Archive for the ‘பொன் வேய்ந்த கூரை’ Category

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன!

ஜூலை21, 2010

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன

 

நாத்திக ஆட்சியில் நடக்கும் இவை திட்டமிட்ட நடப்பைவையா? நாத்திகர்கள் வளர்ந்துள்ளதால், இப்படி கோவில் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவாக இருந்தாலும், திருடுவது, கொள்ளயடிப்பது என்பது தினம்-தினம் நடக்க்கும் திழாலாகி விட்டது. அவற்றில் குறிப்பிட்ட அமைப்பு, முறை காணப்படுவதால், அத்தகைய கொள்ளையர்கள் திட்டமிட்டு செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

  1. கோவில் ஆட்களே சம்பந்தப்படுவது. இவர்கள் எல்லாமே ஆளும் கட்சிக்க்காரர்களாக இருக்கின்றனர், அல்லது உள்ளூர் எம்.எல்,ஏ, எம்.பி, எம்.எல்.சி, வட்டச்செயலாளர்………….போன்ற நிலையில் உள்ளனர்.
  2. அறநிலையத்துறை ஆட்களே ஈடுபடுகின்றனர் / சம்பந்தப் பட்டுள்ளனர்.
  3. திருடியவர்களே, மறுபடியும் திருடுகின்றனர்.
  4. புதியதாக கும்பாபிஷேகம் நடந்தவுடன் திருடப்படுகின்றது.
  5. புதியதாகப் புரளிக் கிளப்பிவிட்டுத் திருடுகின்றனர்.
  6. உண்டி எண்ணப்படுகின்ற ஒரு-சில நாட்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப் பட்டுத் திருடப் படுகிறது.
  7. காவலாளி இல்லாத கோவிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவது.
  8. உண்மை நகைகளை எடுத்துவிட்டு, பொலிநகைகளை வைப்பது.
  9. அம்மன் தாலிகளை, நகைகளைத் திருடுகின்ற கூட்டம் – பொதுவாக, கிராமம், நகர்புறங்களில் முன்னரெல்லாம், அம்மன் கோவிலில் எந்தர்த் திருடனும் கை வைக்க மாட்டான். ஆனால், இப்பொழுது அதிகமாவதால், குறிப்பிட்டக் கூட்டம் அல்லது அத்தகைய மனப்பாங்குள்ள ஆட்கள் / கூட்டம் ஈடுபடுவது தெரிகிறது.

10.  சில நேரங்களில் கவலாளியைக் கொல்லவும் தயுஅங்குவதில்லை. இது திட்டம் போட்டு செய்யப்படும் கொலை, கொள்ளை என்றாகிறது.

 

புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை (ஜூலை 21,2010)[1]: புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரண்டு கோவில்களில் தங்கம், வெள்ளி காணவில்லை
கோவில் நிருவாக அதிகாரி இடை நீக்கம்
[2]: சேலம், ஜூலை 21_ சேலத்தில் 2 கோவில்களில் தங்கம்வெள்ளி காணாமல்போன பிரச் சினையில் எல்லைப் பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநில இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மாநகரில் செரிசாலையில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் உள்பட 6 கோவில்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிருவாக அதிகாரியாக சந்திரபிரகாஷ் இருந்து வருகிறார். எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி போன்றவை வங்கி லாக்கரில் வைத்து பாதுக்காக்கப்படுவது வழக்கம். அதற்கான சாவி கோவில் நிருவாக அதிகாரி வசம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கோவில் நிருவாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை நகை பதிவேட்டில் உள்ளவாறு சரியாக இருக்கிறதா? என சரிபார்த்தனர். அப்போது எல்லைப்பிடாரி அம்மனுக்கு சொந்தமான 36 பவுன் தங்கம் மற்றும் 580 கிராம் வெள்ளி குறைந்தது[3].

சின்ன மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை: இதுபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளியை சரி பார்த்தபோது அங்கும் 12 பவுன் தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணை யாளர் வரதராஜன் மற்றும் இணை ஆணை யர் ராஜா ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி காணா மல்போனது குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறை யில் கோவில் நிருவாக அதி காரியான சந்திரபிரகாஷ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புகார் கொடுத்த நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மற்றும் கோவில் நிருவாக அலுவலக உதவியாளர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் நிருவாக அதிகாரியே கவனித்து வந்தார் என விசாரணையில் தெரியவந்தது.

கோவில் அதிகாரிகளே உடைந்தையா? காவல்துறையினர் விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள மாநில இந்து அறநிலையத்துறை ஆணையாளர் பி.ஆர்.சம்பத், சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மீது துறை சார்பு நடவடிக்கையாக அவரை தற்காலிக நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.கோவில் சொத்தான தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் பொறுப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம்வெள்ளி எங்கே? போனது. அதற்கு காரணமானவர்களில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

17 Jul 2010 சிவன் கோவிலில் கலசங்கள் திருட்டு பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
www.dailythanthi.com/article.asp

 

நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு 2 கோவில்களின் கோபுர கலசங்கள் கொள்ளை ; மர்மக் கும்பல் கைவரிசை ஜூலை.17, 2010: நெல்லை, ஜூலை. 16- பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியமான இந்த கோவிலின் கோபுரத்தில் 3 கும்ப கலசங்கள் இருந்தது. இந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதால் வேண்டியது நடக்கும் என்று ஏராளமான பொது மக்கள் தினசரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பத்மநாபபட்டர் தினமும் பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தார்.  நேற்று இரவு பூஜை முடிந்து பத்மநாப பட்டர் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் மேல்புறம் பளபளப்பாக மின்னும் கோபுர கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் கோவிலின் மேல் பகுதியில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்மக் கும்பல் கோவில் மேல் ஏறி 3 கோபுர கலசத்தையும் அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கும்ப கலசத்தின் மதிப்பு தற்போது பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி முத்துராமன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் சண்முகவேல், செந்தட்டியா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று புரளி, கொள்ளை: இதுபோல தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் குலசேகரநாதர் கோவிலிலும் நேற்று சக்தி வாய்ந்த 1 கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில்தான் கும்பா பிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசத்துக்கு தங்க முலாம் பூசி உள்ளனர். இந்த நிலையில் இந்த கோபுர கலசமும் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பழமையான கோபுர கலசத்தில் அபூர்வ சக்தி இருப்பதாக கருதி இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு கும்பல் இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இசக்கி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை: அந்த கும்பலைச் சேர்ந்த வர்கள் தான் தற்போது கோபுர கலசங்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் மேற்பார்வையில் கோபுர கலச கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு மர்மநபர் அந்த கோவிலுக்குள் புகுந்தான். அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளியதோடு அம்மனுக்கு வைத்திருந்த சூலாயுதத்தையும் திருடி சென்றுவிட்டான். அதே வேளையில் அருகில் இருந்த உய்க்காட்டு சுடலை கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தென்னி மலையை சேர்ந்த வீரபெருமாள் (69), மாரியப் பன் ஆகியோர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே 2 கோவில்களில் நகை உண்டியல் கொள்ளை[4] ஜூலை 14, 2010: கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது தம்புரெட்டிபாளையம் இங்கு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் முதலில் பின்பக்கமாக கரு வறையையொட்டி உள்ள சுவரை உடைக்க முயற்சி செய்தனர். அது பலன் அளிக்காததால் கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வனா கத்தில் உள்ள பழங்கால ராட்சத மரக்கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, செயின், காப்பு போன்ற 10 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றனர். இது தவிர கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை யும் அள்ளிச் சென்றனர்.

நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவிலும் கொள்ளை: இக்கோவிலின் அருகே 100 மீட்டர் தொலைவில் நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்றனர். 2 கோவில்களிலும் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். ஒரே நாள் இரவில் அடுத் தடுத்து 2 அம்மன் கோவில் களில் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கடந்த 2 வருடத்திற்கு முன்னர்தான் தம்பிரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங் காள பரமேஸ்வரி கோவி லில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது 13 பவுன் நகையை கொள்ளை போனது குறிப்பிடத் தக்கது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சோழிங்கநல்லூர் அருகே கோவில் கலசம் கொள்ளை [5]ஜூலை.12, 2010: திருவான்மியூர், ஜூலை. 12- சென்னை சோழிங்கநல் லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை பழத்தோட்டம் பகுதியில் ஸ்ரீநிவாச பெருமாள்கோவில் உள்ளது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அவர்கள் மதில்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர்.  அங்கிருந்த கோவில் கலசம், டி.வி.டி.பிளேயர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அத்தனை பொருட்களையும் கோணிப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றினார் கள். பின்னர் மீண்டும் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது செம்மஞ்சேரி போலீசார் ரோந்து சென்று கொண்டி ருந்தனர். இதனால் கொள்ளை யர்கள் 4 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து ஆட்டோவில் தப்பினார்கள்.

அய்யனார் கோவிலில் கொள்ளை, ஜூலை. 11, 2010[6]: ஒரத்தநாடு- ஒரத்தநாடு அருகே பெருமங்கல கோவில் கீழையூரில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை செய்ய வந்தபோது கோவிலில் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பூஜை பொருட்கள் மற்றும் குத்து விளக்கு வெண்கல பொருட்கள் என சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

சூளகிரி அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை[7] ஓசூர், ஜூலை. 10, 2019 (சனிக்கிழமை): சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 50-க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து செல்வார்கள். காணிக்கை பணமும் உண்டியலில் அதிகளவில் சேரும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ கோவிலின் உண்டியலை உடைத்து கொள்யைடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிராம்பட்டினத்தில் துணிகரம் பெருமாள் கோவிலில் நகை கொள்ளை (ஜூன்.26, 2010)[8]:  பட்டுக்கோட்டை, – தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.  இதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோவில் கருவறை அருகே இருந்த 80 கிலோ எடை கொண்ட வெண்கல விளக்கு, 2 அடி குத்து விளக்கு மற்றும் அம்பாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் அதிராம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்கலசம்திருட்டு[9] ஜூன் 16, 2010: அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கண்டமானடி கோவிலில் திருட்டு Dinamalar

23 Jun 2010 கண்டமானடி கோவிலில் திருட்டு. அதிகம் படித்தவை கோவிலில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கலசத்தை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

13 Jan 2010 சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு. சிதம்பரம் : சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை
cuddalore-news.blogspot.com/…/blog-post_5697.html

ஈரோடுகோவிலில்கோபுரகலசம்திருட்டு[10] ஜூன் 9, 2010: ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

நாமக்கல் கோவிலில் கொள்ளை[11], ப.வேலூர் :மே 22, 2010:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது. இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

21-07-2010


[1] தினமலர், புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை, ஜூலை 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=44176

[2] http://www.viduthalai.periyar.org.in/20100721/news13.html

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=581642&disdate=7/21/2010&advt=2

[4] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/14125553/gold-robbery-in-Gummidipoondi.html

[5] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/12131716/robbery-in-temple.html

[6] மாலைமலர் நாளிதழ் , சென்னை 21-07-2010 (புதன்கிழமை)

http://www.maalaimalar.com/2010/07/11134707/temple.html

[7]மாலைமலர்,  http://www.maalaimalar.com/2010/07/10161958/mariamman-temple.html

[8] மாலைமலர், சென்னை 26-06-2010 (சனிக்கிழமை), http://www.maalaimalar.com/2010/06/26160958/gold-robbery-in-tanjore.html

[9] http://thinamalar.net/News_Detail.asp?Id=20089

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=15488

[11] தினமலர், http://www.dinamalar.com/News_Detail.asp?id=7828

நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்

ஜூலை16, 2010

நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்

கோவில்களைப்பற்றி இன்று யார்-யாரோ கவலைப்படுவது வினோதமாக இருக்கிறது! இந்துக்களைப் பற்றி அவதூறு பேசுவது, தூஷிப்பது, அவர்களுடைய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் முதலியவற்றைக் கேவலமாக, ஆபாசமாக, அசிங்கமாக பேசுவது, மத-நூல்கள்-வேதம், உபநிஷத்,வேதாந்தம் முதலியவற்றைப் படித்துப் பார்க்காமலேயே எல்லாம் தெரிந்தது போல விமர்சிப்பது[1], குறைகூறுவது ஏன் குற்றாஞ்ச்சாட்டுவது, அடிப்படை ஞானம் கூட தெரிந்து கொள்ளாமல், அதிகப்பிரசங்கித்தனமாக மாமேதைப் போல பேசுவது-எழுதுவது[2], என்ற நிலையில் தமிழகத்தில் அடிகமான அறிவு ஜீவிகள் உள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால், தமிழ்-தமிழர்கள் என்ற போர்வையில், இந்திய-விரோதிகள் இணைத்தளங்களில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதும் தொடர்ந்த்கு நடந்து வருகிறது. அந்நிலையில் அவர்களுடைய ஆர்வம், பரிவு, கவலை, அக்கரை முதலியன கோவில்களின்மீது திரும்பியிருப்பது ஆன்மீக மர்மமாக, திராவிட ரகசியமாக, தமிழ்ப்புதிராக உள்ளது எனலாம்.

கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்: இடைக்காலத்தில் முகமதியர்கள், 16-17 நூற்றாண்டுகளில் ஐரோப்பியல்க் கிருத்துவர்கள், 19 நூற்றாண்டில் இருவரும் சேர்ந்து செயல்பட்டது, 20ம் நூற்றாண்டில் சித்தாந்த ரீதியில் இணந்து செயல்பட்டது, இப்பொழுது  குறிப்பாக இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். காலம் மாறியதால் ஆயுதங்கள், முறைகள், வழிகள், உடைகள், பேச்சசுகள், எழுத்துகள் முதலியன மாறியுள்ளன –

  • நாத்திக கோஷ்டிகள் (திராவிடம், தமிழ், ஸ்ரீலங்கைத் தமிழர் என்றேல்லாம் கொடிபிடித்துக் கொண்டு அலையும் கூட்டங்கள்)
  • கிருத்துவக் கூட்டங்கள் (மனித-உரிமைகள், பெண்கள்-உரிமை, சிறுவர்-உரிமை…………..என்ற பல போர்வையில் வேலை செய்யும் முழுக்கள்)
  • முஸ்லீம் இயக்கங்கள் (அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத, ஜிஹாதி கோஷ்டிகள்)
  • கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் (சீனா, ருஷ்யா மற்ற நாடுகளின் அடிவருடிகளாக இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் தேசவிரோதிகள்)
  • மாவோயிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே முகமூடிகளை அணிந்துகொண்டு வேலைசெய்யும்)
  • செக்யூலரிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே வேலைசெய்யும், ஆனால், கொஞ்சம் படித்தவர்கள் போலக் காட்டிக்கொண்டு கழுதை அறுக்கும் நயவஞ்சகர்கள்)

இதில் வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனர்களும் இதில் இருப்பார்கள். அவர்களை மற்றவர்கள் மனதிற்குள் கருவிக்கொண்டிருந்தாலும், வெளியில் மதிப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். சமீபத்தில் வரதராஜனுக்கு நேர்ந்த கதியை இங்குக் குறிப்பிடலாம்[3].

நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு (ஏப்ரல் 11,2010)[4]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக் கோரி, ஏழைகள் முன்னேற்றக் கழகம்[5] சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[6]. சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஏழைகள் முன்னேற்றக்கழக மாநில பொதுச் செயலர் அர்ச்சுனன், உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி[7] தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ‘நந்தனார் தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து விட்டனர். எனவே, ஆதிதிராவிட, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என கூறியுள்ளனர்[8]. இப்படியெல்லாம் “ஐடியா” கொடுப்பது யார் என்று பார்த்தால் இவர்களுடைய சித்தாந்தம் எல்லாம் வெளுத்துவிடுகிறது. ஏனெனில், அடிப்படையில் உள்ள சட்டநிலைக்கூட தெரியாமல் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறிக்கொள்வது வேடிக்கைத்தான்.

நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது (ஜூலை 15,2010): சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் நுழைவு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன் உள் ளிட்ட 473 பேர் கைது செய்யப் பட்டனர்[9]. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப்பதை கண்டித்து, தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் செல்லும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி[10]யினர் அறிவித்தனர்.

சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்[11]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக[12] இன்று புதன்கிழமை (14-07-2010) ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய நுழைவு போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் நடந்த பாதை தற்போது அடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலை நாட்டும் வகை யிலும் தீண்டாமையின் அடையாளத்தை அகற்றும் வகையிலும் நந்தனார் நடந்து சென்ற அந்த பாதையின் வழியாக பெருந்திரளான மக்கள் புதனன்று ஆலய நுழைவு நடத்திட உள்ளனர். இந்த எழுச்சிமிகு இயக்கத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பால கிருஷ்ணன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பங்கேற்றக் கூட்டங்கள், நபர்கள், அவர்களின் பின்னணி: அதன்படி நேற்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகில் இருந்து –

  • மாநில தலைவர் சம்பத் தலைமையில்
  • பெரம்பூர் எம்.எல்.ஏ., மகேந்திரன்,
  • விவசாயிகள் சங்க செய லாளர் பாலகிருஷ்ணன்,
  • மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர்கள் தனசேகரன்,
  • மூசா,
  • மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,
  • தீண்டாமை ஒழிப்பு மாவட்ட அமைப்பாளர் துரைராஜ்,
  • தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்,
  • அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ஸ்ரீரங்கன் பிரகாஷ்,
  • மனித உரிமை கட்சி விஸ்வநாதன்

உள்ளிட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களை நடராஜர் கோவில் தெற்கு வாயிலில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தீர்வு ஏற்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தெற்கு வீதியில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள் உள்ளிட்ட 473 பேரை போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த பிரச்சினையைப் பற்றி மற்றவர்களும் விவாதிக்கின்றது வியப்பாக உள்ளது[13]. இனி அவர்களுடைய சார்புடைய தளத்தில் காண்ப்படுவதைக் காண்போம்.

சிதம்பரம் நந்தன் நடந்த பாதையைத் திறக்க போராட்டம்- 600 பேர் கைது: சிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி புத னன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடை பெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக்கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத் தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு கோபுர வாயில்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன், நடராசரை தரிசிக்க தெற்கு கோபுர வாயில் அருகே உள்ள வழியில் சென்றார். அந்தணர்கள் அன்று, ஆலயம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி நந்தனை தீக்கிரையாக்கி, பின்னர் அவர் நெருப்பில் இறங்கி தன்னை புனிதப் படுத்திக்கொண்டு நடராச ரோடு ஐக்கியமாகிவிட்டதாக கதை கட்டி விட்டனர். மேலும், நந்தன் சென்ற வாயில் கதவை மூடி, அதன் பின்னணியில் சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர். தீண்டாமைக் கொடு மையின் மூலஸ்தானம்போல் இருக்கும் இந்தச் சுவரை இடித்து, கதவைத் திறக்க, ஆலயத்தை தனது பொறுப் பில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதனன்று போராட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத் திருந்தது.நகரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலிருந்து, பேரணி புறப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணிக்கு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் தலைமை தாங்கினார். தடுப்புச்சுவரை அகற்றக்கோரி ஊர்வலமாகச் சென்றவர்கள், தெற்கு கோபுர வாயில் அருகில் வந்தபோது காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கே கயிற்றுத் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. சிறிது நேரம் அங்கே பதட்டமான சூழல் உருவானது. பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்தனர்.

