இந்தவிவகாரத்தைஅமைச்சர்சேகர்பாபுவிடம்கொண்டுசென்றது: விகடன் இதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது – இது குறித்து வழக்கு விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சில மாதங்களுக்கு முன்பு ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் எனவும் கூறி சிலர் தருமபுரம் ஆதீனம் தரப்பை மிரட்டியிருக்கின்றனர். எனினும், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இதில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்கள்.
மஹாபாரதயுத்தம்தான்நடந்துகொண்டிருக்கிறது: இவையெல்லாம் நிச்சயமாக அரசுக்கும், மடத்திற்கும் உள்ளே தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. குற்றம், விதிமுறைகள் மீறல், சட்டங்கள் மீறல் என்றெல்லாம் வந்தால், நிச்சயமாக அத்தகைய சட்டத்தை மீறும் நபர்கள் உரிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம், மக்களின் கவனத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்தப் படுவதில்லை. சட்டாமீறல்களுக்கும் அவ்வாறே உரிய தண்டனைகள் கொடுப்பதில்லை, கிடைப்பதில்லை. இதனால், சட்டங்கள் பிழையாவதில்லை, ஆனால், தருமம் மதிக்கப் படாததால், அநியாயம் உச்சத்தில் செல்கிறது. அந்நிலையில், அத்தகைய அநியாயம், அராஜகம், அதர்மம் என்றே எல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுகிறவன் பைத்தியக் காரன் ஆகிறான். யாரும் அவனை மதிப்பதும் இல்லை. இதனால் தான், பலர், நமக்கெதற்கு வம்பு என்று அமையாகவும் இருந்து விடுகின்றனர்.
வழக்குப்பதிவு, கைதுமுதலியன: இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 323, 307, 389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28), ஆடுதுறை வினோத் (32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[1]. மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[2].
முதலமைச்சரின்ஆணைப்படிதுரிதமாகசட்டநடவடிக்கைஎடுத்ததற்குதருமபுரம்ஆதீனம்நன்றிதெரிவித்து: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[3]. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது[4]. அப்படியே இந்த விவகாரம் அமுங்கிவிட்டது. தற்போது மீண்டும் அகோரம் தலைமையில் மிரட்டிவந்திருக்கின்றனர். இதில் அப்செட்டான ஆதீனம் தரப்பு, இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, உடனடியான நடவடிக்கை – கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எப்படியென்றால், இதெல்லாம் ஏதோ சொல்லி வைத்தால் போல நடந்த விவகாரங்களா அல்லது அப்படியே அமுக்கி விடலாம் என்று தீர்மானித்து, அமுக்க முடியாமல் போனதால், நடந்தேறிய நிகழ்வுகளா என்பதெல்லாம் ஆண்டவன் தான் பிரகடனப் படுத்த வேண்டும்..
2018ல்திருவாவடுதுறைஆதீனம்திருவிடைமருதூர்கட்டளைசுவாமிநாதன்தம்பிரான்புகார்: `பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் குள நிலத்தடி நீரைக் காக்கவும் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணிகளை அரசின் அனுமதியோடு செய்து வருகிறோம்[5]. இந்தப் பணியைச் செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் பி.ஜே.பி நகரத் தலைவர் ராஜு உள்ளிட்ட சமூக விரோதிகள் எங்களை மிரட்டுவதோடு, வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரபரப்புகின்றனர். மேலும், நேரிலேயே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் கட்டளை சுவாமிநாதன் தம்பிரான் குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இப்பொழுதும், ஒரு பிஜேபி தலைவர் சம்பத்தப் பட்டுள்ளது தெரிகிறது. ஆக, இந்துமத்ததைக் காக்கிறோம் என்று சொல்கின்ற பிஜேபிகாரர்களும் இவ்வாறு மாறி விட்டனரா அல்லது திராவிடத்துவ வழியில் நடக்க முயற்சிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் தலைவர் முதல், வானதி சீனிவாசன் வரை எங்களுக்கும், பெரியாருக்கும் சித்தாந்த ரீதியில் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டையும் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். அரசியலுக்காக, தேர்தலுக்காக சொன்னோம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால், நடைமுறையில் செயல்படுத்துவது, அப்படியே நடந்துகொள்வது என்பது வேறு, அது முரண்பாடானது, பயங்கரமானதும் கூட.
ஆன்மீகக்கூட்டா, அரசியல்கூட்டா?: சாம-தான-தண்ட-பேத முறைகளில் கூட்டணி முயற்சிகள், பேரங்கள், வற்புருத்தல்கள் போன்றவையும் நடக்கலாம், நடத்தப் படலாம். அந்நிலையில், மதம் பந்தாடப் படுகிறது. மதத்தலைவர்கள் ஆட்டக் காய்களாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். தனித்திருக்கல்லாம், என்று ஒதுங்கியிருந்தாலும், ஏதோ ஒரு வழியில், முறையில், அவர்களும் இழுக்கப் படுகறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில், மடங்கள்-கோவில்களின் சொத்துக்கள் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் இருப்பதால், அவற்றை அனுபவிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்கார விவசாயிகள், போன்றவர்கள் தொடர்ந்து பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். ஆட்சி-அதிகாரம்-காலம் மாறும் பொழுது, அவ்வப்பொழுது, விசயம் வெளிவ்ரும் பொழுது, மற்றவர்களும் அதில் நுழைக்கின்றனர். அந்நிலையில் பங்கு போடும் நிலைக்கு வரும் பொழுது, புதிய சர்ச்சைகள், தகராறுகள், சண்டைகள் என்றெல்லாம் வருகின்றன. ஏதாவது ஒரு வகையில் சமரசம் ஆகவில்லை என்றால், அரங்கேறி விடுகிறது. ஆகவே, எது எப்படியாகிலும், மடங்கள் போற்றப் படவேண்டும். மடாதிபதிகளிம் கௌரவம் காப்பாற்றப் அடவேண்டும்.
திராவிடத்துவஆட்சியில்மடத்தில்பிரச்சினை 25-02-2024ல்கொடுக்கப்பட்டபுகார்: தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கும் நேரங்களில் சர்ச்சைகள் எழுவது சாதாரண விசயம் எனலாம். அக்கட்சி சித்தாந்திகளுக்கு விருப்பமான செய்திகளாக அமையும் என்பது மட்டுமல்லாது, இதை வைத்த்க் கொண்டு ஒரு பக்கம் இந்து மதத்தைத் தூஷிக்க பயன்படுத்தும், இன்னொரு பக்கம், “இதோ பார், நாங்கள் தான் படங்களைக் காக்கிறோம்,” என்பது போலக் காட்டிக் கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளோம். மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது[1]. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்[2]. இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புகார் மனு அளித்தார்[4].
தலைமைமடாதிபதிதொடர்புடையஆபாசவீடியோமற்றும்ஆடியோ: அதில் கூறியிருப்பதாவது[5]: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்[6]. இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக் கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார்[7]. பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர்[8]. மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர்[9]. இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்[10]. அப்படியென்றால், கண்ணால் பார்த்த சாட்சிகளே நிறையே பேர் இருக்க வேண்டுமே. மடத்திற்குள் கேமராக்கள் எல்லாம் இல்லையா, அவர்கள் வந்து சென்றதற்கான ஆதரங்கள் இல்லையா?
