Posts Tagged ‘தமிழர்களின் இழிநிலை’

கோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்?

ஓகஸ்ட்13, 2011

கோவில் கொள்ளை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்வது ஏன்?

நாத்திகத்திற்குப் பிறகு ஆத்திகமா, நாத்திகமா, இல்லை திராவிட பாணியில்  கொள்ளையா?  கருணாநிதி, இந்து எதிரி, விரோதி, துரோகி, துவேஷி என்று நன்றாகத் தெரிந்த விஷயம். அதேபோல இருக்கும் நாத்திக இந்து-விரோதி கூட்டங்கள் பற்பல பெயர்களில், உருவங்களில் அமைப்புகளாக வளர்ந்து, விரிந்து அத்தகைய துவேஷங்களை பரப்பி மக்களை கடந்த 60 வருடங்களாக கெடுத்து வைத்துள்ளனர். அத்தகைய மனப்பாங்கு, மனத்தில் ஊறித்திளைத்த அநியாயங்களை நியாயப்படுத்தி பேசிவந்த திறமை, அக்கிரமங்களை சரியென்றே தோற்றமளிக்கச் செய்த சாதுர்யம் முதலியவை மக்களில் சில பிரிவினரை உள்ள சட்டங்களை மதிக்காமல், தார்மீக கட்டுமுறைகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காமல் கொலை, கொள்ளை முதலிய காரியங்களில் அதிகமாகவே செய்து வருகின்றன. அந்நிலையில், இப்பொழுது அரசு மாறியுள்ள நிலையில், குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும், அத்தகைய கோவில் கொள்ளைகள், அம்மன் தாலி திருட்டுகள்,  உண்டியல் உடைப்புகள், கவசங்கள், கலசங்கள் முதலியவற்றைக் களவாடுதல் என்று தொடர்ந்து நடந்து வருவதன் மர்மம், பின்னணி என்ன? திராவிட பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு தொடர்கின்றனவா?  ஏற்கெனவே சில விஷயங்கள் “தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன”, என்ற தலைப்பில் அலசப்பட்டுள்ளன[1].

ஆடி மாதத்தில் அம்மன் தாலி அறுப்புகள் ஏன்? ஆடிமாதத்தில் தமிழகம் முழுவதும், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அம்மன் கோவில்களில் பூஜை, அபிசேகம், என மக்கள் விமசரியாகக் கொண்டாடி வருகின்றனர்[2]. அம்மன் தாலிகள், கவசங்கள் ஆடிமாதத்திலேயே நடக்கின்றன என்றால், அது தங்கம், வெள்ளி உலோக மதிப்பிற்காக கொல்ளையடிக்கப் படுகின்றனவா அல்லது அம்மன் ஒன்றும் செய்யமாட்டாள், அது வெறும் சிலைதான், இல்லை, அம்மனை வழிபட்டு கூட திருடலாம், அம்மன் பார்த்துக் கொள்வாள் (!) என்று திருடுகின்றனரா?

அம்மனைப் பார்க்க வரும், அம்மணிகளின், தமிழச்சிகளின்  தாலிகளையும் பறிக்கின்றவர்கள் தமிழர்களா?

  • உண்மையிலேயே அவர்கள் தாலிக்கட்டிய தாய்மார்களுக்குப் பிறந்தவர்களா,
  • தாலி கட்டிய மனைவிகளுடன் வாழ்க்கை நடத்துபவர்களா,
  • தாலிக்கட்டிய சகோதரிகள், மகள்கள், பெண்களைக் கொண்டவர்களா,
  • அத்தகைய குடும்பத்தைக் கொண்டவர்களா, சேர்ந்தவர்களா?
  • என்னத்தான் நடக்கிறது, தமிழ் நாட்டில், தமிழகத்தில்?
  • பிறகெதற்கு அம்மன் பெயரில் சினிமா எடுக்கின்றனர்?
  • கேடு கெட்ட, சமுதாயத்தை சீரழிக்கின்ற சினிமாக்களுக்கும் பூஜை போடுகின்றனர்?
  • கேடுகெட்ட நடிகைகளுக்கு முன் அம்மன் சிலைகள், படங்கள் வைத்து பூஜை செய்வது மாதிரி நாடகம் ஆடுகின்றனர்?

தெய்வபக்தியும் இல்லை, தாய் பக்தியும் இல்லை, பெண்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவில்லை, பெண்ணினத்தை கௌரவமாக நடத்தத் தெரியவில்லை…. இல்லை, இதுவே இப்பொழுது தமிழகர்களின் நாகரிகமாகக் கூட மாறிவிட்டதோ என்னவோ? சம உரிமை என்று பேசும் பெண்களும் இதைப்பற்றிக் கவலைப் படுவதாக இல்லை. இது பெண்களின் உரிமைகளில் வராதா?

பூதப்பாண்டி அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் சாமி சிலைகள் உடைப்பு; மர்ம கும்பல் அட்டூழியம்[3]:பூதப்பாண்டி, ஆக. 4, 2011- பூதப்பாண்டியை அடுத்துள்ள அழகியபாண்டிய புரம் எட்டாமடையில் முத்தாரம்மன், சுடலை மாடன் கோவில்கள் உள்ளன. 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவில்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவில் புதுப்பிக்கப்பட்டு தினசரி பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன.  வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்துச்செல்வார்கள். இக்கோவிலில் முத்தாரம்மன், சாஸ்தா, வினாயகர், நாகர், நாக கன்னி, நாகலெட்சுமி உள்பட 7 சாமி சிலைகள் உள்ளன. இதில் அங்குள்ள ஒரு பீடத்தில் 1 1/2 அடி உயரத்தில் நாக லெட்சுமி, நாக கன்னி சிலைகள் இருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது.

அப்போது முத்தாரம்மன் கோவிலுக்குள் நுழைந்த மர்ம கும்பல் பீடத்தில் இருந்த நாக லெட்சுமி, நாக கன்னி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டிய அந்த கும்பல் அங்குள்ள கழிவு நீர் ஓடையில் வீசி விட்டு சென்றுள்ளது. இதைப்போல் அந்த பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவிலில் புகுந்த கும்பல் சுடலைமாட சாமியின் சிலையை சேதப்படுத்தி விட்டு சென்று உள்ளனர். அழகியபாண்டி புரம், பெரிய குளத்தங்கரையில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமியின் தலையை உடைத்து நடுரோட்டில் வீசிச் சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி அப்பாத்துரை, சாமி சிலைகள் உடைக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஊர் கமிட்டிக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்து வரும் கோவில் கொள்ளை, திருட்டுகள்:  ஒரு பத்து நிமிட கூகுள் தேடலில் கீழ்கண்ட கொள்ளைகள் காணக்கிடைக்கின்றன, பட்டியல் இடப்படுகிறது. இவற்றில் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட நடத்தை முறை, கொள்ளை அமைப்பு, மனப்பாங்கு முதலியவை தெரியவருகின்றன.

