Archive for the ‘சேகர் பாபு’ Category

இந்து கோவில்கள் விவகாரங்களில் நாத்திக-திமுக அரசு அதிகமாக அக்கறைக் காட்டுகிறதா அல்லது தலையிட்டு குழப்புகிறதா?

மார்ச்15, 2024

இந்து கோவில்கள் விவகாரங்களில் நாத்திக-திமுக அரசு அதிகமாக அக்கறைக் காட்டுகிறதா அல்லது தலையிட்டு குழப்புகிறதா?

13-03-2024 – உழவாரப்பணியில் திமுக அமைச்சர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (13.03.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள், சலவைப் பொருட்கள் / தூய்மைப் பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், தூய்மையை பராமரித்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்ற புதிய திட்டங்களை கடந்த 33 மாதங்களில் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்படுத்துகின்ற மகத்தான முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

கோவில் விவகாரங்களில் திமுக-நாத்திக அரசியல்வாதிகளின் தலையீடு ஏன்?: 27-07-2021 முதல் உழவாரப்பணி பதிவு ஆரம்பிக்கப் பட்டது. அதிலிருந்து தொடர்ந்து, சேகர்பாபு அமைச்சர் கோவில் விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டுக் கொண்டு வருகிறார் என்று தெரிகிறது. தங்கநகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றுவது, பூஜைகளுக்கு கட்டுப்படுவது, சிறப்பு தரிசனங்கள் அன்னதானத் திட்டங்கள் என்று பல சாதாரணமாக தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளில் எல்லாமே ஏதோ, இவர் சொல்லித்தான் நடப்பது போல காட்டிக் கொண்டு வரும் போக்கும் தென்படுகிறது. குறிப்பாக தினம்-தினம் ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் என்று, கோவில் நிலம் மீட்கப்பட்டது, கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் வருவது போன்ற போக்கும் காணப்படுகிறது. இவை எல்லாம் சாதாரணமாக யார் ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொண்டுதான் இருக்கும் ஆகவே திமுகவினர் ஆட்சிக்கு வந்திருப்பதினால், தங்களது நாத்திக, கடவுள் நம்பிக்கை இல்லாத, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்துவிரோத பிம்பத்தை சரி செய்வதற்கு, இந்த துறையை உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது. இப்பொழுது, எல்லாமே ஸ்டாலின் சொல்லித் தான் செய்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

நடந்து வரும் உழவாரப் பணியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி: அடியார்களாலும், தன்னார்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற உழவாரப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட 5 திருக்கோயில்களுக்கு முதற்கட்டமாக உழவாரப்பணி மேற்கொள்வதற்குண்டான 12 வகையான உபகரணங்களை கட்டணமில்லாமல் வழங்குகின்றோம்[1]. உழவாரப்பணி முடிந்தவுடன் திரும்பவும் திருக்கோயிலிலேயே ஒப்படைத்து விட வேண்டும். உழவாரப் பணியில் ஈடுபடுகின்ற அன்பர்களுக்கு தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்றும், உழவாரப்பணி மேற்கொள்பவர்களுக்கு துறையின் சார்பில் அந்தந்த இணை ஆணையர்கள் மூலம் நற்சான்றிதழ் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்[2]. இறை நம்பிக்கையோடு செய்கின்ற, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை உள்ளத்தோடு ஆலயங்களை தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு இருக்கின்ற உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நிச்சயம் ஆண்டவனால் வழங்கப்படும்.

சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது: இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருக்கின்றவர், அரசியல்ரீதியில் பேசி வருவது தமாஷாக இருக்கிறது. சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அந்த வகையில் நம்முடைய உழவாரப்பணி என்பது தொன்று தொட்டு மக்கள் செய்து வருகின்ற பணி என்றாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்[3]. பல்லாண்டுகளாக நடந்து வரும் உழவாரப் பணியில், திடீரென்று இவர்களுக்கு இத்தனை ஆர்வம் வருவது திடுக்கிட வைக்கிறது. முதலில், இப்பணிக்கே கட்டுப் பாடு விதிக்கும் முறையில் நடந்து கொண்டது ஞாபகத்தில் இருக்கலாம். இப்பொழுதோ, அளவு கடந்து ஆசை வந்துள்ளது பயமாக இருக்கிறது. நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் சீத்தனஞ்சேரியில் 2022ம் ஆண்டு தங்களுடைய நூறாவது உழவார பணியை மேற்கொண்டனர்[4]. அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் என் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களுடைய பணி தொடர்ந்து அரக் கோணத்தில் ஏப்ரல் மாதம் 124வது உழவார பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை சாதனை பட்டியல்: ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை மீட்பதில் தனி முத்திரையை திராவிட மாடல் அரசு பதித்திருக்கிறது. இதற்காக 38 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு வட்டாட்சியர்களை பணிநியமனம் செய்திருக்கிறோம். இவர்கள் இதுவரை ₹5979 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளனர். குடமுழுக்கு என்று பார்த்தால் இதுவரை 1477 நடைபெற்றுள்ளன. ஆதிதிராவிடர் வசிக்கிற பகுதியில் 5000 கோயில்களுக்கு திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 2500 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருக்கோயில்களை பாதுகாக்கவும், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு 4000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி, இந்த திமுக அமைச்சர் கூறிக் கொண்டலும், சாதாரண மக்கள் நமொஉவதாக இல்லை.

திமுக இரும்பு மனிதர் ஆணை பெயரில் நடக்கிறதாம்: .4000 கோயில்களுக்கு தேவையான நிதி 70 கோடி ரூபாய் அரசே மானியமாக வழங்கி அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 16000 பேருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற ஒரே அரசு தமிழக அரசு. தமிழக அரசு வரலாற்றில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்தாலும் ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தி னாலும் எதற்கும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக. அதனுடைய தலைவர் இரும்பு மனிதர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருக்கோயில்களின் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்[5]. உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 2021 தொடங்கி தற்போது வரை 18,225 கோயில்களில் 36,554 உழவாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்[6]

14-03-2024 அன்று நீர்மோர் வழங்கும் திட்டம் ஆரம்பம்: வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்[7].. 14-03-2024 அன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது[8]. உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பழநியில், உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கானப் பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது[9]. ஸ்டாலின் சொல்லித்தான், இதையெல்லாம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டார்[10].

© வேதபிரகாஷ்

15-03-2024


[1] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு, March 13, 2024, 9:55 pm

[2] https://www.dinakaran.com/temples_tillagework_minister_shekharbabu/

[3] தினகரன், ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தினாலும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு, March 13, 2024, 3:05 pm.

[4] https://www.dinakaran.com/it_cbi_missiles_dmk_minister_shekharbabu/

[5] தினகரன், உழவாரப் பணி உபகரணங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார், March 13, 2024, 10:10 am.