மூசா, சாமுவேல் முதலியோருக்கு இதில் என்ன சம்பந்தம்? பின்னர், கோட்டாட்சி யர் ராமராஜ், வட்டாட்சியர் காமராஜ், செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில்[14] உயர் அதிகாரிகள்[15] யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[16]. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் தடுப்புச் சுவர் அகற்றப்படுவது குறித்து வாக்குறுதி எதுவும் அளிக்க மறுத்தனர்[17]. இதனால், அதிருப்தி அடைந்த ஊர்வலத்தினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றது. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியின் தலைவர்களையும், தொண்டர்களை யும் காவல்துறையினர் கைது செய்தனர். 60 பெண் கள் உட்பட சுமார் 600 பேரை கைது செய்தனர்.

சம்பந்தமேயில்லாத ஆட்களின் போராட்டம் விஷமத்தனமேயன்றி நன்மைக்காக இல்லை: இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், பி. செல்வசிங், பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் எஸ். தனசேகரன், மூசா, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன், அம்பேத்கர், இந்திய குடியரசு கட்சி சார்பில் அ.த.ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட்சியின் எல்.ஆர்.விஸ்வநா தன், ஆதி தமிழர் பேரவை மாநில தொண்டரணி தலைவர் வீரமுருகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.துரைராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

“சுவரை அகற்றுவோம்” –சுவர்களை அகற்றுவோம் என்றால், பிறகு சுவர்களே எங்குமே தேவையிலையே: நடராசர் ஆலயத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவரை அரசு அப்புறப்படுத்தாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியே அதனை அப்புறப்படுத்தும் என்று பி. சம்பத் கூறினார். சிதம்பரத்தில் நடை பெற்ற போராட்டத்தை யொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நந்தனார் சென்ற தெற்குவாயில் தீட்டுப்பட்டு விட்டது என்று ஆதிக்க சக்தியினரால் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெட்கக் கேடானது. இதை அப்புறப்படுத்தக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்துகிறோம்,” என்றார். கே. பாலகிருஷ்ணன் போராட்டம் பற்றி கூறுகையில், “சாதிக் கொடுமைக்கு உள்ளான நந்தனார் ஆலயத்தில் நுழைந்தான் என்ற காரணத்திற்காக அடைத்து வைப்பது, அறுசுவை உணவின் நடுவே மலத்தை அள்ளி வைப்பது போன்றதாகும்,” என்றார். “புனிதமான நடராசர் ஆலயத்தில் தீண்டாமையின் கோரவடிவமாக சுவர் நீடிப்பது அவமானத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசு அப்புறப்படுத்தவில்லை என்றால் தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை நாங்களே அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்”, என்றும் அவர் கூறினார்.

“நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக” செல்கிறார்களா மாலிக்காஃபூர் பாதையில் செல்கிறார்களா?: நந்தன் / நந்தனார் / நாயன்மார் ஒரு மாபெரும் சிவபக்தர். ஆனால், இவர்கள் எல்லோரும் யார்? கிருத்துவர்கள், முஸ்லீம்கள், நாத்திகர்கள், இந்திய-விரோதிகள், இந்து-விரோதிகள், தமிழ்-துரோகிகள் இப்படியுள்ளனர். கோவில்களை இடிக்கும், கொள்ளயெடிக்கும் கூட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதாவது அந்த ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள், ஜீஜன்பால்குகள், பெஸ்கிகள், கால்டுவெல்கள் முதலியோரையும் மிஞ்சும் வகையில் உள்ளனர். ஆக, இவர்கள் உள்ளே நுழைந்தால் என்னா ஆகும்?

நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம்[18] (ஜூலை 15,2010): சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது[19]. உண்டியல் வருமானம் அதிகரித்ததால் கோவிலில் அடுத்தடுத்து பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. ஐந்தாவது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி உண்டியல் திறந்தபோது, 2009 வரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வருமானம் கிடைத்தது[20]. நேற்று எட்டாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் எண்ணினர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது. கோவில், அரசு கட்டுப்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில், உண்டியல் மூலம் மட்டும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (வெளிநாட்டு கரன்சி மற்றும் வெள்ளி, தங்க நகைகள் போக) வருமானம் கிடைத்துள்ளது.

மாலிக்காஃபூர் பாதை செல்ல திட்டமா, சதியா? ஆக ஒருவேளை இதை மனதில் வைத்துக் கொண்டுதான் மாலிக்காஃபூர் போல அதே பாதையில் உள்ளே செல்வோம் என்று மிரட்டியதும் அந்த ஔரங்கசீப்பே நடவடிக்கை எடித்துவிட்டான் போலும்! ஒன்று ஒன்பதாக ஆகும்போது, வரும்படியும் அதிகமாகத்தானே ஆகும். இனி கோவில் பணத்தை நாத்திக அரசு எவ்வாறெல்லாம் உபயோகிக்கும் என்று யாருக்குத்தெரியும்?

வேதபிரகாஷ்

16-07-2010


[1] தமிழகத்தில் பெரும்பாலான பேச்சாளர்கள், எழுத்தாளர்களிடையே இந்த போக்கு உள்ளது. மாநாடுகளில், கருத்தரங்களில் மனுஸ்மிருதியைப் பற்றி அளந்து கொட்டுவர், ஆனால் எத்தனையாவது சுலோகத்தில் அது உள்ளது என்று கேட்டால் முழிப்பார்கள்; எந்த மூலத்ட்தைப் படித்தீர்கள் என்றால், இது எல்லொருக்கும் தெரிந்த விஷயம்தானே என்பார்கள். ஆக மூலத்தைக் கூடப் படிக்காமல் அல்லது அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளமால், தொடர்ந்து அரைத்தமாவையே அரைத்துக் கொண்டு 40-60 ஆண்டுகளைக் கழித்து வருகிறார்கள்.

[2] அம்பேத்கர் புத்தகங்களைப் படிக்காமல், மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு அல்லது இரண்டாம்தர எழுத்துக்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்துமதத்தை விமர்ஷிக்கும் போக்கு கேவலமானது.

[3] இதைத் தவிர பல ஐயர்கள் மாட்டியுள்ளர்கள். அவற்றைப் பற்றிய செய்திகளும் வந்துள்ளன, சில மறைக்கப்பட்டுள்ளன.

[4] இதே நடவடிக்கை-முறை சிதம்பரம் கோவில் அறத்துறைக்குள் வருவதற்கும், ஆறுமுகசாமி போர்வையில் நடந்தேரியுள்ளதை காணலாம்.