உயிருக்குபயந்து, மடத்தில்உள்ளவர்களிடம்பணம்பெற்றுத்தருவதாகதெரிவித்தேன் – ஆதீனம்: அந்த அளவுக்கு என்ன நடந்தது என்றும் புதிராக உள்ளது. திராவிடக் கட்சிகள் மடத்து சொத்துகள் நிர்வாகம், குத்தகை, நிலம் வாங்குதல்-விற்றல்-பட்டா போடுதல், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றெல்லம் கவனித்தால், அத்தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். கட்சிகள், ஆட்சிகள் மாறினாலும், சொத்துக்களை அனுபவிப்பத்தில் எந்த குறையும் ஏற்படாமல், சம்பந்த பட்டவர்கள் நன்றாகவே கவனமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, பகிர்வுகளில் பிரச்சினை எழும் பொழுதும், சமரசம் செய்து கொள்ளப் படுகிறது. எல்லைகளை மீறும் பொழுது, இத்தகைய “வெடிப்புகள்” காணப் பட்டு, உணரப்படுகிறது. இதற்கெல்லாம், மதம், தர்மம், நியாயம், முதலியவை தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசியல், அதிகாரம் தீர்வாக இருக்க முடியாது. பொது மக்கள் முன்பே, இவையெல்லாம் தொடர்ந்து, தங்களது பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, ஆன்மீகம் என்று பேசிக் கொண்டு, மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால், பக்தர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.
குறிப்பிட்டநபர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கபோலீஸாரில்புகார்: பின்னர் இது தொடர்பாக –
செம்பனார்கோயில் தனியார் (கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,
செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,
திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க. அகோரம்,
திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்,
வினோத்,
விக்னேஷ் –
ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்[11]. மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம்[12]. அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார்[13]. இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர்[14]. எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றம்சாட்டப்பட்டசெந்தில்என்பவரின்பெயரைநீக்ககாவல்துறையிடம்விருதகிரிகொடுத்தமனு: இதற்கிடையில் திடீர் திருப்பமாக மடத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில் என்பவரின் பெயரை நீக்க காவல்துறையிடம் விருதகிரி மனு ஒன்றை அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த மனுவை மடத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எடுத்துவந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தில், “நான் தங்களிடம் கொடுத்துள்ள புகாரில் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக, தொடர்பு கொண்டு என்று பதற்றத்தில் கணிணியாக்கம் செய்யும்போது கவனமின்மையால் குறிப்பிட்டுவிட்டேன். “அவர் எங்கள் மடத்தின் நேர்மையான உண்மையான பணியாளர். ஆதீனத்தின் நேரடி உதவியாளராகப் பணிபுரிந்து இதுநாள்வரை தவறான நிலைப்பாட்டை எடுத்ததில்லை[15]. “நான் அவரை புகாரில் குறிப்பிட்டுள்ளது எனது கவனமின்மையே காரணமாகும் அவருக்கும் இந்தப் புகாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே நான் கொடுத்துள்ள புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும்,” எனக் கூறியிருந்தார்[16]..
[9] இடிவி.பாரத், மோடிக்குசெங்கோல்கொடுத்தஆதீனத்திற்குமிரட்டல் – பாஜகமாவட்டத்தலைவர்தலைமறைவு!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Feb 29, 2024, 12:39 PM IST; Updated : 19 hours ago.
[11] புதியதலைமுறை, ஆபாசவீடியோஇருப்பதாகதருமபுரம்ஆதினத்தைமிரட்டியவிவகாரம்; 4 பேர்கைது..முக்கியபுள்ளிகள்தலைமறைவு. Uvaram P, Published on: 29 Feb 2024, 7:43 pm.
ஆரணி–செய்யாறுநெடுஞ்சாலையில்விநாயகர்கோவில்இடிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.வி., நகரத்திலிருந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன[1]. மேலும், சாலை மையத்தில் விநாயகர் கோவிலும் இருந்தது. மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்[2]. மேலும் விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கபட்டது[3]. விநாயகர் கோவிலை இடித்து தரை மட்டமாக்கினார்கள்[4]. இதனால், ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில், வருவாய்த்துறையினர் சாலையின் மையத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்[5]. பழமை வாய்ந்த கோவிலை இடித்து தரைமட்டாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதட்டத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்[6].
18ம்நூற்றாண்டுகோவில்இந்தியதொல்லியல்துறைஅனுமதிஇல்லாமல்இடிக்கமுடியுமா?: 300 ஆண்டுகளாக இருக்கும் கோவில் எனும்பொழுதே, அந்த சாலைகள், பேரூந்து நிலையம், வீடுகள் எல்லாமே பிறகு தான் வந்துள்ளன. அப்படியென்றால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தான், அவை கட்டப் பட்டிருக்க வேண்டும். கோவில் மதிற்சுவற்றை நீக்கித் தான், ஆக்கிரமிப்பே ஆரம்பிக்கிறது. எனவே, கோவில் ஆக்கிரமிக்கப் பட்டது என்பது பொய்யாகிறது. முன்பு செய்யாறில் இதே போன்று ஒரு கோவிலை இடிக்க சில ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற போது, கைது செய்யப் பட்டனர். இவர்கள் எல்லோரும் இந்துக்கள் தான் எனலாம். ஆமாம், ஆனால், திராவிடத்துவத்தால், நாத்திகத்தால், ஊறிப்போன, இந்துவிரோதிகளாகச் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் என்றால், 18ம் நூற்றாண்டு கோவில் என்றாகிறது. பிறகு, அதனை இவர்கள் எப்படி இடிக்க முடியும். 100 ஆண்டு காலம் தொன்மை என்றால் இந்திய தொல்லியல் சட்டத்தின் கீழ் புராதனமானது என்றாகிறது. பிறகு, இந்திய தொல்லியல்துறை அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஆனால், 300 ஆண்டுகளாக, ரோடு போடுவது என்றெல்லாம் நடந்தேறியுள்ளன.
கோவில்கள் இடிப்பது சட்டப்படி அல்லது திட்டப் படியான செயலா?: இப்பொழுது தான் கோவில் இடைஞ்சலாக இருப்பது தெரிகிறது போலும் தொடர்ந்து இப்படி கோவில்களை இடித்து வருவது, ஏதோ ஒரு அசாதாரணமான செயல் போலத்தான் தென்படுகிறது. முன்பு திமுக ஆரம்ப காலத்தில் ஈவேரா / பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்து வந்தது, ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, ஊர்வலம் சென்றது முதலியவை ஊக்கப்படுத்தப் பட்டது எனலாம். அதே போல, இப்பொழுதும், திமுக ஆட்சிக்கு வந்ததும், இத்தகைய செய்திகள் தினம்-தினம் வருகின்றன. இந்து அறநிலையத் துறை என்பது கூட அறநிலையத் துறை என்று தான் குறிப்பிடப் படுகிறது. ஏதோ, இது செக்யூலரிஸ ரீதியில் பொதுவானது, அனைவருக்கும் பொதுவானது போன்ற விதத்தில் குறிப்பிடப் படுகிறது. அதே போல கோவில் ஊழியர் சங்கங்களும் பெயர் வைத்துக் கொண்டு செயல்படுகின்றன.
திமுகஆட்சியில்கோவில்கள்இடிக்கப்படுவதுதற்செயலானவிசயமா, அசாதரணமானநிகழ்வா?: திமுக ஆட்சியில் இடிக்கப் பட்டது எத்த்னை கோவில் என்ற பேச்சு எழுந்த போது, 100, 120, 150 என்றெல்லாம் கணக்குப் போட்டு, பிறகு குறைக்கப் பட்டது. ஆனால், கோவில்களை இடித்தது ஒப்புக் கொள்ளப்பட்டது. கோவில் இடிக்கப் பட்ட விவரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்[7]. இதில் அக்கிரமித்துக் கட்டப் பட்டது, நூறாண்டுகளுக்கு முன்னரே கட்டப் பட்டது என்பதை சுலபமாகப் பிரித்துக் காணலாம்[8]. நிச்சயமாக 1947-க்கு முன்னர் இப்பிரச்சினை வராது-வரக்கூடாது. பிறகு எப்படி 100-ஆண்டுகளுக்கு மேலான கோவில்களையும் இடிக்கின்றனர் என்பது புரியவில்லை. செம்மொழி மாநாட்டின் போதும் சில கோவில்கள் இடிக்கப் பட்டன[9]. செந்தமிழ் மாநாட்டிற்காக சாலை அகலப் படுத்த வேண்டும் என்று கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின[10].
