Archive for the ‘பெண் பூசாரிகள்’ Category

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறதுஅர்ச்சகர் பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!

முரசொலியின் விளக்கம் ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  3. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  4. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  5. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  6. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.

சர்டிபிகேட் அர்ச்சகர்களும், பாரம்பரிய அர்ச்சகர்களும்:

  1. 60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
  2. “இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
  3. இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
  4. அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
  5. மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
  6. எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
  7. இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
  8. உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
  9. அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
  10. தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.

© வேதபிரகாஷ்

21-08-2021

70-100 வருடங்களாக இந்து மதத்தைத் தூஷித்து, சிலைகளை உடைத்து, திருடி, கோவில்களைக் கொள்ளையடித்து, இப்பொழுது, அர்ச்சகர் போர்வையில் உள்ளே நுழைவதேன்?
ஆகமங்கள் பற்றி அறியாமல், சக்திவேல் முருகன் போன்றோரை வைத்துக் கொண்டு, கோவில்களை சூரையாட திட்டம் போடப் பட்டுள்ளதா?
சர்டிபிகேட் வாங்கினவன் எல்லாம் அர்ச்சகர் ஆகி விடலாம் என்றால்,
பிஇ / பிடெக் படித்தவன் ஏன் இஞ்சினியர் ஆவதில்லை?
இவர்கள் சொல்வது உண்மை என்றால், அவ்வாறு செய்தவர்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது:  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு அரசியல் விழா போன்று தான் இருந்தது, பேச்சாளர்களும் அவ்வாறே பேசினார்கள். அந்த மடாதிபதிகள் மடத்தின் நிலங்களை விற்றது போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், அவர்களில் சிலர் நாங்கள் “இந்துக்கள் அல்ல,” என்றும் பேசியிருக்கிறார்கள். சுகி சிவம் பற்றியும் நிலைமை மாறி விட்டது. ஏனெனில், காசு வாங்கிக் கொண்டு, மேடைக்கு ஏற்றபடி பேசுகின்ற ஆளாகி விட்டதால், அவரை ஆன்மீகத்தில் சேர்க்க முடியாது. ஒரு அரசியல் ஏஜென்டாக செயல்பட ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது.முன்பு, இவரது புத்தகத்தை திக வெளியிட்டது, இப்பொழுது, திமுக, இந்நிகழ்ச்சிக்கு வரவேற்று பேச அனுமதித்துள்ளது.

19-08-2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை: கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது[1]. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன் 19-08-2021 வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை[2]: “கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் விடுவிக்கப் படமாட்டார்கள் என்பதை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம். புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதுகுறித்த பரிந்துரைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். பணிவரன்முறைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் உடனடியாக அனுப்பலாம். இது தொடா்பாக தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவது விரும்பத்தக்கதல்ல. வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால் அதற்கு இணை ஆணையா்கள் அல்லது உதவி ஆணையா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம். இதுகுறித்து கோயில் அலுவலா்களுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினைவேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள்: “தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினை”யில் வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாகும் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அந்த போர்வையிலும், ஆட்களை கூட்டி வந்து உள்ளே நுழைத்து விடுவார்களா? அடுத்தது, “தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,” என்றால், இதில் என்ன தேவையற்ற சிக்கலான செய்திகள்அவை எப்படி உருவாகும், அவற்றை உருவாக்க யார் இருக்கின்றனர் போன்ற கேள்விகளும் எழும்.  “உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,”  அத்தகையோர் உள்ளதை ஆணையர் அறிந்துள்ளார் போலும். ஐ.ஏ.எஸ் அதிகாரி இவ்வாறு சொதப்பலாக ஆணையிடுவதிலிருந்தே, இவர் அரசியல்வாதிகள் / ஆட்சியாளர்கள் / சித்தாந்தவாதிகள் சொல்வதைக் கேட்டு நடக்கிறார் என்பதும் தெரிகிறது. சட்டப் படி நடக்கிறது என்றால், சட்டப் படி நடக்காமல் இருக்கும்போது, இவர் தாராளமாக எடுத்துக் காட்டலாம். இதே போல “தினக்கூலி” முறையில் மற்றவர்களை, மற்ற துறையில் ஓய்வு பெற்றவர்களை, மூப்படைந்தவர்களை நியமிக்க முடியுமா?

கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்: கோவில் அர்ச்சகர் பணியில் ஓய்வு, மூப்பைத் தாண்டியோர் போன்றவை உள்ளனவா என்று தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், ஏதோ கூலிக்கு வேலை செய்யும் தொழில் போன்று அர்ச்சகர் சேவையை மாற்றி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏதோ, நாட்கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போன்று 40-60 வருடங்களாக சேவை செய்து வரும் அர்ச்சகர்களைக் கேவலப் படுத்தும் வகையில் ஆணையிட்டிருப்பது, மிக மோசமாக இருக்கிறது. “கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்,” என்றதில், அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. விடியற்காலையில் எழுந்து, குளித்து, பூஜைக்கு ஏற்பாடு செய்து, காலை 4 மணி, 4 மணி என்று பூஜை செய்து வருபவர்கள், எதையும் பொருட்படுத்தாமல் செய்து வருகின்றனர். இனிமேல், புதியதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அத்தகையோர், வேலை செய்யும் போது, இவர்கள், அவர்களிடம் தினக் கூலிக்கு வேலை செய வேண்டும் என்றால், என்ன அது? இங்கு தான் இந்துவிரோதிகளின் திட்டம் வெளிப்படுகிறது. அந்த புதிய பூஜாரிகளின் நிலையும் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான பூஜை, சேவை என்றால், இத்தகைய, ப்ரித்துக் காட்டும் கீழ்த்தரமான எண்ணங்கள் வராது.

17-08-2021 – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தது: ஸ்டாலின் கூறியது, “அமைச்சர் தெளிவாக விளக்கம் சொல்லி உள்ளார். அது குறித்து, நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். .வெ.ரா., நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்என, கருணாநிதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அது நடைமுறைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை வழங்கி இருக்கிறோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, சில காரியங்களை செய்கின்றனர்[3]. கோயில்களில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தால் அரசு அதில் உரிய நடவடிக்கை எடுக்கும். ஆனால் தேவையில்லாமல், சமூகநீதியைப் பாழ்படுத்தும் வகையில் விஷம பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது[4]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்திட்டத்தை சீர்குலைக்க சிலர் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர்[5]. சமூக நீதியைப் பாழ்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்[6]. அமைச்சர் பேசும் போது, ‘சில ஊடகத்தில்என சொன்னார். நான் ஊடகத்தினரை குறை சொல்ல மாட்டேன். ஆனால், அதை பயன்படுத்தி, சமூக வலைதளத்தில் சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். யாரையும் எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து, புதிதாக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை[7]. அப்படி எங்காவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை அசு நிச்சயமாக எடுக்கும்[8]; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.எனவே, வேண்டுமென்றே அதை கொச்சைப்படுத்தி, அரசியலுக்காக அல்லது சமூக நீதியை பாழடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவர்”.

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] தினமணி, கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக் கூலி அடிப்படையில் பணி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு, By DIN  |   Published on : 20th August 2021 06:48 AM.

[2]https://www.dinamani.com/tamilnadu/2021/aug/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3683294.html

[3] விகடன், `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தைச் சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்’ – ஸ்டாலின், ஜூனியர் விகடன் டீம், Published:17 Aug 2021 9 AMUpdated:17 Aug 2021 2 PM

[4] https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-17-08-2021-just-in-live-updates

[5] கலைஞர் செய்திகள், சமூக நீதியை சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்; இது உண்மையில்லை” : தெளிவுபடுத்திய முதல்வர் மு..ஸ்டாலின்!, Vignesh Selvaraj, Updated on : 17 August 2021, 01:11 PM

[6] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/17/some-people-trying-to-sabotage-all-caste-priest-scheme-says-cm-mk-stalin

[7] தினமலர், அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளைஆதாரத்தோடு சொல்லுங்கள்!, Updated : ஆக 18, 2021  01:28 |  Added : ஆக 17, 2021

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2825317

இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு!

மார்ச்14, 2011

இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு!

 

பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மீகம், என்றெல்லாம் வளர்த்து வரும் கோவில்கள் சீரழையும், சீரழைந்து வருகின்ற நேரத்தில், எப்படி அரசியல் மற்றும் நாத்திகக் கொள்கைகள் சார்ந்த மனிதர்கள், புற்றுநோய் கிருமிகள் போல நுழைந்து, உடலைக் கெடுத்து, இறப்பினை நோக்கி அழைத்துசெல்லும்,

திமுக, கருணாநிதி, கருப்புப் பரிவார் முதலிய என்றுமே இந்துக்களுக்கு விரோதிகளாகத்தான் இருக்கின்றன. நாத்திகப் போர்வையில், இந்துவிரோத சக்த்களுடன் சேர்ந்து கொண்டு கோவில்களை கொள்ளையடித்து வருகின்றன. அந்நுஇலையில் கோவில் பூசாரி சங்கம் திமுகவை ஆதரிப்பதில் வியப்பில்லைதான்!

