நடராஜர் கோவில் நுழைவு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் நுழைவு போராட்டத்தின் பின்னணியும் ஒன்றே: அது இக்காலத்தைய கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்
கோவில்களைப்பற்றி இன்று யார்-யாரோ கவலைப்படுவது வினோதமாக இருக்கிறது! இந்துக்களைப் பற்றி அவதூறு பேசுவது, தூஷிப்பது, அவர்களுடைய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் முதலியவற்றைக் கேவலமாக, ஆபாசமாக, அசிங்கமாக பேசுவது, மத-நூல்கள்-வேதம், உபநிஷத்,வேதாந்தம் முதலியவற்றைப் படித்துப் பார்க்காமலேயே எல்லாம் தெரிந்தது போல விமர்சிப்பது[1], குறைகூறுவது ஏன் குற்றாஞ்ச்சாட்டுவது, அடிப்படை ஞானம் கூட தெரிந்து கொள்ளாமல், அதிகப்பிரசங்கித்தனமாக மாமேதைப் போல பேசுவது-எழுதுவது[2], என்ற நிலையில் தமிழகத்தில் அடிகமான அறிவு ஜீவிகள் உள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால், தமிழ்-தமிழர்கள் என்ற போர்வையில், இந்திய-விரோதிகள் இணைத்தளங்களில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதும் தொடர்ந்த்கு நடந்து வருகிறது. அந்நிலையில் அவர்களுடைய ஆர்வம், பரிவு, கவலை, அக்கரை முதலியன கோவில்களின்மீது திரும்பியிருப்பது ஆன்மீக மர்மமாக, திராவிட ரகசியமாக, தமிழ்ப்புதிராக உள்ளது எனலாம்.
கிருத்துவ-முஸ்லீம்-நாத்திக கோஷ்டிகளின் படையெடுப்புதான்: இடைக்காலத்தில் முகமதியர்கள், 16-17 நூற்றாண்டுகளில் ஐரோப்பியல்க் கிருத்துவர்கள், 19 நூற்றாண்டில் இருவரும் சேர்ந்து செயல்பட்டது, 20ம் நூற்றாண்டில் சித்தாந்த ரீதியில் இணந்து செயல்பட்டது, இப்பொழுது குறிப்பாக இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். காலம் மாறியதால் ஆயுதங்கள், முறைகள், வழிகள், உடைகள், பேச்சசுகள், எழுத்துகள் முதலியன மாறியுள்ளன –
- நாத்திக கோஷ்டிகள் (திராவிடம், தமிழ், ஸ்ரீலங்கைத் தமிழர் என்றேல்லாம் கொடிபிடித்துக் கொண்டு அலையும் கூட்டங்கள்)
- கிருத்துவக் கூட்டங்கள் (மனித-உரிமைகள், பெண்கள்-உரிமை, சிறுவர்-உரிமை…………..என்ற பல போர்வையில் வேலை செய்யும் முழுக்கள்)
- முஸ்லீம் இயக்கங்கள் (அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத, ஜிஹாதி கோஷ்டிகள்)
- கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் (சீனா, ருஷ்யா மற்ற நாடுகளின் அடிவருடிகளாக இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் தேசவிரோதிகள்)
- மாவோயிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே முகமூடிகளை அணிந்துகொண்டு வேலைசெய்யும்)
- செக்யூலரிஸ்ட்டுகள் (இதில் மேற்குறிப்பிட்ட எல்லாமே வேலைசெய்யும், ஆனால், கொஞ்சம் படித்தவர்கள் போலக் காட்டிக்கொண்டு கழுதை அறுக்கும் நயவஞ்சகர்கள்)
இதில் வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனர்களும் இதில் இருப்பார்கள். அவர்களை மற்றவர்கள் மனதிற்குள் கருவிக்கொண்டிருந்தாலும், வெளியில் மதிப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். சமீபத்தில் வரதராஜனுக்கு நேர்ந்த கதியை இங்குக் குறிப்பிடலாம்[3].
நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு (ஏப்ரல் 11,2010)[4]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக் கோரி, ஏழைகள் முன்னேற்றக் கழகம்[5] சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[6]. சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஏழைகள் முன்னேற்றக்கழக மாநில பொதுச் செயலர் அர்ச்சுனன், உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி[7] தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ‘நந்தனார் தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து விட்டனர். எனவே, ஆதிதிராவிட, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என கூறியுள்ளனர்[8]. இப்படியெல்லாம் “ஐடியா” கொடுப்பது யார் என்று பார்த்தால் இவர்களுடைய சித்தாந்தம் எல்லாம் வெளுத்துவிடுகிறது. ஏனெனில், அடிப்படையில் உள்ள சட்டநிலைக்கூட தெரியாமல் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறிக்கொள்வது வேடிக்கைத்தான்.
நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது (ஜூலை 15,2010): சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் நுழைவு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன் உள் ளிட்ட 473 பேர் கைது செய்யப் பட்டனர்[9]. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப்பதை கண்டித்து, தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் செல்லும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி[10]யினர் அறிவித்தனர்.
சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்[11]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக[12] இன்று புதன்கிழமை (14-07-2010) ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய நுழைவு போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் நடந்த பாதை தற்போது அடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலை நாட்டும் வகை யிலும் தீண்டாமையின் அடையாளத்தை அகற்றும் வகையிலும் நந்தனார் நடந்து சென்ற அந்த பாதையின் வழியாக பெருந்திரளான மக்கள் புதனன்று ஆலய நுழைவு நடத்திட உள்ளனர். இந்த எழுச்சிமிகு இயக்கத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பால கிருஷ்ணன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பங்கேற்றக் கூட்டங்கள், நபர்கள், அவர்களின் பின்னணி: அதன்படி நேற்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகில் இருந்து –
- மாநில தலைவர் சம்பத் தலைமையில்
- பெரம்பூர் எம்.எல்.ஏ., மகேந்திரன்,
- விவசாயிகள் சங்க செய லாளர் பாலகிருஷ்ணன்,
- மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர்கள் தனசேகரன்,
- மூசா,
- மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,
- தீண்டாமை ஒழிப்பு மாவட்ட அமைப்பாளர் துரைராஜ்,
- தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்,
- அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ஸ்ரீரங்கன் பிரகாஷ்,
- மனித உரிமை கட்சி விஸ்வநாதன்
உள்ளிட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களை நடராஜர் கோவில் தெற்கு வாயிலில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தீர்வு ஏற்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தெற்கு வீதியில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள் உள்ளிட்ட 473 பேரை போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த பிரச்சினையைப் பற்றி மற்றவர்களும் விவாதிக்கின்றது வியப்பாக உள்ளது[13]. இனி அவர்களுடைய சார்புடைய தளத்தில் காண்ப்படுவதைக் காண்போம்.
சிதம்பரம் நந்தன் நடந்த பாதையைத் திறக்க போராட்டம்- 600 பேர் கைது: சிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி புத னன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடை பெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக்கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத் தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு கோபுர வாயில்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன், நடராசரை தரிசிக்க தெற்கு கோபுர வாயில் அருகே உள்ள வழியில் சென்றார். அந்தணர்கள் அன்று, ஆலயம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி நந்தனை தீக்கிரையாக்கி, பின்னர் அவர் நெருப்பில் இறங்கி தன்னை புனிதப் படுத்திக்கொண்டு நடராச ரோடு ஐக்கியமாகிவிட்டதாக கதை கட்டி விட்டனர். மேலும், நந்தன் சென்ற வாயில் கதவை மூடி, அதன் பின்னணியில் சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர். தீண்டாமைக் கொடு மையின் மூலஸ்தானம்போல் இருக்கும் இந்தச் சுவரை இடித்து, கதவைத் திறக்க, ஆலயத்தை தனது பொறுப் பில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதனன்று போராட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத் திருந்தது.நகரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலிருந்து, பேரணி புறப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணிக்கு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் தலைமை தாங்கினார். தடுப்புச்சுவரை அகற்றக்கோரி ஊர்வலமாகச் சென்றவர்கள், தெற்கு கோபுர வாயில் அருகில் வந்தபோது காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கே கயிற்றுத் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. சிறிது நேரம் அங்கே பதட்டமான சூழல் உருவானது. பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்தனர்.
மூசா, சாமுவேல் முதலியோருக்கு இதில் என்ன சம்பந்தம்? பின்னர், கோட்டாட்சி யர் ராமராஜ், வட்டாட்சியர் காமராஜ், செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில்[14] உயர் அதிகாரிகள்[15] யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[16]. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் தடுப்புச் சுவர் அகற்றப்படுவது குறித்து வாக்குறுதி எதுவும் அளிக்க மறுத்தனர்[17]. இதனால், அதிருப்தி அடைந்த ஊர்வலத்தினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றது. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியின் தலைவர்களையும், தொண்டர்களை யும் காவல்துறையினர் கைது செய்தனர். 60 பெண் கள் உட்பட சுமார் 600 பேரை கைது செய்தனர்.
சம்பந்தமேயில்லாத ஆட்களின் போராட்டம் விஷமத்தனமேயன்றி நன்மைக்காக இல்லை: இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், பி. செல்வசிங், பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் எஸ். தனசேகரன், மூசா, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன், அம்பேத்கர், இந்திய குடியரசு கட்சி சார்பில் அ.த.ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட்சியின் எல்.ஆர்.விஸ்வநா தன், ஆதி தமிழர் பேரவை மாநில தொண்டரணி தலைவர் வீரமுருகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.துரைராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.
