17-03-2923 – காஞ்சனாமனநிறைவுடன்கூறியது: காஞ்சனா, கும்பாபிஷேகம் நடந்த பிறகு[1], “அந்தகாலத்தில்நான்பிரபலநடிகையாகஇருந்தாலும்அவருடன்நானும்திருப்பதிசெல்வதைவழக்கமாககொண்டிருந்தேன். என்தங்கைகடவுளுக்காகதன்னையேஅர்ப்பணித்தவர். சிலகாரணங்களால்பெற்றோர், எனக்குஎதுவும்செய்யவில்லை. அவர்களின்சொத்துக்கள்எல்லாம்கைவிட்டுபோகும்நிலைஏற்பட்டது. நான்சம்பாதித்தசொத்துக்கள்கூடபறிபோகும்நிலைவந்தது. இந்தசூழலில்தான்தி.நகர்சொத்துக்களைகோவிலுக்குஎழுதிவைக்கநான், என்தங்கை, மைத்துனர்மூவரும்ஒருமனதாகதீர்மானித்துகோவிலுக்குதானமாகவழங்கினோம்.தற்போதுஅந்தஇடத்தில்பத்மாவதிதாயார்கோவில்எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம்எங்களின்ஜென்மம்சாபல்யம்அடைந்துவிட்டது.என்னைஒவ்வொருநொடியும்பெருமாள்தானகாப்பாற்றிவருகிறார். வாழ்நாள்முழுவதும்அவர்நினைவுஒன்றேபோதும்…,” இவ்வாறு கூறினார்[2].
காஞ்சனாஏன்நிலத்தைதானமாகக்கொடுத்தார்?: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திருமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலான வெங்கடேஸ்வராவை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர்[3]. காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை TTD நிர்வாக அதிகாரி I.Y.R-யிடம் ஒப்படைத்ததாக கோயில் வட்டாரங்கள் PTI இடம் தெரிவித்தன[4].. நிலமும் அதில் உள்ள ஒரு பழைய அமைப்பும் ஜி.என். சென்னையில் உள்ள செட்டி தெருவில் உள்ள அந்த இடத்தில் கல்யாண மண்டபம்/திருமண மண்டபம் கட்ட TTDயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன[5]. ஆனால், காஞ்சனா எப்படி திடீரென இறைவனின் இருப்பிடத்திற்கு ஒரு பெரிய காணிக்கையை அளித்தார் என்பது மர்மமாகவே உள்ளது. நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்ததை நினைவுகூரலாம், மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் அவரை வெளியேற்றியதால் அவருக்கு வீடு இல்லை என்று செய்திகள் வந்தன. டிடிடிகளின் இணைச் செயல் அலுவலர் டாக்டர் என்.யுவராஜ், எஸ்டேட் அலுவலர் ஸ்ரீ சேஷய்யா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[6].வழக்கைத் தாக்கல் செய்யும் போது அவருக்கு வயது 41 மற்றும் வழக்கில் வெற்றி பெறும் போது 72 வயது. சொத்து அவர்களின் பெற்றோரால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது, பின்னர், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உயில் செல்லாது, அது சட்டப்பூர்வ வாரிசுகளான காஞ்சனா மற்றும் அவரது சகோதரிக்கு வந்தது. இந்த 31 ஆண்டுகளில், இது பலரால் கைப்பற்றப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, சகோதரிகள் வழக்கை வென்றனர், அவர்கள் அதை TTDக்கு நன்கொடையாக வழங்கினர்.
2012 முதல் 2018 வரைஆக்கிரமிப்பில்இருந்தது: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்வாமி அறக்கட்டளைக்கு வாடகைக்கு விட்டபோது, 11.7.2012 தேதியிட்ட குத்தகைப் பத்திரத்தை, குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தினசரி பூஜை செய்யும் பூசாரி, அந்த குடியிருப்பில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. , இது சுமார் 600 சதுர அடி அளவிலான ஒற்றை படுக்கையறை பிளாட் ஆகும். அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் குடியிருப்பில் இருப்பதாக அறக்கட்டளை பத்திரம் காட்டினாலும், அந்த குடியிருப்பை குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு வைத்தது போல் எடுக்க முடியாது. இதனால், அந்த இடம் 11-07-2012 மற்றும் 10-04-2018 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது[7].
இந்நிலம்ஆக்கிரமிப்புபற்றியசரிபார்க்கமுடியாதசெவிவழிகதைகள்: ஆக்கிரமிப்பு பற்றி சொல்லப் படும் செவிவழி செய்திகள், இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனனில் அவையெல்லாம் மறைக்கப் பட்டு விட்டன போலிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் மற்றவர் இத்தகைய கதைகளை அளந்து விடுகிறார்கள்……………நாயுடு டீக்கடை வைத்திருந்தார்……….சசிகலா கூட்டம் அபகரித்துக் கொண்டது……….மூவேந்தர் கட்சி, சேதுராமன் அபகரித்து (மீனாக்ஷி மருத்துவமனை, காஞ்சிபுரம்), மீனாக்ஷி ஹோடல் கட்டினார்……………முன்பே கோவில் இருந்தது…………பிறகு நீதிமன்ற ஆணை மூலம் அது இடிக்கப் பட்டது. இருப்பினும், மீனாட்சி பவன், மற்றும் சம்பந்தப் பட்ட கம்பெனிகள் அவ்விடத்தில் இருந்திருக்கின்றன[8]. ஜூலை 3ம்தேதி, 2011 அன்று, “பொன்னியின் செல்வன்” கூட்டமும் நடந்திருக்கிறடது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம். இது பற்றியும் ஒரு வழக்கு உள்ளது. காஞ்சனா போன்ற நிலை அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. தியாகராயநகர் தான் சம்பந்தப் படுகிறது.
சேதுராமன்குடும்பம்சம்பந்தப்பட்டநிலவழக்கு: மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது[9]. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்[10]. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.
கோவில்நிலங்கள்அபகரிப்பு, ஆக்கிரமிப்புமுதலியவைதடுக்கப்படுமாஅல்லதுதொடருமா?: எது எப்படியாகிலும், சமீப காலங்களிலும் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளிக்கும் சேவை தொடர்கிறது. முன்பு கல்வெட்டுகளில் பதிவாகி, பிறகு முகமதியர், கிருத்துவர், விடுதலைக்குப் பிறகு பகுத்தறிவு பெரியாரிஸ்ட், அண்ணாயிஸ நாத்திகர் போன்றோர் ஆக்கிரமிப்புகளையும் கடந்து இருக்கும் நிலங்கள் முறையாகப் பயன்படுத்தினால், அந்நிலங்கள் மூலம் வருவாயும் கிடைக்கும், கோடிக்கணக்கில் மக்கள் பயனடைவ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்ல்லாம் பேசும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தைப் பற்றி பேசுவதில்லை. அதாவாது, எங்கெல்லாம் பெரும்பான்மையில் நன்மை பொது மக்களுக்குச் சென்றடையுமே, அங்கெல்லாம் அவர்கள் மட்டும் பலனடைய வேண்டு, சம்பாதிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் நடிகை காஞ்சனாவாக இருந்தாலும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டேயாக இருந்தாலும், நீதி மன்றங்களில் போராடத்தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது!
[3] Indian Express, Kanchana donates Rs 15 cr land to Tirumala Tirupati Devasthanam, Written by Agencies, Tirupati | First published on: 26-10-2010 at 12:11 IST; October 26, 2010 12:11 IST.
[8] MEENAKSHI BHAWAN at 44/1 GN Chetty Road, T. Nagar, The Place is located between the Jain Temple and Residency Towers in GN Chetty Road. 3rd July 2011, 28155155
MEENAKSHI HOTELS & ENTERTAINMENT PRIVATE LIMITED’s Corporate Identification Number (CIN) is U55101TN1992PTC022336.- Nalliah Servai Sethuraman and Ramesh Sethuraman – Directors.
Smile Amusement & Hospitality private limited was at the first floor; directors are – Sethuraman Gurushankar, Chandrasekharan Kamini and Nalliah Servai Sethuraman.
[9] தமிழ்.ஒன்.இந்தியா, டாக்டர்சேதுராமனின்மூத்தமகன், மகள், மருமகனுக்குநீதிமன்றம்பிடிவாரண்ட்!, By Jayachitra Updated: Friday, June 28, 2013, 17:55 [IST]
பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.
திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..
இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:
பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12],
இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
சத்தியவேல் முருகனார்.
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.
“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].
சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!
[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.
[2] பதிரிக்கை.காம், இந்துசமயஅறநிலையத்துறைசார்பில் 108 பக்திநூல்களைவெளியிட்டார்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்..!, JAN 19, 2023
[4] தினமணி, மறுபதிப்புசெய்யப்பட்ட 108 அரியபக்திநூல்கள்: முதல்வா்மு.க.ஸ்டாலின்வெளியிட்டார், By DIN | Published On : 20th January 2023 03:08 AM | Last Updated : 20th January 2023 03:33 AM.
