Archive for the ‘வக்பு’ Category

வக்புவாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிப்பது–இந்துக்களை இம்சிப்பது (3)

செப்ரெம்பர்12, 2022

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிப்பது இந்துக்களை இம்சிப்பது (3)

தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது: ஜாபர்அலி கூறுவது, “முற்காலத்தில் இந்த சொத்துக்களெல்லாம் உயர்ந்த நோக்கங்களுக்காகத் தானமாக வழங்கப்பட்டாலும் தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதும், பிறருக்கு விற்பதும் சில இடங்களில் நடந்தது. இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, முத்தவல்லிகளை ஒழுங்காகச் செயல்பட வைக்க 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்பு வாரியம். ஒன்றியமாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்பு வாரியம், முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது”. “தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது” என்றால் அது துலுக்கப் பிரச்சினையே அன்று இந்துக்களுடன் தொடர்பு படுத்தப் படும் விசயமல்ல, அது விசமத்தனமானது.

வக்பு வாரியம், மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. ஜாபர்அலி கூறுவது, “இருந்தாலும், அது ஒரு அரசு சார்பு நிறுவனமாக இயங்குகிறது. அதே நேரத்தில், அது மாநில அரசு சொல்லும் எல்லாவற்றையும் கேட்டு நடக்க வேண்டும் என்பதில்லை. வக்பு வாரியம் கூடி என்ன முடிவெடுக்கிறதோ, அதுதான் முடிவு. அரசு இதில் சட்டரீதியாகத் தலையிட்டு, எந்த முடிவையும் எடுக்க வைக்கவோ, எடுத்த முடிவை மாற்றவோ முடியாது. வக்பு வாரியம் தன்னிச்சையான அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிர்வாகச் செலவுக்கு இன்று வரை அரசை எதிர்பார்த்தே உள்ளது.” இத்தகைய இருநிலைப் பாட்டில் இருக்கும் நிலை அவர்களது மோசடிகளுக்குத் துணை போகிறது. இது கிருத்துவர்களின் பிரச்சினை போன்றதே. பிஷப், பாதிரிகள் கோர்ட்டுக்குச் சென்றது போல, இவர்களும் கோர்ட்டுக்குச் செல்லலாம்.

வாரியத் தலைவர் பதவி, நியமனம், குற்றச்சாட்டுகள் _ இவையும் துலுக்கர் பிரச்சினையே: ஜாபர்அலி கூறுவது, “வக்பு வாரியம் கட்சி சாரா அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் வாரியப் பதவிகள் அனைத்தும், ஏலம் விடப்படாத குறைதான் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. வாரியத் தலைவர் பதவிக்கு ஆட்களை நியமனம் செய்யும் விஷயத்தில், ஆண்டாண்டு காலமாக அரசியல் தலையீடு இருப்பதாகவும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், திமுக அரசு ஒரு தெளிவான முடிவெடுத்திருக்கிறது. முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் வக்பு வாரியத்தைத் திறம்பட நடத்திச் செல்வதற்காக, நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற முன்னாள் எம்.பி. அப்துல் ரஹ்மானை வக்பு வாரியத் தலைவராக நியமித்திருக்கிறது. பொறுப்பேற்ற பின், அப்துல் ரஹ்மான் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகப் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவது நம்பிக்கை வெளிச்சத்தைத் தருகிறது”.

