவே கவனமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, பகிர்வுகளில் பிரச்சினை எழும் பொழுதும், சமரசம் செய்து கொள்ளப் படுகிறது. எல்லைகளை மீறும் பொழுது, இத்தகைய “வெடிப்புகள்” காணப் பட்டு, உணரப்படுகிறது. இதற்கெல்லாம், மதம், தர்மம், நியாயம், முதலியவை தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசியல், அதிகாரம் தீர்வாக இருக்க முடியாது. பொது மக்கள் முன்பே, இவையெல்லாம் தொடர்ந்து, தங்களது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, ஆன்மீகம் என்று பேசிக் கொண்டு, மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால், பக்தர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.

குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரில் புகார்: பின்னர் இது தொடர்பாக –

  1. செம்பனார்கோயில் தனியார் (கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
  2. செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,
  3. திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க. அகோரம்,
  4. திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்,
  5. வினோத்,
  6. விக்னேஷ் –

ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்[11]. மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம்[12]. அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார்[13]. இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர்[14]. எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி கொடுத்த மனு: இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். “அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை[15]. “நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்[16]..

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்து, தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, வீ.தமிழன்பன், Published : 29 Feb 2024 01:24 PM; Last Updated : 29 Feb 2024 01:24 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1208136-threat-to-dharmapuram-adheenam-case-registered-against-9-people-including-bjp-leader-4-arrested.html

[3] மாலைமலர், தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது, By Maalaimalar, .1 மார்ச் 2024 12:23 PM (Updated: 1 மார்ச் 2024 1:14 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/4-arrested-for-threatening-money-from-dharmapuram-adheenam-705717

[5] தினமலர், தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் பா.., நிர்வாகி உட்பட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மார் 01, 2024 01:21.

[6] https://m.dinamalar.com/detail-amp.php?id=3564373

[7] தினத்தந்தி, ஆபாச வீடியோவை வெளியிடுவோம்..தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: வசமாக சிக்கிய அரசியல் புள்ளிகள், By – தினத்தந்தி, Update: 2024-02-29 07:59 GMT.

[8] https://www.dailythanthi.com/amp/News/State/dharmapuram-adheenam-was-threatened-political-leaders-arrested-1095535

[9] இடிவி.பாரத், மோடிக்கு செங்கோல் கொடுத்த ஆதீனத்திற்கு மிரட்டல்பாஜக மாவட்டத்தலைவர் தலைமறைவு!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Feb 29, 2024, 12:39 PM IST; Updated : 19 hours ago.

https://www.etvbharat.com/ta/!state/dharmapuram-adheenam-threatened-by-dmk-bjp-party-persons-that-they-will-publish-controversial-videos-tns24022901092

[10]

[11] புதியதலைமுறை, ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய விவகாரம்; 4 பேர் கைது..முக்கிய புள்ளிகள் தலைமறைவு. Uvaram P, Published on: 29 Feb 2024, 7:43 pm.

[12] https://www.puthiyathalaimurai.com/crime/4-people-arrested-who-threated-dharmapuram-adheenam

[13] விகடன், ஆபாச வீடியோ பெயரில் தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் – 4 பேர் கைது; பாஜக, திமுக புள்ளிகள் தலைமறைவு, கே.குணசீலன், Published: 01-03-2024 at 4 PM; Updated: 1-03-2024 at 7 PM.

[14] https://www.vikatan.com/crime/in-darumapuram-adheenam-case-4-arrested-and-other-4-in-search

[15] பிபிசி தமிழ், தருமபுர ஆதீனம் மிரட்டல் புகார் விவகாரத்தில் தொடர் திருப்பங்கள்என்ன நடக்கிறது?, முரளிதரன்- காசிவிஸ்வநாதன், 1 மார்ச் 2024

[16] https://www.bbc.com/tamil/articles/c3glnjr3793o

உழவாரப்பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு தேவையா?

பிப்ரவரி24, 2024

உழவாரப் பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு தேவையா?

23-02-2024 அன்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இரண்டு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. தமிழகத்தில் ‘பழமையான, பாரம்பரியம் மிக்க கோயில்களில் துாய்மைப் பணிகள் மற்றும் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்[2]. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் 23-02-2024 அன்று விசாரணைக்கு வந்தது. ஆன் லைனில் பதிவு என்று 2021ல் ஆரம்பித்தாலும், வழக்கம் போல, பிரச்சினை உண்டாக்கி, அனுமதி மறுப்பது, காலதாமதம் செய்வது போன்ற முறையில் இடைஞல் செய்து வருவதாக, உழவாரப் பணி குழுக்கள் தெரிவிக்கின்றன.

அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் சொன்னதும், நீதிபதிகளின் கருத்தும்: அப்போது மனுதாரரான கே.கார்த்திகேயன், ”பொதுமக்கள், தன்னார்வலர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் வழங்குவதில்லை” எனக்கூறி மருதாநல்லுார் திருக்கருங்குடிநாதர் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில்கள், அங்குள்ள தெப்பக்குளங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்[3]. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”உழவாரப் பணிகளுக்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் செய்தால் அதை பரிசீலித்து செயல் அலுவலர் அனுமதி வழங்குவார். கோயில்களில் துாய்மைப் பணிகளுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை,” என்றார்[4]. பின் மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் 65 சதவீத கோயில்களில் சரிவர பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ‘பாரம்பரிய, பழமையான கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து அரசும் கவலை கொள்வதில்லை’ என வேதனை தெரிவித்தனர்.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[5]: “மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இரண்டு வாரத்தில் திட்டத்தை வகுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 189 தேவார வைப்பு தலங்கள், 267 நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்கள், 84 ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் அல்லது ஆர்.டி.., அல்லது பி.டி.., தலைமையில் குழு அமைத்து மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி தற்போது அந்த கோவில்களின் நிலை குறித்த விபரங்களுடன் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை இரண்டு வாரத்துக்குள் ஹிந்து அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என, தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்[6].

உழவாரப் பணி பற்றிய புரிதல் இல்லாத அமைச்சரா, துறையா எது?: தமிழகத்தில் உள்ள ஒரு சில பெரிய கோவில்களை மட்டும் தன்னார்வ அடிப்படையில் பக்தர்கள் தூய்மைப்படுத்தும் பணியான உழவாரப்பணி செய்கின்றனர். பெரும்பாலான கோவில்களில் இந்தப்பணி நடப்பதில்லை. அதுவும் முறையாக மாதம் ஒரு முறை என்று இல்லாமல் எப்போதாவது இந்தப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனை அனைத்து கோவில்களிலும் முறையாக செய்வதற்காக தூய்மைப்பணியில் ஈடுபடுபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்ய பலர் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது[7]:- “கோவிலை சுத்தம் செய்யும் உழவாரப் பணிக்கு இணையதளத்தில் பதிவு செய்யும் முறை தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே உள்ளது. பக்தர்களின் வரவேற்பை பொறுத்து தினசரி பதிவு செய்யும் வகையில் மாற்ற, திட்டம் உள்ளது,”. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்[8].

