Archive for the ‘மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறுதல்’ Category

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் – இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

மார்ச்24, 2022

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம் இந்துவிரோத பெரியாரிஸ ஸ்டாலினுக்கு ஏன் பால்குடம்? பகுத்தறிவுகள் கண்டிக்கவில்லையே? மடாதிபதிகளைப் பிரித்து கோவில் சொத்துகளை அபகரிக்க திட்டமா?

முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவில் மற்றும் சென்னை காளிகாம்பாள் கமடேசுவரர் தேவஸ்தானம் கோவிலில் புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடக்க விழா 22-03-2022 அன்று நடந்தது[1]. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்[2]. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்ததுடன், புதிய வெள்ளி திருத்தேர் செய்யும் பணியையும் தொடங்கி வைத்தனர்[3]. காளிகாம்பாள் கோவிலில் சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இது போன்ற செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன. ஆனால், “முதல்வர் பிறந்தநாள் பால்குட ஊர்வலம்”, என்ற தலைப்புடன் தினகரன் நாளிதழில் சிறியதாக செய்தி வெளிவந்துள்ளது[4]. “முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் இருந்து காளிகாம்பாள் கோவிலுக்கு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தன. அருகில், அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அறநிலயத்துறை ஆணையர் குமரகுருபரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.” தமிழ் முரசு என்ற நாளிதழிலும் இச்செய்தி வந்துள்ளது[5]. முரசொலியில் முழுவதுமாக செய்தி வந்துள்ளது[6].

பக்தி பரவசத்துடன் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது[7]: “குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் முன்னிலையில் காளிகாம்பாள் கோவிலில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 11 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 10-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்அமைச்சர் அடுத்த 2 வாரங்களில் தொடங்கி வைக்க உள்ளார். சிதம்பரம் கோவில் தொடர்பான பிரச்சினை குறித்து இணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின்பு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படாமலும் இறைவனை மகிழ்ச்சியோடு காணுகின்ற சூழ்நிலையை உருவாக்குவது துறையின் நோக்கமாகும்,” இவ்வாறு அவர் பேசினார். ஒரு வேளை, துர்கா ஸ்டாலின் உத்தரவு கொடுத்திருப்பார் போலும்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது[8]: “காளிகாம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் பால்குடபெருவிழா கோலாகலமாக பக்தி உணர்வுடன் இன்று நடைபெற்று இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் சுமார்  2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதகான பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் அறநிலையத்துறையின் செயல்திட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் விரைவாக நிறைவேற்றுகிறார்கள். ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடந்து வருவதுடன், கோவில் விழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், திருப்பணிகள், கோவில் நிலங்கள் மீட்பு, பக்தர்களுக்கான எல்லா விதமான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக ஆன்மிக பணிகளை ஆற்றி வருவதை நாங்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று பாராட்டுகிறோம்,” என்றார்[9].

தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் பேசியதாவது: “இந்து சமய அறநிலையத்துறை புதிதாக தொடங்கி உள்ள கல்லூரிகள் மூலமாக ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது பாராட்டிற்குரியது. கோயில்களில் இருக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் படியெடுத்து ஒலி வருடல் செய்து பாதுகாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறநெறி பாடசாலை தொடங்க முயற்சி எடுத்துள்ள முதல்அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்,”  இவ்வாறு அவர் பேசினார்.

500க்கும் மேலான பக்தர்கள் பால்குடம் எடுத்தது: முன்னதாக சென்னை மரகதாம்பாள் சமேத மல்லிகேசுவரர் கோவிலில் இருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் தனபால், கோவில் அறங்காவலர் சர்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈவேரா நாத்திகத்தில் ஊறி, பெரியாரிஸ போதையில் நனைந்து, இந்துவிரோத பேச்சுகளைப் பேசி, நெற்றியில் விபூதி என்றெல்லாம் வைத்தால் துடைத்தெறியும் ஸ்டாலினுக்கு எப்படி பால்குடம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு, இரண்டு மடாதிபதிகள் தலைமைத் தாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மதுரை ஆதீனம் திமுக ஆதரவாக இருந்தார். இப்பொழுதைய ஆதீனம் இந்து, தாமரை மலர வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்..

