Archive for the ‘அனைத்து ஜாதியினர்’ Category

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்- அந்தந்த கோவில் ஆகம முறைப் படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

ஓகஸ்ட்27, 2023

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்அந்தந்த கோவில் ஆகம முறைப்படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனம் நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].

புதிய சட்டத்தின் படி செய்யப் பட்ட நியமனம் நிறுத்தி வைக்கப் பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சர்டிபிகேட் / சான்றிதழ் இருந்தால் எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.

தடை விதிக்கக் கோரி மனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.

அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் போன்றவை பின்பற்ற முடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.

சுகவனேஸ்வரர் கோவில் தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].

ஆகமமா, ஆகம பயிற்சியா, பரம்பரை நியமனமாபோன்றவை தொடர்பிரச்சினைகளாக இருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ் 12-08-2023 / 27-08-2023


[1] தினத்தந்தி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டப்படி பெற்ற பணி நியமனத்தை ரத்து செய்ததற்கு தடை, தினத்தந்தி ஆகஸ்ட் 12, 1:50 am

[2] https://www.dailythanthi.com/News/State/all-castes-are-ordained-priests-prohibition-against-cancellation-of-appointment-1028514

[3] தினகரன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி, August 12, 2023, 12:54 am.

[4] https://www.dinakaran.com/allcaste_priest_cancel_icourtbranch/

[5] தினமலர், அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள்: ஆக 12,2023 06:10

[6] https://m.dinamalar.com/detail.php?id=3401950

[7] ஏபிபி.லைவ், Archakas Appointment: அர்ச்சகர் நியமனம் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை, By: சுதர்சன் | Updated at : 11 Aug 2023 06:44 PM (IST), Published at : 11 Aug 2023 06:00 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/madras-high-court-sets-aside-single-judge-order-of-cancelling-archakas-appointment-under-tamil-nadu-govt-directive-134417

[9] இடிவி.பாரத், குமாரவயலூர் கோயில் அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..!, Published: Aug 11, 2023, 5:19 PM

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/hc-madurai-bench-stays-order-of-single-judge-cancelling-appointment-of-kumaravayalur-temple-priests/tamil-nadu20230811171918018018770

[11] நக்கீரன், அர்ச்சகர் நியமனம்; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/07/2023 (13:21) | Edited on 28/07/2023 (13:31),

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ordination-priests-madras-high-court-action

[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.

[13] https://tamil.news18.com/national/supreme-court-disposes-of-cases-related-to-appointment-of-archakas-in-tamil-nadu-temples-1121582.html – gsc.tab=0

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு–கோவில் கையகப்படுத்த முடிவு முதலியன (2)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு கோவில் கையகப் படுத்த முடிவு முதலியன (2)

தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யா வாதத்தில் ஈடுபட்டது; சிதம்பரம்-கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்யும் பிரச்னையில், இரு கோஷ்டியினர் போராட்டம் நடத்தியதால், சிதம்பரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் புகாரின் பேரில், 25ம் தேதி அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யாவிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர். இந்த பெண் அதிகாரியும் திட்டமிட்டு பிரச்சினை பெரிதாக்க, தீக்ஷிதர்களுடன் வாதம் புரிவது ஈடியோ மூலம் தெரிகிறது. ஆனி மஞ்சன விழா நேரத்தில் அமைதியாக, கோவில் இருக்க வேண்டிய நிலையில் இவ்வாறாக, அமைதி குலைந்து, கோவிலில் ஏதோ நடந்து விட்டது போல கூச்சல், குழப்பம், போலீஸார் குவிப்பு என்றிருந்தால், பக்தர்கள் எப்படி மன-அமைதியுடம் சாமி தரிசனம் செய்ய முடியும். சிறுவர் முதலியோர் அச்சப்படவும் நீரிடும். அதனை தொடர்ந்து 26ம் தேதி மாலை தரிசன விழா முடிந்த பின், 100க் கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறையினர் அதிரடியாக கோவிலுக்குள் சென்று, நடராஜர் சன்னதியில் மாட்டப்படிருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கனக சபையுள் நுழைய போராட்டம்: அறநிலையத்துறை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் பொது தீட்சிதர்களிடம் பக்தர்களை கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தீட்சிதர்கள் அதனை ஏற்காமல், நடராஜ சன்னதியின் உள்ள இரண்டு நுழைவு வாயிலையும் மூடினர். இந்நிலையில், கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வேண்டி போலீசில் புகார் அளித்த ராதாகிருஷ்ணன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் நடை கதவை திறக்க கோரி கனகசபை வாயிற்படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கோவிலுக்குள் வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லோருமே இந்துக்கள் என்றால், அவர்களே பேசி, பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும், கனக சபைக்கு செல்வது குறித்து கோவிலுக்குள்ளேயே போராட்டம் நடத்துவது, அமைதி குலைப்பதாகத் தான் இருந்தது.,

இன்னொரு கதவு வழியாக உள்ளே நுழைதல்: பக்தர்கள் ஏறி செல்லும் படி அருகே போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென மற்றொரு கதவு மூலமாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிரடியாக கனகசபை மீது ஏறி சென்று, நடராஜரை தரிசனம் செய்தனர்[1]. இச்சம்பவத்தால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்[2]. இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: .நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர்.

கணேச தீக்ஷிதர் தாக்கப் படுதல்: பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சிதரை அவரது வேட்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர், அத்து மீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர். பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சதரை தள்ளிவிட்டு அவரது வேஷ்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர் அத்துமீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மறுத்தது: இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், “தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர்[3]. அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர்[4]. காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினரின் விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது[5]. தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன.‘கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாதுஎன்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி[6], அந்த தீட்சிதர் அணிந்திருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை,” என்று கூறினர்[7].

ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: முன்னதாக சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொந்த நிறுவனமாக நினைக்கின்றனர். ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். “ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்பதிலும் ஏதோ பொடி வைத்துப் பேசியுள்ளது தெரிகிறது, என்ன ஆவணங்கள் தயாரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆக இவர் எப்படி கோவிலை கையகப் படுத்தாலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்களைப் பற்றி கண்டுகொள்ளாதது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தினமலர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு கோஷ்டி போராட்டத்தால் பரபரப்பு,பதிவு செய்த நாள்: ஜூன் 28,2023 04:02; https://m.dinamalar.com/detail.php?id=3360242

[2] https://m.dinamalar.com/detail.php?id=3360242

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/chidambaram-nataraja-temple-deekshithar-attack-poonal-is-cut-rx02m2

[4] சிதம்பரம் கனகசபை விவகாரம்: தீட்சிதரின் பூணூல் அறுப்பு? அறநிலையத் துறை மறுப்பு, Written by WebDesk, June 29, 2023 09:40 IST.

[5] https://tamil.indianexpress.com/tamilnadu/chidambaram-dikshitharas-accused-officials-allegadely-cutting-poonool-sacred-threat-709568/

[6] விகடன், கனகசபை விவகாரம்: மறுக்கும் சிதம்பரம் தீட்சிதர்கள்அரசுநிதானம்காட்டுகிறதா?!, லெ. ராம்சங்கர், Published:26 Jun 2023 4 PMUpdated:26 Jun 2023 4 PM

[7] https://www.vikatan.com/government-and-politics/governance/chidambaram-temple-issue-why-government-is-showing-restraint

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூன் 24 முதல் 27 வரை அனுமதி இல்லை என்றது: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது[1]. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி,  ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நாள்களில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்[2]. ஆனால், அறநிலையத்துறை பெண் அதிகாரி தீக்ஷிதர்களுடன் வாதிக்கும் வீடியோ ஊடகங்களில் காண்பிக்கப் பட்டது. சுற்றிலும் போலீசார் பலர் இருந்தனர். இத்தகைய சாதாரண தரிசன விசயங்களுக்கு இத்தனை போலீஸார் ஏன் என்று தெரியவில்லை. 24-06-2023 அன்றே,  வாதிக்கும் பொழுதே, ஒருவர், சட்டை இல்லாமல், மேலே ஏறி, அப்பலகையை எடுத்து விட்டார், பிறகு, போலீஸார் துணையும் அது எடுத்துச் செல்லப் பட்டது. அதை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த 2022 மே 17 என்றுதமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

17-05-2023 அரசாணை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது: இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘சிதம்பரம் கோயிலில் உள்ள கனகசபையில் 7 முதல் 10 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்யமுடியும். ஆனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு வரும் சூழலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் மேற்கொள்ள அனுமதித்தால் அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும். கோயிலில் அன்றாடம் நடைபெறும் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடைபெறும் சூழலில் பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதித்தால் வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த அரசாணை சட்டவிரோதமானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்,” என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

26-06-2023 திங்கட்கிழமைசரண்யா கொடுத்த புகார்: கோவிலில், அதிலும், விஷேசமான நாட்களில் எதற்க்கா பிரச்சினை என்று இத்தனை போலீசார் கோவிலில் நுழைவது, இருப்பது, நிச்சயமாக பக்தர்களுக்கு சங்கடமாக, தொந்தரவாக, திகைப்பாகத்தான் இருக்கும். ஏதோ குற்றம் நடந்தது போல போலீசார் குவிக்கப் பட்டிருப்பது, கோவில் ஆன்மீக நிலையினையே பாதிக்கும் முறைக்கு கொண்டு சென்றுள்ளது. 26-06-2023 திங்கட்கிழமை – சரண்யா கொடுத்த புகாரின் பேரில் 11 தீக்ஷிதர்களின் மீது போலீஸார் வழக்குத் தொடுத்துள்ளனர்[3]. இதற்கு மட்டும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தது போலும். தீக்ஷிதர்கள் அவரை தொந்தரவு செய்தனர் என்று புகார் கொடுத்துள்ளார். 19-06-2023 முதல் கனகசபையில் தரிசனம் அனுமதிக்கப் பட்டு வந்தது. 24-27 தேதிகளில் கூட்டம் அதிகம் என்பதனால் தடுக்கப் பட்டது. இதனை பிரச்சினை ஆக்கியிருக்கிறார்கள். 27-06-2023 செவ்வாய்கிழமை ஆனித்திருமஞ்சனம் பலகை எடுத்த பிறகு, படிகளில் பெண் போலீஸார் பலர் வேக-வேகமாக படிகட்டுகள் ஏறிச் செல்வது போன்று வீடியோ காட்டப் பட்டன. பிறகு அவர்கள் இறங்குவதும் தெரிந்தது. பிறகு என நடந்தது என்று தெரியவில்லை. பலகை எடுத்த பிறகு எத்தனை பேர் தரிசனத்திற்குச் சென்றனர்[4], என்னவாயிற்று என்றெல்லாமும் தெரியவில்லை. தீக்ஷிதர் சம்பிராதத்தை மீறியது தான் தெரிகிறது[5].