ஊழவாரப் பணி அனுமதிக்கு பதிவு செய்வது எப்படி?: ஹி கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது[9]. கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையதுறையின் http://hrce.tn.gov.in யில் சென்று, இ – சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும்[10]. அதில் உழவாரப்பணியை தேர்வு செய்ய வேண்டும்[11]. பின், கோவில்கள் பட்டியலில் விருப்பமான கோவில், பணி செய்வதற்கு உகந்த தேதி, நேரத்தை அட்டவணையில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்[12]. முன்பதிவு செய்யப்படாத சீட்டை தேர்வு செய்து, பணி செய்ய விரும்புவோரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்[13]. அதன்பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,யை பதிவு செய்தால் அனுமதி சீட்டு வரும்[14]. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்[15]. முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது[16]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், எவ்வாறு, அறநிலையத்துறை போர்வையில் உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது என்பதை ஏற்கெனவே விவரமாக பதிவு செய்துள்ளேன்[17]. ஔரங்கசீப் போலவே, சம்பந்தமே இல்லாத கிருத்துவர் கீதா ஜீவனையும் வைத்து, இச்சேவை ஆரம்பிக்கப் பட்டது[18].

© வேதபிரகாஷ்

24-02-2024


[1] காமதேனு, கோயில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள திட்டம்தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!, Updated on: 23 Feb 2024, 9:35 pm

[2] https://kamadenu.hindutamil.in/divine/plan-to-carry-out-plowing-work-in-tamil-nadu-temples-high-court-orders-to-tamil-nadu-government

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவில்களில் உழவாரப் பணி… திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, 24 Feb 2024 06:29 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-tn-govt-to-plan-for-tillage-work-in-temples-3985906

[5] தினமலர், கோயில்களில் உழவார பணி: : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: பிப் 24,2024 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3559175

[6] https://m.dinamalar.com/detail.php?id=3559175

[7] தினத்தந்தி, கோவில்களில் மேற்கொள்ளப்படும்உழவாரப்பணிஎன்றால் என்ன? அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம், ஜூலை 29, 2021 7:40 am (Updated: ஜூலை 29, 2021 7:40 am).

[8] https://www.dailythanthi.com/News/State/2021/07/29074036/Carried-out-in-temples-What-is-plowing-Description.vpf

[9] தினமலர், உழவாரப் பணி: அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவு திட்டம் துவக்கம், பதிவு செய்த நாள்: ஜூலை 27,2021 21:52; https://m.dinamalar.com/detail.php?id=2810772

[10] https://m.dinamalar.com/detail.php?id=2810772

[11] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார், செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 03:15 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[13] தினமணி, கோயில்களில் உழவாரப் பணிக்கு முன்பதிவு: புதிய நடைமுறை தொடக்கம், Published on: 28 ஜூலை 2021, 12:45 am; Updated on: 28 ஜூலை 2021, 2:19 am

[14]https://www.dinamani.com/tamilnadu/2021/Jul/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3668433.html

[15] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி : அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்!!, July 27, 2021, 11:54 am.

[16]https://www.dinakaran.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/

[17] வேதபிரகாஷ், ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2), 12-10-2021.

[18] https://atheismtemples.wordpress.com/2021/10/12/dmk-atheist-and-anti-hindu-rulers-set-out-to-suppress-hindus-temple-practices-and-traditions/

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை கோவிலை வைத்து நாத்திகர்கள் செய்யும் வியாபாரங்கள் (4)

ரியல் எஸ்டேட்கோவில் வியாபாரம் உதலியவை: இத்தகைய சூழ்நிலையில் தான் இப்பொழுது இவ்வாறு புதிய கோவில்களை உருவாக்குவது அல்லது இருக்கின்ற கோவில்களை மாற்றுவது அதை வைத்து வியாபாரம் செய்வது, சாலைகளை போடுவது, அந்த குறிப்பிட்ட நிலங்களின் விலையை அதிகமாக்குவது, இதன் மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை பெருக்குவது, என்று பல வழிகளில் வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் எத்தகைய குறிப்பிட்ட கோவில்களைத் தேர்ந்தெடுத்து அதை வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு சங்கிலி போன்ற வியாபாரம் முறையில் திட்டங்கள் எல்லாம் செயல்பட்டு வருகின்றன என்பதையும் கவனிக்கலாம். கோவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால், அதற்கு உண்டான வழிமுறைகள் அதாவது புதியதாக பக்தர்கள் வருவது, அவர்களை நம்பிக்கை அதிகமாகவது அல்லது அதிகமாக்குவது, அதற்கு உண்டான பிரச்சாரங்களை நடத்துவது போன்றவை வருகிறா அல்லது உண்மையிலேயே இருக்கும்கோவிலுக்கு எதையாவது செய்ய உதவுகிறார்களா என்று ஆராய்ந்தால், இந்த நாத்திக-பெரியாரிஸ கும்பல்களின் நோக்கம் தெரிந்து விடும்.

