வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அனுபவிப்பதில் அவர்களுக்குள் நடக்கும் ஊழல்கள், சட்டமீறல்கள் (2)
எச்.ராஜா எதிர்ப்பு: தற்போது இதைத்தான் பாஜகவினர் பிரச்சினையாக எழுப்பி வருகின்றனர், தற்போது இந்த விவகாரத்தில் எச். ராஜா தலையிட்டு கருத்து கூறியுள்ளார்[1], இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார்[2]. , என சில ஊடகங்கள் தினமலர் செய்தியை மசாலாவாக்கி, திரித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டு உள்ள பதிவில்[3], “திருச்சென்துரை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமாம். வக்ஃப் போர்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பும். உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம். எப்படி சாத்தியம். கோவில் நிலம் எப்படி வக்ஃப் நிலமானது. மோசடியை முறியடிப்போம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்[4]. உண்மையில், இது மோசடி என்ற நிலையில், எந்த ஊடகக் காரனும் அறிந்து கொள்ளலாம், குறிப்பிட்ட வட்டாட்சியாளர், அதிகாரிகளிடம் சென்று விசாரித்து, பேட்டிக் கண்டு விவரங்களை வெளியிட்டிருக்கலாம்.
திமுக ஆட்சிக்கு வந்தது, இதற்கும் என்ன தொடர்பு?: வக்பு தலைவர் கூறியுள்லதும் கவனிக்கத் தக்கது. சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் மற்றும் லால்கான் பள்ளிவாசல் வக்பு வாரியம் இணைந்து புதிய மதரஸா துவக்க நிகழ்ச்சி லால்கான் பள்ளி வாசலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை அவருக்கு வாக்களிக்காதவர்களும் பாரட்டி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். அவர் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறார். அதேபோல் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட நான் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறேன்”. சரி, இந்து நிலங்களுக்கும், இதற்கும் என்ன சம்மந்தம்?
ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்: தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தமிழக முழுவதும் ரூ150 லட்சம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர். இந்த சொத்துக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரிய சொத்துக்களை மீட்பதில் தமிழக முதல்வர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்[5]. சொத்துக்களை மீட்டு மருத்துவக் கல்லூரி, கல்லூரி,பள்ளிகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும்[6]. வக்பு வாரிய நிர்வாகத்தை கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு திங்கள் கிழமையும் வக்பு வாரிய ஆணையரை சந்தித்து குறைகளைக் கூறினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யாத மசூதிகளை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 9 ஆயிரம் மசூதிகள் உள்ளது. இதில் 3 ஆயிரம் மட்டுமே பதிவில் உள்ளது. அனைத்து மசூதிகளையும் சட்டப்படி கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் லால்கான் பள்ளிவாசல் நிர்வாகி ஜியாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்: “தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தமிழக முழுவதும் ரூ150 லட்சம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்,” என்றால், அத்தகைய பதிவுகளை செய்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆவணங்களை எழுதியவர்கள்-தயாரித்தவர்கள், வட்டாட்சி தலைவர்கள், தாசில்தார்கள் என்று அனைவரையும் கண்டு பிடிக்கலாம். எல்லா ஆவணங்களும் அந்தந்த வட்டாட்சி அலுவலகங்களில் உள்ளன. ஆகவே, மோசடிக் காரர்களை கண்டு ப்பிடித்து விடலாம். பிறகு, உண்மையான ஒத்து-நிலங்களின் சொந்தக்காரர்களை ஏன் இவ்வாறு தொந்தரவு செய்வது, இம்சிப்பது, மோசடிகளில் சிக்க வைப்பது போன்ற காரியங்களில் ஏன் ஈடுபட வேண்டும், என்று கவனிக்க வேண்டும். வக்பு வாரியம், வாரிய உறுப்பினர்கள், சொத்துக்களை மோசடிசெய்து விற்றவர்கள், வாங்கியவர்கள் என்ற கும்பல்களின் உள்ளப் பிரச்சினையை, இந்துக்களுடன் இணைக்க வேண்டிய நிலை தன், பெரிய மோசடியாகவும் மாறுகிறது.