வக்பு வாரியச் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது துலுக்கரே: ஜாபர்அலி கூறுவது,  “இந்தியாவின் சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, (2008) வக்பு வாரியச் சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது. வாரியத்தின் சொத்துக்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை அந்த கமிட்டி கண்டறிந்தது. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் முறையாக மீட்கப்பட்டால், வாரியம் என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறும் என்று கமிட்டி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, ஏழை எளிய முஸ்லிம்களுக்கு உதவ முடியும் என்பது கமிட்டியின் பரிந்துரை”.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன: ஜாபர்அலி கூறுவது, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் மீட்க வாரியத்துக்குப் போதுமான சட்ட அதிகாரம் இல்லை. ஆகவே, வலுவான சட்டப் பாதுகாப்புடன் வக்பு வாரியம் கட்டமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சொத்துக்களையெல்லாம் மீட்டு, அவற்றிலிருந்து வருவாய் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்பட்சத்தில், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். வாரிய நிர்வாகத்தை நடத்துவதற்கு அரசிடம் கையேந்த வேண்டியதில்லை”. இப்படி சொல்லிக் கொண்டாலும், காபிர்கள் கொடுக்கும் பிச்சையில் தான் இந்த அரேபிய அடிமைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வக்பு வாரியம், வேறெந்தச் சமூகமும் பெற்றிருக்காத அளவுக்குச் சொத்துக்களைப் பெற்றிருக்கிறது. ஜாபர்அலி கூறுவது, ‘ஆனால், வறியவர்கள் அதிகம் இருக்கும் சமூகம் என முஸ்லிம் சமூகம் அடையாளம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது[1]. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் வைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், தொழிற்சாலைகள், குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்டவை எங்கெல்லாம் குறைவாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. முஸ்லிம் சமூகத்தை அரசும் பொதுச் சமூகமும் கைவிடக் கூடாது என்பது ஒரு புறம் இருக்க, முஸ்லிம் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக வக்பு வாரியம் தன்னலமற்றுச் செயல்பட வேண்டும் என்ற ஏக்கம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கிறது”.

கவனிக்க வேண்டிய விசயங்கள்: சரித்திர ரீதியில், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களிலிருந்து, இந்த மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்தும் பார்ப்பதில்லை. டிவி, செல்போன் பார்த்து பொழுதைப் போக்கிக் கொன்டிருக்கிறார்கள்.

  1. “ஆற்காடு நவாப்” என்று குறிப்பிடப் படும் ஒருவர் தான் தான் மயிலாப்பூர் கோவிலுக்கு நிலம் கொடுத்தேன் என்று கிருத்துவக் கூட்டங்களில் சொல்லிக் கொள்வார்.
  • இந்த நசரத் பேட்டை, அல்லாபுரம் ஸ்தலபுராணங்கள் எல்லாம் நாளைக்கு வேளாங்கன்னி, நாகூர் மாடல்களில் செல்லும். முழுங்கப் பார்க்கும்.
  • இறக்குமதி செய்யப் பட்ட மதங்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்துக்கள் நிலமாக இருக்கும்? அடிப்படையிலேயே ஏதோ மிகப்பெரிய மோசடி உள்ளது.
  • வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது. சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
  • யார் யாருக்கு தடையில்லா சான்றிதழ் கொடுப்பது என்ற விவஸ்தையே வேண்டாமா, இதென்ன புதிய அவஸ்தை, அதிலும் இவர்களிடம் தேவையா?
  • சொந்தமாக எதையும் இல்லாத இந்த மதங்கள், நம்பிக்கையாளர்கள் இந்தியாவில் எல்லாமே கடன் வாங்கி,  கடன் பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
  • பாரத மாதவை வைத அந்தப் பாதிரிப் பதரும், கோவில் நிலத்தை தனதெனும் இந்த அரேபிய அடிமைகளும் இந்துக்களின் சொத்தை அனுபவிக்க வேண்டாம்.
  • உண்மையில் தன்மானம், சூடு-சொரணை இருந்தால் இந்துக்கள் நிலத்தை, பூமியை விட்டு விலக வேண்டும், அம்மண்ணில் விளைவதைக் கூட உண்ணக் கூடாது.
  • வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு கீழ் நடக்கிறதா, அல்லது பத்திரப்பதிவு துறைக்கு கீழ் வக்பு வாரியம் செயல்படுகிறதா? ஆணையிட அதிகாரம் உள்ளதா?
  1. ஆக, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம் போல, கோவில் நிலத்திற்கும், இந்து நிலத்திற்கும், வக்பு வாரியத்திற்கும் என்ன சம்மந்தம்? (10)

© வேதபிரகாஷ்

12-09-2022


[1]  இதுவே பெரிய மோசடி எனலாம், பிறகு, ஏன் அத்தகைய துலுக்கர் உருவாக வேண்டும். யார் அவர்களை அவ்வாறு ஏழைகளாக வைத்திருக்கின்றனர். பிச்சைக் காரர்களில் அதிகமாக துலுக்கர் இருப்பது தெரிகிறது. அது உண்மையில் பிச்சை எடுக்கவா அல்லது வேறு யாதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