[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரியபக்திநூல்களைவெளியிட்டமுதலமைச்சர்ஸ்டாலின்! தூள்கிளப்பும்இந்துசமயஅறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]
படிப்பதுராமாயணம், இடிப்பதுபெருமாள்கோவில்என்பதுதிராவிடியன்மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!
அறநிலையத்துறையில்அதீதஈடுபாடுகொள்ளும்திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –
இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
தலபுராணங்கள்,
கோவில் தொடர்பான ஆகமங்கள் –
ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
பழமையான அரிய நூல்கள்,
கோவில் கட்டிடக்கலை,
செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.
ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….
செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….
நாத்திக–பெரியாரிஸ, திராவிடயன்ஸ்டாக்ஸ்டாலின்இப்புத்தகங்களைவெளியிடும்ரகசியம், அர்த்தம்அல்லதுதேவைஎன்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].
ஓலைச்சுவடிகள் “கண்டறியப்பட்டனவா” அல்லதுஏற்கெனவேஇருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].
மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)
ஏற்றுமதிசெய்யப்பட்டது, எங்கோபுதைக்கப்பட்டதுஎன்றது, இப்பொழுதுகுளத்தில்புதைக்கப்பட்டுள்ளதுஎன்றது: அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைகிறது[1]. இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது[2], என்றார். இக்கதை ஜனவரியிலிருந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது ஊடக செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. அந்த சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக தெரிவித்தார்[3]. இதற்கெல்லாம் என்ன பெரிய தொழிற்நுட்பம் தேவைப் படுகிறது என்று தெரியவில்லை. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.
மயில்மூக்கில்இருந்ததுபாம்பா, பூவா?: முன்னதாக சமீபத்தில் கோயிலுக்கு சென்றதாகவும், மயில் சிலையை பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையடுத்து, தலைமை நீதிபதி விசாரணையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தானே சென்று பார்த்தார் எனும்போது, விவரங்களை அவர் அறிந்திருப்பார் என்றாகிறது. புராணக்கதையின்படி, மயில், பாம்பை அதன் கொக்கில் சுமந்து செல்லும். ஆனால், தற்போதைய போலி மயில் சிலைக்கு பதிலாக, அதன் கொக்கில் பூ ஏந்திய மற்றொரு சிலையை வைக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது[4]. இதையடுத்து, மயிலாப்பூர் குளத்திலோ அல்லது வேறு இடத்திலோ மூல விக்கிரகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கலாம் என்றும், அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிய சிலையை உருவாக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது[5]. “புதிய சிலையை உருவாக்கலாம்,” என்பது திகைப்பாக இருக்கிறது அப்படியென்றால், ஸ்வர்ணம் எக்ஸ்போர்ட்ஸ் அச்சிலையை ஏற்றுமதி செய்ததாக கூறப் பட்டதை கண்டுகொள்ளவில்லையா?
போலீஸ்விசாரணையும், அறநிலையத்துறைஅறிக்கைகளும்முரண்படுவதுஏன்?: தமிழக போலீஸார் மற்றும் அறநிலையத் துறை ஆளும் ஆட்சியாளர்களின் கட்டுப் பாட்டில் தான் உள்ளன. எனவே, ஒரே அரசின் இரு துறைகள், இருவேறான கருத்துகளை, விளக்கங்களை, விவரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால், இந்த வழக்குகளில் 2004லிருந்தே, முரண்பட்ட, முன்னுக்கு முரணான வாதவிவாதங்கள், கருத்துகள், அறிக்கைக்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. சிலை மாற்றப் பட்டது என்பதை ஒப்புக் கொண்டப் பிறகு, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், உண்மை வெளிவந்திருக்கும். ஆனால், கைதுகள், ஜாமீனில் வெளி வருதல், மறுபடியும் பதவிகளில் அமர்ந்து கொள்ளுதல், ஆவணங்களை அழித்தல் என்றெல்லாம் நடந்து வருவது, சம்பந்தப் பட்ட குற்றமனப்பாங்கை (mens rea), குற்றம் செய்த நிலையை (culpability of mind and action), ஆதாரங்களை அழிக்கும் போக்கை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், உயர் அதிகாரிகள், அரசு, மந்திரிகள், முதலமைச்சர் என்று எல்லோருமே ஒன்றுமே நடக்காதது மாதிரி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இது மிகவும் அதிர்ச்சி அளுக்கும் விசயமாகும். ஏனெனில், அது அத்தகைய குற்றங்களை ஆதரிப்பது போலிருக்கிறது. மேலும், குற்றம் செய்தவர்கள், அரசு தமக்கு சாதகமாக இருக்கிறது என்று இன்னும் ஆணவமாக, அகங்காரமாக, எதேச்சதிகாரத்துடன் செயல் படுவர். “பார்த்தியா, என்னை ஒண்ணும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது,” என்ற தோரணையில் மேன்மேலும் அநியாய காரியங்களில் செயல்படுவர்.
2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாகவழக்குகள்இழுத்தடிப்பது: 2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக காலந்தாழ்த்தி, வேண்டுமென்றே வழக்குகளை இழுத்தடித்துள்ளது தெரிகிறது. அதற்குள் பெயிலில் வெளியே வந்தவர்கள், கைதாகாமல் பெயில் வாங்கியவர்கள் நிச்சயமாக தமது அரசியல் தாக்கம், அதிகார பலம், பண பலம் முதலியவற்றை பிரயோகித்து, இருக்கு அத்தாட்சிகளை அழித்திருப்பர். திருமகள் 2100 ஆவணங்களை 2009மற்றும் 2013 ஆண்டுகளில் அழித்துள்ளார், என்பது தெரிகிறது. மயில் விக்கிரகம் சம்பந்தமான ஆவணங்களை திருமகள் அழித்ததை மூன்று இணை ஆணையர்களே தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களில் கொடுத்திருப்பதாக, போலீஸார் எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியென்றால், அவர்களையும் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.
கபாலீஸ்வரர்கோவிலுக்குசொந்தமானமயில்சிலைகாணாமல்போனதுகுறித்து, பாரபட்சம்இல்லாமல்நடவடிக்கைஎடுக்கப்படும்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் காணாமல் போன சம்பவத்தில், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் என்று 04-03-2022 அன்று செய்திகள் வெளிவந்துள்ளன[6]. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்[7]. கோவில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்[8]. இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், திரு.வி.க., நகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[9]. பி.டி.ஐ பாணியில் இந்த வரிகள் மற்ற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன[10]. உக்ரைனுக்கு மற்ற விவகாரங்களுக்கு ஊதி ஊளையிடும் புலன் விசாரணை நிபுணர்கள் இவ்விசயத்தில் அப்படியே கமுக்கமாக சிலவரிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளனர்[11]. இந்த தனபாலும், அந்த தனபாலும் ஒன்றா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது, ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர், பிறகு இவர் எப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறாற் என்று புரியவில்லை.
[4] பத்திரிகை.காம், மயிலைகபாலீஸ்வரர்கோயிலில்திருடுபோனமயில்சிலைதெப்பக்குளத்தில்புதைப்பு! உயர்நீதிமன்றத்தில்தமிழகஅரசுதகவல்…, By A.T.S Pandian, March 1, 2022.
[8] தமிழ்.இந்து, தமிழகம்முழுவதும்நடப்புஆண்டில்ஆயிரத்துக்கும்மேற்பட்டகோயில்களில்குடமுழுக்கு: அறநிலையத்துறைஅமைச்சர்சேகர்பாபுதகவல், செய்திப்பிரிவு, Published : 04 Mar 2022 06:53 AM; Last Updated : 04 Mar 2022 06:54 AM.
மயிலைகபாலீஸ்வர்கோவில் – புன்னைவனநாதர்மரகதமயில்விக்கிரகம்மாயமானது– தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம்ஆண்டுகளில்அழிக்கப்பட்டுவிட்டது (4)
வீடியோஆதாரங்கள் – சிலைகடத்தல்தடுப்புபிரிவுஅதிகாரிகள்தொடர்ந்துகூறியதாவது[1]: “புன்னைவனநாதருக்குதிருப்பணியேநடக்கவில்லைஎன்றுஅறநிலையத்துறைஅதிகாரிகள்கூறினர். ஆனால், புன்னைவனநாதர்சன்னதியிலும்திருப்பணிகள்நடந்ததற்கானவீடியோஆதாரங்கள்எங்களிடம்உள்ளன. புன்னைவனநாதருக்குநடந்ததிருப்பணியில்கோயில்நிர்வாகஅதிகாரியாகஇருந்ததிருமகள்கலந்துகொண்டதும்அந்தவீடியோவில்பதிவாகியுள்ளது. எதையோமறைக்கஅல்லதுயாரையோகாப்பாற்றுவதற்காகஅறநிலையத்துறைஅதிகாரிகள்இவ்வாறுகூறுகின்றனர். சிலைகள்பலகோடிரூபாய்க்குவிற்கப்பட்டுள்ளனஎன்பதுமட்டும்முதல்கட்டவிசாரணையில்தெரியவந்துள்ளது. யாருக்குவிற்றனர், இதற்குஉறுதுணையாகஇருந்தஅதிகாரிகள்யார்என்பதைகண்டுபிடிக்கவேண்டும். ஆனால், அறநிலையஅதிகாரிகள்உண்மையைசொல்லமறுப்பதால், வழக்குநீண்டுகொண்டேசெல்கிறது,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2].
