Archive for the ‘பள்ளி-கல்லூரி’ Category

நாத்திக திராவிட அரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும்சேர்ந்துள்ளது.

ஜூன்23, 2014

நாத்திக திராவிடஅரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும் சேர்ந்துள்ளது.

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி

கணேச மூர்த்தி, ஜெயலலிதா பேரவை நகர செயலர்: ஜெயலலிதா பேரவை நகர செயலர் கைது,  தோஷம் கழிக்க கடற்கரைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டபோது,  தட்டிக் கேட்டவரை தாக்கியதாக, அ.தி.மு.க., பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார் என்று செய்திகள் வந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம்,  தேவிபட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்தவர், கணேசமூர்த்தி, 34; அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர செயலர்.  தேவிபட்டினம் பூசாரிகள் சங்க உறுப்பினராகவும் உள்ளார். அதாவது பூஜாரியாக உள்ளார், எங்கு எப்படி பூஜாரி பயிற்சி பெற்றார், எப்படி உறுப்பினர் ஆனார் என்று தெரியவில்லை. நவபாஷன கடற்கரைக்கு,  தோஷம் கழிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிப்பதில் ஈடுபட்டிருந்தார். இவரது உறவினர், கட்டணம் வசூலிக்க டெண்டர் எடுத்துள்ளார்.   ஆட்சி மாறினாலும், திராவிட பாரம்பரியத்தில் கோவிலை வைத்துக் கொண்டு சுரண்டல் வேலைகளில் ஈடுபடுவது,  திராவிட கட்சிகள் என்பது எடுத்துக் காட்டுகின்றன.

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி.1

தேவிபட்டினம் பலத்காரம் கணேசமூர்த்தி.1

பரிகார பூஜை செய்ய ஏஜென்டுகள், டென்டர், கமிஷன்: என்னத் தான் பகுத்தறிவு, நாத்திகம் பேசினாலும்,  மனங்களில் வக்கிரம் இருக்கும் போது அவற்றையே உபயோகப்படுத்தி குற்றங்களில் ஈடுபட்டு நியாயப்படுத்தும் போக்கைத்தான் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட ஆத்திகர்கள் பார்த்து வருகின்றனர். செருப்புக்கு,  சிறுநீர் கழிக்க போன்ற சாதாரண விசயங்களில் டென்டர் என்று சொல்லி லட்சங்களை அள்ளுகின்றனர். இவையெல்லாம் கட்சிக்காரர்களுக்குத் தான் கொடுக்கப் படுகின்றன. இந்நிலையில் பரிகாரபூஜை என்றால் சொல்ல வேண்டுமா? திராவிடக் கட்சிக்காரர் டென்டர் எடுத்திருக்கிறார்; அவரது உறவினரான கணேசமூர்த்தி என்பவர் தான் பூஜாரி; இவர் எப்படி பூஜாரியாக செயல்பட்டு வருகிறார் எனேறு எந்த திராவிடப் பழங்களும் கேட்டதாகத் தெரியவில்லை.

Navapashanam temple

Navapashanam temple

குழந்தை  பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால்  பரிகாரம்:கடந்த, 14ம்தேதி இரவு, 8:00 மணிக்கு, நவபாஷன தலத்திற்கு, திருப்பத்தூரில் இருந்து ஒரு பெண்,  குழந்தைகளுடன் தோஷ பரிகாரம்செய்ய வந்திருந்தார்[1]. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை   பிறந்த போது தொப்புள் கொடி சுற்றிய நிலையில் பிறந்ததால்  பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன்   தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக்குள்   கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றுள்ளார். பூஜையின் போது   அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந்திருந்த அந்த  பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50  மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில்  வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால்   பார்க்க முடியாது. இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார   பூஜை செய்வதாக கூறி அழைத்து சென்ற அந்த பெண்ணை  நிர்வாணமாக்கியுள்ளார்[2]. சிறிய லிங்கத்தை வைத்து பெண்ணின் உடல் முழுவதும் 108 முறை  தடவி கொடுத்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்[3]. கணேசமூர்த்தியின்  இந்த பூஜை குறித்து,  பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக  சொல்லவில்லை. ஊருக்கு சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளை  கூறி கதறி அழுதுள்ளார்.  தேவிபட்டினத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு  கற்பூரசுந்தரம் என்பவர் தான் பரிகார பூஜைக்காக கணேச மூர்த்தியை   சிவகங்கையை சேர்ந்த பெண்ணின் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து  வைத்துள்ளார்.  இது குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள்  கற்பூரசுந்தரத்திடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம்,   கணேச மூர்த்தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார்.