  1. 08-08-2011: வள்ளியூர் (திருநெல்வேலி) அருகே காட்டு நாயக்கர் பராமரிப்பில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கோவிலில், சாமி சிலைகள் சேதப்படுத்தப் பட்டன.
  2. 4 ஆகஸ்ட் 2011 – ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை : மர்ம ஆசாமிகளுக்கு வலை
  3. 3 ஆகஸ்ட் 2011 – திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கும் முயற்சி நடைபெற்றது. திருச்சி உறையூரில் புகழ் 
  4. 1 ஆகஸ்ட் 2011 – உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்துரூ.20 ஆயிரம் கொள்ளை: நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கைவரிசை.
  5. 29-06-2011: புதுச்சேரி: கண்டமங்கலம் அருகே, சின்ன புதுப்பட்டு கிராமத்தில், கோவில் பூட்டை உடைத்து இரண்டு பஞ்சலோக சிலைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
  6. ஜூலை 14, 2011: வேலூர்,: அம்பலூர் அருகே எக்லாஸ்புரம் ஆற்றங்கரையோரம் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், புதன்கிழமை நள்ளிரவு சுவாமிக்கு  அணியப்பட்டிருந்த தங்கத் தாலி, வெள்ளி கீரிடம் திருடு போனதாம்.புகாரின்பேரில் அம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
  7. 25 ஜூன் 2011 – பேய்க்குளம் அருகே அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு.
  8. ஜூலை 16, 2011: திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கோயில் கோபுரத்தின் மீது உள்ள பழைமை வாய்ந்த 3 கலசத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
  9. 14 ஜூன் 2011 – ‘பழநி அருகே கோபுர கலசம் திருட்டு: கோவில்களை குறிவைக்கும் கும்பல்’..
  10. 17 ஜூன் 2011 புதுவை அண்ணா நகரில் கோவிலில் கொள்ளை …
  11. 17 மே 2011 – பள்ளிபாளையம் அடுத்த ராகவானந்தா நகரில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று அதிகாலை 4 மணிக்கு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோவில் முன் திரண்டனர். மக்கள் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் மூன்று பேர், அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற மக்கள், ஒருவரை மடக்கிப் பிடித்து பள்ளிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், பள்ளிபாளையம் அடுத்த தாஜ்நகரை சேர்ந்த ராமதாஸ் (22) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய மற்ற இரண்டு பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  12. 6 மே 2011 – தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு. கோவிலில்அம்மன் தாலி திருட்டு.
  13. 6 மே 2011 – திண்டுக்கல்லில் கோவிலில் கொள்ளை முயற்சி: அபாய மணி ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓட்டம்.
  14. 7 மார்ச் 2011 – திரவுபதி அம்மன் கோவிலில்
  15. 22 பிப்ரவரி 2011 – தூத்துக்குடி அருகே கோயில் கோபுரத்திலுள்ள வெண்கல கலசம் திருட்டுப்போனது.    திருட்டுகும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி அருகே செட்டியாபத்து கிராமத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் கோபுரத்தில் பல லட்சம் மதிப்பிலான கலசம் இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமி கோயில் உச்சியில் ஏறி கலசத்தை திருடிச் சென்றுள்ளனர். 
  16. 13 பிப்ரவரி 2011 – தஞ்சையில் சோழர் கால கோவிலில் நகை திருட்டு. அதிகம்  தஞ்சாவூர்: தஞ்சையில் சோழர் காலத்து கோவிலில் நகைகள் திருட்டு போனது..
  17. 10 பிப்ரவரி 2011 – சுவாமி சிலைகள் திருடு 
  18. 9 பிப்ரவரி 2011 – கோவில் விழாவில் நகை கொள்ளை…மதுராந்தகத்தில் நடந்த கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் பொன் நகையை சிலர் களவாடி னர். மதுராந்த கம் தேரடி தெருவை சேர்ந் தவர் சிறீ ராமுலு. இவரது மனைவி வரலட்சுமி (வயது 68).
  19. 29 ஜனவரி 2011 –அழகர்சாமி கோவிலில்  சுவாமி சிலைகள் திருடு போயிருந்தன.  ஆனந்த வள்ளியம்மாள் ஐம்பொன் சிலைகள் திருடுபோயிருந்தன. .
  20. 21 ஜனவரி 2011 – கோவிலில் அம்மன் தாலி திருட்டு 
  21. 6 ஜனவரி 2011 – தாவடிப் பிள்ளையார் கோவிலின் கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த பெறுமதியான பொருட்களையும் 
  22. 25-08-2009: நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பூஜையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீஸ் உடையில் வந்தவர்கள் உடைத்ததால், பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே வடக்கு மாத்தாரில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஆக., 30 ல் விசர்ஜனம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்துள்ள அமைப்பினர் தான் பாதுகாப்பும் கொடுக்க வேண்டும், என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த ராஜாசெந்தில், ராமச்சந்திரன், நீலகண்டன், ராஜா, கண்ணன், பாலமுருகன் ஆகிய ஆறு பேரும் பாதுகாப்பு பணியில்..

வேதபிரகாஷ்

12-08-2011


[1] வேதபிரகாஷ்,தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன, https://atheismtemples.wordpress.com/2010/07/21/temples-looted-daily-basis-in-tamilnadu/

https://atheismtemples.wordpress.com/2010/08/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D2/

[2] சன் – கலைஞர் டிவிக்கள் வழக்கம் போல பூதக்கண்ணாடி, உண்மை என்று பொய்களைப் பரப்பி வருகின்றன. சமீபத்தில் அவர்கள் கொடுக்கும் விளக்கமாவது, மக்கள் மனம் புண்படுத்தாது மாதிரி, புண்படுத்துவார்களாம்!

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன!

ஜூலை21, 2010

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன

 

நாத்திக ஆட்சியில் நடக்கும் இவை திட்டமிட்ட நடப்பைவையா? நாத்திகர்கள் வளர்ந்துள்ளதால், இப்படி கோவில் நகை மற்றும் விலையுயர்ந்த பொருள் எதுவாக இருந்தாலும், திருடுவது, கொள்ளயடிப்பது என்பது தினம்-தினம் நடக்க்கும் திழாலாகி விட்டது. அவற்றில் குறிப்பிட்ட அமைப்பு, முறை காணப்படுவதால், அத்தகைய கொள்ளையர்கள் திட்டமிட்டு செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