வக்புவாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அனுபவிப்பதில் அவர்களுக்குள் நடக்கும் ஊழல்கள், சட்டமீறல்கள் (2)

செப்ரெம்பர்12, 2022

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை  அனுபவிப்பதில் அவர்களுக்குள் நடக்கும் ஊழல்கள், சட்டமீறல்கள் (2)

எச்.ராஜா எதிர்ப்பு: தற்போது இதைத்தான் பாஜகவினர் பிரச்சினையாக எழுப்பி வருகின்றனர், தற்போது இந்த விவகாரத்தில் எச். ராஜா தலையிட்டு கருத்து கூறியுள்ளார்[1], இதுதொடர்பாக அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார்[2]. , என சில ஊடகங்கள் தினமலர் செய்தியை மசாலாவாக்கி, திரித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டு உள்ள பதிவில்[3], “திருச்சென்துரை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமாம். வக்ஃப் போர்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பும். உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம். எப்படி சாத்தியம். கோவில் நிலம் எப்படி வக்ஃப் நிலமானது. மோசடியை முறியடிப்போம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்[4]. உண்மையில், இது மோசடி என்ற நிலையில், எந்த ஊடகக் காரனும் அறிந்து கொள்ளலாம், குறிப்பிட்ட வட்டாட்சியாளர், அதிகாரிகளிடம் சென்று விசாரித்து, பேட்டிக் கண்டு விவரங்களை வெளியிட்டிருக்கலாம்.

திமுக ஆட்சிக்கு வந்தது, இதற்கும் என்ன தொடர்பு?: வக்பு தலைவர் கூறியுள்லதும் கவனிக்கத் தக்கது. சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் மற்றும் லால்கான் பள்ளிவாசல் வக்பு வாரியம் இணைந்து புதிய மதரஸா துவக்க நிகழ்ச்சி லால்கான் பள்ளி வாசலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை அவருக்கு வாக்களிக்காதவர்களும் பாரட்டி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். அவர் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறார். அதேபோல் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட நான் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறேன்”. சரி, இந்து நிலங்களுக்கும், இதற்கும் என்ன சம்மந்தம்?

ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்: தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தமிழக முழுவதும் ரூ150 லட்சம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்.  இந்த சொத்துக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரிய சொத்துக்களை மீட்பதில் தமிழக முதல்வர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்[5]. சொத்துக்களை மீட்டு மருத்துவக் கல்லூரி, கல்லூரி,பள்ளிகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும்[6].  வக்பு வாரிய நிர்வாகத்தை கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு திங்கள் கிழமையும் வக்பு வாரிய ஆணையரை சந்தித்து குறைகளைக் கூறினால்  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யாத மசூதிகளை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 9 ஆயிரம் மசூதிகள் உள்ளது. இதில் 3 ஆயிரம் மட்டுமே பதிவில் உள்ளது. அனைத்து மசூதிகளையும் சட்டப்படி கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் லால்கான் பள்ளிவாசல் நிர்வாகி ஜியாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்: “தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தமிழக முழுவதும் ரூ150 லட்சம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்,” என்றால், அத்தகைய பதிவுகளை  செய்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆவணங்களை எழுதியவர்கள்-தயாரித்தவர்கள், வட்டாட்சி தலைவர்கள், தாசில்தார்கள் என்று அனைவரையும் கண்டு பிடிக்கலாம். எல்லா ஆவணங்களும் அந்தந்த வட்டாட்சி அலுவலகங்களில் உள்ளன. ஆகவே, மோசடிக் காரர்களை கண்டு ப்பிடித்து விடலாம். பிறகு, உண்மையான ஒத்து-நிலங்களின் சொந்தக்காரர்களை ஏன் இவ்வாறு தொந்தரவு செய்வது, இம்சிப்பது, மோசடிகளில் சிக்க வைப்பது போன்ற காரியங்களில் ஏன் ஈடுபட வேண்டும், என்று கவனிக்க வேண்டும். வக்பு வாரியம், வாரிய உறுப்பினர்கள், சொத்துக்களை மோசடிசெய்து விற்றவர்கள், வாங்கியவர்கள் என்ற கும்பல்களின் உள்ளப் பிரச்சினையை, இந்துக்களுடன் இணைக்க வேண்டிய நிலை தன், பெரிய மோசடியாகவும் மாறுகிறது.