புதிய ஜோதிடர்கள்அர்ச்சகர்கள் உருவாக்கப் படுவது ஏன்?: நிச்சயமாக பகுத்தறிவு, பெரியாரிஸ சித்தாந்தம், திராவிட மாடல், இந்து விரோதம், சனாதன ஒழிப்பு என்பதெல்லாம் இவற்றிற்கு துணையாக இருக்காது. எந்த பலனையும் கொடுக்காது. ஆகவே இங்கு இத்தகைய ஆன்மீக பக்தி பரசத்துடன் வியாபாரத்திற்கு உண்டான முறையில் வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிச்சயமாக அதிக விவரங்கள் தெரிந்தவர்கள் தான் துணை போக வேண்டும். அதனால் தான் சில ஜோதிடர்கள், சில அர்ச்சகர்கள் என்றெல்லாம் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய-புதிய கதைகளை உருவாக்குகிறார்கள், ஆதாரமாக புராணங்களை உருவாகுகிறார்கள். இந்த பலன் வேண்டுமானால் இத்தகைய பூஜைகள் செய்ய வேண்டும் கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால்,  பரிகாரங்கள் செய்ய வேண்டும், இந்த கோவிலுக்கு எல்லாம் சென்று வர வேண்டும் என்றெல்லாம் புதிய புதிய வழக்கங்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன. ஆகவே ஒவ்வொரு வார இறுதியிலும் சனி ஞாயிறு விடுமுறை காலங்களில் தூரத்திலிருந்து கூட கார்கள், வேன்கள் என்று கூட்டம்- கூட்டமாக பக்தர்கள் வர ஆரம்பித்து விடுகிறார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது, அடவாடி வியாபாரமும் அதிகமாகிறது: ஏதோ ஒரு நாள் இரு நாள் அப்படியே குடும்பத்துடன் வந்து சென்று விடுகிறார்கள் என்றாலும், நாளுக்கு நாள் கூட்டம் 100, 200, 500, 1000 என்று அதிகமாக வரும் நிலையில் அவர்களுக்கு வேண்டிய உணவு, கழிவிடம் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இங்குதான் வியாபாரமயமாக்கம்- உண்மையான பக்தர்கள் மற்றும் உள்ளூர் ஆட்கள், மக்களை சுரண்டும் கோஷ்டிகள் -இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில் உள்ளூர் மக்ககள் உண்மையாக இத்தருணத்தை தங்களுக்கு உபயமாக கொண்டு வசதிகளை ஏற்படுத்து வருமானத்தை ஈட்டலாம். சுற்றுலா என்று வரும் பொழுதும் தீர்த்த யாத்திரை என்று வரும் பொழுதும் இது ஒரு சாதாரண விஷயமே. ஆனால் குறிப்பிட நாட்களில் ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் மக்கள் வருவார்கள், அதனால் அதை வைத்து வியாபாரம் செய்யலாம், கொழுத்தலாபத்தை ஈட்டலாம் என்ற நோக்கத்துடன் ஏதோ வசதிகளை செய்கிறேன் என்று கழிப்பிடத்திற்கு ஐம்பது ரூபாய் -நூறு ரூபாய் என்றெல்லாம் வசூல் செய்வது, வாகங்களை நிறுத்துவதற்கு 50-100 ரூபாய் என்று ரசீது போட்டு அடாவடித்தனம் செய்வது, போன்றவற்றில் மனக்கசப்பு, வெறுப்பு முதலியவை பக்தர்களுக்கு ஏற்படுகின்றன.

பக்தர்களை, பக்தியை பாதிக்கும் அடாவடி அயோக்கியத் தனமான வியாபாரங்கள்: அதே மாதிரி பூஜைக்கு வேண்டிய பொருள்களை விற்பதிலும் இரண்டு, மூன்று மடங்குகள் வைத்து விற்பது போன்ற காரியங்களை நம் கண்கூடாக இத்தகைய இடங்களில் கவனிக்கலாம். அதிலும் பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட பூக்கள், பழங்கள், எண்ணை போன்றவை, அதிலும் பரிகாரங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பொருட்கள் இவை எல்லாமே மறுபடியும் மறுபடியும் கடைகளுக்கு வருவது, அதனை திருப்பி கொடுப்பது போன்ற செயல்களையும் நாம் கவனிக்கலாம். இத்தகைய, “சுழற்சி” வியாபாரம் பக்தி, பக்தர்களின் நம்பிக்கை முதலியவை சோதனைக்குள்ளாகி புனிதமும் கெட்டு விடுகிறது. ஆக இதில் பூஜாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரின் புனிதமற்ற காரியங்களையும் கவனிக்கலாம். மனசாட்சிக்கு உகந்து அல்லது விரோதமாக செய்கிறார்களா இல்லையா என்று ஆராய வேண்டா, ஆனால், நிச்சயமாக இந்த பூஜை-புனஸ்காரர்களில் ஈடுபடுபவர்கள் செய்யக் கூடாது. செய்ஜுறார்கள் என்றால், அதையும், “கலிகாலம்,” என்று சொல்லி நியாயப் படுத்தி விடலாம்.

பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பு: ஒருவிதத்தில், உண்மையான சிரத்தையான பக்தர்கள் இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது அல்லது தெரிந்து கொள்ளும் பொழுது, மிகவும் மன வருத்தம் அடைகிறார்கள். இதனாலும், பக்தர்களுக்கு நாளடைவில் பாதிப்பு ஏற்படுகிறது. வெறுத்து விடுகிறார்கள். கிருபானந்தவாரியாரியே மிரட்டிய கும்பல்களும் இந்த தமிழகத்தில் இருந்தார்கள். ஆக, சாதாரணமான, அப்பாவி பக்தர்கள் என்ன செய்ய முடியும். ஒருவேளை அயோத்தியா மண்டபத்தில் தருப்பைப் புல் விற்றுக் கொண்டிருந்த எழை பிராமணர்களை கத்தியால் வெட்டியது போல, வெட்டவும் அந்த பெரியாரிஸ்டுகள் தயாராக இருக்கலாம். பாதி பக்தர்களுக்கு வேண்டுதல் நடக்கிறது, பாதி பக்தர்களுக்கு வேண்டியது நடக்கவில்லை என்றால், “நடக்கவில்லை,” என்று பக்தர் என்றும் சொல்ல மாட்டார், தனக்குக் கொடுப்பினை இல்லை என்று அமைதியாக இருப்பார். ஆனால், பலன் பெற்றவர் சொல்லும் பொழுது, சொல்ல வைக்கும் பொழுது, இதற்கு விளம்பரம் கொடுத்து பரப்பும் பொழுது, சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் வளர்கிறது.

இந்துவிரோத-பெரியாரிஸ்டுகள் வளரும் விதம்: கிராமங்களில், தொலைவில் இருக்குமிடங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பொழுது, இத்தகைய பெரியாரிஸ்டுகள், இந்துவிரோதிகள், முதலியவர்களை எதிர்த்து சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவேளை அவர்களுக்கும் அர்சியல் பின்னணி இருந்தால், தட்டிக் கேட்கலாம், ஆனால், அவர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டு, அனுப்பப் படுவார்கள். கோவில்-வளர்க்கும் வியாபாரங்களும் இந்த மனிதர்களுக்குத் தான் கிடைக்கின்றன, கிடைக்கும். அரசியல் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு எல்லா “ஆர்டர்களும், டெண்ர்களும்” கிடைக்கின்றன. பிறகு, அக்கோவிலையே கட்ட்ப் படுத்தும் அளவுக்கு “தாதாவாகிறார்கள்.” சிறப்பு தரிசனத்திற்கு, விஐபிக்கள் அவர்களிடம் தான் செல்ல வேண்டும். அப்படித்தான், நடந்து வருகிறது. இதனால் தான், இவர்கள் எல்லோருமே இந்துக்களாகத் தான் இருக்கிறார்கள், இந்துவிரோதிகளாக இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள். சனி இவர்களைப் பிடிப்பதில்லை, மற்றவர்களைத் தான் பிடிக்கிறது. அதையும் இந்நாத்திகர்கள் பெருமையாக சொல்லிக் காட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

13-10-2024

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம்–குச்சனூர் கோவில் பிரச்சினை – அறங்காவலர்களுக்கே ஒப்படைக்க நீதிமன்ற தீர்ப்பு (3)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை அறங்காவலர்களுக்கே ஒப்படைக்க நீதிமன்ற தீர்ப்பு (3)