இந்துக்களால்என்னசெய்யமுடியும்?: ஒரு பக்கம் கோவில் கும்பாபிஷேகம், இன்னொரு பக்கம் கோவில் இடிப்பு. இந்துக்கள் என்ன செய்ய முடியும்?
தினமும் பேப்பரை / டிவியைப் பார்த்தால், ஏதோ கோவில்களில் தான் பிரச்சினை என்பது போல செய்திகள் வெளியிடப் படுகின்றன.
கோவிலில் தகராறு, போலீஸார் நுழைந்தனர், பக்தர்கள் அவதி, அறநிலைத் துறையினர் தலையீடு, அமைச்சர் எச்சரிக்கை,
கோவிலில் சிலைகள் உடைப்பு, உண்டியல் திருட்டு, அம்மன் நகைகள் காணோம், கோவில் கொள்ளை, திருட்டு, இப்படி……
கோவில் இடிப்பு, ஜேசிபி / பொக்லைன் எந்திரம் வைத்து இடிப்பு, கோவில் தரை மட்டம், பக்தர்கள் எதிர்ப்பு, போலீஸார் குவிப்பு…..
பக்தர்களுக்குள் சண்டை, கலவரம் எற்படும் நிலை, கோவிலுக்கு பூட்டு, அதிகாரிகள் சீல் வைப்பு,…..கோர்ட் ஒப்புதல்..
300 வருட பழமையான கோவில் என்றாலே, ஏ.எஸ்.ஐ.யிடம் (இந்திய தொல்லியல்) அனுமதி தேவையே, பெற்றார்களா?
எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், ஆகமம் இல்லையென்றால் சாதகம் தான், பாதகம் இல்லை, சோதனை காலம் தான்!
நாத்திகர்களுக்குத் தான் கோவில் மீது, எவ்வளவு அக்கரை, அல்லேலூயா என்று கத்தி, இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுகிறான்!
கோவிலுக்குள் கக்கூஸ், பாத்ரூம் கட்டிக் கொண்டு வாழவா அறநிலையத் துறை? பிறகு உள்ளே வராதே என்று ஏன் கத்துகிறாய்?
எந்தவிதத்திலும், உனக்கும், கோவிலுக்கும் ஒத்துப் போவதில்லையே, பாவம் பெண்டாட்டி தான் சாம் கும்பிடவும் தேவையாகிறது!
நாத்திகனே, பெரியாரிஸ இந்து விரோதிகளே, பிள்ளையார் சிலை உடைத்தவர்களே, வெளியேறு என்ற கோஷம் செயலாகும்!
நகரமயமாக்கம் போர்வையில் கோவில்களை குறிவைத்து இடிப்பது என்ன?: நகரமயமாக்கம் நோக்கில், ரீதியில், சாலைகளை விரிவு படுத்துதல், புதிய சாலைகளை போடுதல், இடையில் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகள் கடந்த 30-35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தனியார் வீடுகள், நிலங்கள் என்று வரும்பொழுது, அவற்றிற்கு இழப்பீடு கொடுத்து, கையகப் படுத்தப் படுகிறது. புராதன கட்டிடங்கள், கோவில்கள் போன்றவை வரும் பொழுது, பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்து, திட்டம் போடுவது, வேலை செய்வது பணிக்கப் பட்டுள்ளது. இல்லை, அவை இடம் மாற்ற வேண்டும். அதாவது, அப்படியே கட்டித்தரவேண்டும். இவ்வாறு தான் ஒப்பந்தம் போடப் படுகிறது. இருப்பினும், பெருவாரியாக, இச்சரத்துகள் மீறப் படுகின்றன. ஒப்பந்தக் காரர்கள் அரசியல்வாதிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்-நண்பர்களாக இருக்கும் பொழுது மீறப் படுகின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் கோவில்களுடைது தான். அவற்றை அபகரித்து தான், ரோடுகள், பேரூந்து நிலையங்கள், கட்டிடங்கள் எல்லாம் கட்டப் படுகின்றன. ஆகவே, கோவில்கள் என்றும் இடைஞ்சலாக இருப்பதில்லை. அவற்றின் நிலங்கள் ஆக்கிரமிக்கப் படும் பொழுது, அவை அவ்வாறு காணப் படும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. யாரும் நடுத்தெருவில் கோவிலைக் கட்ட மாட்டார்கள். ஆகவே, அத்தகைய பேச்சு, வாதம், முழுப்பொய்யாகிறது. எனவே, கடைசியில் இவையெல்லாம் என்ன அன்று ஆராயும் பொழுது, இந்துவிரோதம் தான் வெளிப்படுகிறது.
17-03-2923 – காஞ்சனாமனநிறைவுடன்கூறியது: காஞ்சனா, கும்பாபிஷேகம் நடந்த பிறகு[1], “அந்தகாலத்தில்நான்பிரபலநடிகையாகஇருந்தாலும்அவருடன்நானும்திருப்பதிசெல்வதைவழக்கமாககொண்டிருந்தேன். என்தங்கைகடவுளுக்காகதன்னையேஅர்ப்பணித்தவர். சிலகாரணங்களால்பெற்றோர், எனக்குஎதுவும்செய்யவில்லை. அவர்களின்சொத்துக்கள்எல்லாம்கைவிட்டுபோகும்நிலைஏற்பட்டது. நான்சம்பாதித்தசொத்துக்கள்கூடபறிபோகும்நிலைவந்தது. இந்தசூழலில்தான்தி.நகர்சொத்துக்களைகோவிலுக்குஎழுதிவைக்கநான், என்தங்கை, மைத்துனர்மூவரும்ஒருமனதாகதீர்மானித்துகோவிலுக்குதானமாகவழங்கினோம்.தற்போதுஅந்தஇடத்தில்பத்மாவதிதாயார்கோவில்எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம்எங்களின்ஜென்மம்சாபல்யம்அடைந்துவிட்டது.என்னைஒவ்வொருநொடியும்பெருமாள்தானகாப்பாற்றிவருகிறார். வாழ்நாள்முழுவதும்அவர்நினைவுஒன்றேபோதும்…,” இவ்வாறு கூறினார்[2].
காஞ்சனாஏன்நிலத்தைதானமாகக்கொடுத்தார்?: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திருமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலான வெங்கடேஸ்வராவை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர்[3]. காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை TTD நிர்வாக அதிகாரி I.Y.R-யிடம் ஒப்படைத்ததாக கோயில் வட்டாரங்கள் PTI இடம் தெரிவித்தன[4].. நிலமும் அதில் உள்ள ஒரு பழைய அமைப்பும் ஜி.என். சென்னையில் உள்ள செட்டி தெருவில் உள்ள அந்த இடத்தில் கல்யாண மண்டபம்/திருமண மண்டபம் கட்ட TTDயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன[5]. ஆனால், காஞ்சனா எப்படி திடீரென இறைவனின் இருப்பிடத்திற்கு ஒரு பெரிய காணிக்கையை அளித்தார் என்பது மர்மமாகவே உள்ளது. நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்ததை நினைவுகூரலாம், மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் அவரை வெளியேற்றியதால் அவருக்கு வீடு இல்லை என்று செய்திகள் வந்தன. டிடிடிகளின் இணைச் செயல் அலுவலர் டாக்டர் என்.யுவராஜ், எஸ்டேட் அலுவலர் ஸ்ரீ சேஷய்யா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[6].வழக்கைத் தாக்கல் செய்யும் போது அவருக்கு வயது 41 மற்றும் வழக்கில் வெற்றி பெறும் போது 72 வயது. சொத்து அவர்களின் பெற்றோரால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது, பின்னர், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உயில் செல்லாது, அது சட்டப்பூர்வ வாரிசுகளான காஞ்சனா மற்றும் அவரது சகோதரிக்கு வந்தது. இந்த 31 ஆண்டுகளில், இது பலரால் கைப்பற்றப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, சகோதரிகள் வழக்கை வென்றனர், அவர்கள் அதை TTDக்கு நன்கொடையாக வழங்கினர்.
