Archive for the ‘உச்சநீதி மன்றம்’ Category

உழவாரப்பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு தேவையா?

பிப்ரவரி24, 2024

உழவாரப் பணியில் மூக்கை நுழைப்பது அமைச்சரா, அறநிலையத் துறையா, நாத்திக அரசா – இவ்விசயத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு தேவையா?

23-02-2024 அன்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இரண்டு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. தமிழகத்தில் ‘பழமையான, பாரம்பரியம் மிக்க கோயில்களில் துாய்மைப் பணிகள் மற்றும் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்[2]. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் 23-02-2024 அன்று விசாரணைக்கு வந்தது. ஆன் லைனில் பதிவு என்று 2021ல் ஆரம்பித்தாலும், வழக்கம் போல, பிரச்சினை உண்டாக்கி, அனுமதி மறுப்பது, காலதாமதம் செய்வது போன்ற முறையில் இடைஞல் செய்து வருவதாக, உழவாரப் பணி குழுக்கள் தெரிவிக்கின்றன.

அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் சொன்னதும், நீதிபதிகளின் கருத்தும்: அப்போது மனுதாரரான கே.கார்த்திகேயன், ”பொதுமக்கள், தன்னார்வலர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் வழங்குவதில்லை” எனக்கூறி மருதாநல்லுார் திருக்கருங்குடிநாதர் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில்கள், அங்குள்ள தெப்பக்குளங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்[3]. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”உழவாரப் பணிகளுக்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் செய்தால் அதை பரிசீலித்து செயல் அலுவலர் அனுமதி வழங்குவார். கோயில்களில் துாய்மைப் பணிகளுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை,” என்றார்[4]. பின் மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் 65 சதவீத கோயில்களில் சரிவர பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ‘பாரம்பரிய, பழமையான கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து அரசும் கவலை கொள்வதில்லை’ என வேதனை தெரிவித்தனர்.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[5]: “மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இரண்டு வாரத்தில் திட்டத்தை வகுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 189 தேவார வைப்பு தலங்கள், 267 நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்கள், 84 ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் அல்லது ஆர்.டி.., அல்லது பி.டி.., தலைமையில் குழு அமைத்து மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி தற்போது அந்த கோவில்களின் நிலை குறித்த விபரங்களுடன் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை இரண்டு வாரத்துக்குள் ஹிந்து அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என, தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்[6].

உழவாரப் பணி பற்றிய புரிதல் இல்லாத அமைச்சரா, துறையா எது?: தமிழகத்தில் உள்ள ஒரு சில பெரிய கோவில்களை மட்டும் தன்னார்வ அடிப்படையில் பக்தர்கள் தூய்மைப்படுத்தும் பணியான உழவாரப்பணி செய்கின்றனர். பெரும்பாலான கோவில்களில் இந்தப்பணி நடப்பதில்லை. அதுவும் முறையாக மாதம் ஒரு முறை என்று இல்லாமல் எப்போதாவது இந்தப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனை அனைத்து கோவில்களிலும் முறையாக செய்வதற்காக தூய்மைப்பணியில் ஈடுபடுபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்ய பலர் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது[7]:- “கோவிலை சுத்தம் செய்யும் உழவாரப் பணிக்கு இணையதளத்தில் பதிவு செய்யும் முறை தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே உள்ளது. பக்தர்களின் வரவேற்பை பொறுத்து தினசரி பதிவு செய்யும் வகையில் மாற்ற, திட்டம் உள்ளது,”. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்[8].

ஊழவாரப் பணி அனுமதிக்கு பதிவு செய்வது எப்படி?: ஹி கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது[9]. கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையதுறையின் http://hrce.tn.gov.in யில் சென்று, இ – சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும்[10]. அதில் உழவாரப்பணியை தேர்வு செய்ய வேண்டும்[11]. பின், கோவில்கள் பட்டியலில் விருப்பமான கோவில், பணி செய்வதற்கு உகந்த தேதி, நேரத்தை அட்டவணையில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்[12]. முன்பதிவு செய்யப்படாத சீட்டை தேர்வு செய்து, பணி செய்ய விரும்புவோரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்[13]. அதன்பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,யை பதிவு செய்தால் அனுமதி சீட்டு வரும்[14]. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்[15]. முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது[16]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், எவ்வாறு, அறநிலையத்துறை போர்வையில் உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது என்பதை ஏற்கெனவே விவரமாக பதிவு செய்துள்ளேன்[17]. ஔரங்கசீப் போலவே, சம்பந்தமே இல்லாத கிருத்துவர் கீதா ஜீவனையும் வைத்து, இச்சேவை ஆரம்பிக்கப் பட்டது[18].

© வேதபிரகாஷ்

24-02-2024


[1] காமதேனு, கோயில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள திட்டம்தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!, Updated on: 23 Feb 2024, 9:35 pm

[2] https://kamadenu.hindutamil.in/divine/plan-to-carry-out-plowing-work-in-tamil-nadu-temples-high-court-orders-to-tamil-nadu-government

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவில்களில் உழவாரப் பணி… திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, 24 Feb 2024 06:29 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-tn-govt-to-plan-for-tillage-work-in-temples-3985906

[5] தினமலர், கோயில்களில் உழவார பணி: : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: பிப் 24,2024 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3559175

[6] https://m.dinamalar.com/detail.php?id=3559175

[7] தினத்தந்தி, கோவில்களில் மேற்கொள்ளப்படும்உழவாரப்பணிஎன்றால் என்ன? அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம், ஜூலை 29, 2021 7:40 am (Updated: ஜூலை 29, 2021 7:40 am).

[8] https://www.dailythanthi.com/News/State/2021/07/29074036/Carried-out-in-temples-What-is-plowing-Description.vpf

[9] தினமலர், உழவாரப் பணி: அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவு திட்டம் துவக்கம், பதிவு செய்த நாள்: ஜூலை 27,2021 21:52; https://m.dinamalar.com/detail.php?id=2810772

[10] https://m.dinamalar.com/detail.php?id=2810772

[11] தமிழ்.இந்து, கோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார், செய்திப்பிரிவு, Published : 28 Jul 2021 03:15 AM; Last Updated : 28 Jul 2021 03:15 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/698129-minister-sekar-babu.html

[13] தினமணி, கோயில்களில் உழவாரப் பணிக்கு முன்பதிவு: புதிய நடைமுறை தொடக்கம், Published on: 28 ஜூலை 2021, 12:45 am; Updated on: 28 ஜூலை 2021, 2:19 am

[14]https://www.dinamani.com/tamilnadu/2021/Jul/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3668433.html

[15] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி : அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்!!, July 27, 2021, 11:54 am.

[16]https://www.dinakaran.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/

[17] வேதபிரகாஷ், ஆலயத் திருப்பணிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலியோர் தலையிடுவது! ஔரங்கசீப்பின் ஜெஸியா முறை ஆரம்பித்து விட்டது! (2), 12-10-2021.