கூடிய சீக்கிரத்தில், இந்து அறநிலையத் துறை, “ஸ்டாலின் போற்றும் துறையாக மாறப் போகிறது: இதில் வேடிக்கை என்னவென்றால், திக, வீரமணி போன்றோரும், இந்துத்துவ வாதிகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. சேகர் பாபு, தன்னை இந்து என்று காட்டிக் கொண்டு, அறநிலையத் துறையை ஒட்டு மொத்தமாக திமுக ஆதரவு கோஷ்டிகளை நிரப்பி, கோவில் சொத்து, குத்தகை, வாடகை என்று எல்லாவற்றையும் சுரட்ட திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பக்தர்களுக்கு மொட்டை அடிக்க இலவசம் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதனால், கோடிக் கணக்கில் சொத்துக்களைக் கொண்ட மடாதிபதிகளைப் பிரித்து, திட்டத்தை அமூல் படுத்தி கொள்ள செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளன. இத்தகைய மடாதிபதிகள், திராவிடத்துவ போதையில் போற்றி………………….போற்றி அகவல் பாடப் போகிறார்கள்! முன்னால் ஒரு தடவை கருணாநிதிக்கு செய்தார்கள். முட்டாள் இந்துக்கள்,……..பிரஹஸ்பதி இந்துத்துவ வாதிகள்,……மற்ற காவி இத்யாதிகள்,……………….மேகதாது, டாஸ்மாக், ………….என்று பேசி காலந்தள்ளப் போகிறார்கள்! ஸ்டாலினுக்கு அரோகரா! வேல் பிடித்தவனுக்கு அரோஹரா!!!!!!! கருணாநிதி மைந்தனுக்கு அரோஹரா!!!!!!! முழக்கங்களும் அதிகமாகும்.

©  வேதபிரகாஷ்

24-03-2022


[1] தினத்தந்தி, காளிகாம்பாள் கோவிலுக்கு ரூ.2½ கோடியில் வெள்ளித்தேர்: ‘இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு,” பதிவு: மார்ச் 23,  2022 16:00 PM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/23160028/Rs-24-crore-silver-for-Kalikambal-temple-Praise-for.vpf

[3] தினகரன், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுகிறோம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள், 2022-03-22@ 20:06:00.

[4] தினகரன், முதல்வர் பிறந்தநாள் பாகுட ஊர்வலம், நகரம், சென்னை 23-03-2022, பக்கம்.4.

[5]  தமிழ்முரசு, சென்னை 22-032022, பக்கம்.4

[6]  முரசொலி, 22-03-2022, பக்கம்.11.

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=751780

[8] மாலைமலர், காளிகாம்பாள் கோவிலில் ரூ.2½ கோடி மதிப்பில் புதிய வெள்ளித்தேர்அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார், பதிவு: மார்ச் 22, 2022 15:01 IST.

[9] https://www.maalaimalar.com/news/district/2022/03/22150127/3604654/tamil-news-minister-sekhar-babu-started-new-velli.vpf

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் – மதம், தர்மம் மற்றும் ஆன்மீகம் விடுத்து அரசியல் சார்ந்த காரியங்களில் ஈடுபடக் கூடாது (4)

ஒக்ரோபர்29, 2020

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் –  மதம், தர்மம் மற்றும் ஆன்மீகம் விடுத்து அரசியல் சார்ந்த காரியங்களில் ஈடுபடக் கூடாது (4)

இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்’ என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீன’த்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக் கொள்கிறார்கள்.

திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு “தரும சாசன சொத்துகள்” ஆகுமா?: திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு “தரும சாசன சொத்துகள்” என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.`சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

திருவாடுவதுரை மடாதிபதி ஆக, இளையபெரிய சட்டங்கள் சண்டைப் போட்டுக் கொண்ட விவகாரங்கள்[1]: இளைய தம்பிரான், பெரிய தம்பிரான், கொலைத் திட்ட வழக்கு என்றெல்லாம் கூட இருக்கின்றன. அவ்வழக்கின் சுருக்கம்[2]:

மார்ச் 24, 1997 – மீனாக்ஷு சுந்தரம் தம்பிரான் இளைய பண்டார சந்நிதியாக நியமிக்கப் படல்.

ஜூலை 6, 2002 – இளைய பண்டார சந்நிதியை கொலைசெய்ய திட்டம் போட்டதாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

15.7.2002 – நோட்டீஸ் அனுப்பப் பட்டது.

ஜூலை 24,  2002 – பதவிலிருந்து நீக்கப் பட்டார்.

24-12-2004 – நீக்கப் பட்டதற்கு எதிராகத் தொடுக்கப் பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.

ஆகஸ்ட் 1, 2011 – உயர்நீதி மன்றத்தில் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டார்.

நவம்பர் 22, 2012 – பெரிய பண்டார சந்நிதி காலமானார்.

நவம்பர் 22, 2012 ஆணை – மீனாக்ஷு சுந்தரம் தம்பிரான் திருவாவடுதுரை 24வது மடாதிபதி ஆனார்.