வழக்குஆவணங்களிலிருந்துதெரியவந்துள்ளவிவரங்கள்: இதற்கெல்லாம் எந்த விமர்சனமோ, விளக்கமோ தேவையில்லை.
ஆனால், அறநிலையஅதிகாரிகள்உண்மையைசொல்லமறுப்பதால், வழக்குநீண்டுகொண்டேசெல்கிறது,
2018ல்வழக்குபதிவுசெய்யப்பட்டாலும்அறநிலையத்துறைஒத்துழைக்காமல்இருப்பது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னை வனநாதர் சன்னதியில் மிகவும் பழமை வாய்ந்த புராதன மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு சிலை தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புராதன சின்னமாக விளங்கக்கூடிய பழமையான மயில் சிலையை அகற்றி விட்டு அதற்கு பதில் வேறு சிலை அமைக்கப் பட்டுள்ளதாகவும், உண்மையான சிலை திருடப் பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக 2018 முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காணாமல் போன சிலை எங்கு இருக்கிறது என்பது தெரியாமலேயே உள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை காணாமல் போனதாக கூறப்படும் 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது[3]. மேலும் பழைய சிலை மாயமானது குறித்த புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் விசாரணையை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தமிழக அரசும், இந்துசமய அறநிலையத்துறையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்[4].
2004ஆம்ஆண்டுநடத்தப்பட்டகும்பாபிஷேகம்தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம்ஆண்டுகளில்அழிக்கப்பட்டுவிட்டது: மயில் சிலை காணாமல் போனதாக கூறப்படும் 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள், 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது என்பதே திகைப்பாக இருக்கிறது. இதைப் பற்றி ஏன் விசாரணை, நடவ்டிக்கை எல்லாம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. “அதிலும்குறிப்பாகஒருஇணைஆணையர், பெண்அதிகாரிதிருமகள்ஆவணங்களைஅழிப்பதைகண்ணால்பார்த்ததாகவும்கூறியுள்ளார்….” என்று நீதிமன்றம் 2018லேயே கூறியுள்ளது. வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சம்ப்ந்தப் பட்ட கோப்புகள், ஆவணங்கள் முதலியவை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். அவற்றை அழிக்க முடியாது. ஆகவே கைதான இந்து அறநிலைய அதிகாரிகள் மறுபடியும் பணியில் அமர்த்துவது, அதே இடத்தில் வருவது என்பனவெல்லாம் ஆதாரங்களை அழிக்கத்தான். ஆகவே, கைதாகி, பெயிலில் வெளிவந்த திருமகள் போன்ற அதிகாரிகள் நிச்சயமாக நியாயம், தருமம் என்று இல்லாமல், மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணாக இருந்தும், அவ்வாறான அதர்ம காரியங்களில் ஈடுபட்டு குற்றங்களை செய்துள்ளார். உண்மையில், வெட்கம், மானம், சூடு, சொரணை என்றெல்லாம் இருந்தால், இருந்திருந்தால், என்றோ ராஜினாமா செய்து விட்டு, செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய, காசிக்கு இல்லை மற்ற புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு சென்றிருப்பார். ஆனால், எதுவும் இல்லை என்றதால், இன்னும் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்.
பிப்ரவரி 2022ல்மயில்சிலைகுளத்தில்புதைக்கப்பட்டதுஎன்றது: இதுதொடர்பாக நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது[5]. காணாமல் போன மயில் சிலை ஆகமவிதிகளின்படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது[6]. இதையடுத்து கோவில் தெப்பக்குளத்தில் இறங்கி மயில் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது[7]. இதற்காக 01-02-2022 அன்று போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், நீச்சல் வீரர்களுடன் கோவில் குளம் அருகில் கூடினார்கள். நீதிமன்ற உத்தாவு படி இந்த முயற்சிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன[8]. இதற்காக 6 படகுகள் மற்றும் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் திடீரென குளத்தில் மூழ்கி மயில் சிலையை தேடும் பணி தள்ளி வைக்கப்பட்டது. வேறொரு நாள் இந்த பணியை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிவிக்கவில்லை. இதன் மூலம் இன்னொரு நாள் இதேபோன்று திட்டமிடப்பட்டு மயில் சிலையை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
மயில்சிலைமாற்றப்பட்டதுதொடர்பானவழக்கு: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள பழமையான மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட மூன்று பேருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பெண் அதிகாரி திருமகளின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது[1]. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னை வனநாதர் சந்நிதியில் உள்ள பழமையான மயில் சிலை மாற்றப்பட்டு புதிய மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்[2]. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழுமத் தலைவருமான வேணு சீனிவாசன், தமிழக அரசின் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால், கூடுதல் ஆணையர் திருமகள் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்[3]. தான் நிறைய கோவில்களுக்கு நிதியுதவி கொடுத்திருப்பதாலும், கபாலீஸ்வரர் மீது நம்பிக்கையுள்ளதாலும், தனக்கும், இதற்கும் தொடர்பில்லை என்று சொல்லப்பட்டது[4].
யார்இந்ததிருமகள்?: இந்து சமய அறநிலையத்துறையின் முதல் பெண் அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் திருமகள். பி.எஸ்.சி – எம்.எல் படித்து டி.என்.பி.எஸ்.சி மூலம் அறநிலையத்துறைக்குத் தேர்வானவர்[5]. இவருடைய கணவர் தமிழக அரசுப் பணியிலும், மகன் மத்திய அரசுப் பணியிலும் உள்ளனர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சிதம்பரம் கோயிலிலும், கபாலீஸ்வரர் கோயிலிலும் செயல் அலுவலராகப் பணியாற்றியவர். சீனியர் அதிகாரியாரியான திருமகள் அறநிலையத்துறையின் விசாரணைக்கான கூடுதல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வரும் குற்றங்கள் குறித்து இவர்தான் விசாரணை நடத்துவார். அப்போது, தனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றியும், சிலரை வேண்டும் என்றே பல வருடங்களுக்குப் பணியிடை நீக்கம் செய்தும் திருமகள் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது[6]. அப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிலர், இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். எங்கே தன்னுடைய இடத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று, தனக்குக் கீழிருந்த பலரையும் பணிநீக்கம் செய்திருக்கிறார் என்கிறது அறநிலையத்துறை வட்டாரம்.
திருமகளுக்குஅடுத்தடுத்துமுக்கியப்பதவிகள்கொடுப்பது: இதையடுத்து, துறை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் (பொது) என்ற பதவிக்கு வந்தார். அதாவது, அறநிலையத் துறையின் ஆணையருக்கு அடுத்த இடம் இந்தப் பதவி தான். மேலும், முன்னாள் ஆணையர் தனபால் நேரடி ஐ.ஏ.எஸ் இல்லாத போதும் ஆணையராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவரைப் போலவே திருமகளும், அறநிலையத் துறையின் ஆணையராக வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், அறநிலையத் துறையின் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதுதான், வேலியே பயிரை மேய்வ்து, திருடன் கையில் சாவி கொடுப்பது போன்ற முரண்பாடுகள். இவ்வளவு ஊழல், மோசடி செய்து கைதான ஒருவருக்கு “லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர்” பதவி கொடுப்பது அராஜகமானது. தனால் தான், தமிழகத்தில் இத்தனை குற்றங்கள், தீமைகள், சட்டமீறல்கள் எல்லாம் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான், கபாலீஸ்வரர் கோயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் 2018ல் கைது செய்யப்பட்டார் திருமகள்.
