பவுண்டரீகம் சோமநாதசுவாமி கோயில் சிதிலமடைந்து, சிற்பங்கள் உடைந்த நிலையில், கவனிப்பாரற்று இருப்பதேன்? அதற்கு காரணமானவர்களைப் பற்றி சொல்லத் தயங்குவதேன்? (2)
கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்களா?: கோயிலின் நுழைவு வாயிலின் வலப்புறம் அதிகார நந்தியும், இடப்புறம் சிவபெருமான் அருச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவையும் தேவக்கோட்டத்தில் காணலாம். அம்பிகை கருவறை முகப்பு மண்டபத்தின் அருகிலேயே தெற்கு நோக்கி உள்ளது கங்கைகொண்ட சோழபுரம் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் ஒரு தேவக்கோட்டத்தில் காணப்படுகிறது. கோவிலில் அனுக்கிரக மூர்த்தி, கங்காவிசர்ஜனர், அர்த்தநாரிஸ்வரர், சண்டாள ரூபமூர்த்தி, அதிகார நந்தி, பிட்சாடனர் போன்ற மூர்த்திகள் காணக்கிடைக்காத தெய்வாம்சம் மிகுந்த கலைநயமிக்க மூர்த்திகளாக உள்ளனர். அளவுக்கு அதிகமான பெருங்கோயில்களை அருகாமையிலேயே கண்டு புழங்கி வருவதாலோ என்னவோ நம் மக்கள் இவற்றிக்கு உரிய மரியாதையை தராமல் உள்ளனர். காத்திருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை!, என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கோவில்கள் அதிகமாக இருந்தால், ஒரு கோவிலை அனாதையாக விட்டு விடுவார்கள் போன்ற லாஜிக் வூத்தேசம் / முடிவு தவறானது. சரித்திர ரீதியில் உண்மையினை தெரிவிக்க வேண்டும்.
மந்திர–தந்திர–யந்திர வழிபாடு, விசேஷமான சூலக்கல்[1]: மேலும் நுழைவு வாயிலின் அருகே சூலக்கல் ஒன்று காணப்படுகிறது. பொதுவாக இத்தகைய கற்கள் சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் நடப்பட்டிருக்கும். இங்கு காணப்படும் சூலக்கல்லில் சூலமும், அதன் மேற்புறம் சூரியன் – சந்திரன் வடிவமும் சூலத்தின் கீழ்ப்பகுதியில் பன்றியின் வடிவமும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது[2]. சோழர்கள் “மந்திர-தந்திர-யந்திர” வழிபாடுகளில், கிரியைகளில், பிரயோகங்களில் ஈடுபட்டபோது, இத்தகைய யந்திரங்கள், தேவதைகள், அவற்றிற்கான கோவில்கள் உருவாக்கப் பட்டன. உறையூரில் 850ல் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன் (846-881), தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் அமைத்து, குலதெவமாக்கினார். அதன் பின்பு சோழ நாட்டை சுற்றி எட்டு திக்கிலும் காவல் புரிய அஷ்டகாளிகளை பிரதிட்டை செய்தார். நிசும்பசூதனியை வழிப்பட்ட பின்பே ஒவ்வொரு போருக்கும் செல்வர். பின் சோழர்கள் திருப்புயம்போரில் பாண்டியர்கள், பல்லவர்களை வெற்றி கொண்டு சோழர்கள் பேரரசு நிர்மாணம் செய்யப்பட்டது. சாளுக்கிய மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் (வராகத்தை) பன்றியை அரசு இலச்சினையில் கொண்டிருந்தனர். இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை.
முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்த கோவில்: தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் அதிட்டானப் பகுதியில் மட்டும் கல்வெட்டு காணப்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை. அதாவது உடைக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிடுவதற்கு தயக்கம். கட்டடக்கலை, சிற்பக்கலையின் அடிப்படையில் இக்கோயில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். இவன் சுங்கம் தவிர்த்த சோழன், சோழன் திரிபுவன சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றவன். கீழைச் சாளுக்கிய மன்னனாகிய இராஜராஜ நரேந்திரனின் புதல்வன். இவனுடைய தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கைதேவியார் ஆவார். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலில் காணப்படும் சூலக்கல்லில் பன்றி (வராகம்) அரச சின்னம் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதமுடிகிறது.
சிற்பங்கள் உடைக்கப் பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டாலும் காரணம் சொல்வதில்லை: இக்கோயிலில் பல சிற்பங்களின் கைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் காணும்பொழுது கண்ணில் நீர் பெருகுகிறது, என்று ஒருவர் உணர்ச்சிப் பூர்வமாகக் குறிப்பிட்டாலும், என்ன காரணம் என்று சொல்லவில்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் மகாமண்டபத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அங்கே தேவியுடன் அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் மட்டும் அமர்ந்து சண்டேசுவரருக்கு சண்டீசபதம் அளிக்கும் காட்சியை அழகிய சிற்பவடிவில் காணலாம். சிவபெருமான் தலைக்கு மேலே குடை காணப்படுகிறது. சிவபெருமான் காலின் கீழே சண்டேசுவரர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கைகளை உடைத்திருக்கின்றனர், என்று புலம்புவதோடு சரி. கருவறை விமானச் சுதைச் சிற்பங்கள் நாயக்கர்காலக் கலைச்சிறப்புடன் காட்சி தருகிறது. விமானத்தின் மீதும் செடிகொடிகள் வளர்ந்துள்ளன.
