Archive for the ‘சிவன் கோவில்’ Category

இந்து கோவில்கள் விவகாரங்களில் நாத்திக-திமுக அரசு அதிகமாக அக்கறைக் காட்டுகிறதா அல்லது தலையிட்டு குழப்புகிறதா?

மார்ச்15, 2024

இந்து கோவில்கள் விவகாரங்களில் நாத்திக-திமுக அரசு அதிகமாக அக்கறைக் காட்டுகிறதா அல்லது தலையிட்டு குழப்புகிறதா?

13-03-2024 – உழவாரப்பணியில் திமுக அமைச்சர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (13.03.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள், சலவைப் பொருட்கள் / தூய்மைப் பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், தூய்மையை பராமரித்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்ற புதிய திட்டங்களை கடந்த 33 மாதங்களில் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்படுத்துகின்ற மகத்தான முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

கோவில் விவகாரங்களில் திமுக-நாத்திக அரசியல்வாதிகளின் தலையீடு ஏன்?: 27-07-2021 முதல் உழவாரப்பணி பதிவு ஆரம்பிக்கப் பட்டது. அதிலிருந்து தொடர்ந்து, சேகர்பாபு அமைச்சர் கோவில் விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டுக் கொண்டு வருகிறார் என்று தெரிகிறது. தங்கநகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றுவது, பூஜைகளுக்கு கட்டுப்படுவது, சிறப்பு தரிசனங்கள் அன்னதானத் திட்டங்கள் என்று பல சாதாரணமாக தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளில் எல்லாமே ஏதோ, இவர் சொல்லித்தான் நடப்பது போல காட்டிக் கொண்டு வரும் போக்கும் தென்படுகிறது. குறிப்பாக தினம்-தினம் ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் என்று, கோவில் நிலம் மீட்கப்பட்டது, கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் வருவது போன்ற போக்கும் காணப்படுகிறது. இவை எல்லாம் சாதாரணமாக யார் ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொண்டுதான் இருக்கும் ஆகவே திமுகவினர் ஆட்சிக்கு வந்திருப்பதினால், தங்களது நாத்திக, கடவுள் நம்பிக்கை இல்லாத, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்துவிரோத பிம்பத்தை சரி செய்வதற்கு, இந்த துறையை உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது. இப்பொழுது, எல்லாமே ஸ்டாலின் சொல்லித் தான் செய்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

நடந்து வரும் உழவாரப் பணியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி: அடியார்களாலும், தன்னார்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற உழவாரப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட 5 திருக்கோயில்களுக்கு முதற்கட்டமாக உழவாரப்பணி மேற்கொள்வதற்குண்டான 12 வகையான உபகரணங்களை கட்டணமில்லாமல் வழங்குகின்றோம்[1]. உழவாரப்பணி முடிந்தவுடன் திரும்பவும் திருக்கோயிலிலேயே ஒப்படைத்து விட வேண்டும். உழவாரப் பணியில் ஈடுபடுகின்ற அன்பர்களுக்கு தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்றும், உழவாரப்பணி மேற்கொள்பவர்களுக்கு துறையின் சார்பில் அந்தந்த இணை ஆணையர்கள் மூலம் நற்சான்றிதழ் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்[2]. இறை நம்பிக்கையோடு செய்கின்ற, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை உள்ளத்தோடு ஆலயங்களை தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு இருக்கின்ற உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நிச்சயம் ஆண்டவனால் வழங்கப்படும்.

சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது: இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருக்கின்றவர், அரசியல்ரீதியில் பேசி வருவது தமாஷாக இருக்கிறது. சோழர்கால ஆட்சிக்கு இணையாக தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அந்த வகையில் நம்முடைய உழவாரப்பணி என்பது தொன்று தொட்டு மக்கள் செய்து வருகின்ற பணி என்றாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்[3]. பல்லாண்டுகளாக நடந்து வரும் உழவாரப் பணியில், திடீரென்று இவர்களுக்கு இத்தனை ஆர்வம் வருவது திடுக்கிட வைக்கிறது. முதலில், இப்பணிக்கே கட்டுப் பாடு விதிக்கும் முறையில் நடந்து கொண்டது ஞாபகத்தில் இருக்கலாம். இப்பொழுதோ, அளவு கடந்து ஆசை வந்துள்ளது பயமாக இருக்கிறது. நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் சீத்தனஞ்சேரியில் 2022ம் ஆண்டு தங்களுடைய நூறாவது உழவார பணியை மேற்கொண்டனர்[4]. அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் என் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களுடைய பணி தொடர்ந்து அரக் கோணத்தில் ஏப்ரல் மாதம் 124வது உழவார பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை சாதனை பட்டியல்: ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை மீட்பதில் தனி முத்திரையை திராவிட மாடல் அரசு பதித்திருக்கிறது. இதற்காக 38 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு வட்டாட்சியர்களை பணிநியமனம் செய்திருக்கிறோம். இவர்கள் இதுவரை ₹5979 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளனர். குடமுழுக்கு என்று பார்த்தால் இதுவரை 1477 நடைபெற்றுள்ளன. ஆதிதிராவிடர் வசிக்கிற பகுதியில் 5000 கோயில்களுக்கு திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 2500 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருக்கோயில்களை பாதுகாக்கவும், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு 4000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி, இந்த திமுக அமைச்சர் கூறிக் கொண்டலும், சாதாரண மக்கள் நமொஉவதாக இல்லை.

திமுக இரும்பு மனிதர் ஆணை பெயரில் நடக்கிறதாம்: .4000 கோயில்களுக்கு தேவையான நிதி 70 கோடி ரூபாய் அரசே மானியமாக வழங்கி அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 16000 பேருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற ஒரே அரசு தமிழக அரசு. தமிழக அரசு வரலாற்றில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்தாலும் ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தி னாலும் எதற்கும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக. அதனுடைய தலைவர் இரும்பு மனிதர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருக்கோயில்களின் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்[5]. உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 2021 தொடங்கி தற்போது வரை 18,225 கோயில்களில் 36,554 உழவாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்[6]

14-03-2024 அன்று நீர்மோர் வழங்கும் திட்டம் ஆரம்பம்: வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்[7].. 14-03-2024 அன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது[8]. உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பழநியில், உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கானப் பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது[9]. ஸ்டாலின் சொல்லித்தான், இதையெல்லாம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டார்[10].