“சுவரை அகற்றுவோம்” –சுவர்களை அகற்றுவோம் என்றால், பிறகு சுவர்களே எங்குமே தேவையிலையே: நடராசர் ஆலயத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவரை அரசு அப்புறப்படுத்தாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியே அதனை அப்புறப்படுத்தும் என்று பி. சம்பத் கூறினார். சிதம்பரத்தில் நடை பெற்ற போராட்டத்தை யொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நந்தனார் சென்ற தெற்குவாயில் தீட்டுப்பட்டு விட்டது என்று ஆதிக்க சக்தியினரால் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெட்கக் கேடானது. இதை அப்புறப்படுத்தக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்துகிறோம்,” என்றார். கே. பாலகிருஷ்ணன் போராட்டம் பற்றி கூறுகையில், “சாதிக் கொடுமைக்கு உள்ளான நந்தனார் ஆலயத்தில் நுழைந்தான் என்ற காரணத்திற்காக அடைத்து வைப்பது, அறுசுவை உணவின் நடுவே மலத்தை அள்ளி வைப்பது போன்றதாகும்,” என்றார். “புனிதமான நடராசர் ஆலயத்தில் தீண்டாமையின் கோரவடிவமாக சுவர் நீடிப்பது அவமானத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசு அப்புறப்படுத்தவில்லை என்றால் தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை நாங்களே அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்”, என்றும் அவர் கூறினார்.
“நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக” செல்கிறார்களா மாலிக்காஃபூர் பாதையில் செல்கிறார்களா?: நந்தன் / நந்தனார் / நாயன்மார் ஒரு மாபெரும் சிவபக்தர். ஆனால், இவர்கள் எல்லோரும் யார்? கிருத்துவர்கள், முஸ்லீம்கள், நாத்திகர்கள், இந்திய-விரோதிகள், இந்து-விரோதிகள், தமிழ்-துரோகிகள் இப்படியுள்ளனர். கோவில்களை இடிக்கும், கொள்ளயெடிக்கும் கூட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதாவது அந்த ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள், ஜீஜன்பால்குகள், பெஸ்கிகள், கால்டுவெல்கள் முதலியோரையும் மிஞ்சும் வகையில் உள்ளனர். ஆக, இவர்கள் உள்ளே நுழைந்தால் என்னா ஆகும்?
நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம்[18] (ஜூலை 15,2010): சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது[19]. உண்டியல் வருமானம் அதிகரித்ததால் கோவிலில் அடுத்தடுத்து பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. ஐந்தாவது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி உண்டியல் திறந்தபோது, 2009 வரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வருமானம் கிடைத்தது[20]. நேற்று எட்டாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் எண்ணினர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது. கோவில், அரசு கட்டுப்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில், உண்டியல் மூலம் மட்டும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (வெளிநாட்டு கரன்சி மற்றும் வெள்ளி, தங்க நகைகள் போக) வருமானம் கிடைத்துள்ளது.
மாலிக்காஃபூர் பாதை செல்ல திட்டமா, சதியா? ஆக ஒருவேளை இதை மனதில் வைத்துக் கொண்டுதான் மாலிக்காஃபூர் போல அதே பாதையில் உள்ளே செல்வோம் என்று மிரட்டியதும் அந்த ஔரங்கசீப்பே நடவடிக்கை எடித்துவிட்டான் போலும்! ஒன்று ஒன்பதாக ஆகும்போது, வரும்படியும் அதிகமாகத்தானே ஆகும். இனி கோவில் பணத்தை நாத்திக அரசு எவ்வாறெல்லாம் உபயோகிக்கும் என்று யாருக்குத்தெரியும்?
வேதபிரகாஷ்
16-07-2010
[1] தமிழகத்தில் பெரும்பாலான பேச்சாளர்கள், எழுத்தாளர்களிடையே இந்த போக்கு உள்ளது. மாநாடுகளில், கருத்தரங்களில் மனுஸ்மிருதியைப் பற்றி அளந்து கொட்டுவர், ஆனால் எத்தனையாவது சுலோகத்தில் அது உள்ளது என்று கேட்டால் முழிப்பார்கள்; எந்த மூலத்ட்தைப் படித்தீர்கள் என்றால், இது எல்லொருக்கும் தெரிந்த விஷயம்தானே என்பார்கள். ஆக மூலத்தைக் கூடப் படிக்காமல் அல்லது அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளமால், தொடர்ந்து அரைத்தமாவையே அரைத்துக் கொண்டு 40-60 ஆண்டுகளைக் கழித்து வருகிறார்கள்.
