Archive for the ‘எதிர்ப்பு’ Category

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஒரு தொடர்குற்றவாளி! ஆகவே உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் (2)

குற்றங்களுக்கு லாப-நஷ்டங்களுக்கு சாமி காரணமா?; குற்றத்தை செய்வதற்கு இப்படியெல்லாம் நியாயப் படுத்தப் படுவது ஏன் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் வியாபாரத்தில் நஷ்டம் என்றால், அதற்கான காரணமானவர் மீது தான் தாக்குதல் இருக்க வேண்டும். கோவிலோ, கர்ப்பகிரகமோ, உள்ளே இருக்கும் மூலவரோ குறியாக இருக்க முடியாது[1]. “சாமி தான், சிலை தான்” என்று குறியாக பாம் போடுகிறான்[2] என்றால், அத்தகைய மனப்பாங்கு, குற்ற மனபாங்கு என்னவென்று போலீஸார் தான் ஆராய வேண்டும். அப்படியென்றால், இத்தகைய குற்றவாளிகளை வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்களா அல்லது செய்விக்கப் படுகிறார்களா போன்ற சந்தேகங்களும் எழலாம். குற்றவாளிகளை, அவ்வாறே நடத்தாமல், ஏதோ தியாகி, சித்தாந்தி போன்று சித்தரித்திக் காட்டுவது, பிறகு மனநோயாளி என்பது முதலியவை முறையான விசாரணையாகத் தெரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நீதிபதி நிரஞ்சன் ஆய்வு செய்தார். தடய அறிவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முதலில் குண்டு போட்டவனின் பெயரைக் குறிப்பிடாமல், பிறகு குறிப்பிட்டது: ஹிந்து கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன், கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவரா, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின், ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளனரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், ரவுடி கருக்கா வினோத் என்பவர் கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசினார். சில நாட்களில் அடுத்த சம்பவம் நடந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில் முன், ‘டீ கடை’ ஒன்றில் அமர்ந்து, சாகவாசமாக பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார் முரளிகிருஷ்ணன்[3]. கடையில் இருந்தோர் பார்த்தும், அவரிடம் எதுவும் கேட்கவில்லை[4]. ஆனாலும், அங்கிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவில், தெளிவாக தெரிகிறது[5]. இது, இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேகரிக்கப்பட்டுள்ளது[6]. கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜமேஷா முபின், 29, என்பவர் கார் குண்டு வெடிப்பை நடத்தினார். ஜூலையில், சிவகங்கை மாவட்டத்தில், நில தகராறு தொடர்பாக, மதுரை விராதனுார் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.சமீபத்தில், பள்ளிக்கரணையில், பா.ஜ., நிர்வாகியும், ரவுடியுமான பல்லு மதன் வீட்டில், ரவுடிகள் மண்ணெணெய் குண்டு வீசினர்.அதேபோல, நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ‘சி’ பிரிவு ரவுடி கருக்கா வினோத், 42, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் மீது, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ள கோவில் என்பதால் நீதிபதி ஆய்வு பிரச்சினையை மறைக்கக் கூட்டாது: சென்னையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில், அரசு சொத்தாட்சியர் மற்றும் அதிகாரபூர்வ அறங்காவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது[7]. அதனாலேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நீதிபதி நிரஞ்சன் விசாரணை நடத்தி வருகிறார்[8]. கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன், தெளிவான மனநிலையில் இல்லை என, போலீசார் கூறுகின்றனர். உள்ளுக்குள் ஆழமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் கூறுகின்றன. பண்டிகை காலங்களில் கூட்டம் மிகுந்த இடங்களில் கோவிலுக்கு அருகில், கோவிலுக்குள் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்பதைக் கவனிக்கலாம். கூட்டநெரிசலிலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இத்தகைய குண்டுவெடிப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. “நீட், சாமி உதவவில்லை, மனநோயாளி,….” என்றெல்லாம் கூறி பிரச்சினையை மறைத்து விட முடியாது. உண்மையினை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உளவுத் துறை அதிகாரிகள் கூறுவது: போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மாத காலத்துக்குள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக பா.., தரப்பில், 30 கேள்விகள் கேட்கப்பட்டன; அவை மிக நுட்பமானவை. தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. .எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து மூளை சலவை செய்து, ஆட்கள் அனுப்பப்படுவது, தேசிய புலனாய்வு அமைப்பு எனும் என்..., விசாரணையில் தெரியவந்துள்ளது. .எஸ்., அமைப்பில் சேர்க்கப்படும் நபர்கள், பயங்கரவாத பயிற்சிக்கு பின், பல்வேறு திட்டங்களோடு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஹிந்து மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை, .எஸ்., பயங்கரவாதியாக மாற்றும்போது, பெயர் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் போலீசிடம் சிக்கும்போது, மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். தற்போது, .எஸ்., அமைப்புக்கு அழைத்து செல்லப்படுபவர் பெயர்கள் மாற்றப்படுவதில்லை. ஹிந்துவாக இருந்தால், அதே பெயருடனே இருப்பர். அதனால், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கினாலும், ஹிந்துவாகவே அடையாளம் காட்டப்படுவர்.எனவே, வழக்கமான நடைமுறையை விட்டு, ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கிடைக்கும் தகவல்களை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது: இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[9]: “சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஸ்ரீவீரபத்ர சுவாமி கோயில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, தி.மு.., தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது,” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்[10]. அதிமுக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‛சிலை தான் குறி’.. சென்னை கோவில் மீதான பெட்ரோல் குண்டு வீச்சின் பரபர பின்னணி.. போலீஸ் விளக்கம், By Nantha Kumar R Published: Friday, November 10, 2023,

[2] https://tamil.oneindia.com/news/chennai/what-happened-in-petrol-bomb-thrown-on-kothavaalchavadi-temple-chennai-police-explains-556071.html

[3] தினமலர், சென்னையில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி! கோவில் கருவறைக்குள் வீசப்பட்டதால் பதற்றம், பதிவு செய்த நாள்: நவ 10,2023 22:52.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3478549

[5] நக்கீரன், டீக்கடையில் சாவகாசமாக அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்த நபர்; அதிர வைக்கும் சிசிடிவி காட்சி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 10/11/2023 (15:11) | Edited on 10/11/2023 (15:26)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/person-sitting-tea-shop-casually-made-petrol-bomb-shocking-cctv-footage

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு, WebDesk, Nov 10, 2023 15:44 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-parrys-corner-temple-petrol-bombing-high-court-judge-inspects-in-person-tamil-news-1692013

[9] தினமலர், சென்னையில் கோயிலுக்குள் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது: அண்ணாமலை கண்டனம், மாற்றம் செய்த நாள்: நவ 10,2023 15:4.

[10] https://m.dinamalar.com/detail.php?id=3478443

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப் பட்டது, வீசியது ஒரு தொடர்-குற்றவாளி! (1)

நவம்பர்11, 2023

தமிழக அரசு நிர்வகிக்கும் கோவில் கருவறையில் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, வீசியது ஒரு தொடர்குற்றவாளி! (1)

ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில் உள்ளது: தீபாவளி நேரத்தில் “டவுன்” எனப்படும் “பாரீஸ் கார்னரில்” கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். மற்ற இடங்களை விட, இங்கு கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர-சாதாரண மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, அப்படியே பஸ்-டிரைன் என்று ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் செல்வர். அதனால், மூன்று நாட்கள் விடுமுறை என்ற நிலையில் வெள்ளிக் கிழமை 10-11-2023 அன்று அனைவரும் சந்தோசமாக, கடைகளுக்குச் சென்று வந்தனர். பொருட்களை வாங்கி வந்தனர். அந்நிலையில் தான், இந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியான கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில், ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், சென்னை உயர் நீதிமன்றம் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அர்ச்சகர்களாக வெங்கட சுப்பிரமணிய அய்யர் உட்பட மூன்று பேர் பணிபுரிகின்றனர். 10-11-2023 அன்று காலை 7:00 மணிக்கு கோவிலை திறந்து, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு, அர்ச்சகர்கள் அலங்காரம் செய்தனர்.

