Archive for the ‘படிப்பு’ Category

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை-பொய்மை; தமிழக சட்டம்-அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

ஜூன்11, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்உண்மைபொய்மை; தமிழக சட்டம்அரசிய நிர்ணய சட்டம் மற்றும்  திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)

2006ல் திமுக சட்டம்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர். அப்படியென்றால் திட்டத்துடன் உறுதியாக இருக்கிறார்கள் என்றாகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் 2006ல் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

2007ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் ஆனது: ரங்கநாதன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். அவற்றை வைத்து, ஊடகங்களும், சட்டப்படியுள்ள நிலைமையை எடுத்துக் காட்டாமல், ஏதோ உணர்ச்சிப் பூர்வமாக, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். “இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன். “இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை,” என்கிறார் ரங்கநாதன்.

சாதியில் பிரிந்து கிடந்தவர்களுக்கு, சாதி சங்கத்தினர் வகுப்பு எடுக்க மறுத்தது: ரங்கநாதன் சொன்னது, “எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது”. அரசாணைக்கு எதிராக அவர்கள் “மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது,” என்று சொல்லியிருந்தால், அரசோ, கருணாநிதியோ, இப்பொழுது கூவுகின்ற சித்தாந்திகளோ, உடனடியாக, சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனல், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு புறம்பாக வகுப்புகளை விடாப்பிடியாக நடத்த வேண்டிய போக்கில் தான் விவகாரம் இருக்கிறது. கர்நாடகாவை எதிர்த்து வரும் தமிழகர்களுக்கு, பெங்களூரிலிருந்து ஒரு பார்ப்பனர் வர அவசியம் ஏன்? அதிலும் செத்த மொழியில் பயிற்சியளிக்க அவசியம் என்ன? உடனே, அவர்கள் செட்த மொழியில் பாண்டித்யம் பெற்று விடுவார்களா?

கடவுளின் திருவுருவங்களைச் செய்து, தரச் சொன்னது: ரங்கநாதன் சொன்னது, “அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்துதரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்துவைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்,” என்கிறார் ரங்கநாதன். பிள்ளையாரை உடைத்த ஈவேரா சிலைக்கு மாலை போட்டு, ரங்கநாதன் இவ்வாறெல்லாம் 07-06-2021ல் பேட்டிக் கொடுப்பது வேடிக்கைத் தான்! இவர்கள் கடவுள் உருவங்களை உடைப்பார்களா என்று தான் மற்றவர் நினைத்திருப்பர். இரட்டை வேட போட்டுக் கொண்டு, போலித் தனமாக இவர்கள் நடந்து வந்ததும் வெளிப்படுகிறது. அதாவது, முரண்பாடுகளுடன், அரைகுறையாகத் தான் இவர்கள் பயின்றுள்ளார்கள். உண்மையில் பூசாரி / அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கற்கவில்லை என்பது தெரிகிறது. எப்படியாவது, கோவில்களுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற வெறித்தான் தெரிகிறது. சிலைகளை உடைத்த ஈவேராவைப் போற்றி, இவர்கள் கோவில்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?

ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது”. பிறகு சங்கம் மேல் முறையீட்டிக்கு செல்வது தானா? ரங்கநாதன் சொன்னது, “இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன,: இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன். கடவுளுக்கு பூஜை செய்யப் படித்தவர்கள், கோவிலுக்குள் சென்று முறைப் படி, மாலையை கடவுளுக்குப் போட்டிருக்கலாமே? இதிலிருந்தே, இவர்கள் திக-திமுக ஆட்கள் என்று தெரிகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, 2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்,” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை”. அதாவது, சட்டநிலை அறிந்து விட்டதால், உள்ள பிரச்சினைகளுடன், இதையும் ஒரு தேவையற்றப் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்று அமைதியாக இருந்தார்கள் எனலாம்.

இரு கோவில்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப் பட்டது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை. இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். “பயிற்சி பெற்ற 207 பேரில் 2 பேர் சிறிய கோவில்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் இறந்து போய்விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேருக்கு வேறு அரசு வேலைகள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள 196 பேர் தொடர்ந்து இதற்காகப் போராடிவருகிறோம்,” என்கிறார் ரங்கநாதன். அதாவது, உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, இந்த இருவருக்கு பணி நியமனம் கொடுக்கப் பட்டது தெரிகிறது.  அரசியல் ரீதியில் நாளைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், இருவருக்கு பணி  கொடுத்து விட்டோம், மற்றவர்கள் ஒரு மாதிரியாக செயல்பட்டு வருவதால், பரிசீலித்து வருகிறோம் என்று சொல்லி முடிக்க தோதுவாக செய்துள்ளனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

11-06-2021

நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!

மே13, 2010

207 மாணவர்கள் ஓராண்டு கால இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சி முடித்துள்ளனர்
சட்டமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

http://www.viduthalai.com/20100513/news10.html

சென்னை, மே 13_ சட்டமன்றத்தில் இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைக்கான மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய இத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்ததாவது:

பொது வழிபாட்டு தளங்களில் பூசைகள் செய்வதில் ஜாதியை ஒரு தகுதியாக வைத்து பாகு-பாடு காட்டுதல் சரியல்ல என்ற கருத்தின் அடிப்-படையில் தேவையான தகுதியும் உரிய பயிற்சியும் பெற்ற இந்து சமயத்தைச் சார்ந்த அனைத்து ஜாதியினரும் இந்து சமய திருக்கோயில்களின் அர்ச்சகர் ஆகலாம் என அரசாணை பிறப்பிக்ப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் சென்னை மற்றும் திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ சமய அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 74 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள் உள்பட மொத்தம் 207 மாணவர்கள் ஓராண்டு கால இளநிலை அர்ச்சகர் சான்றி-தழ் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர் என்று சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உண்ணாவிரதம்

 
First Published : 08 Apr 2010 02:48:36 AM IST
Last Updated : 08 Apr 2010 10:44:08 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Vellore&artid=224064&SectionID=140&MainSectionID=140……….