05-06-2018 – இவ்விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது என்று உயர்நீதி மன்ற  தீர்ப்பு[3]

அதாவது, ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய மடாதிபதிகள் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்றால், அடிப்படையிலேயே பல்லாண்டுகளாக ஏதோ தவறு இருந்து வருகிறது. கடவுளை மீறி நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே, அவர்களது போலித்தனத்தை வெளிப்படுத்தி விட்டது[4]. அதிகாரத்திற்காக, பட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காக, ஒரு தம்பிரான், இன்னொரு தம்பிரானை கொலைசெய்யத் துணிகிறார் என்றால், திராவிட அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அங்கு அரசியல் நுழைந்து விட்டது, இவர்கள் அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளார்கள் என்பது உறுதியாகின்றன. இதனால் தான், மடம்-கோவில் சொத்துகள் சட்டங்களை மீறி குத்தகைக்கு விடுவது, ஆக்கிரமிப்பது, விற்பது, பாட்டா போடுவது என்றெல்லாம் நடந்து வருகின்றன.

கோவில்மடங்கள் இடங்கள் எவ்வாறு ஆக்கிரமிக்கப் படுகின்றன?: குத்தகைகாரர்களாக இருந்து, எப்படி மடத்தை ஏமாற்றி வருகின்றனர் என்பதை, நீதிமன்ற தீர்ப்புகளே வெளிபடுத்திக் காட்டுகின்றன[5]. அதில் பல விவரங்கள் பெயர்களுடன், வெளியாகியுள்ளன[6]. இது உதாரணத்திற்குக் கொடுக்கப் படுகிறது. இது போன்று நூற்றுக் கணக்காண தீர்ப்புகள் உள்ளன. இருப்பினும், இவற்றையெல்லாம், ஒதுக்கி விட்டு, மறுபடி-மறுபடி சட்டமீறல்களை செய்து வருவது, ஒரு திட்டமிட்ட சதிவேலை எனலாம். திரும்ப-திரும்ப கோவில்-மடங்கள் நிலங்களையே குறி வைத்து, இவர்கள் வேலை செய்வதால், நிச்சயமாக அவை இந்துவிரோதமாகிறது. முதலில் திராவிடக் கட்சிகள் இந்திவிரோதிகளாக இருந்து கொண்டு செய்து வந்தன. இப்பொழுது, மற்ற கட்சிகள், குழுக்கள், முதலியவை அதே வேலையை செய்து வருகின்றன. நாளுக்கு நாள் நிலத்தின் விலை உயர்ந்து வருவதால், இத்தகைய மோசடிகள் அரசியல் பலத்தினால், சுலபமாக செய்யலாம் என்றாதால், எல்லோரும் இறங்கியுள்ளன. துலுக்கர், கிருத்துவர், மற்ற இந்துவிரோதிகள் இதில் இறங்கி கடந்த நூறாண்டுகளாக, இவ்வாறு செயல்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு, சொத்தை அனுபவித்தல், பிறகு சொத்தே தனது என்பது, பட்டாவிற்கு விண்ணப்பித்தல், ஊழல் அதிகாரிகள் முதலியவர்களின் உதவியால் பட்டா பெறுதல், பிறகு நீதிமன்றங்களுக்குச் சென்றாக் கூட, இழுத்தடிப்பது, போலி ஆவணங்களை உண்டாக்குவது, கைமாற்றி விற்பது என்ற ரீதியில், இழுத்தடித்து, சொத்துகளை அனபவித்து வருகின்றனர்.                                            

© வேதபிரகாஷ்

28-10-2020


[1] Madras High Court – His Holiness Kasiviswanatha … vs State Of Tamil Nadu, IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS,   Reserved on :  22.03.2018,       Delivered on :      05-06-2018

CORAM              THE HONOURABLE THIRU JUSTICE V. PARTHIBAN

W.P.No.31714 of 2012 and    W.M.P.No.2672 and 2673 of 2018

His Holiness Kasiviswanatha Pandara Sannidhi,  The Adheena Head of  Thiruvavaduthurai Adheenam,

Mayiladuthurai taluk, Nagapattinam District.                                                                        ..                  Petitioner

versus

1. State of Tamil Nadu, represented by the Secretary, Hindu Religious and Charitable Endowments Department, Fort St.George, Chennai.