  1. கோவில் ஆட்களே சம்பந்தப்படுவது. இவர்கள் எல்லாமே ஆளும் கட்சிக்க்காரர்களாக இருக்கின்றனர், அல்லது உள்ளூர் எம்.எல்,ஏ, எம்.பி, எம்.எல்.சி, வட்டச்செயலாளர்………….போன்ற நிலையில் உள்ளனர்.
  2. அறநிலையத்துறை ஆட்களே ஈடுபடுகின்றனர் / சம்பந்தப் பட்டுள்ளனர்.
  3. திருடியவர்களே, மறுபடியும் திருடுகின்றனர்.
  4. புதியதாக கும்பாபிஷேகம் நடந்தவுடன் திருடப்படுகின்றது.
  5. புதியதாகப் புரளிக் கிளப்பிவிட்டுத் திருடுகின்றனர்.
  6. உண்டி எண்ணப்படுகின்ற ஒரு-சில நாட்களுக்கு முன்பு உண்டியல் உடைக்கப் பட்டுத் திருடப் படுகிறது.
  7. காவலாளி இல்லாத கோவிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவது.
  8. உண்மை நகைகளை எடுத்துவிட்டு, பொலிநகைகளை வைப்பது.
  9. அம்மன் தாலிகளை, நகைகளைத் திருடுகின்ற கூட்டம் – பொதுவாக, கிராமம், நகர்புறங்களில் முன்னரெல்லாம், அம்மன் கோவிலில் எந்தர்த் திருடனும் கை வைக்க மாட்டான். ஆனால், இப்பொழுது அதிகமாவதால், குறிப்பிட்டக் கூட்டம் அல்லது அத்தகைய மனப்பாங்குள்ள ஆட்கள் / கூட்டம் ஈடுபடுவது தெரிகிறது.

10.  சில நேரங்களில் கவலாளியைக் கொல்லவும் தயுஅங்குவதில்லை. இது திட்டம் போட்டு செய்யப்படும் கொலை, கொள்ளை என்றாகிறது.

 

புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை (ஜூலை 21,2010)[1]: புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடக்கிறது. இதில், இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கருவறை முன்பிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் அர்ச்சகர் அய்யாவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள இலுப்பூர் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இரண்டு கோவில்களில் தங்கம், வெள்ளி காணவில்லை
கோவில் நிருவாக அதிகாரி இடை நீக்கம்
[2]: சேலம், ஜூலை 21_ சேலத்தில் 2 கோவில்களில் தங்கம்வெள்ளி காணாமல்போன பிரச் சினையில் எல்லைப் பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநில இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். சேலம் மாநகரில் செரிசாலையில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் உள்பட 6 கோவில்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிருவாக அதிகாரியாக சந்திரபிரகாஷ் இருந்து வருகிறார். எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி போன்றவை வங்கி லாக்கரில் வைத்து பாதுக்காக்கப்படுவது வழக்கம். அதற்கான சாவி கோவில் நிருவாக அதிகாரி வசம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கோவில் நிருவாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் சமீபத்தில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை நகை பதிவேட்டில் உள்ளவாறு சரியாக இருக்கிறதா? என சரிபார்த்தனர். அப்போது எல்லைப்பிடாரி அம்மனுக்கு சொந்தமான 36 பவுன் தங்கம் மற்றும் 580 கிராம் வெள்ளி குறைந்தது[3].

சின்ன மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை: இதுபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளியை சரி பார்த்தபோது அங்கும் 12 பவுன் தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணை யாளர் வரதராஜன் மற்றும் இணை ஆணை யர் ராஜா ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. எல்லைப்பிடாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி காணா மல்போனது குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறை யில் கோவில் நிருவாக அதி காரியான சந்திரபிரகாஷ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புகார் கொடுத்த நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மற்றும் கோவில் நிருவாக அலுவலக உதவியாளர்களிடம் புலன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் நிருவாக அதிகாரியே கவனித்து வந்தார் என விசாரணையில் தெரியவந்தது.

கோவில் அதிகாரிகளே உடைந்தையா? காவல்துறையினர் விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் உள்ள மாநில இந்து அறநிலையத்துறை ஆணையாளர் பி.ஆர்.சம்பத், சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் நிருவாக அதிகாரி சந்திரபிரகாஷ் மீது துறை சார்பு நடவடிக்கையாக அவரை தற்காலிக நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.கோவில் சொத்தான தங்கம், வெள்ளியை பாதுகாக்கும் பொறுப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம்வெள்ளி எங்கே? போனது. அதற்கு காரணமானவர்களில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

17 Jul 2010 சிவன் கோவிலில் கலசங்கள் திருட்டு பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
www.dailythanthi.com/article.asp

 

நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு 2 கோவில்களின் கோபுர கலசங்கள் கொள்ளை ; மர்மக் கும்பல் கைவரிசை ஜூலை.17, 2010: நெல்லை, ஜூலை. 16- பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாரம்பரியமான இந்த கோவிலின் கோபுரத்தில் 3 கும்ப கலசங்கள் இருந்தது. இந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதால் வேண்டியது நடக்கும் என்று ஏராளமான பொது மக்கள் தினசரி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பத்மநாபபட்டர் தினமும் பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி வந்தார்.  நேற்று இரவு பூஜை முடிந்து பத்மநாப பட்டர் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்போது கோவிலின் மேல்புறம் பளபளப்பாக மின்னும் கோபுர கலசம் இல்லாமல் வெறுமையாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் கோவிலின் மேல் பகுதியில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்மக் கும்பல் கோவில் மேல் ஏறி 3 கோபுர கலசத்தையும் அப்படியே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கும்ப கலசத்தின் மதிப்பு தற்போது பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி முத்துராமன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் சண்முகவேல், செந்தட்டியா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று புரளி, கொள்ளை: இதுபோல தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் குலசேகரநாதர் கோவிலிலும் நேற்று சக்தி வாய்ந்த 1 கோபுர கலசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில்தான் கும்பா பிஷேகம் நடத்தப்பட்டு கோபுர கலசத்துக்கு தங்க முலாம் பூசி உள்ளனர். இந்த நிலையில் இந்த கோபுர கலசமும் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பழமையான கோபுர கலசத்தில் அபூர்வ சக்தி இருப்பதாக கருதி இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு கும்பல் இடிதாக்கிய பழமையான கோபுர கலசம் இரிடியமாக மாறி சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இசக்கி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை: அந்த கும்பலைச் சேர்ந்த வர்கள் தான் தற்போது கோபுர கலசங்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் மேற்பார்வையில் கோபுர கலச கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு மர்மநபர் அந்த கோவிலுக்குள் புகுந்தான். அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளியதோடு அம்மனுக்கு வைத்திருந்த சூலாயுதத்தையும் திருடி சென்றுவிட்டான். அதே வேளையில் அருகில் இருந்த உய்க்காட்டு சுடலை கோவிலிலும் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தென்னி மலையை சேர்ந்த வீரபெருமாள் (69), மாரியப் பன் ஆகியோர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே 2 கோவில்களில் நகை உண்டியல் கொள்ளை[4] ஜூலை 14, 2010: கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது தம்புரெட்டிபாளையம் இங்கு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் முதலில் பின்பக்கமாக கரு வறையையொட்டி உள்ள சுவரை உடைக்க முயற்சி செய்தனர். அது பலன் அளிக்காததால் கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் வனா கத்தில் உள்ள பழங்கால ராட்சத மரக்கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சரடு, செயின், காப்பு போன்ற 10 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றனர். இது தவிர கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை யும் அள்ளிச் சென்றனர்.

நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவிலும் கொள்ளை: இக்கோவிலின் அருகே 100 மீட்டர் தொலைவில் நத்தம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச் சென்றனர். 2 கோவில்களிலும் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். ஒரே நாள் இரவில் அடுத் தடுத்து 2 அம்மன் கோவில் களில் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. கடந்த 2 வருடத்திற்கு முன்னர்தான் தம்பிரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங் காள பரமேஸ்வரி கோவி லில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது 13 பவுன் நகையை கொள்ளை போனது குறிப்பிடத் தக்கது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சோழிங்கநல்லூர் அருகே கோவில் கலசம் கொள்ளை [5]ஜூலை.12, 2010: திருவான்மியூர், ஜூலை. 12- சென்னை சோழிங்கநல் லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை பழத்தோட்டம் பகுதியில் ஸ்ரீநிவாச பெருமாள்கோவில் உள்ளது. நேற்று இரவு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அவர்கள் மதில்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர்.  அங்கிருந்த கோவில் கலசம், டி.வி.டி.பிளேயர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். அத்தனை பொருட்களையும் கோணிப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றினார் கள். பின்னர் மீண்டும் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது செம்மஞ்சேரி போலீசார் ரோந்து சென்று கொண்டி ருந்தனர். இதனால் கொள்ளை யர்கள் 4 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து ஆட்டோவில் தப்பினார்கள்.

அய்யனார் கோவிலில் கொள்ளை, ஜூலை. 11, 2010[6]: ஒரத்தநாடு- ஒரத்தநாடு அருகே பெருமங்கல கோவில் கீழையூரில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை செய்ய வந்தபோது கோவிலில் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பூஜை பொருட்கள் மற்றும் குத்து விளக்கு வெண்கல பொருட்கள் என சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

சூளகிரி அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை[7] ஓசூர், ஜூலை. 10, 2019 (சனிக்கிழமை): சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 50-க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து செல்வார்கள். காணிக்கை பணமும் உண்டியலில் அதிகளவில் சேரும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் யாரோ கோவிலின் உண்டியலை உடைத்து கொள்யைடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிராம்பட்டினத்தில் துணிகரம் பெருமாள் கோவிலில் நகை கொள்ளை (ஜூன்.26, 2010)[8]:  பட்டுக்கோட்டை, – தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.  இதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோவில் கருவறை அருகே இருந்த 80 கிலோ எடை கொண்ட வெண்கல விளக்கு, 2 அடி குத்து விளக்கு மற்றும் அம்பாள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் அதிராம் பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்கலசம்திருட்டு[9] ஜூன் 16, 2010: அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கண்டமானடி கோவிலில் திருட்டு Dinamalar

23 Jun 2010 கண்டமானடி கோவிலில் திருட்டு. அதிகம் படித்தவை கோவிலில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கலசத்தை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

13 Jan 2010 சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு. சிதம்பரம் : சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை
cuddalore-news.blogspot.com/…/blog-post_5697.html

ஈரோடுகோவிலில்கோபுரகலசம்திருட்டு[10] ஜூன் 9, 2010: ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வீதியில் பழமை வாய்ந்த பெருமாள் ஐயர் கோயில் உள்ளது. கோவில் கோபுரக் கலசம் நேற்று காணாமல் போனது. கோவில் நிர்வாகி முரளி கூறியதாவது: இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டாண்டுக்கு முன் இதே கோவிலில் விமானக் கலசம் திருட்டு போனது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மே 15ம் தேதி அக்ஷய திருதியையன்று கோவில் விமானக் கலசம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீஸாருக்கு புகார் செய்துள்ளோம். திருட்டுபோன கலசம் சுத்தமான செம்பாலானது. இதன் மதிப்பு 7,000 ரூபாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனினும் டவுன் போலீஸார் இதுபற்றி வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

நாமக்கல் கோவிலில் கொள்ளை[11], ப.வேலூர் :மே 22, 2010:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது. இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

21-07-2010


[1] தினமலர், புதுக்கோட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை, ஜூலை 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=44176

[2] http://www.viduthalai.periyar.org.in/20100721/news13.html

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=581642&disdate=7/21/2010&advt=2

[4] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/14125553/gold-robbery-in-Gummidipoondi.html

[5] மாலைமலர், http://www.maalaimalar.com/2010/07/12131716/robbery-in-temple.html

[6] மாலைமலர் நாளிதழ் , சென்னை 21-07-2010 (புதன்கிழமை)

http://www.maalaimalar.com/2010/07/11134707/temple.html

[7]மாலைமலர்,  http://www.maalaimalar.com/2010/07/10161958/mariamman-temple.html

[8] மாலைமலர், சென்னை 26-06-2010 (சனிக்கிழமை), http://www.maalaimalar.com/2010/06/26160958/gold-robbery-in-tanjore.html

[9] http://thinamalar.net/News_Detail.asp?Id=20089

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=15488

[11] தினமலர், http://www.dinamalar.com/News_Detail.asp?id=7828

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

ஜூலை16, 2010

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

தமிழன்ம, செம்மொழி தமிழன் சிலை திருருவது, கோவிலைக் கொள்ளையெடிப்பது ஏன்? தமிழ், செம்மொழி தமிழ் பேசும் தமிழ் மக்களின் இப்படிப்பட்ட திருட்டுகள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலியவற்றை தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, அந்த முகமது கோரி, முகமது கில்ஜி, ஔரங்கசீப், மாலிக்காஃபூர்………………பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இப்படி செம்மொழி தமிழ் பேசிக்கொண்டு, கடவுள் நம்பிக்கையில்லாமல், பெரியார் நாத்திகம் பேசிக்கொண்டு, கருணாநிதி வழியில் கோவில் கொள்ளையடிக்கும் திராவிடத் தமிழர்களை என்னசெய்வது என்றே தெரியவில்லை.

கோவில் கொள்ளைக்கு சான்றிதழ் தேவையா? இப்பொழுது கோவில்களுக்கெல்லாம் ISO சான்றிதழ் வேறு வாங்குகிறார்கள், நாத்திக-கேடுகெட்டவர்கள். இப்படி கொளை, திருட்டு, நம்பிக்கையின்மை, நாத்திகம்………….என்றெல்லாம் வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் சான்றிதழ் வாங்குகிறார்கள்? அல்லது தாங்கள் இப்படியெல்லாம் கொள்ளையேடிக்கலாம் என்று அந்த சான்றிதழில் உள்ளதா?

மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது: மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இருந்தது. இச்சிலை, ஒரு அடி ஏழு அங்குல உயரம், 11.5 கிலோ எடை கொண்டது. கோவிலில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இச்சிலை, நேற்று காலை மாயமாகி இருந்தது, கோவில் நடை திறந்து பார்த்தபோது தெரிந்தது. இக்கோவிலில் உள்ள கதவுகள், பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின்படி குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, திருக்களம்புதூர் என இப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் படிகலிங்கம், மரகத லிங்கம், பஞ்சலோகச் சிலைகள் தொடர்ந்து திருட்டுப் போகின்றன. இங்குள்ள பழமையான, பாதுகாப்பற்ற கோவில் சிலைகளை காக்க அறநிலையத்துறை மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை!

மே23, 2010

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை: கொந்தளிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3112

இந்து சமய அறநிலையத்துறையின் இந்துவிரோத செயல்: சேலம்: “சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்த தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில், பாரம்பரியமிக்க அரசு முத்திரையை பயன்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக்கான முத்திரையை இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்தி உள்ளது. முத்திரையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது’ என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இந்து விரோதிகளே கோவில் விழாக்களில் கலந்து கொல்வது: சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா 16ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பண் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். உண்மையில் நாத்திகவாதியாக இருந்தால், இக்காரியத்தில் இந்த ஆள் செய்திருக்கக் கூடாது. முன்னம் கருணநிதி, ஒரு திமுக ஆள், குங்குமம் வைத்திருந்தபோது, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்று கிண்டலாக-நக்கலாகக் கேட்டது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உண்மையிலேயே தைரியம் இருந்தால், தனது மனைவி-துணைவி-மகள்-சகோதரி-மற்ற சொந்தமான பெண்களை பார்த்து அப்படி கேட்பதுதானே? இல்லை, குங்குமத்தை அழிக்கவேண்டியதுதானே?

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் அரசு முத்திரைக்கு பதில், செம்மொழி மாநாட்டு முத்திரை இடம் பெற்றிருந்தது. இதுவே அயோக்கியத்தனம்தாம். கடந்த 1946 முதல் தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சியினரும், “ஒரு மதத்தை சார்ந்தவாறு முத்திரை இருப்பதால், செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் உருவம் கொண்ட முத்திரையை இனி அரசின் முத்திரையாக பயன்படுத்தலாம்’ என, கூறி வருகின்றனர். அதை நிறைவேற்றும் பொருட்டே அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் செம்மொழி முத்திரை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டிய கேள்வி: இந்நிலையில், “அரசு முத்திரையை மாற்றாக பயன்படுத்தி, மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்’ என, கூறி சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதி பழனிசாமி, உதவி ஆணையர் வரதராஜன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் கூறினார்.

தமிழகத்தின் அரசு முத்திரை மாற்ற சதி: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அரசு முத்திரையாக கோபுர சின்னம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு முத்திரையை அனைத்து தரப்பிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சுகவனேஸ்வரர் கோவில் தங்கரத விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செம்மொழி மாநாட்டு முத்திரையே அதிகம் இடம் பெற்றுள்ளது. அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் மறைமுகமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல: இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதி பழனிசாமி கூறியதாவது: இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல. எந்த முத்திரையையும் நாங்கள் பயன்படுத்துவோம். கோவில் விழா தானே தவிர அரசு விழா அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இதுபோன்று செய்து வருகின்றனர். செம்மொழி முத்திரைக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. கோவில் தங்கரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதை பாராட்டாமல் இதுபோன்று தேவையில்லாதவற்றை கூறி வருகின்றனர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். உதவி ஆணையர் வரதராஜனை தொடர்பு கொண்டபோது, “”தங்கரத விழா அரசு சார்ந்தது. செம்மொழி முத்திரையை உபயதாரர்கள் வழங்கியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்,” என, கூறி முடித்துக் கொண்டார்.

பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு

மே20, 2010
பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு
மே 20,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25276

வேலூர்: பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆறு அடி உயரமுள்ள பச்சைக்கல் சிவலிங்கம், வேலூர் அருகே பாலாற்றில் கண்டெடுக்கப்பட்டது. வேலூர் அடுத்த கந்தனேரி அருகே பாலாற்றில், அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு  மணல் அள்ளிக் கொண்டிருந்த போது, அதிகளவு எடை கொண்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

வேலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் கூறியதாவது:

இந்த பச்சைக்கல் சிவலிங்கம்,400 ஆண்டுகள் பழமையானது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர் காலத்தைச் சேர்ந்தது. சிலையின் உயரம் ஆறு அடி. அகலம் ஒன்பது அடி. சிலையின் எடை 1,500 கிலோ. சிலை, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு சரவணன் கூறினார். சிலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மேலும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

  1. சமீக காலங்களில் சாலைகளை அகலப் படுத்துதல், பெரிய பலமாடி, அடுக்கு வீடுகள், கட்டடங்கள் கட்டப்படுதல், அதற்காக ஆழமாகத் தோண்டுதல்……………………………………….போன்ற வேலைகள் நடந்து வருகின்றன.
  2. பொதுவாக, அவ்வாறு ஆழமாகத் தோண்டும் போதுதான், அதுவும் பரவலாகத் தோண்டும் போது, பல தொல்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
  3. ஆனால், இதுவரை அத்தகைய அறிக்கைகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
  4. உண்மையிலேயே எதுவும் கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தது, திருட்டுத்தனமாக விற்றுவிற்றார்களா, மறைக்கப்பட்டுவிட்டனவா அல்லது அழிக்கப்பட்டுவிட்டனவா?
  5. காலம் தான் பதில் சொல்லும்.

நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!

மே3, 2010
நாத்திக அறத்துறையின் வலை பெரிதாகிறது: இன்னுமொரு மடம் / கோவில் அபகரிக்கப் படுகிறது!
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
மே 03,2010,00:00  IST

கோவை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த மடம், 1800ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1978ல் மடத்தின் அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறினார். மடத்துக்கு சொந்தமாக 612 ஏக்கர் 10 சென்ட் நன்செய் நிலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 482 ஏக்கர் நிலம் உள்ளது. மீதமுள்ள நிலம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. 21 கடைகள், இரண்டு திருமண மண்டபங்கள், ஏழு குடியிருப்புகள், மூன்று தங்கும் விடுதிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு கிரானைட் குவாரி, சுண்ணாம்புக்கல் குவாரியும், மடத்துக்கு சொந்தமாக உள்ளன. இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்த அறங்காவலர் குழு, நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படவில்லை.பல்வேறு குளறுபடி களால், மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.மடத்தில் நடக்கும் முறைகேடுகளை களையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் கடந்த மாதம் 29ம் தேதி, கோவை மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு அறநிலையத்துறை உதவி கமிஷனரை மடத்தின் பொறுப்பாளராக நியமிக்கவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நில மீட்பு) சுப்ரமணியன், மருதமலை கோவில் துணை கமிஷனர் லட்சுமணன், கோவை மண்டல கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், நெருஞ்சிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், மடத்தை அறநிலையத்துறை வசம் கொண்டு வந்தனர். இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ், மடத்தின் வாயிலில் ஒட்டப்பட்டது.கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது:நீண்டகால முயற்சிக்கு பின், நூற்றாண்டு பழமை வாய்ந்த மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மடத்துக்கு வரும் வருவாய் சீராகும். அனைத்து வருவாய் இனங்களுக்கும் சரியான கணக்கு எழுதப்படும். ரசீது வழங்கப்படும். மடத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் உள்ளனர். நிலுவை வைத்துள்ள வாடகையை உடனடியாக மட நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வருவாய் இழப்பை தடுக்க முடியும். மடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும். சம்பள பாக்கியும் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் கூறினார்.