வேணுசீனிவாசன்தாக்கல்செய்தமுன்ஜாமீன்மனு: வேணு சீனிவாசன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மயிலாப்பூர் கோயில் கும்பாபிஷேக திருப் பணிக்குழு உறுப்பினர் என்ற முறையில்தான் கோயில் திருப் பணிகளில் ஈடுபட்டேன். இதற்காக எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.50 லட்சத்துக்கும்மேல் செலவு செய்துள்ளேன்[7]. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என தெரிவித்திருந்தார்[8]. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட அமர்வு, முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.மகாதேவனும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஒன்றாக விசாரித்து பிறப்பித்த தீர்ப்பு வருமாறு: “இந்தவழக்கில்மயிலாப்பூர்கோயிலில்இருந்தபழமையானமயில்சிலைமாற்றப்பட்டு, அதற்குப்பதிலாகபுதிதாகமயில்சிலைவைக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பானஆவணங்களைகூடுதல்ஆணையர்திருமகள்அழித்ததாகவும்அறநிலையத்துறையில்பணிபுரியும் 3 இணைஆணையர்களேஒப்புதல்வாக்குமூலம்அளித்துள்ளதாகக்கூறிசிலைகடத்தல்தடுப்புபிரிவுபோலீஸார்ஆதாரங்களைதாக்கல்செய்துள்ளனர்”.
வீடியோஆதாரங்கள்: “அதிலும்குறிப்பாகஒருஇணைஆணையர், பெண்அதிகாரிதிருமகள்ஆவணங்களைஅழிப்பதைகண்ணால்பார்த்ததாகவும்கூறியுள்ளார். அதேபோலமயில்சிலைமாற்றப்பட்டதற்கானஆதாரமாக 2004-ல்கும்பாபிஷேகத்துக்குமுன்பாகவும், பின்பாகவும்எடுக்கப்பட்டவீடியோஆதாரங்களும்சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கூடுதல்ஆணையரானதிருமகளுக்குஎதிரானகுற்றச்சாட்டுக்குவலுவானஆதாரங்கள்உள்ளதால்அவரதுமுன்ஜாமீன்மனுதள்ளுபடிசெய்யப்படுகிறது. வேணுசீனிவாசன்உள்ளிட்டமற்ற 3 பேருக்கும்முன்ஜாமீன்அளிக்கப்படுகிறது. அவர்கள்கும்பகோணம்சிறப்புநீதிமன்றத்தில்தலாரூ.1 லட்சத்துக்கானபிணைஉத்தரவாதம்அளிக்கவேண்டும்,” இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வேணுசீனிவாசன்உள்ளிட்டமற்ற 3 பேருக்கும்முன்ஜாமீன்தரக்கூடாது. ஒருவேளைஅதிகாரிதிருமகள்விசாரணையின்போதுஇந்த 3 பேரில்யாரையாவதுகைநீட்டினால்அவர்களிடம்முழுமையாகவிசாரணைநடத்தமுடியாமல்போய்விடும். எனவேஅவர்களதுமுன்ஜாமீன்மனுக்களையும்தள்ளுபடிசெய்யவேண்டும்,” என கோரிக்கை விடுத்தார். குற்றச்சாட்டு நிரூபணமானால்.. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒருவேளை இந்த 3 பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் இந்த நீதிமன்றத்தை நாடலாம். அதேபோல அவர்களும் இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
மாஜிஸ்ட்ரேட்டுகள்-நீதிபதிகள் “நீதி அரசர்கள்” நிலை: திருமகள் போன்ற ஊழல் ராணிகள் அதிகமாகி கோலோச்சும் போது, திராவிடத்துவ கொள்ளைகள் நியாயப் படுத்தப் பட்டு, அமுக்கப் பட்டு விடும். வழக்குகளும் இருக்காது. அரசு-கட்சி-ஜாதி முறையில் நியமனம் செய்யப் படும் நீதிபதிகளுக்கும் பிரச்சினை இருக்காது. ஏனெனில், எப்படியிருந்தாலும், எஜமான விசுவாசம் அவர்களின் மனங்களை உருத்திக் கொண்டே இருக்கும். இப்பொழுதே கடந்த 70 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட்டுகள்-நீதிபதிகள் எப்படி தீர்ப்புகள், பெயில்கள் கொடுக்கிறார்கள், மறுக்கிறார்கள் என்பனவற்றைக் கவனிக்கலாம். ஓய்வு பெற்ற அதே “நீதி அரசர்கள்” தாங்கள் எவ்வாறு நீதியை ஆட்சி செய்தார்கள், ஆண்டார்கள், கட்டுப் படுத்தினார்கள் போன்ற கதைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். போதாகுறைக்கு, சினிமாக்களிலும் காட்டுகிறார்கள்.
[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், டி.வி.எஸ். தலைவர்வேணுசீனிவாசன்மீதுஎன்னபுகார்? சிலைகடத்தல்வழக்குகளில்ஷாக்!, Written by WebDesk, Updated: August 10, 2018 4:14:37 pm.
முத்தையஸ்தபதிஏற்கெனவேவழக்குகளில்மோசடிகளில்சிக்கியுள்ளநபர்: பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக எழுந்துள்ள புகாரில் பழனி கோயிலில் தொன்மையான உற்சவர் இருக்கும் நிலையில், பழைய சிலை அகற்றப்பப்படக் கூடாது என இந்திய தொன்மைச் சட்டத்தில் உள்ளது. மேலும் ஒரு உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் விதிகளை மீறி 2004-ம் ஆண்டு உற்சவர் சிலை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. 200 கிலோ எடையில் பஞ்சலோகத்தால் ஆன சிலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கம் பெறப்பட்டது[1]. பின்னர் சிலை செய்யப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டது. ஆனால், தங்கம் பெறப்பட்டது, உபயோகப்படுத்தியது போன்ற விவரங்களில் குளறுபடிகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றிற்கு முத்தையா தான் காரணம் என்று தெரிய வந்தது. பத்மஸ்ரீ விருது பெற்ற தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளனர்[2]. ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்த வழக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது[3].
முத்தையாஸ்தபதியார்?: இந்து சமய அறநிலைய துறையின், ஸ்தபதி முத்தையா, 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்[4]. சென்னையில் வசித்து வரும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, தொழில் அதிபரின் நட்பு கிடைக்க, முதல்வராக இருந்த, ஜெயலலிதாவிடம் முத்தையா அறிமுகமானார். தொடர்ந்து, அறநிலைய துறையின், ஆஸ்தான ஸ்தபதியாக முத்தையா நியமிக்கப்பட்டார். கோவில் சிலைகளை பாதுகாக்கும், ஸ்தானிகர்களிடம், ‘பல ஆண்டுகளாக, அபிஷேகம் நடப்பதால், சிலைகள் சேதம் அடைந்து விட்டன. புதிய சிலை செய்ய வேண்டும்’ என, அறிக்கை பெறுவார். பின், அதிகாரிகள் துணையுடன், புதியசிலைகள் செய்து, லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளார்[5]. ஜெ., முதல்வராக இருந்த போது, 2000 -04ல், ‘பழனி கோவில் சிலை, விழும் நிலையில் உள்ளது. இதனால், ஆட்சிக்கு ஆபத்து நிகழும்’ எனக்கூறி, புதிய சிலை செய்துள்ளனர். அதில், 4.5 கிலோ தங்கம் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஸ்தபதி முத்தையா மட்டும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை உட்பட, பல இடங்களில், 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். ஸ்தபதி முத்தையா, மத்திய அரசிடம் இருந்து, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். அந்த விருதை, திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கடிதம் எழுத உள்ளனர்.
தெய்வகுற்றங்களில்ஈடுபட்டஸ்தபதி: பத்ம விருது பெற்று பொறுப்புள்ள இவர், உண்மையாக, நாணயமாக இருந்திருந்தால் நிச்சயமாக இவர் இத்தகைய குற்றங்களில், மோசடிகளில், விக்கிரக கடத்தல், கள்ளத் தனங்களில் ஈடுபட்டிருக்க மாட்டார், சம்பந்தப் பட்டிருக்க மாட்டார் மற்றும் அந்த கடவுளே இவரை அவ்வாறு செய்திருக்க அனுமதித்து இருக்க மாட்டார். ஆனால், நிச்சயமாக இவரிடத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. தெய்வகுற்றத்தில் மற்றவர்களைப் போல இவரும் ஈடுபட்டிருக்கின்றார். இல்லையென்றால், இவரே, அவற்றைத் தடுத்திருக்கலாம் அல்லது ஸ்தபதி என்ற முறையில் ஆகம முறைகளை எடுத்துக் காட்டி நல்வழிகளை போதித்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை, மாறாக குற்றவாளிகளுக்கு துணை போயிருக்கிறார் மற்றும் குற்றங்களிலும் ஈடு பட்டிருக்கிறார் என்று வழக்கு ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன. ஆகவே, திராவிடத்துவ நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு முதலியவை இத்தகைய ஸ்தப்திகளையும் குற்றம் செய்ய வழிகாட்டும், கும்பலோடு சேர வைக்கும், இந்துவிரோத காரியங்களில் ஈடுபட செய்யும் என்பது உண்மையாகிறது. பிறகு, இவர் எத்தனை சிற்பங்கள், பஞ்சலோக விக்கிரங்கள், கோவில்கள் உருவாக்கியிருந்தாலும், எந்த பிரயோஜனமும் இல்லை.