பெட்ரோல் குண்டுடன் வந்த பக்தர்!: இந்த நிலையில், 8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில், அந்த நபர் கோவில் கருவறைக்குள் புகுந்து, ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை’ என, ஆவேசமாக கத்தியபடி, சுவாமி சிலை மீது பெட்ரோல் பாட்டில் குண்டில் தீ வைத்து வீசினார். அது, சுவாமி சிலைக்கு பக்கத்தில் விழுந்து, பலத்த சத்தத்துடன் வெடித்தது. பட்டப் பகலில் பலர் பார்க்கும் நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. தீ பற்றி எரிந்ததால், பக்தர்கள் அலறியடித்து கோவிலில் இருந்து வெளியேறினர். அர்ச்சகர்களும், உயிர் பயத்தில் செய்வதறியாது தவித்தனர். சுவாமி சிலைக்கு தீ பரவாமல் இருக்க, குண்டு வீசப்பட்ட இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடங்களில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பெட்ரோல் குண்டு வெடிப்புப் பற்றி விதவிதமான செய்திகள்: சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது[1]. கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்[2]. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். இன்னொரு செய்தியில், “8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்,” என்றுள்ளது. அதாவது, பலர் பார்த்துள்ளனர் என்றாகிறது. அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது[3]. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்[4]. மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன[5]. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, கோயிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது[6]. அவர் யார்… எதற்காக வீசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின[7].

முதலில் போலீஸார் விசாரித்து வருகிறோம், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும் என்று அறிவித்தது: இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “பெட்ரோல் குண்டை வீசியவர் கோயில் அருகே கடை நடத்திவரும் முரளி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்தபோது, `கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவருகிறேன். ஆனால் சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த விரக்தியில்தான் கோயிலில் பெட்ரோல் குண்டை வீசினேன்என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்துவருகிறோம்[8]. சம்பவத்தின்போது முரளி கிருஷ்ணா போதையில் இருந்ததாகத் தெரிகிறது[9]. அவர்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறோம்,” எனத் தெரிவித்தனர்[10]. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கோவிலுக்குள் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக பதிலளித்த அவர்[11], ” சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பின்பு விவரங்கள் சென்னை காவல்துறை மூலமாக வெளியிடப்படும்” எனவும் தெரிவித்தார்[12].

பெட்ரோல் குண்டு போட்டவன் ஜார்ஜ்ஷீட்டர்தொடர் குற்றவாளி: விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை எம்.கே.பி., நகர், 17வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 39 என்பதும், அவர் தற்போது, ஏழு கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவர், காவல் துறையின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். கொத்தவால்சாவடி, எம்.கே.பி., நகர், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி என, ஒன்பது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஒருவர், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் உள்ள கோவில் கருவறைக்குள் புகுந்து, பெட்ரோல் குண்டு வீசி அட்டூழியம் செய்திருப்பது, பக்தர்கள் மற்றும் அர்ச்சர்களின் உயிருக்குமான பாதுகாப்பில் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

முரளிகிருஷ்ணன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்[13]: “ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் அருகே, ‘ஜி.கே.டிரேடர்ஸ்எனும் பெயரில், முந்திரி வியாபாரம் செய்து வருகிறேன். தொழில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ரவுடி தொழில் ஓரளவு கை கொடுத்தது. கொஞ்சம் கடன் தொல்லையும் உள்ளது. இந்த கோவிலுக்கு நான்கு ஆண்டுகளாக சென்று வருகிறேன். சுவாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அதனால், பெட்ரோல் குண்டு வீசினேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்[14]. சரி, கொலை வழக்கு, ரவுடியிஸம், கைது, ஜெயில் எல்லாவற்றிற்கும் சாமி தான் அனுமதி கொடுத்ததா? இப்பொழுது கைவிட்ட்தா? இது போன்று வாக்குமூலம் கொடுக்கப் பட்டது என்றெல்லாம் செய்திகளாக வெளிவருவதே கேடிக்கையாக இருக்கிறது[15]. “கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!.” என்று பாலிமர்.டிவி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமாகத்தான் இருக்கிறது[16]. நான்கு ஆண்டுகளாக குற்றங்கள் செய்து வருவதும், சாமி கும்பிடுவதும் எதனைக் காட்டுகிறது என்றும் ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

11-11-2023.


[1] தினமணி, ‘கடவுள் கைவிட்டதால்கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் சிக்கினார்!, By DIN  |   Published On : 10th November 2023 01:32 PM  |   Last Updated : 10th November 2023 01:32 PM  |

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/nov/10/petrol-bomb-inside-the-temple-4103993.html

[3] மாலைமலர், சென்னையில் பரபரப்பு: பாரிமுனை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு, By மாலை மலர்10 நவம்பர் 2023 10:54 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/petrol-bomb-in-chennai-parrys-temple-683895

[5] காமதேனு, சென்னையில் பரபரப்புபோதையில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!, Updated on : 10 Nov 2023, 11:11 am.

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/man-arrested-for-throwing-petrol-bomb-on-temple

[7] விகடன், `சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை, அதனால்தான்..!’ – கோயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் `பகீர், எஸ்.மகேஷ், Published: 10-11-2923 at 4 PMU; pdated: 10-11-2023 at 5 PM.

[8]  https://www.vikatan.com/news/general-news/petrol-bomb-hurled-in-a-temple-in-chennai

[9] தினகரன், பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: காவல்துறை விளக்கம், Published: November 10, 2023, 5:35 pmLast Updated on November 10, 2023, 5:46 pm.

[10] https://www.dinakaran.com/alcohol_addiction_temple_petrol_bomb_arrest/

[11] தமிழ்.நியூஸ்.18, கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் : சென்னை காவல் ஆணையர் விளக்கம், FIRST PUBLISHED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST; LAST UPDATED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST.

[12] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-clarifiesabout-history-sheeter-hurls-petrol-bomb-inside-the-temple-1227897.html

[13] ஜீ.டிவி, சாமி எதுவும் தராததால் கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு…!, பதிவு செய்த நாள்: நவ 10,2023.

[14] https://zeenews.india.com/tamil/videos/chennai-paris-temple-petrol-bomb-cctv-video-472117

[15] பாலிமர்.டிவி, கொலை வழக்கில் ஜெயிலுக்கு போவாராம்…..சாமி வரம் கொடுக்கலைன்னு பெட்ரோல் பாம் வீசுவாராம்……!. நவம்பர்.10, 2023. 08:49:32 PM.

[16] https://www.polimernews.com/dnews/209675

சென்னிமலை இந்துக்களின் அறப்போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்க வேண்டும்–உரிமைகள் காக்கப் படவேண்டும்!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களில் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி தொடர்ந்து இருக்கவேண்டும் உரிமைகள் காக்கப் படவேண்டும்!

இந்துவிரோத கூட்டத்தினரின் பாரபட்ச செயல்பாடு……

இதை யாரும் தட்டிக் கேட்கவில்லையே?

25-09-2023 கிறிஸ்தவர்களுக்கு சாதமாக, அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம்: மேலே குறிப்பிட்டப் படி, இதற்கிடையே கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி 25-09-2023  சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது, என்று தான் ஊடகம் குறிப்பிடுகிறது. பிறகு ஏன் அத்தகைய மறைப்புத் தனம் என்று தெரியவில்லை. இதும் ஊடகங்களின் பாரபட்சத்தை எடுத்துக் காட்டுகிறது.. இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியபோது, இதே கட்சிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

13-10-2023 அறப்போராட்டம் அறிவிப்பு………………………..

இந்துக்கள் கைது, ஆனால் கிறிஸ்துவர்களின் மீது நடவடிக்கை இல்லை: இதற்குள் புகார் கொடுத்ததின் அடிப்படையில், தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ஜான் பீட்டர் கொடுத்த புகாரின்படி, சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இதை தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அரச்சலுார், அண்ணா நகர் பூபதி, 38; தமிழரசன், 30, ஆகியோரை, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்[2]. போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆக, இவையெல்லாமே இந்துக்களுக்கு எதிராகவே நடந்த் கொண்டிருக்கின்றன, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதால், செக்யூலரிஸ ரீதியில் பாரபட்சம் இருப்பது வெளிப்படுகிறது.

தானாகக் கூடியக் கூட்டம்…

இந்துக்களின் எழுச்சி……

13-10-2023 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம்’ என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பினரின் மிரட்டல் பேச்சை கண்டித்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 13-10-2023 அன்று மாலை சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்கப் பட்டது[3]. போலீசாரும் அனுமதி கொடுத்துள்ளனர்[4]. அதனால், திட்டமிட்டப் படி, 13-10-2023 அன்று அற-போராட்டம் நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகவே சேர்ந்து விட்டது. முருக பக்தர்கள், இந்துக்கள் என்ற ரீதியில் தாமாகவே ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. முருகன் வரவேற்றார். மற்றும் அரச்சலூர் புலவர். கி. தமிழரசன், விவசாயி பேச்சாளர் தூரன் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது சென்னிமலையை பற்றி தவறாக பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானின் புகழ் குறித்து பெண்கள் பாடல்கள் பாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்[5].

கட்டுப்பாட்டுடன் அமைதியாக நடந்துள்ள அறப்போராட்டம்: சுமார் 25,000 வந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸாரும் உடனடியாக, பாதுகாப்பு ஏற்பாட்டில் இறங்கினர். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[6]. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், பள்ளி வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்ல முடியாது என சென்னிமலை பகுதியில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன[7]. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டதால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது[8]. இருப்பினும், இந்துக்கள் அமைதியாக, அறவழி சத்தியாகிரக போராட்டமாக நடத்தியுள்ளனர். அத்தனை கூட்டத்திலும், கட்டுப்பாட்டுடன், செயல்பட்டுள்ளர். கூட்டத்திற்கு வேண்டிய நீர் முதலிய ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நிச்சயமாக, இக்கூட்டம் இந்து மக்களின் எழுச்சியாகக் காணப் படுகிறது.

இந்து முன்னணி தலைவர்கள்……

மக்களின் – இந்துக்களின் எழுச்சிக் கூட்டம்

இந்த இந்து எழுச்சி-விழிப்புணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும்; இது வரை நமக்கு எதற்கு இப்பிரச்சினை, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் இருந்து வந்த இந்துக்களுக்கு இப்பொழுது விழிப்ப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அத்தகைய உணர்வுகளை அவர்கள் தொட்ர்ந்து கடைபிடித்தால், அவர்களது உரிமைகளை யாரு பறிக்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் சமம் என்று செக்யூலரிஸ ரீதியில் பேசினால் மட்டும் போதாது, அதன் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, ஆளும் பொழுது, அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ஆனால், 1970களிலிருந்து, திராவிட, திராவிடத்துவ, பெரியாரிஸ, நாத்திக கட்சிகள் அத்தகைய சட்ட-ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை. அரசியல் தலைவர்களே, இந்துக்களுக்கு எதிராக பேசி வந்துள்ளனர். அவையெல்லாம் இந்துவிரோதமாகவும் இருந்து வந்துள்ளன. அங்குதான் பிரச்சினை எழுகிறது.

25,000 இந்துக்கள் பங்கு கொண்டனர்……………………

கிறிஸ்தவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்: கிறிஸ்தவர்களின் வக்கிர எதிர்ப்பு, பலாத்கார ஆக்கிரமிப்பு, வன்முறை அபகரிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களை அரசு முறைப்ப் படி தண்டிக்க வேண்டும். அவற்றை ஏதோ “சிறுபான்மை” சமாசாரம் போல அணுகக் கூடாது. இந்த சட்டவிரோத காரணங்களுக்கு பல வழக்குகள் நிலுவைகள் உள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவை கிடப்பில் போடப் பட்டிருக்கலாம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தலாம். ஆனால், சில நேரங்களில் அவை நிச்சயமாக விசாரிக்கப் படும், அப்பொழுது நியாயமான தீர்ப்புகள் அளிக்கப் படும். ஆகவே, கிறிஸ்தவர்களும் இத்தகைய அடாவடி, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மதவிவகாரங்களில் ஒழுக்கம்-கட்டுப்பாடு இருக்கவேண்டும். அவர்களிடையே பற்பல சீர்கேடுகள் இருக்கும் பொழுது, முதலில் அவற்றை சரிசெய்து கொள்ளாமல், இந்துக்களை சதாய்ப்பதில் எந்த பலனும் ஏற்படப் பொவதில்லை. எத்ர்மறை விளைவுகள் தாம் ஏற்படும்.

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், சென்னிமலை முருகன் கோவிலை கல்வாரி மலையாக மாற்றுவோம் எனப் பேசிய அமைப்பினரை கைது செய்யக்கோரி 13ல் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: அக் 10,2023 15.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3453240

[3] தினமணி, இந்து முன்னணி சார்பில் அக்டோபா் 13 இல் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 01st October 2023 11:37 PM  |   Last Updated : 01st October 2023 11:37 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2023/oct/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4081779.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, என்னது ஏசு மலையா? “சென்னிமலை எங்கள் மலை“- பல்லாயிரக்கணக்கில் திரண்டுமுருகர்கூட்டம் முழக்கம்!, By Mathivanan Maran, Published: Saturday, October 14, 2023, 7:22 [IST].

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/murugan-devotees-protest-against-rename-demand-on-chennimalai-as-jesus-malai-547997.html

[7] தினத்தந்தி, சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தினத்தந்தி, அக்டோபர் 14, 7:12 am

[8] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaicondemnation-protest-of-hindu-munnani-1072464

சென்னிமலை இந்துக்களின் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி மாபெரும் வெற்றியில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர்14, 2023

சென்னிமலை இந்துக்களின் அறப் போராட்டம், இந்துக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி மாபெரும் வெற்றியில் முடிந்துள்ளது!

சென்னிமலையின் சிறப்புகள்: கொங்கு நாட்டு பகுதியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிவன் மலையும் முக்கியத்துவம் வாய்ந்தவை[1]. இக்கோவில்களின் தெய்வீகத் தன்மைகளை முழுமையாக யாராலும் சொல்லி விடவோ விளக்கி விடவோ முடியாது[2]. சென்னிமலையானது ஒவ்வொரு யுகங்கள் தோறும் மகுடகிரி புஷ்பகிரி கனககிரி சிரகிரி என்னும் பெயரைக் கொண்டது. இம்மலையை சுற்றி 24 தீர்த்தங்கள் உள்ளன.அவற்றுள் செங்கழுநீர் தீர்த்தம் குமார தீர்த்தம் இடும்பன் தீர்த்தம் யம தீர்த்தம்பட்சி தீர்த்தம் போன்றவை பிரசித்தி பெற்றவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தெற்கு பகுதியில் உள்ளது. இடும்பனுக்கு பழநி செல்வதற்கு வழிகாட்டிய தலம். ஆதலால் இம்மலையை ஆதிபழநி என அழைப்பர். இங்கு இடும்பனுக்கு சன்னிதி கிடையாது. லட்சோப லட்சம் பக்தர்களின் உள்ளங்களில் வீற்றிருந்து அவர்களின் இல்லங்களில் நிறைவான அருளாட்சி செய்யும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை பாலன் தேவராய சுவாமிகள் அரங்கேற்றம் செய்த அருள் தலம். ஒரு ஜாதகருக்கு எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமாக இருந்தாலும் முருகப்பெருமான் சன்னிதிமுன் வந்து அவர் நின்றால் தோஷத்தை சுக்கு நுாறாக்கி தீவினைகளை பொடிபொடியாக்கி செவ்வாய் அனுக்கிரக்தை அவரே வழங்குவார். ஆதலால் இங்குள்ள நவக்கிரக சன்னதியில் செவ்வாய் இடம் பெறவில்லை. இப்படி பல்வேறு சிறப்பு பெற்ற தலம் தான் சென்னிமலை. இவ்வாறு அமைதியாக நிகழ்ந்து வரும் வேலையில், சில கிறிஸ்துவர்கள், இம்மமலையில் ஒரு சிறிய சர்ச்சைக் கட்டி பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.

சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்: இது கிறிஸ்துவர்களின் ஒரு திட்டமாகவே மாறிவிட்டது. திண்டிவனம் போகும் வழியில், அச்சரப்பாக்கம் மலையில், இப்படி ஒரு சர்ச்சைக் கட்டி, நாளடைவில் அதனை, அனைத்துலக கிறிஸ்துவ சுற்றுலா தலமாக்கி விட்டனர். இதே போல பல இடங்களில் முதலில் ஒரு சிலுவையை நடுவது, ஜெபம் செய்வது, கொட்டகை அமைப்பது, பிறகு கூரையுடன் ஒரு அறையை அமைப்பது, பிறகு அதனை கட்டிடமாக மாற்றுவது என்று படிப்படியாக செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்பதும் மர்மமாக இருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகள் அவ்வாறு பட்ட கொடுப்பது, மின்சாரம் இணைப்புக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார்கள். உள்ளூரில் புகார் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அச்சரப்பாக்கத்தில் சட்டங்களை மீறி கட்டப் பட்டுள்ள சர்ச்சை இடிக்க நீதிமன்றம் ஆணையிட்டப் பிறகுக் கூட, அதனை கிடப்பில் போட்டு அமைதியாக இருக்கிறார்கள். “சிலுவை நடுவது, ஆக்கிரமிப்பது, சர்ச் கட்டுவது- திட்டம்” ஆக, இது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பு செயல், அபகரிப்பு திட்டம் மற்றும் மதரீதியில் கலவரங்களை உண்டாக்கும் போக்கு போன்றவை வெளிப்படுவதை தெளிவாகக் கவனிக்கலாம்.

சென்னிமலையில் அனுமதியற்ற ஜெபக்கூடமும், தொந்தரவுசர்ச்சைகளும்: சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 17-ந் தேதி 2023 17-09-2023 அன்று கிறிஸ்தவ போதகர் அர்ஜூனன் என்ற ஜான் பீட்டர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்தி கொண்டிருந்தார்.  இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொள்ளும் நிலைமை, அவசியம், அந்தஸ்து ஏன் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், எஸ்சி-இந்துக்களை மதம் மாற்றி, “தலித் கிறிஸ்தவர்” என்ற பிரச்சினையை கடந்த 40 ஆண்டுகளாக செய்து வருவதையும் கவனிக்கலாம். மதமாற்றம் செய்யும் நோக்கில், அனுமதியின்றி கிறிஸ்தவ அமைப்பு சார்பில், தொடர்ந்து ஞாயிறு தோறும் ஜெபக்கூட்டம் நடந்தது. வெளியூர்களில் இருந்தும் பலர் வந்தனர். ஒலிப்பெருகி மூலம் கூட்டம் நடத்துவதுடன், ஹிந்து தெய்வங்களை சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தி பேசினர். இதனால் அப்பகுதி ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டம் நடத்துவதால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வந்தனர். இவற்றையெல்லாம் எப்படி, ஏன், எவ்வாறு தமிழக அரசு அதிகாரிகள் அனுமதித்தார்கள் அல்லது தெரிந்தும், தெரியாத்து மாதிரி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

The church built…..

17-09-2023 அன்று இரு பிரினிடையே மோதல்: ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் ஜான் பீட்டர் குடும்பத்தினரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கிறிஸ்தவ முன்னணி சார்பில் 25-10-2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் தலைவர் டி.சரவணன் தலைமை தாங்கினார்[4]. ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ முன்னணி, இயேசுவின் நற்செய்தி இயக்கம் (ஈரோடு) மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[5]. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், ‘புஷ்பகிரி மலையை கல்வாரி மலையாக மாற்றவிட மாட்டோம்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது[6]. போலீஸார் நிச்சயமாக இவற்றை கண்டுகொண்டிருப்பர், வீடியோ பதிவும் செய்திருப்பர்.

கைதுகளில் பாரபட்சம் ஏன்?: இப்பொழுதெல்லாம் வெறுப்புப் பேச்சு பற்றி அதிகமாகவே செய்திகள் வந்துள்ளன். பல வழக்குகளும் நடந்து வருகின்றன. இதில் கூட கிறிஸ்தவர்கள் தாக்கப் பட்டதாக செய்திகள் வந்துள்ளனவேயன்றி, இந்துக்கள் கதி என்னவென்று இக்கட்சியினர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆக செக்யூலரிஸம் வேலை செய்கிறதா அல்லது இந்து விரோதம் செயல்படுகிறதா என்று கவனிக்கலாம். இந்த தாக்குதல் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டங்களை பதிவு செய்து உள்ளார்கள்[7]. போலீஸாரிடமும் மனு கொடுத்தனர்[8]. கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[9]. திருமாவளவன் கிறிஸ்துவர்களைத் தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் என்றார்[10]. கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 

© வேதபிரகாஷ்

14-10-2023


[1] தினமலர், ஜெபக்கூட்டத்தினர் மிரட்டல் பேச்சு: சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு, மாற்றம் செய்த நாள்: அக் 13,2023 17:21

[2] https://m.dinamalar.com/detail.php?id=3456337

[3] தினத்தந்தி, சென்னிமலையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம், செப்டம்பர் 26, 2:25 am.

[4] https://www.dailythanthi.com/News/State/in-chennimalaichristian-organizations-protest-1060460

[5] கல்கி.ஆன்லைன், சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றப்போவதாக கூறிய கிறிஸ்தவ அமைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!, Published on : 14 Oct 2023, 11:28 am

[6] https://kalkionline.com/news/daily-news/demonstration-against-the-christian-organization-that-said-it-will-turn-chennimalai-into-calvary-hill

[7] தினகரன், சென்னிமலையில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்: கைது செய்யக்கோரி எஸ்பியிடம் மனு, September 21, 2023, 4:33 am

[8]https://www.dinakaran.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கிறிஸ்தவர்கள் மீது அட்டாக்! தமிழ்நாட்டுக்கே ஆபத்து என திருமா வார்னிங், By Noorul Ahamed Jahaber Ali, Published: Sunday, September 24, 2023, 21:09 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-warn-about-the-attack-on-christians-in-erode-chennimalai-541985.html

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

ஜூலை25, 2023

சீர்காழி ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா – அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன் – நீதிபதியின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது!

விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்காலமாக நடைமுறையில் உள்ளன: இந்து கோவில்களில் நடக்கும், நடந்து வரும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே காலம்-காலமாக நடைமுறையில் உள்ளன. சுருக்கமாக சொல்வதானால், ஜைன-பௌத்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவை இந்நாட்டு மதங்கள் மற்றும் பின்பற்றியவர் இந்தியர் என்ற நிலையில் ஓரளவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, பெருமளவில் பாதிப்பு ஏற்ப்பட்டது. கோவில்கள், விக்கிரங்கள் இடிக்கப் பட்டன.  விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றிலும் நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் ஏற்பட்டன. அதனால், இடைகாலங்களில் அவர்களுடைய  அக்கிரமான இடைஞல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட்டன. பிறகு ஐரோப்பிரர்களின் தலையீடுகளால், மறுபடியும் இடையூறுகள் ஏற்பட்டன. நடைமுறையில், நிர்வாகம் என்ற பெயரிலும் கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டன.

துலுக்கர்-ஐரோப்பியர் காலங்களில் இடையூறுகள் அதிகமாகின: ஜாதிய முறைகள், மதமாற்றம் போன்ற காரணங்களினால் இருக்கமாகின. அதன் படி, கோவில்களில் யார் நுழையலாம்-கூடாது போன்ற பிரச்சினைகளும் உண்டாகின. நவீனகாலங்களில், நகரமயமாக்கம் போன்ற காரணங்களினால், மேன்மேலும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றில் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், முதலியன ஏற்படுத்தப் பட்டன. மாற்று மதத்தினர் எண்ணிக்கை அடிகமாகிய போது, அவர்களும் இவற்றை எதிர்க்க ஆரம்பித்தார்கள். தடுக்க கலவரம் போன்ற முறைகளையும் கையாண்டார்கள். இதனால், சுதந்திரம் பெற்ற பிறகும். சட்டம்-ஒழுங்குமுறை என்ற ரீதியில் அடக்குமுறைகள் ஆரம்பித்தன.

1960களிலிருந்து திராவிட நாத்திகர்களால் தொந்தரவுகள்: 1960களிலிருந்து திராவிடம், பெரியாரிஸம், பகுத்தறிவு போர்வைகளில், முன்பில்லாத அளவுக்கு நிறைய பாதிப்புகள், தொந்தரவுகள், இடையூறுகள் அதிகமாகின. இந்துஅறநிலையத் துறையில் அத்தகையோர் நுழைய ஆரம்பித்தனர். இப்படியாக, கடந்த 60-70 ஆண்டுகளாக அவர்களின் தலையீடு மூன்று தலைமுறைகளாக உருமாறி பலவிதங்களில் செயல்பட்டு வருகின்றன. ஜாதிய அரசியல் நடத்துவதால் இந்துக்களும் அவ்வாறே பிரிந்து கிடக்கின்றனர். கோவில்களும் அவ்வாறே பிரிய ஆரம்பித்தன. இதற்கு ஜாதிவாரி அரசியல்-உள்-நுழைந்தவர்களும், ஜாதியவாதியினரும், காரணமாகினர். இதனால், கோவில் சம்பந்தப் பட்டவை வியாபார மயமாக்கப் பட்டன. முன்பெல்லாம் விழாக்கள், கொண்டாட்டங்கள், பூஜைகள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் நடத்த யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனுமதி பெறுதல் போன்றவை இல்லை. ஆனால், இன்று, போக்குவரத்து, மற்றவர்களின் நிலை, சட்டம்-ஒழுங்குமுறை என்று பல நிலைகளில் கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ள. இம்மாதிரிதான், இப்பொழுது திராவிட மாடலில் இப்பிரச்சினைகள் வளர்க்கப் பட்டுள்ளன.

சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டது: நிதானமாக யோசித்தால், போலீசுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம். கோவில் திருவிழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது[1]. வன்முறையை தவிர்க்க, கோவில்களை மூடி விடலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[2]. மயிலாடுதுறை மாவட்டத்தில், ருத்ர மகா காளியம்மன் கோவில் உள்ளது[3]. இதன் அறங்காவலரான தங்கராசு, 92, என்பவர், தன் மகன் நடராஜன் வாயிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு[4]: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவில் தீமிதி உற்சவ திருவிழா, வரும் 23 முதல் ஆக., 1 வரை நடக்கவுள்ளது. விழா அமைதியாக நடக்கும் விதமாக, போலீஸ் பாதுகாப்பு கேட்டு, ஜூன் 21ல் எஸ்.பி.,க்கு மனு கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கவில்லை[5]. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. அப்படியென்றால் போலீஸார் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று நீதிமன்றம் கேட்கவில்லையே? அதனால், போலீஸ் ஷ்டேஷன்களை ஊடிவிடலாமா என்று கேட்கவில்லையே?

சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை: வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது[7]. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ”இந்த கோவிலில் திருவிழா நடத்துவதில், இரண்டு குழுக்களுக்கு இடையே பிரச்னை உள்ளது[8]. ”சீர்காழி தாசில்தார் தலைமையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, சமாதான பேச்சு நடத்தப்பட்டது; இருப்பினும், தீர்வு ஏற்படவில்லை,” என்றார். அப்படியென்றால், பிரச்சினை அங்கும் உள்ளது. தாசில்தார், போலீஸார் முதலியவர்களையும் மீறும் அந்த “இரு பிரிவினர்” யார், அத்தகைய பலம் பொறுந்திய கூட்டத்தினர் யார், எந்த கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கலாமா? இல்லை எந்த ஜாதியினர் என்று கேட்கவேண்டுமா?

பிரச்சினை செய்யும் இரு பிரிவினர் தலைவர்களை கோவில் பொறுப்பிலிருந்து நீக்கி விடலாமே?: இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு[9]: தினமும் இதுபோன்ற வழக்குகளை, இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது[10]. அதாவது, அந்த அலவுக்கு அடிக்கடி வழக்குகள் தொடுக்கிறார்கள் போலும். அப்படியென்றால் கடவுளை விட இதில் தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பிறகு இவர்களை கோவில்களினின்று வெளியேற்றி விடலாமே? திருவிழாவை யார் நடத்துவது என, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இரு குழுக்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகிறது[11]. கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி, ஏராளமான வழக்குகள் தாக்கலாகின்றன[12]. கடவுளை பிரார்த்தித்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பெற தான் கோவில்கள் உள்ளன[13]. ஆனால், துரதிருஷ்டவசமாக கோவில் விழாக்கள் வன்முறை உருவாக்கும் களமாகின்றன[14]. கோவில் திருவிழா என்பது, யார் தங்கள் பகுதியில் பெரிய நபர் என்பதை நிரூபிக்கும் ஒரு களமாக உள்ளது[15]. இதுபோன்ற கோவில் திருவிழாவில், பக்தி என்பதற்கு இடமே இல்லை[16]. மாறாக, இரண்டு தரப்பினரின் பலத்தை நிரூபிப்பதாக அமைகிறது. இது, திருவிழாக்களின் உண்மையான நோக்கத்தை சிதைக்கிறது. இதுபோல வன்முறை உருவாக்கும் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, வன்முறையை தவிர்க்க, கோவில்களையே மூடி விடலாம்.” இங்கு தான் பிரச்சினை அணுகுமுறை முரண்பாடாக இருக்கிறது.

அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன்: “அகங்காரம் இல்லாமல், கடவுளின் அருளை பெற விரும்பா விட்டால், கோவில்கள் இருப்பதன் நோக்கமே பயனற்றதாகி விடும்.கடவுள் பக்தியை கருத்தில் கொள்ளாத திருவிழாக்களில், இரு குழுவினர் இடையே ஏற்படும் தேவையற்ற பிரச்னையை தீர்க்க, போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வீணாகின்றன. அவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கின்றனர். போலீஸ், வருவாய் அதிகாரிகளுக்கு இதை விட முக்கியமான பல பணிகள் உள்ளன. எனவே, கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க தேவை இல்லை. கோவில் திருவிழாவை, அகங்காரத்தை முன்னிறுத்தாமல், அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை, அந்த குழுக்களுக்கே விட்டு விடுகிறேன். சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு காரணமான நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” வழக்கை முடித்து வைக்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். உண்மையில் நீதிபதி சரியாகத்தான் தீர்ப்புக் கொடுத்துள்ளார். ஊடகங்கள் தான் அதைத் திரித்து வெளியிட்ட ரீதியில் தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

25-07-2023


[1] தினமலர், திருவிழாக்கள் வன்முறை களமானால் கோவில்கள் அர்த்தமற்றதாகி விடும்!: நீதிமன்றம் கண்டனம், பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 02:03

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3382836

[3] தமிழ்.இந்து, “பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” – உயர் நீதிமன்றம் வேதனை, ஆர்.பாலசரவணக்குமார், Published : 21 Jul 2023 08:21 PM, Last Updated : 21 Jul 2023 08:21 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1060832-temple-festivals-to-demonstrate-strength-not-true-devotion-high-court.html

[5] காமதேனு, திருவிழாக்களில் வன்முறை வெடித்தால் கோயில்கள் இருப்பதற்கே அர்த்தமில்லை: உயர்நீதிமன்றம் வேதனை, Updated on : 21 Jul 2023, 7:26 pm

[6] https://kamadenu.hindutamil.in/national/the-madras-high-court-opined-that-temple-festivals-are-held-to-prove-who-is-the-stronger-of-the-two-factions

[7] தினமணி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை: உயா்நீதிமன்றம் வேதனை, By DIN  |   Published On : 22nd July 2023 05:32 AM  |   Last Updated : 22nd July 2023 05:32 AM.

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jul/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-4041969.html

[9] தினத்தந்தி, கோவில் திருவிழாக்கள் பலத்தை நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன, உண்மையான பக்தி இல்லை‘ – சென்னை ஐகோர்ட்டு வேதனை, ஜூலை 21, 5:45 pm

[10] https://www.dailythanthi.com/News/State/temple-festivals-are-held-to-show-strength-not-true-piety-high-court-agony-1012771

[11] நியூஸ்.7.தமிழ்.லைவ், திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை!” – சென்னை உயர்நீதிமன்றம்!, by Web EditorJuly 21, 2023.

[12] https://news7tamil.live/there-is-no-true-devotion-in-holding-temple-festivals-temples-may-be-closed-if-violence-erupts-during-festivals-high-court.html

[13] தமிழ்.வெப்.துனியா, கோயில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை: உயர்நீதிமன்றம் வேதனை..!, Webdunia, வெள்ளி, 21 ஜூலை 2023 (16:36 IST)

[14] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-highcourt-says-about-temple-festival-123072100054_1.html?amp=1

[15] நக்கீரன், யார் பெரியவர் என நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது” – நீதிமன்றம் அதிருப்தி, செய்திப்பிரிவு, Published on 21/07/2023 (16:32) | Edited on 21/07/2023 (16:52)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temple-festivals-are-held-prove-who-greatest-court-disapproves

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு முதலியன (1)

ஜூன் 24 முதல் 27 வரை அனுமதி இல்லை என்றது: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது[1]. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி,  ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நாள்களில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்[2]. ஆனால், அறநிலையத்துறை பெண் அதிகாரி தீக்ஷிதர்களுடன் வாதிக்கும் வீடியோ ஊடகங்களில் காண்பிக்கப் பட்டது. சுற்றிலும் போலீசார் பலர் இருந்தனர். இத்தகைய சாதாரண தரிசன விசயங்களுக்கு இத்தனை போலீஸார் ஏன் என்று தெரியவில்லை. 24-06-2023 அன்றே,  வாதிக்கும் பொழுதே, ஒருவர், சட்டை இல்லாமல், மேலே ஏறி, அப்பலகையை எடுத்து விட்டார், பிறகு, போலீஸார் துணையும் அது எடுத்துச் செல்லப் பட்டது. அதை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த 2022 மே 17 என்றுதமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

17-05-2023 அரசாணை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது: இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘சிதம்பரம் கோயிலில் உள்ள கனகசபையில் 7 முதல் 10 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்யமுடியும். ஆனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு வரும் சூழலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் மேற்கொள்ள அனுமதித்தால் அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும். கோயிலில் அன்றாடம் நடைபெறும் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடைபெறும் சூழலில் பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதித்தால் வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த அரசாணை சட்டவிரோதமானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்,” என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

26-06-2023 திங்கட்கிழமைசரண்யா கொடுத்த புகார்: கோவிலில், அதிலும், விஷேசமான நாட்களில் எதற்க்கா பிரச்சினை என்று இத்தனை போலீசார் கோவிலில் நுழைவது, இருப்பது, நிச்சயமாக பக்தர்களுக்கு சங்கடமாக, தொந்தரவாக, திகைப்பாகத்தான் இருக்கும். ஏதோ குற்றம் நடந்தது போல போலீசார் குவிக்கப் பட்டிருப்பது, கோவில் ஆன்மீக நிலையினையே பாதிக்கும் முறைக்கு கொண்டு சென்றுள்ளது. 26-06-2023 திங்கட்கிழமை – சரண்யா கொடுத்த புகாரின் பேரில் 11 தீக்ஷிதர்களின் மீது போலீஸார் வழக்குத் தொடுத்துள்ளனர்[3]. இதற்கு மட்டும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தது போலும். தீக்ஷிதர்கள் அவரை தொந்தரவு செய்தனர் என்று புகார் கொடுத்துள்ளார். 19-06-2023 முதல் கனகசபையில் தரிசனம் அனுமதிக்கப் பட்டு வந்தது. 24-27 தேதிகளில் கூட்டம் அதிகம் என்பதனால் தடுக்கப் பட்டது. இதனை பிரச்சினை ஆக்கியிருக்கிறார்கள். 27-06-2023 செவ்வாய்கிழமை ஆனித்திருமஞ்சனம் பலகை எடுத்த பிறகு, படிகளில் பெண் போலீஸார் பலர் வேக-வேகமாக படிகட்டுகள் ஏறிச் செல்வது போன்று வீடியோ காட்டப் பட்டன. பிறகு அவர்கள் இறங்குவதும் தெரிந்தது. பிறகு என நடந்தது என்று தெரியவில்லை. பலகை எடுத்த பிறகு எத்தனை பேர் தரிசனத்திற்குச் சென்றனர்[4], என்னவாயிற்று என்றெல்லாமும் தெரியவில்லை. தீக்ஷிதர் சம்பிராதத்தை மீறியது தான் தெரிகிறது[5].

27-06-2023 கற்பக கணேச தீக்ஷிதர் புகார்: இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் கற்பக கணேச தீட்சிதர், பூஜையில் இருந்த தன்னை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகள் தள்ளிவிட்டு நிலைகுலையச் செய்ததாக, நகர காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியுள்ளார்[6]. அதில் அவர் கூறியிருப்பதாவது[7]: “சிதம்பர் நடராஜர் கோயிலில் நான் கடந்த 27-ம் தேதி செவ்வாய் கிழமை, பூஜைக்காரராக தினப்படி கோயில் பூஜை செய்யும் பணியில் இருந்தேன். மாலை 6.45 மணி அளவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் திடீரென கனகசபையில் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது, எனது ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் என்னை தள்ளிவிட்டு, நிலைகுலைய வைத்து, கனகசபைக்குள் நுழைந்து, என் பூஜை பணிக்கு இடையூறு செய்து எதிர்பாராத வகையில் என் மீது தாக்குதல் நடத்தினர். என் தந்தை எஸ்.எஸ்.ராஜா தீட்சிதர் உள்ளிட்ட சிலர் எனக்கு உதவ முன்வந்தனர். எதிர்பாராத தாக்குதலால் மயக்கமாகி விட்டேன். பூஜை பணியை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை உள்ளதால், உடல் வலி, மன வலியை பொறுத்துக் கொண்டு, தெய்வ பணியை இரவு 10 மணிக்கு முடித்தேன். மறுநாள் காலையில் வலியுடன் பொறுப்பை அன்றைய பூஜைக்காரரிடம் ஒப்படைத்து, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். என் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு அதிர்ச்சி, உடல் வலி உள்ளதாலும், நேரில் வந்து புகார் கொடுக்க மன தைரியம் இல்லாததாலும், புகாரை பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்[8]. புகார் மனுவின் நகல்களை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்.பி., சிதம்பரம் ஏஎஸ்பி ஆகியோருக்கும் அவர் அனுப்பியுள்ளார்[9].ஆனால், இதனை தீட்சிதர்கள் தெரிவித்த புகாரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்[10].

28-06-2023 – அனுமதிக்கப் பட்டது. தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது[11]., என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இதெல்லாம் முன்னர் ஆறுமுகசாமி என்ற ஒருவர் போராட்டம் என்றெல்லாம் செய்து வந்தது ஞாபகம் இருக்கலாம். 2017ல் அவர் காலமாகியப் பிறகு அத்தகைய பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்பொழுது, இந்த கனக சபை தரிசனம் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது போலும். தெய்வத் தமிழ் பேரவையும் ஆறுமுகசாமி போல பிரச்சினை உண்டாக்க  தோற்றுவிக்கப் பட்ட இயக்கம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Published : 30 Jun 2023 08:00 AM; Last Updated : 30 Jun 2023 08:00 AM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[3] On Monday night, police filed a case against 11 dikshithars based on a complaint received from Saranya. The case was filed under four sections of the IPC and section 4 of the Tamil Nadu Prohibition of Harassment of Women Act. However, the officials’ attempt to negotiate with the dikshithars for permission to allow devotees to Kanagasabai failed.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jun/27/hrce-dept-removes-dikshithars-board-from-chidambaram-temple-2588890.html

[4] கல்கி, அறநிலையத்துறை அதிகாரிகள் அத்துமீறல். சிதம்பரம் தீட்சிதர்கள் பரபரப்பு புகார்!, கல்கி, Published on : 29 Jun, 2023, 11:46 am

[5] https://kalkionline.com/news/tamilnadu/charity-department-officials-trespass-chidambaram-dikshidar-complains-of-excitement

[6] தினத்தந்தி, , “ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தாக்குதல்” – சிதம்பரம் தீட்சிதர் பரபரப்பு புகார், By தந்தி டிவி, 29 ஜூன் 2023 2:13 PM

[7] https://www.thanthitv.com/latest-news/attack-to-cut-off-clothes-and-wool-chidambaram-dikshithar-complains-196056

[8] தமிழ்.இந்து,  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: பூணூலை அறுத்ததாக போலீஸில் தீட்சிதர் புகார், செய்திப்பிரிவு, Last Updated : 30 Jun, 2023 08:00 AM.

[9] https://www.hindutamil.in/news/tamilnadu/1031660-chidambaram-nataraja-temple-issue-dikshithar-complains-to-the-police-about-cutting-poonool.html

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டு தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன? மறுக்கும் அறநிலையத்துறை.!, vinoth kumar, First Published Jun 29, 2023, 11:14 AM IST,   Last Updated Jun 29, 2023, 11:18 AM IST

[11] தமிழ்.ஒன்.இந்தியா, கனகசபை கலாட்டா.. நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டதா? நடந்தது என்ன?, By Jeyalakshmi C Published: Thursday, June 29, 2023, 10:09 [IST]

https://tamil.oneindia.com/news/cuddalore/chidambaram-natarajar-temple-deekshithars-poonal-is-cut-what-happened-in-kanagasabai-518851.html

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

மே13, 2023

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளை: தமிழகத்தில் திராவிடத்துவ ஆட்சியில் கடந்த 70 வருடங்களாக, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது, அபகரிப்பது, திருட்டுத் தனமாக பட்டா போட்டு வாங்குவது-விற்பது என்று பலகோடி வியாபாரம், ஊழல், முதலியவை நடந்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. இது பல கூட்டங்களுக்கு வியாபாரமாகி விட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பதிவுத்துறை, இந்து அறநிலையத் துறை போன்ற விசுவாசமான திராவிடத்துவ ஊழியர்களும், சேர்ந்துள்ளனர். இந்துக்களை விட கோவில் நிலங்கள், சொத்துகள் முதலிய விவரங்கள் இவர்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும். காலம்காலமாக அமைதியாக, 100-1000 என்று கொடுத்துக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். யாராவது கேட்டால், அவ்வப்பொழுது மாமூல் கொடுத்து சரிகட்டி வருகின்றனர். இதில் நாத்திகர், இந்துவிரோதிகள் ஏன், இந்துக்கள் அல்லாதவர், துலுக்கர், கிருத்துவார் என்றெல்லாம் கூட பங்கு கொண்டு, இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர். சங்கம் அமைத்து, நீதிமன்றங்களில் உரிமை கேட்டு போராடி வருகின்றன்றர். 

நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் கோவில் நிலத்தை அபகரித்துள்ளது: கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது[1]. இதில் கூட என்ன சகிப்புத் தன்மை, சகிப்பற்றத் தன்மை என்றெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேஸ்வர சாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு விட்டது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது[2]. ஆக, கோவில் நிலத்தை குத்தகை விட்டதிலிருந்தே ஊழல் ஆரம்பிக்கிறது. கோயில் நிலத்தை கோவூர் வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி விவசாயம் செய்வதற்காக உறுப்பினருக்கு பகிர்ந்து வழங்கியது[3].  “பகிர்ந்து வழங்கியது,” என்றால், அதன் பயன்பாடு விவரங்கள் “கட்டிடங்கள் கட்டலாமா கூடாதா என்ற-போன்ற விவரங்கள்” அவர்களுக்குத் தான் தெரியும். நிலத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை காலி செய்து கோயில் வசம் ஒப்படைக்க கடலூர் கோர்ட் உத்தரவிட்டது[4]. இந்த அழகில் வாடகையே கொடுக்காமல் அனுபவிக்கின்றனர் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் என்றெல்லாம் கண்டு கொள்லலாம்.

நிலம் மீட்கப் படும, வாடகை வசூலிக்க முடியுமா?: கடலூர் வருவாய் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் உள்பட 20 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[5]. அத்தகைய மஹா ஒழுக்கசீலர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றால், அவர்களது பராக்கிரமத்தையும் அறிந்து கொள்ளலாம். 4 வாரத்தில் நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது[6]. இப்பொழுது மே என்றால் ஜூன் மாதமும் வந்து விட்டு போகும். இந்த ஆணையை அமூல் படுத்துவார்களா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஜூன் வரைக்கும் பொறுங்கள் என்பார்கள், அதற்குள் மேல்முறையீடு செய்வார்கள். கோயில் நிலத்திற்கான குத்தகை நிலுவையை வசூலிக்க கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது[7]. இதற்கும் தங்களிடம் பணம் இல்லை என்பார்கள் அல்லது “வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி” என்பதால் ஹள்ளுப்டி செய்யுங்கள் என்று கேட்டாலும் ஆச்சரியப் பௌவதற்கு இல்லை. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்[8]. கூட்டுறவு சங்கத்துடன் மட்டுமே ஒப்பந்தம் என்பதால் உறுப்பினர்கள் வழக்கு தொடர அதிகாரமில்லை என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோயிலுடன் மனுதாரகளுக்கு எவ்வித ஒப்பந்தமும் இல்லை என்பதால் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.

நீதிமன்ற ஆணைகனம் நீதிபதிகளின் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “ரூ.50 லட்சம் பாக்கி கோவில் நிர்வாகம் தரப்பில் தங்களுக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், வழக்கு தொடர்ந்துள்ள உறுப்பினர்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கை தொடர அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதிடப்பட்டது. மேலும், ரூ.50 லட்சம் ரூபாய் அளவிற்கு குத்தகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளதாகவும், விவசாயத்திற்கு கொடுத்த நிலத்தை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்கிறேன். கோவில் நிர்வாகத்துக்கும், கூட்டுறவு சங்கத்துக்கும் இடையேதான் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் எதுவும் செய்யாமல், கோவில் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி உள்ளனர். வெளியேற்ற வேண்டும் இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்துள்ளது. அப்போது கூட குத்தகை தொகையை வழங்கவில்லை. கோவில் நிலத்தை அபகரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் சகித்துக்கொள்ள முடியாது. கோவிலுக்கு மனுதாரர்களால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் காஞ்சீபுரம் கலெக்டர் ஒப்படைக்க வேண்டும். குத்தகை பாக்கித்தொகையை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[10].

கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்[11]. புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்யப்பட்டது[12]. இதுகுறித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், போலி ஆவணம் தயாரிக்க உதவிய முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் சகாயராஜ்,62; லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெரு கருணாகரன் (எ) செந்தில்,37; பத்திர எழுத்தர் தேங்காய்த்திட்டு அருள்பெரும்ஜோதி நகர் மணிகண்டன்,46; முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகர் அசோக்,52; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர்,. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் கருணாகரன் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில் நிலம் கொள்ளை: வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், பாஸ்கரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு சரவணன், உதயச்சந்திரன், பூரணி ஆகியோரை டி.ஜி.பி., மனோஜ்குமார் லால், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், ஐ.ஜி., சந்திரன், சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா ஆகியோர் பாராட்டினர். நிலத்திற்கு ‘ஜீரோ’ மதிப்பு -கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி நிலத்தை விற்பனை செய்ய முடியாதபடி, போலீஸ் பரிந்துரையை ஏற்று, பத்திர பதிவுத்துறை ‘ஜீரோ’ மதிப்பு கொண்ட நிலமாக மாற்றியுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றி மீண்டும் கோவில் பெயரில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ் 13-05-2023


[1] தினகரன், கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது: சென்னை உயர்நீதிமன்றம், May 12, 2023, 5:54 pm.

[2] https://www.dinakaran.com/attempts-expropriate-temple-land-any-rate-cannot-be-tolerated-madras-high-court/

[3] நியூஸ்.டி.எம், “நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாது!” Byஅருணா|12 May 2023 6:30 PM

[4] https://newstm.in/tamilnadu/–1905011

[5] மாலைமுரசு, நிலத்தை அபகரிக்கும் முயற்சியை சகித்துகொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்!!, webteam, May 12, 2023 – 20:48.

[6] https://www.malaimurasu.com/posts/district-news/Attempts-to-grab-land-cannot-be-tolerated

[7] தினமலர், கோவில் நிலத்தை மீட்கும்படி கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: மே 12,2023 22:05…

[8] https://m.dinamalar.com/detail.php?id=3318887

[9] தினத்தந்தி, கோவில் நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாதுஐகோர்ட்டு கண்டனம், தினத்தந்தி மே 13, 5:13 am

[10] https://www.dailythanthi.com/News/State/expropriation-of-temple-land-cannot-be-tolerated-court-condemns-963457

[11]  தினமலர், கோவில் நிலம் அபகரிப்பு மேலும் 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மே 11,2023 06:38…

[12] https://m.dinamalar.com/detail.php?id=3317727

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.

திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

மற்ற அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

பூணூல் போட்ட பார்ப்பனர்களின் பூர்ணகும்ப மரியாதை…………..

இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:

  • அமைச்சர் பி.கே.சேகர்பாபு[8],
  • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர்,
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  • பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்,
  • ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்[9],
  • திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்[10]
  • சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன்[11],
  • பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12]
  • இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
  • திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சத்தியவேல் முருகனார்.

உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].

  1. சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
  • இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
  • இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
  • பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
  • முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
  • தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
  • கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
  • அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
  • செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
  1. திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.

[2] பதிரிக்கை.காம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்..!, JAN 19, 2023

[3] https://patrikai.com/chief-minister-m-k-stalin-released-108-devotional-books-on-behalf-of-the-hindu-religious-charities-department/

[4] தினமணி, மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு..ஸ்டாலின் வெளியிட்டார், By DIN  |   Published On : 20th January 2023 03:08 AM  |   Last Updated : 20th January 2023 03:33 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-released-108-rare-devotional-books-494966.html

[7] அறிவாலயம், திமுக-இஐடி-விங்- https://twitter.com/i/status/1616020423535394816

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jan/20/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-108-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3986985.html

[9] தினகரன், புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்கள் வெளியீடு: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், 2023-01-20@ 00:33:10.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=831765

[11] மாலைமுரசு, தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்…!, Tamil Selvi SelvakumarTamil Selvi SelvakumarJan 19, 2023 – 14:27038

[12] https://www.malaimurasu.com/posts/tamilnadu/eb-with-adhar-details

[13] இ.டிவி.பாரத், 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்பின்னணி என்ன?, Published on: Jan 19, 2023, 10:48 PM IST

[14] https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/chennai/chief-minister-mk-stalin-published-108-rare-devotional-books-in-chennai/tamil-nadu20230119224805573573653

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை..

அறிக்கையில் விளக்கத்தைக் காணலாம்…

இப்புத்தகங்கள் விற்பனைக்கு…..

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/