திராவிட புரோகிதம்

திராவிட புரோகிதம்

அரசியல் ஆவணத்துடன் கொலை மிரட்டல் விடுத்த திராவிட பூஜாரி: கற்பூரசுந்தரம் கணேச மூர்த்தியை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, கற்பூரசுந்தரத்தை தாக்கினார்.    ‘நான் அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை கிளைச் செயலர் பொறுப்பில் இருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’  எனவும் சொல்லியிருக்கிறார் கணேச மூர்த்தி[4]. கற்பூரசுந்தரத்தை தாக்கி, கட்சி அதிகாரத்தைக் காட்டிக் கொண்டதுடன் கணேச மூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து,  கற்பூரசுந்தரம் புகார் கொடுத்தார் தேவி பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, கணேச மூர்த்தியை கைது செய்துள்ளனர்.  இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, கணேச மூர்த்தியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி,  உத்தரவிட்டிருக்கிறார்[5].  அவருடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவில் சொல்லப் பட்டிருக்கிறது[6].

திராவிடம் நாத்திகம் சட்டம் மீறல்

திராவிடம் நாத்திகம் சட்டம் மீறல்

திராவிட-நாத்திக ஆட்சியில் கண்டவர்கள் எல்லாம் பரிக்கார பூஜை செய்து கொடுக்கிறார்களாம்: பரிகார பூஜைகள் செய்யவும், தோஷம் கழிக்கவும், வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள்,  தேவி பட்டினம் கடற்கரைக்கு தினமும் வருகின்றனர். அவர்களிடம், புரோக்கர்களே பரிகாரம் செய்வதாக ஏமாற்றி, அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர்.  “புரோக்கர்கள்” என்றால் திராவிடக் கட்சிகளின் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர். பரிகார பூஜைகளுக்கு கட்டண நிர்ணயம், குறிப்பிட்ட கால நிர்ணயம், பூஜை செய்வோருக்கு அடையாள அட்டை போன்றவற்றை வழங்க,  அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திராவிட புரோகிதம்.திருமணம்

திராவிட புரோகிதம்.திருமணம்

போலீஸார் குற்றமீறல் சட்டப் பிரிவுகளை விடுத்து வேறு பிரிவுகளில் புகார் பதிவு செய்தல்: இது குறித்து கற்பூர சுந்தரம் தேவி பட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளார்.  அதில் பெண்ணுக்கு நடந்த சில்மிஷ கொடுமைகளையும் விரிவாக தெரிவித்துள்ளார்.  கணேச மூர்த்தியை போலீசார் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மட்டும் இன்று கைது செய்தனர். பெண்ணை நிர்வாணப் படுத்தி மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை[7].  இதையறிந்த தேவி பட்டினம் பாஜ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் தேவி பட்டினம் போலீசில் தனியாக புகார் அளித்துள்ளார். இதில்,  யாத்திரை வந்த பெண் பக்தரிடம் மோசமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து கணேச மூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்[8].