மூன்றுசிலைகள்புதைக்கப்பட்டனவா, கள்ளத்தனமாகஏற்றுமதிசெய்யப்பட்டனவா?: ஆகம விதிப்படி, அகற்றப்படும் பழைய சிலைகளுக்கு பூஜை செய்து, மண்ணில் புதைத்துவிட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அதிகாரிகள் துணையுடன் மூன்று சிலைகளும் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோயில் அதிகாரிகளிடம் அறநிலையத் துறை ஆணையர் ஜெயா விசாரணை நடத்தினார். இதில், கோயில்சிலைகள் மாயமானது உறுதிசெய்யப்பட்டது. சிலைகள் மாயமானது குறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சிலைகள் மாயமான காலகட்டத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபாலன், ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் (தற்போதைய கூடுதல் ஆணையர்) உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி, தனபால் ஆகியோர் டிசம்பர் 2017ல் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்[7].
இந்தவழக்குகுறித்துசிலைகடத்தல்தடுப்புபிரிவுஅதிகாரிகள்கூறியதாவது: “மயிலாப்பூர்கபாலீஸ்வரர்கோயிலில்மாயமானபுன்னைவனநாதர், ராகு, கேதுசிலைகள் 1,600 ஆண்டுகள்தொன்மையானவை[8]. இதுபோன்றபுராதனசிலைகளுக்குவெளிநாடுகளில்நல்லமதிப்புஇருக்கிறது. எனவே, இந்தசிலைகளைவெளிநாடுகளுக்குகடத்தி, விற்பனைசெய்திருக்கவாய்ப்புஉள்ளது. புராதனமானஇந்தசிலைகளைஅகற்ற, கோயிலில்இருந்தபரம்பரைஅர்ச்சகர்கள்சிலர்எதிர்ப்புதெரிவித்துள்ளனர். அவர்களைபணியில்இருந்துநீக்கிவிடுவதாகஅதிகாரிகள்மிரட்டியுள்ளனர்[9]. 2004-ல்கோயில்நிர்வாகஅதிகாரியாகஇருந்ததிருமகளிடம்கேட்டபோது, ‘‘சிலைகள்மாற்றப்பட்டதற்கானஆவணங்கள்எதுவுமேஇல்லை. நான்அந்தசிலைகளைபார்த்ததேஇல்லை. போலீஸாரிடம்இருக்கும்ஆவணங்கள்தவறானவை. சிலைகள்மாயமானதுபற்றிஎனக்குதெரியாது’’ என்கிறார். ஆகமவிதிப்படிமண்ணில்சிலைகள்புதைக்கப்பட்டிருந்தால், எந்தஇடத்தில்புதைக்கப்பட்டனஎன்றவிவரம்அறநிலையத்துறையிடம்இல்லை”. இந்நிலையில் தான் வேணு சீனிவாசன், திருமகள், முத்தையா ஸ்தபதி, தனபால் முதலியோர் முன் ஜாமீன் மனு சமர்ப்பித்தனர்.
[8] அதாவது 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள், ஆனால், அக்காலத்தில் கபாலீஸ்வரர் கோவில், இங்கில்லை, கடற்கரையில் இருந்தது என்ற உண்மை மறுபடியும் போலீஸார் கூற்றுப் படியும் வெளி வருகிறது என்பதனை கவனிக்க வேண்டும்.
[9] திராவிடத்துவ ஆட்சியினர், அதிகாரிகள் இவ்வாறு அர்ச்சகர்களை மிரட்டுவதை கவனிக்க வேண்டும். அதனால், கொஞ்சம்-கொஞ்சமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போர்வையில், இத்தகையை கொள்ளைகளுக்கு தோதுவாக ஒத்துழைக்கும் அர்ச்சகர்கள் உள்ளே வந்டு நிரப்பப் பட்டு விட்டால், இன்னும் ஒரு 30-40 ஆண்டுகளில் முழுவதுமாக கோவில்கள் திருடர்கள், கொள்ளையர்கள், கடத்தல்காரர்களின் கூடாரமாகி விடும்.
கபாலீஸ்வரர்தொடர்ந்துதாக்குதல்களில்ஈடுபடுவது: நிச்சயமாக 2000 வருடங்களுக்கும் மேலான தொன்மையான கபாலீஸ்வரர் கோவில் பல காலங்களில் பலரால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தது, வருகின்றது. ஜைனர்கள் இடைகாலத்தில், கடற்கரையில் இருந்த கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து இருந்ததை, அவர்களது கல்வெட்டுகள் காட்டுகின்றன[1]. அதே நேரத்தில், சோழர்களது நிவேதங்கள் கல்வெட்டுகளும் சிவனுக்கு கொடுத்த தானங்களையும் குறிப்பிடுகின்றன. துலுக்கர் மயிலையில் சில இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, உடல்களைப் புதைத்து, தர்கா கட்டிக் கொண்டு கலாட்டா செய்தனர். ஆற்க்காடு நவாப் இதற்கு ஆதரவு கொடுத்தான்[2]. 1523ல் போர்ச்சுகீசியர் கோவிலை இடித்த போது, இந்துக்கள் சில விக்கிரங்களை எடுத்து வந்து, தொலைவில் இப்பொழுதுள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்[3]. இப்பொழுது, திராவிடத்துவ, நாத்திக, பெரியாரிஸ்டுகளின் தாக்குதல்களில் கபாலீஸ்வரர் கோவில் உட்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில், அவரைப் போற்றி, போற்றிகள் சொல்லப் பட்டன. இப்பொழுது 2022ல் அவர்களுக்கே உரித்தான முறையில் இந்து அறநிலையத் துறை மூலம் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்று தான், இந்த மரகத மயில் சிற்பம் காணாமல் போன விவகாரம், புகார்கள், கைதுகள் மற்றும் வழக்குகள். மரகத விக்கிரகம் (மரகதம் – எமரால்ட், Emerald) சாதாரணமாக 100-200 கோடிகள் என்று உலக சந்தையில் மதிப்பீடு செய்யப் படுகிறது.
புன்னை மரம் / விருக்ஷம், புன்னைவனநாதர், மயில் சிற்பம்: மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் ஸ்தல விருக்ஷம் புன்னை மரம் ஆகும். இத்தலத்தில் புன்னை மரம் தல விருட்சமாக இருக்கிறது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தபோது, சுவாமி அம்மனுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் புன்னை மரம் தலவிருட்சமாக அமைந்தது. பிரகாரத்தில் உள்ள இம்மரத்தை ஒட்டி, சிவன் சன்னதி இருக்கிறது. இவரைப் “புன்னைவனநாதர்” என்றும், “ஆதி கபாலீஸ்வரர்” என்றும் அழைக்கிறார்கள். இவருக்கு பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தின் போது அம்பிகை இச்சன்னதிக்கு எழுந்தருள்கிறாள். அப்போது அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட வைபவமும், பின்பு நிச்சயதார்த்தம், திருக்கல்யாணம் மற்றும் அம்மி மிதித்தல் சடங்கு நடக்கிறது. இப்பொழுது அந்த மயில் சிற்பம் தான் இந்துவிரோத நாத்திகர்களால் சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. பெரியாரிஸ, நாத்திக சித்தாந்திகள் ஆட்சிக்கு வருவதால், இந்து அறநிலையத் துறையில் அதிகாரிகளாக, ஊழியர்களாக வந்தால் என்னாகும், என்ன நடக்கும் என்பதற்கு இதுதான் உதாரணம். இந்நிலையில் தான் அத்தகைய நாத்திகர்களும் அர்ச்சகர் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு, வேலை செய்ய உள்ளே வந்துவிடலாம் என்று வேறு சட்டத்தை வளைத்திருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள்மௌனம்காக்கின்றனர், ஒத்துழைக்கமறுக்கின்றனர்மற்றும்தம்மையும்மற்றவர்களையும்காக்கமுயல்கின்றனர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூன்று சிலைகள் மாயமானது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுக்கின்றனர். கபாலீஸ்வரர் கோவில் விவகாரத்தைப் பொறுத்த வரையில் இந்து அறநிலையத்துறையினர், அரசு அதிகாரிகள், கழகத்தினர், திராவிடத்துவவாதிகள், என எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டிருப்பதால், இவ்வாறு மௌனம் காக்கின்றனர், ஒத்துழைக்க மறுக்கின்றனர் மற்றும் தம்மையும் மற்றவர்களையும் காக்க முயல்கின்றனர்., இதனால், வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது என்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். திராவிடத்துவ ஆதரவுடன், இந்து அறநிலையத் துறையினர், கும்பாபிஷேகம் பெயரில் பழைய விக்கிரங்களை நீக்கி, போலி விக்கிரங்களை தயாரித்து வைத்து, விழாவை முடித்து வைக்கின்றனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், வகையில் ஆதாயம், பணம், பலன் கிடைப்பதால், அமைதி காக்கின்றனர். ஆனால், அந்த தொன்மை வாய்ந்த விக்கிரங்கள் என்னவாகின்றன என்பது மர்மமாகவே இருக்கின்றன. இங்குதான் சிலை கடத்தல் கும்பல்களுடன் இவர்களும் சம்பந்தப் பட்டிருக்கலாம் அல்லது தாமாகவே கூட அத்தகைய வேலைகளில் இறங்கியிருக்கலாம் என்றும் புலனாகிறது. இது ஒரு தேர்ந்தெடுத்த திட்ட வடிவ முறையாகி (modus operandi) செயல் பட்டு வருகிறது எனலாம். ஊடகங்களிலும் வெளிப்படையாக அத்தகைய விவரங்களும் வெளி வந்துள்ளன.