[5] இப்படி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இயக்கங்களின் பின்னணி “ஏழைகளாக” இல்லை, கிருத்துவர்கள்தாம் உள்ளனர்.

[6] தினமலர், நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23942

[7] ஏதோ பல இயக்கங்கள் உள்ளது மாதிரியும், அவற்றின் ஒட்டு மொத்தமான பிரதிநிதிகளின் பிரதிநிதியே இவர்கள்தாம் என்ற பொலித்தனத்துடன் செயல்படும் போக்கு. இதை தெய்வநாயகம் செயல்பாட்டில் காணலாம்.

[8] பல கோவில்களின் நான்கு பிரதான கதவுகளில் ஒன்று அல்லது இரண்டுதான் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது சாஸ்திரங்களுக்கு விரோதமானது என்றாலும், பாதுகாப்பு என்று அடைத்துவைத்துள்ளர்கள். மதுரை போன்ற கோவில்களில் உண்மையான பக்தர்கள் உள்ளே நுழௌயவே, ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்கிறார்கள். ஆகவே, இவ்வழக்கு கருப்பு-சிவப்பு-பச்சைப் பரிவாரங்களின் கூட்டுச்செயலாகத் தெரிகிறது.

[9] தினமலர், நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.., உள்ளிட்ட 473 பேர் கைது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39956

[10] தமிழ்நாட்டில் எத்தனை முன்னணிகள் உள்ளன என்று பார்த்தால் தெரிந்து விடும், இவர்களின் தோத்ற்ற்ம், பதிவு, செயல்பாடு, பணப்போக்குவரத்து முதலியன.

[11] http://inioru.com/?p=15047

[12] அதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா என்று தெரிவவில்லை. பெரியபுராணத்தை ஒழுங்காக தமிழில் படித்து அர்த்தம் தெரிந்து கொண்டிருந்தால், இவ்வாறான தமாழாக்கள் எல்லாம் செய்யமாட்டார்கள்.

[13] http://thamilislam.wordpress.com

[14] இந்து சமய அறநிலையத்துறை ஒன்றும் இந்துக்களுக்காக செய்படுவதில்லை. ஆக, இந்துக்களின் கோவிலைப் பற்றி இப்படி மற்றவர்கள் எல்லோருமே மூக்கைநுழைத்துக் கொண்டு வந்துள்ளது வேடிக்கைதான்.

[15] இதிலென்ன “உயர் அதிகாரிகள்”, “தாழ் அதிகாரிகள்” என்ற பேதமெல்லாம்? சித்தாந்த குழப்பவாதிகள் என்று அவர்களது எழுத்துகளிலேயே தெரிகிறது. மேலும், துறையே இந்து-விரோதமாக செயல்பட்ம்போது, அதிகாரிகள் வெறும் கைப்பாவைகளே.

[16] இங்கு தெய்வநாயகம் போக்கு, திட்டம், செயல்முறை முதலியன அப்படியே வெளிப்படுகிறது, அதாவது அந்த கபாலீஸ்வரர் நுழைவு போராட்டம் என்கின்ற கிருத்துவ-நாத்திக விஷமிக் கூட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது.

[17] இவர்கள் என்ன, இந்திய சமுதாயத்தினர் ஒட்டுமொத்த பிரதிநிதிகளா, காவலர்களா, யார்? திடீரென்று இப்படி பெயர்களை வைத்துக் கொண்டு, கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு, ஒட்டுமொத்தமாக எல்லா இந்தியர்களையும், இந்துக்களையும் ஏமாற்றிவிடமுடியுமா?

[18] நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம், ஜூலை 15,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39584

[19] கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக நடராஜர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியல் வைக்கப்பட்டது.

[20] கடந்த மார்ச் 10ம் தேதி ஆறாவது முறையாக உண்டியல் திறந்ததில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாயும், ஏழாவது முறையாக மே 13ம் தேதி திறந்தபோது 4 லட்சத்து 17 ஆயிரத்து 751 ரூபாய் இருந்தது.

தீட்சிதர்களும்: கல்வெட்டு, செப்பேடுகள் பெயரில் திராவிடப் புரட்டு!

ஜனவரி2, 2010

தில்லையும் தீட்சிதர்களும்: கல்வெட்டு, செப்பேடுகள் பெயரில் திராவிடப் புரட்டு!

Viduthalai-Pulavar Rasu.1

தில்லையும் தீட்சிதர்களும்

கட்டுரை ஆக்கம்: புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி., முன்னாள் தலைவர், கல்வெட்டியல் – தொல்லியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தொலைபேசி: 0424 2262664.

http://viduthalai.periyar.org.in/20100102/snews07.html

“புலர்” இல்லை “புலவர்” ராசு, பாவம், என்ன கோபமோ, அவரை “புலர்” ஆக்கிவிட்டனர்! கருப்பில் இருப்பது “விடுதலையில்” வெளிவந்தது. சிவப்பில் இருப்பது என்னுடைய “கமென்ட்ஸ்” / விமர்சனம்.

தில்லை மரங்கள் அடர்ந்த வனம் நகராக மாறியபின் ஊருக்கும் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. தில்லை-யில் அமைந்த கோயில் சிற்றம்பலம் என்று பெயர் பெற்றது. சிற்றம்பலம் என்ற பெயரே மருவி சிதம்பரம் என்றாகி ஊருக்கும் அதே பெயர் அமைந்துவிட்டது. மதுரை மாநகரில் உள்ள கோயில் பெயர் ஆலவாய் என்றே முன்னாளில் அழைக்கப்பட்டது.

சோழ மன்னர்கள் சிற்றம்பல நடராசரை தங்களின் குலதெய்வம் என்பர். அவர்கள் தன் குல நாயகன் தாண்-டவம் பயிலும் தில்லையம்பலம் பொன் வேய்ந்தனர். முதலாம் ஆதித்த சோழன் கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் என்று அதனால் புகழப்பட்-டான். சைவர்கள் இயல்பாக அடை-மொழி எதுவும் இல்-லாமல் கோயில் என்றே சிதம்-பரத்தை அழைத்தனர். இரணிய-வர்மன் என்ற மன்னன் முதல் முதல் கோயில் கட்டினான். பின் வந்த தமிழக அரசர்கள், வள்ளல்கள், பொது-மக்கள் எனப்பலரும் கோயிலை விரிவாகக் கட்டினர் என்று நூல்கள் கூறுகின்றன.