2012 முதல் 2018 வரைஆக்கிரமிப்பில்இருந்தது: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்வாமி அறக்கட்டளைக்கு வாடகைக்கு விட்டபோது, 11.7.2012 தேதியிட்ட குத்தகைப் பத்திரத்தை, குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தினசரி பூஜை செய்யும் பூசாரி, அந்த குடியிருப்பில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. , இது சுமார் 600 சதுர அடி அளவிலான ஒற்றை படுக்கையறை பிளாட் ஆகும். அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் குடியிருப்பில் இருப்பதாக அறக்கட்டளை பத்திரம் காட்டினாலும், அந்த குடியிருப்பை குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு வைத்தது போல் எடுக்க முடியாது. இதனால், அந்த இடம் 11-07-2012 மற்றும் 10-04-2018 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது[7].
இந்நிலம்ஆக்கிரமிப்புபற்றியசரிபார்க்கமுடியாதசெவிவழிகதைகள்: ஆக்கிரமிப்பு பற்றி சொல்லப் படும் செவிவழி செய்திகள், இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனனில் அவையெல்லாம் மறைக்கப் பட்டு விட்டன போலிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் மற்றவர் இத்தகைய கதைகளை அளந்து விடுகிறார்கள்……………நாயுடு டீக்கடை வைத்திருந்தார்……….சசிகலா கூட்டம் அபகரித்துக் கொண்டது……….மூவேந்தர் கட்சி, சேதுராமன் அபகரித்து (மீனாக்ஷி மருத்துவமனை, காஞ்சிபுரம்), மீனாக்ஷி ஹோடல் கட்டினார்……………முன்பே கோவில் இருந்தது…………பிறகு நீதிமன்ற ஆணை மூலம் அது இடிக்கப் பட்டது. இருப்பினும், மீனாட்சி பவன், மற்றும் சம்பந்தப் பட்ட கம்பெனிகள் அவ்விடத்தில் இருந்திருக்கின்றன[8]. ஜூலை 3ம்தேதி, 2011 அன்று, “பொன்னியின் செல்வன்” கூட்டமும் நடந்திருக்கிறடது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம். இது பற்றியும் ஒரு வழக்கு உள்ளது. காஞ்சனா போன்ற நிலை அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. தியாகராயநகர் தான் சம்பந்தப் படுகிறது.
சேதுராமன்குடும்பம்சம்பந்தப்பட்டநிலவழக்கு: மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது[9]. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்[10]. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.
கோவில்நிலங்கள்அபகரிப்பு, ஆக்கிரமிப்புமுதலியவைதடுக்கப்படுமாஅல்லதுதொடருமா?: எது எப்படியாகிலும், சமீப காலங்களிலும் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளிக்கும் சேவை தொடர்கிறது. முன்பு கல்வெட்டுகளில் பதிவாகி, பிறகு முகமதியர், கிருத்துவர், விடுதலைக்குப் பிறகு பகுத்தறிவு பெரியாரிஸ்ட், அண்ணாயிஸ நாத்திகர் போன்றோர் ஆக்கிரமிப்புகளையும் கடந்து இருக்கும் நிலங்கள் முறையாகப் பயன்படுத்தினால், அந்நிலங்கள் மூலம் வருவாயும் கிடைக்கும், கோடிக்கணக்கில் மக்கள் பயனடைவ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்ல்லாம் பேசும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தைப் பற்றி பேசுவதில்லை. அதாவாது, எங்கெல்லாம் பெரும்பான்மையில் நன்மை பொது மக்களுக்குச் சென்றடையுமே, அங்கெல்லாம் அவர்கள் மட்டும் பலனடைய வேண்டு, சம்பாதிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் நடிகை காஞ்சனாவாக இருந்தாலும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டேயாக இருந்தாலும், நீதி மன்றங்களில் போராடத்தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது!
[3] Indian Express, Kanchana donates Rs 15 cr land to Tirumala Tirupati Devasthanam, Written by Agencies, Tirupati | First published on: 26-10-2010 at 12:11 IST; October 26, 2010 12:11 IST.
[8] MEENAKSHI BHAWAN at 44/1 GN Chetty Road, T. Nagar, The Place is located between the Jain Temple and Residency Towers in GN Chetty Road. 3rd July 2011, 28155155
MEENAKSHI HOTELS & ENTERTAINMENT PRIVATE LIMITED’s Corporate Identification Number (CIN) is U55101TN1992PTC022336.- Nalliah Servai Sethuraman and Ramesh Sethuraman – Directors.
Smile Amusement & Hospitality private limited was at the first floor; directors are – Sethuraman Gurushankar, Chandrasekharan Kamini and Nalliah Servai Sethuraman.
[9] தமிழ்.ஒன்.இந்தியா, டாக்டர்சேதுராமனின்மூத்தமகன், மகள், மருமகனுக்குநீதிமன்றம்பிடிவாரண்ட்!, By Jayachitra Updated: Friday, June 28, 2013, 17:55 [IST]
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?
.
திராவிடத்துவஆட்சியில், திராவிடமாடலில், திராவிடஸ்டாக்குகளின்இந்துவிரோதசெயல்பாடுகள்அதிகமாகவேவெளிப்பட்டுவருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.
சத்தியவேல்முருகனைநியமித்ததைஎதிர்த்துவழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.
தாக்கல்செய்தமனுவில்உள்ளது[7]: “ஆகமகோவில்களைகண்டறிவதற்காகஅமைக்கப்பட்டகுழுவின்தலைவருடன்ஆலோசித்து, உறுப்பினரைநியமிக்கவேண்டும்என, உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைமீறும்வகையில், சத்தியவேல்முருகனைநியமித்து, உத்தரவுபிறப்பிக்கப்பட்டுஉள்ளது. உத்தரவில், குழுதலைவருடன்ஆலோசித்ததாகஎதுவும்இல்லை. ஆலோசனைநடத்தியிருந்தால், உத்தரவில்குறிப்பிடப்பட்டுஇருக்கும். எந்தஅடிப்படையில், குழுஉறுப்பினராகநியமிக்கசத்தியவேல்முருகன்தகுதிபெறுகிறார்என்பதைவெளிப்படுத்தவில்லை. ஆகமவிதிகளைபற்றிபொய்தகவலைபரப்புவதுதான், அவரதுநோக்கம். இதை, அரசுபரிசீலிக்கதவறிவிட்டது. சமஸ்கிருதம்பற்றிசத்தியவேல்முருகனுக்குதெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருதமொழியில்தான்உள்ளன. எனவே, நியமனஉத்தரவுக்கு, தடைவிதிக்கவேண்டும்; ரத்துசெய்யவேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.
விசாரணையில் நீதிமன்றம் தடைவிதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.
சத்தியவேல்முருகன்யார்? – தற்சிறப்புக்குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].
சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.
மூன்றுகோவில்களையும்இடித்தேன்– என்றுடி.ஆர். பாலுபேசியது: வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பல சமயங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆா்.பாலு[1]. 28-01-2023 அன்று மதுரையில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில்[2], “எனதுதொகுதியில் 100 ஆண்டுகள்பழமையானசரஸ்வதிகோவில், லட்சுமிகோவில், ஜிஎஸ்டிசாலையில்உள்ளபார்வதிகோவில்எனமூன்றுகோவில்களையும்இடித்தேன். எனக்குவாக்குகிடைக்காதுஎன்றுதெரியும். ஆனால். எப்படிவாக்குகளைபெறுவதுஎன்பதும்எனக்குதெரியும். கோவில்களைஇடித்தால்எனக்குவாக்குகள்கிடைக்காதுஎனகட்சிதோழர்கள்எச்சரித்தனர். ஆனால், வேறுவழியில்லைஎன்றுநான்அவர்களிடம்கூறினேன். “கோயில்தேவைஎன்றுகூறினேன். சிறந்தவசதிகளுடன்சிறந்தகோவில்களைகட்டினேன். இதுபோல்பலஇடங்களில்மதநம்பிக்கைகளைசமரசம்செய்துதிட்டங்களைநிறைவேற்றிஉள்ளேன்,” என டி.ஆர் பாலு கூறினார்.
சேதுசமுத்திரம்கப்பல்கால்வாய்த்திட்டத்தைநிறுத்தும்மத்தியஅரசின்முடிவுரயிலைநடுவழியில்திடீரெனநிறுத்துவதுபோன்றது:மேலும், தேசம்வளா்ச்சிபெறவேண்டும்என்பதற்காகபல்வேறுஅரசியல்கட்சியினா்முன்மொழிந்ததன்பேரில்சேதுசமுத்திரம்கப்பல்கால்வாய்த்திட்டம்செயல்படுத்தப்பட்டது. சேதுசமுத்திரம்கப்பல்கால்வாய்த்திட்டத்தைநிறுத்தும்மத்தியஅரசின்முடிவுரயிலைநடுவழியில்திடீரெனநிறுத்துவதுபோன்றது,” என்றார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கி.வீரமணி, முதலியோர் இருந்தனர். “மத்தியஅரசுஅறிவியல்மற்றும்பகுத்தறிவுசிந்தனையைப்பயன்படுத்தாமல், மதவழிகளைப்பின்பற்றாமல்ராமா்பாலம்சேதமடைந்துவிடும்என்பதுபோன்றஆன்மிககருத்துக்களைகூறிசுமார் 23.5 கி.மீபணிகள்மட்டுமேமேற்கொள்ளவேண்டியநிலையில்திட்டத்தைநிறுத்துகிறதுஎன்றுபாலுகுற்றம்சாட்டினார். இந்தத்திட்டம்நிறைவேற்றப்பட்டிருந்தால்ஆண்டுக்குரூ.750 கோடிலாபம்கிடைத்திருக்கும். தென்மாநிலங்கள்வளா்ச்சிபெறும். குறிப்பாகதமிழகம்வளா்ச்சிபெறும். மக்கள்அனைவரும்பகுத்தறிவுடன்உள்ளனா். அவா்களைமதத்தின்பெயரால்இனிஏமாற்றமுடியாது,” என்று டி.ஆர். பாலு கூறினார்.
திமுகசேதுசமுத்திரதிட்டத்தில்திடீரென்றுஆர்வம்காட்டுவது: இம்மாத தொடக்கத்தில், சேதுசமுத்திரத் திட்டத்தை மேலும் தாமதிக்காமல் மத்திய அரசை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், இத்திட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய நீர்வழித் திட்டம், சேதுசமுத்திரம் திட்டம் பால்க் ஜலசந்தியை மன்னார் வளைகுடாவுடன் இணைக்க முன்மொழிகிறது. இந்த திட்டம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பொருளாதார வளத்தை கொண்டுவருவதற்கான முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், இலங்கையை அடைய ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் ‘ராம் சேது’ பாலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறும் வலதுசாரிகளின் எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. சேதுசமுத்திரம் திட்டத்தின் மூலம் கப்பலின் பயணத்தை கிட்டத்தட்ட 650 கி.மீ வரை குறையும். எவ்வித சான்றாவணமும் இல்லாமல், நாட்டின் தென்கோடி முனையான ராமேசுவரத்தில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டி.ஆர். பாலுபேசியவிடியோவைதமிழகபாஜகதலைவர்அண்ணாமலைதனதுட்விட்டர்பக்கத்தில்பகிர்ந்தது: இந்நிலையில், டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், “100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து, கோவிலை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”. வீடியோவில், பாலு நக்கலாகவும், திமிராகவும், பேசியது நன்றாகவே தெரிகிறது. இதைக் கேட்டு திமுகவினர் சிரிப்பதும் தெரிகிறது. அதாவது, அக்காரியத்தை பெரிய சாதனை போலத்தான் பேசியது தெரிகிறது.
100 வருடமசூதியையும்இடித்துள்ளோம்: அதில், நான்கு வழிச்சாலை அமைக்கிற நேரத்தில் 100 வருட கோவில், கொல்கத்தாவில் 100 வருட மசூதியை இடித்து இருக்கேன்[3]. கோவிலை இடித்து இருக்கேன், மசூதியை இடித்து இருக்கேன், மாதா கோவிலை இடித்து இருக்கேன்[4]. வழியில் இருக்கும் வீடுகளை எல்லாம் இடிக்கும் போது மக்கள் வந்தாங்க, இதுகுறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு என்னை அழைத்து, இப்படி 100 வருட மசூதியை எல்லாம் இடித்தால் வாக்கு வங்கி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும். இதெல்லாம் சரியான முடிவா எனக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில், லெட்சுமி கோவில் , பார்வதி கோவில், இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன்.
எனக்குஒட்டுவராதுன்னுதெரியும். ஆனா, ஒட்டுஎப்படிவரவைக்குறதுனும்தெரியும்: எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஒட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு வேறு வழி கிடையாது. அவர்களுக்கு என்ன வேற கோவில் கட்டி தர வேண்டும், இதை விட சிறந்ததாக, 100, 200 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் செய்து தரேன்னு சொல்லி, அந்த இடத்தில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து விட்டு பக்கத்தில் கோவில் கட்டி கொடுத்தேன் என்று தான் டி.ஆர்.பாலு பேசியுள்ளதாக அந்த வீடியோவை வெளியிட்டு திமுகவினர் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்[5]. இப்படியாக அவருடைய முழுமையான வீடியோவில் அவர் பேசியுள்ள நிலையில், அதில் சிறு பகுதி மட்டும் எடிட் செய்யப் பட்டு பகிரப்பட்டு வருவது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது[6], என்று புதியதலைமுறை போன்ற ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், கோவில்கள் இடிக்கப் பட்ட உண்மையினை மறுக்கவில்லை.