[18] https://atheismtemples.wordpress.com/2021/10/12/dmk-atheist-and-anti-hindu-rulers-set-out-to-suppress-hindus-temple-practices-and-traditions/

சனிக்கு கோவில்கள் உருவாகும் விதம் – குச்சனூர் கோவில் பிரச்சினை–ஸ்தல புராணம் வளரும்விதம் (2)

ஜனவரி13, 2024

சனிக்கு கோவில்கள் உருவாகும்விதம் குச்சனூர் கோவில் பிரச்சினை ஸ்தலபுராணம் வளரும் விதம் (2)

குச்சப்புல் உருவம், உருவம் ஆகி விக்கிரமானது: இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்று கூறுகிறது வரலாறு. குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது[1]. அந்த அனீஸ்வரன், “குச்சனூர் சனீஸ்வரன்” ஆனான். அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது[2]. ஆக, இன்றைக்கு பிரசித்தியாகி விட்டார். கூட்டமும் பெருகி விட்டது. சுற்றிலும் கடைகளும் பெருகி விட்டது. இதனால், வியாபாரம் பெருக, மற்ற விவகாரங்களும் பெரிதாகி விட்டது. ஆக உள்ளூர்வாசிகள் இதை வைத்து எப்படி வியாபாரத்தைப் பெருக்கலாம் என்று பார்த்தால், அதில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. “சாமி காரியம்” என்பதால், எல்லாமே “புனிதமாகி” விடுகிறது.

2,000 கோவில் தொன்மையானது: 2 ஆயிரம் நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்[3]. செண்பகநல்லூர் என்று இருந்த உரை சுயம்பு சனீஸ்வர பகவானுக்கு குச்சிப்புள்ளினால் கோவில் கட்டியதால் இது குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது[4]. இக்கோவிலில் அரூப வடிவ லிங்கமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு கட்டப்பட்டு உள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட வருபவர்கள் தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8 மணிவரை சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிரசாதமானது முதலில் காகத்திற்கு தான் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அது அபசகுனமாக கருதப்பட்டு, பூசாரிகள் சனீஸ்வரபகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பிரசாதத்தை காகத்திற்கு வைப்பார்கள். காகம் பிரசாதத்தை உண்டால் தான் பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம். பின்புதான் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். எள் பொங்கல் வைப்பது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு.

2003ல் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இக்கோவில் வந்தது: சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது[5]. இந்த திருக்கோவிலில் நிர்வாக பொறுப்பினை ஆரம்ப காலத்தில் அறங்காவலர் குடும்பத்தினர்கள் செய்து வந்தனர்[6]. கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைய துறையினர் கோவில் நிர்வாகப் பொறுப்பினை எடுத்துக்கொண்டு அன்று முதல் இன்று வரை செய்து வருகின்றனர்[7]. இந்நிலையில் மீண்டும் கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உயர் நீதிமன்றம் “தீர்ப்பு வெளியான 4 வாரங்களுக்குள், கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவர் மட்டுமே வழக்கு தொடர்ந்திருந்தாலும்நிர்வாகத்தை டிரஸ்டிகள் ஏழு பேரிடமும் ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது  ,”தீர்ப்பு வழங்கியுள்ளது[8]. கோயில் நிர்வாகங்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி இருக்கும் நிலையில் கோயிலை  மீண்டும் கோயில் டிரஸ்ட் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[9].  இது தொடர்பாக, அறநிலைய அதிகாரிகள், “இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது,” என்கிறார்கள்[10].

2023ல் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட எருமைக்கன்றுகளை காணவில்லை என்று ஒரூவர் கேள்வி எழுப்பியது!: இந்து சமய அறநிலையத் துறையானது தன்வசம் வைத்திருக்கும் ஆலயத்தை மீண்டும் பரம்பரை அறங்காவலர்களிடம் நான்கு வாரத்திற்குள் ஒப்படைப்பு செய்து[11], இத்திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களே நிர்வகிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 03 அன்று உத்தரவிட்டு, அந்த உத்தரவினை மனுதாரருக்கு டிசம்பர் 01 அன்று கொடுக்கப்பட்டுள்ளது[12]. நீதி தேவதை வழங்கிய உத்தரவின்படி, குச்சனூர் திருக்கோயிலில் பொறுப்பேற்க இருக்கும் பரம்பரை அறங்காவலர்களே!!! நீங்களாவது இந்த திருக்கோயிலுக்கு கடந்த 10 வருடங்களாக பக்தர்களால் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட எருமைக்கன்றுகளை காணவில்லை??? இந்த மாடுகள் உண்மையிலேயேஇருக்கின்றதா? இல்லை இதற்கு வேறு எந்த விதமான பதிலும் வைத்து உள்ளீர்களா!!! ஆகவே உடனடியாக இந்த மாடுகளை கண்டுபிடித்து தர வேண்டும்??? என்று பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர்???[13] அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர் – அ.ந.வீரசிகாமணி[14].

2023ல் அறநிலையத் துறையிலிருந்து விடுபட்டது: இந்தத் தீர்ப்பினை அமல்படுத்தி கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என கூறி இந்து சமய அறநிலைத்துறையினர் அலுவலகத்தை அறங்காவலர் குடும்பத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை செயல் அலுவலரிடம் வழங்கிவிட்டு நாங்கள் பொறுப்பேற்க இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தரவினை பெறுவதற்கு இந்து சமய அறநிலையதுறை செயல் அலுவலர் மறுப்பு தெரிவித்து நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செய்திருப்பதாக தகவல் கூறி வாங்க மறுத்தார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை சுவரில் ஒட்டினார்கள். அப்போது அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை சுவரிலிருந்து கிழித்து எரிந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவினை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடுவதாக கூறி அறங்காவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் இரண்டு மணி நேரமாக நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

© வேதபிரகாஷ்

13-10-2024


[1] தெய்வீகம், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு, By Raji -Jan 14, 2020, 08:52PM IST.

[2] https://dheivegam.com/kuchanur-saneeswaran-temple-history/

[3] ஏபிபி.லைவ், Kuchanur Saneeswaran Temple: தேனி: 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?, By: நாகராஜ் | Published at : 20 Jul 2023 07:12 AM (IST), Updated at : 20 Jul 2023 07:12 AM (IST)

[4] https://tamil.abplive.com/news/madurai/theni-2000-years-old-kuchanur-saneeswaran-temple-know-specials-benefits-of-worshipping-tnn-129683

[5] காமதேனு,கோயில் பொறுப்பில் இருந்து அறநிலையத்துறை விலகிக் கொள்ள வேண்டும்உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!, Updated on:  06 Dec 2023, 11:46 am

[6] https://kamadenu.hindutamil.in/divine/order-to-hand-over-the-management-of-the-kuchanur-temple-to-the-trustees

[7] தமிழ்.சமயம், குச்சனூர் சனி பகவான் கோவிலில் பரபரப்பு! அறங்காவலர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் வாக்குவாதம்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 29 Dec 2023, 5:11 pm.

