அனைத்துசாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்என்றசட்டப்படியிலானபணிநியமனம்நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].
புதியசட்டத்தின்படிசெய்யப்பட்டநியமனம்நிறுத்திவைக்கப்பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சர்டிபிகேட் / சான்றிதழ்இருந்தால்எந்தஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.
தடைவிதிக்கக்கோரிமனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.
அந்தந்தகோவில்நியமஆகமத்தில்தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்போன்றவைபின்பற்றமுடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.
சுகவனேஸ்வரர்கோவில்தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].
ஆகமமா, ஆகமபயிற்சியா, பரம்பரைநியமனமா – போன்றவைதொடர்–பிரச்சினைகளாகஇருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.
[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்துசாதியினரும்அர்ச்சகர்ஆகலாம் – தமிழ்நாடுஅரசின்உத்தரவுக்குதடைவிதிக்கஉச்சநீதிமன்றம்மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.
ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன – ஏதோ எதிர்மறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் புரிகிறது (2)
அதேபோலவே, இப்போதும், அறங்காவலர்உரிமையில்அரசுதலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர்உரிமையில்அரசுதலையிட்டிருக்கிறது. அனைத்துஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்என்றஅரசின்முடிவுதவறானது. அதனால், ஏற்கனவேதெளிவாகஇருக்கும்பல்வேறுசட்டங்களை, உச்சநீதிமன்றஉத்தரவுகளைமேற்கோள்காட்டி, முதல்கட்டமாக, சென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுக்கப்போகிறேன். தேவையானால், உச்சநீதிமன்றம்வரைசெல்வேன். எனவே, இந்தஉத்தரவைஉடனடியாக, முதல்வர்ஸ்டாலின் ‘வாபஸ்‘ பெறவேண்டும். இல்லையென்றால், அதற்கானவிளைவுகளைசந்திக்கவேண்டியிருக்கும். அர்ச்சகர்களாகஇருக்கும்பிராமணர்களுக்காகஇதைசெய்யவில்லை. அரசியல்சட்டத்தைஸ்டாலின்மதிக்காமல், ஹிந்துமதகோட்பாடுகளில்தலையிடுகிறார்[1]. அதைதடுக்கவேபோராடுகிறேன். புரிந்துகொண்டு, ஸ்டாலின்வாபஸ்பெற்றால், நீதிமன்றகண்டனத்தில்இருந்துதப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[2].
ஆகமதந்திரமும்ஜாதிமந்திரமும்! –பேரா.முனைவர்வெ.சிவப்பிரகாசம்: இவற்றிற்கு எல்லாம் பதில் கொடுப்பதைப் போன்று, நக்கிரனில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது[3]. இதில் புதியதாக எதுவும் இல்லை. ஏற்கெனவே தள்ளுபடி செய்யப் பட்ட தீர்ப்புகளை வைத்துக் கொண்டு, அவற்றையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு, ஸ்டாலினை, திமுகவை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சார ரீதியில் எழுதப் பட்டுள்ளது[4]. இவ்வாறு தான் பொய்களை வைத்டுக் கொண்டே திராவிடத்துவ கட்சிகள் 1960களிலிருந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. ஆட்சி-அதிகாரம் வைத்துக் கொண்டு, ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்து, கருத்துகளை, நிகழ்வுகளை மக்களின் மீது தீணித்து வருகின்றது. இப்பொழுது, சன் குழுமம், ஆட்சி-அதிகாரம், விளம்பர வியாபாரம்-வருமானம் அவற்றை பங்கு போட்டுக் கொள்ளும் கூட்டங்களாக மாறி விட்டதால், எல்லாமே, ஒரே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கின்றன.
அர்ச்சகர் பிரச்சினை நீதி மன்றத்திற்குச் சென்று வாத-விவாதங்களுக்கு உட்படுத்தப் படும் நிலையில், ஜாதிகளை மீறிய நிலை வருகின்றது.
கோடிக் கணக்கான கோவில்கள், பலமுறைகளில், நிலைகளில், “மந்திர-தந்திர-யந்திர” வழிகளில், ஆகமங்கள்- ஆகமங்கள் இல்லாத என்ற வகைகளில் கட்டப் பட்டுள்ளன, மாற்றப் பட்டுள்ளது, மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன.