[2] அம்பேத்கர் புத்தகங்களைப் படிக்காமல், மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு அல்லது இரண்டாம்தர எழுத்துக்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்துமதத்தை விமர்ஷிக்கும் போக்கு கேவலமானது.
[3] இதைத் தவிர பல ஐயர்கள் மாட்டியுள்ளர்கள். அவற்றைப் பற்றிய செய்திகளும் வந்துள்ளன, சில மறைக்கப்பட்டுள்ளன.
[4] இதே நடவடிக்கை-முறை சிதம்பரம் கோவில் அறத்துறைக்குள் வருவதற்கும், ஆறுமுகசாமி போர்வையில் நடந்தேரியுள்ளதை காணலாம்.
[5] இப்படி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இயக்கங்களின் பின்னணி “ஏழைகளாக” இல்லை, கிருத்துவர்கள்தாம் உள்ளனர்.
[6] தினமலர், நடராஜர் கோவில் தெற்கு வாயில் திறக்க வழக்கு, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23942
[7] ஏதோ பல இயக்கங்கள் உள்ளது மாதிரியும், அவற்றின் ஒட்டு மொத்தமான பிரதிநிதிகளின் பிரதிநிதியே இவர்கள்தாம் என்ற பொலித்தனத்துடன் செயல்படும் போக்கு. இதை தெய்வநாயகம் செயல்பாட்டில் காணலாம்.
[8] பல கோவில்களின் நான்கு பிரதான கதவுகளில் ஒன்று அல்லது இரண்டுதான் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது சாஸ்திரங்களுக்கு விரோதமானது என்றாலும், பாதுகாப்பு என்று அடைத்துவைத்துள்ளர்கள். மதுரை போன்ற கோவில்களில் உண்மையான பக்தர்கள் உள்ளே நுழௌயவே, ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்கிறார்கள். ஆகவே, இவ்வழக்கு கருப்பு-சிவப்பு-பச்சைப் பரிவாரங்களின் கூட்டுச்செயலாகத் தெரிகிறது.
[9] தினமலர், நடராஜர் கோவில் நுழைவு போராட்டம்எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39956
[10] தமிழ்நாட்டில் எத்தனை முன்னணிகள் உள்ளன என்று பார்த்தால் தெரிந்து விடும், இவர்களின் தோத்ற்ற்ம், பதிவு, செயல்பாடு, பணப்போக்குவரத்து முதலியன.
[11] http://inioru.com/?p=15047
[12] அதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா என்று தெரிவவில்லை. பெரியபுராணத்தை ஒழுங்காக தமிழில் படித்து அர்த்தம் தெரிந்து கொண்டிருந்தால், இவ்வாறான தமாழாக்கள் எல்லாம் செய்யமாட்டார்கள்.
[13] http://thamilislam.wordpress.com
[14] இந்து சமய அறநிலையத்துறை ஒன்றும் இந்துக்களுக்காக செய்படுவதில்லை. ஆக, இந்துக்களின் கோவிலைப் பற்றி இப்படி மற்றவர்கள் எல்லோருமே மூக்கைநுழைத்துக் கொண்டு வந்துள்ளது வேடிக்கைதான்.
[15] இதிலென்ன “உயர் அதிகாரிகள்”, “தாழ் அதிகாரிகள்” என்ற பேதமெல்லாம்? சித்தாந்த குழப்பவாதிகள் என்று அவர்களது எழுத்துகளிலேயே தெரிகிறது. மேலும், துறையே இந்து-விரோதமாக செயல்பட்ம்போது, அதிகாரிகள் வெறும் கைப்பாவைகளே.
[16] இங்கு தெய்வநாயகம் போக்கு, திட்டம், செயல்முறை முதலியன அப்படியே வெளிப்படுகிறது, அதாவது அந்த கபாலீஸ்வரர் நுழைவு போராட்டம் என்கின்ற கிருத்துவ-நாத்திக விஷமிக் கூட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது.
[17] இவர்கள் என்ன, இந்திய சமுதாயத்தினர் ஒட்டுமொத்த பிரதிநிதிகளா, காவலர்களா, யார்? திடீரென்று இப்படி பெயர்களை வைத்துக் கொண்டு, கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு, ஒட்டுமொத்தமாக எல்லா இந்தியர்களையும், இந்துக்களையும் ஏமாற்றிவிடமுடியுமா?
[18] நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம், ஜூலை 15,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39584
[19] கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக நடராஜர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியல் வைக்கப்பட்டது.
[20] கடந்த மார்ச் 10ம் தேதி ஆறாவது முறையாக உண்டியல் திறந்ததில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாயும், ஏழாவது முறையாக மே 13ம் தேதி திறந்தபோது 4 லட்சத்து 17 ஆயிரத்து 751 ரூபாய் இருந்தது.