2. The Commissioner, Hindu  Religious and Charitable Endowments Department,                    Chennai.

3. The Assistant Commission Hindu  Religious and Charitable Endowments Department, Kumbakonam.                                   

4. Sri Meenakshisundara Thambiran, Kattalai Thambiran at Thiruvidaimarthur Temple, now self declared as Head of Thiruvavaduthirai Adheenam, Mayiladuthurai taluk, Nagapattinam District. ..   …Respondents

[2] https://indiankanoon.org/doc/26044699/

[3] Indian Express, Madras HC refuses to interfere in mutt matter, Published: 06th June 2018 04:39 AM  |   Last Updated: 06th June 2018 04:39 AM

[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jun/06/madras-hc-refuses-to-interfere-in-mutt-matter-1824354.html

[5] Madras High Court – Thiruvavaduthurai Adheenam vs The Commissioner on 17 October, 2012

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED: 17/10/2012

CORAM – THE HONOURABLE MR.JUSTICE S.MANIKUMAR, W.P.(MD).No.1278 of 2006

And W.P.M.P.Nos.1433, 242 of 2006 and M.P.Nos.1 and 2 of 2012

Thiruvavaduthurai Adheenam, Thiruvavaduthurai, Through its Adheenakarthar, Sri La.Sri.Siva Prakasa Pandara Sannidhi Avargal, Mayiladuthurai Taluk, Nagapattinam District.            … Petitioner

Vs.

1.The Commissioner,    Land Revenue, Survey and Settlement,    Chepauk, Chennai 600 005.

2.The Assistant Settlement Officer,    (South – incharge),    The Office of the Director of Land Revenue,

   Survey and Settlement, Chepauk, Chennai 5.

3.The Assistant Director,    Survey and Settlement,    Tirunelveli District, Tirunelveli.

4. The Inspector of Survey,    Cheranmahadevi, Tirunelveli District.

5.A.Gnanakani,    S/o.Arulappa Nadar,    President, Sivanthipuram Vivasaya Sangam,

   Sivanthipuram Village, Vickramasingapuram Post,    Ambasamudram Taluk, Tirunelveli District.

6.P.Jeyaraj [R-5 impleaded as per order dated 13.02.2007 made in W.P.M.P.(MD).No.2870 of

2006.] [R-6 impleaded as per order dated 10.08.2012 made in M.P.(MD).No.1278 of 2006]

                                                                                                      … Respondents

[6] https://indiankanoon.org/doc/18428519/

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் – குத்தகை, வாடகை, வசூல் முதலியவற்றில் உண்டாகும் அதர்மங்கள் (3)

ஒக்ரோபர்29, 2020

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் –  குத்தகை, வாடகை, வசூல் முதலியவற்றில் உண்டாகும் அதர்மங்கள் (3)

ஜூன் 2020, குரு பூஜையின் போது, விவரம் தெரிந்தவர் சொன்னது[1]: மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “…………ராமநாதபுரம் மன்னன் ஆதீன சீடராக விளங்கி, ஆதீனத்திற்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார்…அவற்றின் மூலம் கோவில் திருப் பணிகள் நடைபெற்றன….,”என்றெல்லாம் நடந்தன என்று விவரித்தார்[2]. ஆனால், அத்தகைய சொத்துகள் இன்றும் இருந்தும், திருப்பணிகள் நடக்காமல், நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு, தெய்வீகப் பணிக்கு எதிரான வேலைகள் நடைபெறுகின்றன என்பதை மறைமுகமாக உணர்த்துகிறார் போலும். வழக்கறிஞர் என்ற நிலையில், அதெல்லாம் அதெல்லாம் அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நிச்சயமாக, ஏனெனில், இவர் பலவித விவகாரங்களுக்குக் குரல் கொடுத்து வருகிறார்[3]

அக்டோபர் 2019- திருவாவடுதுறை ஆதீன மட சொத்துக்களை மீட்கக்கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது[4]:  மதுரை மாவட்டம், சின்ன உலகாணியைச் சேர்ந்த மயில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: “திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள் பல இடங்களில் உள்ளன. மதுரை மாவட்டம், சின்ன உலகாணியிலுள்ள சில நிலங்களில்  குத்தகை அடிப்படையில் சிலர் விவசாயம் செய்கின்றனர். தற்போது குத்தகைதாரர்களின் வாரிசுகள் விவசாயம் செய்கின்றனர். இது குத்தகை விதிக்கு எதிரானது[5].  இந்த நிலங்கள் 1972-ல் குருசாமி, பகவதி, ராமு, மற்றொரு குருசாமி என 4 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இவர்கள் இறந்த நிலையில் குத்தகை ஒப்பந்தம் செல்லாது[6]. ஆனால் குத்தகை ஒப்பந்தத்துக்கு மாறாக அந்த 4 பேரின் வாரிசுகளும், அவர்களின் வாரிசுகளும் நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஆதீன நிலங்களை சட்டவிரோதமாக ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்[7]. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இவர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்கவும், இதுவரை உபயோகப்படுத்தியதற்கான தொகையை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். தாரணி ஆகியோர் மனு குறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர், மதுரை  கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2019, நவ. 12க்கு தள்ளி வைத்தனர். ஆக, இவ்விசயங்கள் நன்றாகவே தெரிந்திருக்கின்றன.