வக்பு  நிலங்கள் எப்படி வந்தன?: – புதுமடம் ஜாபர்அலி என்பவர், வக்பு வாரிய சொத்துக்களைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையை உன்னிப்பாக வாசிக்க வேண்டும்[7]. தமிழ்.இந்துவில் வந்துள்ளதை அப்படியே கீழ்கண்ட பத்திகளில் கொடுக்கப் படுகிறது[8]. வழக்கம் போல, பத்திகளாகப் பிரித்து, அவற்றிற்கு தலைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன[9]. விமர்சனம் அடிக்குறிப்பில் கொடுக்கப் படுகிறது. “வெகு காலத்துக்கு முன், முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்தனர்[10]. இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான காரியங்களை, ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம்[11]. பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் பழங்காலத்தில் தானமாக வழங்கப்பட்டன.

சொத்துக்களை நிர்வகிக்கும் முத்தவல்லிகள் யார்?: ஜாபர்அலி தொடர்வது, “தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்பு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்துவந்தார்கள்[12]. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்பு வாரியத்திடம் சேர்த்தார்கள். இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்”.

© வேதபிரகாஷ்

12-09-2022


[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவில் நிலம் எப்படி வக்ஃப் போர்டு நிலமாச்சு.. மோசடியை முறியடிப்போம்.. கங்கணம் கட்டிய H.ராஜா, Ezhilarasan Babu, First Published Sep 10, 2022, 5:04 PM IST

[2] https://tamil.asianetnews.com/politics/how-the-temple-land-was-acquired-by-the-wakf-board-let-s-break-the-fraud-h-raja-challenge-rhzs5h

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில் நிலம் வக்ப் வாரிய சொத்தா? அதெப்படி.. மோசடியை முறியடிப்போம்எச்.ராஜா சபதம், By Noorul Ahamed Jahaber Ali Published: Saturday, September 10, 2022, 9:11 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/h-raja-condemned-that-how-temple-land-become-waqf-property-474932.html

[5] நக்கீரன், ‘தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை”-வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பேட்டி!, நக்கீரன் செய்திப்பிரிவு Published on 05/09/2021 (23:15) | Edited on 06/09/2021 (08:11)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/action-recover-assets-belonging-tamil-nadu-waqf-board-interview-waqf-board

[7] – புதுமடம் ஜாபர்அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

[8] தமிழ்.இந்து, வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?, புதுமடம் ஜாபர் அலி, Published : 26 Nov 2021 03:06 AM;  Last Updated : 26 Nov 2021 03:06 AM

[9] https://www.hindutamil.in/news/opinion/columns/741055-wakfu-board-3.html

[10]  அடீப்படையில், இந்தியாவைப் பொறுத்த வரையில், இது பொய்யாகும், ஏனெனில், இங்கு துலுக்கர் / முஸ்லீம்கள் இருந்ததில்லை. 712க்கு மேல் அரேபியர், துலுக்கர், துருக்கர், துருக்ஷா, முகலாயர் என்றெல்லாம் வந்தவர்கள், கொள்லைய்டித்து, கோவில்களை இடித்து, கோவில் சொத்துக்களை சூரையாடி, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்ட இடங்களே, அவர்களது சொத்துக்கள் என்று சொல்லப் படுகிறது.

[11]  அதாவது, முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்று படித்துப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில், காபிர்களுக்கு, துலுக்கர்-அல்லாதவர்களுக்கு நரகம் தான் கிடைக்கும், வேறெதுவும் இல்லை.

[12]  ஆக, இங்கு உண்மை வெளிவந்து விடுகிறது. துலுக்கர் தானம் என்று கொடுத்து, பிறகு, அதனை துலுக்கரே அனுபவிப்பது, அவர்களது பிரச்சினை. ஆனால், அவர்களது (?) சொத்துக்களை யாரோ அனுபவிப்பது போல செய்திகள் வெளியிடுவது மோசடியாகும், பொய்-பித்தலாட்டம் ஆகும்.

