இந்து அறநிலையத்துறை மூலம் நடந்து வரும் அன்னதான திட்டம், உணவுப் பொட்டல விநியோகமாக மாறி, திமுக அரசு சேவை செய்வது போல பிம்பத்தை உண்டாக்கும் போக்கு (3)
நாத்திக மற்றும் விரோத கருத்துக்களைக் கூறி வந்த திமுகவினர், ஏன் கோவில் அன்னதான உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க வேண்டும்?: நாத்திக அரசியல்வாதிகள் ஆட்சியில் வந்துள்ளார்கள். கடவுளின் பெயரால் கூட பிராமணம் எடுத்து, பதிவிக்கு வர துணிவில்லை. ஆனால், குங்குமம்-விபூதி வைப்பார்கள், துடைத்து எரிவார்கள்! கடவுளின் பேரால் பதவிப் பிரமாணம் எடுக்காத திமுகவினர் குங்குமம்-விபூதி வைத்திருந்தது என்ன சித்தாந்தம் என்று தெரியவில்லை. இன்றோ, தமிழகம் முழுவதும், கோவில்களின் பிரசாதம், அன்னதானம், பொட்டலங்களாக, விநியோகிக்கப் படுகின்றன. அதனை ஆட்சிக்கு வந்த அமைச்சர் முதல் மற்றவர்கள், ஏதோ தாங்கள் தான் தானம் செய்வது போல, புகைப் படங்கள் செய்திகள் வெளியிட, விளம்பரம் போல செய்யப் படுகின்றன. இந்த செலவுகள் அறநிலையத்துறைகள் கணக்கில் தான் எழுதப் படும், பிறகு. நாத்திக-அரசியல்வாதிகள் ஏன் விநியோகிக்க வேண்டும்? மடாதிபதிகள் செய்யலாமே? அந்தந்த அன்னதான திட்டங்களுக்கு கொடையளித்தவர்களைக் கூப்பீடு செய்திருக்கலாமே? நாத்திக மற்றும் விரோத கருத்துக்களைக் கூறி இந்து தூஷணத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அதற்கு நம்பிக்கை இல்லை என்றால், இதற்கு யோக்கியதை இல்லை என்றாகிறது.
ஊழலில் கைதானவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், நாத்திகர்கள் இவ்வேலையில் ஈடுபட வேண்டிய தேவையில்லை:னைந்துஅறநிலையத் துறையில் ஊழல்கள், மோசடிகள், பணம் கையாடல்கள், சிலைத் திருட்டு, நில அகபரிப்பு, டென்டர் என்று பலதரப்பட்ட பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வழக்குகள் போடப் பட்டுள்ள நிலை, கைதானவர்கள், பெயிலில்வெளி வந்தவர்கள், இடம் மாற்றம் செய்யப் பட்டவர்கள், திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் முதலியவர்கள் முதலியோருக்கு, அன்னதானம் செய்வதில் எந்த தார்மீகமும், யோக்கியதையும் இல்லை.
- ஆகவே, சிறிதும் வெட்கப் படாலமல் அர்சியல்வாதிகள் போல அவர்களும் இதில் ஈடுபடுவது வெட்கக் கேடு, அவமானம் மகாப் பாவம் கூட.
- நெற்றியில் குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு பக்தர்களை ஏமாற்ற வேண்டாம். கடவுள் மீது நம்ப்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் அத்தகைய முறைகேடுகள், சட்டமீறல்கள் முதலியவற்றை செய்திருக்க மாட்டார்கள்.
- இது அவர்களுக்கும், மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல. கோவில் பிரசாதம் – சாப்பாட்டை பக்தர்களுக்கு அல்லாமல், ஆஸ்பத்திரிக்கு பொட்டலங்களாகக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இந்து அறநிலையத் துறையின் கீழ் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
- சாப்பாட்டை அவ்வாறு கொடுப்பது நல்லது தான்! ஆனால், அக்குழுவில் ந. திருமகள் போன்றோர் இருப்பதாக செய்தி சொல்கிறது…
- முதல்வர் ஒரு நாத்திகர், இந்துமதத்திற்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லியவர்…….
- அந்நிலையில், இதெல்லாம் எங்கு போகும் என்று தெரியவில்லை….
இதேபோல, ரம்ஜான் கஞ்சிக்கு கொடுத்த அரிசியும், உண்வாக மாற்றி, எல்லோருக்கும் கொடுத்திருக்கலாமே?
“….அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு….” என்றால் எப்படி?:
“தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி: சேகர் பாபு சொன்னது போல, “இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பாட்டில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, என்பார்கள் போலிருக்கிறது!
- “இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு….” – இது வரை அறநிலையத் துறையில் ஊழல், மோசடி, பணம் கையாடல், கைது என்று எல்லாமே இருந்து வருகின்றனர். அப்படியென்றால் எந்த அளவுக்குச் செல்வார்கள் என்று தெரியவில்லை.