அண்ணாமலைமறுப்பு: இதற்குள், திமுக அமைச்சர்களும் அந்த வீடியோ எடிட் செய்யப் பட்டது என்று பேசியுள்ளனர். அதற்கும், அண்ணாமலை, பதில் அளித்துள்ளார், “அமைச்சர்கே.என்.நேருமற்றும்டி.ஆர்.பாலுபேசியவற்றைநான்எடிட்செய்ததாகநிரூபித்தால்அரசியலைவிட்டுவிலகதயார், நிரூபிக்கவில்லைஎனில்முதலமைச்சர்பொதுமன்னிப்புகேட்கவேண்டும்[7]. எடிட்செய்துவெளியிட்டதாகஎ.வ.வேலுசொல்லியுள்ளார்[8]. கோயில்இடிப்புதொடர்பாகடி.ஆர்பாலுபேசியவீடியோமுழுமையானது. வீடியோதடவியல்ஆய்வுசெய்துடேப்எடிட்செய்யப்பட்டதுஎனநிரூபணமானால்அரசியலைவிட்டுவிலகதாயார். அவர்சொல்லும்இடத்தில்கே.என்.நேரு, ஈ.வி.கே.எஸ்பேசியஒரிஜினல்வீடியோவைதரத்தயார்அதனைமுதலமைச்சர்தடயவியல்ஆய்வுக்குஉட்படுத்திகொள்ளலாம்[9]. தேர்தலுக்குபணம்கொடுக்கிறார்என்பதுஒருகுற்றச்சாட்டு., உண்மை நிரூபிக்கப் பட்டால், ஸ்டாலின் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்……” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்[10]. இந்த வீடியோவும் சுற்றில் உள்ளது.
[1] தினமணி, இந்துகோவில்களைஇடிப்பதில்திமுகவினர்பெருமைகொள்கின்றனரா?, By DIN | Published On : 29th January 2023 07:23 PM | Last Updated : 29th January 2023 07:28 PM.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 100 ஆண்டுகாலகோயிலைஇடித்ததாகபேசினாராடி.ஆர்.பாலு.? அண்ணாமலையின்வீடியோவிற்க்குபதிலடிகொடுக்கும்திமுக, Ajmal Khan, First Published Jan 30, 2023, 12:29 PM IST.
[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அரசியலைவிட்டுவிலகநான்தயார்.. ஒரிஜினல்வீடியோஇருக்கு! திமுகவுக்குசவால் – அண்ணாமலைபரபரப்புபேட்டி, Raghupati R, First Published Jan 30, 2023, 7:16 PM IST.
06-12-2022 அன்றுபிறப்பிக்க்கப்பட்டஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர்சுப்பிரமணியசுவாமிகோயில்அருகேதருமபுரம்ஆதீனமடத்துக்குசொந்தமான 3.5 ஏக்கர்நிலம்உள்ளது. இந்தநிலத்தைசிலர்ஆக்கிரமித்துவைத்துள்ளனர். ஆதீனநிலத்தைமீட்கவும், அந்தசொத்தைபாதுகாக்கவும்அறநிலையத்துறைக்குஉத்தரவிடவேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில்தருமபுரஆதீனத்திற்குசொந்தமானஇடங்கள்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்குசொந்தமானசொத்துகளுக்கு 1971 வரைவாடகைசெலுத்திவந்தனர். அதன்பிறகு, முறைகேடாகபத்திரப்பதிவுசெய்துள்ளனர்.….ஆதீனமடத்துக்குசம்பந்தம்இல்லாதநபர்கள்வசமிருக்கும்ஆதீனமடத்தின்சொத்துக்களைஅறநிலையத்துறைஆணையர்உடனடியாகமீட்டுஆதீனமடத்திடம்ஒப்படைக்கவேண்டும். இப்பணியை 12 வாரத்தில்முடிக்கவேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.
12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
2016ல்மேல்நிலைநீர்தேக்கதொட்டி – நாகப்பட்டினம்மாவட்டத்தில்மதுரைஆதீனத்திற்குசொந்தமானஇடத்தில்கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..
15-11-2022 – கோவில்நிலத்தைமீட்கஒத்துழைக்காவிடில்சிறை! அதிகாரிகளுக்குஉயர்நீதிமன்றம்எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில்தருமபுரம்ஆதீனமடத்துக்குசொந்தமானநிலங்களைமீட்கஅரசுக்குஐகோர்ட்உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.
[5] மாலை முரசு, மதுரைஆதீனத்திற்குசொந்தமானநிலத்தைசட்டவிரோதமாகபதிவுசெய்ததனியார்நிறுவனம்…! ரத்துசெய்யகோரியவழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.
[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.
[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST
திருத்தொண்டர்சபைஎன்றஅமைப்பைச்சேர்ந்தராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!
36,590 கோயில்களுக்குக்கீழே 4,22,000 ஏக்கர்நிலங்களும் 56 மடங்களுக்குக்கீழேகிட்டத்தட்ட 56,000 ஏக்கர்நிலங்களும்இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.
2018ல்திருத்தொண்டர்சபைஎன்றஅமைப்பைச்சேர்ந்தராதாகிருஷ்ணன்தொடுத்தவழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடிமாவட்டம்நெடுங்குளத்தில்இருக்கிறது `செங்கோல்ஆதீனம்.’ இந்தஆதீனத்துக்குச்சொந்தமானநிலங்கள்தூத்துக்குடிமற்றும்திருநெல்வேலிமாவட்டங்களில்முறைகேடாகஆக்கிரமிப்புசெய்யப்பட்டிருக்கின்றன. இதனால்அரசுக்குமிகப்பெரியவருவாய்இழப்புஏற்பட்டிருக்கிறது. இந்தஆக்கிரமிப்புகளைஅகற்றிநிலத்தைஉடனடியாகமீட்கஅறநிலையத்துறைநடவடிக்கைஎடுக்கஉத்தரவிடவேண்டும்.’
உயர்நீதிமன்றமதுரைக்கிளைதமிழகத்தில்உள்ளஅனைத்துஆதீனங்கள்மற்றும்மடங்களையும்இந்தவழக்கில்எதிர்மனுதாரர்களாகஇணைக்க‘ உத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
மனுதாரர்ராதாகிருஷ்ணசொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர்நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும்கோயில், ஆதீனங்கள்மற்றும்மடங்களின்நிலங்களைஅளந்துஆய்வுசெய்துஆக்கிரமிப்புகளைமீட்கவேண்டும்’ என்றுஅறநிலையத்துறையினருக்குஉத்தரவிட்டது. ஆனால், எந்தஆக்கிரமிப்புமீட்புநடவடிக்கையையும்யாரும்மேற்கொள்ளவில்லை. மதுரைஉயர்நீதிமன்றக்கிளையில் `செங்கோல்ஆதீன’த்துக்குஉரியநிலங்களைமீட்கவேண்டும்என்றுகூறிபொதுநலவழக்கைத்தாக்கல்செய்தோம். நீதிமன்றமேமற்றஆதீனநிலங்களின்ஆக்கிரமிப்புதகவல்களைக்கேட்டறிந்து, அனைத்துஆதீனமடங்களையும்வழக்கில்எதிர்மனுதாரர்களாகஇணைத்துநோட்டீஸ்அனுப்பியிருக்கிறது. இந்துசமயஅறநிலையத்துறை, 55,820 ஏக்கர்நிலங்கள்ஆதீனங்கள்மற்றும்மடங்களுக்குச்சொந்தமாகஇருப்பதாகத்தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீனமடங்களுக்குஉரியநிலத்தைஅளந்தால்இதன்மதிப்புஇன்னும்அதிகமாகும். தனிப்பட்டவர்களின்சுயநலத்தால்நிலங்களைமீட்கமுடியாதசூழல்நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காகமீட்புநடவடிக்கைகளைமேற்கொண்டு, அனைவரையும்ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்அனைத்துநிலங்களையும்மீட்டுவருவாயைஒழுங்குபடுத்தினால், பல்வேறுநலத்திட்டப்பணிகளைமேற்கொள்ளமுடியும்.
கோயில்மற்றும்ஆதீன, மடநிலங்களைவிற்பவர்கள்தப்பித்துக்கொள்கிறார்கள். வாங்கும்நடுத்தரமக்கள்சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.
`சிவன்சொத்துகுலநாசம்‘ என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!