ஆடித் திருவிழாவும், நீதிமன்ற தீர்ப்பும் உணவு தரம் சோதனையும்:  ஆடித் திருவிழா ஜூலை 22ஆம் தேதி 2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருவாதலும், திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளிலும் கோலாகலமாக திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பலர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

உணவு சோதனை உண்டாக்கிய கலவரம்: கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[1]. டீக்கடை, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்டப் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்[2]. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, லேபிள் ஒட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உரிய அனுமதி பெற்று உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளான சுரேஷ் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முறையாக விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததோடு தரமற்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16-12-2023 ஆர்பாட்டம்: தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி கோரி சனீஸ்வரன் கோயிலை பரம்பரை அறங்காவலர்களும் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியும் இந்து முன்னணி சார்பாக குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் கோட்டச் செயலாளர் கோம்பைகணேசன் தலைமையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர். பாலமுருகன், ராம் செல்வா, சசிகுமார் , பாண்டியன், ஆட்டோ முன்னணி ஆச்சி கார்த்திக் உட்பட ஒன்றிய , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[3]. சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்[4].

23-12-2023 ஆர்பாட்டம்: நீதிமன்றம் உத்தரவின் பேரில் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வெள்ளாளா் அமைப்பு சார்பில் 23-12-2023 சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவா் அணிச் செயலா் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவா் அண்ணா சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, மாநில மகளிர் அணித் தலைவி தமிழ்செல்வி மணிகண்டன் வரவேற்றார். அதில், குச்சனூா் சனீஸ்வரா் கோயில் முன்பு ஊா்வலமாக சென்றவா்கள், சென்னை உயா்நீதி மன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வெள்ளாளா் அமைப்பைச் சோ்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்[5]. சின்னமனூா் காவல் சார்பில் ஆய்வாளா் மாயன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனா்[6].

2003 முதல் 2023 வரை: 2003 இல் இருந்து 2020 வரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்தது. ஆனால் அக்காலகட்டத்தில் என்ன நடந்தது எதற்காக வேண்டி, மறுபடியும் 2023 இல் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில் மீட்கப்பட்டது, தனியார் நிர்வாகத்திற்கு வந்துள்ளது, என்பதை எல்லாம் கவனிக்க வேண்டிய உள்ளது. முன்னர், பரம்பரையாக இக்ககோவிலை பராமரித்து வந்துள்ளனர். அதேபோல இப்பொழுது 20 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் அந்த குழுவிற்கு சென்றுள்ளது என்பது தெரிகிறது. இது அந்த குறிப்பிட்ட கோவிலும் பிரச்சனை ஆக எடுத்துக் கொள்வதால் அல்லது பொதுவாக கோவில்கள் எல்லாம் அறநிலையக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற நடக்கும் போராட்டத்தின் அம்சமாக எடுத்துக் கொள்வதா என்பது கவனிக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இங்கு பக்தர்களின் பலன்கள் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் விவரங்கள் என்பதை பற்றி யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட விசேஷமான நாட்கள், காலம் என்ற வரையறுக்கப் பட்டதாக இருக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் இருக்க மட்டார்கள். ஆகவே, அவர்கள் இதில் தலையிட மாட்டார்கள் மற்றும் அவற்றிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்பது நன்றாக தெரிந்த விஷயம் தான்.

இப்பொழுதெல்லாம் வியாபாரமயப்பாக்கம் என்பது கோவில்களை மையமாக வைத்து பெரும்பாலாக நடந்து வருகின்றன என்பது கவனிக்க முடிகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிடத்துவ சித்தாந்தம் திராவிட கட்சிகள், பெரியாரிஸம் என்று பேசி விடுகின்ற பகுத்தறிவு- நாத்திக கூட்டங்கள் எல்லாமே மதத்திற்கு எதிராக குறிப்பாக கடவுள் மறுப்பு, இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்ற நிலை தான் உள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற லட்சுக்கணக்கான கோவில்கள் மற்றும் அவற்றிற்கு சொந்தமாக இருக்கின்ற பல கோடி ஏக்கர்கள் பரப்புள்ள விளைநிலங்கள், சொத்துகள், மடாலயங்கள் எல்லாம் எடுத்து ஆர்த்தால், அதனுடைய மதிப்பு எங்கோ செல்கிறது. கடந்த 70 ஆண்டுகள் ஆண்டுகள் கோவில் நிலங்களை பலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளன. தெய்வம் நம்பிக்கை இல்லாதவர், மேலும் இந்துக்களே இல்லாதவர் என்று இருப்பவர்களிடம் தான் நிலங்கள் குத்தகைக்கு  வாடகைக்கு சென்றுள்ளன. அவர்கள் தொடர்ந்து அனுபவித்து ஆனால், கோவில் நிலங்களுக்கு உண்டான வாடகை மற்றும் குத்தகை பணத்தை கூட கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும், அந்நிலங்கள் தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பட்டா கேட்டும் வருகின்றனர் இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் அவ்வாறு அவர்கள் பட்டாக்களை கூட அதாவது கோவில் நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களை ஆக்கமிருந்து கொண்டு அவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக பட்டா போட்டு மாற்றிக் கொண்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

13-10-2024


[1] இ.டிவி.பாரத், Kuchanur சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!, Published: Jul 24, 2023, 12:46 PM.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/kuchanur-saneeswara-bhagavan-temple-aadi-festival-food-safety-department-officials-inspection/tamil-nadu20230724124623084084899

[3] தமிழ்.லோகல், குச்சனூர் சனீஸ்வரன் கோயில் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம், By yasar, Dec 17, 2023, 19:12 IST.

[4] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/theni/andipatti/hindu-front-demonstration-in-front-of-kuchanur-saneeswaran-temple-12242854

[5] தினமணி, குச்சனூரில் வெள்ளாளா் அமைப்பு சார்பில் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 26th December 2023 12:00 AM  |   Last Updated : 26th December 2023 12:00 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2023/dec/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D–%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4128484.html

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம் – குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை (1)

சனிசனீஸ்வரன் சனிபகவான் என்று மாறிவரும் நிலை: சமீப காலத்தில் சனி படுத்தும் பாடு அதிகமாகவே இருக்கிஅரது போலும், ஏனெனில், எங்கெல்லாம் சனீஸ்வரன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கூட திருநள்ளாரில் சனீஸ்வரனை வழிபடுவதற்காக வரும் கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. ஆனால் பிறகு திடீரென்று கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் சனீஸ்வரன் சிற்பமாக இருந்த நிலையிலிருந்து விக்கிரமாக மாற்றப்பட்டு, அதற்கு தனி சன்னதியும் கட்டப்பட்டு அதுவே தனியான கோவில் போன்று பக்தர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப் பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த தனி கோவில் அல்லது பிரகாரம் என்பது விரிவுபடுத்திக் கொண்டே வருவதையும் கவனிக்கிறோம். உண்மையில் அது ஒரு பிரத்தியேகமான சிவன் கோவிலாகும். ஆனால் இப்பொழுது எல்லாம் சிவனை கூட வழிபடாமல் இது ஏதோ பிரயோகமான சனீஸ்வரன் கோவில் என்று நினைத்துக் கொண்டு சனீஸ்வரனை மட்டும் வழிபட்டு சென்று விடுகிறார்கள். இப்படியாகப் சனி “சனீஸ்வரனாகி” விட்டான் – விட்டார்.