[8]  https://tamil.samayam.com/latest-news/theni/the-trustees-staged-a-siege-protest-at-kuchanur-saneeswaran-bhagavan-temple/articleshow/106381464.cms

[9] தினகரன், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க உத்தரவு: மேல்முறையீடு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு, December 6, 2023, 7:49 pm

[10] https://www.dinakaran.com/order-handover-hereditarytrustees-saneeswarabhagwantemple-kuchanur/

[11] தினமலர், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு , டிசம்பர் 05, 2023, 12:12

[12] https://temple.dinamalar.com/news_detail.php?id=140181

[13] ஐமம்.மீடியா, கடந்த பத்து ஆண்டுகளில் குச்சனூர் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட எருமைக் கன்றுகள் எங்கே??? எங்கே ???, A N Veerasigamani , Theni, Tamil Nadu (TN) 08/12/2023 08:49 AM   

[14] https://aimamedia.org/newsdetails.aspx?nid=179478

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப் பட்டது, வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! (1)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, வீசியது ஒரு தொடர்குற்றவாளி! (1)

ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில் உள்ளது: தீபாவளி நேரத்தில் “டவுன்” எனப்படும் “பாரீஸ் கார்னரில்” கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். மற்ற இடங்களை விட, இங்கு கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர-சாதாரண மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, அப்படியே பஸ்-டிரைன் என்று ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் செல்வர். அதனால், மூன்று நாட்கள் விடுமுறை என்ற நிலையில் வெள்ளிக் கிழமை 10-11-2023 அன்று அனைவரும் சந்தோசமாக, கடைகளுக்குச் சென்று வந்தனர். பொருட்களை வாங்கி வந்தனர். அந்நிலையில் தான், இந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியான கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில், ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், சென்னை உயர் நீதிமன்றம் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அர்ச்சகர்களாக வெங்கட சுப்பிரமணிய அய்யர் உட்பட மூன்று பேர் பணிபுரிகின்றனர். 10-11-2023 அன்று காலை 7:00 மணிக்கு கோவிலை திறந்து, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு, அர்ச்சகர்கள் அலங்காரம் செய்தனர்.

பெட்ரோல் குண்டுடன் வந்த பக்தர்!: இந்த நிலையில், 8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில், அந்த நபர் கோவில் கருவறைக்குள் புகுந்து, ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை’ என, ஆவேசமாக கத்தியபடி, சுவாமி சிலை மீது பெட்ரோல் பாட்டில் குண்டில் தீ வைத்து வீசினார். அது, சுவாமி சிலைக்கு பக்கத்தில் விழுந்து, பலத்த சத்தத்துடன் வெடித்தது. பட்டப் பகலில் பலர் பார்க்கும் நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. தீ பற்றி எரிந்ததால், பக்தர்கள் அலறியடித்து கோவிலில் இருந்து வெளியேறினர். அர்ச்சகர்களும், உயிர் பயத்தில் செய்வதறியாது தவித்தனர். சுவாமி சிலைக்கு தீ பரவாமல் இருக்க, குண்டு வீசப்பட்ட இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடங்களில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பெட்ரோல் குண்டு வெடிப்புப் பற்றி விதவிதமான செய்திகள்: சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது[1]. கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்[2]. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். இன்னொரு செய்தியில், “8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்,” என்றுள்ளது. அதாவது, பலர் பார்த்துள்ளனர் என்றாகிறது. அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது[3]. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்[4]. மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன[5]. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, கோயிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது[6]. அவர் யார்… எதற்காக வீசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின[7].

முதலில் போலீஸார் விசாரித்து வருகிறோம், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும் என்று அறிவித்தது: இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “பெட்ரோல் குண்டை வீசியவர் கோயில் அருகே கடை நடத்திவரும் முரளி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்தபோது, `கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவருகிறேன். ஆனால் சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த விரக்தியில்தான் கோயிலில் பெட்ரோல் குண்டை வீசினேன்என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்துவருகிறோம்[8]. சம்பவத்தின்போது முரளி கிருஷ்ணா போதையில் இருந்ததாகத் தெரிகிறது[9]. அவர்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறோம்,” எனத் தெரிவித்தனர்[10]. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கோவிலுக்குள் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக பதிலளித்த அவர்[11], ” சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும்” எனவும் தெரிவித்தார்[12].

பெட்ரோல் குண்டு போட்டவன் ஜார்ஜ்ஷீட்டர்தொடர் குற்றவாளி: விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை எம்.கே.பி., நகர், 17வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 39 என்பதும், அவர் தற்போது, ஏழு கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவர், காவல் துறையின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். கொத்தவால்சாவடி, எம்.கே.பி., நகர், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி என, ஒன்பது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஒருவர், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் உள்ள கோவில் கருவறைக்குள் புகுந்து, பெட்ரோல் குண்டு வீசி அட்டூழியம் செய்திருப்பது, பக்தர்கள் மற்றும் அர்ச்சர்களின் உயிருக்குமான பாதுகாப்பில் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

முரளிகிருஷ்ணன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்[13]: “ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் அருகே, ‘ஜி.கே.டிரேடர்ஸ்எனும் பெயரில், முந்திரி வியாபாரம் செய்து வருகிறேன். தொழில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ரவுடி தொழில் ஓரளவு கை கொடுத்தது. கொஞ்சம் கடன் தொல்லையும் உள்ளது. இந்த கோவிலுக்கு நான்கு ஆண்டுகளாக சென்று வருகிறேன். சுவாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அதனால், பெட்ரோல் குண்டு வீசினேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்[14]. சரி, கொலை வழக்கு, ரவுடியிஸம், கைது, ஜெயில் எல்லாவற்றிற்கும் சாமி தான் அனுமதி கொடுத்ததா? இப்பொழுது கைவிட்ட்தா? இது போன்று வாக்குமூலம் கொடுக்கப் பட்டது என்றெல்லாம் செய்திகளாக வெளிவருவதே கேடிக்கையாக இருக்கிறது[15]. “கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!.” என்று பாலிமர்.டிவி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமாகத்தான் இருக்கிறது[16]. நான்கு ஆண்டுகளாக குற்றங்கள் செய்து வருவதும், சாமி கும்பிடுவதும் எதனைக் காட்டுகிறது என்றும் ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தினமணி, ‘கடவுள் கைவிட்டதால்கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் சிக்கினார்!, By DIN  |   Published On : 10th November 2023 01:32 PM  |   Last Updated : 10th November 2023 01:32 PM  |

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/nov/10/petrol-bomb-inside-the-temple-4103993.html

[3] மாலைமலர், சென்னையில் பரபரப்பு: பாரிமுனை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு, By மாலை மலர்10 நவம்பர் 2023 10:54 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/petrol-bomb-in-chennai-parrys-temple-683895

[5] காமதேனு, சென்னையில் பரபரப்புபோதையில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!, Updated on : 10 Nov 2023, 11:11 am.

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/man-arrested-for-throwing-petrol-bomb-on-temple

[7] விகடன், `சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை, அதனால்தான்..!’ – கோயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் `பகீர், எஸ்.மகேஷ், Published: 10-11-2923 at 4 PMU; pdated: 10-11-2023 at 5 PM.

[8]  https://www.vikatan.com/news/general-news/petrol-bomb-hurled-in-a-temple-in-chennai

[9] தினகரன், பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: காவல்துறை விளக்கம், Published: November 10, 2023, 5:35 pmLast Updated on November 10, 2023, 5:46 pm.

[10] https://www.dinakaran.com/alcohol_addiction_temple_petrol_bomb_arrest/

[11] தமிழ்.நியூஸ்.18, கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் : சென்னை காவல் ஆணையர் விளக்கம், FIRST PUBLISHED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST; LAST UPDATED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST.