நேராக கருவறைக்குச் செல்லும் போன்ற கோவில்கள், கருவறையைச் சுற்றி வரும் கோவில்கள், எட்டி நின்று வழிபடும் கோவில்கள், என்று பல வகைகள் உள்ளன.
மிருக பலி இடுதல், இடக்கூடாது என்றுள்ள கோவில்கள், இரண்டையும் தனித்தனியாக செய்து கொள்ளலாம் என்றுள்ள கோவில்கள் என்றெல்லாம் உள்ளன.
வருடத்திற்கு, மாதத்திற்கு, பட்சத்திற்குத் திறக்கும் கோவில்கள் உள்ளன. இல்லை, கருவறை சிலைகளுக்கு / விக்கிரகங்களுக்கு அப்பொழுது தான் பூஜை என்ற நிலையும் உள்ளது.
ஒரு கோவிலுக்கு பல மடங்கள் உரிமை கொண்டாடும் நிலையில், அம்மடங்கள் மாறி-மாறி பூஜை செய்து வரும் முறைகளும் உள்ளன.
வேதங்களுக்கு, வேதாங்களுக்கு, ஆகமங்களுக்கு உட்பட்டது என்று கோவில்கள் இருக்கின்றன.
ஜைன-பௌத்த இடையூறுகள், ஆக்கிரமிப்புகள், விக்கிரங்களை மாற்றி வைத்த நிலைகள் என்றெல்லாம் பிரச்சினை இருந்தன, அவை, இப்பொழுது ஆகமப் பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.
இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்களின் கோவில்கள் அவ்வாறே நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.
இடைக் கால, முகமதியர்களின் கோவில் இடிப்புகள், கருவறை விக்கிரகங்கள் உடைப்பு, போன்ற அவமதிப்புகள், அநாச்சாரங்கள் முதலியவற்றிற்குப் பிறகு, பல விதிமுறைகள் சேர்க்கப் பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
அத்தகைய கோவில்களில், அம்முறைகளிலேயே ஆராதனை, கொண்டாட்டங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.
ஆனால், இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, சட்டங்களை, நீதிமன்ற தீர்ப்புகளை, ஆகமங்களை, மெற்குறிப்பிடப் பட்ட பிரச்சினைகளை மறைத்து, அர்ச்சகர் நியமனத்தை அரசியல் ஆக்கப் பட்டுள்ளது.
நாத்திகர், ஆத்திகவிசயங்களில்தலையிடும்மர்மங்கள்!: நாத்திகம், அதிலும் இந்துவிரோத நாத்திகம் பின்பற்றி வரும், இந்த திராவிடத்துவத் தலைவர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்களின் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப நாங்கள் அர்ச்சகர் நியமனத்தைச் செய்வோம் என்று பிடிவாதமாகச் செய்துள்ளனர். திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:
எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
ஏனெனில், எம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும், உடனடியாக டாக்டராகி, மருத்துவம் செய்து விட முடியாது, அறுவை சிகிச்சை செய்கிறேன் என்று, ஆபரேஷன் தியேட்டர்களில் நுழைந்து விட முடியாது.
மருத்துவத்தில் உள்ள பல பிரிவுகளில் முறையாகப் படித்து, தேர்ச்சி பெற்று அனுபவம் பெற்றப் பிறகே, மருத்துவம் செய்யமுடியும். அவ்வாறில்லாமல், வேலையில் இறங்கமுடியாது. ஒரு வருடத்தில் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு டாக்டர் ஆகிவிடமுடியாது.
எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகளுக்கு, வேலைகளுக்கு டிப்ளோமா, சர்டிபிகேட், டிகிரி படிப்புகள் ஆரம்பித்து, ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என்று வைத்து, படித்து முடித்து சான்றிதழ் பெற்றுக் கொண்டால், அவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று ஆகி விட முடியுமா?
எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.
ஒரு வருடத்தில் படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு, அர்ச்சகர் ஆகி விடலாம் என்பது வேடிக்கையான விசயம் என்பது எல்லொருக்கும் தெரிந்துள்ளது.