ஔரங்கசீபாகிய கருணாநிதி ஒரு கோவில் மண்டபத்தை இடிக்கிறார்!

ஏப்ரல்15, 2010

Karunanidhi – the Auranazeb in action, demolishes a temple mantap

Vedaprakash

இந்த இடுகையை 29-07-2008 அன்றுwww.indiainteracts.com என்ற தளத்தில் பதிவு செய்தேன். ஆனால், ஏதோ காரணங்களுக்காக, அவர்கள் அந்த “ப்ளாக்” வசதியை நிறுத்து விட்டார்கள்.

இன்று என்னுடைய பதிவைத் தேடியபோது,”Error establishing a database connection” என்று வருகிறது. அதே நேரத்தில், “ஜனமேஜெயன்” என்ற பெயரில், அதே கட்டுரை வெளியாகி உள்ளது, கூகுள் தேடலில் கிடைத்தது:

Karunanidhi – the Auranazeb in action, demolishes a temple mantap

ஆகவே, அதை இங்கு பதிவு செய்கிறேன்.

Karunanidhi ordered for demolition: It is not at all surprising that Karunanidhi, the hidden Aurangazeb has been in action acting against Hindus in his present reign[1]. Under the guise of renovation, a temple mantap was demolished in Kancipuram. What is surprising is that it is not all reported in the media, though it started in April 2008. When a 1000-pillared mantap was demolished at the Tirumala, at least some people objected to it, though the historians, archaeologists and other monument experts, saviours and protectors were sleeping. Now also, the same thing has happened, but for Dr. R. Nagaswamy[2].

500 years old monument demolished: The mantap with carved sculptures braved the vagaries of nature for 500 years, but now, human hands are bringing down the massive mandapa situated in the famed Varadaraja Perumal temple at Kancheepuram, Tamil Nadu[3]. Built by the Vijayanagar king Achyuthadevaraya around A.D. 1530, it was known for its few hundred pillars covered with beautiful carvings of dancers, musicians, floral motifs and gods. All these are now smashed to pieces with crowbars. The demolition, which began in April, has picked up pace with a bulldozer being pressed into action.

“Uliyin Osai” in reverse – Sastriyar[4] behaves differently: The Kalainjar was planning for “Uliyin osai”, the sound of chisel – carving sculptures out of stone, but, in action, he ordered to demolish such sculptures. Note, how iconoclasm works against iconogenesis! Hussian painted Hindu Goddesses and Gods in the name of expressing artistic talent of expression, but he actually tried to demolish and blaspheme Hindu Goddesses and Gods with the perverted psyche. The Mohammedan demolition frenzy acted psychologically, as in the cases of Khiljis, Malik kafur, Aurangazeb, Tipu sultan etc. Karunanidhi, the moder-day manipulators does it in his 83 years age.

Rennovation or demolition? Temple officials said it was “not a demolition but dismantling of the mandapa” to assemble it again to house vahanas (vehicles) of the deities. “A donor” was apparently financing “the project” to “dismantle and re-assemble” the mandapa so that the “vahanas can be displayed openly”. The temple comes under the Hindu Religious and Charitable Endowments Department of the Tamil Nadu government. However, no details are known to the public. In fact, the Christian Rajasekhara Reddy also gave similar apologia for his renovation carried on in front of the Tirumala temple.

Dr. R. Nagaswamy says it is total destruction: However, Dr. R. Nagaswamy, former Director of the Tamil Nadu Archaeology Department, called it “a thoughtless act of destruction and renovation“. The mandapa could have been cleaned easily, conserved and preserved.

What is happening now is total destruction. They are not dismantling it. They are smashing it with a bulldozer,” he said. The temple was earlier subjected to a bout of vandalism when the murals of Vishnu, Lakshmi and other gods in the Hindu pantheon were whitewashed. The surviving paintings have faded or peeled away. They have not been preserved. Thus, the atheist government may be working in a phased manner, but these devils are posing as savious of Tamil culture and so on! Better, the Tamil lovers, Tamil protagonists and others at least now recognize the iconoclasts and act so that whatever left could be protected.

Demolition carried with the instance of DMK government: These demolitions are done at the instance of the Dravida Munnetra Kazhagam (DMK) government in the State[5]. Many times, our Dravidian and Tamil friends used to accuse or even shout at me for always attacking “Karunanidhi”. But, note my dear friends, what has been happening. As now our Maharaja or Chakravarti has been Karunanidhi, as a citizen, I could blame only my ruler. I cannot complain to the ruler of Pakistan or Afganisthan! Therefore, they should not pretend hinding the truth or the heinous crimes of the ruler of Tamilnadu, misusing his status.

The origin of the Mantap and temple: The origin of the Varadaraja Perumal temple at Kancheepuram goes back to about 1,200 years. Nagaswamy, who is also a scholar in Sanskrit, calls it “the most beautiful Vishnu temple at Kancheepuram”. The temple originally consisted of an image of Narasimha at the foot of a small rocky boulder. Later, a standing form of Vishnu was installed on top of the rock. It was then called Arulalar temple. The village was called Athiyur because there were a number of “athi” trees around. The temple began to gain prominence in the 11th century, during the period of the Cholas. Kulotunga Chola encased the rock and built a structural temple around the standing Vishnu circa A.D. 1100. The temple expanded with the construction of several shrines, prakaras (corridors) and gopurams. Vijayanagar emperor Krishnadevaraya built the present sanctum sanctorum, the vimana above it and covered it with gold sheet around A.D. 1525, said Nagaswamy. He also rebuilt the sanctum of Thayaar (Vishnu’s consort) and the vimana, and covered this vimana also with gold. Krishnadevaraya’s successor Achyuthadevaraya built the kalyana mandapa on the left side beyond the western entrance to the temple. This mandapa is known for its several hundred pillars with intricate carvings of horse-riders, dancers, musicians, and gods and goddesses.