[6] https://www.dinakaran.com/temple_servants_farmingequipment_ministershekharbabu/

[7] தமிழ்.இந்து, வெயில் தாக்கம் | முதல்கட்டமாக நாளை முதல் 48 கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 14 Mar 2024 01:22 PM; Last Updated : 14 Mar 2024 01:22 PM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1215252-free-buttermilk-for-devotees-in-48-temples-around-tn-from-tomorrow.html

[9] தினத்தந்தி, தமிழ்நாட்டில் 48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர்மோர்அமைச்சர் சேகர்பாபு தகவல், தினத்தந்தி மார்ச் 14, 3:51 pm (Updated: மார்ச் 14, 5:04 pm)

[10] https://www.dailythanthi.com/News/State/free-water-buttermilk-in-48-temples-in-tamil-nadu-from-tomorrow-minister-shekharbabu-informs-1097361

தருமபுரம் ஆதீனமடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (2)

இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றது: விகடன் இதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது – இது குறித்து வழக்கு விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் எனவும் கூறி சிலர் தருமபுரம் ஆதீனம் தரப்பை மிரட்டியிருக்கின்றனர். எனினும், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்கள்.

மஹாபாரத யுத்தம் தான் நடந்து கொண்டிருக்கிறது: இவையெல்லாம் நிச்சயமாக அரசுக்கும், மடத்திற்கும் உள்ளே தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. குற்றம், விதிமுறைகள் மீறல், சட்டங்கள் மீறல் என்றெல்லாம் வந்தால், நிச்சயமாக அத்தகைய சட்டத்தை மீறும் நபர்கள் உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம், மக்களின் கவனத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்தப் படுவதில்லை. சட்டாமீறல்களுக்கும் அவ்வாறே உரிய தண்டனைகள் கொடுப்பதில்லை, கிடைப்பதில்லை. இதனால், சட்டங்கள் பிழையாவதில்லை, ஆனால், தருமம் மதிக்கப் படாததால், அநியாயம் உச்சத்தில் செல்கிறது. அந்நிலையில், அத்தகைய அநியாயம், அராஜகம், அதர்மம் என்றே எல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுகிறவன் பைத்தியக் காரன் ஆகிறான். யாரும் அவனை மதிப்பதும் இல்லை. இதனால் தான், பலர், நமக்கெதற்கு வம்பு என்று அமையாகவும் இருந்து விடுகின்றனர். 

வழக்குப் பதிவு, கைது முதலியன: இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 323, 307, 389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28), ஆடுதுறை வினோத் (32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[1]. மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[2].

முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்து: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[3]. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[4]. அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, உடனடியான நடவடிக்கை – கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எப்படியென்றால், இதெல்லாம் ஏதோ சொல்லி வைத்தால் போல நடந்த விவகாரங்களா அல்லது அப்படியே அமுக்கி விடலாம் என்று தீர்மானித்து, அமுக்க முடியாமல் போனதால், நடந்தேறிய நிகழ்வுகளா என்பதெல்லாம் ஆண்டவன் தான் பிரகடனப் படுத்த வேண்டும்.. 

2018ல் திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் புகார்: `பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் குள நிலத்தடி நீரைக் காக்கவும் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணிகளை அரசின் அனுமதியோடு செய்து வருகிறோம்[5]. இந்தப் பணியைச் செய்ய விடாமல் உள்நோக்கத்துடன்  பி.ஜே.பி நகரத் தலைவர் ராஜு உள்ளிட்ட சமூக விரோதிகள் எங்களை மிரட்டுவதோடு, வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரபரப்புகின்றனர். மேலும், நேரிலேயே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர்  கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இப்பொழுதும், ஒரு பிஜேபி தலைவர் சம்பத்தப் பட்டுள்ளது தெரிகிறது. ஆக, இந்துமத்ததைக் காக்கிறோம் என்று சொல்கின்ற பிஜேபிகாரர்களும் இவ்வாறு மாறி விட்டனரா அல்லது திராவிடத்துவ வழியில் நடக்க முயற்சிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல், வானதி சீனிவாசன் வரை எங்களுக்கும், பெரியாருக்கும் சித்தாந்த ரீதியில் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டையும் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தலுக்காக சொன்னோம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது, அப்படியே நடந்துகொள்வது என்பது வேறு, அது முரண்பாடானது, பயங்கரமானதும் கூட.

ஆன்மீகக் கூட்டா, அரசியல் கூட்டா?: சாம-தான-தண்ட-பேத முறைகளில் கூட்டணி முயற்சிகள், பேரங்கள், வற்புருத்தல்கள் போன்றவையும் நடக்கலாம், நடத்தப் படலாம். அந்நிலையில், மதம் பந்தாடப் படுகிறது. மதத்தலைவர்கள் ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். தனித்திருக்கல்லாம், என்று ஒதுங்கியிருந்தாலும், ஏதோ ஒரு வழியில், முறையில், அவர்களும் இழுக்கப் படுகறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மடங்கள்-கோவில்களின் சொத்துக்கள் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் இருப்பதால், அவற்றை அனுபவிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்கார விவசாயிகள், போன்றவர்கள் தொடர்ந்து பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். ஆட்சி-அதிகாரம்-காலம் மாறும் பொழுது, அவ்வப்பொழுது, விசயம் வெளிவ்ரும் பொழுது, மற்றவர்களும் அதில் நுழைக்கின்றனர். அந்நிலையில் பங்கு போடும் நிலைக்கு வரும் பொழுது, புதிய சர்ச்சைகள், தகராறுகள், சண்டைகள் என்றெல்லாம் வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் சமரசம் ஆகவில்லை என்றால், அரங்கேறி விடுகிறது. ஆகவே, எது எப்படியாகிலும், மடங்கள் போற்றப் படவேண்டும். மடாதிபதிகளிம் கௌரவம் காப்பாற்றப் அடவேண்டும்.

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: தருமபுர ஆதீனத்தை மிரட்டிய பா.. பிரமுகர்; 4 பேர் கைது, Web Desk, 29 Feb 2024 12:55 IST

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-search-bjp-secretary-who-threats-dharumapuram-aadheenam-with-sexual-tape-release-4126860

[3] தினகரன், போலி வீடியோ தயாரித்து மிரட்டல்: முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி, February 29, 2024, 5:52 pm

[4] https://www.dinakaran.com/chief-minister-dharumapuram-atheenam-thank-you/

[5] விகடன், `பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்!’ – திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு, கே.குணசீலன், Published:17 Oct 2018 3 PM; Updated:17 Oct 2018 3 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/139957-thiruvavaduthurai-aadheenam-files-complaint-against-bjp-cadre

தொடரும் சென்னிமலை விவகாரம்–பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் கள-ஆய்வு, எட்டப்படும் முடிவு என்ன?