கொரோனாகாலம்நீங்கியதுடன், இந்ததிட்டத்தின்பின்னனிவெளிப்பட்டுவிடும்: ஆக, இவையெல்லாம், அவர்களுக்குப் புரியவில்லை என்பதில்லை. எனவே, இந்த சர்டிபிகேட் அர்ச்சகர்களை கோவில்களுக்குள் நுழைப்பது, பக்தியோ, சிரத்தையோ, கடவுளின் மீதான காதலோ, விக்கிரகங்க்ளைக் காக்க வேண்டும் என்ற உருகலோ இல்லை. கோவில்களுக்குள் நுழைந்து, விவரங்களை அறிந்து, நாத்திக ரீதியில், ஏதோ எதிமறையாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நுழைப்பப் பட்டதே ஆகும். மாலிக்காபூர்-ஔரங்கசீப் போன்ற எண்ணங்களுடன் நுழைதால், நிச்சயமாக அதே விளைவுகள் தான் உண்டாகும். உலகமே உண்மை அறிய நேரிடும். உண்மையினை யாரும் மறைக்க முடியாது, அது சரித்திரமாகும்.
[1] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்துஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்சட்டத்தைவாபஸ்பெற்றால்ஸ்டாலின்தப்பிப்பார். சு.சாமிகடும்எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது – அர்ச்சகர்பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!
முரசொலியின்விளக்கம்ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!
நாத்திகர், ஆத்திகவிசயங்களில்தலையிடும்மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:
எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.
60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
“இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.
அரசியல்ஆக்கப்பட்டுவிட்டதால்கூட்டணிகட்சிகள்ஆதரவுதெரிவிப்பதில்எந்தஆச்சரியமும்இல்லை: இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது[1], “சமூகநீதியைவிரும்பாதசுப்ரமணியன்சுவாமிபோன்றோருக்குஇந்தத்திட்டம்எரிச்சலைத்தருகிறது. மனிதன்நிலவில்கால்வைத்தாலும்கோவில்கருவறையில்கால்வைக்கமுடியாதுஎன்றநிலைநீடித்துவந்தது. அனைத்துச்சாதியினரும்அர்ச்சகராகலாம்திட்டம்அகிலஇந்தியஅளவில்பெரியதாக்கத்தைஏற்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தில்முதல்வர்ஸ்டாலினுக்குஉற்றதுணையாகஇருப்போம்,” என தெரிவித்துள்ளார்[2]. இதே போலத்தான், பெரியார் திடலில், வீரமணி தலைமையில் இந்துவிரோதிகள் எல்லாம் சேர்ந்து பேசியுள்ளார்கள். அதிலும், இந்த இந்துவிரோதி திருமா இருந்ததும் நோக்கத் தக்கது. அருள்மொழி, சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன். சிகரம் செந்தில்நாதன், கலையரசி நடராசன் இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்துவிரோதிகள் எவ்வாறு சேர்ந்து, இந்துமதத்திற்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.
ஸ்டாலின்அவருடையதந்தைசெய்ததவற்றைச்செய்ததால்நீதிமன்றத்துக்குச்செல்லவேண்டியநிலைவந்துள்ளது – சுப்பிரமணியன்சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[3]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[4]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!
முதல்வர்ஸ்டாலினுக்குயார்அதிகாரம்கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.
திகசொல்லிசெய்யும்ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார். இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.
[7] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்துஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்சட்டத்தைவாபஸ்பெற்றால்ஸ்டாலின்தப்பிப்பார். சு.சாமிகடும்எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு அரசியல் விழா போன்று தான் இருந்தது, பேச்சாளர்களும் அவ்வாறே பேசினார்கள். அந்த மடாதிபதிகள் மடத்தின் நிலங்களை விற்றது போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், அவர்களில் சிலர் நாங்கள் “இந்துக்கள் அல்ல,” என்றும் பேசியிருக்கிறார்கள். சுகி சிவம் பற்றியும் நிலைமை மாறி விட்டது. ஏனெனில், காசு வாங்கிக் கொண்டு, மேடைக்கு ஏற்றபடி பேசுகின்ற ஆளாகி விட்டதால், அவரை ஆன்மீகத்தில் சேர்க்க முடியாது. ஒரு அரசியல் ஏஜென்டாக செயல்பட ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது.முன்பு, இவரது புத்தகத்தை திக வெளியிட்டது, இப்பொழுது, திமுக, இந்நிகழ்ச்சிக்கு வரவேற்று பேச அனுமதித்துள்ளது.