நவகிரக க்ஷேத்திரம், சுற்றுலா, வணிகமயமாக்கல்: நவகிரக க்ஷேத்திரம் என்ற ஒரு புதிய முறையை உண்டாக்கி அதன்படி 9 கிரகங்கள் குடிகொண்டுள்ள கோவில்களுக்கு தீர்த்த யாத்திரையாக சென்று வருவது அறிமுக செய்யப்பட்டது. இதன் மூலமாக கார், வேன், பஸ் முதலியவற்றை வைத்திருக்கும் சுற்றுலா வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு ஏற்றபடி அந்த ஸ்தலங்களும் நாளுக்கு நாள் பெரிதாக்கப்பட்டன ஒவ்வொரு புதிதாக ஸ்தலத்திற்கும், புராணம் போன்ற கதைகளும் உருவாக்கப்பட்டன. பிறகு அந்தந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால். இந்த பலன்கள் கிடைக்கும் என்றும் விவரங்கள் சொல்லப்பட்டன. இதற்கு ஜோதிடர்களும் புதிய-புதிய பரிகாரங்கள், பலன்கள் தீர்க்கும் முறைகள் முதலியவற்றை புதியதாக உண்டாக்கி அறிமுகப்படுத்தினர். இவ்வாறு ஒரு நிலையில் கவனிக்கும் பொழுது, இத்தகைய பக்தர்களின் நம்பிக்கைகள் கூட எவ்வாறு வணிகமயமாக்கப்படுகிறது என்பதனை கவனிக்கலாம்.

புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கல்: அது மட்டுமல்ல, புதிய சனீஸ்வரன் கோவில்களையும் உண்டாக்கலாம் என்ற திட்டமும் துவங்கியது போலிருக்கிறது. அதாவது திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரன் சன்னதியானது அல்லது அது ஒரு சிவன் கோவிலின் பகுதி என்று இருப்பதனால் சனீஸ்வரனுக்கு மற்ற இடங்களில் பிரகாரங்களுடன் சன்னதிகள் உள்ளன – இல்லை, தனியான கோவில்கள் உள்ளன என்பது போன்ற கருத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றபடி தெற்கில் இருக்கின்ற திருநள்ளாறு கோவிலுக்கு எதிராக அதாவது வடக்கில் ஒரு கோவிலை ஆரம்பித்து அதை வடத்திருநள்ளார் என்றும் கூற ஆரம்பித்தார்கள். அதாவது தெற்கில் இருக்கும் அந்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுமானால், வடக்கில் இருக்கும் மற்ற சனீஸ்வரர் கோவில் வட-திருநள்ளார் என்றும் சொல்லி குறிப்பிடலாம் என்ற திட்டத்தை அமல் படுத்துகிறார்கள் போலும். இருப்பினும் புதிய-திருநள்ளார் கோவில், திருநள்ளாறு கோவில் போன்று பிரசித்தி அடைய முடியவில்லை. ஏனெனில் இக்காலங்களில் புதிதாக கட்டப்படுகின்ற இந்த கோவில்கள் எனது மிகச் சிறியவையாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும், நகருக்குள், ஒரு கோவில் கட்டுவது என்பது மிகக் கடினமானது. திருநள்ளாறு போன்று அத்தகைய பரந்த அளவில் இடமும் கிடைக்காது. அதிலும், பெரிய கோவிலை கட்டுவது என்பதும் சாத்தியமாகாது. அதனால் அந்த புதிதாக உருவாக்கப்படும் சனீஸ்வரன் கோவில் என்பது மிகச் சிறியதாக இருக்கிறது. அந்த அளவில் தான் கோவில்கள் நகருக்கு மத்தியில் அல்லது வீடு பல வீடுகள் இருக்கும் பொழுது அந்த வீடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு தெருவில் சில இடம் கிடைத்தது என்றால் அதனை சனீஸ்வரன் கோவிலாக மாற்றும் முறை நடந்து வருகிறது.

தனியாக சனீஸ்வரன் கோவில் சந்நிதி, கோவில் உருவாகும் முறை: இவ்வாறுதான், இப்பொழுது புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கி வருகின்றன. ஆகவே அந்த கோவில்களுக்கு சென்று பார்த்தால், எப்படி மிக சமீப காலத்தில் அதாவது ஒரு 20-30-40-50 ஆண்டுகளில் அவை மாற்றப்பட்டு, அவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதனை எளிதாக தெரிந்து கொள்ளலாம். திருக்காட்டுப்பள்ளியில் கூட, இவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது முந்தைய ஒரு பதிவில் எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது. அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கோவிலின் மூலையில் தனியாக பிரதிஸ்டை செய்யப்பட்டு அது சன்னிதியாக மாற்றப்பட்டு சனீஸ்வரன் கோவில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிரதானமாக இருப்பது லிங்கம் தான் அதாவது மூலவர் லிங்கம், சிவன் கோவில் தான் உள்ளது. சனீஸ்வரன் சன்னிதி சிறியாதாகயிருக்கிறது. அத்துடன் மீதி அந்த எட்டு கிரகங்களும் தனியாக, “ப” வடிவத்தில், ஒரு சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தனியாக எடுத்து வைத்து அதனை ஒரு சன்னிதியாக மாற்றி பிறகு, சில வருடங்களிலேயே அது ஏதோ சனீஸ்வரர், பிரத்தியேக சனீஸ்வரன் கோவில் போல உருவாக்கப்பட்டுள்லது. இப்பொழுது பொங்கு-சனீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் எல்லாம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

சனி, ஏழரை சனி முதலியன: நவகிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் இங்கு நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது. ஏழரை சனி திசை காலத்தை அல்லது சனி திசையின் காலத்தை குறைக்கும் வல்லமைகொண்ட, ஆலயமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது.

தினகரன் மான்மியம் சொல்லும் குச்சனூர் சனீஸ்வரன் புராணம்: தினகரன் மான்மியம் இவ்விவரங்களைக் கொடுக்கின்றன என்று பக்தி ரீதியில் கொடுக்கப் பட்டுள்ளன. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோவில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. தினகரன் மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்கு பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.

குச்சனூர் சனி கோவில் பலன் உண்டான விதம்: அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார்.  வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் ‘உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார்.