Karu-with-Saibaba-in his house

Karu-with-Saibaba-in his house

திராவிட பூஜாரியின் வழக்கமான பலாத்கார லீலைகள்: இரவில் தான் பூஜை[9] கணேச மூர்த்தி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:  யாத்திரை வந்த பெண் பக்தர்களிடம் இது போன்று சில்மிஷங்களை தொடர்ந்து கணேச மூர்த்தி செய்து வந்துள்ளார்.  வெளியூர் பக்தர்கள் என்பதால் வெளியே சொன்னால் தங்களுக்குத் தான் பிரச்னை என கருதி மவுனமாக சென்றுள்ளனர்.  இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கணேச மூர்த்தி தொடர்ந்து இத்தகைய நிர்வாண பூஜை என்ற பெயரில் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்.  இளம் பெண்கள் என்பதால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்வாராம். அப்போது தான் பெண்ணின் உறவினர்களுக்கு தெரியாமல், கோயில் மறைவில்,  கடலுக்குள் தனது இஷ்டப்படி சில்மிஷங்களை செய்யமுடியும் என்பதால் இந்த டெக்னிக்கை கையாள்வாராம்.  அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

karunanidhi-with-kulla-eating-kanji

karunanidhi-with-kulla-eating-kanji

போலிகளுக்கு எப்போது வரும் தடை?: போலிகளுக்கு எப்போது வரும் தடை என்று தினமலர் கேட்டுள்ளது. ஆனால், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போலிகள் மட்டுமல்ல திராவிட பூஜாரிகள், திராவிட அரசியல் ஏஜென்டுகள் மற்றும் நாத்திக புரோக்கர்கள். வெளியூரை சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேச மூர்த்தி தனது   சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை   அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பெண் பக்தர்களை  குறி வைத்து இந்த பரிகார பூஜைகளை செய்துள்ளார். இளம்பெண்கள்  என்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் பூஜையை செய்ய வேண்டும்  என்பாராம். கோயில் வளாகத்தில் இது போன்ற போலி ஆசாமிகள்   ஏராளமானோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்த  தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்[10]. விடுதலை இச்செய்தியை போட்டு கிண்டலடித்தது விமர்சனம் செய்துள்ளது[11].  பெண்மையை பலாத்காரம் செய்து அரசியல் கட்சி போர்வையில் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது அவனின் வன்மத்தைத் தான் காட்டுகிறது. இத்தகைய மிருகங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படவேண்டும்.

Nedunchezhiyan_Karunanidhi_MGR-eating together

Nedunchezhiyan_Karunanidhi_MGR-eating together

முரண்பட்ட சித்தாந்தங்களும், தொடரும் குற்றங்களும்: ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் பதவியில் ஆட்சி செய்து வரும் நிலையில் இத்தகைய பலாதகாரங்கள், அத்துமீறல்கள் முதலியவை நடந்து வருகின்றன. ஒரு பெண் ஆட்சி செய்யும் போது, இப்படி தொடர்ந்து பாலியல் பலாத்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அரசியல், மதம், ஜாதி, பணக்காரன் என்ற ரீதியில் அவைகள் ஒன்று செய்திகள் வெளியிடுவதோடு நின்று விடுகின்றன. கருணாநிதி ஜெயலலிதாவை “ஆரிய அம்மையார்” என்று இன்று வரை ஆரிய-திராவிட இனவாத அடிப்படையில் அழைத்து / எழுதி வருகிறார். சரித்திர ரீதியில் அச்சித்தாந்தம் குப்பையில் போனப் பிறகுக் கூட தமிழகத்தில் தான் அதனை பொறுக்கி வைத்துக் கொண்டு இன்றும் துவேசத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஜாதித் தீயை ஊதிக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்; ஒரு பார்ப்பன / ஆரிய முதலமைச்சர் ஆட்சியில் கோவில் நிர்வாகம் முதலியவை ஒழுங்காக நடக்க வேண்டும் என்றுள்ள மக்கள் எதிர்பார்ப்பு சட்டப்படித்தான் இருக்கிறது. இது கடவுள் நம்பிக்கையின் மீது ஆதாரமானதே தவிர ஜாதியின் மீதான நம்பிக்கை அல்ல. கோவில் வருவாயில், மக்களின் வரிப்பணத்தில் நடக்கும்போது, அவர்கள் அவ்வாறே பார்ப்பார்கள். ஆனால், ஒரு திராவிடக் கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு, இன்னொரு திராவிடக் கட்சி தலைவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அல்லது தானும் அத்தகைய திராவிடப் பாரம்பரியங்களுக்கு சளைக்கவில்லை என்று இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தால், அரசியல் தொடர்புள்ளவர்கள், அதனை வைத்துக் கொண்டு பணம் பண்ணத்தான் பார்ப்பார்கள்.