27-06-2023 கற்பக கணேச தீக்ஷிதர் புகார்: இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் கற்பக கணேச தீட்சிதர், பூஜையில் இருந்த தன்னை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகள் தள்ளிவிட்டு நிலைகுலையச் செய்ததாக, நகர காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியுள்ளார்[6]. அதில் அவர் கூறியிருப்பதாவது[7]: “சிதம்பர் நடராஜர் கோயிலில் நான் கடந்த 27-ம் தேதி செவ்வாய் கிழமை, பூஜைக்காரராக தினப்படி கோயில் பூஜை செய்யும் பணியில் இருந்தேன். மாலை 6.45 மணி அளவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் திடீரென கனகசபையில் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது, எனது ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் என்னை தள்ளிவிட்டு, நிலைகுலைய வைத்து, கனகசபைக்குள் நுழைந்து, என் பூஜை பணிக்கு இடையூறு செய்து எதிர்பாராத வகையில் என் மீது தாக்குதல் நடத்தினர். என் தந்தை எஸ்.எஸ்.ராஜா தீட்சிதர் உள்ளிட்ட சிலர் எனக்கு உதவ முன்வந்தனர். எதிர்பாராத தாக்குதலால் மயக்கமாகி விட்டேன். பூஜை பணியை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை உள்ளதால், உடல் வலி, மன வலியை பொறுத்துக் கொண்டு, தெய்வ பணியை இரவு 10 மணிக்கு முடித்தேன். மறுநாள் காலையில் வலியுடன் பொறுப்பை அன்றைய பூஜைக்காரரிடம் ஒப்படைத்து, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். என் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு அதிர்ச்சி, உடல் வலி உள்ளதாலும், நேரில் வந்து புகார் கொடுக்க மன தைரியம் இல்லாததாலும், புகாரை பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்[8]. புகார் மனுவின் நகல்களை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்.பி., சிதம்பரம் ஏஎஸ்பி ஆகியோருக்கும் அவர் அனுப்பியுள்ளார்[9].ஆனால், இதனை தீட்சிதர்கள் தெரிவித்த புகாரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்[10].

28-06-2023 – அனுமதிக்கப் பட்டது. தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது[11]., என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இதெல்லாம் முன்னர் ஆறுமுகசாமி என்ற ஒருவர் போராட்டம் என்றெல்லாம் செய்து வந்தது ஞாபகம் இருக்கலாம். 2017ல் அவர் காலமாகியப் பிறகு அத்தகைய பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்பொழுது, இந்த கனக சபை தரிசனம் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது போலும். தெய்வத் தமிழ் பேரவையும் ஆறுமுகசாமி போல பிரச்சினை உண்டாக்க  தோற்றுவிக்கப் பட்ட இயக்கம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Published : 30 Jun 2023 08:00 AM; Last Updated : 30 Jun 2023 08:00 AM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[3] On Monday night, police filed a case against 11 dikshithars based on a complaint received from Saranya. The case was filed under four sections of the IPC and section 4 of the Tamil Nadu Prohibition of Harassment of Women Act. However, the officials’ attempt to negotiate with the dikshithars for permission to allow devotees to Kanagasabai failed.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jun/27/hrce-dept-removes-dikshithars-board-from-chidambaram-temple-2588890.html

[4] கல்கி, அறநிலையத்துறை அதிகாரிகள் அத்துமீறல். சிதம்பரம் தீட்சிதர்கள் பரபரப்பு புகார்!, கல்கி, Published on : 29 Jun, 2023, 11:46 am

[5] https://kalkionline.com/news/tamilnadu/charity-department-officials-trespass-chidambaram-dikshidar-complains-of-excitement

[6] தினத்தந்தி, , “ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தாக்குதல்” – சிதம்பரம் தீட்சிதர் பரபரப்பு புகார், By தந்தி டிவி, 29 ஜூன் 2023 2:13 PM

[7] https://www.thanthitv.com/latest-news/attack-to-cut-off-clothes-and-wool-chidambaram-dikshithar-complains-196056

[8] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Last Updated : 30 Jun, 2023 08:00 AM.

[9] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டு தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன? மறுக்கும் அறநிலையத்துறை.!, vinoth kumar, First Published Jun 29, 2023, 11:14 AM IST,   Last Updated Jun 29, 2023, 11:18 AM IST

[11] தமிழ்.ஒன்.இந்தியா, கனகசபை கலாட்டா.. நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டதா? நடந்தது என்ன?, By Jeyalakshmi C Published: Thursday, June 29, 2023, 10:09 [IST]

https://tamil.oneindia.com/news/cuddalore/chidambaram-natarajar-temple-deekshithars-poonal-is-cut-what-happened-in-kanagasabai-518851.html

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன – ஏதோ எதிர்மறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் புரிகிறது (2)

செப்ரெம்பர்14, 2021

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன – ஏதோ எதிர்மறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் புரிகிறது (2)

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி  சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின்வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்[1]. அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[2].

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும்! –பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம்: இவற்றிற்கு எல்லாம் பதில் கொடுப்பதைப் போன்று, நக்கிரனில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது[3]. இதில் புதியதாக எதுவும் இல்லை. ஏற்கெனவே தள்ளுபடி செய்யப் பட்ட தீர்ப்புகளை வைத்துக் கொண்டு, அவற்றையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு, ஸ்டாலினை, திமுகவை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சார ரீதியில் எழுதப் பட்டுள்ளது[4]. இவ்வாறு தான் பொய்களை வைத்டுக் கொண்டே திராவிடத்துவ கட்சிகள் 1960களிலிருந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. ஆட்சி-அதிகாரம் வைத்துக் கொண்டு, ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்து, கருத்துகளை, நிகழ்வுகளை மக்களின் மீது தீணித்து வருகின்றது. இப்பொழுது, சன் குழுமம், ஆட்சி-அதிகாரம், விளம்பர வியாபாரம்-வருமானம் அவற்றை பங்கு போட்டுக் கொள்ளும் கூட்டங்களாக மாறி விட்டதால், எல்லாமே, ஒரே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கின்றன.