2004ல்கும்பாபிஷேகம்நடத்தப்பட்டபோதுசிலைகள்மாயம்ஆனது: தமிழக இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2004 ஆகஸ்ட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டபோது, புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் சேதம் அடைந்திருப்ப தாக கூறப்பட்டது. அந்த சிலைகள் மாற்றப்பட்டு, புதியசிலைகள் வைக்கப்பட்டன[4]. “இந்த சிலைகள் சேதம் அடைந்துவிட்டன; புதிய சிலைகள் வைக்க வேண்டும்,” என, 2004ல், கோவில் திருப்பணிகளை மேற்கொண்ட, தற்போதைய ஹிந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர், திருமகள், முடிவு செய்துள்ளார். இவருடன், முன்னாள் கமிஷனர், தனபால், ஆஸ்தான ஸ்தபதி, முத்தையா மற்றும் சில முக்கிய புள்ளிகளும் சேர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளனர்[5]. இரவோடு இரவாக, மரகத மயில் உட்பட, மூன்று சிலைகளையும் கடத்தியுள்ளனர். அறநிலையத் துறை சார்பில் இப்பணி மேற்கொள்ளப் பட்டது. ஆனால், கோயில் சிலைகளை மாற்ற அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் 3 சிலைகளும் மாற்றப்பட்டன. மேலும் திருப்பணிகள் நடந்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவற்றை அழித்துவிட்டதாகவும் திருமகள் பதில் அளித்தார். மாற்றப்பட்ட பழமையான மரகத மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் எங்கே போனது? என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சிலைகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாக கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் அதிலும் உண்மை இல்லை என்று சந்தேகம் உள்ளது.
2004லிருந்து வழக்குகள் இழுத்தடிப்பது ஏன்?: சிலைகள் மாற்றும் செய்ய சில அர்ச்சகர்கள், பக்தர்கள் எதிர்த்துள்ளனர் என்றால் அவ்விவகாரம், பொது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது. மேலும் சேதமடைததாகச் சொல்லப் படும் விக்கிரங்களும் புதைக்கப் பட்டன என்று கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள் என்றால். அவர்களுக்கும் விசயம் தெரிந்திருக்கிறது. இவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டு சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு உண்மையினை கூற சொல்ல வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் அவ்வாறு நடக்கவில்லை, நடப்பதில்லை. மேலும் சம்பந்தப் பட்ட வழக்குகளும் இழுத்தடிக்கப் படுகின்றன. 2004 முதல் 2022 வரை, அத்தகைய வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது FIR பதிவு செய்யப் படுகிறது, கைது செய்யப் படுகிறார்கள் அல்லது கைதை எதிர்த்து அல்லது தடுக்க முன் ஜாமீன் மனு போடுகிறார்கள், அவ்வாறே பெயிலில் வெளியே வருகிறார்கள், கைதாகாமல் பெயில் பெறுகிறார்கள். இச்செய்திகள் எல்லாம் தொடர்ந்து ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குற்றம் புரிந்தவர்கள், குற்றங்களை நடத்த, மாயமான விக்கிரங்கள் அவற்றின் விவரங்கள் வழக்குகளில் மூழ்கி, கிடப்பில் கிடக்கின்றன.
[1] ஏகாம்பரநாதன் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால், ஜைனர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே இருந்த போட்டி முதலியன தெரிந்த விசயமே.
[2] உண்மையில் மயிலையிலுள்ள எல்லா நிலமும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது தான். இடைகாலத்திற்குப் பிறகு, 18-19ம் நூற்றாண்டுகளில் வரி வசூல் செய்ய ஆங்கிலேயர் மற்றும் நவாப்புகள் ஜில்லா, பிர்கா, தாலுகா எனெல்லாம் பிரித்துக் கொண்டார்கள். அதனால், அந்நிலங்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகி விடாது.
[3] கடற்கரையில் தான், கபாலீஸ்வரர் கோவில் வளாகம் இருந்தது. அதனால், இப்பொழுதுள்ள சாந்தோமில் உள்ள எல்லா கட்டிடங்களுமே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. 19-20ம் நூற்றாண்டுகளில் தமதாக்கிக் கொண்டனர்.
[4] தினமலர், மூன்று மாதம் தலைமறைவாக இருந்த திருமகள் கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018,22:52 IST
இந்துசமயத்தைச்சேர்ந்தஆண்கள்மட்டுமேதிருக்கோயில்களின்செயல்அலுவலர்களாகஆகமுடியும்என்றிருந்தநிலையும்ஒருசட்டப்போராட்டத்தின்மூலம்மாற்றப்பட்டது: அதாவது, இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்கள் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக சேர்க்கப் பட்டார்கள் என்கிறார் போலும். அவ்வாறே, பெண்களும் பூஜாரிகள் ஆகலாம் என்ற பீடிகை, தொணி புரிகிறது. அமைச்சரும் அதை வெளிப்படையாக சொல்லி விட்டார். அவர் சிக்ஸர் அடித்தார் என்று செய்தி வெளியிடப் பட்டது, இப்பொழுது திலகவதி சென்சுரி அடிக்கப் பார்க்கிறார் என்று தெரிகிறது. இதுவும் அதே, சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி நடப்பதை யாரும் எதிர்க்க முடியாது. அதே போல ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றையும் மாற்ற முடியாது, என்றவற்றிற்குப் பொருந்தும். செக்யூலரிஸத்தனமாக பார்த்தால் கூட, மற்ற மதங்களில் அவ்வாறு செய்ய முடியுமா போன்ற கேள்விகளை எழுப்பலாம். ஆகவே, இத்தகைய தேவை இல்லாத வாதங்கள், செய்திகள் முதலியவற்றை தவிர்க்கலாம்.
கடவுளின்முன்அனைவரும்சமம்என்பதும், அரசமைப்புச்சட்டத்தின்முன்புஅனைத்துக்குடிமக்களும்சமம்என்பதும்இதன்மூலம்நிலைநாட்டப்பட்டது: “கடவுளின்முன்அனைவரும்சமம்,” என்பதனை முதலமைச்சர் முதல், அறநிலையத் துறை கடை-ஊழியர் வரை, பற்பல முறை, பல கோவில்களில் அத்து மீறியிருக்கிறார்கள். சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி, ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றை மீறியிருக்கிறார்கள். மேலும், நாத்திக-திராவிடத்துவ வாதிகள் நிலை-நிலைகள் தான் இங்கு கேள்விக்குறியாக்கும். ஆத்திகர் போர்வையில் நாத்திகரும், இந்து போர்வையில் இந்து-அல்லாதோரும் கோவில்களில் நுழைந்துள்ளன. அவர்கள் “கடவுள் இல்லை,” “கடவுள் இருக்கிறார்” மற்றும் “எக்கடவுள்” போன்ற போலித் தனங்களில் வெளிப்படுகிறார்கள். இந்துவிரோத நாத்திகர், திராவிட நாத்திகர், துலுக்கர், கிருத்துவர் கம்யூனிஸ்டுகள் என்றும் அவர்கள் “இந்து கடவுள்” முன்பு சமமாக இருந்து, கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு திலகவதி என்ன பதில் சொல்வார்?