© வேதபிரகாஷ்

13-10-2024

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

குற்றங்களுக்கு லாப-நஷ்டங்களுக்கு சாமி காரணமா?; குற்றத்தை செய்வதற்கு இப்படியெல்லாம் நியாயப் படுத்தப் படுவது ஏன் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் வியாபாரத்தில் நஷ்டம் என்றால், அதற்கான காரணமானவர் மீது தான் தாக்குதல் இருக்க வேண்டும். கோவிலோ, கர்ப்பகிரகமோ, உள்ளே இருக்கும் மூலவரோ குறியாக இருக்க முடியாது[1]. “சாமி தான், சிலை தான்” என்று குறியாக பாம் போடுகிறான்[2] என்றால், அத்தகைய மனப்பாங்கு, குற்ற மனபாங்கு என்னவென்று போலீஸார் தான் ஆராய வேண்டும். அப்படியென்றால், இத்தகைய குற்றவாளிகளை வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்களா அல்லது செய்விக்கப் படுகிறார்களா போன்ற சந்தேகங்களும் எழலாம். குற்றவாளிகளை, அவ்வாறே நடத்தாமல், ஏதோ தியாகி, சித்தாந்தி போன்று சித்தரித்திக் காட்டுவது, பிறகு மனநோயாளி என்பது முதலியவை முறையான விசாரணையாகத் தெரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நீதிபதி நிரஞ்சன் ஆய்வு செய்தார். தடய அறிவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முதலில் குண்டு போட்டவனின் பெயரைக் குறிப்பிடாமல், பிறகு குறிப்பிட்டது: ஹிந்து கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன், கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவரா, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின், ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளனரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ரவுடி கருக்கா வினோத் என்பவர் கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினார். சில நாட்களில் அடுத்த சம்பவம் நடந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில் முன், ‘டீ கடை’ ஒன்றில் அமர்ந்து, சாகவாசமாக பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார் முரளிகிருஷ்ணன்[3]. கடையில் இருந்தோர் பார்த்தும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை[4]. ஆனாலும், அங்கிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவில், தெளிவாக தெரிகிறது[5]. இது, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளது[6]. கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜமேஷா முபின், 29, என்பவர் கார் குண்டு வெடிப்பை நடத்தினார். ஜூலையில், சிவகங்கை மாவட்டத்தில், நில தகராறு தொடர்பாக, மதுரை விராதனுார் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.சமீபத்தில், பள்ளிக்கரணையில், பா.ஜ., நிர்வாகியும், ரவுடியுமான பல்லு மதன் வீட்டில், ரவுடிகள் மண்ணெணெய் குண்டு வீசினர்.அதேபோல, நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ‘சி’ பிரிவு ரவுடி கருக்கா வினோத், 42, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ள கோவில் என்பதால் நீதிபதி ஆய்வு பிரச்சினையை மறைக்கக் கூட்டாது: சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில், அரசு சொத்தாட்சியர் மற்றும் அதிகாரபூர்வ அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது[7]. அதனாலேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நீதிபதி நிரஞ்சன் விசாரணை நடத்தி வருகிறார்[8]. கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன், தெளிவான மனநிலையில் இல்லை என, போலீசார் கூறுகின்றனர். உள்ளுக்குள் ஆழமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. பண்டிகை காலங்களில் கூட்டம் மிகுந்த இடங்களில் கோவிலுக்கு அருகில், கோவிலுக்குள் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்பதைக் கவனிக்கலாம். கூட்டநெரிசலிலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய குண்டுவெடிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. “நீட், சாமி உதவவில்லை, மனநோயாளி,….” என்றெல்லாம் கூறி பிரச்சினையை மறைத்து விட முடியாது. உண்மையினை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உளவுத் துறை அதிகாரிகள் கூறுவது: போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாத காலத்துக்குள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக பா.., தரப்பில், 30 கேள்விகள் கேட்கப்பட்டன; அவை மிக நுட்பமானவை. தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. .எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து மூளை சலவை செய்து, ஆட்கள் அனுப்பப்படுவது, தேசிய புலனாய்வு அமைப்பு எனும் என்..., விசாரணையில் தெரியவந்துள்ளது. .எஸ்., அமைப்பில் சேர்க்கப்படும் நபர்கள், பயங்கரவாத பயிற்சிக்கு பின், பல்வேறு திட்டங்களோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஹிந்து மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை, .எஸ்., பயங்கரவாதியாக மாற்றும்போது, பெயர் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போலீசிடம் சிக்கும்போது, மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். தற்போது, .எஸ்., அமைப்புக்கு அழைத்து செல்லப்படுபவர் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. ஹிந்துவாக இருந்தால், அதே பெயருடனே இருப்பர். அதனால், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கினாலும், ஹிந்துவாகவே அடையாளம் காட்டப்படுவர்.எனவே, வழக்கமான நடைமுறையை விட்டு, ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கிடைக்கும் தகவல்களை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது: இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[9]: “சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, தி.மு.., தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது,” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்[10]. அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம், By Nantha Kumar R Published: Friday, November 10, 2023,

[2] https://tamil.oneindia.com/news/chennai/what-happened-in-petrol-bomb-thrown-on-kothavaalchavadi-temple-chennai-police-explains-556071.html

[3] தினமலர், சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி! கோவில் கருவறைக்குள் வீசப்பட்டதால் பதற்றம், பதிவு செய்த நாள்: நவ 10,2023 22:52.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3478549

[5] நக்கீரன், டீக்கடையில் சாவகாசமாக அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்த நபர்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 10/11/2023 (15:11) | Edited on 10/11/2023 (15:26)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/person-sitting-tea-shop-casually-made-petrol-bomb-shocking-cctv-footage

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு, WebDesk, Nov 10, 2023 15:44 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-parrys-corner-temple-petrol-bombing-high-court-judge-inspects-in-person-tamil-news-1692013

[9] தினமலர், சென்னையில் கோயிலுக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது: அண்ணாமலை கண்டனம், மாற்றம் செய்த நாள்: நவ 10,2023 15:4.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3478443

தொடரும் சென்னிமலை விவகாரம்–பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் கள-ஆய்வு, எட்டப்படும் முடிவு என்ன?

ஒக்ரோபர்20, 2023

தொடரும் சென்னிமலை விவகாரம் பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் களஆய்வு, எட்டப் படும் முடிவு என்ன?