திராவிடத்துவ, நாத்திகஇந்துவிரோதிகள் பல விசயங்களைக் கண்டுகொள்வதில்லை:

  1. அர்ச்சகர் பிரச்சினை நீதி மன்றத்திற்குச் சென்று வாத-விவாதங்களுக்கு உட்படுத்தப் படும் நிலையில், ஜாதிகளை மீறிய நிலை வருகின்றது.
  2. கோடிக் கணக்கான கோவில்கள், பலமுறைகளில், நிலைகளில், “மந்திர-தந்திர-யந்திர” வழிகளில், ஆகமங்கள்- ஆகமங்கள் இல்லாத என்ற வகைகளில் கட்டப் பட்டுள்ளன, மாற்றப் பட்டுள்ளது, மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன.
  3. நேராக கருவறைக்குச் செல்லும் போன்ற கோவில்கள், கருவறையைச் சுற்றி வரும் கோவில்கள், எட்டி நின்று வழிபடும் கோவில்கள், என்று பல வகைகள் உள்ளன.
  4. மிருக பலி இடுதல், இடக்கூடாது என்றுள்ள கோவில்கள், இரண்டையும் தனித்தனியாக செய்து கொள்ளலாம் என்றுள்ள கோவில்கள் என்றெல்லாம் உள்ளன.
  5. வருடத்திற்கு, மாதத்திற்கு, பட்சத்திற்குத் திறக்கும் கோவில்கள் உள்ளன. இல்லை, கருவறை சிலைகளுக்கு / விக்கிரகங்களுக்கு அப்பொழுது தான் பூஜை என்ற நிலையும் உள்ளது.
  6. ஒரு கோவிலுக்கு பல மடங்கள் உரிமை கொண்டாடும் நிலையில், அம்மடங்கள் மாறி-மாறி பூஜை செய்து வரும் முறைகளும் உள்ளன.
  7. வேதங்களுக்கு, வேதாங்களுக்கு, ஆகமங்களுக்கு உட்பட்டது என்று கோவில்கள் இருக்கின்றன.
  8. ஜைன-பௌத்த இடையூறுகள், ஆக்கிரமிப்புகள், விக்கிரங்களை மாற்றி வைத்த நிலைகள் என்றெல்லாம் பிரச்சினை இருந்தன, அவை, இப்பொழுது ஆகமப் பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.
  9. இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்களின் கோவில்கள் அவ்வாறே நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.
  10. இடைக் கால, முகமதியர்களின் கோவில் இடிப்புகள், கருவறை விக்கிரகங்கள் உடைப்பு, போன்ற அவமதிப்புகள், அநாச்சாரங்கள் முதலியவற்றிற்குப் பிறகு, பல விதிமுறைகள் சேர்க்கப் பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
  11. அத்தகைய கோவில்களில், அம்முறைகளிலேயே ஆராதனை, கொண்டாட்டங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால், இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, சட்டங்களை, நீதிமன்ற தீர்ப்புகளை, ஆகமங்களை, மெற்குறிப்பிடப் பட்ட பிரச்சினைகளை மறைத்து, அர்ச்சகர் நியமனத்தை அரசியல் ஆக்கப் பட்டுள்ளது.

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: நாத்திகம், அதிலும் இந்துவிரோத நாத்திகம் பின்பற்றி வரும், இந்த திராவிடத்துவத் தலைவர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்களின் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப நாங்கள் அர்ச்சகர் நியமனத்தைச் செய்வோம் என்று பிடிவாதமாகச் செய்துள்ளனர். திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. ஏனெனில், எம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும், உடனடியாக டாக்டராகி, மருத்துவம் செய்து விட முடியாது, அறுவை சிகிச்சை செய்கிறேன் என்று, ஆபரேஷன் தியேட்டர்களில் நுழைந்து விட முடியாது.
  3. மருத்துவத்தில் உள்ள பல பிரிவுகளில் முறையாகப் படித்து, தேர்ச்சி பெற்று அனுபவம் பெற்றப் பிறகே, மருத்துவம் செய்யமுடியும். அவ்வாறில்லாமல், வேலையில் இறங்கமுடியாது. ஒரு வருடத்தில் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு டாக்டர் ஆகிவிடமுடியாது.
  4. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகளுக்கு, வேலைகளுக்கு டிப்ளோமா, சர்டிபிகேட், டிகிரி படிப்புகள் ஆரம்பித்து, ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என்று வைத்து, படித்து முடித்து சான்றிதழ் பெற்றுக் கொண்டால், அவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று ஆகி விட முடியுமா?
  5. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  6. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  7. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  8. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  9. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.
  10. ஒரு வருடத்தில் படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு, அர்ச்சகர் ஆகி விடலாம் என்பது வேடிக்கையான விசயம் என்பது எல்லொருக்கும் தெரிந்துள்ளது.