[12] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-clarifiesabout-history-sheeter-hurls-petrol-bomb-inside-the-temple-1227897.html

[13] ஜீ.டிவி, சாமி எதுவும் தராததால் கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு…!, பதிவு செய்த நாள்: நவ 10,2023.

[14] https://zeenews.india.com/tamil/videos/chennai-paris-temple-petrol-bomb-cctv-video-472117

[15] பாலிமர்.டிவி, கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!. நவம்பர்.10, 2023. 08:49:32 PM.

[16] https://www.polimernews.com/dnews/209675

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

சென்னிமலை இந்துக்களின் அறப்போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்க வேண்டும்–உரிமைகள் காக்கப் படவேண்டும்!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களில் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்கவேண்டும் உரிமைகள் காக்கப் படவேண்டும்!

இந்துவிரோத கூட்டத்தினரின் பாரபட்ச செயல்பாடு……

இதை யாரும் தட்டிக் கேட்கவில்லையே?

25-09-2023 கிறிஸ்தவர்களுக்கு சாதமாக, அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம்: மேலே குறிப்பிட்டப் படி, இதற்கிடையே கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி 25-09-2023  சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது, என்று தான் ஊடகம் குறிப்பிடுகிறது. பிறகு ஏன் அத்தகைய மறைப்புத் தனம் என்று தெரியவில்லை. இதும் ஊடகங்களின் பாரபட்சத்தை எடுத்துக் காட்டுகிறது.. இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியபோது, இதே கட்சிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

13-10-2023 அறப்போராட்டம் அறிவிப்பு………………………..

இந்துக்கள் கைது, ஆனால் கிறிஸ்துவர்களின் மீது நடவடிக்கை இல்லை: இதற்குள் புகார் கொடுத்ததின் அடிப்படையில், தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ஜான் பீட்டர் கொடுத்த புகாரின்படி, சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இதை தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அரச்சலுார், அண்ணா நகர் பூபதி, 38; தமிழரசன், 30, ஆகியோரை, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்[2]. போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆக, இவையெல்லாமே இந்துக்களுக்கு எதிராகவே நடந்த் கொண்டிருக்கின்றன, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதால், செக்யூலரிஸ ரீதியில் பாரபட்சம் இருப்பது வெளிப்படுகிறது.

தானாகக் கூடியக் கூட்டம்…

இந்துக்களின் எழுச்சி……

13-10-2023 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம்’ என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பினரின் மிரட்டல் பேச்சை கண்டித்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 13-10-2023 அன்று மாலை சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்கப் பட்டது[3]. போலீசாரும் அனுமதி கொடுத்துள்ளனர்[4]. அதனால், திட்டமிட்டப் படி, 13-10-2023 அன்று அற-போராட்டம் நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகவே சேர்ந்து விட்டது. முருக பக்தர்கள், இந்துக்கள் என்ற ரீதியில் தாமாகவே ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. முருகன் வரவேற்றார். மற்றும் அரச்சலூர் புலவர். கி. தமிழரசன், விவசாயி பேச்சாளர் தூரன் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது சென்னிமலையை பற்றி தவறாக பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானின் புகழ் குறித்து பெண்கள் பாடல்கள் பாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்[5].

கட்டுப்பாட்டுடன் அமைதியாக நடந்துள்ள அறப்போராட்டம்: சுமார் 25,000 வந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸாரும் உடனடியாக, பாதுகாப்பு ஏற்பாட்டில் இறங்கினர். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[6]. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், பள்ளி வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்ல முடியாது என சென்னிமலை பகுதியில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன[7]. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டதால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது[8]. இருப்பினும், இந்துக்கள் அமைதியாக, அறவழி சத்தியாகிரக போராட்டமாக நடத்தியுள்ளனர். அத்தனை கூட்டத்திலும், கட்டுப்பாட்டுடன், செயல்பட்டுள்ளர். கூட்டத்திற்கு வேண்டிய நீர் முதலிய ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நிச்சயமாக, இக்கூட்டம் இந்து மக்களின் எழுச்சியாகக் காணப் படுகிறது.

இந்து முன்னணி தலைவர்கள்……

மக்களின் – இந்துக்களின் எழுச்சிக் கூட்டம்

இந்த இந்து எழுச்சி-விழிப்புணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும்; இது வரை நமக்கு எதற்கு இப்பிரச்சினை, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் இருந்து வந்த இந்துக்களுக்கு இப்பொழுது விழிப்ப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அத்தகைய உணர்வுகளை அவர்கள் தொட்ர்ந்து கடைபிடித்தால், அவர்களது உரிமைகளை யாரு பறிக்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் சமம் என்று செக்யூலரிஸ ரீதியில் பேசினால் மட்டும் போதாது, அதன் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, ஆளும் பொழுது, அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ஆனால், 1970களிலிருந்து, திராவிட, திராவிடத்துவ, பெரியாரிஸ, நாத்திக கட்சிகள் அத்தகைய சட்ட-ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை. அரசியல் தலைவர்களே, இந்துக்களுக்கு எதிராக பேசி வந்துள்ளனர். அவையெல்லாம் இந்துவிரோதமாகவும் இருந்து வந்துள்ளன. அங்குதான் பிரச்சினை எழுகிறது.

25,000 இந்துக்கள் பங்கு கொண்டனர்……………………

கிறிஸ்தவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்: கிறிஸ்தவர்களின் வக்கிர எதிர்ப்பு, பலாத்கார ஆக்கிரமிப்பு, வன்முறை அபகரிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களை அரசு முறைப்ப் படி தண்டிக்க வேண்டும். அவற்றை ஏதோ “சிறுபான்மை” சமாசாரம் போல அணுகக் கூடாது. இந்த சட்டவிரோத காரணங்களுக்கு பல வழக்குகள் நிலுவைகள் உள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவை கிடப்பில் போடப் பட்டிருக்கலாம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தலாம். ஆனால், சில நேரங்களில் அவை நிச்சயமாக விசாரிக்கப் படும், அப்பொழுது நியாயமான தீர்ப்புகள் அளிக்கப் படும். ஆகவே, கிறிஸ்தவர்களும் இத்தகைய அடாவடி, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மதவிவகாரங்களில் ஒழுக்கம்-கட்டுப்பாடு இருக்கவேண்டும். அவர்களிடையே பற்பல சீர்கேடுகள் இருக்கும் பொழுது, முதலில் அவற்றை சரிசெய்து கொள்ளாமல், இந்துக்களை சதாய்ப்பதில் எந்த பலனும் ஏற்படப் பொவதில்லை. எத்ர்மறை விளைவுகள் தாம் ஏற்படும்.

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், சென்னிமலை முருகன் கோவிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் எனப் பேசிய அமைப்பினரை கைது செய்யக்கோரி 13ல் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: அக் 10,2023 15.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3453240

[3] தினமணி, இந்து முன்னணி சார்பில் அக்டோபா் 13 இல் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 01st October 2023 11:37 PM  |   Last Updated : 01st October 2023 11:37 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2023/oct/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4081779.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, என்னது ஏசு மலையா? “சென்னிமலை எங்கள் மலை“- பல்லாயிரக்கணக்கில் திரண்டுமுருகர்கூட்டம் முழக்கம்!, By Mathivanan Maran, Published: Saturday, October 14, 2023, 7:22 [IST].