ஆட்சியாளர்கள்இறைநம்பிக்கைஉள்ளவரா, இல்லையாஎன்பதுமுக்கியமல்ல. ஆட்சியில்கோவில்சொத்துக்களுக்குப்பாதுகாப்புஇருக்கிறதாஎன்பதும், பக்தர்களின்உணர்வுகள்மதிக்கப்படுகிறதாஎன்பதும்முக்கியம்: அப்படியென்று சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி, ஆகமசாத்திர நெறிப்படி எங்கும் சொல்லப் படவில்லை. அதனால் தான், ஔரங்கசீப் போல, கருணாநிதி காலத்தில் கோவில்கள், கோவில் மண்டபங்கள் இடிக்கப் பட்டன. மாலிக்காபூர் போல பல கோவில்கள் சிதைக்கப் பட்டன, கொள்ளையடிக்கப் பட்டன, சிலைகள் மாயமாகின. இறைநம்பிக்கை கிஞ்சித்தும் இருந்திருக்குமேயானால்,ஆவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான். 100 கோவில்களை கொள்ளையடித்தாலும், 10 கோவில்களை விட்டிருப்பான். அடுத்தது, “ஆட்சியில்கோவில்சொத்துக்களுக்குப்பாதுகாப்புஇருக்கிறதா,” என்றால், இல்லை என்று நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. “பக்தர்களின்உணர்வுகள்மதிக்கப்படுகிறதா,” என்றால், நிச்சயமாக இல்லை என்ற பதில்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான், “அறநிலையத் துறையிலிருந்து கோவில்களை மீட்போம்,” என்ற கோஷம் 40 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்து விட்டது, தொடர்கிறது. அதிகமாகியுள்ளது. மக்கள் ஆதரவு இல்லையென்றால் அவ்வ்வாறு நிலைமை மாறி இருக்க முடியாது. இப்பொழுது திலவதியும் இதைப் பற்றி, எழுதியிருக்க மாட்டார்.
இந்துஅறநிலைத்துறையின்செயல்பாடுகளைமேம்படுத்திஅத்துறையைவலுப்படுத்தவேண்டுமேதவிர, கோயில்களைத்தனியாருக்குதாரைவார்ப்பதுஎன்பதுபகுத்தறிவுக்குமுரணானதும், பக்திக்குதீங்கானதும்ஆகும்: 70 ஆண்டுகளாக அப்படி என்ன “இந்துஅறநிலைத்துறையின்செயல்பாடுகளைமேம்படுத்தப்,” படவில்லை என்று விளக்கவில்லை. அதேபோல, “அத்துறையைவலுப்படுத்தப்” படவில்லை என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளில், ஆண்கள்-பெண்கள் என்று அறநிலையதுறையில் நுழைந்தாலும், பெண்களும் ஆண்களுக்கு இணையாக ஊழல், குற்றம் புரிந்து கைதாகியுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். எவ்வளவோ கணினிமயமாக்களில் முன்னேற்றம், ஏற்பட்டு விட்டப் பிறகு, இப்பொழுது, ஆவணங்களை இணைதளங்களில் ஏற்றுவோம் என்று வந்துள்ளனர். இவையெல்லாம் நிர்வாகம் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது. ஒருவேளை, அதைத்தான் குறிப்பிட்டு, “இந்துஅறநிலைத்துறையின்செயல்பாடுகளைமேம்படுத்திஅத்துறையைவலுப்படுத்தவேண்டும்,” என்கிறார் போலும்! அப்படியென்றால், அர்ச்சகர் பயிற்சிக்கு பதிலாக, இவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். கொடுத்திருந்தால், 70 ஆண்டுகளில் அவர்களது நிர்வாகத் திறமை, மேன்மை அடைந்த நிலை முதலியவை வெளிப்பட்டிருக்கும். ஆனால், ஊழல், திருட்டு, மோசடி, கைது, சஸ்பென்ட் என்று நடந்து வருவதால், நிலைமை வேறு விதமாக உள்ளது.
பக்தர்கள்தனியார்இல்லை: “கோவில் நிர்வாகத்தை அறநிலைத்துறையிடம் இருந்து விடுவித்து (பக்தர்கள் பெயரில்) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன[1]” என்று திலகவதி எழுதியிருப்பது தவறு. பக்தர்கள் பெயரில் தனியார் என்று குறிப்பிடுவது அபத்தமானது. இத்தகைய இயக்கங்களில் பொறுப்புள்ள ஆச்சாரியார்கள், அரசாங்க அதிகாரிகள், ஓய்வு பெற்ற நிபிணர்கள் மற்றுமல்லாது, லட்சக் கணக்கான மக்கள் ஆதரவும் சேர்ந்துள்ளது. முன்னமே குறிப்பிட்டபடி, அறநிலயத் துறை ஊழல், குற்றங்கள் முதலியனவே, அத்துறை அதிகாரிகளை வெளிப்படுத்தி விட்டது. வேலியே பயிரை மேய்கிறது என்பது மட்டுமல்லாது, வேலியை நீக்கி, நிலத்தையும் அபகரிக்க வேலைகள் நடந்து விட்டன, நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கட்சிகளில் சேர்ந்து கொண்டிருப்பதால், திலகவதி இவ்வாறு அரசு சார்பாக, திராவிடத்துவத்தை ஆதரித்து, இடதுசாரிகள் பாணியில் வலதுசாரிகளை குறைசொல்லி, சட்டம் போர்வையில் பார்ப்பனத்தையும் தாக்கி, ஒட்டு மொத்தமாக, இத்தகைய கட்டுரை வெளியிட்டிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
கோவில் நிர்வாகம் நிச்சயமாக இந்துக்கள், கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் பொறுப்பில் இருக்க வேண்டும். கசாப்புக் காரன்கள் அஹிம்சைவாதிகளாக இருக்க முடியாது. இதற்கு மேலாகவும் இதனை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
செக்யூலரிஸம் எனும் போதே, மற்ற வழிபாட்டு ஸ்தல நிர்வாக போல, கோவில் நிர்வாகமும், இந்துக்களால் நிர்வகிக்கப் படவேண்டும்.
திமுக அமைச்சர், திடீரென்று 24 x 7 திட்டத்தில் வேலை செய்வது போல தினம்-தினம் செய்திகள் வந்துள்ளதைக் கவனித்திருக்கலாம், கவனிக்கலாம்.
அறநிலைய அமைச்சர் முதல், ஆணைய அதிகாரி மற்ற ஊழியர்கள், எறும்புகள் போல, சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம், கோவில்-கோவிலாக விசிட், டிவி செய்திகள் முதலியன.. வருகின்றன.
கோவில் சொத்துக்கள் பற்றிய விவரங்களையெல்லாம் இணைதளத்தில் வெளியிடுவோம் என்று ஆரம்பித்தாலும், அவை முழுமையாக இல்லை.
பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்புகள், ஆணைகள், உத்தரவுகள், அறநிலையத் துறை செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் அமைந்திருந்தன.
சிலைதிருட்டு, விக்கிரகக் கடத்தல், முதலியவை, வழக்குகள், கைதாகிய அதிகாரிகள், முதலியவற்றைப் பற்றி மூச்சுக் கூட விடக் காணோம்.
ஆனால், குற்றஞ்சாட்டப் பட்ட, வழக்குகள் நிலைவையில் உள்ள, சஸ்பென்ட் செய்யப் பட்ட அதே அதிகாரிகள், கூட்டங்கள், விஜயங்கள் முதலியவற்றில் இருப்பது கனிக்கப் படுகிறது.
இரண்டு வருடமாக கோரோனா, கோவில் அடைப்பு போன்ற விவகாரங்களினால், ஆறுகால பூஜைகள், தினசரி, பட்ச, மாத கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்தனவா-இல்லையா என்று தெரியவில்லை.
திராவிடத்துவ அரசியல்வாதிகள் அந்நிலையில் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், பெண்கள் அர்ச்சகர் என்றெல்லாம் கிளப்பி விட்டு, வேடிக்கைப் பார்க்கின்றனர்.இக்கட்டுரையும், அதே பாணியில் இருக்கிறது.
நாத்திகமற்றும்விரோதகருத்துக்களைக்கூறிவந்ததிமுகவினர், ஏன்கோவில்அன்னதானஉணவுப்பொட்டலங்களைவிநியோகிக்கவேண்டும்?: நாத்திக அரசியல்வாதிகள் ஆட்சியில் வந்துள்ளார்கள். கடவுளின் பெயரால் கூட பிராமணம் எடுத்து, பதிவிக்கு வர துணிவில்லை. ஆனால், குங்குமம்-விபூதி வைப்பார்கள், துடைத்து எரிவார்கள்! கடவுளின் பேரால் பதவிப் பிரமாணம் எடுக்காத திமுகவினர் குங்குமம்-விபூதி வைத்திருந்தது என்ன சித்தாந்தம் என்று தெரியவில்லை. இன்றோ, தமிழகம் முழுவதும், கோவில்களின் பிரசாதம், அன்னதானம், பொட்டலங்களாக, விநியோகிக்கப் படுகின்றன. அதனை ஆட்சிக்கு வந்த அமைச்சர் முதல் மற்றவர்கள், ஏதோ தாங்கள் தான் தானம் செய்வது போல, புகைப் படங்கள் செய்திகள் வெளியிட, விளம்பரம் போல செய்யப் படுகின்றன. இந்த செலவுகள் அறநிலையத்துறைகள் கணக்கில் தான் எழுதப் படும், பிறகு. நாத்திக-அரசியல்வாதிகள் ஏன் விநியோகிக்க வேண்டும்? மடாதிபதிகள் செய்யலாமே? அந்தந்த அன்னதான திட்டங்களுக்கு கொடையளித்தவர்களைக் கூப்பீடு செய்திருக்கலாமே? நாத்திக மற்றும் விரோத கருத்துக்களைக் கூறி இந்து தூஷணத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அதற்கு நம்பிக்கை இல்லை என்றால், இதற்கு யோக்கியதை இல்லை என்றாகிறது.