தமிழக மண்ணில் சிற்பிகளான தமிழர்களால் தமிழ் மக்களுக்கென்று உருவாக்கப்பட்டுத் தமிழில் வழிபாடு நடத்திய தில்லைச் சிற்றம்பலத்தில்-தான் பாரம்பரியத் தொடர்பு ஏதும் இல்லாத ஒரு கூட்டத்தால் இன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோயில் சொத்துக்கள், நிலங்கள், விலை-யுயர்ந்த அணிகலன்கள், சில தனியார் வசம் போகக்கூடாது என்ற எண்ணத்-தால்தான் பெரிய கோயில்களின் நிருவாகத்தை அரசு மேற்கொண்-டுள்ளது. தமிழ்நாட்டில் திருவரங்-கம், பழனி, மதுரை, திருச்-செந்தூர்க் கோயில்கள், கேரள அய்-யப்பன் கோயில் குருவாயூர்க் கோயில், ஆந்திரத்தில் திருப்பதிக் கோயில் போன்றவை அரசு நிர்வாகத்தில்தான் உள்ளன. மிகத் தாமதமாகவே தீட்சிதர்கள் வசம் இருந்த சிதம்பரம் கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டது. இதை எதிர்த்துத் தீட்சிதர்கள் வழக்கு மன்றம் சென்-றுள்ளனர். சிதம்பரம் கோயில் தங்கள் வசம் அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடுகின்றனர்.

Viduthalai-Pulavar Rasu.2

பண்டைக்கால வரலாறு என்ன சொல்லுகிறது என்று கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்வு செய்து சான்றுகள் அடிப்படையில் இக்-கட்டுரை எழுதப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் [கிழே கொடுக்கப்பட்டுள்ள காலம் கி.பி. 1888 முதல் 1963 வரை என்றுமே சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் நிருவாகத்தில் இருந்ததில்லை என்றே தெரிவிக்கின்றன.

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ்நாட்டு மன்னர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், வள்ளல்-கள், பொதுமக்கள் கொடைகொடுத்த கல்வெட்டுகள் பல உள்ளன.

315 கல்வெட்-டுகள் சிதம்பரம் கோயிலில் படி எடுக்கப்பட்டுள்ளன. 20_க்கும் மேற்-பட்ட சிதம்பரம் கோயில் செப்-பேடுகள் உள்ளன. அவை காலந்-தோறும் நடைபெற்று வந்த நிர்வாக முறையை நமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

இடைக்காலச் சோழர், பாண்டியர் பேரரசுக் காலத்திலும், விசயநகர அரசர்கள் காலங்களிலும், போசளர் [கன்னடக்காரர்], நாயக்கர் [தெலுங்கர்], மராட்டியர் [மராத்தியர்] ஆட்சிக் காலத்-திலும் அந்தந்த அரசு அலுவலர்களே கோயிலின் அனைத்து நிர்வாகத்-தையும் அரசுக்காக மேற்கொண்டுள்-ளனர் [இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையே!]. ஸ்ரீ மகேசுவரக் கண்காணி செய்வார், கோயில் நாயகம் செய்வார், திரு-மாளிகைக் கூறு செய்வார், ஸ்ரீ கார்யம் செய்வார், சமுதாயம் செய்வார், கோயில் கணக்கர் முதலிய பல அலுவல் பெயர்களைக் கல்வெட்-டில் காணு-கிறோம். இவர்கட்கே அரசர், அலுவ-லர்-கள், சபையார், நாட்-டார் -ஓலை (கடிதம்) அனுப்பியுள்-ளனர். இவர்கள் யாரும் சிவப்பிரா-மணரோ, தீட்சிதர்-களோ இல்லை என்பது குறிப்பிடத்-தக்கது.

கோயில் பூசை செய்வோர் [அவர்களுக்கு பெயர் இல்லையா?] கோயில் நிர்வாகிகளிடமிருந்து அன்பர்களின் அறக்கொடைகள் மூலம் வரும் பிராமண போசனம், தளிகை, சட்டிச்சோறு, பிரசாதம் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தியுள்-ளனர்.

கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை [மாலிக்காஃபூரின் கொடுமைகளை ராசு ஏன் சொல்லவில்லை? ஒருவேலை அவர் எழுதியதை விடுதலைக்காரர்கள் நீக்கிவிட்டனரா? பொன்வேய்ந்தது பற்றியும், அதனை கொள்ளயடித்தது பற்றியும் மௌனமாக இருப்பது வியப்பான விஷயமே]. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார் [பாருங்கள், நாத்திகத்தின் போலித்தனத்தை! நடசாசர் என்ன கோவிலைவிட்டு நடந்தே சென்றாரா? இங்கு ஏன் பகுத்தறிவு தூங்குகிறது, துலுக்கனின் கோரக்கொடூரங்களை மறைக்க இப்படி கதை விடுகிறர்களா? புளியமரப் பொந்து என்றால் துலுக்கபுக்கு பயமா?இல்லை]. இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார் [ஏன் தமிழன் கூப்பிட்டால் நடராசர் வரமாட்டாரா, தெலுங்கன்தான் கொண்டு வரவேண்டுமா?]. இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).

Viduthalai-Pulavar Rasu.3

திருவாவடுதுறை ஆதின வரலா-றாகிய அரசவனத்து அறநிலையம் என்ற நூலிலும் இவ்விவரம் கூறப்-பட்டுள்ளது (பக்கம் 43). கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

கி.பி.17_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் 1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார். கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது [ஆஹா, பாவம் இங்கு ஒப்புக் கொள்கிறார், தெலுங்கர்கள் தாம் என்று].

பீஜப்பூர் சுல்தான் படைத்-தலை-வர்கள் படையெடுப்பின் போது பாது-காப்புக் கருதி அன்பர்கள் சிதம்பரம் நடராசரை 24.12.1648 அன்று குடுமியாமலைக்கு எடுத்துச் சென்றனர்.[அதென்ன நடராசருக்குத் தன்னைக் காத்துக் கொள்ளத் தெரியாதா? துலுக்கனுக்கு என்ன அப்படி நடராசனின் மீது ஆசை? யாரந்த அன்பர்கள், நடராசனை எடுத்துச் சென்றது?]. குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார் [அதெப்படி மூன்று வருடங்கள் மேலே அங்கிருந்தார்! அப்பொழுது, யார் பூசை செய்தது? யார் காத்தது?]. அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர் [அதெப்படி, துலுக்கன் அங்கும் வந்துவிடாடானா?]. 1647 ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்தும் சிதம்பரம் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக மக்கள் குடிப்பெயர்ச்சி ஏற்பட்டபோது நடராசர் இடம் மாறுதல் செய்யப்-பட்டார் என்ற கருத்தும் உண்டு [ஆஹா, இப்படியும் ஒன்று உண்டுபொல இருக்கிறது. ஏன் இந்த கதையை எந்த கல்வெட்டோ-பட்டயமோ சொல்லவில்லையா?].