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/murugan-devotees-protest-against-rename-demand-on-chennimalai-as-jesus-malai-547997.html

[7] தினத்தந்தி, சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தினத்தந்தி, அக்டோபர் 14, 7:12 am

[8] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaicondemnation-protest-of-hindu-munnani-1072464

சென்னிமலை இந்துக்களின் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி மாபெரும் வெற்றியில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களின் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி மாபெரும் வெற்றியில் முடிந்துள்ளது!

சென்னிமலையின் சிறப்புகள்: கொங்கு நாட்டு பகுதியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிவன் மலையும் முக்கியத்துவம் வாய்ந்தவை[1]. இக்கோவில்களின் தெய்வீகத் தன்மைகளை முழுமையாக யாராலும் சொல்லி விடவோ விளக்கி விடவோ முடியாது[2]. சென்னிமலையானது ஒவ்வொரு யுகங்கள் தோறும் மகுடகிரி புஷ்பகிரி கனககிரி சிரகிரி என்னும் பெயரைக் கொண்டது. இம்மலையை சுற்றி 24 தீர்த்தங்கள் உள்ளன.அவற்றுள் செங்கழுநீர் தீர்த்தம் குமார தீர்த்தம் இடும்பன் தீர்த்தம் யம தீர்த்தம்பட்சி தீர்த்தம் போன்றவை பிரசித்தி பெற்றவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தெற்கு பகுதியில் உள்ளது. இடும்பனுக்கு பழநி செல்வதற்கு வழிகாட்டிய தலம். ஆதலால் இம்மலையை ஆதிபழநி என அழைப்பர். இங்கு இடும்பனுக்கு சன்னிதி கிடையாது. லட்சோப லட்சம் பக்தர்களின் உள்ளங்களில் வீற்றிருந்து அவர்களின் இல்லங்களில் நிறைவான அருளாட்சி செய்யும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை பாலன் தேவராய சுவாமிகள் அரங்கேற்றம் செய்த அருள் தலம். ஒரு ஜாதகருக்கு எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமாக இருந்தாலும் முருகப்பெருமான் சன்னிதிமுன் வந்து அவர் நின்றால் தோஷத்தை சுக்கு நுாறாக்கி தீவினைகளை பொடிபொடியாக்கி செவ்வாய் அனுக்கிரக்தை அவரே வழங்குவார். ஆதலால் இங்குள்ள நவக்கிரக சன்னதியில் செவ்வாய் இடம் பெறவில்லை. இப்படி பல்வேறு சிறப்பு பெற்ற தலம் தான் சென்னிமலை. இவ்வாறு அமைதியாக நிகழ்ந்து வரும் வேலையில், சில கிறிஸ்துவர்கள், இம்மமலையில் ஒரு சிறிய சர்ச்சைக் கட்டி பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.

சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்: இது கிறிஸ்துவர்களின் ஒரு திட்டமாகவே மாறிவிட்டது. திண்டிவனம் போகும் வழியில், அச்சரப்பாக்கம் மலையில், இப்படி ஒரு சர்ச்சைக் கட்டி, நாளடைவில் அதனை, அனைத்துலக கிறிஸ்துவ சுற்றுலா தலமாக்கி விட்டனர். இதே போல பல இடங்களில் முதலில் ஒரு சிலுவையை நடுவது, ஜெபம் செய்வது, கொட்டகை அமைப்பது, பிறகு கூரையுடன் ஒரு அறையை அமைப்பது, பிறகு அதனை கட்டிடமாக மாற்றுவது என்று படிப்படியாக செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்பதும் மர்மமாக இருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகள் அவ்வாறு பட்ட கொடுப்பது, மின்சாரம் இணைப்புக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார்கள். உள்ளூரில் புகார் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அச்சரப்பாக்கத்தில் சட்டங்களை மீறி கட்டப் பட்டுள்ள சர்ச்சை இடிக்க நீதிமன்றம் ஆணையிட்டப் பிறகுக் கூட, அதனை கிடப்பில் போட்டு அமைதியாக இருக்கிறார்கள். “சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்” ஆக, இது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பு செயல், அபகரிப்பு திட்டம் மற்றும் மதரீதியில் கலவரங்களை உண்டாக்கும் போக்கு போன்றவை வெளிப்படுவதை தெளிவாகக் கவனிக்கலாம்.

சென்னிமலையில் அனுமதியற்ற ஜெபக்கூடமும், தொந்தரவுசர்ச்சைகளும்: சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 17-ந் தேதி 2023 17-09-2023 அன்று கிறிஸ்தவ போதகர் அர்ஜூனன் என்ற ஜான் பீட்டர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்தி கொண்டிருந்தார்.  இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொள்ளும் நிலைமை, அவசியம், அந்தஸ்து ஏன் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், எஸ்சி-இந்துக்களை மதம் மாற்றி, “தலித் கிறிஸ்தவர்” என்ற பிரச்சினையை கடந்த 40 ஆண்டுகளாக செய்து வருவதையும் கவனிக்கலாம். மதமாற்றம் செய்யும் நோக்கில், அனுமதியின்றி கிறிஸ்தவ அமைப்பு சார்பில், தொடர்ந்து ஞாயிறு தோறும் ஜெபக்கூட்டம் நடந்தது. வெளியூர்களில் இருந்தும் பலர் வந்தனர். ஒலிப்பெருகி மூலம் கூட்டம் நடத்துவதுடன், ஹிந்து தெய்வங்களை சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தி பேசினர். இதனால் அப்பகுதி ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டம் நடத்துவதால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வந்தனர். இவற்றையெல்லாம் எப்படி, ஏன், எவ்வாறு தமிழக அரசு அதிகாரிகள் அனுமதித்தார்கள் அல்லது தெரிந்தும், தெரியாத்து மாதிரி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

The church built…..

17-09-2023 அன்று இரு பிரினிடையே மோதல்: ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் ஜான் பீட்டர் குடும்பத்தினரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கிறிஸ்தவ முன்னணி சார்பில் 25-10-2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் தலைவர் டி.சரவணன் தலைமை தாங்கினார்[4]. ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ முன்னணி, இயேசுவின் நற்செய்தி இயக்கம் (ஈரோடு) மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[5]. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், ‘புஷ்பகிரி மலையை கல்வாரி மலையாக மாற்றவிட மாட்டோம்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது[6]. போலீஸார் நிச்சயமாக இவற்றை கண்டுகொண்டிருப்பர், வீடியோ பதிவும் செய்திருப்பர்.

கைதுகளில் பாரபட்சம் ஏன்?: இப்பொழுதெல்லாம் வெறுப்புப் பேச்சு பற்றி அதிகமாகவே செய்திகள் வந்துள்ளன். பல வழக்குகளும் நடந்து வருகின்றன. இதில் கூட கிறிஸ்தவர்கள் தாக்கப் பட்டதாக செய்திகள் வந்துள்ளனவேயன்றி, இந்துக்கள் கதி என்னவென்று இக்கட்சியினர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆக செக்யூலரிஸம் வேலை செய்கிறதா அல்லது இந்து விரோதம் செயல்படுகிறதா என்று கவனிக்கலாம். இந்த தாக்குதல் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டங்களை பதிவு செய்து உள்ளார்கள்[7]. போலீஸாரிடமும் மனு கொடுத்தனர்[8]. கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[9]. திருமாவளவன் கிறிஸ்துவர்களைத் தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் என்றார்[10]. கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், ஜெபக்கூட்டத்தினர் மிரட்டல் பேச்சு: சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு, மாற்றம் செய்த நாள்: அக் 13,2023 17:21

[2] https://m.dinamalar.com/detail.php?id=3456337

[3] தினத்தந்தி, சென்னிமலையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம், செப்டம்பர் 26, 2:25 am.