Act and Rules violated – the principles of archaeology forgotten: On the right side, “as if to strike a balance”, he built another mandapa with a few hundred pillars, all hewn out of granite. This was used for conducting temple festivals in the past. Later, it was used as a goshala, or cow shed. It is this mandapa that is being pulled down now. It originally encased a central mandapa with carved pillars. This has already been demolished. Broken pillar-members, some of them numbered, lie in a heap. “The entire mandapa is in good condition…. The walls are in perfect alignment. It has survived for 500 years without tilting or developing cracks. Except that it has not been cleaned, it is in good shape,” said Nagaswamy, adding that it could have been easily preserved without demolishing it. No technical report on the mandapa’s condition was prepared before the demolition began. Although some of the pillars that have been pulled down are numbered, it would be impossible to reassemble the mandapa because they are lying in a heap in different places and in broken pieces, he said. Temple officials claimed they would rebuild the mandapa with original pillars as a gallery to house the temple’s vahanas. They claimed they were using the bulldozer only to remove the lime mortar on the ceiling of the mandapa. They would replace the ancient lime mortar with cement mortar. However, the use of cement mortar would be a blatant violation of the canons of conservation, asserted archaeologists[6]. These are the photos of demolition squad in action[7].

Why historians, archaeologists and others are keeping quite? The proverbial, phenomenal or tactful silence maintained by the present-day historians, archaeologists of all categories, secular, progressive, eminent, elite and what not – is understandable. As they expect benefits from the Maharaja Karunanidhi, they do not ask whatever he does. In fact, with sycophancy, they may prise for his sound or nise of chisel that has demolished the monument! As the conferences of TNHC, IHC, APHC, SIHC etc., are coming in the order, let us see whether these people have any guts or sense f their profession to pass any resolution etc., or the K. Veeramanies, Ramasamies and other oldmen would be invited to talk nonsense.

VEDAPRAKASH

29-07-2008


[1] Perhaps, the instances have been well recorded in the internet groups, the people forget the happenings.

[2] Dr. R. Nagaswamy has been the former Director of State Archaeological Department, Tamilnadu and active defender of Indian culture, tradition etc., he has many times tried to refute the anti-historical writings of Micheal Witzel and Company of Harvard University.

[3] T.S. Subramanian, Assault on heritage, The authorities of a temple in Kancheepuram are “dismantling” a 500-year-old structure, ostensibly to reassemble it. Frontline, Volume 25 – Issue 15 :: Jul. 19-Aug. 01, 2008. See at:

http://www.frontlineonnet.com/stories/20080801251512900.htm

[4] Recently, I came to know that the iconoclast assumed this name just like Suryanarayana Sastri imitating him by having the title of “Kalainjar” i.e, Sastriyar. Remember, how Anna used to ridicule one “Sastriyar” in his “Ariya Mayai”!

[5] Ibid. Frontline, Volume 25 – Issue 15 :: Jul. 19-Aug. 01, 2008

[6] Here, unfortunately, the names of the archaeologists have not been mentioned. Perhaps, they are afraid as they are government servants and the rulers can take any action with their vested powers.

[7] Courtesy: Dr. R. Nagaswamy and Frontline.

நவகிரகங்களை தூஷிக்கும் திராவிட நாத்திகம்!

பிப்ரவரி27, 2010

நவகிரகங்களை தூஷிக்கும் திராவிட நாத்திகம்!

தஞ்சை நாராயணசாமி, மக்களுக்குத் தரும் போதைகள் நவக்கிரக கோவில்கள், விடுதலை, 27-02-2010, ஞாயிறு மலை, பக்கம்.5.

http://viduthalai.periyar.org.in/20100227/snews05.html

தஞ்சை நாராயணசாமி என்பவர் எழுதியதாக, “மக்களுக்குத் தரும் போதைகள் நவக்கிரக கோவில்கள்”, என்ற தலைப்பில், வீரமணியின் விடுதலையில் இப்படியொரு கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. பகுத்தறிவுள்ள தமிழர்கள் படித்து பயன் பெறுவார்களாக!

(கிரகங்களின் எண்ணிக்கை தற்போது பத்து, மேலே சொல்லியுள்ளவற்றில் இராகு, கேது, என்பவை (சாயாகிரகம்) இல்லாதவை. இந்த ஒன்பதைச் சொல்லி, அவற்றிற்குக் கோவில்கள் அமைத்தும், சிலைகளை கோவில்களில் அமைத்தும், அவற்றை விளம்பரப்படுத்தி, மக்கள் அங்கு சென்று வர ஆசைகாட்டியும், பார்ப்பனர்கள் ஏமாற்றி வருகிறார்கள். நம்மக்களும் காலத்தையும் பொருளையும், மானத்தையும் இழந்து வாழ்கின்றனர். மக்கள் இவவற்றை புறக்கணிக்க வேண்டும்)

2. சபரிமலை அய்யப்பன் கோயில் 18 படிக்கட்டுகளும் ஒவ்வொரு கடவுளைக் குறிப்பதாகுமாம்.

ஒன்றாம் படி _ சூரியன்

இரண்டாம் படி _ சிவன்

மூன்றாம் படி _ சந்திரன்

நான்காம் படி _ பராசக்தி

அய்ந்தாம் படி _ செவ்வாய்

ஆறாம் படி _ முருகன்

ஏழாம் படி _ புதன்

எட்டாம் படி _ விஷ்ணு

ஒன்பதாம் படி _ குருபகவான்

பத்தாம் படி _ பிரம்மா

பதினொன்றாம் படி _ சுக்கிரன்

பன்னிரெண்டாம்படி _ ரங்கநாதன்

பதின்மூன்றாம் படி _ சனீஸ்வரர்

பதினான்காம் படி _ எமன்

பதினைந்தாம் படி _ ராகு

பதினாறாம் படி _ காளி

பதினேழாம் படி _ கேது

பதினெட்டாம் படி _ விநாயகர் (தினகரன் பொங்கல் மலர்)

(அய்யப்பனே ஒரு கற்பனை; அவன் பிறப்பே அசிங் கம். இரு ஆண்களுக்குப் பிறந்தவன் என்று கூறி. அவன் பெருமைக்கு கதைகள் வேறு. அந்தக் கோயி லில் 18 படிகள் இருந்தால், அவை ஒவ்வொன்றும் ஒரு கடவுளைக் குறிக்கிறதாம். சபரிமலை செல்லும் பக்தர்கள் பலகாலமாக அந்தப் 18 படிகளிலும் ஏறி மிதித்துக் கொண்டுமேலே சென்று அய்யப்பனைப் பார்க்-கிறார்கள். இத்தனை ஆடம்பரமும் காட்டு மிராண்-டித்தனமும் வெளியில் தெரிபவை. இந்தப் படிகளின் விளக்கத்தின்படி, 18 படிகளும் 18 கடவுள் கள் என்றால் , பக்தர்கள் அனைவரும் அந்தப் பதி னெட்டுக் கடவுள்களையும் ஏறி மிதித்துச் சென்று, திரும்பி மிதித்துக்கொண்டு வருகின்றனர். என்றுதான் அருத்தம். கடவுளர் மதிப்பு இப்படிப்பட்ட முட்டாள் தனத்தால் சந்திசிரிக்கின்றன. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பதற்கு இதுவே சான்றாகும்)

தஞ்சை நாராயணசாமி

சிலைகளைத் திருடும் பாதிரியார்!

