அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உண்மை–பொய்மை; தமிழக சட்டம்–அரசிய நிர்ணய சட்டம் மற்றும் திராவிட கட்சிகளின் இந்துவிரோத வேடங்கள் (1)
2006ல் திமுக சட்டம் – அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர். அப்படியென்றால் திட்டத்துடன் உறுதியாக இருக்கிறார்கள் என்றாகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் 2006ல் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.
2007ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் ஆனது: ரங்கநாதன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். அவற்றை வைத்து, ஊடகங்களும், சட்டப்படியுள்ள நிலைமையை எடுத்துக் காட்டாமல், ஏதோ உணர்ச்சிப் பூர்வமாக, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். “இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன். “இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை,” என்கிறார் ரங்கநாதன்.
சாதியில் பிரிந்து கிடந்தவர்களுக்கு, சாதி சங்கத்தினர் வகுப்பு எடுக்க மறுத்தது: ரங்கநாதன் சொன்னது, “எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது”. அரசாணைக்கு எதிராக அவர்கள் “மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது,” என்று சொல்லியிருந்தால், அரசோ, கருணாநிதியோ, இப்பொழுது கூவுகின்ற சித்தாந்திகளோ, உடனடியாக, சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனல், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு புறம்பாக வகுப்புகளை விடாப்பிடியாக நடத்த வேண்டிய போக்கில் தான் விவகாரம் இருக்கிறது. கர்நாடகாவை எதிர்த்து வரும் தமிழகர்களுக்கு, பெங்களூரிலிருந்து ஒரு பார்ப்பனர் வர அவசியம் ஏன்? அதிலும் செத்த மொழியில் பயிற்சியளிக்க அவசியம் என்ன? உடனே, அவர்கள் செட்த மொழியில் பாண்டித்யம் பெற்று விடுவார்களா?
கடவுளின் திருவுருவங்களைச் செய்து, தரச் சொன்னது: ரங்கநாதன் சொன்னது, “அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்துதரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்துவைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்,” என்கிறார் ரங்கநாதன். பிள்ளையாரை உடைத்த ஈவேரா சிலைக்கு மாலை போட்டு, ரங்கநாதன் இவ்வாறெல்லாம் 07-06-2021ல் பேட்டிக் கொடுப்பது வேடிக்கைத் தான்! இவர்கள் கடவுள் உருவங்களை உடைப்பார்களா என்று தான் மற்றவர் நினைத்திருப்பர். இரட்டை வேட போட்டுக் கொண்டு, போலித் தனமாக இவர்கள் நடந்து வந்ததும் வெளிப்படுகிறது. அதாவது, முரண்பாடுகளுடன், அரைகுறையாகத் தான் இவர்கள் பயின்றுள்ளார்கள். உண்மையில் பூசாரி / அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கற்கவில்லை என்பது தெரிகிறது. எப்படியாவது, கோவில்களுக்குள் நுழைந்து விடவேண்டும் என்ற வெறித்தான் தெரிகிறது. சிலைகளை உடைத்த ஈவேராவைப் போற்றி, இவர்கள் கோவில்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்?
ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது”. பிறகு சங்கம் மேல் முறையீட்டிக்கு செல்வது தானா? ரங்கநாதன் சொன்னது, “இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன,: இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன். கடவுளுக்கு பூஜை செய்யப் படித்தவர்கள், கோவிலுக்குள் சென்று முறைப் படி, மாலையை கடவுளுக்குப் போட்டிருக்கலாமே? இதிலிருந்தே, இவர்கள் திக-திமுக ஆட்கள் என்று தெரிகிறது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, 2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்,” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை”. அதாவது, சட்டநிலை அறிந்து விட்டதால், உள்ள பிரச்சினைகளுடன், இதையும் ஒரு தேவையற்றப் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்று அமைதியாக இருந்தார்கள் எனலாம்.
இரு கோவில்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப் பட்டது: ரங்கநாதன் தொடர்ந்து சொன்னது, “இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை. இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். “பயிற்சி பெற்ற 207 பேரில் 2 பேர் சிறிய கோவில்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் இறந்து போய்விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேருக்கு வேறு அரசு வேலைகள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள 196 பேர் தொடர்ந்து இதற்காகப் போராடிவருகிறோம்,” என்கிறார் ரங்கநாதன். அதாவது, உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, இந்த இருவருக்கு பணி நியமனம் கொடுக்கப் பட்டது தெரிகிறது. அரசியல் ரீதியில் நாளைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், இருவருக்கு பணி கொடுத்து விட்டோம், மற்றவர்கள் ஒரு மாதிரியாக செயல்பட்டு வருவதால், பரிசீலித்து வருகிறோம் என்று சொல்லி முடிக்க தோதுவாக செய்துள்ளனர் எனலாம்.
© வேதபிரகாஷ்
11-06-2021