கொரோனா காலம் நீங்கியதுடன், இந்த திட்டத்தின் பின்னனி வெளிப்பட்டு விடும்: ஆக, இவையெல்லாம், அவர்களுக்குப் புரியவில்லை என்பதில்லை. எனவே, இந்த சர்டிபிகேட் அர்ச்சகர்களை கோவில்களுக்குள் நுழைப்பது, பக்தியோ, சிரத்தையோ, கடவுளின் மீதான காதலோ, விக்கிரகங்க்ளைக் காக்க வேண்டும் என்ற உருகலோ இல்லை. கோவில்களுக்குள் நுழைந்து, விவரங்களை அறிந்து, நாத்திக ரீதியில், ஏதோ எதிமறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நுழைப்பப் பட்டதே ஆகும். மாலிக்காபூர்-ஔரங்கசீப் போன்ற எண்ணங்களுடன் நுழைதால், நிச்சயமாக அதே விளைவுகள் தான் உண்டாகும். உலகமே உண்மை அறிய நேரிடும். உண்மையினை யாரும் மறைக்க முடியாது, அது சரித்திரமாகும்.

© வேதபிரகாஷ்

14-09-2021


[1] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஸ்டாலின் தப்பிப்பார். சு.சாமி கடும் எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.

[2] https://tamil.asianetnews.com/politics/subramaniam-swamy-issued-a-stern-warning-to-stalin-qxytbo

[3] நக்கீரன், ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும்! –பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம், Published on 08/09/2021 (06:07) | Edited on 08/09/2021 (07:27).

[4] https://www.nakkheeran.in/nakkheeran/agama-tantra-and-caste-mantra-peradr-v-sivaprakasam/agama-tantra-and-caste-mantra-peradr

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

செப்ரெம்பர்14, 2021

ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)

2015ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்: கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது[1]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2]. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

2015 முதல் 2021 வரை: இரட்டை வேடம் போட்டு வரும் திராவிட கட்சிகள், ஒரு வருட அர்ச்சகர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அர்ச்சகர் வேலை கொடுக்கிறோம் என்று, விளம்பரத்திற்காக அரசியல் செய்து வருகின்றன. அதிமுக சட்டப் பிரச்சினையை அறிந்து, ஆகமங்கள் இல்லாத கோவில்களுக்கு இருவரை அர்ச்சகராக நியமித்து அமைதியானது. இப்பொழுது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வேண்டுமென்றே, சட்டமீறலைச் செய்ய, இவ்வாறு செய்துள்ளது. நீதிமன்றங்களுக்குச் சென்று, வருவதற்குள் ஆண்டுகள் ஆகிவிடும், அதுவரை பார்த்துக் கொள்ளலாம் என்ற வீம்புடன் வேலைக்கு வைத்துள்ளது தெரிகிறது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மாநிலத்தில் உள்ள 38 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது[3]. இது தொடர்பான வேறு வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதால், இம்மனுவை அவற்றோடு சேர்த்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இந்த சமர்ப்பித்தலைப் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை முதல் பெஞ்சிற்கு அனுப்புமாறு பதிவகத்திற்கு உத்தரவிட்டது[4].

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[5]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[6]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[7]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[8]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

© வேதபிரகாஷ்

14-09-2021


[1] விகடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, Published: 16 Dec 2015 11 AM; Updated:16 Dec 2015 11 AM.

[2] https://www.vikatan.com/spiritual/temples/56403-only-qualified-people-can-become-priests

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முறையாக பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம்; உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம், Written By WebDesk, Updated: August 17, 2021 11:51:03 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/trained-persons-can-be-priest-tamilnadu-govt-said-to-high-court-333167/

[5] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[7] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறதுஅர்ச்சகர் பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!

முரசொலியின் விளக்கம் ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  3. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  4. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  5. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  6. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.

சர்டிபிகேட் அர்ச்சகர்களும், பாரம்பரிய அர்ச்சகர்களும்:

  1. 60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
  2. “இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
  3. இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
  4. அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
  5. மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
  6. எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
  7. இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
  8. உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
  9. அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
  10. தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.

© வேதபிரகாஷ்

21-08-2021

70-100 வருடங்களாக இந்து மதத்தைத் தூஷித்து, சிலைகளை உடைத்து, திருடி, கோவில்களைக் கொள்ளையடித்து, இப்பொழுது, அர்ச்சகர் போர்வையில் உள்ளே நுழைவதேன்?
ஆகமங்கள் பற்றி அறியாமல், சக்திவேல் முருகன் போன்றோரை வைத்துக் கொண்டு, கோவில்களை சூரையாட திட்டம் போடப் பட்டுள்ளதா?
சர்டிபிகேட் வாங்கினவன் எல்லாம் அர்ச்சகர் ஆகி விடலாம் என்றால்,
பிஇ / பிடெக் படித்தவன் ஏன் இஞ்சினியர் ஆவதில்லை?
இவர்கள் சொல்வது உண்மை என்றால், அவ்வாறு செய்தவர்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!: இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி[1], “தமிழ்நாடு அர்ச்சகர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் அர்ச்சகர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்[2]. இதைத்தான், “அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி! ,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் இந்துமதத்தை தூஷித்து, 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி, எழுதி வருகின்றனர். இவற்றை எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறது. இப்பொழுது, அரசியல் ஆட்சி, அதிகாரம், பலம் மற்றும் ஊடக அசுர பிரச்சாரம் எல்லாம் இருப்பதால், இத்தகைய யுக்திகளும் கையாளப் படுகின்றன.

பணியில் உள்ள அர்ச்சகர் வெளியேற்றப் பட்டனர்: பணி ஆணையை பெற்ற அவர்கள் 15-08-2021 அன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது[3]. அதில் பேசும் குருக்கள் ஒருவர், “நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம், நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா[4]. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும், சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது[5]. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா? ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்[6]. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினை போன்று விவரிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், “இந்துக்கள்” போர்வையில், நாத்திகர்-இந்துவிரோதிகள் “அர்ச்சகர்” போர்வையில் கோவிலுக்குள் நுழைவது தான்.

ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது[7]. அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்[8]. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார். 60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

19-08-2021 – கருணாநிதி –  கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது[9]: முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.  ‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது. இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.

19-08-2021 முரசொலி தலையங்கம்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறதுசேகர் பாபு:. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே,’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது[10].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] கலைஞர் செய்திகள், அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!, Vignesh Selvaraj, Aug 18, 2021 |11:58:20 am.

[2] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/subramanian-swamy-on-dmk-govts-all-castes-become-priest/a83248fd-b108-4bc0-b7f4-a54a8a66bcc7/paytm

[3] தினசரி, திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல், செங்கோட்டை ஶ்ரீராம், 17-08-2021. 12.27 PM.

[4] https://dhinasari.com/latest-news/220137-temple-archagas-unlawfully-evacuated-from-temples-in-tamilnadu-hrnce.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளியேற்றப்படும் பிராமணர்கள்கோயில் குருக்களின் வைரல் ஆடியோகுஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST; Last Updated Aug 16, 2021, 1:04 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/brahmins-to-be-expelled-viral-audio-of-temple-priests-qxx91w

[7] நியூஸ்.7.தமிழ், அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில், by EzhilarasanAugust 19, 2021

[8] https://news7tamil.live/not-the-intention-to-expel-priest-on-duty-minister-sekarbabu.html

[9] கலைஞர் செய்திகள், ஆகமம்பின்னால் இருப்பதுஆரியமே’.. சு.சுவாமி மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது” : முரசொலி!, Prem Kumar – Aug 20, 2021 | 08:58:49 am.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/murasoli-editorial-said-this-is-not-a-government-that-is-afraid-of-all-the-threats-of-subramaniam/24245a8d-23ee-4322-a4bf-1dfdc7d3ca62

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது:  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு அரசியல் விழா போன்று தான் இருந்தது, பேச்சாளர்களும் அவ்வாறே பேசினார்கள். அந்த மடாதிபதிகள் மடத்தின் நிலங்களை விற்றது போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், அவர்களில் சிலர் நாங்கள் “இந்துக்கள் அல்ல,” என்றும் பேசியிருக்கிறார்கள். சுகி சிவம் பற்றியும் நிலைமை மாறி விட்டது. ஏனெனில், காசு வாங்கிக் கொண்டு, மேடைக்கு ஏற்றபடி பேசுகின்ற ஆளாகி விட்டதால், அவரை ஆன்மீகத்தில் சேர்க்க முடியாது. ஒரு அரசியல் ஏஜென்டாக செயல்பட ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது.முன்பு, இவரது புத்தகத்தை திக வெளியிட்டது, இப்பொழுது, திமுக, இந்நிகழ்ச்சிக்கு வரவேற்று பேச அனுமதித்துள்ளது.

19-08-2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை: கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது[1]. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன் 19-08-2021 வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை[2]: “கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் விடுவிக்கப் படமாட்டார்கள் என்பதை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம். புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதுகுறித்த பரிந்துரைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். பணிவரன்முறைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் உடனடியாக அனுப்பலாம். இது தொடா்பாக தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவது விரும்பத்தக்கதல்ல. வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால் அதற்கு இணை ஆணையா்கள் அல்லது உதவி ஆணையா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம். இதுகுறித்து கோயில் அலுவலா்களுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினைவேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள்: “தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினை”யில் வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாகும் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அந்த போர்வையிலும், ஆட்களை கூட்டி வந்து உள்ளே நுழைத்து விடுவார்களா? அடுத்தது, “தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,” என்றால், இதில் என்ன தேவையற்ற சிக்கலான செய்திகள்அவை எப்படி உருவாகும், அவற்றை உருவாக்க யார் இருக்கின்றனர் போன்ற கேள்விகளும் எழும்.  “உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,”  அத்தகையோர் உள்ளதை ஆணையர் அறிந்துள்ளார் போலும். ஐ.ஏ.எஸ் அதிகாரி இவ்வாறு சொதப்பலாக ஆணையிடுவதிலிருந்தே, இவர் அரசியல்வாதிகள் / ஆட்சியாளர்கள் / சித்தாந்தவாதிகள் சொல்வதைக் கேட்டு நடக்கிறார் என்பதும் தெரிகிறது. சட்டப் படி நடக்கிறது என்றால், சட்டப் படி நடக்காமல் இருக்கும்போது, இவர் தாராளமாக எடுத்துக் காட்டலாம். இதே போல “தினக்கூலி” முறையில் மற்றவர்களை, மற்ற துறையில் ஓய்வு பெற்றவர்களை, மூப்படைந்தவர்களை நியமிக்க முடியுமா?

கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்: கோவில் அர்ச்சகர் பணியில் ஓய்வு, மூப்பைத் தாண்டியோர் போன்றவை உள்ளனவா என்று தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், ஏதோ கூலிக்கு வேலை செய்யும் தொழில் போன்று அர்ச்சகர் சேவையை மாற்றி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏதோ, நாட்கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போன்று 40-60 வருடங்களாக சேவை செய்து வரும் அர்ச்சகர்களைக் கேவலப் படுத்தும் வகையில் ஆணையிட்டிருப்பது, மிக மோசமாக இருக்கிறது. “கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்,” என்றதில், அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. விடியற்காலையில் எழுந்து, குளித்து, பூஜைக்கு ஏற்பாடு செய்து, காலை 4 மணி, 4 மணி என்று பூஜை செய்து வருபவர்கள், எதையும் பொருட்படுத்தாமல் செய்து வருகின்றனர். இனிமேல், புதியதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அத்தகையோர், வேலை செய்யும் போது, இவர்கள், அவர்களிடம் தினக் கூலிக்கு வேலை செய வேண்டும் என்றால், என்ன அது? இங்கு தான் இந்துவிரோதிகளின் திட்டம் வெளிப்படுகிறது. அந்த புதிய பூஜாரிகளின் நிலையும் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான பூஜை, சேவை என்றால், இத்தகைய, ப்ரித்துக் காட்டும் கீழ்த்தரமான எண்ணங்கள் வராது.