[4] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaichristian-organizations-protest-1060460

[5] கல்கி.ஆன்லைன், சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றப்போவதாக கூறிய கிறிஸ்தவ அமைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!, Published on : 14 Oct 2023, 11:28 am

[6] https://kalkionline.com/news/daily-news/demonstration-against-the-christian-organization-that-said-it-will-turn-chennimalai-into-calvary-hill

[7] தினகரன், சென்னிமலையில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்: கைது செய்யக்கோரி எஸ்பியிடம் மனு, September 21, 2023, 4:33 am

[8]https://www.dinakaran.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கிறிஸ்தவர்கள் மீது அட்டாக்! தமிழ்நாட்டுக்கே ஆபத்து என திருமா வார்னிங், By Noorul Ahamed Jahaber Ali, Published: Sunday, September 24, 2023, 21:09 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-warn-about-the-attack-on-christians-in-erode-chennimalai-541985.html

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்- அந்தந்த கோவில் ஆகம முறைப் படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

ஓகஸ்ட்27, 2023

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்அந்தந்த கோவில் ஆகம முறைப்படி சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆக முடியுமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனம் நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].

புதிய சட்டத்தின் படி செய்யப் பட்ட நியமனம் நிறுத்தி வைக்கப் பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சர்டிபிகேட் / சான்றிதழ் இருந்தால் எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.

தடை விதிக்கக் கோரி மனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.

அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் போன்றவை பின்பற்ற முடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.

சுகவனேஸ்வரர் கோவில் தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].

ஆகமமா, ஆகம பயிற்சியா, பரம்பரை நியமனமாபோன்றவை தொடர்பிரச்சினைகளாக இருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ் 12-08-2023 / 27-08-2023


[1] தினத்தந்தி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டப்படி பெற்ற பணி நியமனத்தை ரத்து செய்ததற்கு தடை, தினத்தந்தி ஆகஸ்ட் 12, 1:50 am

[2] https://www.dailythanthi.com/News/State/all-castes-are-ordained-priests-prohibition-against-cancellation-of-appointment-1028514

[3] தினகரன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி, August 12, 2023, 12:54 am.

[4] https://www.dinakaran.com/allcaste_priest_cancel_icourtbranch/

[5] தினமலர், அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள்: ஆக 12,2023 06:10

[6] https://m.dinamalar.com/detail.php?id=3401950

[7] ஏபிபி.லைவ், Archakas Appointment: அர்ச்சகர் நியமனம் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை, By: சுதர்சன் | Updated at : 11 Aug 2023 06:44 PM (IST), Published at : 11 Aug 2023 06:00 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/madras-high-court-sets-aside-single-judge-order-of-cancelling-archakas-appointment-under-tamil-nadu-govt-directive-134417

[9] இடிவி.பாரத், குமாரவயலூர் கோயில் அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..!, Published: Aug 11, 2023, 5:19 PM

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/hc-madurai-bench-stays-order-of-single-judge-cancelling-appointment-of-kumaravayalur-temple-priests/tamil-nadu20230811171918018018770

[11] நக்கீரன், அர்ச்சகர் நியமனம்; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/07/2023 (13:21) | Edited on 28/07/2023 (13:31),

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ordination-priests-madras-high-court-action

[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.

[13] https://tamil.news18.com/national/supreme-court-disposes-of-cases-related-to-appointment-of-archakas-in-tamil-nadu-temples-1121582.html – gsc.tab=0

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூன் 24 முதல் 27 வரை அனுமதி இல்லை என்றது: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது[1]. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி,  ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நாள்களில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்[2]. ஆனால், அறநிலையத்துறை பெண் அதிகாரி தீக்ஷிதர்களுடன் வாதிக்கும் வீடியோ ஊடகங்களில் காண்பிக்கப் பட்டது. சுற்றிலும் போலீசார் பலர் இருந்தனர். இத்தகைய சாதாரண தரிசன விசயங்களுக்கு இத்தனை போலீஸார் ஏன் என்று தெரியவில்லை. 24-06-2023 அன்றே,  வாதிக்கும் பொழுதே, ஒருவர், சட்டை இல்லாமல், மேலே ஏறி, அப்பலகையை எடுத்து விட்டார், பிறகு, போலீஸார் துணையும் அது எடுத்துச் செல்லப் பட்டது. அதை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த 2022 மே 17 என்றுதமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

17-05-2023 அரசாணை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது: இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘சிதம்பரம் கோயிலில் உள்ள கனகசபையில் 7 முதல் 10 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்யமுடியும். ஆனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு வரும் சூழலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் மேற்கொள்ள அனுமதித்தால் அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும். கோயிலில் அன்றாடம் நடைபெறும் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடைபெறும் சூழலில் பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதித்தால் வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த அரசாணை சட்டவிரோதமானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்,” என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

26-06-2023 திங்கட்கிழமைசரண்யா கொடுத்த புகார்: கோவிலில், அதிலும், விஷேசமான நாட்களில் எதற்க்கா பிரச்சினை என்று இத்தனை போலீசார் கோவிலில் நுழைவது, இருப்பது, நிச்சயமாக பக்தர்களுக்கு சங்கடமாக, தொந்தரவாக, திகைப்பாகத்தான் இருக்கும். ஏதோ குற்றம் நடந்தது போல போலீசார் குவிக்கப் பட்டிருப்பது, கோவில் ஆன்மீக நிலையினையே பாதிக்கும் முறைக்கு கொண்டு சென்றுள்ளது. 26-06-2023 திங்கட்கிழமை – சரண்யா கொடுத்த புகாரின் பேரில் 11 தீக்ஷிதர்களின் மீது போலீஸார் வழக்குத் தொடுத்துள்ளனர்[3]. இதற்கு மட்டும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தது போலும். தீக்ஷிதர்கள் அவரை தொந்தரவு செய்தனர் என்று புகார் கொடுத்துள்ளார். 19-06-2023 முதல் கனகசபையில் தரிசனம் அனுமதிக்கப் பட்டு வந்தது. 24-27 தேதிகளில் கூட்டம் அதிகம் என்பதனால் தடுக்கப் பட்டது. இதனை பிரச்சினை ஆக்கியிருக்கிறார்கள். 27-06-2023 செவ்வாய்கிழமை ஆனித்திருமஞ்சனம் பலகை எடுத்த பிறகு, படிகளில் பெண் போலீஸார் பலர் வேக-வேகமாக படிகட்டுகள் ஏறிச் செல்வது போன்று வீடியோ காட்டப் பட்டன. பிறகு அவர்கள் இறங்குவதும் தெரிந்தது. பிறகு என நடந்தது என்று தெரியவில்லை. பலகை எடுத்த பிறகு எத்தனை பேர் தரிசனத்திற்குச் சென்றனர்[4], என்னவாயிற்று என்றெல்லாமும் தெரியவில்லை. தீக்ஷிதர் சம்பிராதத்தை மீறியது தான் தெரிகிறது[5].