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிக்கும் நிலையில் வெளிவரும் செய்திகள் (1)

செப்ரெம்பர்12, 2022

வக்பு வாரியம், ஆரம்பம், சொத்தாக நிலங்கள் வந்த மர்மம், சொத்துக்களை அவர்களே அனுபவிக்கும் நிலையில் வெளிவரும் செய்திகள் (1)

திருச்செந்துறை கிராமத்தில் நடப்பது என்ன?: தினமலரில் 09-09-2022ல் வெளிவந்துள்ள செய்தி முக்கியமானது. ஏனெனில், தமிழகத்தில் எத்தனைப் பெரிய மோசடிகள், சட்டமீறல்கள், சட்டங்களை மீறிய குற்றங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முதலியோர் திட்டமிட்டு பல்லாண்டுகளாக செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. இனி விவரங்களைப் பார்ப்போம். திருச்சி அருகே முள்ளிக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். அவருக்கு, அருகில் உள்ள அந்தநல்லுார் ஒன்றியத்தைச் சேர்ந்த திருச்செந்துறை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அவசர தேவைக்காக, 1 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை, ராஜராஜேஸ்வரி என்பவருக்கு விற்க ஒப்பந்தம் செய்தார். 3.50 லட்சம் ரூபாய்க்கு கிரைய பத்திரம் ஏற்பாடு செய்து, அதை பதிவு செய்ய, 5ம் தேதி, திருச்சி மூன்றாம் எண் சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீங்கள் பத்திரம் பதிய வந்திருக்கும் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. ‘வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது. சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்‘ என, சார் – பதிவாளர் முரளி கூறியுள்ளார்[1]. அதற்கு ராஜகோபால், ‘1992ல் வாங்கிய என் நிலத்தை விற்க, வக்பு வாரியத்திடம் ஏன் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்?’ என அப்பாவியாக கேட்டுள்ளார்[2].

வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு ஆணையிட அதிகாரம் உள்ளதா? – இது தான் நடைமுறை: அதற்கு சார் – பதிவாளர் முரளி, திருச்செந்துறை கிராமத்தில் உள்ள எந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றாலும், இது தான் நடைமுறை. ‘மொத்த கிராமமும் தங்களுக்கு சொந்தமானது என, வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு ஆவணங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது[3]. ‘மேலும், கிராமத்தில் உள்ள நிலத்திற்காக பத்திரம் பதிய வருவோர், தங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் எனவும் கூறி உள்ளது‘ என, விளக்கம் அளித்துள்ளார்[4]. அத்துடன், 250 பக்க வக்பு வாரிய கடித நகலையும், ராஜகோபாலிடம் காட்டிஉள்ளார். அந்த கடிதத்தில், தமிழகம் முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தங்களுடையது என, வக்பு வாரியம் கூறியுள்ளது. இதனால் நொந்து போன ராஜகோபால், கிராம மக்களிடம் பிரச்னையை கூற, ஒட்டுமொத்த கிராமமும் கொந்தளித்துள்ளது.