திருவண்ணாமலை, ஏப்.7: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்துக்கு  உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் திருவண்ணாமலையில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடத்தினர்.  தமிழக அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழனி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.   பள்ளிகளில் ஏராளமானோர் சேர்ந்து பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆனால் மதுரை கோயிலைச் சேர்ந்த சில அர்ச்சகர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  சுவாமி சிலைகளை தொட்டு பூஜை செய்யும் உரிமை சிவாச்சாரியார்கள்,  பட்டாச்சாரியார்களுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறி நீதிமன்றத்தில் இடைக் கால தடை உத்தரவு பெற்றுள்ளனர்.  இதனால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேரை தமிழக அரசால் பணி நியமனம் செய்ய முடியவில்லை. ஒன்றரை ஆண்டுகள் முறையான பயிற்சி பெற்றவர்களும்பாதிப்பை சந்தித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. எனவே உடனடியாக தமிழக அரசு இந்த தடை உத்தரவை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  மனித உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சகர்கள் பயிற்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில் நடந்த இப்போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ தலைமை  தாங்கினார்.

திருப்பதி-திருமலை தேவஸ்தானம், பல ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி முதலிய எல்லொருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்து பூசாரிகள் ஆக்கி வருகிறது. அங்கு எந்தபிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழகத்தில், தேவையில்லாமல் நாத்திக ஆட்சியாளர்கள் தலையிட்டுக் குழப்பி வருகிறார்கள். போதாகுறைக்கு கிருத்துவர்கள், முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற கடவுள் நம்பிக்கையில்லாத கோஷ்டிகள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்து-விரோத கயவர் பட்டாளங்கள், இதில் நுழைந்து கெடுக்கப் பார்க்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், “சான்றிதழ்” பெற்றுவிட்டேன் என்ற போர்வையில், அத்தகைய இந்து-விரோதிகளும் உள்ளே நுழையப் பார்க்கின்றனர். இதனால்தான், மற்றவர்கள் எதிர்க்கின்றனர்.

Archaka training starts for SC/STs
Tirupathi , April 20, 2010:

http://www.omnamovenkatesaya.com/english/ttddailynews/april_2010/apr21_eng.htmThe Tirumala Tirupati Devasthanams (TTD) on Tuesday inaugurated the special Archaka training camp to the Schedule Castes and Scheduled Tribes with an objective to make the community members thorough with the essential knowledge about pujas and ceremonies to be conducted in the temples.

The TTD joint executive officer, Dr N. Yuvaraj, who inaugurated the training camp at SVETA Bhavan here, said that the main objective is to popularise and spread the Sanathana Hindu Dharma and inspire the weaker sections to become partners in the propagation of the ancient tradition.

Addressing the gathering of the Archaka trainees from the target group from all over the state, he exhorted them to focus not only on the religious practices but also on the socially relevant issues in their region while they undertake practicing the tenets of Archaka profession.

He said that the TTD had already trained two batches of Archakas hailing from the tribal and Dalit communities.

The third batch will bring the total of trained non-Brahmin archakas to almost 500.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் வேலை கேட்டு கமிஷனரிடம் மனு
பிப்ரவரி 20,2009,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=11131

General India news in detail

சென்னை: “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற அரசின் உத்தரவுப்படி பயிற்சி பெற்றவர்கள் சான்றிதழ் மற்றும் வேலை கேட்டு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்ததோடு மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சென்னையில் திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் பயிற்சி மையங்களை ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் இந்த ஆறு பயிற்சி மையங்களில் தங்கி அர்ச்சகர் பயிற்சி முடித்தனர். பயிற்சி முடித்து எட்டு மாதங்களாகியும் இதுவரை பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், பணி உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க தமிழகத்தில் இருந்து அர்ச்சகர் பயிற்சி முடித்த 30க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். கமிஷனர் விடுமுறையில் சென்றுள்ளதால், இணை கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து, பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் கூறியதாவது: தமிழக அரசின் “அனைவரும் அர்ச்சகராகலாம்’ எனும் திட்டத்தின் கீழ் ஆறு மையங்களில் 200க்கும் மேற்பட்டோர் அர்ச்சகர் பயிற்சி முடித்தோம். பயிற்சி மையங்களிலேயே தங்கி,பயிற்சி பெற்ற எங்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்பட்டது. ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு மூன்று மாதங்கள் பல்வேறு கோவில்களில் நடந்த கும்பாபிஷேகம் உள்ளிட்ட விசேஷங்களில் நேரடியாக கலந்து கொண்டு பயிற்சியை முடித்தோம். பயிற்சி முடித்து எட்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. எங்கள் பெற்றோரைப் பாதுகாக்கவும், வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் தமிழக திருக்கோவில்களில் அர்ச்சகராக பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். “இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும் பட்சத்தில் தான் சான்றிதழ் மற்றும் வேலை கொடுக்க இயலும்’ என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செந்தில்குமார் எனும் தலித் மாணவர், பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள வைணவ அர்ச்சக பயிற்சி மையத்தில் பயின்று, தனது ஒரு வருட ஜூனியர் அர்ச்சகர் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளார். ஆனால், கோயில் அர்ச்சகர் எதிர்ப்பு காரணமாக, கர்ப்பகிருகத்தில் (Sanctum Sanctorum) பிராக்டிகல் பயிற்சி பெற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!! அதனால் அவரும் இன்னும் சிலரும் “மாடல்” ஒன்றை உருவாக்கி, பிராக்டிகல் பயிற்சியை முடித்துள்ளனர்!