ஊழலில்கைதானவர்கள், வழக்குகள்நிலுவையில்உள்ளவர்கள், நாத்திகர்கள்இவ்வேலையில்ஈடுபடவேண்டியதேவையில்லை:னைந்துஅறநிலையத் துறையில் ஊழல்கள், மோசடிகள், பணம் கையாடல்கள், சிலைத் திருட்டு, நில அகபரிப்பு, டென்டர் என்று பலதரப்பட்ட பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வழக்குகள் போடப் பட்டுள்ள நிலை, கைதானவர்கள், பெயிலில்வெளி வந்தவர்கள், இடம் மாற்றம் செய்யப் பட்டவர்கள், திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் முதலியவர்கள் முதலியோருக்கு, அன்னதானம் செய்வதில் எந்த தார்மீகமும், யோக்கியதையும் இல்லை.
ஆகவே, சிறிதும் வெட்கப் படாலமல் அர்சியல்வாதிகள் போல அவர்களும் இதில் ஈடுபடுவது வெட்கக் கேடு, அவமானம் மகாப் பாவம் கூட.
நெற்றியில் குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு பக்தர்களை ஏமாற்ற வேண்டாம். கடவுள் மீது நம்ப்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் அத்தகைய முறைகேடுகள், சட்டமீறல்கள் முதலியவற்றை செய்திருக்க மாட்டார்கள்.
இது அவர்களுக்கும், மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல. கோவில் பிரசாதம் – சாப்பாட்டை பக்தர்களுக்கு அல்லாமல், ஆஸ்பத்திரிக்கு பொட்டலங்களாகக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இந்து அறநிலையத் துறையின் கீழ் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
சாப்பாட்டை அவ்வாறு கொடுப்பது நல்லது தான்! ஆனால், அக்குழுவில் ந. திருமகள் போன்றோர் இருப்பதாக செய்தி சொல்கிறது…
முதல்வர் ஒரு நாத்திகர், இந்துமதத்திற்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லியவர்…….
அந்நிலையில், இதெல்லாம் எங்கு போகும் என்று தெரியவில்லை….
இதேபோல, ரம்ஜான் கஞ்சிக்கு கொடுத்த அரிசியும், உண்வாக மாற்றி, எல்லோருக்கும் கொடுத்திருக்கலாமே?
“தமிழகமுதல்வர்வழிகாட்டுதலின்படி: சேகர் பாபு சொன்னது போல, “இதுவரையில்அறநிலையத்துறைதமிழகவரலாற்றில்இல்லாதஅளவுக்குதமிழகமுதல்வர்வழிகாட்டுதலின்படிசிறப்பாகசெயல்பட்டுஅனைவரதுபுருவத்தைஉயர்த்திபார்க்கும்வகையில்செயல்பாட்டில்ஜொலிக்கும்என்றநம்பிக்கையில்எங்களதுபயணத்தைதொடங்கியுள்ளோம்”, என்பார்கள் போலிருக்கிறது!
“இதுவரையில்அறநிலையத்துறைதமிழகவரலாற்றில்இல்லாதஅளவுக்கு….” – இது வரை அறநிலையத் துறையில் ஊழல், மோசடி, பணம் கையாடல், கைது என்று எல்லாமே இருந்து வருகின்றனர். அப்படியென்றால் எந்த அளவுக்குச் செல்வார்கள் என்று தெரியவில்லை.
“தமிழகமுதல்வர்வழிகாட்டுதலின்படி” – இது, அந்த அம்மாவின் ஆணைப் படி, மாண்புமிகு அம்மா ஆட்சி என்று சொன்னது போலிருக்கிறது. நாத்திகராக இருந்து, இவர் என்ன வழி காட்டுவார் என்றும் தெரியவில்லை.
“சிறப்பாகசெயல்பட்டு” -? நாத்திகராக, கடவுள் மறுப்பு சித்தாந்தியாக, பல நேரங்களில் இந்துவிரோதித் தனமாக செயல்படும் போது, எப்படி, “சிறப்பாகசெயல்படு”வார்கள் என்று தெரியவில்லை.
“அனைவரதுபுருவத்தைஉயர்த்திபார்க்கும்வகையில்” – இதை +வாக அல்லது –வாக எடுத்துக் கொல்வது என்றும் தெரியவில்லை.
“செயல்பாட்டில்ஜொலிக்கும்” – பொறுத்துப் பார்க்க வேண்டும்.
“என்றநம்பிக்கையில்” – நம்பிக்கைகளை தூஷிக்கும், கேலிபடுத்தும் இவர்கள் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
“எங்களதுபயணத்தைதொடங்கியுள்ளோம்”, – இதையும் பொறுத்துப் பார்க்க வேண்டும்.
அன்னதானம்போன்றசேவைகள்அமைதியாகநடந்துகொண்டேஇருக்கின்றன: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரவை தொகுதிகளிலேயே அதிமுகவின் கோட்டையாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விஐபி தொகுதியாகவும் மாறிய ஸ்ரீரங்கத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தடம் பதித்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதும் ஏராளமானோர் ஆதரவற்றோர் சாலைகளில் படுத்து உறங்கி அங்கேயே காலத்தை போக்கி வருகின்றனர். மழை, புயல் அதிக வெயில் என்றாலும் அவர்களுக்கு இருக்க இடம் இல்லாமல் சாலை ஒன்றே அவர்களுக்கு வீடாக அமைந்து விடுகிறது[1]. அவர்களுக்கு உணவு வழங்குவது என்பது மனதிற்கு ஆறுதலை அளிக்கிறது என கூறிய ஜெய் பாரதமாதா சேவை மையத்தின் தலைவர் ஜெகதீஷ், சாலைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள், அவர்களுக்கு தொடர்ந்து 400 நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து வருகிறோம். என்றார்[2]. ஆகவே, அன்னதானம் போன்ற சேவைகள் அமைதியாக நடந்து கொண்டே இருக்கின்றன. இது இந்துமதத்தின் அங்கமாகும். அன்னத்தை மதிப்பது, போற்றுவது, பகிர்வது என்பதெல்லாம் சாதாரண விசயம். இதற்கெல்லாம் யாரும் விளம்பரம் கொடுக்கத் தேவையில்லை. தமிழகத்திலேயே சங்ககாலம் முதல், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், சோழர், விஜயநகர மன்னர், நாயக்கர், மராத்தியர் என்று எல்லோருமே செய்துள்ளனர். ஆனால், அவர்கள் நாத்திகரோ, இந்துவிரோதிகளோ அல்லர். விளம்பரத்தையும் தேடவில்லை. மாறாக உதவியுள்ளனர், பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
செக்யூலரிஸமாகதிமுகஆட்சிசெயல்படவில்லை: அன்னதானத்தை வாங்கி, இதே போல உணவுப் பொட்டலங்களாக விநியோகிக்க வேண்டும். இப்பொழுது, ரம்ஜான் கஞ்சிக்கு அர்சி கொடுக்கப் பட்டு வருவது தெரிந்த விசயமே. ஆனால், அதே போன்று அரிசி கோவில்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை. வழிபடும் ஸ்தலங்கள் ஒரே மாதிரி பாவிக்கப் படவேண்டும் என்றால், அவ்வாறே செக்யூலரிஸ அரசியல் வாதிகள் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், நாத்திக திராவிட அரசியல்வாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர். பகுத்தறிவுப் போர்வையில் ஈவேராவும், பிறகு பெரும்-ஞானம் பெற்று “பெரியாராக” மாறிய பின்னரும், பிள்ளையார் சிலைகளை உடைத்ததும், ராமர்-முருகன் படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்தது, தூஷித்தது எல்லாம், தமிழக மக்கள் அறிந்ததே. இப்பொழுது வரை ஸ்டாலின் முதல், கருப்பர் கூட்டம் வரை, அத்தகைய இந்துவிரோத தூஷணங்களில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரச்சாரம் போன்ற / கிருத்துவ-துலுக்கக் கூட்டங்களிலும் அவ்வாறே ஸ்டாலின் முன்னாலேயே பேசப் பட்டன. ஆகவே, இத்தகைய வேடங்கள் தேவையில்லை.