27-06-2023 கற்பக கணேச தீக்ஷிதர் புகார்: இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் கற்பக கணேச தீட்சிதர், பூஜையில் இருந்த தன்னை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகள் தள்ளிவிட்டு நிலைகுலையச் செய்ததாக, நகர காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியுள்ளார்[6]. அதில் அவர் கூறியிருப்பதாவது[7]: “சிதம்பர் நடராஜர் கோயிலில் நான் கடந்த 27-ம் தேதி செவ்வாய் கிழமை, பூஜைக்காரராக தினப்படி கோயில் பூஜை செய்யும் பணியில் இருந்தேன். மாலை 6.45 மணி அளவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் திடீரென கனகசபையில் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது, எனது ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் என்னை தள்ளிவிட்டு, நிலைகுலைய வைத்து, கனகசபைக்குள் நுழைந்து, என் பூஜை பணிக்கு இடையூறு செய்து எதிர்பாராத வகையில் என் மீது தாக்குதல் நடத்தினர். என் தந்தை எஸ்.எஸ்.ராஜா தீட்சிதர் உள்ளிட்ட சிலர் எனக்கு உதவ முன்வந்தனர். எதிர்பாராத தாக்குதலால் மயக்கமாகி விட்டேன். பூஜை பணியை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை உள்ளதால், உடல் வலி, மன வலியை பொறுத்துக் கொண்டு, தெய்வ பணியை இரவு 10 மணிக்கு முடித்தேன். மறுநாள் காலையில் வலியுடன் பொறுப்பை அன்றைய பூஜைக்காரரிடம் ஒப்படைத்து, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். என் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு அதிர்ச்சி, உடல் வலி உள்ளதாலும், நேரில் வந்து புகார் கொடுக்க மன தைரியம் இல்லாததாலும், புகாரை பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்[8]. புகார் மனுவின் நகல்களை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்.பி., சிதம்பரம் ஏஎஸ்பி ஆகியோருக்கும் அவர் அனுப்பியுள்ளார்[9].ஆனால், இதனை தீட்சிதர்கள் தெரிவித்த புகாரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்[10].

28-06-2023 – அனுமதிக்கப் பட்டது. தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது[11]., என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இதெல்லாம் முன்னர் ஆறுமுகசாமி என்ற ஒருவர் போராட்டம் என்றெல்லாம் செய்து வந்தது ஞாபகம் இருக்கலாம். 2017ல் அவர் காலமாகியப் பிறகு அத்தகைய பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்பொழுது, இந்த கனக சபை தரிசனம் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது போலும். தெய்வத் தமிழ் பேரவையும் ஆறுமுகசாமி போல பிரச்சினை உண்டாக்க  தோற்றுவிக்கப் பட்ட இயக்கம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Published : 30 Jun 2023 08:00 AM; Last Updated : 30 Jun 2023 08:00 AM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[3] On Monday night, police filed a case against 11 dikshithars based on a complaint received from Saranya. The case was filed under four sections of the IPC and section 4 of the Tamil Nadu Prohibition of Harassment of Women Act. However, the officials’ attempt to negotiate with the dikshithars for permission to allow devotees to Kanagasabai failed.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jun/27/hrce-dept-removes-dikshithars-board-from-chidambaram-temple-2588890.html

[4] கல்கி, அறநிலையத்துறை அதிகாரிகள் அத்துமீறல். சிதம்பரம் தீட்சிதர்கள் பரபரப்பு புகார்!, கல்கி, Published on : 29 Jun, 2023, 11:46 am

[5] https://kalkionline.com/news/tamilnadu/charity-department-officials-trespass-chidambaram-dikshidar-complains-of-excitement

[6] தினத்தந்தி, , “ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தாக்குதல்” – சிதம்பரம் தீட்சிதர் பரபரப்பு புகார், By தந்தி டிவி, 29 ஜூன் 2023 2:13 PM

[7] https://www.thanthitv.com/latest-news/attack-to-cut-off-clothes-and-wool-chidambaram-dikshithar-complains-196056

[8] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Last Updated : 30 Jun, 2023 08:00 AM.

[9] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டு தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன? மறுக்கும் அறநிலையத்துறை.!, vinoth kumar, First Published Jun 29, 2023, 11:14 AM IST,   Last Updated Jun 29, 2023, 11:18 AM IST

[11] தமிழ்.ஒன்.இந்தியா, கனகசபை கலாட்டா.. நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டதா? நடந்தது என்ன?, By Jeyalakshmi C Published: Thursday, June 29, 2023, 10:09 [IST]

https://tamil.oneindia.com/news/cuddalore/chidambaram-natarajar-temple-deekshithars-poonal-is-cut-what-happened-in-kanagasabai-518851.html

ஶ்ரீபத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப் பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (2)

ஏப்ரல்3, 2023

ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (2)

17-03-2923 – காஞ்சனா மனநிறைவுடன் கூறியது: காஞ்சனா, கும்பாபிஷேகம் நடந்த பிறகு[1], “அந்த காலத்தில் நான் பிரபல நடிகையாக இருந்தாலும் அவருடன் நானும் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். என் தங்கை கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். சில காரணங்களால் பெற்றோர், எனக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் சொத்துக்கள் எல்லாம் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டது. நான் சம்பாதித்த சொத்துக்கள் கூட பறிபோகும் நிலை வந்தது. இந்த சூழலில்தான் தி.நகர் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைக்க நான், என் தங்கை, மைத்துனர் மூவரும் ஒருமனதாக தீர்மானித்து கோவிலுக்கு தானமாக வழங்கினோம். தற்போது அந்த இடத்தில்  பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்களின் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது. என்னை ஒவ்வொரு நொடியும் பெருமாள்தான காப்பாற்றி வருகிறார். வாழ்நாள் முழுவதும் அவர் நினைவு ஒன்றே போதும்…,” இவ்வாறு கூறினார்[2].

காஞ்சனா ஏன் நிலத்தை தானமாகக் கொடுத்தார்?: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திருமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலான வெங்கடேஸ்வராவை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர்[3]. காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை TTD நிர்வாக அதிகாரி I.Y.R-யிடம் ஒப்படைத்ததாக கோயில் வட்டாரங்கள் PTI இடம் தெரிவித்தன[4].. நிலமும் அதில் உள்ள ஒரு பழைய அமைப்பும் ஜி.என். சென்னையில் உள்ள செட்டி தெருவில் உள்ள அந்த இடத்தில் கல்யாண மண்டபம்/திருமண மண்டபம் கட்ட TTDயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன[5]. ஆனால், காஞ்சனா எப்படி திடீரென இறைவனின் இருப்பிடத்திற்கு ஒரு பெரிய காணிக்கையை அளித்தார் என்பது மர்மமாகவே உள்ளது. நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்ததை நினைவுகூரலாம், மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் அவரை வெளியேற்றியதால் அவருக்கு வீடு இல்லை என்று செய்திகள் வந்தன. டிடிடிகளின் இணைச் செயல் அலுவலர் டாக்டர் என்.யுவராஜ், எஸ்டேட் அலுவலர் ஸ்ரீ சேஷய்யா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[6].வழக்கைத் தாக்கல் செய்யும் போது அவருக்கு வயது 41 மற்றும் வழக்கில் வெற்றி பெறும் போது 72 வயது. சொத்து அவர்களின் பெற்றோரால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது, பின்னர், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உயில் செல்லாது, அது சட்டப்பூர்வ வாரிசுகளான காஞ்சனா மற்றும் அவரது சகோதரிக்கு வந்தது. இந்த 31 ஆண்டுகளில், இது பலரால் கைப்பற்றப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, சகோதரிகள் வழக்கை வென்றனர், அவர்கள் அதை TTDக்கு நன்கொடையாக வழங்கினர்.