மதபோதகர் மீது வழக்கு: 13-10-2023 அன்றைய இந்துக்களின் கூட்டம் அரசுக்கு தெளிவான சமிஞையை அனுப்பியுள்ளது. ஆமாம், இந்துக்கள் விழித்துக் கொன்டு விட்டார்கள், இனி அவர்கள் திரண்டு எதிர்த்தால், மற்றவர்கள் தாங்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டு விட்டனர் என்றே தோன்றுகிறது. மேலும் இந்துக்களை கைது செய்து விட்டு, கிருத்துவர்களை கைது செய்யாமல் இருப்பது, வெளிப்படையான பாரபட்சத்தினையும் வெளிப்படுத்தியது. இதனால், அரசு கிருத்துவர்களையும் கைது செய்து தனது செக்யூலரிஸத்தை மெய்பிக்க முயன்றது போலும். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதி சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய இருவர் மீதும் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் இருவரையும் தேடிவந்தனர்[1]. தேடும் அளவுக்கு அவர்கள் என்ன அந்த அளவுக்கு பெரிய குற்றவாளிகளா அல்லது “நீ ஒளிந்து கொள், நாங்கள் தேடுவது போல தேடி பிடிக்கிறோம்,” என்றார்களோ என்று தெரியவில்லை.

18-10-2023 சேகர் பாபுவின் கள ஆய்வு: அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கோவில் திருப்பணிகள் குறித்து இன்று (அக். 18) ஆய்வு செய்தனர்[2]. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்ற சரவணன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது, மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்[3]யொருவழியாக அவர்கள் செய்த குற்றம் மற்றும் சட்டப் பிரிவுகளைக் கண்டு பிடித்து விட்டனர் போலும். ஆனால், இருவரும் தலைமறைவாகினர்[4]என்ற செய்தியும் வந்தது. அந்த அளவுக்கு  எல்லாமே வேக-வேகமாக நடக்கிறது போலும். இத்தகைய நடவடிக்கை முன்னரே எடுத்திருந்தால், எல்லாவற்றையும் நடக்காமல் பார்த்திருக்கலாமே? பிறகு, “தும்பை விட்டு, வாலைப் பிடிக்கும்” நடவடிக்கை ஏன்? இங்கும் “மைனாரிட்டி” வேலை செய்ததா? போலீசார் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டது[5]. இருப்பினும், தனிப்படை அமைக்கப் பட்டது போன்ற செய்திகள் வெளிவரவில்லை.

அல்லேலுயா கோஷமிட்ட சேகர் பாபுவின் பேட்டி: இதில், ஜோசப் என்ற சரவணனை சென்னையில் செங்கல்பட்டில் கைது செய்த போலீஸார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்[6]. மேலும், ஸ்டீபன் என்பவரைத் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் ஒளிந்து கொண்டிருப்பதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில், சென்னிமலையில் 18-10-2023 அன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது[7]: “அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடன் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அரசு செயல்படுகிறது[8]. மற்றொரு மதத்தினரை அவதூறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[9]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[10]. வழக்கில் தொடர்புடைய மற்றொருவரும் [வெள்ளக் கோவிலைச் சேர்ந்த பாதிரி] கைது செய்யப்படுவார்[11]. சென்னிமலை சர்ச்சையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வரும் 20-ம் தேதி (நாளை) ஈரோடு ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது,” இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்[12].

திராவிடத்துவவாதிகள் நடுநிலையாக இருப்பார்களா?: சட்டப் படி கைது என்றால் நடவடிக்கை தொடர வேண்டுமா இல்லை ஏதாவது மத்தியஸ்தம் செய்து வைக்கப் போகிறார்களா? திராவிடத்துவ வாதிகள் யாராக இருந்தாலும், இந்துக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நடுநிலையாக இருந்தாலே போதும். ஆனால், முதலமைச்சர் முதல், இந்து அறநிலைய அமைச்சர் வரை, மற்ற திக-திமுக கருப்புப் பரிவாரங்கள் எல்லாமே, இந்துவிரோதமாகத்தான் செயல் பட்டு வந்துள்ளன. பிறகு, இந்துக்களுக்கு எப்படி நீதி, நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மறுபடியும் “சனாதன ஒழிப்பு” மாநாடு நடக்காமல் இருக்குமா, இந்து அறநிலைய அமைச்சர் அங்கு இல்லாமல் போவாரா அல்லது அல்லேலுயா என்று அவர் கூவாமல் இருப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் உத்திரவாதமும் கொடுக்க முடியாது. இப்பொழுது இவர் யாருக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை. முன்னர் அல்லேலுயா என்று கோஷம் போட்டு, பிறகு “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் கலந்து கொண்டு, இப்பொழுது, இவ்வாறு பேசுவதும் திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

18-10-2023


[1] ஜீ.நியூஸ், கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைதுபாதிரியாருக்கு வலைவீச்சுசேகர்பாபு தகவல்பின்னணி என்ன?, Written by – Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 05:55 PM IST.

[2] https://zeenews.india.com/tamil/tamil-nadu/christian-organization-administrator-arrested-in-erode-said-by-minister-sekar-babu-check-reason-here-468489

[3] தினமணி, சென்னிமலை குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி கைது, By DIN  |   Published On : 19th October 2023 01:19 AM  |   Last Updated : 19th October 2023 01:19 AM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2023/oct/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4092472.html

[5]  தமிழ்.ஒன்.இந்தியா, சென்னிமலையைஏசுமலையாக மாற்றுவோம்– ‘சர்ச்சை பேச்சுசரவணன் ஜோசப் அதிரடி கைதுதூக்கியது போலீஸ்! By Mathivanan Maran Published: Wednesday, October 18, 2023, 19:24 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chennimalai-name-row-christian-munnani-leader-sarvanan-joseph-arrested-by-police-549445.html

[7] தமிழ்.இந்து,  சென்னிமலை முருகன் கோயில் விவகாரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது, செய்திப்பிரிவு; Published : 19 Oct 2023 05:43 AM; Last Updated : 19 Oct 2023 05:43 AM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1141398-controversial-speaker-on-chennimalai-murugan-temple-issue-arrested.html

[9] 360-செய்தி, சென்னிமலை பெயரை மாற்றுவோம்சர்ச்சை பேச்சால் கிறிஸ்துவ முன்னணி தலைவர் கைது!!, Author: Udayachandran RadhaKrishnan, 18 October 2023, 9:14 pm.

[10] https://www.updatenews360.com/tamilnadu/lets-change-the-name-of-chennimalai-christian-front-leader-arrested-for-controversial-speech-181023/

[11] தமிழ்.நியூஸ்.18, சென்னிமலை முருகன் கோவிலை கிறித்தவ மலையாக மாற்றுவோம் என பேசிய சரவணன் ஜோசப் கைது!, LAST UPDATED : OCTOBER 19, 2023, 12:58 PM IST.

[12] https://tamil.news18.com/erode/chennimalai-police-arrested-a-christian-munnani-functionary-for-trying-to-incite-communal-violence-1200206.html

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

சென்னிமலை இந்துக்களின் அறப்போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்க வேண்டும்–உரிமைகள் காக்கப் படவேண்டும்!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களில் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்கவேண்டும் உரிமைகள் காக்கப் படவேண்டும்!