ஒக்ரோபர்20, 2023

தொடரும் சென்னிமலை விவகாரம் பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் களஆய்வு, எட்டப் படும் முடிவு என்ன?

மதபோதகர் மீது வழக்கு: 13-10-2023 அன்றைய இந்துக்களின் கூட்டம் அரசுக்கு தெளிவான சமிஞையை அனுப்பியுள்ளது. ஆமாம், இந்துக்கள் விழித்துக் கொன்டு விட்டார்கள், இனி அவர்கள் திரண்டு எதிர்த்தால், மற்றவர்கள் தாங்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டு விட்டனர் என்றே தோன்றுகிறது. மேலும் இந்துக்களை கைது செய்து விட்டு, கிருத்துவர்களை கைது செய்யாமல் இருப்பது, வெளிப்படையான பாரபட்சத்தினையும் வெளிப்படுத்தியது. இதனால், அரசு கிருத்துவர்களையும் கைது செய்து தனது செக்யூலரிஸத்தை மெய்பிக்க முயன்றது போலும். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதி சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய இருவர் மீதும் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் இருவரையும் தேடிவந்தனர்[1]. தேடும் அளவுக்கு அவர்கள் என்ன அந்த அளவுக்கு பெரிய குற்றவாளிகளா அல்லது “நீ ஒளிந்து கொள், நாங்கள் தேடுவது போல தேடி பிடிக்கிறோம்,” என்றார்களோ என்று தெரியவில்லை.

18-10-2023 சேகர் பாபுவின் கள ஆய்வு: அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கோவில் திருப்பணிகள் குறித்து இன்று (அக். 18) ஆய்வு செய்தனர்[2]. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்ற சரவணன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது, மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்[3]யொருவழியாக அவர்கள் செய்த குற்றம் மற்றும் சட்டப் பிரிவுகளைக் கண்டு பிடித்து விட்டனர் போலும். ஆனால், இருவரும் தலைமறைவாகினர்[4]என்ற செய்தியும் வந்தது. அந்த அளவுக்கு  எல்லாமே வேக-வேகமாக நடக்கிறது போலும். இத்தகைய நடவடிக்கை முன்னரே எடுத்திருந்தால், எல்லாவற்றையும் நடக்காமல் பார்த்திருக்கலாமே? பிறகு, “தும்பை விட்டு, வாலைப் பிடிக்கும்” நடவடிக்கை ஏன்? இங்கும் “மைனாரிட்டி” வேலை செய்ததா? போலீசார் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டது[5]. இருப்பினும், தனிப்படை அமைக்கப் பட்டது போன்ற செய்திகள் வெளிவரவில்லை.

அல்லேலுயா கோஷமிட்ட சேகர் பாபுவின் பேட்டி: இதில், ஜோசப் என்ற சரவணனை சென்னையில் செங்கல்பட்டில் கைது செய்த போலீஸார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்[6]. மேலும், ஸ்டீபன் என்பவரைத் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் ஒளிந்து கொண்டிருப்பதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில், சென்னிமலையில் 18-10-2023 அன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது[7]: “அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடன் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அரசு செயல்படுகிறது[8]. மற்றொரு மதத்தினரை அவதூறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[9]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[10]. வழக்கில் தொடர்புடைய மற்றொருவரும் [வெள்ளக் கோவிலைச் சேர்ந்த பாதிரி] கைது செய்யப்படுவார்[11]. சென்னிமலை சர்ச்சையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வரும் 20-ம் தேதி (நாளை) ஈரோடு ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது,” இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்[12].

திராவிடத்துவவாதிகள் நடுநிலையாக இருப்பார்களா?: சட்டப் படி கைது என்றால் நடவடிக்கை தொடர வேண்டுமா இல்லை ஏதாவது மத்தியஸ்தம் செய்து வைக்கப் போகிறார்களா? திராவிடத்துவ வாதிகள் யாராக இருந்தாலும், இந்துக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நடுநிலையாக இருந்தாலே போதும். ஆனால், முதலமைச்சர் முதல், இந்து அறநிலைய அமைச்சர் வரை, மற்ற திக-திமுக கருப்புப் பரிவாரங்கள் எல்லாமே, இந்துவிரோதமாகத்தான் செயல் பட்டு வந்துள்ளன. பிறகு, இந்துக்களுக்கு எப்படி நீதி, நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மறுபடியும் “சனாதன ஒழிப்பு” மாநாடு நடக்காமல் இருக்குமா, இந்து அறநிலைய அமைச்சர் அங்கு இல்லாமல் போவாரா அல்லது அல்லேலுயா என்று அவர் கூவாமல் இருப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் உத்திரவாதமும் கொடுக்க முடியாது. இப்பொழுது இவர் யாருக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை. முன்னர் அல்லேலுயா என்று கோஷம் போட்டு, பிறகு “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் கலந்து கொண்டு, இப்பொழுது, இவ்வாறு பேசுவதும் திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

18-10-2023


[1] ஜீ.நியூஸ், கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைதுபாதிரியாருக்கு வலைவீச்சுசேகர்பாபு தகவல்பின்னணி என்ன?, Written by – Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 05:55 PM IST.

[2] https://zeenews.india.com/tamil/tamil-nadu/christian-organization-administrator-arrested-in-erode-said-by-minister-sekar-babu-check-reason-here-468489

[3] தினமணி, சென்னிமலை குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி கைது, By DIN  |   Published On : 19th October 2023 01:19 AM  |   Last Updated : 19th October 2023 01:19 AM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2023/oct/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4092472.html

[5]  தமிழ்.ஒன்.இந்தியா, சென்னிமலையைஏசுமலையாக மாற்றுவோம்– ‘சர்ச்சை பேச்சுசரவணன் ஜோசப் அதிரடி கைதுதூக்கியது போலீஸ்! By Mathivanan Maran Published: Wednesday, October 18, 2023, 19:24 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chennimalai-name-row-christian-munnani-leader-sarvanan-joseph-arrested-by-police-549445.html

[7] தமிழ்.இந்து,  சென்னிமலை முருகன் கோயில் விவகாரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது, செய்திப்பிரிவு; Published : 19 Oct 2023 05:43 AM; Last Updated : 19 Oct 2023 05:43 AM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1141398-controversial-speaker-on-chennimalai-murugan-temple-issue-arrested.html

[9] 360-செய்தி, சென்னிமலை பெயரை மாற்றுவோம்சர்ச்சை பேச்சால் கிறிஸ்துவ முன்னணி தலைவர் கைது!!, Author: Udayachandran RadhaKrishnan, 18 October 2023, 9:14 pm.