எமதூதர்களாக மாற நேரிடும் என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது, இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு! முன்னுக்கு முரணாக தமிழகத்தில் நடந்து வரும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று நினைத்துவிட முடியாது. ஏனெனில், மக்கள் தேவநாதனுக்கும் இந்த வாசுவிற்கும் உள்ள ஒப்புமை அல்லது வேற்றுமை உணர வேண்டிய நிலையுள்ளது.

 

திமுகவுக்கு ஆதரவு: கோவில் பூசாரிகள் சங்கம்[1]: இந்து விரோத திமுகவிற்கு இந்து கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு என்பதே விநோதமாக உள்ளது. ஏற்கெனெவே கற்ப்பைப் பற்றி நடிகைகள் விளக்கம் கொடுத்துள்ளதால், இனி கருணாநிதியிடமிருந்துதான், கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய நிலையும் வரலாம். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு,

மகளிர் சுய-உதவிக்குழு மாதிரி கோவில் சங்கங்களிலும் திமுக தனது வேலையை ஆரம்பித்துவிட்டது என்று தெரிகின்றது[2]. வரிசையாக மாவட்டங்களில் சங்கக்கூட்டங்கள் நடந்ததின் பின்னணி இதுதான் போலிருக்கிறது.

 

தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு கூறினார். தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்க 33வது மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. திருக்கோவில் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பசலி என்ற சொல்லுக்கு பதிலாக நிலவரி ஆண்டு, நில வருவாய் ஆண்டு என்று மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும், வறுமை நிலையில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, குடியுரிமை பட்டா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் ஆகியவை வழங்க வேண்டும், பூசாரி நலவாரியத்தில் திருமண நிதியுதவியை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது,

 

கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்‘: தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்’ போன்ற தீர்மானங்களும் நிறைவேறின. மாநாட்டிற்கு பிறகு சங்க மாநிலத் தலைவர் பி.வாசு கூறியதாவது:  “கோவில் பூசாரிகளுக்கு

இனி தேவநாதனுக்கும், வாசு போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்ட பிறகு, மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவேண்டும் என்று பணித்தாலும், அவர்கள் செல்லவேண்டியிருக்கும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!

நலவாரியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல நலத்திட்டங்களை அள்ளி வழங்கிய தமிழக முதல் அமைச்சருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை 6 வது முறையாக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை கொண்டு வர தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் பாடுபடும்”, என்றார்[3].

 

எல்லா வழிபாட்டு ஸ்தலங்களில் இனி பெண்கள் சம-உரிமையோடு வேலை செய்வார்கள்: அதே செக்யூலரிஸ அடிப்படையில் இனி சர்ச், மசூதிகளிலும் பெண்கள் பிஷப்புகளாக, இம்மாம்களாக பவனி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்! பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு செய்கிறார்களோ இல்லையோ, கோவில்களில் பெண்களை பூசாரிகளாக நியமிக்கலாம் என்று தமிழகத்தில் மக்கள் தீர்மானங்களைப் போடுகின்றனர். இப்படி செய்து விட்டால், பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவ குருமார்கள் இனிமேல் அடிக்கடி செக்ஸ் களியாட்டங்களில் ஈடுபடுவது குறையுமா அல்லது அதிகமாகுமா என்பதை ஆராயலாம். மசூதிகளில் பெண்களே நுழையக் கூடாது என்ற நிலையில், பெண்கள் எப்படி காஜியாக, இமாம்களாக வேலை செய்வர் என்பதையெல்லாம் இனி வரப்போகின்ற கருணாநிதி ஆட்சியில் பார்க்கலாம்!

 

வேதபிரகாஷ்

14-03-2011


[2] கோவில் பூசாரிகள் நலச் சங்க கூட்டம்: பிப்ரவரி 28,2011,, கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கோவில் பூசாரி ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதற்கும், கோவில் திருப்பணிக்கு அரசு மானியம் 3 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தியதற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அறநிலைத் துறை அமைச்சர் மற்றும் மாநில தலைவர் வாசுவிற்கு விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாவட்ட ஆலோசனைக்குழு தலைவர் வெங்கடேசன் உட்பட பலர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=196483