வக்பு நிலங்கள் எப்படி வந்தன?: – புதுமடம் ஜாபர்அலி என்பவர், வக்பு வாரிய சொத்துக்களைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையை உன்னிப்பாக வாசிக்க வேண்டும்[7]. தமிழ்.இந்துவில் வந்துள்ளதை அப்படியே கீழ்கண்ட பத்திகளில் கொடுக்கப் படுகிறது[8]. வழக்கம் போல, பத்திகளாகப் பிரித்து, அவற்றிற்கு தலைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன[9]. விமர்சனம் அடிக்குறிப்பில் கொடுக்கப் படுகிறது. “வெகு காலத்துக்கு முன், முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்தனர்[10]. இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான காரியங்களை, ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம்[11]. பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் பழங்காலத்தில் தானமாக வழங்கப்பட்டன.
சொத்துக்களை நிர்வகிக்கும் முத்தவல்லிகள் யார்?: ஜாபர்அலி தொடர்வது, “தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்பு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்துவந்தார்கள்[12]. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்பு வாரியத்திடம் சேர்த்தார்கள். இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்”.
© வேதபிரகாஷ்
12-09-2022
[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவில் நிலம் எப்படி வக்ஃப் போர்டு நிலமாச்சு.. மோசடியை முறியடிப்போம்.. கங்கணம் கட்டிய H.ராஜா, Ezhilarasan Babu, First Published Sep 10, 2022, 5:04 PM IST
[2] https://tamil.asianetnews.com/politics/how-the-temple-land-was-acquired-by-the-wakf-board-let-s-break-the-fraud-h-raja-challenge-rhzs5h
[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில் நிலம் வக்ப் வாரிய சொத்தா? அதெப்படி.. மோசடியை முறியடிப்போம் – எச்.ராஜா சபதம், By Noorul Ahamed Jahaber Ali Published: Saturday, September 10, 2022, 9:11 [IST]
[4] https://tamil.oneindia.com/news/chennai/h-raja-condemned-that-how-temple-land-become-waqf-property-474932.html
[5] நக்கீரன், ‘‘தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை”-வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பேட்டி!, நக்கீரன் செய்திப்பிரிவு Published on 05/09/2021 (23:15) | Edited on 06/09/2021 (08:11)
[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/action-recover-assets-belonging-tamil-nadu-waqf-board-interview-waqf-board
[7] – புதுமடம் ஜாபர்அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com
[8] தமிழ்.இந்து, வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?, புதுமடம் ஜாபர் அலி, Published : 26 Nov 2021 03:06 AM; Last Updated : 26 Nov 2021 03:06 AM
[9] https://www.hindutamil.in/news/opinion/columns/741055-wakfu-board-3.html
[10] அடீப்படையில், இந்தியாவைப் பொறுத்த வரையில், இது பொய்யாகும், ஏனெனில், இங்கு துலுக்கர் / முஸ்லீம்கள் இருந்ததில்லை. 712க்கு மேல் அரேபியர், துலுக்கர், துருக்கர், துருக்ஷா, முகலாயர் என்றெல்லாம் வந்தவர்கள், கொள்லைய்டித்து, கோவில்களை இடித்து, கோவில் சொத்துக்களை சூரையாடி, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்ட இடங்களே, அவர்களது சொத்துக்கள் என்று சொல்லப் படுகிறது.
[11] அதாவது, முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்று படித்துப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில், காபிர்களுக்கு, துலுக்கர்-அல்லாதவர்களுக்கு நரகம் தான் கிடைக்கும், வேறெதுவும் இல்லை.
[12] ஆக, இங்கு உண்மை வெளிவந்து விடுகிறது. துலுக்கர் தானம் என்று கொடுத்து, பிறகு, அதனை துலுக்கரே அனுபவிப்பது, அவர்களது பிரச்சினை. ஆனால், அவர்களது (?) சொத்துக்களை யாரோ அனுபவிப்பது போல செய்திகள் வெளியிடுவது மோசடியாகும், பொய்-பித்தலாட்டம் ஆகும்.