© வேதபிரகாஷ்

15-03-2024


[1] தினகரன், திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு, March 13, 2024, 9:55 pm

[2] https://www.dinakaran.com/temples_tillagework_minister_shekharbabu/

[3] தினகரன், ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தினாலும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு, March 13, 2024, 3:05 pm.

[4] https://www.dinakaran.com/it_cbi_missiles_dmk_minister_shekharbabu/

[5] தினகரன், உழவாரப் பணி உபகரணங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார், March 13, 2024, 10:10 am.

[6] https://www.dinakaran.com/temple_servants_farmingequipment_ministershekharbabu/

[7] தமிழ்.இந்து, வெயில் தாக்கம் | முதல்கட்டமாக நாளை முதல் 48 கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு, செய்திப்பிரிவு, Published : 14 Mar 2024 01:22 PM; Last Updated : 14 Mar 2024 01:22 PM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1215252-free-buttermilk-for-devotees-in-48-temples-around-tn-from-tomorrow.html

[9] தினத்தந்தி, தமிழ்நாட்டில் 48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர்மோர்அமைச்சர் சேகர்பாபு தகவல், தினத்தந்தி மார்ச் 14, 3:51 pm (Updated: மார்ச் 14, 5:04 pm)

[10] https://www.dailythanthi.com/News/State/free-water-buttermilk-in-48-temples-in-tamil-nadu-from-tomorrow-minister-shekharbabu-informs-1097361

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியன – அரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

மார்ச்2, 2024

தருமபுரம் ஆதீன மடம், ஆதீனத்துக்கு மிரட்டல், கொலைமுயற்சி, போலீசுக்கு புகார், கைது முதலியனஅரசியலா, சட்டமீறலா, ஆன்மீகக் கோளாறா? (1)

திராவிடத்துவ ஆட்சியில் மடத்தில் பிரச்சினை 25-02-2024ல் கொடுக்கப் பட்ட புகார்: தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கும் நேரங்களில் சர்ச்சைகள் எழுவது சாதாரண விசயம் எனலாம். அக்கட்சி சித்தாந்திகளுக்கு விருப்பமான செய்திகளாக அமையும் என்பது மட்டுமல்லாது, இதை வைத்த்க் கொண்டு ஒரு பக்கம் இந்து மதத்தைத் தூஷிக்க பயன்படுத்தும், இன்னொரு பக்கம், “இதோ பார், நாங்கள் தான் படங்களைக் காக்கிறோம்,” என்பது போலக் காட்டிக் கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளோம். மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது[1]. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்[2]. இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புகார் மனு அளித்தார்[4].

தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ: அதில் கூறியிருப்பதாவது[5]: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்[6]. இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக் கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார்[7]. பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர்[8]. மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர்[9]. இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்[10].  அப்படியென்றால், கண்ணால் பார்த்த சாட்சிகளே நிறையே பேர் இருக்க வேண்டுமே. மடத்திற்குள் கேமராக்கள் எல்லாம் இல்லையா, அவர்கள் வந்து சென்றதற்கான ஆதரங்கள் இல்லையா?

உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்ஆதீனம்: அந்த அளவுக்கு என்ன நடந்தது என்றும் புதிராக உள்ளது. திராவிடக் கட்சிகள் மடத்து சொத்துகள் நிர்வாகம், குத்தகை, நிலம் வாங்குதல்-விற்றல்-பட்டா போடுதல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றெல்லம் கவனித்தால், அத்தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். கட்சிகள், ஆட்சிகள் மாறினாலும், சொத்துக்களை அனுபவிப்பத்தில் எந்த குறையும் ஏற்படாமல், சம்பந்த பட்டவர்கள் நன்றாகவே கவனமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, பகிர்வுகளில் பிரச்சினை எழும் பொழுதும், சமரசம் செய்து கொள்ளப் படுகிறது. எல்லைகளை மீறும் பொழுது, இத்தகைய “வெடிப்புகள்” காணப் பட்டு, உணரப்படுகிறது. இதற்கெல்லாம், மதம், தர்மம், நியாயம், முதலியவை தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசியல், அதிகாரம் தீர்வாக இருக்க முடியாது. பொது மக்கள் முன்பே, இவையெல்லாம் தொடர்ந்து, தங்களது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, ஆன்மீகம் என்று பேசிக் கொண்டு, மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால், பக்தர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.

குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரில் புகார்: பின்னர் இது தொடர்பாக –

  1. செம்பனார்கோயில் தனியார் (கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
  2. செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,
  3. திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க. அகோரம்,
  4. திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்,
  5. வினோத்,
  6. விக்னேஷ் –

ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்[11]. மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம்[12]. அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார்[13]. இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர்[14]. எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி கொடுத்த மனு: இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். “அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை[15]. “நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்[16]..

© வேதபிரகாஷ்

02-03-2024


[1] தமிழ்.இந்து, தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, வீ.தமிழன்பன், Published : 29 Feb 2024 01:24 PM; Last Updated : 29 Feb 2024 01:24 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1208136-threat-to-dharmapuram-adheenam-case-registered-against-9-people-including-bjp-leader-4-arrested.html

[3] மாலைமலர், தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது, By Maalaimalar, .1 மார்ச் 2024 12:23 PM (Updated: 1 மார்ச் 2024 1:14 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/4-arrested-for-threatening-money-from-dharmapuram-adheenam-705717

[5] தினமலர், தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் பா.., நிர்வாகி உட்பட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மார் 01, 2024 01:21.

[6] https://m.dinamalar.com/detail-amp.php?id=3564373

[7] தினத்தந்தி, ஆபாச வீடியோவை வெளியிடுவோம்..தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: வசமாக சிக்கிய அரசியல் புள்ளிகள், By – தினத்தந்தி, Update: 2024-02-29 07:59 GMT.

[8] https://www.dailythanthi.com/amp/News/State/dharmapuram-adheenam-was-threatened-political-leaders-arrested-1095535

[9] இடிவி.பாரத், மோடிக்கு செங்கோல் கொடுத்த ஆதீனத்திற்கு மிரட்டல்பாஜக மாவட்டத்தலைவர் தலைமறைவு!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Feb 29, 2024, 12:39 PM IST; Updated : 19 hours ago.

https://www.etvbharat.com/ta/!state/dharmapuram-adheenam-threatened-by-dmk-bjp-party-persons-that-they-will-publish-controversial-videos-tns24022901092

[10]

[11] புதியதலைமுறை, ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய விவகாரம்; 4 பேர் கைது..முக்கிய புள்ளிகள் தலைமறைவு. Uvaram P, Published on: 29 Feb 2024, 7:43 pm.

[12] https://www.puthiyathalaimurai.com/crime/4-people-arrested-who-threated-dharmapuram-adheenam

[13] விகடன், ஆபாச வீடியோ பெயரில் தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் – 4 பேர் கைது; பாஜக, திமுக புள்ளிகள் தலைமறைவு, கே.குணசீலன், Published: 01-03-2024 at 4 PM; Updated: 1-03-2024 at 7 PM.

[14] https://www.vikatan.com/crime/in-darumapuram-adheenam-case-4-arrested-and-other-4-in-search

[15] பிபிசி தமிழ், தருமபுர ஆதீனம் மிரட்டல் புகார் விவகாரத்தில் தொடர் திருப்பங்கள்என்ன நடக்கிறது?, முரளிதரன்- காசிவிஸ்வநாதன், 1 மார்ச் 2024

[16] https://www.bbc.com/tamil/articles/c3glnjr3793o

தொடரும் சென்னிமலை விவகாரம்–பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் கள-ஆய்வு, எட்டப்படும் முடிவு என்ன?

ஒக்ரோபர்20, 2023

தொடரும் சென்னிமலை விவகாரம் பாதிரியின் மன்னிப்பு, ஒரு பாதிரி கைது, அல்லேலுயா மந்திரியின் களஆய்வு, எட்டப் படும் முடிவு என்ன?

மதபோதகர் மீது வழக்கு: 13-10-2023 அன்றைய இந்துக்களின் கூட்டம் அரசுக்கு தெளிவான சமிஞையை அனுப்பியுள்ளது. ஆமாம், இந்துக்கள் விழித்துக் கொன்டு விட்டார்கள், இனி அவர்கள் திரண்டு எதிர்த்தால், மற்றவர்கள் தாங்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டு விட்டனர் என்றே தோன்றுகிறது. மேலும் இந்துக்களை கைது செய்து விட்டு, கிருத்துவர்களை கைது செய்யாமல் இருப்பது, வெளிப்படையான பாரபட்சத்தினையும் வெளிப்படுத்தியது. இதனால், அரசு கிருத்துவர்களையும் கைது செய்து தனது செக்யூலரிஸத்தை மெய்பிக்க முயன்றது போலும். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதி சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் ஆகிய இருவர் மீதும் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் இருவரையும் தேடிவந்தனர்[1]. தேடும் அளவுக்கு அவர்கள் என்ன அந்த அளவுக்கு பெரிய குற்றவாளிகளா அல்லது “நீ ஒளிந்து கொள், நாங்கள் தேடுவது போல தேடி பிடிக்கிறோம்,” என்றார்களோ என்று தெரியவில்லை.

18-10-2023 சேகர் பாபுவின் கள ஆய்வு: அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கோவில் திருப்பணிகள் குறித்து இன்று (அக். 18) ஆய்வு செய்தனர்[2]. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்ற சரவணன், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது, மத மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்[3]யொருவழியாக அவர்கள் செய்த குற்றம் மற்றும் சட்டப் பிரிவுகளைக் கண்டு பிடித்து விட்டனர் போலும். ஆனால், இருவரும் தலைமறைவாகினர்[4]என்ற செய்தியும் வந்தது. அந்த அளவுக்கு  எல்லாமே வேக-வேகமாக நடக்கிறது போலும். இத்தகைய நடவடிக்கை முன்னரே எடுத்திருந்தால், எல்லாவற்றையும் நடக்காமல் பார்த்திருக்கலாமே? பிறகு, “தும்பை விட்டு, வாலைப் பிடிக்கும்” நடவடிக்கை ஏன்? இங்கும் “மைனாரிட்டி” வேலை செய்ததா? போலீசார் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டது[5]. இருப்பினும், தனிப்படை அமைக்கப் பட்டது போன்ற செய்திகள் வெளிவரவில்லை.

அல்லேலுயா கோஷமிட்ட சேகர் பாபுவின் பேட்டி: இதில், ஜோசப் என்ற சரவணனை சென்னையில் செங்கல்பட்டில் கைது செய்த போலீஸார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்[6]. மேலும், ஸ்டீபன் என்பவரைத் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் ஒளிந்து கொண்டிருப்பதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில், சென்னிமலையில் 18-10-2023 அன்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது[7]: “அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடன் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அரசு செயல்படுகிறது[8]. மற்றொரு மதத்தினரை அவதூறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[9]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[10]. வழக்கில் தொடர்புடைய மற்றொருவரும் [வெள்ளக் கோவிலைச் சேர்ந்த பாதிரி] கைது செய்யப்படுவார்[11]. சென்னிமலை சர்ச்சையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வரும் 20-ம் தேதி (நாளை) ஈரோடு ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது,” இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்[12].

திராவிடத்துவவாதிகள் நடுநிலையாக இருப்பார்களா?: சட்டப் படி கைது என்றால் நடவடிக்கை தொடர வேண்டுமா இல்லை ஏதாவது மத்தியஸ்தம் செய்து வைக்கப் போகிறார்களா? திராவிடத்துவ வாதிகள் யாராக இருந்தாலும், இந்துக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நடுநிலையாக இருந்தாலே போதும். ஆனால், முதலமைச்சர் முதல், இந்து அறநிலைய அமைச்சர் வரை, மற்ற திக-திமுக கருப்புப் பரிவாரங்கள் எல்லாமே, இந்துவிரோதமாகத்தான் செயல் பட்டு வந்துள்ளன. பிறகு, இந்துக்களுக்கு எப்படி நீதி, நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மறுபடியும் “சனாதன ஒழிப்பு” மாநாடு நடக்காமல் இருக்குமா, இந்து அறநிலைய அமைச்சர் அங்கு இல்லாமல் போவாரா அல்லது அல்லேலுயா என்று அவர் கூவாமல் இருப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் உத்திரவாதமும் கொடுக்க முடியாது. இப்பொழுது இவர் யாருக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை. முன்னர் அல்லேலுயா என்று கோஷம் போட்டு, பிறகு “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் கலந்து கொண்டு, இப்பொழுது, இவ்வாறு பேசுவதும் திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

18-10-2023


[1] ஜீ.நியூஸ், கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைதுபாதிரியாருக்கு வலைவீச்சுசேகர்பாபு தகவல்பின்னணி என்ன?, Written by – Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 05:55 PM IST.

[2] https://zeenews.india.com/tamil/tamil-nadu/christian-organization-administrator-arrested-in-erode-said-by-minister-sekar-babu-check-reason-here-468489

[3] தினமணி, சென்னிமலை குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி கைது, By DIN  |   Published On : 19th October 2023 01:19 AM  |   Last Updated : 19th October 2023 01:19 AM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2023/oct/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4092472.html

[5]  தமிழ்.ஒன்.இந்தியா, சென்னிமலையைஏசுமலையாக மாற்றுவோம்– ‘சர்ச்சை பேச்சுசரவணன் ஜோசப் அதிரடி கைதுதூக்கியது போலீஸ்! By Mathivanan Maran Published: Wednesday, October 18, 2023, 19:24 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chennimalai-name-row-christian-munnani-leader-sarvanan-joseph-arrested-by-police-549445.html

[7] தமிழ்.இந்து,  சென்னிமலை முருகன் கோயில் விவகாரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது, செய்திப்பிரிவு; Published : 19 Oct 2023 05:43 AM; Last Updated : 19 Oct 2023 05:43 AM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1141398-controversial-speaker-on-chennimalai-murugan-temple-issue-arrested.html

[9] 360-செய்தி, சென்னிமலை பெயரை மாற்றுவோம்சர்ச்சை பேச்சால் கிறிஸ்துவ முன்னணி தலைவர் கைது!!, Author: Udayachandran RadhaKrishnan, 18 October 2023, 9:14 pm.

[10] https://www.updatenews360.com/tamilnadu/lets-change-the-name-of-chennimalai-christian-front-leader-arrested-for-controversial-speech-181023/

[11] தமிழ்.நியூஸ்.18, சென்னிமலை முருகன் கோவிலை கிறித்தவ மலையாக மாற்றுவோம் என பேசிய சரவணன் ஜோசப் கைது!, LAST UPDATED : OCTOBER 19, 2023, 12:58 PM IST.

[12] https://tamil.news18.com/erode/chennimalai-police-arrested-a-christian-munnani-functionary-for-trying-to-incite-communal-violence-1200206.html

தொடரும் சென்னிமலை விவகாரம்–பாதிரியின் மன்னிப்பு, அல்லேலுயா மந்திரியின் கள-ஆய்வு, எட்டப்படும் முடிவு என்ன?

ஒக்ரோபர்20, 2023

தொடரும் சென்னிமலை விவகாரம் பாதிரியின் மன்னிப்பு, அல்லேலுயா மந்திரியின் களஆய்வு, எட்டப் படும் முடிவு என்ன?

ஜோசப் என்கிற சரவணன் கைது: சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது ஜோசப் செங்கல்பட்டில் 18-10-2023 அன்று  செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவருகின்றன. “ஜோசப் என்கிற சரவணன்” என்று ஊடகங்கள் குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும். அப்படியென்றால், இந்து பெயர்களில் கிருத்துவர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். இது “உள்-கலாச்சாரமயமாக்கல்” திட்டமா அல்லது, புதியதாக வேறொரு திட்டத்தை வகுத்துள்ளனரா என்று தெரியவில்லை. ஏற்கெனவே எஸ்.சிக்கள் கிருத்துவ மதம் மாறியும், சலுகைக்காக இந்துவாகவே வேடமிட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் இப்படி புதுப் பிரச்சினையைக் கிளப்புகின்றனர் போலும். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது[2]. முன்பே குறிப்பிட்டப் படி, இதுவும் ஒரு திட்டமாகவே செயல்பட்டு வருகிறது. முதலில் வீட்டில் நடத்துகிறேன் என்று ஆரமித்து, பிறகு, வீடு சர்ச்சாக மாறிவிடுகிறது. பிரச்சினைகளும் ஆரம்பித்து விடுகின்றன.

17-09-2023 வீட்டில் செய்த ஜெபமும், மோதலும்: கடந்த செப்.,17ம் தேதி ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர்[3]. அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்[4]. கடந்த மாதம் 17-ம் தேதி 17-09-2023 அன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கிறிஸ்தவ மத போதகர் ஜான் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில், 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, சின்னசாமி, கோகுல் ஆகியோரைக் கைது செய்தனர். இதற்கே சில அரசியல் கட்சிதலைவர்கள் சிறுபான்மையினர் தாக்கப் பட்டனர், அவர்களது உரிமைகள் பறிக்கப் படுகின்றன என்றெல்லாம் அறிக்கை விட ஆரம்பித்தனர். இந்நிலையில், ஜான் பீட்டரை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கிறிஸ்தவ முன்னணி சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிலர், சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது.

25-09-2023 கிருத்துவர்களின் ஆர்பாட்டமும், இந்துவிரோத பேச்சும்: இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் பேசினார்[5]. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் கடந்த 13-ம் தேதி 13-10-2023 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்[6]. 25,000 என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில் கிருத்துவர்களுக்கு ஆதரவாக திக, மதிமுக, விசிக தலைவர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டனர். இருப்பினும், இந்துக்களின் எழுச்சி நன்றாகவே உணரப் பட்டது. ஆளும் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருத்துவர்களும் விசயம் பெரிதாகி விடாமல் பர்த்துக் கொள்ள இறங்கி விட்டனர். அது ஒரு பாதிரியரின் வெளிப்படையான மன்னிப்பு வீடியோ வெளிப்படுத்தியது.

பாதிரியாரின் மன்னிப்பு வீடியோ: பாதிரியார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் சென்னிமலை என்று சொல்லி ஒரு காரியம் குறித்து அனைத்து சேனல்களிலும் பார்க்கிறேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் வன்மைக்குரிய காரியம். அதை அவர்கள் செய்திருக்கவே கூடாது[7]. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் தவறான காரியம். அதை வன்மையாக கண்டிக்கிறேன்[8]. மற்றவர் வழிபடும் ஸ்தலத்திற்கு சென்று தான் நீங்கள் இயேசுவை பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேதத்தில் சொல்லவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாய் கருதுகின்றேன். ஆகவே, அப்படிப்பட்டவர்கள் மீது கட்டாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். “பிரிச்சி பாருங்க”.. முதல் விதையை “அங்கிட்டு” தூவிய எடப்பாடி பழனிசாமி.. பாஜகவை விட, குஷியில் திமுக அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் துணை போகின்றார்கள் என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட ஒரு சிலர் செய்யும் காரியத்தினால் மொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் தவறான பெயர் உண்டாகிறது என்பதில் எந்த விதமுமான சந்தேகமும் கிடையாது. கிறிஸ்தவ முன்னணினு சொல்றாங்க… அந்த கிறிஸ்தவ முன்னணி என்பதே எங்களுடைய கிறிஸ்தவர்களுக்கே தெரியாத ஒரு புதிய ஏதோ ஒரு காரியமாக இருக்கிறது. எங்களுக்கே அது என்ன வென்று தெரியவில்லை. அது தான் உண்மை. கிறிஸ்தவ முன்னணியில் உள்ளவர்களை கண்டிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது. வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வது போல் அறிகிறேன். இந்து மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய மனம் திறந்து, இந்த தவறான காரியம் குறித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பெயரால் ஏற்பட்ட இந்த ஒரு காரியத்திற்காக கிறிஸ்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேள்கிறேன். தயவு கூர்ந்து மன்னித்து கொள்ளுங்கள். நமக்குள் எந்த விரோதமும் வேண்டாம். வீணாக தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி வீணான காரியத்தை செய்து வருபவர்கள் மீது அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணியினர் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். அனைத்து கிறிஸ்தவர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் என்று கூறி மீண்டும் கையெடுத்து கும்பிட்டார். மீண்டும் உங்களை நாங்கள் சகோதரர்கள் சகோதரிகளாய் கேட்டு கொள்ள விரும்புகிறோம். நாம் எல்லாம் அனைவரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். மன்னித்து கொள்ளுங்கள். ஆகவே நம்மிடையே வேற்றுமைகள் வேண்டாம்[9]. மீண்டும் நான்ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். மன்னித்து கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் பாதிரியார் குணசேகரன் சாமுவேல் கூறியுள்ளார்[10].

அமைதி, சமரசத்தைப் போற்ற வேண்டும்: இப்பாதிரி எந்த டினாமினேஷனைச் சேர்ந்தவராக இருந்தாலும் இருக்கும் நிலைமையை சரிசெய்ய, அமைதிக்கு, சமரசத்திற்கு ஏற்றமுறையில் பேசியிருப்பதை கவனிக்கலாம். இத்தகைய அணுகுமுறை இருந்தால், நிச்சயமாக பிரச்சினை இல்லாமல் எல்லா நம்பிக்கையாளரும் அமைதியாக வாழலாம். இந்தியாவில் அப்படித்தான் ஆயிரக் கணக்கான வருடங்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும், இந்துக்கள் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் அனுசரித்து, பொறுமையாகத் தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே பொறுமைக்கும் எல்லை உண்டு என்று மற்றவர்களும் உணர வேண்டும். குட்ட-குட்ட குனிந்து கொண்டே இருக்க மாட்டார்கள், ஒரு நாள் தலை நிமிரவும், தடுக்கவும் செய்வார்கள். பிறகு, பதிலுக்குப் பதில் என்று கையை ஓங்கினால், நிலைமை மோசமாகி விடும். ஆகவே, எல்லோரும்க அமைதியாக அஹிம்சையைத் தான் பின் பற்ற வேண்டும். அது கோழைத்தனம் அல்ல, ஆனால், மிகப் பெரிய வலுவான ஆயுதமாகும்.

© வேதபிரகாஷ்

18-10-2023


[1] தினமலர், சென்னிமலை பெயரை மாற்றுவோம் என பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன்ஜோசப் கைது, மாற்றம் செய்த நாள்: அக் 18,2023 22:31.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3460756

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சென்னிமலை முருகன் கோயிலைஇயேசு மலையாக மாற்றுவோம் என சர்ச்சை பேச்சு; கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது, Web Desk, Oct 19, 2023 18:31 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/christian-munnani-functionary-arrested-for-controversy-speech-chennimalai-murugan-mount-will-change-calvary-mount-1563783

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், சென்னிமலைக்கு கிறிஸ்தவ பெயர்! கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி கைது!, Kathiravan V • HT Tamil, Oct 18, 2023 05:47 PM IST

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/saravanan-joseph-who-said-he-was-going-to-change-the-name-of-chennimalai-was-arrested-131697630583238.html

[7] மீடியான்.காம், சென்னிமலை விவகாரம் வருத்தம் தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியார், Jansi Rani Tulasi Raman, அக்டோபர் 19, 2023, 6.30 pm.

[8] https://mediyaan.com/christian-priest-expressed-grief-over-chennimalai-issue/

[9] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னிமலையை ஜீசஸ் மலையாக்குவோம்.. கிளம்பிய சர்ச்சை.. கையெடுத்து கும்பிட்டு பாதிரியார் மன்னிப்பு, By Jeyalakshmi C Published: Tuesday, October 17, 2023, 17:46 [IST]

[10] https://tamil.oneindia.com/news/chennai/chennai-priest-apologizes-for-christians-to-rename-chennimalai-as-jesus-malai-549091.html?story=1

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு–கோவில் கையகப்படுத்த முடிவு முதலியன (2)

ஜூலை4, 2023

தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு கோவில் கையகப் படுத்த முடிவு முதலியன (2)

தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யா வாதத்தில் ஈடுபட்டது; சிதம்பரம்-கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்யும் பிரச்னையில், இரு கோஷ்டியினர் போராட்டம் நடத்தியதால், சிதம்பரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் புகாரின் பேரில், 25ம் தேதி அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யாவிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர். இந்த பெண் அதிகாரியும் திட்டமிட்டு பிரச்சினை பெரிதாக்க, தீக்ஷிதர்களுடன் வாதம் புரிவது ஈடியோ மூலம் தெரிகிறது. ஆனி மஞ்சன விழா நேரத்தில் அமைதியாக, கோவில் இருக்க வேண்டிய நிலையில் இவ்வாறாக, அமைதி குலைந்து, கோவிலில் ஏதோ நடந்து விட்டது போல கூச்சல், குழப்பம், போலீஸார் குவிப்பு என்றிருந்தால், பக்தர்கள் எப்படி மன-அமைதியுடம் சாமி தரிசனம் செய்ய முடியும். சிறுவர் முதலியோர் அச்சப்படவும் நீரிடும். அதனை தொடர்ந்து 26ம் தேதி மாலை தரிசன விழா முடிந்த பின், 100க் கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறையினர் அதிரடியாக கோவிலுக்குள் சென்று, நடராஜர் சன்னதியில் மாட்டப்படிருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கனக சபையுள் நுழைய போராட்டம்: அறநிலையத்துறை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் பொது தீட்சிதர்களிடம் பக்தர்களை கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தீட்சிதர்கள் அதனை ஏற்காமல், நடராஜ சன்னதியின் உள்ள இரண்டு நுழைவு வாயிலையும் மூடினர். இந்நிலையில், கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வேண்டி போலீசில் புகார் அளித்த ராதாகிருஷ்ணன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் நடை கதவை திறக்க கோரி கனகசபை வாயிற்படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கோவிலுக்குள் வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லோருமே இந்துக்கள் என்றால், அவர்களே பேசி, பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும், கனக சபைக்கு செல்வது குறித்து கோவிலுக்குள்ளேயே போராட்டம் நடத்துவது, அமைதி குலைப்பதாகத் தான் இருந்தது.,

இன்னொரு கதவு வழியாக உள்ளே நுழைதல்: பக்தர்கள் ஏறி செல்லும் படி அருகே போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென மற்றொரு கதவு மூலமாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிரடியாக கனகசபை மீது ஏறி சென்று, நடராஜரை தரிசனம் செய்தனர்[1]. இச்சம்பவத்தால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்[2]. இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: .நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர்.

கணேச தீக்ஷிதர் தாக்கப் படுதல்: பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சிதரை அவரது வேட்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர், அத்து மீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர். பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சதரை தள்ளிவிட்டு அவரது வேஷ்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர் அத்துமீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மறுத்தது: இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், “தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர்[3]. அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர்[4]. காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினரின் விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது[5]. தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன.‘கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாதுஎன்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி[6], அந்த தீட்சிதர் அணிந்திருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை,” என்று கூறினர்[7].

ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: முன்னதாக சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொந்த நிறுவனமாக நினைக்கின்றனர். ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். “ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்பதிலும் ஏதோ பொடி வைத்துப் பேசியுள்ளது தெரிகிறது, என்ன ஆவணங்கள் தயாரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆக இவர் எப்படி கோவிலை கையகப் படுத்தாலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்களைப் பற்றி கண்டுகொள்ளாதது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-07-2023


[1] தினமலர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு கோஷ்டி போராட்டத்தால் பரபரப்பு,பதிவு செய்த நாள்: ஜூன் 28,2023 04:02; https://m.dinamalar.com/detail.php?id=3360242

[2] https://m.dinamalar.com/detail.php?id=3360242

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/chidambaram-nataraja-temple-deekshithar-attack-poonal-is-cut-rx02m2

[4] சிதம்பரம் கனகசபை விவகாரம்: தீட்சிதரின் பூணூல் அறுப்பு? அறநிலையத் துறை மறுப்பு, Written by WebDesk, June 29, 2023 09:40 IST.

[5] https://tamil.indianexpress.com/tamilnadu/chidambaram-dikshitharas-accused-officials-allegadely-cutting-poonool-sacred-threat-709568/

[6] விகடன், கனகசபை விவகாரம்: மறுக்கும் சிதம்பரம் தீட்சிதர்கள்அரசுநிதானம்காட்டுகிறதா?!, லெ. ராம்சங்கர், Published:26 Jun 2023 4 PMUpdated:26 Jun 2023 4 PM

[7] https://www.vikatan.com/government-and-politics/governance/chidambaram-temple-issue-why-government-is-showing-restraint

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

மே13, 2023

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளைகள் பலவிதம் – 2023லும் தொடர்கிறது!

70 வருடங்களாகத் தொடரும் தமிழக கோவில் கொள்ளை: தமிழகத்தில் திராவிடத்துவ ஆட்சியில் கடந்த 70 வருடங்களாக, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது, அபகரிப்பது, திருட்டுத் தனமாக பட்டா போட்டு வாங்குவது-விற்பது என்று பலகோடி வியாபாரம், ஊழல், முதலியவை நடந்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. இது பல கூட்டங்களுக்கு வியாபாரமாகி விட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பதிவுத்துறை, இந்து அறநிலையத் துறை போன்ற விசுவாசமான திராவிடத்துவ ஊழியர்களும், சேர்ந்துள்ளனர். இந்துக்களை விட கோவில் நிலங்கள், சொத்துகள் முதலிய விவரங்கள் இவர்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும். காலம்காலமாக அமைதியாக, 100-1000 என்று கொடுத்துக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். யாராவது கேட்டால், அவ்வப்பொழுது மாமூல் கொடுத்து சரிகட்டி வருகின்றனர். இதில் நாத்திகர், இந்துவிரோதிகள் ஏன், இந்துக்கள் அல்லாதவர், துலுக்கர், கிருத்துவார் என்றெல்லாம் கூட பங்கு கொண்டு, இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர். சங்கம் அமைத்து, நீதிமன்றங்களில் உரிமை கேட்டு போராடி வருகின்றன்றர். 

நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் கோவில் நிலத்தை அபகரித்துள்ளது: கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது[1]. இதில் கூட என்ன சகிப்புத் தன்மை, சகிப்பற்றத் தன்மை என்றெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேஸ்வர சாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு விட்டது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது[2]. ஆக, கோவில் நிலத்தை குத்தகை விட்டதிலிருந்தே ஊழல் ஆரம்பிக்கிறது. கோயில் நிலத்தை கோவூர் வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி விவசாயம் செய்வதற்காக உறுப்பினருக்கு பகிர்ந்து வழங்கியது[3].  “பகிர்ந்து வழங்கியது,” என்றால், அதன் பயன்பாடு விவரங்கள் “கட்டிடங்கள் கட்டலாமா கூடாதா என்ற-போன்ற விவரங்கள்” அவர்களுக்குத் தான் தெரியும். நிலத்துக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை காலி செய்து கோயில் வசம் ஒப்படைக்க கடலூர் கோர்ட் உத்தரவிட்டது[4]. இந்த அழகில் வாடகையே கொடுக்காமல் அனுபவிக்கின்றனர் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நியாயவான்கள், நீதிமான்கள், இமான்தாரர்கள், ஒழுக்கமானவர்கள் என்றெல்லாம் கண்டு கொள்லலாம்.

நிலம் மீட்கப் படும, வாடகை வசூலிக்க முடியுமா?: கடலூர் வருவாய் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் உள்பட 20 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[5]. அத்தகைய மஹா ஒழுக்கசீலர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றால், அவர்களது பராக்கிரமத்தையும் அறிந்து கொள்ளலாம். 4 வாரத்தில் நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது[6]. இப்பொழுது மே என்றால் ஜூன் மாதமும் வந்து விட்டு போகும். இந்த ஆணையை அமூல் படுத்துவார்களா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஜூன் வரைக்கும் பொறுங்கள் என்பார்கள், அதற்குள் மேல்முறையீடு செய்வார்கள். கோயில் நிலத்திற்கான குத்தகை நிலுவையை வசூலிக்க கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது[7]. இதற்கும் தங்களிடம் பணம் இல்லை என்பார்கள் அல்லது “வேளாண் கூட்டுறவு சங்கம் வாங்கி” என்பதால் ஹள்ளுப்டி செய்யுங்கள் என்று கேட்டாலும் ஆச்சரியப் பௌவதற்கு இல்லை. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்[8]. கூட்டுறவு சங்கத்துடன் மட்டுமே ஒப்பந்தம் என்பதால் உறுப்பினர்கள் வழக்கு தொடர அதிகாரமில்லை என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோயிலுடன் மனுதாரகளுக்கு எவ்வித ஒப்பந்தமும் இல்லை என்பதால் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.

நீதிமன்ற ஆணைகனம் நீதிபதிகளின் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “ரூ.50 லட்சம் பாக்கி கோவில் நிர்வாகம் தரப்பில் தங்களுக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், வழக்கு தொடர்ந்துள்ள உறுப்பினர்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கை தொடர அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதிடப்பட்டது. மேலும், ரூ.50 லட்சம் ரூபாய் அளவிற்கு குத்தகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளதாகவும், விவசாயத்திற்கு கொடுத்த நிலத்தை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்கிறேன். கோவில் நிர்வாகத்துக்கும், கூட்டுறவு சங்கத்துக்கும் இடையேதான் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் எதுவும் செய்யாமல், கோவில் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி உள்ளனர். வெளியேற்ற வேண்டும் இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்துள்ளது. அப்போது கூட குத்தகை தொகையை வழங்கவில்லை. கோவில் நிலத்தை அபகரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் சகித்துக்கொள்ள முடியாது. கோவிலுக்கு மனுதாரர்களால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் காஞ்சீபுரம் கலெக்டர் ஒப்படைக்க வேண்டும். குத்தகை பாக்கித்தொகையை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்[10].

கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்[11]. புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.12.49 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்யப்பட்டது[12]. இதுகுறித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், போலி ஆவணம் தயாரிக்க உதவிய முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் சகாயராஜ்,62; லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெரு கருணாகரன் (எ) செந்தில்,37; பத்திர எழுத்தர் தேங்காய்த்திட்டு அருள்பெரும்ஜோதி நகர் மணிகண்டன்,46; முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகர் அசோக்,52; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர்,. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் கருணாகரன் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில் நிலம் கொள்ளை: வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், பாஸ்கரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு சரவணன், உதயச்சந்திரன், பூரணி ஆகியோரை டி.ஜி.பி., மனோஜ்குமார் லால், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், ஐ.ஜி., சந்திரன், சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா ஆகியோர் பாராட்டினர். நிலத்திற்கு ‘ஜீரோ’ மதிப்பு -கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரடி நிலத்தை விற்பனை செய்ய முடியாதபடி, போலீஸ் பரிந்துரையை ஏற்று, பத்திர பதிவுத்துறை ‘ஜீரோ’ மதிப்பு கொண்ட நிலமாக மாற்றியுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றி மீண்டும் கோவில் பெயரில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ் 13-05-2023


[1] தினகரன், கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விகிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது: சென்னை உயர்நீதிமன்றம், May 12, 2023, 5:54 pm.

[2] https://www.dinakaran.com/attempts-expropriate-temple-land-any-rate-cannot-be-tolerated-madras-high-court/

[3] நியூஸ்.டி.எம், “நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாது!” Byஅருணா|12 May 2023 6:30 PM

[4] https://newstm.in/tamilnadu/–1905011

[5] மாலைமுரசு, நிலத்தை அபகரிக்கும் முயற்சியை சகித்துகொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்!!, webteam, May 12, 2023 – 20:48.

[6] https://www.malaimurasu.com/posts/district-news/Attempts-to-grab-land-cannot-be-tolerated

[7] தினமலர், கோவில் நிலத்தை மீட்கும்படி கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்: மே 12,2023 22:05…

[8] https://m.dinamalar.com/detail.php?id=3318887

[9] தினத்தந்தி, கோவில் நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாதுஐகோர்ட்டு கண்டனம், தினத்தந்தி மே 13, 5:13 am

[10] https://www.dailythanthi.com/News/State/expropriation-of-temple-land-cannot-be-tolerated-court-condemns-963457

[11]  தினமலர், கோவில் நிலம் அபகரிப்பு மேலும் 4 பேர் கைது, பதிவு செய்த நாள்: மே 11,2023 06:38…

[12] https://m.dinamalar.com/detail.php?id=3317727

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

பிப்ரவரி23, 2023

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?

.

திராவிடத்துவ ஆட்சியில், திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோத செயல்பாடுகள் அதிகமாகவே வெளிப்பட்டு வருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.

சத்தியவேல் முருகனை நியமித்ததை எதிர்த்து வழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.

தாக்கல் செய்த மனுவில் உள்ளது[7]: “ஆகம கோவில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருடன் ஆலோசித்து, உறுப்பினரை நியமிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், சத்தியவேல் முருகனை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரவில், குழு தலைவருடன் ஆலோசித்ததாக எதுவும் இல்லை. ஆலோசனை நடத்தியிருந்தால், உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த அடிப்படையில், குழு உறுப்பினராக நியமிக்க சத்தியவேல் முருகன் தகுதி பெறுகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆகம விதிகளை பற்றி பொய் தகவலை பரப்புவதுதான், அவரது நோக்கம். இதை, அரசு பரிசீலிக்க தவறி விட்டது. சமஸ்கிருதம் பற்றி சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருத மொழியில் தான் உள்ளன. எனவே, நியமன உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.

விசாரணையில் நீதிமன்றம் தடை விதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.

சத்தியவேல் முருகன் யார்? – தற்சிறப்புக் குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].

சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினமலர், ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன், நியமனத்துக்கு தடை, Added : பிப் 16, 2023  00:01; https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3243236

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை, By Vishnupriya R, Published: Wednesday, February 15, 2023, 14:00 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-orders-for-appointment-of-sathiyavel-murugan-for-hindu-endowment-board-498833.html

[5] தினகரன், ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை, 01:10 pm Feb 15, 2023 | dotcom@dinakaran.com(Editor)

[6] https://m.dinakaran.com/article/News_Detail/839115

[7] தினகரன், கோயில்களில் ஆகமங்களை கண்டறியும் குழுவில் ஆலோசனை குழு உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு, 2023-02-16@ 00:56:10; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=839310

[9] மின்னம்பலம், ஆகமக்குழு: சத்தியவேல் முருகனார் நியமத்துக்கு இடைக்காலத் தடை!, February 15, 2023 19:35 PM IST.

[10] https://minnambalam.com/tamil-nadu/interim-stay-on-the-appointment-of-sathyavel-muruganar/

[11] செய்திசோலை, ஆகமங்களை கண்டறியும் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடைஉயர்நீதிமன்றம்.!!, February 15, 2023  MM SELVAM.

[12]https://www.seithisolai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.php

[13] சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு, அவரது இண்னைத்தளத்திலிருந்து –

http://dheivathamizh.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/

[14] “தற்குறிப்பு” புத்தகம் – http://dheivathamizh.org/wp-content/uploads/2016/03/mu.pe_.sa-tharsirappu.pdf

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!

அறநிலையத்துறையில் அதீத ஈடுபாடு கொள்ளும் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –

  • இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
  • தலபுராணங்கள்,
  • கோவில் தொடர்பான ஆகமங்கள் –
  • ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
  • பழமையான அரிய நூல்கள்,
  • கோவில் கட்டிடக்கலை,
  • செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
  • கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
  • அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.

ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….

செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….

நாத்திகபெரியாரிஸ, திராவிடயன் ஸ்டாக் ஸ்டாலின் இப்புத்தகங்களை வெளியிடும் ரகசியம், அர்த்தம் அல்லது தேவை என்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].

ஓலைச் சுவடிகள்கண்டறியப் பட்டனவாஅல்லது ஏற்கெனவே இருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] தினத்தந்தி, 108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், தினத்தந்தி ஜனவரி 20, 5:43 am

[2] https://www.dailythanthi.com/News/State/108-bhakti-texts-reprinted-with-new-editions-published-by-prime-minister-mkstalin-882191

[3] மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm

[4] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-released-108-rare-devotional-books-562418

மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

[5] தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/chief-minister-mkstalin-released-108-rare-devotional-texts-which-have-been-reprinted-881552

[7] தினத்தந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு. ஸ்டாலின், By தந்தி டிவி, 19 ஜனவரி 2023 1:49 PM

[8] https://www.thanthitv.com/latest-news/cm-stalin-released-108-devotional-books-on-the-behalf-of-hindu-religious-endowments-department-162790

[9] தினமலர், 108 பக்தி நுால்கள் வெளியீடு Added : ஜன 20, 2023 00:19 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3221907

[11] தமிழ்.இந்து, புதுப்பொலிவுடன் 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், செய்திப்பிரிவு, Published : 20 Jan 2023 05:49 AM, Last Updated : 20 Jan 2023 05:49 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/931352-108-rare-bhakti-books-with-new-editions.html

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654