இந்துவிரோத கூட்டத்தினரின் பாரபட்ச செயல்பாடு……

இதை யாரும் தட்டிக் கேட்கவில்லையே?

25-09-2023 கிறிஸ்தவர்களுக்கு சாதமாக, அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம்: மேலே குறிப்பிட்டப் படி, இதற்கிடையே கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி 25-09-2023  சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது, என்று தான் ஊடகம் குறிப்பிடுகிறது. பிறகு ஏன் அத்தகைய மறைப்புத் தனம் என்று தெரியவில்லை. இதும் ஊடகங்களின் பாரபட்சத்தை எடுத்துக் காட்டுகிறது.. இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியபோது, இதே கட்சிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

13-10-2023 அறப்போராட்டம் அறிவிப்பு………………………..

இந்துக்கள் கைது, ஆனால் கிறிஸ்துவர்களின் மீது நடவடிக்கை இல்லை: இதற்குள் புகார் கொடுத்ததின் அடிப்படையில், தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ஜான் பீட்டர் கொடுத்த புகாரின்படி, சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இதை தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அரச்சலுார், அண்ணா நகர் பூபதி, 38; தமிழரசன், 30, ஆகியோரை, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்[2]. போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆக, இவையெல்லாமே இந்துக்களுக்கு எதிராகவே நடந்த் கொண்டிருக்கின்றன, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதால், செக்யூலரிஸ ரீதியில் பாரபட்சம் இருப்பது வெளிப்படுகிறது.

தானாகக் கூடியக் கூட்டம்…

இந்துக்களின் எழுச்சி……

13-10-2023 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம்’ என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பினரின் மிரட்டல் பேச்சை கண்டித்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 13-10-2023 அன்று மாலை சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்கப் பட்டது[3]. போலீசாரும் அனுமதி கொடுத்துள்ளனர்[4]. அதனால், திட்டமிட்டப் படி, 13-10-2023 அன்று அற-போராட்டம் நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகவே சேர்ந்து விட்டது. முருக பக்தர்கள், இந்துக்கள் என்ற ரீதியில் தாமாகவே ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. முருகன் வரவேற்றார். மற்றும் அரச்சலூர் புலவர். கி. தமிழரசன், விவசாயி பேச்சாளர் தூரன் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது சென்னிமலையை பற்றி தவறாக பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானின் புகழ் குறித்து பெண்கள் பாடல்கள் பாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்[5].

கட்டுப்பாட்டுடன் அமைதியாக நடந்துள்ள அறப்போராட்டம்: சுமார் 25,000 வந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸாரும் உடனடியாக, பாதுகாப்பு ஏற்பாட்டில் இறங்கினர். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[6]. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், பள்ளி வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்ல முடியாது என சென்னிமலை பகுதியில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன[7]. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டதால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது[8]. இருப்பினும், இந்துக்கள் அமைதியாக, அறவழி சத்தியாகிரக போராட்டமாக நடத்தியுள்ளனர். அத்தனை கூட்டத்திலும், கட்டுப்பாட்டுடன், செயல்பட்டுள்ளர். கூட்டத்திற்கு வேண்டிய நீர் முதலிய ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நிச்சயமாக, இக்கூட்டம் இந்து மக்களின் எழுச்சியாகக் காணப் படுகிறது.

இந்து முன்னணி தலைவர்கள்……

மக்களின் – இந்துக்களின் எழுச்சிக் கூட்டம்

இந்த இந்து எழுச்சி-விழிப்புணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும்; இது வரை நமக்கு எதற்கு இப்பிரச்சினை, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் இருந்து வந்த இந்துக்களுக்கு இப்பொழுது விழிப்ப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அத்தகைய உணர்வுகளை அவர்கள் தொட்ர்ந்து கடைபிடித்தால், அவர்களது உரிமைகளை யாரு பறிக்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் சமம் என்று செக்யூலரிஸ ரீதியில் பேசினால் மட்டும் போதாது, அதன் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, ஆளும் பொழுது, அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ஆனால், 1970களிலிருந்து, திராவிட, திராவிடத்துவ, பெரியாரிஸ, நாத்திக கட்சிகள் அத்தகைய சட்ட-ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை. அரசியல் தலைவர்களே, இந்துக்களுக்கு எதிராக பேசி வந்துள்ளனர். அவையெல்லாம் இந்துவிரோதமாகவும் இருந்து வந்துள்ளன. அங்குதான் பிரச்சினை எழுகிறது.

25,000 இந்துக்கள் பங்கு கொண்டனர்……………………

கிறிஸ்தவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்: கிறிஸ்தவர்களின் வக்கிர எதிர்ப்பு, பலாத்கார ஆக்கிரமிப்பு, வன்முறை அபகரிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களை அரசு முறைப்ப் படி தண்டிக்க வேண்டும். அவற்றை ஏதோ “சிறுபான்மை” சமாசாரம் போல அணுகக் கூடாது. இந்த சட்டவிரோத காரணங்களுக்கு பல வழக்குகள் நிலுவைகள் உள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவை கிடப்பில் போடப் பட்டிருக்கலாம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தலாம். ஆனால், சில நேரங்களில் அவை நிச்சயமாக விசாரிக்கப் படும், அப்பொழுது நியாயமான தீர்ப்புகள் அளிக்கப் படும். ஆகவே, கிறிஸ்தவர்களும் இத்தகைய அடாவடி, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மதவிவகாரங்களில் ஒழுக்கம்-கட்டுப்பாடு இருக்கவேண்டும். அவர்களிடையே பற்பல சீர்கேடுகள் இருக்கும் பொழுது, முதலில் அவற்றை சரிசெய்து கொள்ளாமல், இந்துக்களை சதாய்ப்பதில் எந்த பலனும் ஏற்படப் பொவதில்லை. எத்ர்மறை விளைவுகள் தாம் ஏற்படும்.

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், சென்னிமலை முருகன் கோவிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் எனப் பேசிய அமைப்பினரை கைது செய்யக்கோரி 13ல் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: அக் 10,2023 15.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3453240

[3] தினமணி, இந்து முன்னணி சார்பில் அக்டோபா் 13 இல் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 01st October 2023 11:37 PM  |   Last Updated : 01st October 2023 11:37 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2023/oct/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4081779.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, என்னது ஏசு மலையா? “சென்னிமலை எங்கள் மலை“- பல்லாயிரக்கணக்கில் திரண்டுமுருகர்கூட்டம் முழக்கம்!, By Mathivanan Maran, Published: Saturday, October 14, 2023, 7:22 [IST].

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/murugan-devotees-protest-against-rename-demand-on-chennimalai-as-jesus-malai-547997.html

[7] தினத்தந்தி, சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தினத்தந்தி, அக்டோபர் 14, 7:12 am

[8] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaicondemnation-protest-of-hindu-munnani-1072464