2018- ஆதீனத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வானதி உத்தரவு: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சைவ வேளாளர் சமுதாயத் தலைவர் சேதுராமலிங்கம் பிள்ளை ராஜபாளையம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராஜபாளையம் அருகே உள்ள மடத்துப் பட்டியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 40 வருடங்களாக இந்த நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது[8]. இங்கு நூலகம் அமைக்க அன்று இருந்த 23-வது குருமகா சன்னி தானத்தை அணுகினோம். அப்போது அவர் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை சட்டப்படி நீங்கள் மீட்டால் நூலகம் அமைக்க இடம் அளிக்கிறேன் என்று உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தி மடத்துப்பட்டியில் இருந்த ஆதீன இடத்தை மீட்டோம். இதனிடையே 23-வது மகா சன்னிதானம் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து 24-வது திருவாவடுதுறை சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணர் தேசிக பரமாச்சாரி சுவாமிகள் பொறுப்பேற்றார். அவரிடம் மடத்துப்பட்டியில் உள்ள நிலத்தில் நூலகம் அமைக்க இடம் கேட்டோம். அவர் இடம் தர முடியாது என தெரிவித்து விட்டார். அந்த நிலத்தை மீட்க ரூ. 20 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். தற்போது ஆதீனம் நிலத்தை தர மறுக்கிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 29-ந் தேதி ஜூன் 2018, விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் ஜூன். 3-ந் தேதி (03-07-2018 அன்று) ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆதீனம் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆதீனத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வானதி உத்தரவிட்டார்[9].


கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான “தரும சாசன சொத்து”களை வாங்கலாமா?[10]: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது: இந்தச் சூழலில் அண்மைக்காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது… `தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ‘இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2020


[1] கொற்றவை செய்தி, திருவாவடுதுறை ஆதீனத்தில் இன்று சைவ குல எத்திராஜர் குருபூஜை விழா நடைபெற்றது, 17 June 2020

[2] http://www.kotravainews.com/news/thiruvaduthurai-adheenam-today-kotravai-news/

[3]  டாஸ்மார்க கடை திறப்பு, பொது மக்கள் பாதுகாப்பு போலீஸ், கோவில்கள் திறப்பு என்று பல விசயங்களில் குரல் கொடுப்பதாக, ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், இவ்விசயத்தில் அமைதி காக்கிறார் போலும்.

[4] தினகரன், திருவாவடுதுறை ஆதீன மடம் சொத்துக்களை மீட்க வழக்கு, 2019-10-01@ 00:38:21.

[5] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530262

[6] தமிழ்.இந்து, திருவாவடுதுறை ஆதீன நிலங்களை மீட்கக் கோரும் வழக்கு: மதுரை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 30 Sep 2019 05:50 PM Last Updated : 30 Sep 2019 05:50 PM.

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/518079-high-court-order-to-madurai-collector-1.html

[8] மாலை மலர், நில விவகாரம்: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பிடிவாரண்டுராஜபாளையம் கோர்ட்டு அதிரடி, பதிவு: ஜூலை 04, 2018 14:04 IST.

[9] https://www.maalaimalar.com/news/district/2018/07/04140445/1174378/Rajapalayam-court-warrant-to-thiruvavaduthurai-adheenam.vpf

[10] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PMUpdated:12 Jun 2018 4 PM

https://www.vikatan.com/spiritual/temples/127470-can-we-convert-temple-land-as-a-sales-land

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

ஓகஸ்ட்15, 2011

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ  மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

 

109 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் மடம்: கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் (1890-1994), சென்ற மடாதிபதி 109 ஆண்டுகள் வாழ்ந்த பெருமைப் பெற்றவர். இதைப் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத்தெரியவில்லை. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம்.  கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் தோன்றியது இம்மடம். சுமார் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது கும்பகோணத்திற்கு மற்றப்பட்டது.  நீலகண்ட சாரங்கதேசிக சுவாமி கடக் மடத்தில் சில வருடங்கள் இருந்தார்[1]. இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன[2].