EVR priest, Karunanidhi devotee

EVR priest, Karunanidhi devotee

கோவில்களில் குற்றங்கள் ஏற்படுவது, திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தினால்தான்: திராவிட-நாத்திக ஆலய நிர்வாகத்தில் ஆத்திகப் போர்வைவில் நாத்திகர்கள், அயோக்கியர்கள், ரௌடிகள், பொறுக்கிகள், குற்றவாளிகள் முதலியோர் இருக்கிறார்கள், இருக்கத்தான் செய்வார்கள். தமிழக திராவிட ஆட்சியில் உள்ளவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, தொடர்புள்ளவர்களுக்கு லஞ்சம் என்பது சாதாராண விசயம் தான். செய்யவேண்டிய வேலைக்கும் கையூட்டு கொடுத்தால் தான் திராவிட அரசு ஊழியன் வேலை செய்வான். எப்படி பள்ளி-கல்லூரி, போக்குவரத்து-போலீஸ், மருத்துவம் போன்ற துறைகளில் வேலைக்கு லட்சங்கள் கொடுத்து, கோடிகளை அள்ள வருகிறார்களோ, கோவில் நிர்வாகத்திற்கு வருபவர்களும் அத்தகைய ஊழல் எண்ணங்கள், லஞ்சலாவண்ய எதிர்பார்ப்புகள், மாமூல் வசூல்கள் என்ற நிலையில் தான் இருப்பார்கள். இவற்றுடன் மற்ற எதிர்பார்ப்புகளும் சேரும்போது, சமூகத்தைச் சீரழிக்கும் வேலைகளிலும் ஈடுபடுவார்கள். திருச்செந்தூர் கோவிலில் கொலை, பழனி கோவிலில் விக்கிரத்தையே சுரண்டும் அரசியல், உண்டியல்கள் உடைப்பு, கோவில் நிலம் அபகரிப்பு என்பதெல்லாம் கடந்த 60 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, ஒன்று நம்பிக்கையுள்ளவர்கள், குறைந்த பட்சம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், இந்துக்கள் தாம் கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை எக்காரணத்திற்கும் அரசியல்வாதி கூட்டில் சேர்க்கக் கூடாது. அபொபொழுதுதான், இத்தகைய அநியாயங்கள், பாலியல் குற்றங்கள் முதலிவவற்றை அழிக்க முடியும்.

 © வேதபிரகாஷ்

20-06-2014

[1]தினமலர், தோஷம்கழிக்கபெண்ணிடம்அத்துமீறல்: சில்மிஷ.தி.மு.., பிரமுகர், ஜூன்.17, 2014

[2]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96960

http://www.dinamalar.com/news_detail.asp?id=1000818

[3]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96878

[4]http://www.dinamalar.com/news_detail.asp?id=1001757&Print=1

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1000818

[6]தினமலர், பெண்ணிடம்அத்துமீறிய.தி.மு.., பிரமுகர்நீக்கம்: முதல்வர்உத்தரவுக்குகட்சியினர்வரவேற்பு,  18-06-2014

[7]http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=58205

[8]தினகரன், தேவிப்பட்டினத்தில்பரிகாரபூஜைஎன்றபெயரில்இளம்பெண்ணைநிர்வாணப்படுத்திசில்மிஷம்,   20-06-2014.

[9]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96878

[10] தினகரன்,ராமநாதபுரம்அருகேநடந்தகொடுமைகோயிலுக்குள்பெண்ணுக்குநிர்வாணபூஜை: பரிகாரம்என்றபெயரில்அத்துமீறல், ஜூன்.18,2014

[11]http://www.viduthalai.in/headline/82376-viduthalai.html