பிப்ரவரி1, 2010

சிலைகளைத் திருடும் பாதிரியார்!

இன்று மாலை (திங்கட்கிழமை 01-02-2010), “தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”[1], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன! திலகவதி ஒரேரேடியாக சிலைத் திருடர்களைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்! அதுவும் எல்லாமே கோட்க்க்கணக்கில்தான், அவை மதிப்பு!

சிலைகளைத் திருடும் பாதிரியார்! தமிழ் நாட்டிற்கு இதொன்றும் புதியது இல்லை. கோவில்களை உடைப்பது, சிலைகளை உடைப்பது, பீயைக் கரைத்து கோவிலில் ஊற்றுவது ………………….முதலியவை அவர்களுக்கு சகஜமே. ஆனந்த ரங்கம் பிள்ளை டைரி என்று இருக்கிறது. அதனைப் படித்தால், அவர்களது அத்தகையச் செயல்களை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, கிருத்துவ பாதிரிகளுக்கு அதுதான் முக்கியமான வேலையாக இருந்தது. போர்ச்சுகீசிய பாதிரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்க்டாம்.

இம்மானுவேலால் ஏற்றுமதி செய்யவிருந்த சிலைகள்

இம்மானுவேலால் ஏற்றுமதி செய்யவிருந்த சிலைகள்

பாதிரியைச் சுற்றி வளைத்துப் பிடித்தனராம்! சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விடுதியை முற்றுகையிட்டனர். விடுதியில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம் பள்ளூரைச் சேர்ந்த இம்மானுவேல் என்கிற பாதிரியார், திருநெல்வேலி மாவட்டம் செல்லிய நல்லூரைச் சேர்ந்த மாடசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சை மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது, ஜகந்நாதன் மற்றும் வேலு என்பவர்கள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் முதலிய இடங்களில் சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றைத் திருடி, ஆற்றுப்படுகையில் புதைத்து வருவார்களாம். இம்மானுவேல் சொல்லும்போது, அவற்றை எடுத்துச் சென்று கொடுப்பார்களாம்[2].

சிலைகளைப் பிடித்துவரும் திலகவதி IPS

சிலைகளைப் பிடித்துவரும் திலகவதி IPS

11 சிலைகள் பிடிப்பட்டன: அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிலைகளை திருடியது தெரியவந்தது. தமிழகத்தில் திருடப்படும் சிலைகளை பாதிரியார் இம்மானுவேல், புதுச்சேரி கோட்டங்குப்பத்தைச் சேர்ந்த மாரிசாமி மூலம் வெளி நாடுகளுக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாரிசாமியும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மகாவீரர் ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. இவை திருவண்ணாமலை, ஈசா குளம் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற திகம்பரர் ஜெயின் கோயிலிருந்து திருடப்பட்டுள்ளது. இதேபோல சிற்றுடையூர் லட்சுமி நாராயணன் பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்ட நாராயணன், விநாயகர் ஆகிய சிலைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 11 விலை உயர்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாரிசாமி, இம்மானு வேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு கூடுதல் டிஜிபி திலகவதி இத்தகவலை தெரிவித்தார்.

இம்மானுவேலின் பின்னணி (3): வேலூர், பள்ளூரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சசிகுமார். பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, பள்ளூர் சர்ச்சில் மதபோதகராக உள்ளார்.இமானுவேல், தனது சொந்தக்காரர்களான ஜெகநாதன், வேலு மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவா, செல்வம் ஆகியோருடன் சேர்ந்து, சிலை திருட்டில் ஈடுபட்டு வந்தார். இவரது கூட்டாளி மாடசாமி. இவருடன், இமானுவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது.இக்கும்பல் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய பகுதிகளில் கவனிப்பாரற்று கிடக்கும் கோவில்களில், சிலைகளை திருடினர். சிவா, செல்வம் இருவரும், பகல் நேரங்களில் மிட்டாய், சர்பத், ஐஸ் விற்பவர்கள் போல சிறு கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று நோட்டம் பார்த்தனர். பின், இமானுவேலிடம் தகவல் கொடுத்து, அங்குள்ள சிலைகளை திருடினர்.வேலூர் ஈராளச்சேரியில் உள்ள பஜனை கோவிலில் கிருஷ்ணர், ருக்மணி, ராதா, விநாயகர் சிலைகளை, கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி, கொள்ளையடித்தனர். நான்கு சிலைகளை, ஜெகநாதன் வீடு முன், விருத்தசீரா ஆற்று மணலில் புதைத்து வைத்தனர். இந்த கும்பல், அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய வெளிநாடுகளுக்கு, திருட்டு சிலைகளை விற்பனை செய்ததாக தெரிகிறது. பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழர்கள் இந்த கலாச்சாரக் கொள்ளையைத் தடுத்தே ஆகவேண்டும்: நாத்திக ஆட்சியாளர்களின் சித்தாந்தத்தினால், நிச்சயமாக தமிழர்கள் செட்டுச் சீரழிந்து போயிருக்கிறர்கள் என்று அவர்களது செயல்பாடுகள், செயல்கள், நடத்தைகள், பேச்சுகள் (பொது இடங்களில் மரியாதை இல்லாமல் பேசுவது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, அடிக்க வருவது போன்ற அநாகரிகமான செய்கைகள், பெரியவர்களை, பெண்களை கேலி பேசுவது, கிண்டல் செய்வது, சினிமா-மாதிரி கமன்ட் அடிப்பது………..முதலியன) மூலம் ஆரிந்து கொள்ளலாம். இவையெல்லாம் கௌரமான நாகரிக உச்சக்கட்டநிலை அல்ல. இதற்கு ஆஸ்கர், கிராம்மி பரிசுகளளெல்லாம் கொடுக்க முடியாது. ஆகவே, அத்தகைய திராவிட மாயையிலிருந்து தமிழர்கள் விழித்தெழுந்து கோவில்களைக் காக்கவேண்டும்.


[1] சிக்கியது சிலை திருட்டுக்கும்பல்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு, திங்கள்கிழமை, பிப்ரவரி 1, 2010; http://thatstamil.oneindia.in/news/2010/02/01/gang-arrested-stolen-idols-recover.html

[2] Newstoday,  Monday, 1 February, 2010; http://newstodaynet.com/newsindex.php?id=21185%20&%20section=7

[3] தினமலர், 02-02-2010, 11 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 7 பேர் கைது, விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15877