அப்போது செஞ்சியிலும், தஞ்சை-யிலும் மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. செஞ்சியில் ஆட்சி செய்தவர் வீர சிவாசியின் மூத்த மகன் சாம்பாசி. பறங்கிப் பேட்டை மராட்டிய அலுவலர் கோபால தாதாசி வேண்டிக் கொள்ளவே சாம்பாசி தஞ்சையில் ஆட்சி செய்த தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார் [இந்த மரத்தியரைத் தான் கோவிலைவிட்டு வெளியெஏறு என்று தமிழ் பெரியரில் ஒரு கூட்டம் ரகளை செய்கிறது. அதைத் தட்டிக் கேட்க எந்த தமிழனிஉக்கோ, சைவனுக்கோ துப்பு இல்லை]. இப்பணியை மேற்கொண்டு நடராசரை 21.11.1684 இல் சிதம்பரம் கொண்டு வந்து மீண்டும் எழுந்தருளச் செய்து குடமுழுக்கு விழாவையும் நடத்தியவர் சிதம்பரம் திருச்சிற்றம்பலத் தவமுனிவர் என்பவர். (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது. கிஸீஸீணீறீ ஸிமீஜீஷீக்ஷீ ஷீயீ ணிஜீவீரீக்ஷீணீஜீலீஹ் 21–_23 ஷீயீ 1947)

கி.பி.1702_ஆம் ஆண்டு சிதம்பரம் கோயில் நிரு-வாகியாக இருந்து திருப்-பணி, வழிபாடு முதலிய-வைகளை மேற்பார்வை செய்தவர் பாதபூசை அம்-பலத்தாடும் பண்-டாரம் என்பவராவார்.

21.1.1711 அன்று சிதம்பரம் கோயில்-களின் நிருவாகியாக வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவர் இருந்த-போது சிதம்பரம் கோயிலைச் சேர்ந்த புதுமடத்தில் வழிபாட்-டுக்காக சீர்காழிச் சீமை ஏழு மாகாணத்தார் மற்றும் பெரிய வகுப்பு, சிறிய வகுப்புகளைச் சேர்ந்த குடி-யானபேர் அனைவரும் நெல் கொடையளித்தனர். இதற்காக எழுதப்-பட்ட செப்பேட்டில் நடராசர் சிவகாமியம்மை உருவத்துடன் வேளூர் அம்பலவாணத் தம்பிரான் பெயரையும் உருவத்தையும் பொறித்-துள்ளனர்.

31.12.1747 அன்று பரங்கிப்-பேட்-டையைச் சேர்ந்த ஊரவர், வர்த்தகர், புடவைக்காரர், நீலக்காரர், மளிகைக்-காரர் [இவர்கள் எல்லாம் யார் என்று ஏன் குறிப்பிடப்படவில்லை] முதலிய அனைவரும் சிதம்பரம் கோயிலில் நிர்வாகியாக இருந்து, ஆயிரங்கால் மண்டபம், நாலு கோபுரம், பஞ்சாட்சர மதில் ஆகியவைகளைத் திருப்பணி செய்த சண்முகத்தம்பிரான் என்பவரிடம் கொடை கொடுத்தனர். அதே நாளில் பறங்கிப்பேட்டையில் வணிகம் செய்த ஆலந்து நாட்டைச் சேர்ந்த வணிகர்களும் (உலாந்தா கம்பெனி) சண்முகத் தம்பிரானிடம் மகமைக் கொடை கொடுத்துள்ளனர் [அதாவது ஐரோப்பியருடன் வியாபாரம் செய்து கொழுத்த பணம் / லாபம் சம்பாதித்த வணிகர்கள் அவ்வாறு கொடை கொடுத்தனர்].

முத்தையத் தம்பிரான் என்பவர் நெடுங்காலம் திருப்பணி செய்யப் பெறாமலிருந்த இராசசபையைத் திருப்பணி செய்தார். பெரும் பொருட்-செலவில் நிருவாகி முத்தை-யத் தம்பிரான் திருப்பணிக்குத் தில்லை மூவாயிரவர் தினம் அரக்கால் காசு, கொடுத்த விவரம் ஒரு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில் நிருவாகமும் திருப்பணியும் தீட்சிதர் வசம் இல்லை என்பது தெரிகிறது [அதாவது நேரிடை அத்தாட்சிகள் / ஆதரங்கள் எதுவும் இல்லை, எல்லாமே மறைமுக குறிப்புகள்தாம். அவற்றை வலியப் பொருள்கொண்டு ராசுத் தருகிறார் என்று நன்றாகவே தெரிகின்றது]. மேற்கண்ட செய்திகள் கூறும் நான்கு செப்-பேடுகள் திருப்பனந்தாள் காசி-மடத்தில் உள்ளன. இதேபோல் சிதம்-பரம் கோயிலுக்குரிய பத்துச் செப்பேடுகள் திருவாரூர்க் கோயிலில் உள்ளன. இச்செப்பேடுகள் எதுவுமே தில்லை தீட்சிதர்களிடம் இல்லை என்பதால் அவர்கட்குத் திருப்பணி-யிலும் நிர்வாகத்திலும் அக்காலத்தில் பங்கு இல்லை என்பது தெளிவா-கிறது. அரியலூர் மழவராயரி-டமும் சில சிதம்பரம் செப்பேடுகள் உள்ளன.

சிதம்பரம் கோயில் வழிபாடு, விழாக்களில் பங்கு பெறவும், விழாக்-களுக்கு வரும் அடியார்கட்கு உதவிகள் செய்யவும் சிதம்பரத்தில் புதுமடம், நாற்பத் தெண்ணாயிரவர் மடம், அம்பலப் பெருந்தெரு திருநாவுக்கரசு தேவன் திருமடம், அறுபத்து மூவர் மடம், அம்பலத்தடிகள் மடம், கந்ததேசிகள் மடம், முதலிய பல மடங்கள் இருந்தன, எப்போழுதுமே இம்மடங்களில் உப்பு, ஊறுகாய், நீராகாரம் வழங்கப்பட்டது. குழந்தை-கட்குப் பாலும், தலைக்கு எண்ணெய்யும் வழங்கப்பட்டது. அன்னதானம் நடை-பெற்றது. அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்பது தேவாரத் தொடர்.