17-08-2021 – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தது: ஸ்டாலின் கூறியது, “அமைச்சர் தெளிவாக விளக்கம் சொல்லி உள்ளார். அது குறித்து, நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். .வெ.ரா., நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்என, கருணாநிதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அது நடைமுறைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை வழங்கி இருக்கிறோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, சில காரியங்களை செய்கின்றனர்[3]. கோயில்களில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தால் அரசு அதில் உரிய நடவடிக்கை எடுக்கும். ஆனால் தேவையில்லாமல், சமூகநீதியைப் பாழ்படுத்தும் வகையில் விஷம பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது[4]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்திட்டத்தை சீர்குலைக்க சிலர் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர்[5]. சமூக நீதியைப் பாழ்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்[6]. அமைச்சர் பேசும் போது, ‘சில ஊடகத்தில்என சொன்னார். நான் ஊடகத்தினரை குறை சொல்ல மாட்டேன். ஆனால், அதை பயன்படுத்தி, சமூக வலைதளத்தில் சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். யாரையும் எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து, புதிதாக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை[7]. அப்படி எங்காவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை அசு நிச்சயமாக எடுக்கும்[8]; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.எனவே, வேண்டுமென்றே அதை கொச்சைப்படுத்தி, அரசியலுக்காக அல்லது சமூக நீதியை பாழடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவர்”.

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] தினமணி, கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக் கூலி அடிப்படையில் பணி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு, By DIN  |   Published on : 20th August 2021 06:48 AM.

[2]https://www.dinamani.com/tamilnadu/2021/aug/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3683294.html

[3] விகடன், `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தைச் சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்’ – ஸ்டாலின், ஜூனியர் விகடன் டீம், Published:17 Aug 2021 9 AMUpdated:17 Aug 2021 2 PM

[4] https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-17-08-2021-just-in-live-updates

[5] கலைஞர் செய்திகள், சமூக நீதியை சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்; இது உண்மையில்லை” : தெளிவுபடுத்திய முதல்வர் மு..ஸ்டாலின்!, Vignesh Selvaraj, Updated on : 17 August 2021, 01:11 PM

[6] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/17/some-people-trying-to-sabotage-all-caste-priest-scheme-says-cm-mk-stalin

[7] தினமலர், அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளைஆதாரத்தோடு சொல்லுங்கள்!, Updated : ஆக 18, 2021  01:28 |  Added : ஆக 17, 2021

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2825317

மு.க.ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

ஓகஸ்ட்11, 2021

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம் – தயாராக இருக்கும் இந்து-அறநிலைய அமைச்சர்!

மு..ஸ்டாலின் உத்தரவு – பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத நகைகளை உருக்கி கட்டிகளாக்கி முதலீடு செய்யலாம்: கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டு தேறும் வருமானம் கிடைக்கும். என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்[1]. சேகர்பாபு, இவ்வாறு கூறி, அத்திட்டத்தை அமூல் படுத்த திட்டம் தீட்டியுள்ளது தெரிகிறது[2]. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது[3]. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்[4]. ஆனான பட்ட, மோடியே, இத்தகைய ஆலோசனை சொன்ன போது, பெரும்பாலான கோவில்கள் ஒப்புக் கொள்ளவில்லை[5]. பக்தர்களின் காணிக்கைக்களை அவ்வாறு உருக்குவது, மிகப் பெரிய பாவம் என்றும் எடுத்துக் காட்டினர்[6]. ஏனெனில் நம்பிக்கைக்கு உகந்த விசயங்களில், நம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தலையிட உரிமை இல்லை.

திராவிட-நாத்திக-இந்துவிரோத-விக்கிரங்களை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை: பக்தர்கள் கடவுளுக்கு பிரியமுடன், பக்தியுடன் கொடுக்கும் நகைகள் பயன்பாட்டுடன் உள்ளது-இல்லை என்பதை ஆட்சியாளர் தீர்மானிக்க முடியாது. லட்சக் கணக்கான பக்தர்கள், ஏழை-பணக்காரன், படித்தவன்– படிக்காதவன் போன்ற நிலைகளைத் தாண்டி, பக்தியுடன் கடவுள்ளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் படும் நகைகளை அவ்வாறேல்லாம் மாற்றுவது, வியாபாரரீதியில் பயன்படுத்துவது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது, போன்றவற்றை செய்ய ஆட்சியாளர்களுக்கு, அதிலும், நாத்திகம் பேசி, இந்து மத்த்தைத் தொடர்ந்து பழித்து வரும் திராவிடத் தலைவர்கள் அத்தகைய விவகாரங்களில் மூக்கை உழைக்க எந்த முகாந்திரமோ, யோக்கியதையோ இல்லை என்பது மிக சாதாரணமாகத் தெரிகிறது.. தானம் கொடுத்த பக்தர்களின் உணர்வுகளை மீறிய செயல்களைச் செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சேகர் பாபுவை புகழும் சில ஊடகங்கள்: சமயம் TOI (Times of India) என்று சொல்லிக் கொண்டாலும், அது சேகர் பாபு புகழ் பாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கைகளின் பரவலுக்கான தீவிர முயற்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய சூழலில், மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பம்பரமாக சுழன்று சேகர் பாபு களப்பணியாற்றி வருகிறார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது, ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் பணியில் அமர்த்த நடவடிக்கை, கொரோனா காலத்தில் கோயில்களில் தயாரிக்கப்படும் உணவுகளை மருத்துவமனைகளுக்கு அளிப்பது என சேகர் பாபுவின் நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு தெரிவித்துள்ளார்[7]. மேலும், தமிழ்நாடு திருக்கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பார் என்றும் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்[8].