[10] https://www.updatenews360.com/tamilnadu/lets-change-the-name-of-chennimalai-christian-front-leader-arrested-for-controversial-speech-181023/

[11] தமிழ்.நியூஸ்.18, சென்னிமலை முருகன் கோவிலை கிறித்தவ மலையாக மாற்றுவோம் என பேசிய சரவணன் ஜோசப் கைது!, LAST UPDATED : OCTOBER 19, 2023, 12:58 PM IST.

[12] https://tamil.news18.com/erode/chennimalai-police-arrested-a-christian-munnani-functionary-for-trying-to-incite-communal-violence-1200206.html

தொடரும் சென்னிமலை விவகாரம்–பாதிரியின் மன்னிப்பு, அல்லேலுயா மந்திரியின் கள-ஆய்வு, எட்டப்படும் முடிவு என்ன?

ஒக்ரோபர்20, 2023

தொடரும் சென்னிமலை விவகாரம் பாதிரியின் மன்னிப்பு, அல்லேலுயா மந்திரியின் களஆய்வு, எட்டப் படும் முடிவு என்ன?

ஜோசப் என்கிற சரவணன் கைது: சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது ஜோசப் செங்கல்பட்டில் 18-10-2023 அன்று  செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவருகின்றன. “ஜோசப் என்கிற சரவணன்” என்று ஊடகங்கள் குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும். அப்படியென்றால், இந்து பெயர்களில் கிருத்துவர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். இது “உள்-கலாச்சாரமயமாக்கல்” திட்டமா அல்லது, புதியதாக வேறொரு திட்டத்தை வகுத்துள்ளனரா என்று தெரியவில்லை. ஏற்கெனவே எஸ்.சிக்கள் கிருத்துவ மதம் மாறியும், சலுகைக்காக இந்துவாகவே வேடமிட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் இப்படி புதுப் பிரச்சினையைக் கிளப்புகின்றனர் போலும். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது[2]. முன்பே குறிப்பிட்டப் படி, இதுவும் ஒரு திட்டமாகவே செயல்பட்டு வருகிறது. முதலில் வீட்டில் நடத்துகிறேன் என்று ஆரமித்து, பிறகு, வீடு சர்ச்சாக மாறிவிடுகிறது. பிரச்சினைகளும் ஆரம்பித்து விடுகின்றன.

17-09-2023 வீட்டில் செய்த ஜெபமும், மோதலும்: கடந்த செப்.,17ம் தேதி ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர்[3]. அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்[4]. கடந்த மாதம் 17-ம் தேதி 17-09-2023 அன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கிறிஸ்தவ மத போதகர் ஜான் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில், 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, சின்னசாமி, கோகுல் ஆகியோரைக் கைது செய்தனர். இதற்கே சில அரசியல் கட்சிதலைவர்கள் சிறுபான்மையினர் தாக்கப் பட்டனர், அவர்களது உரிமைகள் பறிக்கப் படுகின்றன என்றெல்லாம் அறிக்கை விட ஆரம்பித்தனர். இந்நிலையில், ஜான் பீட்டரை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கிறிஸ்தவ முன்னணி சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிலர், சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது.

25-09-2023 கிருத்துவர்களின் ஆர்பாட்டமும், இந்துவிரோத பேச்சும்: இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் பேசினார்[5]. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் கடந்த 13-ம் தேதி 13-10-2023 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்[6]. 25,000 என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில் கிருத்துவர்களுக்கு ஆதரவாக திக, மதிமுக, விசிக தலைவர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டனர். இருப்பினும், இந்துக்களின் எழுச்சி நன்றாகவே உணரப் பட்டது. ஆளும் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருத்துவர்களும் விசயம் பெரிதாகி விடாமல் பர்த்துக் கொள்ள இறங்கி விட்டனர். அது ஒரு பாதிரியரின் வெளிப்படையான மன்னிப்பு வீடியோ வெளிப்படுத்தியது.

பாதிரியாரின் மன்னிப்பு வீடியோ: பாதிரியார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் சென்னிமலை என்று சொல்லி ஒரு காரியம் குறித்து அனைத்து சேனல்களிலும் பார்க்கிறேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் வன்மைக்குரிய காரியம். அதை அவர்கள் செய்திருக்கவே கூடாது[7]. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் தவறான காரியம். அதை வன்மையாக கண்டிக்கிறேன்[8]. மற்றவர் வழிபடும் ஸ்தலத்திற்கு சென்று தான் நீங்கள் இயேசுவை பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேதத்தில் சொல்லவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாய் கருதுகின்றேன். ஆகவே, அப்படிப்பட்டவர்கள் மீது கட்டாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். “பிரிச்சி பாருங்க”.. முதல் விதையை “அங்கிட்டு” தூவிய எடப்பாடி பழனிசாமி.. பாஜகவை விட, குஷியில் திமுக அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் துணை போகின்றார்கள் என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட ஒரு சிலர் செய்யும் காரியத்தினால் மொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் தவறான பெயர் உண்டாகிறது என்பதில் எந்த விதமுமான சந்தேகமும் கிடையாது. கிறிஸ்தவ முன்னணினு சொல்றாங்க… அந்த கிறிஸ்தவ முன்னணி என்பதே எங்களுடைய கிறிஸ்தவர்களுக்கே தெரியாத ஒரு புதிய ஏதோ ஒரு காரியமாக இருக்கிறது. எங்களுக்கே அது என்ன வென்று தெரியவில்லை. அது தான் உண்மை. கிறிஸ்தவ முன்னணியில் உள்ளவர்களை கண்டிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது. வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வது போல் அறிகிறேன். இந்து மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய மனம் திறந்து, இந்த தவறான காரியம் குறித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பெயரால் ஏற்பட்ட இந்த ஒரு காரியத்திற்காக கிறிஸ்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேள்கிறேன். தயவு கூர்ந்து மன்னித்து கொள்ளுங்கள். நமக்குள் எந்த விரோதமும் வேண்டாம். வீணாக தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி வீணான காரியத்தை செய்து வருபவர்கள் மீது அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணியினர் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். அனைத்து கிறிஸ்தவர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் என்று கூறி மீண்டும் கையெடுத்து கும்பிட்டார். மீண்டும் உங்களை நாங்கள் சகோதரர்கள் சகோதரிகளாய் கேட்டு கொள்ள விரும்புகிறோம். நாம் எல்லாம் அனைவரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். மன்னித்து கொள்ளுங்கள். ஆகவே நம்மிடையே வேற்றுமைகள் வேண்டாம்[9]. மீண்டும் நான்ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். மன்னித்து கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் பாதிரியார் குணசேகரன் சாமுவேல் கூறியுள்ளார்[10].