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது [அதெப்படி திட்டிரென்று பிச்சாவரம் ஜமீந்தார்கல் வந்து முளைத்தார்கள்? இங்கு எதையோ மறைக்கிறார் ராசு]. சாமிதுரை சூரப்ப சோழனார், தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், ஆண்டியப்ப சூரப்ப சோழனார் ஆகியோர் சிதம்பரம் கோயில் நிர்வாகி-களாக இருந்துள்ளனர். அவர்கள் வீட்டு ஆவணங்கள் இதைத் தெரிவிக்-கின்றன [இவை வெளியிடப்பட்டவையா இல்லையா?].

கோயில் அணிகலன்களும், சாவியும் பிச்சாவரம் சமீன்தார் வசமே இருந்தன. கோயிலில் அர்த்த சாம பூசை முடிந்த பின் தீட்சிதர்கள் கோயிலைப் பூட்டிச் சாவியைப் பல்லக்கில் வைத்துக் கொண்டுசென்று பிச்சாவரம் சமீன்-தாரிடம் ஒப்படைப்பர். அதுபோல் அதிகாலையில் சென்று சாவியை வாங்கி வருவர்.

தீட்சிதர்களிடையே வழக்கு ஏதேனும் ஏற்பட்டால் பிச்சாவரம் சமீன்தார் தீர்த்து வைப்பார். 5.11.1911 அன்று தில்லை தீட்சிதர்கள் பன்னிரண்டு பேர் சேர்ந்து எழுதிய கடிதம் ஒன்றில் மகா.ரா.ரா.ஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்றே சமீன்தாரைக் குறிப்பிட்டுள்-ளனர்.

தேவாரம் பாடிய மூவர் தாங்கள் பாடிய 11 பதிகங்களில் தில்லை இறை-வனைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். தில்லைக்கூத்தன் காலிங்கராயன் என்பவர் எல்லாத் தேவாரப் பாடல்-களையும் செப்பேட்டில் பொறித்துச் சிதம்பரம் கோயிலில் வைத்தார். ஆனால் மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர் [செப்பேட்டில் உள்ளதா, இல்லை ராசுவே கதைவிடுகிறாரா? ஏன் செப்பேடு எண் முதலியக்  குறிப்புகளைக் குறிப்பிடாமல் எழுதுகிறார்? முதலில், இதுவரை இல்லாத இந்த தமிழ்-வடமொழி பிரச்சினை எங்கிருந்து வந்தது?].

சேக்கிழார் பெரியபுராணம் பாட உலகெலாம் என்ற முதற்சொல்லை அடியெடுத்துக் கொடுத்தவர் சிதம்-பரம் நடராசர் என்பது மக்கள் நம்-பிக்கை. ஆனால் சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தில் சேக்கிழார் விழாவை அரசு நடத்துவதைத் தீட்சிதர்கள் தடுத்தனர் [இதென்ன இப்படி விவரம் தெரிந்த ராசு குழப்புகிறார்? ஏனெப்படி காலநிலையைக் கொலைசெய்கிறார்?].

ஆனந்தத் தாண்டவமாடும் நடராசர் கோயிலில் நாட்டியாஞ்சலி நடத்தத் தடை விதித்தனர். அத்தடைகளை-யெல்லாம் உடைத்து தமிழக அரசு சிதம்பரம் கோயிலை இன்று நிர்வகித்து வருகிறது [இதுவும் கால முரண்பாடு, திரித்து விளக்கம் அளிக்கும் போகுத் தெரிகிறது]. தமிழ்நாட்டுப் பக்தர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தமிழக அரசின் நிர்வாகத்தை நீக்க தீட்சிதர்கள் நீதிமன்றப் படியேறுகின்றனர். இதைப் பஞ்சாட்சரப் படிக்கு மேல் பக்தர்கட்குக் காட்சியளிக்கும் நடராசர்கூடப் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

Viduthalai-Pulavar Rasu.4

சில ஆண்டுகட்கு முன் சிதம்பரம் கோயில் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா_ தீட்சிதர்களுக்கா? என்ற கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடைபெற்றது. அருட்செல்வர் நா. மகாலிங்கம், ம.பொ.சி, நீதியரசர்கள் கிருஷ்ணசாமி ரெட்டியார், சதாசிவம், முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு, பேராசிரியர் வெள்ளைவாரணம், அன்புகணபதி போன்ற பலர் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருமனதாக மக்க-ளுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில, மத்திய அரசுக்கு அனுப்பினர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முத்துசாமி சிதம்பரம் கோயில் மக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டியுள்ள-னர். நிர்வாகத்தில் என்றும் தீட்சி-தர்கட்குப் பங்கு சிறிதும் இல்லை, பூசை செய்வது மட்டுமே அவர்கள் பணி என்று அனைவரும் கூறினர்.

செப்பேடு, கல்வெட்டு, வரலாற்று ஆவணங்களின் படி என்றுமே தீட்சி-தர்கள் வசம் இருந்திராத சிதம்பரம் கோயில் நிருவாகத்தை எப்படியோ சூழ்ச்சிகளால் அபகரித்துக் கொண்ட தில்லை தீட்சிதர்கள் அதன்மூலம் பல சுகம் கண்டதால் மீண்டும் நிரு-வாகத்தைப் பெற முயல்கின்றனர். அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கும், தமிழக அரசிற்கும் ஆதரவாக தமிழகப் பக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆதினத் தலைவர்கள் ஆகியோர் உடனே ஒன்று திரள வேண்டும். தீட்சிதர்களை வழக்-கைத் திரும்பப் பெறவைக்க வேண்டும் [ஹோ, இங்குதான் ராசு  வேலை நாசுக்காகத் தெரிகிறது. தன்னுடைய படிப்பை இவ்வாறு கடன் வைக்கவேண்டாம். ஏற்கெனவே உள்ள செப்பேடுகளை முகமதியருக்குச் சாதகமாக படித்து (அதாவது அவர்களுக்கு சாதகமாக இலாதவற்றை மறைத்து), இஸ்லாமியக் கல்லூர்களில் கட்டுரைப் படித்து வருகிறார். பாவ சஹாப்புத்தீன். இப்பொழுது இப்படி பல உண்மைகளை மறைத்து இப்படி கட்டுரை “ஆக்கி”யுள்ளார்! பாவம் “புலர்” ராசு, இல்லை “புலவர்” ராசு! இப்படியே போனால், நிச்சயமாக “கலைமாமணி”யாவது கிடைக்கும்].

கட்டுரை ஆக்கம்:
புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டியல் – தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தொலைபேசி: 0424 2262664.