 

1989லிருந்து இருக்கும் வழக்கு[3]: சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் மடாதிபதியாக இருக்கும் போது, 1989ல் நிலத்தை விற்றதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1994ல் சுவாமிகள் தனது 109 வயதில் காலமானார். அப்பொழுது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கை, சிறிய தவறு நிமித்தம் தள்ளுபடி செய்தது. 1989ம் ஆண்டு மறுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது மடாதிபதி அல்லது அவர் தரப்பில், யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் இல்லாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு, முதன்மை துணை நீதிபதியிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், மடத்தின் மடத்தின் தேர் காணப்படவில்லை என்று அறநிலையத்துறை புகார் கொடுத்ததாக போலீஸார் வந்தனர். பூஜை செய்து கொண்டிருந்ததால், மடாதிபதி வரவில்லை. இதனால், உள்பக்கமாக போலீஸார் கதவைப் பூட்டினர். இதிலிருந்தே, எந்த அளவிற்கு, அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர் என்ரு தெரிகிறது. இருப்பினும் சைவர்கள் கூட ஒன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவரவில்லை.

 

வீரசைவ பெரிய மடத்து சுவாமிகள் அரசு நடவடிக்கையை குறைகூறினார்: சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்படி வலுக்கட்டாயமாக, பூஜை செய்து கொண்டிருந்த மடாதிபதியை வெளியேற்றியதற்காக கண்டித்து பேசினார். பூஜை செய்து கொண்டிருக்கும்போதே 15 அதிகாரிகள் உள்ளே நுழைந்து தம்மை வெளியேறுமாறு கட்டளையிட்டனர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்ரும், அதில் முறைகேடு எதுவும் இல்லையென்றும், மேலும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்ரும் எடுத்துக் கட்டினார்.

நிதி முறைகேடுகள் – அரசு குற்றச்சாட்டு: மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாக அமல்படுத்தப்படவில்லை.

வெளியேற மடாபதிக்கு உத்தரவு: இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.

போர்டு தொங்குகிறது:  தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

நான் பெங்களூர் போறேன்: மடாதிபதி :  மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுத்துக் கொண்டது நியாயமற்ற செயல். என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்? நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார். (வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)

அவராகவே வெளியேறினார்: ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய  மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாக ஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார். அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத், பிஜேபி எதிர்ப்பு: இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார். இல. கணேசன் பிஜேபி தலைவரும் இதே கருத்தைச் சொல்லிருக்கிறார்[4].

வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்: இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார்.  அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

 

இந்து மடங்களுக்கு எதிராக நாத்திக / திராவிட அரசு செயல்பட்டது என்பதுதான் உண்மை: அரசியல் ரீதியில், ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடலாம் அல்லது பொய் வழக்குப் போட்டு உண்மையினை மறைத்து விடலாம் என்ற போக்கு இதில் தெரிந்துள்ளது. 109 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீரசைவ மடாதிபதிக்கு மரியாதை செய்ய, இந்த தமிழகத்திற்கு, திராவிட நாட்டிற்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று வந்த அதிகாரிகள் அவர் நிலமோசடி செய்து விட்டார் என்று வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், அவரது அடுத்த மடாதிபதியையும் விரட்டியடித்துள்ளனர். இதுதான், தமிழர் பண்பாடு போலும். 1342ம் ஆண்டு, இதேபோல, வீரவல்லாளன்[5], வல்லாள தேவன், பல்லாளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட, திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய, முகமதியர்களின் தாக்குதல்களினின்று தென்னகத்தை, குறிப்பாக தமிழகத்தைக் காத்த, அந்த அரசன் மதுரையில் தோலுரித்து, தனது என்பதாவது வயதில் கொல்லப்பட்டபோது, எந்த வீரம், மானம், சூடு, சொரணையுள்ள மன்னனும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது வீரமுடன் திருவண்ணாமலை கோவிலைக் காத்த அருள்திரு தெய்வசிகாமணி தேசிகர் (1291-1348) தான் மனம் நொந்து வருந்தினார்[6].

 

தமிழர்கள், தமிழ்-இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும்: இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்பேசும் இந்துக்கள், தமிழகத்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் என்றேகூட சொல்லலாம். இருப்பினும், அவ்வாறு சொன்னால் விழித்துக் கொள்வார்களா என்ற சபலம் தான். சைவமடங்கள் அல்லது வைணவ மடங்கள் எதுவாக இருந்தாலும், இந்து நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு கருணாநிதி-ஜெயலலிதா என்ற தனிமனிதரை நாம் குற்றஞ்சாட்டவில்லை, ஆனால், அவர்கள் தமிழகத்தில் உள்ள எட்டுகோடுக்கும் மேலாக உள்ள இந்துக்களுக்கு எதிராக கடந்த 50-60 ஆண்டுகளாக செயல்பட்டு வௌகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டப்படுகிறது. “ஆட்சியாளர்” என்ற முறையில், இத்தனை கொவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, வெள்ளையெடிக்கப்பட்டது என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கொடுப்பதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் அவற்றை மக்களே செய்து கொள்வார்கள். அப்படித்தான் கோவில்கள் வளர்ந்துள்ளன. ஆனால், மடங்களையும், கோவில்களையும், சட்டத்தின் பிடியில் வைத்துக் கொண்டு, சீரழித்து வருவதுதான் திராவிட ஆட்சியின் வேலையாக இருந்ர்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