18-10-2022 அன்றுவிசாரணைக்குவந்தது, 28-10-2022 தேதிக்குஒத்திவைக்கப்பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீனமடத்தின்சொத்துகள்தனியாருக்குகுத்தகைக்குவழங்கியதுஅதிர்ச்சிஅளிக்கிறது. ஆதீனமடங்கள்மடங்களாகசெயல்படுகிறதா? இல்லை, வியாபாரநிறுவனங்களாகசெயல்படுகிறதா? ஆதீனமடத்தின்சொத்துகளைகுத்தகைக்குவிடுவதைஎந்தச்சட்டம்அனுமதிக்கிறது?ஆதீனமடங்கள்அனைத்தும்இந்துசமயஅறநிலைத்துறைக்குகட்டுப்பட்டவை. இதுபோன்றசெயல்களில்ஈடுபட்டால்மடத்தின்மீதுநடவடிக்கைஎடுக்கஇந்துசமயஅறநிலையத்துறைக்குஅதிகாரம்உள்ளது. அதிகாரம்உள்ளநிலையில்ஏன்நடவடிக்கைஎடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீனமடங்கள்இந்துசமயஅறநிலையத்துறைகட்டுப்பட்டவை – உயர்நீதிமன்றமதுரைகிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.
தானமாகவழங்கியபெரியோர்களின்வாரிசுகளே, அந்தச்சொத்துக்களைத்தங்கள்பெயருக்குமாற்றிக்கொண்டது: ஜாபர்அலி கூறுவது, “முற்காலத்தில்இந்தசொத்துக்களெல்லாம்உயர்ந்தநோக்கங்களுக்காகத்தானமாகவழங்கப்பட்டாலும்தானமாகவழங்கியபெரியோர்களின்வாரிசுகளே, அந்தச்சொத்துக்களைத்தங்கள்பெயருக்குமாற்றிக்கொண்டதும், பிறருக்குவிற்பதும்சிலஇடங்களில்நடந்தது. இப்படிப்பட்டசெயல்பாடுகளைக்கண்காணித்து, முத்தவல்லிகளைஒழுங்காகச்செயல்படவைக்க 1954-ல்உருவாக்கப்பட்டதுதான்வக்புவாரியம். ஒன்றிய – மாநிலஅரசுகள்இணைந்துஉருவாக்கியிருக்கும்இந்தவக்புவாரியம், முஸ்லிம்பெரியவர்கள்இறைப்பணிக்காகவழங்கியபெரும்சொத்துக்களைப்பராமரித்துக்கண்காணிக்கும்பொறுப்பைஏற்றது”. “தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது” என்றால் அது துலுக்கப் பிரச்சினையே அன்று இந்துக்களுடன் தொடர்பு படுத்தப் படும் விசயமல்ல, அது விசமத்தனமானது.
வக்புவாரியம், மாநிலஅரசுகளின்நேரடிக்கட்டுப்பாட்டில்இல்லை. ஜாபர்அலி கூறுவது, “இருந்தாலும், அதுஒருஅரசுசார்புநிறுவனமாகஇயங்குகிறது. அதேநேரத்தில், அதுமாநிலஅரசுசொல்லும்எல்லாவற்றையும்கேட்டுநடக்கவேண்டும்என்பதில்லை. வக்புவாரியம்கூடிஎன்னமுடிவெடுக்கிறதோ, அதுதான்முடிவு. அரசுஇதில்சட்டரீதியாகத்தலையிட்டு, எந்தமுடிவையும்எடுக்கவைக்கவோ, எடுத்தமுடிவைமாற்றவோமுடியாது. வக்புவாரியம்தன்னிச்சையானஅமைப்புஎன்றுசொல்லப்பட்டாலும், அதன்நிர்வாகச்செலவுக்குஇன்றுவரைஅரசைஎதிர்பார்த்தேஉள்ளது.” இத்தகைய இருநிலைப் பாட்டில் இருக்கும் நிலை அவர்களது மோசடிகளுக்குத் துணை போகிறது. இது கிருத்துவர்களின் பிரச்சினை போன்றதே. பிஷப், பாதிரிகள் கோர்ட்டுக்குச் சென்றது போல, இவர்களும் கோர்ட்டுக்குச் செல்லலாம்.
கவனிக்கவேண்டியவிசயங்கள்: சரித்திர ரீதியில், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களிலிருந்து, இந்த மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மைகள் மறைக்கப் படுகின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்தும் பார்ப்பதில்லை. டிவி, செல்போன் பார்த்து பொழுதைப் போக்கிக் கொன்டிருக்கிறார்கள்.
“ஆற்காடு நவாப்” என்று குறிப்பிடப் படும் ஒருவர் தான் தான் மயிலாப்பூர் கோவிலுக்கு நிலம் கொடுத்தேன் என்று கிருத்துவக் கூட்டங்களில் சொல்லிக் கொள்வார்.
இந்த நசரத் பேட்டை, அல்லாபுரம் ஸ்தலபுராணங்கள் எல்லாம் நாளைக்கு வேளாங்கன்னி, நாகூர் மாடல்களில் செல்லும். முழுங்கப் பார்க்கும்.
இறக்குமதி செய்யப் பட்ட மதங்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்துக்கள் நிலமாக இருக்கும்? அடிப்படையிலேயே ஏதோ மிகப்பெரிய மோசடி உள்ளது.
வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது. சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
யார் யாருக்கு தடையில்லா சான்றிதழ் கொடுப்பது என்ற விவஸ்தையே வேண்டாமா, இதென்ன புதிய அவஸ்தை, அதிலும் இவர்களிடம் தேவையா?
சொந்தமாக எதையும் இல்லாத இந்த மதங்கள், நம்பிக்கையாளர்கள் இந்தியாவில் எல்லாமே கடன் வாங்கி, கடன் பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
பாரத மாதவை வைத அந்தப் பாதிரிப் பதரும், கோவில் நிலத்தை தனதெனும் இந்த அரேபிய அடிமைகளும் இந்துக்களின் சொத்தை அனுபவிக்க வேண்டாம்.
உண்மையில் தன்மானம், சூடு-சொரணை இருந்தால் இந்துக்கள் நிலத்தை, பூமியை விட்டு விலக வேண்டும், அம்மண்ணில் விளைவதைக் கூட உண்ணக் கூடாது.
வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு கீழ் நடக்கிறதா, அல்லது பத்திரப்பதிவு துறைக்கு கீழ் வக்பு வாரியம் செயல்படுகிறதா? ஆணையிட அதிகாரம் உள்ளதா?
ஆக, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம் போல, கோவில் நிலத்திற்கும், இந்து நிலத்திற்கும், வக்பு வாரியத்திற்கும் என்ன சம்மந்தம்? (10)
[1] இதுவே பெரிய மோசடி எனலாம், பிறகு, ஏன் அத்தகைய துலுக்கர் உருவாக வேண்டும். யார் அவர்களை அவ்வாறு ஏழைகளாக வைத்திருக்கின்றனர். பிச்சைக் காரர்களில் அதிகமாக துலுக்கர் இருப்பது தெரிகிறது. அது உண்மையில் பிச்சை எடுக்கவா அல்லது வேறு யாதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
எச்.ராஜாஎதிர்ப்பு: தற்போது இதைத்தான் பாஜகவினர் பிரச்சினையாக எழுப்பி வருகின்றனர், தற்போது இந்த விவகாரத்தில் எச். ராஜா தலையிட்டு கருத்து கூறியுள்ளார்[1], இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார்[2]. , என சில ஊடகங்கள் தினமலர் செய்தியை மசாலாவாக்கி, திரித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டு உள்ள பதிவில்[3], “திருச்சென்துரைகிராமத்தில்உள்ளஅனைத்துசர்வேநம்பரும்வக்ஃப்போர்டுக்குசொந்தமாம். வக்ஃப்போர்டுபத்திரப்பதிவுஅலுவலகத்துக்குகோப்புஅனுப்பும். உடனேபதிவாளர்அதைமக்களுக்குஅறிவிப்பாராம். எப்படிசாத்தியம். கோவில்நிலம்எப்படிவக்ஃப்நிலமானது. மோசடியைமுறியடிப்போம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்[4]. உண்மையில், இது மோசடி என்ற நிலையில், எந்த ஊடகக் காரனும் அறிந்து கொள்ளலாம், குறிப்பிட்ட வட்டாட்சியாளர், அதிகாரிகளிடம் சென்று விசாரித்து, பேட்டிக் கண்டு விவரங்களை வெளியிட்டிருக்கலாம்.