அமைதி, சமரசத்தைப் போற்ற வேண்டும்: இப்பாதிரி எந்த டினாமினேஷனைச் சேர்ந்தவராக இருந்தாலும் இருக்கும் நிலைமையை சரிசெய்ய, அமைதிக்கு, சமரசத்திற்கு ஏற்றமுறையில் பேசியிருப்பதை கவனிக்கலாம். இத்தகைய அணுகுமுறை இருந்தால், நிச்சயமாக பிரச்சினை இல்லாமல் எல்லா நம்பிக்கையாளரும் அமைதியாக வாழலாம். இந்தியாவில் அப்படித்தான் ஆயிரக் கணக்கான வருடங்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும், இந்துக்கள் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் அனுசரித்து, பொறுமையாகத் தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே பொறுமைக்கும் எல்லை உண்டு என்று மற்றவர்களும் உணர வேண்டும். குட்ட-குட்ட குனிந்து கொண்டே இருக்க மாட்டார்கள், ஒரு நாள் தலை நிமிரவும், தடுக்கவும் செய்வார்கள். பிறகு, பதிலுக்குப் பதில் என்று கையை ஓங்கினால், நிலைமை மோசமாகி விடும். ஆகவே, எல்லோரும்க அமைதியாக அஹிம்சையைத் தான் பின் பற்ற வேண்டும். அது கோழைத்தனம் அல்ல, ஆனால், மிகப் பெரிய வலுவான ஆயுதமாகும்.

© வேதபிரகாஷ்

18-10-2023


[1] தினமலர், சென்னிமலை பெயரை மாற்றுவோம் என பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன்ஜோசப் கைது, மாற்றம் செய்த நாள்: அக் 18,2023 22:31.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3460756

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னிமலை முருகன் கோயிலைஇயேசு மலையாக மாற்றுவோம் என சர்ச்சை பேச்சு; கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது, Web Desk, Oct 19, 2023 18:31 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/christian-munnani-functionary-arrested-for-controversy-speech-chennimalai-murugan-mount-will-change-calvary-mount-1563783

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், சென்னிமலைக்கு கிறிஸ்தவ பெயர்! கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி கைது!, Kathiravan V • HT Tamil, Oct 18, 2023 05:47 PM IST

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/saravanan-joseph-who-said-he-was-going-to-change-the-name-of-chennimalai-was-arrested-131697630583238.html

[7] மீடியான்.காம், சென்னிமலை விவகாரம் வருத்தம் தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியார், Jansi Rani Tulasi Raman, அக்டோபர் 19, 2023, 6.30 pm.

[8] https://mediyaan.com/christian-priest-expressed-grief-over-chennimalai-issue/

[9] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னிமலையை ஜீசஸ் மலையாக்குவோம்.. கிளம்பிய சர்ச்சை.. கையெடுத்து கும்பிட்டு பாதிரியார் மன்னிப்பு, By Jeyalakshmi C Published: Tuesday, October 17, 2023, 17:46 [IST]

[10] https://tamil.oneindia.com/news/chennai/chennai-priest-apologizes-for-christians-to-rename-chennimalai-as-jesus-malai-549091.html?story=1

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு–கோவில் கையகப்படுத்த முடிவு முதலியன (2)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு கோவில் கையகப் படுத்த முடிவு முதலியன (2)

தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யா வாதத்தில் ஈடுபட்டது; சிதம்பரம்-கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்யும் பிரச்னையில், இரு கோஷ்டியினர் போராட்டம் நடத்தியதால், சிதம்பரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் புகாரின் பேரில், 25ம் தேதி அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யாவிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர். இந்த பெண் அதிகாரியும் திட்டமிட்டு பிரச்சினை பெரிதாக்க, தீக்ஷிதர்களுடன் வாதம் புரிவது ஈடியோ மூலம் தெரிகிறது. ஆனி மஞ்சன விழா நேரத்தில் அமைதியாக, கோவில் இருக்க வேண்டிய நிலையில் இவ்வாறாக, அமைதி குலைந்து, கோவிலில் ஏதோ நடந்து விட்டது போல கூச்சல், குழப்பம், போலீஸார் குவிப்பு என்றிருந்தால், பக்தர்கள் எப்படி மன-அமைதியுடம் சாமி தரிசனம் செய்ய முடியும். சிறுவர் முதலியோர் அச்சப்படவும் நீரிடும். அதனை தொடர்ந்து 26ம் தேதி மாலை தரிசன விழா முடிந்த பின், 100க் கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறையினர் அதிரடியாக கோவிலுக்குள் சென்று, நடராஜர் சன்னதியில் மாட்டப்படிருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கனக சபையுள் நுழைய போராட்டம்: அறநிலையத்துறை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் பொது தீட்சிதர்களிடம் பக்தர்களை கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தீட்சிதர்கள் அதனை ஏற்காமல், நடராஜ சன்னதியின் உள்ள இரண்டு நுழைவு வாயிலையும் மூடினர். இந்நிலையில், கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வேண்டி போலீசில் புகார் அளித்த ராதாகிருஷ்ணன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் நடை கதவை திறக்க கோரி கனகசபை வாயிற்படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கோவிலுக்குள் வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லோருமே இந்துக்கள் என்றால், அவர்களே பேசி, பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும், கனக சபைக்கு செல்வது குறித்து கோவிலுக்குள்ளேயே போராட்டம் நடத்துவது, அமைதி குலைப்பதாகத் தான் இருந்தது.,

இன்னொரு கதவு வழியாக உள்ளே நுழைதல்: பக்தர்கள் ஏறி செல்லும் படி அருகே போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென மற்றொரு கதவு மூலமாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிரடியாக கனகசபை மீது ஏறி சென்று, நடராஜரை தரிசனம் செய்தனர்[1]. இச்சம்பவத்தால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்[2]. இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: .நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர்.

கணேச தீக்ஷிதர் தாக்கப் படுதல்: பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சிதரை அவரது வேட்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர், அத்து மீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர். பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சதரை தள்ளிவிட்டு அவரது வேஷ்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர் அத்துமீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மறுத்தது: இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், “தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர்[3]. அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர்[4]. காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினரின் விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது[5]. தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன.‘கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாதுஎன்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி[6], அந்த தீட்சிதர் அணிந்திருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை,” என்று கூறினர்[7].

ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: முன்னதாக சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொந்த நிறுவனமாக நினைக்கின்றனர். ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். “ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்பதிலும் ஏதோ பொடி வைத்துப் பேசியுள்ளது தெரிகிறது, என்ன ஆவணங்கள் தயாரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆக இவர் எப்படி கோவிலை கையகப் படுத்தாலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்களைப் பற்றி கண்டுகொள்ளாதது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தினமலர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு கோஷ்டி போராட்டத்தால் பரபரப்பு,பதிவு செய்த நாள்: ஜூன் 28,2023 04:02; https://m.dinamalar.com/detail.php?id=3360242

[2] https://m.dinamalar.com/detail.php?id=3360242

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/chidambaram-nataraja-temple-deekshithar-attack-poonal-is-cut-rx02m2

[4] சிதம்பரம் கனகசபை விவகாரம்: தீட்சிதரின் பூணூல் அறுப்பு? அறநிலையத் துறை மறுப்பு, Written by WebDesk, June 29, 2023 09:40 IST.

[5] https://tamil.indianexpress.com/tamilnadu/chidambaram-dikshitharas-accused-officials-allegadely-cutting-poonool-sacred-threat-709568/

[6] விகடன், கனகசபை விவகாரம்: மறுக்கும் சிதம்பரம் தீட்சிதர்கள்அரசுநிதானம்காட்டுகிறதா?!, லெ. ராம்சங்கர், Published:26 Jun 2023 4 PMUpdated:26 Jun 2023 4 PM

[7] https://www.vikatan.com/government-and-politics/governance/chidambaram-temple-issue-why-government-is-showing-restraint

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.

திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

மற்ற அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

பூணூல் போட்ட பார்ப்பனர்களின் பூர்ணகும்ப மரியாதை…………..

இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:

  • அமைச்சர் பி.கே.சேகர்பாபு[8],
  • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர்,
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  • பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்,
  • ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்[9],
  • திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்[10]
  • சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன்[11],
  • பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12]
  • இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
  • திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சத்தியவேல் முருகனார்.

உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].

  1. சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
  • இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
  • இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
  • பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
  • முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
  • தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
  • கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
  • அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
  • செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
  1. திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.

[2] பதிரிக்கை.காம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்..!, JAN 19, 2023

[3] https://patrikai.com/chief-minister-m-k-stalin-released-108-devotional-books-on-behalf-of-the-hindu-religious-charities-department/

[4] தினமணி, மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு..ஸ்டாலின் வெளியிட்டார், By DIN  |   Published On : 20th January 2023 03:08 AM  |   Last Updated : 20th January 2023 03:33 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-released-108-rare-devotional-books-494966.html

[7] அறிவாலயம், திமுக-இஐடி-விங்- https://twitter.com/i/status/1616020423535394816

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jan/20/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-108-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3986985.html

[9] தினகரன், புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்கள் வெளியீடு: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், 2023-01-20@ 00:33:10.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=831765

[11] மாலைமுரசு, தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்…!, Tamil Selvi SelvakumarTamil Selvi SelvakumarJan 19, 2023 – 14:27038

[12] https://www.malaimurasu.com/posts/tamilnadu/eb-with-adhar-details

[13] இ.டிவி.பாரத், 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்பின்னணி என்ன?, Published on: Jan 19, 2023, 10:48 PM IST

[14] https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/chennai/chief-minister-mk-stalin-published-108-rare-devotional-books-in-chennai/tamil-nadu20230119224805573573653

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை..

அறிக்கையில் விளக்கத்தைக் காணலாம்…

இப்புத்தகங்கள் விற்பனைக்கு…..

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!

அறநிலையத்துறையில் அதீத ஈடுபாடு கொள்ளும் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –

  • இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
  • தலபுராணங்கள்,
  • கோவில் தொடர்பான ஆகமங்கள் –
  • ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
  • பழமையான அரிய நூல்கள்,
  • கோவில் கட்டிடக்கலை,
  • செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
  • கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
  • அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.

ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….

செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….

நாத்திகபெரியாரிஸ, திராவிடயன் ஸ்டாக் ஸ்டாலின் இப்புத்தகங்களை வெளியிடும் ரகசியம், அர்த்தம் அல்லது தேவை என்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].

ஓலைச் சுவடிகள்கண்டறியப் பட்டனவாஅல்லது ஏற்கெனவே இருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] தினத்தந்தி, 108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், தினத்தந்தி ஜனவரி 20, 5:43 am

[2] https://www.dailythanthi.com/News/State/108-bhakti-texts-reprinted-with-new-editions-published-by-prime-minister-mkstalin-882191

[3] மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm

[4] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-released-108-rare-devotional-books-562418

மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

[5] தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/chief-minister-mkstalin-released-108-rare-devotional-texts-which-have-been-reprinted-881552

[7] தினத்தந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு. ஸ்டாலின், By தந்தி டிவி, 19 ஜனவரி 2023 1:49 PM

[8] https://www.thanthitv.com/latest-news/cm-stalin-released-108-devotional-books-on-the-behalf-of-hindu-religious-endowments-department-162790

[9] தினமலர், 108 பக்தி நுால்கள் வெளியீடு Added : ஜன 20, 2023 00:19 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3221907

[11] தமிழ்.இந்து, புதுப்பொலிவுடன் 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், செய்திப்பிரிவு, Published : 20 Jan 2023 05:49 AM, Last Updated : 20 Jan 2023 05:49 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/931352-108-rare-bhakti-books-with-new-editions.html

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

ஒக்ரோபர்18, 2022

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

நாத்திகர் மற்றும் இந்துவிரோத திராவிடத்துவ வாதிகளின் கட்டுப் பாட்டில் கோவில்கள்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அளவுக்கு அதிகமாக, தினம்-தினம் கோவில் பற்றிய செய்திகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், திராவிட ஸ்டாக்குகள், என்றெல்லாம் பறைச் சாட்டிக் கொண்டு, இந்துவிரோதிகளாகத் தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்துக்களுக்கும் இதில் ஒன்று சந்தேகம் இல்லை. கோவில் திருப்பணிகளுக்கு வல்லுநர் குழு அமைத்தது. வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: “ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது”.

அரசு தனது கட்டுப்பாட்டை அதிகமாக்கி, அறிக்கைகள் விடுவது: “திருப்பணிகள் முடிவடைந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில்திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம் வாரியாக கோயில்களைத் தேர்வு செய்து, விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொண்டு, திருப்பணிக்கான வேலைகள் முடிவுற்றபின், குடமுழுக்கு நடத்துவதற்குபக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கலாம்,” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு, எல்லா விசயங்களிலும் தலையிட்டு, திராவிடக் கட்சிக்காரர்கள் தங்களது ஆதிக்கம், அதிகாரம், முதலியவற்றைக் காட்ட் வருகிறார்கள். ஊழலில் கைதான அறநிலையத் துறை அதிகாரிகள் மறுபடியும் பதவியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இதனால், ஊழல் ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்ற மனப்பாங்கும் வளர்ந்து விட்டது.

கோவில் திருப்பணிக்கு லஞ்சம் வாங்க வேண்டு என்ற மனோதத்துவம் என்ன?: இந்நிலையில் தான், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[1] என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. திருச்சி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[2]. கோயில் திருப்பணி தொடங்குவதற்கு உரிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டிய குழுவில் உள்ள தொல்லியல் துறை வல்லுநர்,  அதற்காக 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அவரை பொறி வைத்து பிடித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், என்றெல்லாம் விவரிக்கவும் செய்கின்றன. கோவில் திருப்பணி சேவை செய்ய, அரசு மாதம் சம்பளம் கொடுக்கிறது. ஓய்வு பெற்ற இவர்கள் பென்சனும் பெற்று வருகின்றனர். அதனால், பணம் இல்லை என்ற நிலை இல்லை. ஆகையால், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்க வேண்டும், அதிலும், கோவில் சேவைக்கு வாங்க வேண்டும் என்ற இவர்களின் அனோதத்துவம் ஆராய வேண்டியுள்ளது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பணிகள் ஆரம்பம்: கோவில் திருப்பணிகள் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்[3]. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். இந்த கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர்[4]. இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள்[5]. அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்[6]. இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சுமணி ஐயங்கார், இந்து அறநிலையத்துறையில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்[7]. இதில் கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை மாநில அளவிலான நிபுணர் குழு பரிசீலித்து வழங்கி வருகிறது[8]. இந்த குழுவில் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர் தலைமையில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

02-06-2022 மற்றும் 12-10-2022 தேதிகளில் மூர்த்தீஸ்வரி வந்தது: இது தொடர்பாக அந்த நிபுணர் குழு கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி கோவிலில் ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை அதிகாரி இந்த நிபுணர் குழுவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜா நகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி ஆவார். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர். இவர் கடந்த 12-ந்தேதி மீண்டும் கோவிலுக்கு வந்து அறங்காவலர் குழுவினரை சந்தித்து ஆய்வு அறிக்கை வழங்க ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் ரூ.10 லட்சம் அதிகமாக உள்ளது என்றார். இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ரூ.5 லட்சம் தாருங்கள், ஆய்வறிக்கை வழங்குகிறேன் என்று கூறினார். “இதனையடுத்து ஐந்து லட்ச ரூபாய்  குறைத்துக் கொண்டு மீதி ஐந்து லட்ச ரூபாயாவது  கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்று கறார் காட்டிய மூர்த்தீஸ்வரி  முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறு  கேட்டுள்ளார்,” என்கிறது காமதேனு[9]

புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை  கொடுத்தது, மூர்த்தீஸ்வரி மாட்டிக் கொண்டது: போலீசார் அதிரடி கைது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார்[10]. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார்[11]. இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிச்சுமணி ஐயங்காரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதனை மூர்த்தீஸ்வரியிடம்  கொடுக்குமாறு கூறினர்.  அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைபடி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து மூர்த்தீஸ்வரியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார்[12]. அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சேவியர் மேரி உள்ளிட்ட போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்[13]. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூர்த்தீஸ்வரி காரில் ரூ ஐந்து லட்சம் இருந்தது: அவரிடம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோயில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்திருக்கிறது[14].   மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில்  கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது. ஒருவேளை மற்ற இடங்களுக்குச் சென்று வசூல் செய்த பணம் போலிருக்கிறது. எது எப்படியாகிலும், கோவில் என்றும் பார்க்காமல், இவ்வாறு பலர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கோவில் பணத்தை, அதாவது பக்தர்களின் காணிக்கையை இவ்வாறு பலவிதங்களில் கொள்ளையடிப்பது, பங்கு போட்டுக் கொள்வது, முதலியவற்றை நிச்சயமாக, கடவுள் பார்த்துக் கொன்டிருக்கிறார், மற்றும் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பார் என்று ஒவ்வொரு பக்தனும் நம்பிக் கொண்டிருக்கிறான். அது உண்மை.

© வேதபிரகாஷ்

18-10-2022.


[1] தினத்தந்தி, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது, தினத்தந்தி அக்டோபர் 18, 1:40 am.

[2] https://www.dailythanthi.com/News/State/charity-department-woman-officer-arrested-for-accepting-bribe-of-rs1-lakh-817094

[3] நக்கீரன், கோவில் ஆய்வறிக்கைக்கு லஞ்சம்! பிடிபட்ட தொல்லியல் துறை வல்லுநர்!, மகேஷ்,Published on 18/10/2022 (12:34) | Edited on 18/10/2022 (12:51).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bribe-temple-thesis-arrested-archeologist

[5] குணசீலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள லட்ச ரூபாய் லஞ்சம்… பெண் அதிகாரி அதிரடி கைது…, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 18, 2022, 15:50 IST, TIRUCHIRAPPALLI, INDIA

[6] https://tamil.news18.com/news/trichy/female-officer-arrested-for-bribe-lakhs-of-rupees-to-carry-out-repairs-of-gunaselam-temple-820666.html

[7] தினமலர், கோயில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது, Updated : அக் 18, 2022  10:41 |  Added : அக் 18, 2022  10:34.

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=3148843

[9] காமதேனு, 5 லட்சம் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை; பேரம் பேசிய பெண் தொல்லியல் வல்லுநர் கையும் களவுமாக சிக்கினார்!, காமதேனு, Updated on : 18 Oct, 2022, 9:33 am

[10] தினகரன், ரூ1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது, 2022-10-18@ 14:58:17

[11] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=807670

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருச்சி கோயில் திருப்பணிக்காக ஆய்வறிக்கை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம்: தொல்லியல் பெண் நிபுணர் கைது, Written by WebDesk, Updated: October 18, 2022 10:30:34 am.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-woman-archaeologist-arrested-for-taking-rs-10-lakh-bribe-for-temple-restoration-527004/?utm_source=newsstand&utm_medium=Referral

[14] https://kamadenu.hindutamil.in/national/archaeologist-arrested-by-anti-bribery-police-for-demanding-bribe-at-gunaselam-temple

மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)

மார்ச்5, 2022

மயிலை கபாலீஸ்வரர் கோவில் – புன்னைவனநாதர் மரகத மயில் விக்கிரகம் மாயமானது, – ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது (5)

ஏற்றுமதி செய்யப் பட்டது, எங்கோ புதைக்கப் பட்டது என்றது, இப்பொழுது குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என்றது: அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைகிறது[1]. இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது[2], என்றார். இக்கதை ஜனவரியிலிருந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது ஊடக செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. அந்த சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக தெரிவித்தார்[3]. இதற்கெல்லாம் என்ன பெரிய தொழிற்நுட்பம் தேவைப் படுகிறது என்று தெரியவில்லை. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

அலகில் பாம்பு இருக்கும் சிலை.
முன்பு பூ இருந்த சிலை, ஆனால் இது மரகத விக்கிரகம் இல்லை.

மயில் மூக்கில் இருந்தது பாம்பா, பூவா?: முன்னதாக சமீபத்தில் கோயிலுக்கு சென்றதாகவும், மயில் சிலையை பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையடுத்து, தலைமை நீதிபதி விசாரணையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தானே சென்று பார்த்தார் எனும்போது, விவரங்களை அவர் அறிந்திருப்பார் என்றாகிறது. புராணக்கதையின்படி, மயில், பாம்பை அதன் கொக்கில் சுமந்து செல்லும். ஆனால், தற்போதைய போலி மயில் சிலைக்கு பதிலாக, அதன் கொக்கில் பூ ஏந்திய மற்றொரு சிலையை வைக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது[4]. இதையடுத்து, மயிலாப்பூர் குளத்திலோ அல்லது வேறு இடத்திலோ மூல விக்கிரகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கலாம் என்றும்,  அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிய சிலையை உருவாக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது[5]. “புதிய சிலையை உருவாக்கலாம்,” என்பது திகைப்பாக இருக்கிறது அப்படியென்றால், ஸ்வர்ணம் எக்ஸ்போர்ட்ஸ் அச்சிலையை ஏற்றுமதி செய்ததாக கூறப் பட்டதை கண்டுகொள்ளவில்லையா?

போலீஸ் விசாரணையும், அறநிலையத் துறை அறிக்கைகளும் முரண்படுவது ஏன்?: தமிழக போலீஸார் மற்றும் அறநிலையத் துறை ஆளும் ஆட்சியாளர்களின் கட்டுப் பாட்டில் தான் உள்ளன. எனவே, ஒரே அரசின் இரு துறைகள், இருவேறான கருத்துகளை, விளக்கங்களை, விவரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால், இந்த வழக்குகளில் 2004லிருந்தே, முரண்பட்ட, முன்னுக்கு முரணான வாதவிவாதங்கள், கருத்துகள், அறிக்கைக்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. சிலை மாற்றப் பட்டது என்பதை ஒப்புக் கொண்டப் பிறகு, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், உண்மை வெளிவந்திருக்கும். ஆனால், கைதுகள், ஜாமீனில் வெளி வருதல், மறுபடியும் பதவிகளில் அமர்ந்து கொள்ளுதல், ஆவணங்களை அழித்தல் என்றெல்லாம் நடந்து வருவது, சம்பந்தப் பட்ட குற்றமனப்பாங்கை (mens rea), குற்றம் செய்த நிலையை (culpability of mind and action), ஆதாரங்களை அழிக்கும் போக்கை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், உயர் அதிகாரிகள், அரசு, மந்திரிகள், முதலமைச்சர் என்று எல்லோருமே ஒன்றுமே நடக்காதது மாதிரி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இது மிகவும் அதிர்ச்சி அளுக்கும் விசயமாகும். ஏனெனில், அது அத்தகைய குற்றங்களை ஆதரிப்பது போலிருக்கிறது. மேலும், குற்றம் செய்தவர்கள், அரசு தமக்கு சாதகமாக இருக்கிறது என்று இன்னும் ஆணவமாக, அகங்காரமாக, எதேச்சதிகாரத்துடன் செயல் படுவர். “பார்த்தியா, என்னை ஒண்ணும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது,” என்ற தோரணையில் மேன்மேலும் அநியாய காரியங்களில் செயல்படுவர்.

2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிப்பது: 2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகளாக காலந்தாழ்த்தி, வேண்டுமென்றே வழக்குகளை இழுத்தடித்துள்ளது தெரிகிறது. அதற்குள் பெயிலில் வெளியே வந்தவர்கள், கைதாகாமல் பெயில் வாங்கியவர்கள் நிச்சயமாக தமது அரசியல் தாக்கம், அதிகார பலம், பண பலம் முதலியவற்றை பிரயோகித்து, இருக்கு அத்தாட்சிகளை அழித்திருப்பர். திருமகள் 2100 ஆவணங்களை 2009மற்றும் 2013 ஆண்டுகளில் அழித்துள்ளார், என்பது தெரிகிறது. மயில் விக்கிரகம் சம்பந்தமான ஆவணங்களை திருமகள் அழித்ததை மூன்று இணை ஆணையர்களே தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களில் கொடுத்திருப்பதாக, போலீஸார் எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியென்றால், அவர்களையும் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் காணாமல் போன சம்பவத்தில், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் என்று 04-03-2022 அன்று செய்திகள் வெளிவந்துள்ளன[6]. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்[7]. கோவில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்[8]. இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், திரு.வி.க., நகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[9]. பி.டி.ஐ பாணியில் இந்த வரிகள் மற்ற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன[10]. உக்ரைனுக்கு மற்ற விவகாரங்களுக்கு ஊதி ஊளையிடும் புலன் விசாரணை நிபுணர்கள் இவ்விசயத்தில் அப்படியே கமுக்கமாக சிலவரிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளனர்[11]. இந்த தனபாலும், அந்த தனபாலும் ஒன்றா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது, ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர், பிறகு இவர் எப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறாற் என்று புரியவில்லை.

©வேதபிரகாஷ்

04-03-2022


[1] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/missing-peacock-idol-buried-in-mylapore-temple-pond-police-report-filed-to-mhc/tamil-nadu20220301195013449

[2] மாலைமுரசு, கபாலீஸ்வரர் கோவிலில் மாயமான மயில் சிலை கோவில் குளத்தில் புதைந்துள்ளதாக காவல்துறை தகவல்.!!, Muthu KumarMuthu KumarMar 1, 2022 – 17:30Updated: Mar 1, 2022 – 17:30.

[3] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Police-say-a-mysterious-peacock-statue-has-been-buried-in-the-temple-pond-at-the-Kabaliswarar-temple

[4] பத்திரிகை.காம், மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல், By A.T.S Pandian, March 1, 2022.

[5] https://patrikai.com/kapaleeswarar-temple-stolened-peacock-idol-buried-under-mylapore-temple-tank-tn-govt-information/

[6] தினமலர், கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலையை கண்டறிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு,  Added : மார் 03, 2022  22:34.

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2974651

[8]  தமிழ்.இந்து, தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல், செய்திப்பிரிவு, Published : 04 Mar 2022 06:53 AM; Last Updated : 04 Mar 2022 06:54 AM.

[9] https://www.hindutamil.in/news/tamilnadu/773776-kumbhabhishekham-1.html

[10] தினத்தந்தி, 1,000 சிறிய கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல், பதிவு: மார்ச் 04,  2022 00:18 AM

[11] https://www.dailythanthi.com/News/State/2022/03/04001821/Minister-Sekarbabu-informed-that-this-year-Kumbabhishekam.vpf