வேதபிரகாஷ்

15-08-2011


[3] The Hindu, Official takeover Veerasaiva mutt in Kumbakonam, January 19, 2005, http://hindu.com/2005/01/19/stories/2005011908140400.htm

[5] ஹொய்சள அரசன் வீர வல்லாளன் (1291-1342) திருவண்ணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, முகமதியர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் செய்திய மாஒஎரும் வீரன். தனது எண்பதாவது வயதில் முகமதியர் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு, குரூரமாக தோலுரித்து மதுரையில் கொல்லப்பட்டார். இதேபோல 90 வயதில் 1565ல் ராமராயர் போரில் கொல்லப்பட்டார். அப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

[6] அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்சைப் பெற்ற ஆதிசைவ மரபில் தோன்றிய, திருவண்ணாமலை மடத்தை நிறுவிய வீரசைவர் ஆவர். அதாவது உண்மையிலேயே வீரம் மிக்க சைவ மடாதிபதி ஆவர்.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

ஜூலை16, 2010

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

தமிழன்ம, செம்மொழி தமிழன் சிலை திருருவது, கோவிலைக் கொள்ளையெடிப்பது ஏன்? தமிழ், செம்மொழி தமிழ் பேசும் தமிழ் மக்களின் இப்படிப்பட்ட திருட்டுகள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலியவற்றை தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, அந்த முகமது கோரி, முகமது கில்ஜி, ஔரங்கசீப், மாலிக்காஃபூர்………………பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இப்படி செம்மொழி தமிழ் பேசிக்கொண்டு, கடவுள் நம்பிக்கையில்லாமல், பெரியார் நாத்திகம் பேசிக்கொண்டு, கருணாநிதி வழியில் கோவில் கொள்ளையடிக்கும் திராவிடத் தமிழர்களை என்னசெய்வது என்றே தெரியவில்லை.

கோவில் கொள்ளைக்கு சான்றிதழ் தேவையா? இப்பொழுது கோவில்களுக்கெல்லாம் ISO சான்றிதழ் வேறு வாங்குகிறார்கள், நாத்திக-கேடுகெட்டவர்கள். இப்படி கொளை, திருட்டு, நம்பிக்கையின்மை, நாத்திகம்………….என்றெல்லாம் வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் சான்றிதழ் வாங்குகிறார்கள்? அல்லது தாங்கள் இப்படியெல்லாம் கொள்ளையேடிக்கலாம் என்று அந்த சான்றிதழில் உள்ளதா?

மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது: மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இருந்தது. இச்சிலை, ஒரு அடி ஏழு அங்குல உயரம், 11.5 கிலோ எடை கொண்டது. கோவிலில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இச்சிலை, நேற்று காலை மாயமாகி இருந்தது, கோவில் நடை திறந்து பார்த்தபோது தெரிந்தது. இக்கோவிலில் உள்ள கதவுகள், பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின்படி குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, திருக்களம்புதூர் என இப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் படிகலிங்கம், மரகத லிங்கம், பஞ்சலோகச் சிலைகள் தொடர்ந்து திருட்டுப் போகின்றன. இங்குள்ள பழமையான, பாதுகாப்பற்ற கோவில் சிலைகளை காக்க அறநிலையத்துறை மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதியின் அடிவருடும் ஆதினங்கள், இன்னொரு ஆறுமுக நாவலர் வந்துதான் சைவத்தைக் காக்க வேண்டும்!

ஜூன்16, 2010

கருணாநிதியின் அடிவருடும் ஆதினங்கள், இன்னொரு ஆறுமுக நாவலர் வந்துதான் சைவத்தைக் காக்க வேண்டும்!

கபாலீஸ்வரர் கோவில் இடித்த போது சைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கபாலீஸ்வரர் கோவிலில் நுழைவோம் என்று சென்னையில் கேடுகெட்ட கிருத்துவர்கள் அடவடித்தனம் செய்து, கலாட்ட செய்தபோது, இந்த சைவ ஆதினங்களைக் காணோம், லிங்கத்தைத் தொட்டு வழிபாடு செய்வோம் என்று ஆர்பரித்தபோது, எந்த சுரணையுள்ள சைவனையும் காணோம். ஆனால், இப்பொழுதோ, இந்த கூட்டங்கள் வந்து இப்படி பேசுகின்றன! தேவையில்லாமல் கோவிலில் எந்த மொழியில் அர்ச்சனை செய்யவேந்தும் எனும் போது, ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று, பேசி, வழக்குகளை வேறு போட்டுள்ளனர்.

சைவ ஆதினங்கள், மடாதிபதிகள் உயர்ந்து நிற்கவேண்டும்: சைவ ஆதினங்கள் நாளுக்கு நாள் மிகவும் தங்களது நிலையை விட்டுக் கொடுத்து அரசியல்வாதிகளின் அடிமைகளாக, கைப்பாவைகளாக செயல்படுவது சைவ நம்பிக்கையாளர்களை வருத்தம் கொள்ளச் செய்யும். சைவ ஆதினங்கள், மடாதிபதிகள் உயர்ந்து நிற்கவேண்டும், நாத்திக ஆட்சியாளர்களிடம் அவர்கள் பணிந்து போவது, பயப்படுவது……………..முதலிய மிகவும் அவமானமான செயல்களாகும். ஏற்கெனவே, கோவில்-மடம் நிலங்கள் எல்லாம் இதே கருணாநிதி-அரசு நயவஞ்சமாக கவர்ந்து விற்றுவருவதை எடித்துக் காட்டியுள்ள நிலையிலும் அதனைத் தட்டிக் கேட்காமால், அவருக்கே பட்டங்கள் கொடுத்து தமாஷாக்கள் செய்து வருவது மிகவும் கேவலமாக இருக்கிறது. அதனால் தான் மாற்று மதத்தினர், குறிப்பாக, முஸ்லீம்கள் மதுரை ஆதினத்தை மிரட்டியுள்ளார்கள்.

இதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்: திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,””பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை. திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்” என்றார்.

தமிழ்-வியாபாரிகள், தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள் : காந்தளகம் சத்திதானந்தம்சிட்னி  தமிழ்ப் பேராசிரியர் கந்தையா, முதலியோர் தமிழை வைத்துக் கொண்டு நன்றாக வியாபாரம் செய்து வருகின்றனர். இப்பொழுது மாநாட்டிற்கு வந்துள்ள கூட்டத்தில் அதிகமாக உள்ளது, இத்தகைய வியாபாரக் கூட்டமே. முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளபடி, மின்னாக்கம் செய்வேன் என்றெல்லாம் காசு பண்ண கிளம்பியுள்ளனர். இவர்கள் எல்லோரும், தமிழை எப்படி காத்தார்கள் என்று காலம் தான் பதில் சொல்லும்.

“பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்’

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=20320

கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது: சென்னை : “”கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்,” என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார். சென்னை தமிழ்க் கணினி மொழியியல் கழகம் மற்றும் “காந்தளகம்’ வெளியீட்டகம் சார்பில், ஒலியியல் அறிஞர் புனல் க.முருகையன் எழுதிய “பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு’ நூல் வெளியிட்டு விழா சென்னைப் பல்கலையில் நேற்று நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் நூலை வெளியிட, திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு: விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு. கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

ஞானக் கருவூலமான பன்னிரு திருமுறையை, வேற்று மொழியாளர் அவர் மொழி வடிவிலேயே பயிலும் வகையில் ஒலி பெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. இது தமிழுக்கு ஒரு புதிய வகை இலக்கிய படைப்பு. தற்காலிக கணினி ஆளுமையில், இந்நூல் தமிழுக்கு புதிய பரிமாணத்தைத் தரும். இவ்வாறு பெரியகருப்பன் பேசினார்.காந்தளகம் பதிப்பக உரிமையாளர் சத்திதானந்தம் பேசும்போது,””திருமுறைகளை அனைத்து மொழிகளிலும் எடுத்துச் சென்றுள்ளோம். ஏழு மாத உழைப்பில் வந்துள்ள பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல், புது அத்தியாயத்தை ஏற்படுத்தும். தமிழில் 97 ஒலிகள் உள்ளது கண்டறிந்தது வரலாற்றுப் பணி” என்றார்.

திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை: திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,””பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை. திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்” என்றார். முடிவில் நூலாசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மவுன குமாரசாமி தம்பிரான், சென்னைப் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் தெய்வசுந்தரம், சிங்கப்பூர் சிம் பல்கலை தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிட்னி பல்கலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!

மே3, 2010
நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
மே 03,2010,00:00  IST

கோவை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார். மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன. இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை.பல்வேறு குளறுபடி களால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும். மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.