Archive for the ‘பல்லாள தேவன்’ Category

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

ஓகஸ்ட்15, 2011

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ  மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

 

109 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் மடம்: கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் (1890-1994), சென்ற மடாதிபதி 109 ஆண்டுகள் வாழ்ந்த பெருமைப் பெற்றவர். இதைப் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத்தெரியவில்லை. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம்.  கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் தோன்றியது இம்மடம். சுமார் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது கும்பகோணத்திற்கு மற்றப்பட்டது.  நீலகண்ட சாரங்கதேசிக சுவாமி கடக் மடத்தில் சில வருடங்கள் இருந்தார்[1]. இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன[2].

 

1989லிருந்து இருக்கும் வழக்கு[3]: சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் மடாதிபதியாக இருக்கும் போது, 1989ல் நிலத்தை விற்றதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1994ல் சுவாமிகள் தனது 109 வயதில் காலமானார். அப்பொழுது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கை, சிறிய தவறு நிமித்தம் தள்ளுபடி செய்தது. 1989ம் ஆண்டு மறுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது மடாதிபதி அல்லது அவர் தரப்பில், யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் இல்லாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு, முதன்மை துணை நீதிபதியிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், மடத்தின் மடத்தின் தேர் காணப்படவில்லை என்று அறநிலையத்துறை புகார் கொடுத்ததாக போலீஸார் வந்தனர். பூஜை செய்து கொண்டிருந்ததால், மடாதிபதி வரவில்லை. இதனால், உள்பக்கமாக போலீஸார் கதவைப் பூட்டினர். இதிலிருந்தே, எந்த அளவிற்கு, அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர் என்ரு தெரிகிறது. இருப்பினும் சைவர்கள் கூட ஒன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவரவில்லை.

 

வீரசைவ பெரிய மடத்து சுவாமிகள் அரசு நடவடிக்கையை குறைகூறினார்: சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்படி வலுக்கட்டாயமாக, பூஜை செய்து கொண்டிருந்த மடாதிபதியை வெளியேற்றியதற்காக கண்டித்து பேசினார். பூஜை செய்து கொண்டிருக்கும்போதே 15 அதிகாரிகள் உள்ளே நுழைந்து தம்மை வெளியேறுமாறு கட்டளையிட்டனர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்ரும், அதில் முறைகேடு எதுவும் இல்லையென்றும், மேலும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்ரும் எடுத்துக் கட்டினார்.

நிதி முறைகேடுகள் – அரசு குற்றச்சாட்டு: மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாக அமல்படுத்தப்படவில்லை.

வெளியேற மடாபதிக்கு உத்தரவு: இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.

போர்டு தொங்குகிறது:  தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

நான் பெங்களூர் போறேன்: மடாதிபதி :  மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுத்துக் கொண்டது நியாயமற்ற செயல். என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்? நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார். (வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)

அவராகவே வெளியேறினார்: ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய  மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாக ஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார். அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத், பிஜேபி எதிர்ப்பு: இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார். இல. கணேசன் பிஜேபி தலைவரும் இதே கருத்தைச் சொல்லிருக்கிறார்[4].

வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்: இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார்.  அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

 

இந்து மடங்களுக்கு எதிராக நாத்திக / திராவிட அரசு செயல்பட்டது என்பதுதான் உண்மை: அரசியல் ரீதியில், ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடலாம் அல்லது பொய் வழக்குப் போட்டு உண்மையினை மறைத்து விடலாம் என்ற போக்கு இதில் தெரிந்துள்ளது. 109 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீரசைவ மடாதிபதிக்கு மரியாதை செய்ய, இந்த தமிழகத்திற்கு, திராவிட நாட்டிற்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று வந்த அதிகாரிகள் அவர் நிலமோசடி செய்து விட்டார் என்று வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், அவரது அடுத்த மடாதிபதியையும் விரட்டியடித்துள்ளனர். இதுதான், தமிழர் பண்பாடு போலும். 1342ம் ஆண்டு, இதேபோல, வீரவல்லாளன்[5], வல்லாள தேவன், பல்லாளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட, திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய, முகமதியர்களின் தாக்குதல்களினின்று தென்னகத்தை, குறிப்பாக தமிழகத்தைக் காத்த, அந்த அரசன் மதுரையில் தோலுரித்து, தனது என்பதாவது வயதில் கொல்லப்பட்டபோது, எந்த வீரம், மானம், சூடு, சொரணையுள்ள மன்னனும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது வீரமுடன் திருவண்ணாமலை கோவிலைக் காத்த அருள்திரு தெய்வசிகாமணி தேசிகர் (1291-1348) தான் மனம் நொந்து வருந்தினார்[6].

 

தமிழர்கள், தமிழ்-இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும்: இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்பேசும் இந்துக்கள், தமிழகத்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் என்றேகூட சொல்லலாம். இருப்பினும், அவ்வாறு சொன்னால் விழித்துக் கொள்வார்களா என்ற சபலம் தான். சைவமடங்கள் அல்லது வைணவ மடங்கள் எதுவாக இருந்தாலும், இந்து நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு கருணாநிதி-ஜெயலலிதா என்ற தனிமனிதரை நாம் குற்றஞ்சாட்டவில்லை, ஆனால், அவர்கள் தமிழகத்தில் உள்ள எட்டுகோடுக்கும் மேலாக உள்ள இந்துக்களுக்கு எதிராக கடந்த 50-60 ஆண்டுகளாக செயல்பட்டு வௌகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டப்படுகிறது. “ஆட்சியாளர்” என்ற முறையில், இத்தனை கொவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, வெள்ளையெடிக்கப்பட்டது என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கொடுப்பதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் அவற்றை மக்களே செய்து கொள்வார்கள். அப்படித்தான் கோவில்கள் வளர்ந்துள்ளன. ஆனால், மடங்களையும், கோவில்களையும், சட்டத்தின் பிடியில் வைத்துக் கொண்டு, சீரழித்து வருவதுதான் திராவிட ஆட்சியின் வேலையாக இருந்ர்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

வேதபிரகாஷ்

15-08-2011


[3] The Hindu, Official takeover Veerasaiva mutt in Kumbakonam, January 19, 2005, http://hindu.com/2005/01/19/stories/2005011908140400.htm

[5] ஹொய்சள அரசன் வீர வல்லாளன் (1291-1342) திருவண்ணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, முகமதியர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் செய்திய மாஒஎரும் வீரன். தனது எண்பதாவது வயதில் முகமதியர் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு, குரூரமாக தோலுரித்து மதுரையில் கொல்லப்பட்டார். இதேபோல 90 வயதில் 1565ல் ராமராயர் போரில் கொல்லப்பட்டார். அப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

[6] அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்சைப் பெற்ற ஆதிசைவ மரபில் தோன்றிய, திருவண்ணாமலை மடத்தை நிறுவிய வீரசைவர் ஆவர். அதாவது உண்மையிலேயே வீரம் மிக்க சைவ மடாதிபதி ஆவர்.