2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன: ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள, 2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன[9]. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும்[10]. இதன் மூலம் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். இதனை உடனடியாக மேற்கொள்ளத் தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என, அமைச்சர் கூறியுள்ளார். இக்குழுக்களில் இந்துவிரோதிகள், ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கூட நியமிக்கப் படுவர். இப்பொழுது, தமிழ்நாடு பாடநூல் துறை நிறுவனமே அதனை மெய்ப்பித்துள்ளது. நமக்கு விபரம் தெரிந்த வரையில், வங்கியில் நகையை அடமானமாக பெற்று, வட்டிக்கு கடன் கொடுப்பர். தங்க நகையை, ‘டிபாசிட்’ ஆக பெற்று, அதற்கு வட்டி வழங்குவதாக தெரியவில்லை[11]. மேலும், தமிழக கோவில்களில் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிமாக இருக்கும் என்றும், 2,000 கிலோ எனக் குறிப்பிடுவதில், ஏதும் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது[12]. இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில், ‘ஹிந்து’ என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது: தினமலரில், இதனை விமர்சித்து, கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. “ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது. நடப்பதை பார்த்தால், மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும், ‘குளோஸ்செய்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்னும் சில வாரங்களில் ஆயுத பூஜை வரவுள்ளது. இதை அரசு அலுவலகத்தில் கொண்டாட கூடாது என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பினாலும் ஆச்சரியமில்லை. வரும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் பொங்கல், தமிழ் ஆண்டு பிறப்பு, தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்காது என்று கருதலாம். இரண்யன் ஆட்சியில், ‘இரண்யாய நமஹஎன்று தானே சொல்லியாக வேண்டும். ‘ஓம் நமோ நாராயணாஎன சொல்ல முடியுமா என்ன?” விபூதி-குங்குமம் வைத்தே இந்துக்கள ஏமாற்றி விடுவோம் என்று சொன்னவரும் இன்று அமைச்சராக இருக்கிறார். ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, வீடியோ, புகைப் படங்கள், செய்திகள் எல்லாம் இன்றும் காணக் கிடைக்கின்றன. கருணாநிதியைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கோவில்களில் தங்க நகைகள், தங்க விக்கிரகம் முதலியவற்றில் எல்லாம் மோசடிகள் நடந்துள்ளன. ஆகவே, இந்நிலையில், தங்க அகைகளை உருக்குகிறேன் என்றால், அதில் கோடிகளில் ஊழல் செய்வர் என்பது திண்ணம். ஆகவே, இத்தகையோர், கோவில் விவகாரங்களிலிருந்து, தூரத்தில் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

11-08-2021


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில் தங்க நகைகள்.. முதல்வர் மு..ஸ்டாலின் வகுத்த திட்டம்.. புதிய தகவல் சொன்ன சேகர்பாபு!, By Rayar A Updated: Sunday, July 18, 2021, 10:19 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sekarbabu-has-said-that-more-than-rs-560-crore-of-temple-lands-have-been-recovered-durin-427355.html

[3] தினத்தந்தி, கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில்டெபாசிட்செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்., ஜூலை 27, 09:29 AM

[4] https://www.dailythanthi.com/amp/News/State/2021/07/27092913/Minister-Sekarbabu-informed-that-the-decision-was.vpf

[5] India Today, The Modi government wants gold idling in temple vaults to be part of the India growth story. The trusts aren’t enthusiastic , Amarnath K Menon, April 30, 2015; ISSUE DATE: May 11, 2015UPDATED: May 1, 2015 12:49 IST.

[6] https://www.indiatoday.in/magazine/religion/story/20150511-gold-akshaya-tritiya-world-gold-council-temple-818296-2015-04-30

[7] சமயம், கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டி: தமிழக அரசிடம் புதிய திட்டம்!, Manikandaprabu S | Samayam TamilUpdated: 23 Jul 2021, 11:35:00 AM

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/new-money-earning-scheme-to-be-implemented-from-temple-gold-in-tamilnadu/articleshow/84669132.cms

[9] சமயம், கோயில்கள் வருவாய் பெருக்க திமுக அமைச்சர் சேகர்பாபு சூப்பர் திட்டம்!,  Akash G | Samayam TamilUpdated: 24 Jul 2021, 08:28:00 AM.

[10] https://tamil.samayam.com/latest-news/salem/hindu-temples-gold-will-be-made-as-biscuits-will-be-kept-deposit-which-generates-income-minister-sekar-babu-new-plan-salem-byte/articleshow/84677474.cms

[11] தினமலர், இது உங்கள் இடம் : ‘இரண்யாய நமஹசொல்லணுமோ!, Updated : ஆக 03, 2021  03:15 |  Added : ஆக 03, 2021  03:12.

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2815320

இப்படி வேடம் போட்டு, ஓட்டுக் கேட்டு இந்துக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியில் பேச்சு, உருதுவில் போஸ்டர் இத்யாதிகள்.
இன்றைக்கு இவர் அமைச்சராக உள்ளார்!