ராஜராஜன் – ராஜேந்திரனை போற்றுவது, தூற்றுவது: ராஜராஜன், ராஜேந்திரன் முதலியோரை பார்ப்பன வருடிகள் என்று தூசித்து, பிருகதீஸ்வரர் கோவிலில் இந்தி கல்வெட்டுகள் இருக்கின்றன என்று பொய்களை சொல்லி, தமிழில் குடமுழுக்கு என்று பிரச்சினை கிளப்பி, இவ்வாறு பிரச்சாரம் செய்யும் தமிழ்வெறியர்களின் குறிக்கோள் என்ன? ராஜராஜன், ராஜேந்திரன் பிராமணர்களுக்கு “பிரமதேயம்” கொடுத்து பார்ப்பனீயத்தை ஊக்குவித்தான். அடிமைகளை வைத்து கோவில்கள் கட்டினான். கோவில்களில் பல தேவரடியார்களை வைத்து சமூகத்தைக் கெடுத்தான் போன்று எழுதியுள்ளார்கள். இப்படி ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களை ஒரு பக்கம் தூஷிப்பது, இன்னொரு பக்கத்தில், பல நாடுகளை வென்றான், உலகத்தை ஆண்டான் என்றெல்லாம் புகழ்வது. இத்தகைய முரண்பாடும், இவர்களது போலித்தனத்தைக் காட்டுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் பிரிவை உண்டாக்கி, பிரச்சினைகளை உருவாக்கத்தான் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மேலும், இவர்களுக்கு உதவுவது அயல்நாட்டவர் என்று தெரிகிறது. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், சரித்திரம், அகழ்வாய்வு என்று எந்த ஆதாரமும் இல்லாமல், “உலகம் முழுவதும் தமிழ் மொழி இருந்தது, கல்வெட்டுகள் இருக்கின்றன, தமிழ் தான் முதல் மொழி” என்ற திட்டத்துடன், மொழிப் பற்றை மொழிவெறியாக்கி, புதிய மொழி-அடிப்படைவாதம் போன்ற பயங்கரவாதத்தை உண்டாக்க பார்க்கின்றனர். தமிழன் கடல், கடல்சார் விஞ்ஞானம், கப்பல் கட்டும் தொழிற்நுட்பம் இவற்றில் எல்லாம் பெரிய முன்னோடிகள், விற்பனர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்றால், ஏன் ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கவில்லை?
கோவில்களை சீரழிக்கும் திராவிடத்துவ வெறுப்பு, காழ்ப்பு அரசியல், நிர்வாகம்: திராவிட மேடைகளில் திராவிட தோள்களை பார்த்தீர்களா, சேரன் செங்குட்டுவன் வீரத்தை கேளீர், ஈழம் சென்று கங்கை வென்று, கிடாரம் கொண்ட சோழனின் வீரத்தை பாரீர் என்றெல்லாம் மார் தட்டி வீராப்புப் பேசுவது வழக்கம்.. கருணாநிதி தன்னை ராஜராஜன் போலக் காட்டிக் கொண்டாலும், பெருங்கோவிலுக்குள் நுழைய பயந்தார். மதிலை உடைத்து, வழி செய்து கொண்டு உள்ளே நுழைந்தார்.. ஏ..ராஜா தஞ்சை கோவில் விழாவிலேயே ‘என் தலைவர் ராஜராஜசோழன், தளபதி ஸ்டாலின் ராஜேந்திர சோழன்’ என்றே பேசினாலும், ராஜராஜன் பார்ப்பன அடிவருடி, பார்ப்பனீயத்டைத் தூக்கிப் பிடித்தவன் என்ற் மற்ற மேடைகளில் பேசுவது வாடிக்கையான விசயமாக உள்ளது.. 2021 வரை இத்தகைய கதைகளை புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்[3]. ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா?, ராஜராஜ சோழனின் மறுபக்கம் என்று தலைப்புகளில் வெளிவரும் இந்த புத்தகங்களில், சரித்திரத் தன்மையே இல்லாமல், ஏதோ குழாயடி வம்பு, கிசுகிசுப்பு போன்று எழுதப்பட்டுள்ளனர்[4]. சரித்திர ஆதாரம் இல்லாமல், கட்டுக் கதைகளை இவ்வாறு பரப்புவதை, மெத்தப் படித்த மற்றவர்களும் கண்டிக்காமல் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இத்தகைய செயல்கள் துலுக்கர்களின் கோவில் இடிப்புகள், கலை-அழிப்புகள், இலக்கிய எரிப்புகளை விட மோசமாக இருப்பதைக் கவனிக்கலாம்.
© வேதபிரகாஷ்
03-01-2022
[1] கி.ஸ்ரீதரன், திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில், இதழ் 114, டிசம்பர் 16, 2014.
[2] http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1310
[3] டி.எஸ்.கிருஷ்ணவேல், ராஜ ராஜ சோழன் பார்ப்பன அடிமையா? தமிழ் நூல் மன்றம், 2019.
[4] துரை.இளமுருகு, ராஜராஜ சோழனின் மறுபக்கம், நுண்மை பதிப்பகம், 2021.