- “தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி” – இது, அந்த அம்மாவின் ஆணைப் படி, மாண்புமிகு அம்மா ஆட்சி என்று சொன்னது போலிருக்கிறது. நாத்திகராக இருந்து, இவர் என்ன வழி காட்டுவார் என்றும் தெரியவில்லை.
- “சிறப்பாக செயல்பட்டு” -? நாத்திகராக, கடவுள் மறுப்பு சித்தாந்தியாக, பல நேரங்களில் இந்துவிரோதித் தனமாக செயல்படும் போது, எப்படி, “சிறப்பாக செயல்படு”வார்கள் என்று தெரியவில்லை.
- “அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில்” – இதை +வாக அல்லது –வாக எடுத்துக் கொல்வது என்றும் தெரியவில்லை.
- “செயல்பாட்டில் ஜொலிக்கும்” – பொறுத்துப் பார்க்க வேண்டும்.
- “என்ற நம்பிக்கையில்” – நம்பிக்கைகளை தூஷிக்கும், கேலிபடுத்தும் இவர்கள் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
- “எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம்”, – இதையும் பொறுத்துப் பார்க்க வேண்டும்.
அன்னதானம் போன்ற சேவைகள் அமைதியாக நடந்து கொண்டே இருக்கின்றன: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரவை தொகுதிகளிலேயே அதிமுகவின் கோட்டையாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விஐபி தொகுதியாகவும் மாறிய ஸ்ரீரங்கத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தடம் பதித்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதும் ஏராளமானோர் ஆதரவற்றோர் சாலைகளில் படுத்து உறங்கி அங்கேயே காலத்தை போக்கி வருகின்றனர். மழை, புயல் அதிக வெயில் என்றாலும் அவர்களுக்கு இருக்க இடம் இல்லாமல் சாலை ஒன்றே அவர்களுக்கு வீடாக அமைந்து விடுகிறது[1]. அவர்களுக்கு உணவு வழங்குவது என்பது மனதிற்கு ஆறுதலை அளிக்கிறது என கூறிய ஜெய் பாரதமாதா சேவை மையத்தின் தலைவர் ஜெகதீஷ், சாலைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள், அவர்களுக்கு தொடர்ந்து 400 நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து வருகிறோம். என்றார்[2]. ஆகவே, அன்னதானம் போன்ற சேவைகள் அமைதியாக நடந்து கொண்டே இருக்கின்றன. இது இந்துமதத்தின் அங்கமாகும். அன்னத்தை மதிப்பது, போற்றுவது, பகிர்வது என்பதெல்லாம் சாதாரண விசயம். இதற்கெல்லாம் யாரும் விளம்பரம் கொடுக்கத் தேவையில்லை. தமிழகத்திலேயே சங்ககாலம் முதல், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், சோழர், விஜயநகர மன்னர், நாயக்கர், மராத்தியர் என்று எல்லோருமே செய்துள்ளனர். ஆனால், அவர்கள் நாத்திகரோ, இந்துவிரோதிகளோ அல்லர். விளம்பரத்தையும் தேடவில்லை. மாறாக உதவியுள்ளனர், பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
செக்யூலரிஸமாக திமுக ஆட்சி செயல்படவில்லை: அன்னதானத்தை வாங்கி, இதே போல உணவுப் பொட்டலங்களாக விநியோகிக்க வேண்டும். இப்பொழுது, ரம்ஜான் கஞ்சிக்கு அர்சி கொடுக்கப் பட்டு வருவது தெரிந்த விசயமே. ஆனால், அதே போன்று அரிசி கோவில்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை. வழிபடும் ஸ்தலங்கள் ஒரே மாதிரி பாவிக்கப் படவேண்டும் என்றால், அவ்வாறே செக்யூலரிஸ அரசியல் வாதிகள் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், நாத்திக திராவிட அரசியல்வாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர். பகுத்தறிவுப் போர்வையில் ஈவேராவும், பிறகு பெரும்-ஞானம் பெற்று “பெரியாராக” மாறிய பின்னரும், பிள்ளையார் சிலைகளை உடைத்ததும், ராமர்-முருகன் படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்தது, தூஷித்தது எல்லாம், தமிழக மக்கள் அறிந்ததே. இப்பொழுது வரை ஸ்டாலின் முதல், கருப்பர் கூட்டம் வரை, அத்தகைய இந்துவிரோத தூஷணங்களில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரச்சாரம் போன்ற / கிருத்துவ-துலுக்கக் கூட்டங்களிலும் அவ்வாறே ஸ்டாலின் முன்னாலேயே பேசப் பட்டன. ஆகவே, இத்தகைய வேடங்கள் தேவையில்லை.
© வேதபிரகாஷ்
14-05-2021
[1] நியூஸ்.18, தஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு, May 14, 2021, 23:03 IST
[2] https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-jai-bharat-mata-service-center-has-been-providing-free-food-for-over-400-days-due-to-corona-lockdown-vai-464069.html