Archive for the ‘மாணிக்கவாசகர் வெண்கலசிலை’ Category

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

ஜூலை16, 2010

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

தமிழன்ம, செம்மொழி தமிழன் சிலை திருருவது, கோவிலைக் கொள்ளையெடிப்பது ஏன்? தமிழ், செம்மொழி தமிழ் பேசும் தமிழ் மக்களின் இப்படிப்பட்ட திருட்டுகள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலியவற்றை தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, அந்த முகமது கோரி, முகமது கில்ஜி, ஔரங்கசீப், மாலிக்காஃபூர்………………பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இப்படி செம்மொழி தமிழ் பேசிக்கொண்டு, கடவுள் நம்பிக்கையில்லாமல், பெரியார் நாத்திகம் பேசிக்கொண்டு, கருணாநிதி வழியில் கோவில் கொள்ளையடிக்கும் திராவிடத் தமிழர்களை என்னசெய்வது என்றே தெரியவில்லை.

கோவில் கொள்ளைக்கு சான்றிதழ் தேவையா? இப்பொழுது கோவில்களுக்கெல்லாம் ISO சான்றிதழ் வேறு வாங்குகிறார்கள், நாத்திக-கேடுகெட்டவர்கள். இப்படி கொளை, திருட்டு, நம்பிக்கையின்மை, நாத்திகம்………….என்றெல்லாம் வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் சான்றிதழ் வாங்குகிறார்கள்? அல்லது தாங்கள் இப்படியெல்லாம் கொள்ளையேடிக்கலாம் என்று அந்த சான்றிதழில் உள்ளதா?

மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது: மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இருந்தது. இச்சிலை, ஒரு அடி ஏழு அங்குல உயரம், 11.5 கிலோ எடை கொண்டது. கோவிலில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இச்சிலை, நேற்று காலை மாயமாகி இருந்தது, கோவில் நடை திறந்து பார்த்தபோது தெரிந்தது. இக்கோவிலில் உள்ள கதவுகள், பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின்படி குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, திருக்களம்புதூர் என இப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் படிகலிங்கம், மரகத லிங்கம், பஞ்சலோகச் சிலைகள் தொடர்ந்து திருட்டுப் போகின்றன. இங்குள்ள பழமையான, பாதுகாப்பற்ற கோவில் சிலைகளை காக்க அறநிலையத்துறை மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.