2012 முதல் 2018 வரை ஆக்கிரமிப்பில் இருந்தது: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்வாமி அறக்கட்டளைக்கு வாடகைக்கு விட்டபோது, 11.7.2012 தேதியிட்ட குத்தகைப் பத்திரத்தை, குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தினசரி பூஜை செய்யும் பூசாரி, அந்த குடியிருப்பில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. , இது சுமார் 600 சதுர அடி அளவிலான ஒற்றை படுக்கையறை பிளாட் ஆகும். அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் குடியிருப்பில் இருப்பதாக அறக்கட்டளை பத்திரம் காட்டினாலும், அந்த குடியிருப்பை குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு வைத்தது போல் எடுக்க முடியாது. இதனால், அந்த இடம் 11-07-2012 மற்றும் 10-04-2018 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது[7].

இந்நிலம் ஆக்கிரமிப்பு பற்றிய சரிபார்க்க முடியாத செவிவழி கதைகள்: ஆக்கிரமிப்பு பற்றி சொல்லப் படும் செவிவழி செய்திகள், இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனனில் அவையெல்லாம் மறைக்கப் பட்டு விட்டன போலிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் மற்றவர் இத்தகைய கதைகளை அளந்து விடுகிறார்கள்……………நாயுடு டீக்கடை வைத்திருந்தார்……….சசிகலா கூட்டம் அபகரித்துக் கொண்டது……….மூவேந்தர் கட்சி, சேதுராமன் அபகரித்து (மீனாக்ஷி மருத்துவமனை, காஞ்சிபுரம்), மீனாக்ஷி ஹோடல் கட்டினார்……………முன்பே கோவில் இருந்தது…………பிறகு நீதிமன்ற ஆணை மூலம் அது இடிக்கப் பட்டது. இருப்பினும், மீனாட்சி பவன், மற்றும் சம்பந்தப் பட்ட கம்பெனிகள் அவ்விடத்தில் இருந்திருக்கின்றன[8]. ஜூலை 3ம்தேதி, 2011 அன்று, “பொன்னியின் செல்வன்” கூட்டமும் நடந்திருக்கிறடது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம். இது பற்றியும் ஒரு வழக்கு உள்ளது. காஞ்சனா போன்ற நிலை அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. தியாகராயநகர் தான் சம்பந்தப் படுகிறது.

சேதுராமன் குடும்பம் சம்பந்தப்பட்ட நிலவழக்கு: மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது[9]. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்[10]. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.

கோவில் நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்பு முதலியவை தடுக்கப் படுமா அல்லது தொடருமா?: எது எப்படியாகிலும், சமீப காலங்களிலும் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளிக்கும் சேவை தொடர்கிறது. முன்பு கல்வெட்டுகளில் பதிவாகி, பிறகு முகமதியர், கிருத்துவர், விடுதலைக்குப் பிறகு பகுத்தறிவு பெரியாரிஸ்ட், அண்ணாயிஸ நாத்திகர் போன்றோர் ஆக்கிரமிப்புகளையும் கடந்து இருக்கும் நிலங்கள் முறையாகப் பயன்படுத்தினால், அந்நிலங்கள் மூலம் வருவாயும் கிடைக்கும், கோடிக்கணக்கில் மக்கள் பயனடைவ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்ல்லாம் பேசும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தைப் பற்றி பேசுவதில்லை. அதாவாது, எங்கெல்லாம் பெரும்பான்மையில் நன்மை பொது மக்களுக்குச் சென்றடையுமே, அங்கெல்லாம் அவர்கள் மட்டும் பலனடைய வேண்டு, சம்பாதிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் நடிகை காஞ்சனாவாக இருந்தாலும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டேயாக இருந்தாலும், நீதி மன்றங்களில் போராடத்தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது!

© வேதபிரகாஷ்

03-4-2023


[1] பத்திரிக்கை.காம், எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது! பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகை காஞ்சனா உருக்கம், MAR 18, 2023

[2] https://patrikai.com/my-birth-has-come-to-an-end-said-actress-kanchana-at-padmavathi-mother-temple-kumbabishekam/

[3]  Indian Express, Kanchana donates Rs 15 cr land to Tirumala Tirupati Devasthanam, Written by Agencies, Tirupati | First published on: 26-10-2010 at 12:11 IST; October 26, 2010 12:11 IST.

[4]https://indianexpress.com/article/india/india-others/kanchana-donates-rs-15-cr-land-to-tirumala-tirupati-devasthanam/

[5] Times of India, Actor Kanchana donates Rs 15 cr worth land to TTD, TNN / Oct 26, 2010, 03:54 IST.

[6] TTD.News, Donation of land to TTD by Smt. Girija Pandey and Ms Kanchana,

[7] Madras High Court – Mrs.Girija Pandey vs The Commissioner on 10 April, 2018

 In the High Court of Judicature at Madras Dated :  10.4.2018; Coram :

The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM

Writ Petition Nos.7847 & 7848 of 2018 & WMP.Nos.9791 to 9794 of 2018

1. Mrs.Girija Pandey

2. Ms.Vasundhara Devi (a) Kanchana                                                      …Petitioners

Vs

1.The Commissioner, Corporation    of Greater Chennai, Ripon Buildings,    Chennai-3.

2.The Assistant Revenue Officer,     Zone-9, Corporation of Greater    Chennai, No.1, Lake Area, 4th Cross Street, Nungambakkam, Chennai-34.                                    …Respondents

https://indiankanoon.org/doc/39110800/

[8] MEENAKSHI BHAWAN at 44/1 GN Chetty Road, T. Nagar, The Place is located between the Jain Temple and Residency Towers in GN Chetty Road. 3rd July 2011, 28155155

MEENAKSHI HOTELS & ENTERTAINMENT PRIVATE LIMITED’s Corporate Identification Number (CIN) is U55101TN1992PTC022336.- Nalliah Servai Sethuraman and Ramesh Sethuraman – Directors.

Smile Amusement & Hospitality private limited was at the first floor; directors are – Sethuraman Gurushankar, Chandrasekharan Kamini and Nalliah Servai Sethuraman.

[9] தமிழ்.ஒன்.இந்தியா, டாக்டர் சேதுராமனின் மூத்த மகன், மகள், மருமகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!, By Jayachitra Updated: Friday, June 28, 2013, 17:55 [IST]

[10] https://tamil.oneindia.com/news/2013/06/28/tamilnadu-arrest-warrant-son-madurai-meenakshi-hospital-owner-178070.html?story=1

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf