இந்து கோவில்கள் விவகாரங்களில் நாத்திக-திமுக அரசு அதிகமாக அக்கறைக் காட்டுகிறதா அல்லது தலையிட்டு குழப்புகிறதா?
13-03-2024 – உழவாரப்பணியில்திமுகஅமைச்சர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (13.03.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள், சலவைப் பொருட்கள் / தூய்மைப் பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், தூய்மையை பராமரித்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்ற புதிய திட்டங்களை கடந்த 33 மாதங்களில் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்படுத்துகின்ற மகத்தான முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.
கோவில் விவகாரங்களில் திமுக-நாத்திக அரசியல்வாதிகளின் தலையீடு ஏன்?: 27-07-2021 முதல் உழவாரப்பணி பதிவு ஆரம்பிக்கப் பட்டது. அதிலிருந்து தொடர்ந்து, சேகர்பாபு அமைச்சர் கோவில் விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டுக் கொண்டு வருகிறார் என்று தெரிகிறது. தங்கநகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றுவது, பூஜைகளுக்கு கட்டுப்படுவது, சிறப்பு தரிசனங்கள் அன்னதானத் திட்டங்கள் என்று பல சாதாரணமாக தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளில் எல்லாமே ஏதோ, இவர் சொல்லித்தான் நடப்பது போல காட்டிக் கொண்டு வரும் போக்கும் தென்படுகிறது. குறிப்பாக தினம்-தினம் ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் என்று, கோவில் நிலம் மீட்கப்பட்டது, கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் வருவது போன்ற போக்கும் காணப்படுகிறது. இவை எல்லாம் சாதாரணமாக யார் ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொண்டுதான் இருக்கும் ஆகவே திமுகவினர் ஆட்சிக்கு வந்திருப்பதினால், தங்களது நாத்திக, கடவுள் நம்பிக்கை இல்லாத, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்துவிரோத பிம்பத்தை சரி செய்வதற்கு, இந்த துறையை உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது. இப்பொழுது, எல்லாமே ஸ்டாலின் சொல்லித் தான் செய்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
நடந்துவரும்உழவாரப்பணியைஅரசுகட்டுப்பாட்டில்கொண்டுவரமுயற்சி: அடியார்களாலும், தன்னார்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற உழவாரப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட 5 திருக்கோயில்களுக்கு முதற்கட்டமாக உழவாரப்பணி மேற்கொள்வதற்குண்டான 12 வகையான உபகரணங்களை கட்டணமில்லாமல் வழங்குகின்றோம்[1]. உழவாரப்பணி முடிந்தவுடன் திரும்பவும் திருக்கோயிலிலேயே ஒப்படைத்து விட வேண்டும். உழவாரப் பணியில் ஈடுபடுகின்ற அன்பர்களுக்கு தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்றும், உழவாரப்பணி மேற்கொள்பவர்களுக்கு துறையின் சார்பில் அந்தந்த இணை ஆணையர்கள் மூலம் நற்சான்றிதழ் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்[2]. இறை நம்பிக்கையோடு செய்கின்ற, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை உள்ளத்தோடு ஆலயங்களை தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு இருக்கின்ற உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நிச்சயம் ஆண்டவனால் வழங்கப்படும்.
சோழர்காலஆட்சிக்குஇணையாகதமிழகமுதல்வர்தலைமையில்ஆட்சிநடக்கிறது: இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருக்கின்றவர், அரசியல்ரீதியில் பேசி வருவது தமாஷாக இருக்கிறது. சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அந்த வகையில் நம்முடைய உழவாரப்பணி என்பது தொன்று தொட்டு மக்கள் செய்து வருகின்ற பணி என்றாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்[3]. பல்லாண்டுகளாக நடந்து வரும் உழவாரப் பணியில், திடீரென்று இவர்களுக்கு இத்தனை ஆர்வம் வருவது திடுக்கிட வைக்கிறது. முதலில், இப்பணிக்கே கட்டுப் பாடு விதிக்கும் முறையில் நடந்து கொண்டது ஞாபகத்தில் இருக்கலாம். இப்பொழுதோ, அளவு கடந்து ஆசை வந்துள்ளது பயமாக இருக்கிறது. நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் சீத்தனஞ்சேரியில் 2022ம் ஆண்டு தங்களுடைய நூறாவது உழவார பணியை மேற்கொண்டனர்[4]. அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் என் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களுடைய பணி தொடர்ந்து அரக் கோணத்தில் ஏப்ரல் மாதம் 124வது உழவார பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இந்துசமயஅறநிலையத்துறை சாதனைபட்டியல்: ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை மீட்பதில் தனி முத்திரையை திராவிட மாடல் அரசு பதித்திருக்கிறது. இதற்காக 38 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு வட்டாட்சியர்களை பணிநியமனம் செய்திருக்கிறோம். இவர்கள் இதுவரை ₹5979 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளனர். குடமுழுக்கு என்று பார்த்தால் இதுவரை 1477 நடைபெற்றுள்ளன. ஆதிதிராவிடர் வசிக்கிற பகுதியில் 5000 கோயில்களுக்கு திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 2500 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருக்கோயில்களை பாதுகாக்கவும், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு 4000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி, இந்த திமுக அமைச்சர் கூறிக் கொண்டலும், சாதாரண மக்கள் நமொஉவதாக இல்லை.
திமுகஇரும்புமனிதர்ஆணைபெயரில்நடக்கிறதாம்: .4000 கோயில்களுக்கு தேவையான நிதி 70 கோடி ரூபாய் அரசே மானியமாக வழங்கி அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 16000 பேருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற ஒரே அரசு தமிழக அரசு. தமிழக அரசு வரலாற்றில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்தாலும் ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தி னாலும் எதற்கும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக. அதனுடைய தலைவர் இரும்பு மனிதர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருக்கோயில்களின் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்[5]. உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 2021 தொடங்கி தற்போது வரை 18,225 கோயில்களில் 36,554 உழவாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்[6]
14-03-2024 அன்றுநீர்மோர்வழங்கும்திட்டம்ஆரம்பம்: வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்[7].. 14-03-2024 அன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது[8]. உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பழநியில், உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கானப் பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது[9]. ஸ்டாலின் சொல்லித்தான், இதையெல்லாம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டார்[10].
[1] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு, March 13, 2024, 9:55 pm
இந்தவிவகாரத்தைஅமைச்சர்சேகர்பாபுவிடம்கொண்டுசென்றது: விகடன் இதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது – இது குறித்து வழக்கு விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் எனவும் கூறி சிலர் தருமபுரம் ஆதீனம் தரப்பை மிரட்டியிருக்கின்றனர். எனினும், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்கள்.
மஹாபாரதயுத்தம்தான்நடந்துகொண்டிருக்கிறது: இவையெல்லாம் நிச்சயமாக அரசுக்கும், மடத்திற்கும் உள்ளே தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. குற்றம், விதிமுறைகள் மீறல், சட்டங்கள் மீறல் என்றெல்லாம் வந்தால், நிச்சயமாக அத்தகைய சட்டத்தை மீறும் நபர்கள் உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம், மக்களின் கவனத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்தப் படுவதில்லை. சட்டாமீறல்களுக்கும் அவ்வாறே உரிய தண்டனைகள் கொடுப்பதில்லை, கிடைப்பதில்லை. இதனால், சட்டங்கள் பிழையாவதில்லை, ஆனால், தருமம் மதிக்கப் படாததால், அநியாயம் உச்சத்தில் செல்கிறது. அந்நிலையில், அத்தகைய அநியாயம், அராஜகம், அதர்மம் என்றே எல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுகிறவன் பைத்தியக் காரன் ஆகிறான். யாரும் அவனை மதிப்பதும் இல்லை. இதனால் தான், பலர், நமக்கெதற்கு வம்பு என்று அமையாகவும் இருந்து விடுகின்றனர்.
வழக்குப்பதிவு, கைதுமுதலியன: இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 323, 307, 389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28), ஆடுதுறை வினோத் (32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[1]. மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[2].
முதலமைச்சரின்ஆணைப்படிதுரிதமாகசட்டநடவடிக்கைஎடுத்ததற்குதருமபுரம்ஆதீனம்நன்றிதெரிவித்து: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[3]. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[4]. அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, உடனடியான நடவடிக்கை – கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எப்படியென்றால், இதெல்லாம் ஏதோ சொல்லி வைத்தால் போல நடந்த விவகாரங்களா அல்லது அப்படியே அமுக்கி விடலாம் என்று தீர்மானித்து, அமுக்க முடியாமல் போனதால், நடந்தேறிய நிகழ்வுகளா என்பதெல்லாம் ஆண்டவன் தான் பிரகடனப் படுத்த வேண்டும்..
2018ல்திருவாவடுதுறைஆதீனம்திருவிடைமருதூர்கட்டளைசுவாமிநாதன்தம்பிரான்புகார்: `பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் குள நிலத்தடி நீரைக் காக்கவும் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணிகளை அரசின் அனுமதியோடு செய்து வருகிறோம்[5]. இந்தப் பணியைச் செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் பி.ஜே.பி நகரத் தலைவர் ராஜு உள்ளிட்ட சமூக விரோதிகள் எங்களை மிரட்டுவதோடு, வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரபரப்புகின்றனர். மேலும், நேரிலேயே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இப்பொழுதும், ஒரு பிஜேபி தலைவர் சம்பத்தப் பட்டுள்ளது தெரிகிறது. ஆக, இந்துமத்ததைக் காக்கிறோம் என்று சொல்கின்ற பிஜேபிகாரர்களும் இவ்வாறு மாறி விட்டனரா அல்லது திராவிடத்துவ வழியில் நடக்க முயற்சிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல், வானதி சீனிவாசன் வரை எங்களுக்கும், பெரியாருக்கும் சித்தாந்த ரீதியில் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டையும் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தலுக்காக சொன்னோம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது, அப்படியே நடந்துகொள்வது என்பது வேறு, அது முரண்பாடானது, பயங்கரமானதும் கூட.
ஆன்மீகக்கூட்டா, அரசியல்கூட்டா?: சாம-தான-தண்ட-பேத முறைகளில் கூட்டணி முயற்சிகள், பேரங்கள், வற்புருத்தல்கள் போன்றவையும் நடக்கலாம், நடத்தப் படலாம். அந்நிலையில், மதம் பந்தாடப் படுகிறது. மதத்தலைவர்கள் ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். தனித்திருக்கல்லாம், என்று ஒதுங்கியிருந்தாலும், ஏதோ ஒரு வழியில், முறையில், அவர்களும் இழுக்கப் படுகறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மடங்கள்-கோவில்களின் சொத்துக்கள் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் இருப்பதால், அவற்றை அனுபவிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்கார விவசாயிகள், போன்றவர்கள் தொடர்ந்து பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். ஆட்சி-அதிகாரம்-காலம் மாறும் பொழுது, அவ்வப்பொழுது, விசயம் வெளிவ்ரும் பொழுது, மற்றவர்களும் அதில் நுழைக்கின்றனர். அந்நிலையில் பங்கு போடும் நிலைக்கு வரும் பொழுது, புதிய சர்ச்சைகள், தகராறுகள், சண்டைகள் என்றெல்லாம் வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் சமரசம் ஆகவில்லை என்றால், அரங்கேறி விடுகிறது. ஆகவே, எது எப்படியாகிலும், மடங்கள் போற்றப் படவேண்டும். மடாதிபதிகளிம் கௌரவம் காப்பாற்றப் அடவேண்டும்.
திராவிடத்துவஆட்சியில்மடத்தில்பிரச்சினை 25-02-2024ல்கொடுக்கப்பட்டபுகார்: தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கும் நேரங்களில் சர்ச்சைகள் எழுவது சாதாரண விசயம் எனலாம். அக்கட்சி சித்தாந்திகளுக்கு விருப்பமான செய்திகளாக அமையும் என்பது மட்டுமல்லாது, இதை வைத்த்க் கொண்டு ஒரு பக்கம் இந்து மதத்தைத் தூஷிக்க பயன்படுத்தும், இன்னொரு பக்கம், “இதோ பார், நாங்கள் தான் படங்களைக் காக்கிறோம்,” என்பது போலக் காட்டிக் கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளோம். மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது[1]. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்[2]. இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புகார் மனு அளித்தார்[4].
தலைமைமடாதிபதிதொடர்புடையஆபாசவீடியோமற்றும்ஆடியோ: அதில் கூறியிருப்பதாவது[5]: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்[6]. இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக் கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார்[7]. பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர்[8]. மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர்[9]. இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்[10]. அப்படியென்றால், கண்ணால் பார்த்த சாட்சிகளே நிறையே பேர் இருக்க வேண்டுமே. மடத்திற்குள் கேமராக்கள் எல்லாம் இல்லையா, அவர்கள் வந்து சென்றதற்கான ஆதரங்கள் இல்லையா?
உயிருக்குபயந்து, மடத்தில்உள்ளவர்களிடம்பணம்பெற்றுத்தருவதாகதெரிவித்தேன் – ஆதீனம்: அந்த அளவுக்கு என்ன நடந்தது என்றும் புதிராக உள்ளது. திராவிடக் கட்சிகள் மடத்து சொத்துகள் நிர்வாகம், குத்தகை, நிலம் வாங்குதல்-விற்றல்-பட்டா போடுதல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றெல்லம் கவனித்தால், அத்தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். கட்சிகள், ஆட்சிகள் மாறினாலும், சொத்துக்களை அனுபவிப்பத்தில் எந்த குறையும் ஏற்படாமல், சம்பந்த பட்டவர்கள் நன்றாகவே கவனமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, பகிர்வுகளில் பிரச்சினை எழும் பொழுதும், சமரசம் செய்து கொள்ளப் படுகிறது. எல்லைகளை மீறும் பொழுது, இத்தகைய “வெடிப்புகள்” காணப் பட்டு, உணரப்படுகிறது. இதற்கெல்லாம், மதம், தர்மம், நியாயம், முதலியவை தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசியல், அதிகாரம் தீர்வாக இருக்க முடியாது. பொது மக்கள் முன்பே, இவையெல்லாம் தொடர்ந்து, தங்களது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, ஆன்மீகம் என்று பேசிக் கொண்டு, மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால், பக்தர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.
குறிப்பிட்டநபர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கபோலீஸாரில்புகார்: பின்னர் இது தொடர்பாக –
செம்பனார்கோயில் தனியார் (கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,
திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க. அகோரம்,
திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்,
வினோத்,
விக்னேஷ் –
ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்[11]. மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம்[12]. அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார்[13]. இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர்[14]. எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றம்சாட்டப்பட்டசெந்தில்என்பவரின்பெயரைநீக்ககாவல்துறையிடம்விருதகிரிகொடுத்தமனு: இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். “அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை[15]. “நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்[16]..
[9] இடிவி.பாரத், மோடிக்குசெங்கோல்கொடுத்தஆதீனத்திற்குமிரட்டல் – பாஜகமாவட்டத்தலைவர்தலைமறைவு!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Feb 29, 2024, 12:39 PM IST; Updated : 19 hours ago.
[11] புதியதலைமுறை, ஆபாசவீடியோஇருப்பதாகதருமபுரம்ஆதினத்தைமிரட்டியவிவகாரம்; 4 பேர்கைது..முக்கியபுள்ளிகள்தலைமறைவு. Uvaram P, Published on: 29 Feb 2024, 7:43 pm.
23-02-2024 அன்றுதமிழகஅரசுக்குசென்னைஉயர்நீதிமன்றம்உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இரண்டு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. தமிழகத்தில் ‘பழமையான, பாரம்பரியம் மிக்க கோயில்களில் துாய்மைப் பணிகள் மற்றும் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்[2]. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் 23-02-2024 அன்று விசாரணைக்கு வந்தது. ஆன் லைனில் பதிவு என்று 2021ல் ஆரம்பித்தாலும், வழக்கம் போல, பிரச்சினை உண்டாக்கி, அனுமதி மறுப்பது, காலதாமதம் செய்வது போன்ற முறையில் இடைஞல் செய்து வருவதாக, உழவாரப் பணி குழுக்கள் தெரிவிக்கின்றன.
அறநிலையத்துறைசார்பில்சிறப்புபிளீடர்சொன்னதும், நீதிபதிகளின்கருத்தும்: அப்போது மனுதாரரான கே.கார்த்திகேயன், ”பொதுமக்கள், தன்னார்வலர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் வழங்குவதில்லை” எனக்கூறி மருதாநல்லுார் திருக்கருங்குடிநாதர் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில்கள், அங்குள்ள தெப்பக்குளங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்[3]. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”உழவாரப்பணிகளுக்குஅனுமதிகோரிசம்பந்தப்பட்டகோவில்களில்விண்ணப்பம்செய்தால்அதைபரிசீலித்துசெயல்அலுவலர்அனுமதிவழங்குவார். கோயில்களில்துாய்மைப்பணிகளுக்குஎவ்விதமறுப்பும்தெரிவிப்பதில்லை,” என்றார்[4]. பின் மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் உள்ள கோயில்களில் 65 சதவீத கோயில்களில் சரிவர பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ‘பாரம்பரிய, பழமையான கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து அரசும் கவலை கொள்வதில்லை’ என வேதனை தெரிவித்தனர்.
உழவாரப்பணிபற்றியபுரிதல்இல்லாதஅமைச்சரா, துறையாஎது?: தமிழகத்தில் உள்ள ஒரு சில பெரிய கோவில்களை மட்டும் தன்னார்வ அடிப்படையில் பக்தர்கள் தூய்மைப்படுத்தும் பணியான உழவாரப்பணி செய்கின்றனர். பெரும்பாலான கோவில்களில் இந்தப்பணி நடப்பதில்லை. அதுவும் முறையாக மாதம் ஒரு முறை என்று இல்லாமல் எப்போதாவது இந்தப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனை அனைத்து கோவில்களிலும் முறையாக செய்வதற்காக தூய்மைப்பணியில் ஈடுபடுபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்ய பலர் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது[7]:- “கோவிலைசுத்தம்செய்யும்உழவாரப்பணிக்குஇணையதளத்தில்பதிவுசெய்யும்முறைதற்போதுசனிக்கிழமைமற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில்மட்டுமேஉள்ளது. பக்தர்களின்வரவேற்பைபொறுத்துதினசரிபதிவுசெய்யும்வகையில்மாற்ற, திட்டம்உள்ளது,”. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்[8].
ஊழவாரப்பணிஅனுமதிக்குபதிவுசெய்வதுஎப்படி?: ஹி கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது[9]. கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையதுறையின் http://hrce.tn.gov.in யில் சென்று, இ – சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும்[10]. அதில் உழவாரப்பணியை தேர்வு செய்ய வேண்டும்[11]. பின், கோவில்கள் பட்டியலில் விருப்பமான கோவில், பணி செய்வதற்கு உகந்த தேதி, நேரத்தை அட்டவணையில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்[12]. முன்பதிவு செய்யப்படாத சீட்டை தேர்வு செய்து, பணி செய்ய விரும்புவோரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்[13]. அதன்பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,யை பதிவு செய்தால் அனுமதி சீட்டு வரும்[14]. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்[15]. முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது[16]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், எவ்வாறு, அறநிலையத்துறை போர்வையில் உழவாரப் பணியிலும் மூக்கை நுழைத்துள்ளது என்பதை ஏற்கெனவே விவரமாக பதிவு செய்துள்ளேன்[17]. ஔரங்கசீப் போலவே, சம்பந்தமே இல்லாத கிருத்துவர் கீதா ஜீவனையும் வைத்து, இச்சேவை ஆரம்பிக்கப் பட்டது[18].
ஆடித்திருவிழாவும், நீதிமன்றதீர்ப்பும்உணவுதரம்சோதனையும்: ஆடித் திருவிழா ஜூலை 22ஆம் தேதி 2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருவாதலும், திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளிலும் கோலாகலமாக திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பலர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
உணவுசோதனைஉண்டாக்கியகலவரம்: கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[1]. டீக்கடை, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்டப் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்[2]. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, லேபிள் ஒட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உரிய அனுமதி பெற்று உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளான சுரேஷ் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முறையாக விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததோடு தரமற்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16-12-2023 ஆர்பாட்டம்: தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி கோரி சனீஸ்வரன் கோயிலை பரம்பரை அறங்காவலர்களும் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியும் இந்து முன்னணி சார்பாக குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் கோட்டச் செயலாளர் கோம்பைகணேசன் தலைமையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர். பாலமுருகன், ராம் செல்வா, சசிகுமார் , பாண்டியன், ஆட்டோ முன்னணி ஆச்சி கார்த்திக் உட்பட ஒன்றிய , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[3]. சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்[4].
23-12-2023 ஆர்பாட்டம்: நீதிமன்றம் உத்தரவின் பேரில் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வெள்ளாளா் அமைப்பு சார்பில் 23-12-2023 சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவா் அணிச் செயலா் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவா் அண்ணா சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, மாநில மகளிர் அணித் தலைவி தமிழ்செல்வி மணிகண்டன் வரவேற்றார். அதில், குச்சனூா் சனீஸ்வரா் கோயில் முன்பு ஊா்வலமாக சென்றவா்கள், சென்னை உயா்நீதி மன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வெள்ளாளா் அமைப்பைச் சோ்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்[5]. சின்னமனூா் காவல் சார்பில் ஆய்வாளா் மாயன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனா்[6].
2003 முதல் 2023 வரை: 2003 இல் இருந்து 2020 வரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்தது. ஆனால் அக்காலகட்டத்தில் என்ன நடந்தது எதற்காக வேண்டி, மறுபடியும் 2023 இல் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில் மீட்கப்பட்டது, தனியார் நிர்வாகத்திற்கு வந்துள்ளது, என்பதை எல்லாம் கவனிக்க வேண்டிய உள்ளது. முன்னர், பரம்பரையாக இக்ககோவிலை பராமரித்து வந்துள்ளனர். அதேபோல இப்பொழுது 20 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் அந்த குழுவிற்கு சென்றுள்ளது என்பது தெரிகிறது. இது அந்த குறிப்பிட்ட கோவிலும் பிரச்சனை ஆக எடுத்துக் கொள்வதால் அல்லது பொதுவாக கோவில்கள் எல்லாம் அறநிலையக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற நடக்கும் போராட்டத்தின் அம்சமாக எடுத்துக் கொள்வதா என்பது கவனிக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இங்கு பக்தர்களின் பலன்கள் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் விவரங்கள் என்பதை பற்றி யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட விசேஷமான நாட்கள், காலம் என்ற வரையறுக்கப் பட்டதாக இருக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் இருக்க மட்டார்கள். ஆகவே, அவர்கள் இதில் தலையிட மாட்டார்கள் மற்றும் அவற்றிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்பது நன்றாக தெரிந்த விஷயம் தான்.
இப்பொழுதெல்லாம் வியாபாரமயப்பாக்கம் என்பது கோவில்களை மையமாக வைத்து பெரும்பாலாக நடந்து வருகின்றன என்பது கவனிக்க முடிகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிடத்துவ சித்தாந்தம் திராவிட கட்சிகள், பெரியாரிஸம் என்று பேசி விடுகின்ற பகுத்தறிவு- நாத்திக கூட்டங்கள் எல்லாமே மதத்திற்கு எதிராக குறிப்பாக கடவுள் மறுப்பு, இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்ற நிலை தான் உள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற லட்சுக்கணக்கான கோவில்கள் மற்றும் அவற்றிற்கு சொந்தமாக இருக்கின்ற பல கோடி ஏக்கர்கள் பரப்புள்ள விளைநிலங்கள், சொத்துகள், மடாலயங்கள் எல்லாம் எடுத்து ஆர்த்தால், அதனுடைய மதிப்பு எங்கோ செல்கிறது. கடந்த 70 ஆண்டுகள் ஆண்டுகள் கோவில் நிலங்களை பலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளன. தெய்வம் நம்பிக்கை இல்லாதவர், மேலும் இந்துக்களே இல்லாதவர் என்று இருப்பவர்களிடம் தான் நிலங்கள் குத்தகைக்கு வாடகைக்கு சென்றுள்ளன. அவர்கள் தொடர்ந்து அனுபவித்து ஆனால், கோவில் நிலங்களுக்கு உண்டான வாடகை மற்றும் குத்தகை பணத்தை கூட கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும், அந்நிலங்கள் தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பட்டா கேட்டும் வருகின்றனர் இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் அவ்வாறு அவர்கள் பட்டாக்களை கூட அதாவது கோவில் நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களை ஆக்கமிருந்து கொண்டு அவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக பட்டா போட்டு மாற்றிக் கொண்டுள்ளனர்.
[5] தினமணி, குச்சனூரில்வெள்ளாளா்அமைப்புசார்பில்ஆா்ப்பாட்டம், By DIN | Published On : 26th December 2023 12:00 AM | Last Updated : 26th December 2023 12:00 AM.
குச்சப்புல்உருவம், உருவம்ஆகிவிக்கிரமானது: இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்று கூறுகிறது வரலாறு. குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது[1]. அந்த அனீஸ்வரன், “குச்சனூர் சனீஸ்வரன்” ஆனான். அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது[2]. ஆக, இன்றைக்கு பிரசித்தியாகி விட்டார். கூட்டமும் பெருகி விட்டது. சுற்றிலும் கடைகளும் பெருகி விட்டது. இதனால், வியாபாரம் பெருக, மற்ற விவகாரங்களும் பெரிதாகி விட்டது. ஆக உள்ளூர்வாசிகள் இதை வைத்து எப்படி வியாபாரத்தைப் பெருக்கலாம் என்று பார்த்தால், அதில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. “சாமி காரியம்” என்பதால், எல்லாமே “புனிதமாகி” விடுகிறது.
2,000 கோவில்தொன்மையானது: 2 ஆயிரம் நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்[3]. செண்பகநல்லூர் என்று இருந்த உரை சுயம்பு சனீஸ்வர பகவானுக்கு குச்சிப்புள்ளினால் கோவில் கட்டியதால் இது குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது[4]. இக்கோவிலில் அரூப வடிவ லிங்கமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு கட்டப்பட்டு உள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட வருபவர்கள் தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8 மணிவரை சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிரசாதமானது முதலில் காகத்திற்கு தான் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அது அபசகுனமாக கருதப்பட்டு, பூசாரிகள் சனீஸ்வரபகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பிரசாதத்தை காகத்திற்கு வைப்பார்கள். காகம் பிரசாதத்தை உண்டால் தான் பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம். பின்புதான் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். எள் பொங்கல் வைப்பது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு.
2003ல்தமிழகஅரசுகட்டுப்பாட்டில்இக்கோவில்வந்தது: சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது[5]. இந்த திருக்கோவிலில் நிர்வாக பொறுப்பினை ஆரம்ப காலத்தில் அறங்காவலர் குடும்பத்தினர்கள் செய்து வந்தனர்[6]. கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைய துறையினர் கோவில் நிர்வாகப் பொறுப்பினை எடுத்துக்கொண்டு அன்று முதல் இன்று வரை செய்து வருகின்றனர்[7]. இந்நிலையில் மீண்டும் கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உயர் நீதிமன்றம் “தீர்ப்புவெளியான 4 வாரங்களுக்குள், கோயில்நிர்வாகத்தைபரம்பரைடிரஸ்டிகளிடம்ஒப்படைக்கவேண்டும். ஒருவர்மட்டுமேவழக்குதொடர்ந்திருந்தாலும், நிர்வாகத்தைடிரஸ்டிகள்ஏழுபேரிடமும்ஒப்படைக்கஉத்தரவிடப்படுகிறது ,”தீர்ப்பு வழங்கியுள்ளது[8]. கோயில் நிர்வாகங்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி இருக்கும் நிலையில் கோயிலை மீண்டும் கோயில் டிரஸ்ட் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[9]. இது தொடர்பாக, அறநிலைய அதிகாரிகள், “இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது,” என்கிறார்கள்[10].
2023ல்நேர்த்திக்கடனாககொடுக்கப்பட்டஎருமைக்கன்றுகளைகாணவில்லைஎன்றுஒரூவர்கேள்விஎழுப்பியது!: இந்து சமய அறநிலையத் துறையானது தன்வசம் வைத்திருக்கும் ஆலயத்தை மீண்டும் பரம்பரை அறங்காவலர்களிடம் நான்கு வாரத்திற்குள் ஒப்படைப்பு செய்து[11], இத்திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களே நிர்வகிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 03 அன்று உத்தரவிட்டு, அந்த உத்தரவினை மனுதாரருக்கு டிசம்பர் 01 அன்று கொடுக்கப்பட்டுள்ளது[12]. நீதி தேவதை வழங்கிய உத்தரவின்படி, குச்சனூர் திருக்கோயிலில் பொறுப்பேற்க இருக்கும் பரம்பரை அறங்காவலர்களே!!! நீங்களாவது இந்த திருக்கோயிலுக்கு கடந்த 10 வருடங்களாக பக்தர்களால் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட எருமைக்கன்றுகளை காணவில்லை??? இந்த மாடுகள் உண்மையிலேயேஇருக்கின்றதா? இல்லை இதற்கு வேறு எந்த விதமான பதிலும் வைத்து உள்ளீர்களா!!! ஆகவே உடனடியாக இந்த மாடுகளை கண்டுபிடித்து தர வேண்டும்??? என்று பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர்???[13] அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர் – அ.ந.வீரசிகாமணி[14].
2023ல்அறநிலையத்துறையிலிருந்துவிடுபட்டது: இந்தத் தீர்ப்பினை அமல்படுத்தி கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என கூறி இந்து சமய அறநிலைத்துறையினர் அலுவலகத்தை அறங்காவலர் குடும்பத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை செயல் அலுவலரிடம் வழங்கிவிட்டு நாங்கள் பொறுப்பேற்க இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தரவினை பெறுவதற்கு இந்து சமய அறநிலையதுறை செயல் அலுவலர் மறுப்பு தெரிவித்து நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செய்திருப்பதாக தகவல் கூறி வாங்க மறுத்தார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை சுவரில் ஒட்டினார்கள். அப்போது அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை சுவரிலிருந்து கிழித்து எரிந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவினை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடுவதாக கூறி அறங்காவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் இரண்டு மணி நேரமாக நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
[7] தமிழ்.சமயம், குச்சனூர்சனிபகவான்கோவிலில்பரபரப்பு! அறங்காவலர்கள், இந்துஅறநிலையத்துறைஅதிகாரிகள்கடும்வாக்குவாதம்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 29 Dec 2023, 5:11 pm.
[13] ஐமம்.மீடியா, கடந்தபத்துஆண்டுகளில்குச்சனூர்கோயிலுக்குபக்தர்களால்வழங்கப்பட்டஎருமைக்கன்றுகள்எங்கே??? எங்கே ???, A N Veerasigamani , Theni, Tamil Nadu (TN) 08/12/2023 08:49 AM
சனி–சனீஸ்வரன்–சனி–பகவான்என்றுமாறிவரும்நிலை: சமீப காலத்தில் சனி படுத்தும் பாடு அதிகமாகவே இருக்கிஅரது போலும், ஏனெனில், எங்கெல்லாம் சனீஸ்வரன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கூட திருநள்ளாரில் சனீஸ்வரனை வழிபடுவதற்காக வரும் கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. ஆனால் பிறகு திடீரென்று கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் சனீஸ்வரன் சிற்பமாக இருந்த நிலையிலிருந்து விக்கிரமாக மாற்றப்பட்டு, அதற்கு தனி சன்னதியும் கட்டப்பட்டு அதுவே தனியான கோவில் போன்று பக்தர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப் பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த தனி கோவில் அல்லது பிரகாரம் என்பது விரிவுபடுத்திக் கொண்டே வருவதையும் கவனிக்கிறோம். உண்மையில் அது ஒரு பிரத்தியேகமான சிவன் கோவிலாகும். ஆனால் இப்பொழுது எல்லாம் சிவனை கூட வழிபடாமல் இது ஏதோ பிரயோகமான சனீஸ்வரன் கோவில் என்று நினைத்துக் கொண்டு சனீஸ்வரனை மட்டும் வழிபட்டு சென்று விடுகிறார்கள். இப்படியாகப் சனி “சனீஸ்வரனாகி” விட்டான் – விட்டார்.
நவகிரகக்ஷேத்திரம், சுற்றுலா, வணிகமயமாக்கல்: நவகிரக க்ஷேத்திரம் என்ற ஒரு புதிய முறையை உண்டாக்கி அதன்படி 9 கிரகங்கள் குடிகொண்டுள்ள கோவில்களுக்கு தீர்த்த யாத்திரையாக சென்று வருவது அறிமுக செய்யப்பட்டது. இதன் மூலமாக கார், வேன், பஸ் முதலியவற்றை வைத்திருக்கும் சுற்றுலா வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு ஏற்றபடி அந்த ஸ்தலங்களும் நாளுக்கு நாள் பெரிதாக்கப்பட்டன ஒவ்வொரு புதிதாக ஸ்தலத்திற்கும், புராணம் போன்ற கதைகளும் உருவாக்கப்பட்டன. பிறகு அந்தந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால். இந்த பலன்கள் கிடைக்கும் என்றும் விவரங்கள் சொல்லப்பட்டன. இதற்கு ஜோதிடர்களும் புதிய-புதிய பரிகாரங்கள், பலன்கள் தீர்க்கும் முறைகள் முதலியவற்றை புதியதாக உண்டாக்கி அறிமுகப்படுத்தினர். இவ்வாறு ஒரு நிலையில் கவனிக்கும் பொழுது, இத்தகைய பக்தர்களின் நம்பிக்கைகள் கூட எவ்வாறு வணிகமயமாக்கப்படுகிறது என்பதனை கவனிக்கலாம்.
புதியசனீஸ்வரன்கோவில்கள்உருவாக்கல்: அது மட்டுமல்ல, புதிய சனீஸ்வரன் கோவில்களையும் உண்டாக்கலாம் என்ற திட்டமும் துவங்கியது போலிருக்கிறது. அதாவது திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரன் சன்னதியானது அல்லது அது ஒரு சிவன் கோவிலின் பகுதி என்று இருப்பதனால் சனீஸ்வரனுக்கு மற்ற இடங்களில் பிரகாரங்களுடன் சன்னதிகள் உள்ளன – இல்லை, தனியான கோவில்கள் உள்ளன என்பது போன்ற கருத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றபடி தெற்கில் இருக்கின்ற திருநள்ளாறு கோவிலுக்கு எதிராக அதாவது வடக்கில் ஒரு கோவிலை ஆரம்பித்து அதை வடத்திருநள்ளார் என்றும் கூற ஆரம்பித்தார்கள். அதாவது தெற்கில் இருக்கும் அந்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுமானால், வடக்கில் இருக்கும் மற்ற சனீஸ்வரர் கோவில் வட-திருநள்ளார் என்றும் சொல்லி குறிப்பிடலாம் என்ற திட்டத்தை அமல் படுத்துகிறார்கள் போலும். இருப்பினும் புதிய-திருநள்ளார் கோவில், திருநள்ளாறு கோவில் போன்று பிரசித்தி அடைய முடியவில்லை. ஏனெனில் இக்காலங்களில் புதிதாக கட்டப்படுகின்ற இந்த கோவில்கள் எனது மிகச் சிறியவையாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும், நகருக்குள், ஒரு கோவில் கட்டுவது என்பது மிகக் கடினமானது. திருநள்ளாறு போன்று அத்தகைய பரந்த அளவில் இடமும் கிடைக்காது. அதிலும், பெரிய கோவிலை கட்டுவது என்பதும் சாத்தியமாகாது. அதனால் அந்த புதிதாக உருவாக்கப்படும் சனீஸ்வரன் கோவில் என்பது மிகச் சிறியதாக இருக்கிறது. அந்த அளவில் தான் கோவில்கள் நகருக்கு மத்தியில் அல்லது வீடு பல வீடுகள் இருக்கும் பொழுது அந்த வீடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு தெருவில் சில இடம் கிடைத்தது என்றால் அதனை சனீஸ்வரன் கோவிலாக மாற்றும் முறை நடந்து வருகிறது.
தனியாகசனீஸ்வரன்கோவில்சந்நிதி, கோவில்உருவாகும்முறை: இவ்வாறுதான், இப்பொழுது புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கி வருகின்றன. ஆகவே அந்த கோவில்களுக்கு சென்று பார்த்தால், எப்படி மிக சமீப காலத்தில் அதாவது ஒரு 20-30-40-50 ஆண்டுகளில் அவை மாற்றப்பட்டு, அவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதனை எளிதாக தெரிந்து கொள்ளலாம். திருக்காட்டுப்பள்ளியில் கூட, இவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது முந்தைய ஒரு பதிவில் எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது. அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கோவிலின் மூலையில் தனியாக பிரதிஸ்டை செய்யப்பட்டு அது சன்னிதியாக மாற்றப்பட்டு சனீஸ்வரன் கோவில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிரதானமாக இருப்பது லிங்கம் தான் அதாவது மூலவர் லிங்கம், சிவன் கோவில் தான் உள்ளது. சனீஸ்வரன் சன்னிதி சிறியாதாகயிருக்கிறது. அத்துடன் மீதி அந்த எட்டு கிரகங்களும் தனியாக, “ப” வடிவத்தில், ஒரு சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தனியாக எடுத்து வைத்து அதனை ஒரு சன்னிதியாக மாற்றி பிறகு, சில வருடங்களிலேயே அது ஏதோ சனீஸ்வரர், பிரத்தியேக சனீஸ்வரன் கோவில் போல உருவாக்கப்பட்டுள்லது. இப்பொழுது பொங்கு-சனீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் எல்லாம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
சனி, ஏழரைசனிமுதலியன: நவகிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் இங்கு நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது. ஏழரை சனி திசை காலத்தை அல்லது சனி திசையின் காலத்தை குறைக்கும் வல்லமைகொண்ட, ஆலயமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது.
தினகரன்மான்மியம்சொல்லும்குச்சனூர்சனீஸ்வரன்புராணம்: தினகரன் மான்மியம் இவ்விவரங்களைக் கொடுக்கின்றன என்று பக்தி ரீதியில் கொடுக்கப் பட்டுள்ளன. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோவில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. தினகரன் மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்கு பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.
குச்சனூர்சனிகோவில்பலன்உண்டானவிதம்: அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் ‘உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார்.
ஸ்ரீவீரபத்ரசுவாமிகோவில்கொத்தவால்சாவடியில், ஆதியப்பாதெருமற்றும்கோவிந்தப்பாநாயக்கர்தெருசந்திப்பில்உள்ளது: தீபாவளி நேரத்தில் “டவுன்” எனப்படும் “பாரீஸ் கார்னரில்” கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். மற்ற இடங்களை விட, இங்கு கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர-சாதாரண மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, அப்படியே பஸ்-டிரைன் என்று ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் செல்வர். அதனால், மூன்று நாட்கள் விடுமுறை என்ற நிலையில் வெள்ளிக் கிழமை 10-11-2023 அன்று அனைவரும் சந்தோசமாக, கடைகளுக்குச் சென்று வந்தனர். பொருட்களை வாங்கி வந்தனர். அந்நிலையில் தான், இந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியான கொத்தவால்சாவடியில், ஆதியப்பா தெரு மற்றும் கோவிந்தப்பா நாயக்கர் தெரு சந்திப்பில், ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், சென்னை உயர் நீதிமன்றம் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அர்ச்சகர்களாக வெங்கட சுப்பிரமணிய அய்யர் உட்பட மூன்று பேர் பணிபுரிகின்றனர். 10-11-2023 அன்று காலை 7:00 மணிக்கு கோவிலை திறந்து, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு, அர்ச்சகர்கள் அலங்காரம் செய்தனர்.
பெட்ரோல்குண்டுடன்வந்தபக்தர்!: இந்த நிலையில், 8:45 மணிக்கு அங்குள்ள டீ கடைக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர், திரியுடன் பீர் பாட்டில் வைத்திருந்தார். அதில், பெட்ரோல் நிரப்பி இருந்தார். இதை பார்த்ததும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில், அந்த நபர் கோவில் கருவறைக்குள் புகுந்து, ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை’ என, ஆவேசமாக கத்தியபடி, சுவாமி சிலை மீது பெட்ரோல் பாட்டில் குண்டில் தீ வைத்து வீசினார். அது, சுவாமி சிலைக்கு பக்கத்தில் விழுந்து, பலத்த சத்தத்துடன் வெடித்தது. பட்டப் பகலில் பலர் பார்க்கும் நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. தீ பற்றி எரிந்ததால், பக்தர்கள் அலறியடித்து கோவிலில் இருந்து வெளியேறினர். அர்ச்சகர்களும், உயிர் பயத்தில் செய்வதறியாது தவித்தனர். சுவாமி சிலைக்கு தீ பரவாமல் இருக்க, குண்டு வீசப்பட்ட இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடங்களில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பெட்ரோல்குண்டுவெடிப்புப்பற்றிவித–விதமானசெய்திகள்: சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது[1]. கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்[2]. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். இன்னொரு செய்தியில், “8:45 மணிக்குஅங்குள்ளடீகடைக்குகுடிபோதையில்வந்தமர்மநபர், திரியுடன்பீர்பாட்டில்வைத்திருந்தார். அதில், பெட்ரோல்நிரப்பிஇருந்தார். இதைபார்த்ததும்கடைக்காரர்கள்அதிர்ச்சியடைந்தனர்,” என்றுள்ளது. அதாவது, பலர் பார்த்துள்ளனர் என்றாகிறது. அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது[3]. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்[4]. மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன[5]. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, கோயிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது[6]. அவர் யார்… எதற்காக வீசினார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின[7].
முதலில்போலீஸார்விசாரித்துவருகிறோம், விசாரணைமுடிந்தபின்புவிவரங்கள்சென்னைகாவல்துறைமூலமாகவெளியிடப்படும்என்றுஅறிவித்தது: இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “பெட்ரோல்குண்டைவீசியவர்கோயில்அருகேகடைநடத்திவரும்முரளிகிருஷ்ணாஎன்பதுதெரியவந்தது. உடனடியாகஅவரைப்பிடித்துவிசாரித்தபோது, `கடந்தசிலஆண்டுகளாகஇந்தக்கோயிலுக்குவந்துசாமிகும்பிட்டுவருகிறேன். ஆனால்சாமிஎனக்குஎதுவும்செய்யவில்லை. அந்தவிரக்தியில்தான்கோயிலில்பெட்ரோல்குண்டைவீசினேன்‘ என்றுதெரிவித்தார். தொடர்ந்துஅவரிடம்விசாரித்துவருகிறோம்[8]. சம்பவத்தின்போதுமுரளிகிருஷ்ணாபோதையில்இருந்ததாகத்தெரிகிறது[9]. அவர்மீதுமூன்றுபிரிவுகளின்கீழ்வழக்குபதிவுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப்பிறகுமுரளிகிருஷ்ணாவைநீதிமன்றத்தில்ஆஜர்படுத்தவிருக்கிறோம்,” எனத் தெரிவித்தனர்[10]. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கோவிலுக்குள் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக பதிலளித்த அவர்[11], ” சென்னைகொத்தவால்சாவடிபகுதியில்கோவிலுக்குள்பெட்ரோல்வெடிகுண்டுவீசியசம்பவம்தொடர்பாகவிசாரணைநடைபெற்றுவருவதாகவும், விசாரணைமுடிந்தபின்புவிவரங்கள்சென்னைகாவல்துறைமூலமாகவெளியிடப்படும்” எனவும் தெரிவித்தார்[12].
பெட்ரோல்குண்டுபோட்டவன்ஜார்ஜ்–ஷீட்டர்–தொடர்குற்றவாளி: விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை எம்.கே.பி., நகர், 17வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 39 என்பதும், அவர் தற்போது, ஏழு கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவர், காவல் துறையின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். கொத்தவால்சாவடி, எம்.கே.பி., நகர், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி என, ஒன்பது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஒருவர், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் உள்ள கோவில் கருவறைக்குள் புகுந்து, பெட்ரோல் குண்டு வீசி அட்டூழியம் செய்திருப்பது, பக்தர்கள் மற்றும் அர்ச்சர்களின் உயிருக்குமான பாதுகாப்பில் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.
முரளிகிருஷ்ணன், போலீசாரிடம்அளித்துள்ளவாக்குமூலம்[13]: “ஸ்ரீவீரபத்ரசுவாமிகோவில்அருகே, ‘ஜி.கே.டிரேடர்ஸ்‘ எனும்பெயரில், முந்திரிவியாபாரம்செய்துவருகிறேன். தொழில்பெரும்நஷ்டம்ஏற்பட்டது. ரவுடிதொழில்ஓரளவுகைகொடுத்தது. கொஞ்சம்கடன்தொல்லையும்உள்ளது. இந்தகோவிலுக்குநான்குஆண்டுகளாகசென்றுவருகிறேன். சுவாமிஎனக்குஎதுவும்செய்யவில்லை. அதனால், பெட்ரோல்குண்டுவீசினேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்[14]. சரி, கொலை வழக்கு, ரவுடியிஸம், கைது, ஜெயில் எல்லாவற்றிற்கும் சாமி தான் அனுமதி கொடுத்ததா? இப்பொழுது கைவிட்ட்தா? இது போன்று வாக்குமூலம் கொடுக்கப் பட்டது என்றெல்லாம் செய்திகளாக வெளிவருவதே கேடிக்கையாக இருக்கிறது[15]. “கொலைவழக்கில்ஜெயிலுக்குபோவாராம்…..சாமிவரம்கொடுக்கலைன்னுபெட்ரோல்பாம்வீசுவாராம்……!.” என்று பாலிமர்.டிவி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமாகத்தான் இருக்கிறது[16]. நான்கு ஆண்டுகளாக குற்றங்கள் செய்து வருவதும், சாமி கும்பிடுவதும் எதனைக் காட்டுகிறது என்றும் ஆராய வேண்டியுள்ளது.
[1] தினமணி, ‘கடவுள்கைவிட்டதால்‘ கோயிலுக்குள்பெட்ரோல்குண்டுவீசியவர்சிக்கினார்!, By DIN | Published On : 10th November 2023 01:32 PM | Last Updated : 10th November 2023 01:32 PM |
[11] தமிழ்.நியூஸ்.18, கோவிலுக்குள்பெட்ரோல்வெடிகுண்டுவீசியசம்பவம் : சென்னைகாவல்ஆணையர்விளக்கம், FIRST PUBLISHED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST; LAST UPDATED : NOVEMBER 10, 2023, 5:56 PM IST.
மதபோதகர்மீதுவழக்கு: 13-10-2023 அன்றைய இந்துக்களின் கூட்டம் அரசுக்கு தெளிவான சமிஞையை அனுப்பியுள்ளது. ஆமாம், இந்துக்கள் விழித்துக் கொன்டு விட்டார்கள், இனி அவர்கள் திரண்டு எதிர்த்தால், மற்றவர்கள் தாங்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டு விட்டனர் என்றே தோன்றுகிறது. மேலும் இந்துக்களை கைது செய்து விட்டு, கிருத்துவர்களை கைது செய்யாமல் இருப்பது, வெளிப்படையான பாரபட்சத்தினையும் வெளிப்படுத்தியது. இதனால், அரசு கிருத்துவர்களையும் கைது செய்து தனது செக்யூலரிஸத்தை மெய்பிக்க முயன்றது போலும். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதி சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய இருவர் மீதும் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் இருவரையும் தேடிவந்தனர்[1]. தேடும் அளவுக்கு அவர்கள் என்ன அந்த அளவுக்கு பெரிய குற்றவாளிகளா அல்லது “நீ ஒளிந்து கொள், நாங்கள் தேடுவது போல தேடி பிடிக்கிறோம்,” என்றார்களோ என்று தெரியவில்லை.
18-10-2023 சேகர்பாபுவின்களஆய்வு: அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கோவில் திருப்பணிகள் குறித்து இன்று (அக். 18) ஆய்வு செய்தனர்[2]. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்ற சரவணன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது, மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்[3]யொருவழியாக அவர்கள் செய்த குற்றம் மற்றும் சட்டப் பிரிவுகளைக் கண்டு பிடித்து விட்டனர் போலும். ஆனால், இருவரும் தலைமறைவாகினர்[4]என்ற செய்தியும் வந்தது. அந்த அளவுக்கு எல்லாமே வேக-வேகமாக நடக்கிறது போலும். இத்தகைய நடவடிக்கை முன்னரே எடுத்திருந்தால், எல்லாவற்றையும் நடக்காமல் பார்த்திருக்கலாமே? பிறகு, “தும்பை விட்டு, வாலைப் பிடிக்கும்” நடவடிக்கை ஏன்? இங்கும் “மைனாரிட்டி” வேலை செய்ததா? போலீசார் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டது[5]. இருப்பினும், தனிப்படை அமைக்கப் பட்டது போன்ற செய்திகள் வெளிவரவில்லை.
அல்லேலுயாகோஷமிட்டசேகர்பாபுவின்பேட்டி: இதில், ஜோசப் என்ற சரவணனை சென்னையில் செங்கல்பட்டில் கைது செய்த போலீஸார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்[6]. மேலும், ஸ்டீபன் என்பவரைத் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் ஒளிந்து கொண்டிருப்பதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில், சென்னிமலையில் 18-10-2023 அன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது[7]: “அனைத்துமதத்தினரும்சுதந்திரமாகவும், பாதுகாப்புடன்வழிபாடுமேற்கொள்ளவேண்டும்என்றநோக்கில்தான்அரசுசெயல்படுகிறது[8]. மற்றொருமதத்தினரைஅவதூறாகப்பேசுபவர்கள்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கப்படும்[9]. சர்ச்சைக்குரியவகையில்பேசியசரவணன்என்பவர்கைதுசெய்யப்பட்டுள்ளார்[10]. வழக்கில்தொடர்புடையமற்றொருவரும் [வெள்ளக்கோவிலைச்சேர்ந்தபாதிரி] கைதுசெய்யப்படுவார்[11]. சென்னிமலைசர்ச்சையில்அமைதியைநிலைநாட்டும்வகையில்வரும் 20-ம்தேதி (நாளை) ஈரோடுஆர்டிஓதலைமையில்முத்தரப்புபேச்சுவார்த்தைநடைபெறஉள்ளது,” இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்[12].
திராவிடத்துவவாதிகள் நடுநிலையாக இருப்பார்களா?: சட்டப் படி கைது என்றால் நடவடிக்கை தொடர வேண்டுமா இல்லை ஏதாவது மத்தியஸ்தம் செய்து வைக்கப் போகிறார்களா? திராவிடத்துவ வாதிகள் யாராக இருந்தாலும், இந்துக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நடுநிலையாக இருந்தாலே போதும். ஆனால், முதலமைச்சர் முதல், இந்து அறநிலைய அமைச்சர் வரை, மற்ற திக-திமுக கருப்புப் பரிவாரங்கள் எல்லாமே, இந்துவிரோதமாகத்தான் செயல் பட்டு வந்துள்ளன. பிறகு, இந்துக்களுக்கு எப்படி நீதி, நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மறுபடியும் “சனாதன ஒழிப்பு” மாநாடு நடக்காமல் இருக்குமா, இந்து அறநிலைய அமைச்சர் அங்கு இல்லாமல் போவாரா அல்லது அல்லேலுயா என்று அவர் கூவாமல் இருப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் உத்திரவாதமும் கொடுக்க முடியாது. இப்பொழுது இவர் யாருக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை. முன்னர் அல்லேலுயா என்று கோஷம் போட்டு, பிறகு “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் கலந்து கொண்டு, இப்பொழுது, இவ்வாறு பேசுவதும் திகைப்பாக இருக்கிறது.
[1] ஜீ.நியூஸ், கிறிஸ்துவஅமைப்புநிர்வாகிகைது… பாதிரியாருக்குவலைவீச்சு… சேகர்பாபுதகவல் – பின்னணிஎன்ன?, Written by – Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 05:55 PM IST.
[3] தினமணி, சென்னிமலைகுறித்துகருத்துதெரிவித்தகிறிஸ்தவஅமைப்பின்நிர்வாகிகைது, By DIN | Published On : 19th October 2023 01:19 AM | Last Updated : 19th October 2023 01:19 AM
[7] தமிழ்.இந்து, சென்னிமலைமுருகன்கோயில்விவகாரம்: சர்ச்சைக்குரியவகையில்பேசியவர்கைது, செய்திப்பிரிவு; Published : 19 Oct 2023 05:43 AM; Last Updated : 19 Oct 2023 05:43 AM.
பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?
பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!
திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.
இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.
நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.
நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.
ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான், மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில்கொலு.. மயிலாப்பூரில்சக்தியைபார்த்துபூரித்துப்போனதுர்காஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].
[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில்நவராத்திரிகோலாகலம்.. 10 நாட்கள்கொலுவைத்துகொண்டாடும்இந்துசமயஅறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].