நிலத்தின் சொந்தக் காரர் யாரிடமோ சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற கூத்து என்ன?: ‘ஏற்கனவே பதிவான பத்திரம், சிட்டா, அடங்கல், வருவாய் ‘ஏ’ பதிவு, வில்லங்க சான்று உள்ளிட்ட வருவாய்த் துறை ஆவணங்கள் தங்களிடம் இருக்கும்போது, திருச்செந்துறை கிராம சொத்துக்களை தங்களுடையது என, வக்பு வாரியம் எப்படி குறிப்பிடலாம்?’ என, கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இப்பிரச்னை, மாவட்ட கலெக்டரிடம் சென்றபோது, ‘இது தொடர்பாக தீர விசாரிக்க வேண்டும். அதன்பின்பே, இதில் முடிவெடுக்க முடியும்’ எனக் கூறியுள்ளார். ஒருவர் வாங்குவது, இன்னொருவருக்கு விற்பது, பிறகு அதை முஸ்லிம், கிருத்துவர் வாங்குவது போன்ற நாடகங்களும் அரங்கேறி வருகின்றன………….100 – ஆண்டுகள் லீஸ் / குத்தகை போன்ற போர்வைகளிலும், இத்தகைய மோசடிகள் நடக்கின்றன………..திராவிட, திராவிடத்துவ, இந்துவிரோத கும்பல்கள் பகுத்தறிவு போர்வையில் இந்த சூதை, மோசடியை, குற்றங்களை செய்து வருகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் எல்லா நிலமும் கடவுளுடைது தான்: இந்துக்களின் சரித்திரத்தை மறைக்க, மறுக்க, மறக்க செய்யப் படும் சூழ்ச்சிகள் தான் இவை……….பெயரை மாற்றினால், மதம் மாறினால்,  என்ன விளைவுகள் ஏற்படும், அரசாங்கம் எந்த அளவுக்கு ஊனமாகி விடும் என்பதற்கு இன்னொரு உதாரணம்….. உண்மையில் தமிழகத்தில் உள்ள எல்லா நிலங்களும்  சாமிக்கு / கடவுளுக்கு சொந்தமான நிலங்கள் தான். துலுக்கர் வந்த பிறகு, அவரது ஆட்சிக்கு உட்பட்டதாக சரித்திரம் சொல்லிக் கொண்டாலும், கோவில்கள், மடங்கள் இருந்தன, இருந்து வந்துள்ளன………..பிறகு தான், வக்ப் எல்லாம் உருவானது… ஆகவே, எந்த நிலமும் வக்பு அல்லது மற்ற மதத்தினருக்கு சொந்தமானது என்பது, பொய் தான்.. ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கும் போது, ஜமீந்தார்களை, துலுக்கர்களை வைத்து நிலவரி வசூலித்தது……… அப்பொழுது, இந்த-ஜமீன் நிலம், இந்த ஜமீன்தாருக்கு சொந்தம் எனப் பட்டது…….பிறகு தான் வக்பு வந்தது…………………….எனவே இந்தியாவில் மதரீதியில், கிருத்துவர்-துலுக்கர்களுக்கு சொத்தாக நிலங்கள் உள்ளன என்பது அபாண்டமான பொய்-பித்தலாட்டம் ஆகும்..

பாடல் பெற்ற மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி கோவில் மற்றும் ஆஸ்தான மண்டபம்: இது குறித்து, திருச்சி மாவட்ட பா.ஜ., பிரமுகர் அல்லுார் பிரகாஷ் கூறியதாவது: “திருச்சிக்கு அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் விவசாய பூமி; ஹிந்துக்கள் நிரம்பிய கிராமம். வக்பு வாரியத்துக்கும், திருச்செந்துறை கிராமத்துக்கும் என்ன சம்பந்தம்? காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் அழகிய கிராமம் தான் திருச்செந்துறை. அங்கு, பாடல் பெற்ற மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது என, பல்வேறு ஆவணங்கள், சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலுக்கு திருச்செந்துறை கிராமத்திலும், கிராமத்துக்கு வெளியேயும், 369 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது”. ஆக, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம் போல, கோவில் நிலத்திற்கும், இந்து நிலத்திற்கும், வக்பு வாரியத்திற்கும் என்ன சம்மந்தம்?

வட்டாட்சி அலுவலகம் எப்படி மோசடிகளை அனுமதிக்கிறது?: இந்த கோவில் நிலமும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதா? எதன் அடிப்படையில் இப்படி செய்கின்றனர்? வருவாய் ஆவணங்கள் தனிநபர்களுக்கு சொந்தமானதாக இருக்கும்போது, அடிப்படை ஆதாரம் இல்லாமல், வக்பு வாரியம் எப்படி அறிவிக்க முடியும்? வக்பு வாரியம் கடிதம் எழுதினாலும், அதை சரிபார்க்காமல், பத்திரப் பதிவு துறை உயர் அதிகாரிகள், பத்திரம் பதியக் கூடாது என, எப்படி உத்தரவிட்டனர்? ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் பங்குனி மாத ஆதிபிரம்மோற்சவ விழாவின் போது திருச்செந்துறை கிராமத்தில் எழுந்தருளுவார். அங்கு பெருமாள் எழுந்தருளும் ஆஸ்தான மண்டபம் உள்ளது. இவ்வாறு அல்லுார் பிரகாஷ் கூறினார். வட்டாட்சி அலுவலகத்தில் மாபெரும் மோசடி நடக்கிறது என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. அங்கிருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள் ஆவணங்களை வைத்துக் கொண்டு, மோசடிக் காரர்களுக்குத் துணைப் போகின்றனர் அல்லது அத்தகைய திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்பதும் தெரிகிறது.

பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரி கூறியதாவதுஅரசிடம் பேசுவோம்!’: பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரி கூறியதாவது: நீர்நிலைகள், வக்பு வாரிய சொத்துக்கள், கோவில் சொத்துக்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. போலி ஆவணங்கள் வாயிலாக, சம்பந்தம் இல்லாதவர்கள் கையில் நிலங்கள் இருப்பதாக, அரசுக்கு தகவல்கள் வந்தன; சில வழக்குகளும் போடப்பட்டன. இப்பிரச்னையில் நீதிமன்றம் அரசை விமர்சித்ததோடு, சொத்துக்களை மீட்க, சரியான வழிமுறைகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், 2016ல், சொத்துக்களை மீட்க, சட்டதிருத்தங்களை அரசு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் தங்கள் சொத்துக்களை மீட்கும் முயற்சியில் வக்பு வாரியம் களம் இறங்கியது. ஆனால், அதற்கும் தனிநபர் சொத்திற்கும், இந்து நிலங்கலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த அடிப்படை விசயம் அவர்கலுக்குத் தெரியாதா என்ன?

வக்பு வாரிய பிரச்சினையை இந்துக்களுடன் தொடர்பு படுத்துவது ஏன்?: தங்கள் சொத்துக்களாக கண்டறியப்பட்டதை வரிசைப்படுத்தி, அவற்றை பத்திரப் பதிவு துறைக்கு தெரியப்படுத்தி உள்ளது. மேலும், குறிப்பிட்ட சொத்துக்கள் தொடர்பாக, பத்திரப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், அதை நிறுத்தவும் பதிவு துறையிடம் கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் திருச்செந்துறை, கடியாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் முழுமையும் வக்பு வாரிய சொத்துக்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளன. இருந்தபோதும், திருச்செந்துறை கோவிலும், அதற்கு சொந்தமான நிலங்களை கூட, வக்பு வாரிய சொத்துக்கள் என குறிப்பிடுவது அபத்தம் தான். வக்பு வாரிய கடிதத்தின் அடிப்படையில், பத்திரப் பதிவுகளை மறுக்கும்போது, நடைமுறையில் சிக்கல் வருகிறது. இது குறித்து, சிறுபான்மையினர் நலத் துறை செயலர், வக்பு வாரிய தலைவரிடம் பேச உள்ளோம். திருச்செந்துறை, கடியாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களை தவிர, சென்னை, திருவல்லிக்கேணியிலும் வக்பு வாரிய சொத்து பிரச்னை உள்ளது. இது குறித்து அரசிடம் பேசி, உரிய பரிகாரம் தேடப்படும். இவ்வாறு அவர் கூறினார்[5].

© வேதபிரகாஷ்

12-09-2022


[1] தினமலர், ஹிந்து கிராமமேவக்புவாரிய சொத்து?பத்திரப்பதிவு செய்ய மறுக்கும் அக்கிரமம்! Updated : செப் 10, 2022  10:13 |  Added : செப் 09, 2022  22:08.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3118817

[3] மீடியான் நியூஸ், ஒரு ஹிந்து கிராமத்தையே சுருட்டிய வக்பு வாரியம்?!, Kathiravan Mediyaan News, : செப் 10, 2022 

[4] https://mediyaan.com/waqf-board-thiruchenthurai-village/

[5] – நமது நிருபர் – தினமலர், மேற்படி செய்தி, Updated : செப் 10, 2022  10:13 |  Added : செப் 09, 2022  22:08.