திமுகஆட்சிக்குவந்தது, இதற்கும்என்னதொடர்பு?: வக்பு தலைவர் கூறியுள்லதும் கவனிக்கத் தக்கது. சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் மற்றும் லால்கான் பள்ளிவாசல் வக்பு வாரியம் இணைந்து புதிய மதரஸா துவக்க நிகழ்ச்சி லால்கான் பள்ளி வாசலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழகமுதல்வராகபதவியேற்றுள்ளஸ்டாலின்பல்வேறுமுற்போக்குதிட்டங்களைசெயல்படுத்திவருகிறார். இதனைஅவருக்குவாக்களிக்காதவர்களும்பாரட்டிவருகிறார்கள். பல்வேறுமாநிலங்களைசேர்ந்ததலைவர்களும்பாராட்டிவருகிறார்கள். அவர்வெளிப்படைத்தன்மையுடன்செயல்பட்டுவருகிறார். அதேபோல்வக்புவாரியதலைவராகநியமிக்கப்பட்டநான்வெளிப்படைத்தன்மையுடன்செயல்பட்டுவருகிறேன்”. சரி, இந்து நிலங்களுக்கும், இதற்கும் என்ன சம்மந்தம்?
ஆக்கிரமிப்புமற்றும்போலிபட்டாதயார்செய்துவிற்பனைசெய்துள்ளனர்: தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தமிழக முழுவதும் ரூ150 லட்சம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர். இந்த சொத்துக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரிய சொத்துக்களை மீட்பதில் தமிழக முதல்வர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்[5]. சொத்துக்களை மீட்டு மருத்துவக் கல்லூரி, கல்லூரி,பள்ளிகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும்[6]. வக்பு வாரிய நிர்வாகத்தை கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு திங்கள் கிழமையும் வக்பு வாரிய ஆணையரை சந்தித்து குறைகளைக் கூறினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யாத மசூதிகளை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 9 ஆயிரம் மசூதிகள் உள்ளது. இதில் 3 ஆயிரம் மட்டுமே பதிவில் உள்ளது. அனைத்து மசூதிகளையும் சட்டப்படி கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் லால்கான் பள்ளிவாசல் நிர்வாகி ஜியாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆக்கிரமிப்புமற்றும்போலிபட்டாதயார்செய்துவிற்பனைசெய்துள்ளனர்: “தமிழகம்முழுவதும்வக்புவாரியத்திற்குசொந்தமானசொத்துக்கள்தமிழகமுழுவதும்ரூ150 லட்சம்கோடிசொத்துக்கள்ஆக்கிரமிப்புமற்றும்போலிபட்டாதயார்செய்துவிற்பனைசெய்துள்ளனர்,” என்றால், அத்தகைய பதிவுகளை செய்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆவணங்களை எழுதியவர்கள்-தயாரித்தவர்கள், வட்டாட்சி தலைவர்கள், தாசில்தார்கள் என்று அனைவரையும் கண்டு பிடிக்கலாம். எல்லா ஆவணங்களும் அந்தந்த வட்டாட்சி அலுவலகங்களில் உள்ளன. ஆகவே, மோசடிக் காரர்களை கண்டு ப்பிடித்து விடலாம். பிறகு, உண்மையான ஒத்து-நிலங்களின் சொந்தக்காரர்களை ஏன் இவ்வாறு தொந்தரவு செய்வது, இம்சிப்பது, மோசடிகளில் சிக்க வைப்பது போன்ற காரியங்களில் ஏன் ஈடுபட வேண்டும், என்று கவனிக்க வேண்டும். வக்பு வாரியம், வாரிய உறுப்பினர்கள், சொத்துக்களை மோசடிசெய்து விற்றவர்கள், வாங்கியவர்கள் என்ற கும்பல்களின் உள்ளப் பிரச்சினையை, இந்துக்களுடன் இணைக்க வேண்டிய நிலை தன், பெரிய மோசடியாகவும் மாறுகிறது.
வக்பு நிலங்கள் எப்படி வந்தன?: – புதுமடம் ஜாபர்அலி என்பவர், வக்பு வாரிய சொத்துக்களைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையை உன்னிப்பாக வாசிக்க வேண்டும்[7]. தமிழ்.இந்துவில் வந்துள்ளதை அப்படியே கீழ்கண்ட பத்திகளில் கொடுக்கப் படுகிறது[8]. வழக்கம் போல, பத்திகளாகப் பிரித்து, அவற்றிற்கு தலைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன[9]. விமர்சனம் அடிக்குறிப்பில் கொடுக்கப் படுகிறது. “வெகு காலத்துக்கு முன், முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்தனர்[10]. இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான காரியங்களை, ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம்[11]. பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் பழங்காலத்தில் தானமாக வழங்கப்பட்டன.
[5] நக்கீரன், ‘‘தமிழ்நாடுவக்புவாரியத்திற்குசொந்தமானசொத்துக்களைமீட்கநடவடிக்கை”-வக்புவாரியதலைவர்அப்துல்ரஹ்மான்பேட்டி!, நக்கீரன் செய்திப்பிரிவு Published on 05/09/2021 (23:15) | Edited on 06/09/2021 (08:11)
[8] தமிழ்.இந்து, வக்புவாரியம்முஸ்லிம்களுக்குஎன்னசெய்திருக்கிறது?, புதுமடம் ஜாபர் அலி, Published : 26 Nov 2021 03:06 AM; Last Updated : 26 Nov 2021 03:06 AM
[10] அடீப்படையில், இந்தியாவைப் பொறுத்த வரையில், இது பொய்யாகும், ஏனெனில், இங்கு துலுக்கர் / முஸ்லீம்கள் இருந்ததில்லை. 712க்கு மேல் அரேபியர், துலுக்கர், துருக்கர், துருக்ஷா, முகலாயர் என்றெல்லாம் வந்தவர்கள், கொள்லைய்டித்து, கோவில்களை இடித்து, கோவில் சொத்துக்களை சூரையாடி, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்ட இடங்களே, அவர்களது சொத்துக்கள் என்று சொல்லப் படுகிறது.
[11] அதாவது, முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்று படித்துப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில், காபிர்களுக்கு, துலுக்கர்-அல்லாதவர்களுக்கு நரகம் தான் கிடைக்கும், வேறெதுவும் இல்லை.
[12] ஆக, இங்கு உண்மை வெளிவந்து விடுகிறது. துலுக்கர் தானம் என்று கொடுத்து, பிறகு, அதனை துலுக்கரே அனுபவிப்பது, அவர்களது பிரச்சினை. ஆனால், அவர்களது (?) சொத்துக்களை யாரோ அனுபவிப்பது போல செய்திகள் வெளியிடுவது மோசடியாகும், பொய்-பித்தலாட்டம் ஆகும்.