19-08-2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை: கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது[1]. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன் 19-08-2021 வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை[2]: “கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் விடுவிக்கப் படமாட்டார்கள் என்பதை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம். புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதுகுறித்த பரிந்துரைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். பணிவரன்முறைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் உடனடியாக அனுப்பலாம். இது தொடா்பாக தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவது விரும்பத்தக்கதல்ல. வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால் அதற்கு இணை ஆணையா்கள் அல்லது உதவி ஆணையா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம். இதுகுறித்து கோயில் அலுவலா்களுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”
தினக்கூலிஅர்ச்சகர்பிரச்சினை – வேறுஏதேனும்தேவையற்றசிக்கலானபிரச்னைகள்உருவாக்கப்பட்டால்அதற்குகோயில்நிர்வாகஅதிகாரிகளேபொறுப்பாவார்கள்: “தினக்கூலிஅர்ச்சகர்பிரச்சினை”யில் வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாகும் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அந்த போர்வையிலும், ஆட்களை கூட்டி வந்து உள்ளே நுழைத்து விடுவார்களா? அடுத்தது, “தேவையற்றசிக்கலானசெய்திகள்உருவாவதற்குஎந்தஇடமும்அளிக்கவேண்டாம்,” என்றால், இதில் என்ன “தேவையற்றசிக்கலானசெய்திகள்” அவை எப்படி உருவாகும், அவற்றை உருவாக்க யார் இருக்கின்றனர் போன்ற கேள்விகளும் எழும். “உருவாவதற்குஎந்தஇடமும்அளிக்கவேண்டாம்,” அத்தகையோர் உள்ளதை ஆணையர் அறிந்துள்ளார் போலும். ஐ.ஏ.எஸ் அதிகாரி இவ்வாறு சொதப்பலாக ஆணையிடுவதிலிருந்தே, இவர் அரசியல்வாதிகள் / ஆட்சியாளர்கள் / சித்தாந்தவாதிகள் சொல்வதைக் கேட்டு நடக்கிறார் என்பதும் தெரிகிறது. சட்டப் படி நடக்கிறது என்றால், சட்டப் படி நடக்காமல் இருக்கும்போது, இவர் தாராளமாக எடுத்துக் காட்டலாம். இதே போல “தினக்கூலி” முறையில் மற்றவர்களை, மற்ற துறையில் ஓய்வு பெற்றவர்களை, மூப்படைந்தவர்களை நியமிக்க முடியுமா?
கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்: கோவில் அர்ச்சகர் பணியில் ஓய்வு, மூப்பைத் தாண்டியோர் போன்றவை உள்ளனவா என்று தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், ஏதோ கூலிக்கு வேலை செய்யும் தொழில் போன்று அர்ச்சகர் சேவையை மாற்றி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏதோ, நாட்கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போன்று 40-60 வருடங்களாக சேவை செய்து வரும் அர்ச்சகர்களைக் கேவலப் படுத்தும் வகையில் ஆணையிட்டிருப்பது, மிக மோசமாக இருக்கிறது. “கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்,” என்றதில், அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. விடியற்காலையில் எழுந்து, குளித்து, பூஜைக்கு ஏற்பாடு செய்து, காலை 4 மணி, 4 மணி என்று பூஜை செய்து வருபவர்கள், எதையும் பொருட்படுத்தாமல் செய்து வருகின்றனர். இனிமேல், புதியதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அத்தகையோர், வேலை செய்யும் போது, இவர்கள், அவர்களிடம் தினக் கூலிக்கு வேலை செய வேண்டும் என்றால், என்ன அது? இங்கு தான் இந்துவிரோதிகளின் திட்டம் வெளிப்படுகிறது. அந்த புதிய பூஜாரிகளின் நிலையும் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான பூஜை, சேவை என்றால், இத்தகைய, ப்ரித்துக் காட்டும் கீழ்த்தரமான எண்ணங்கள் வராது.
[1] தினமணி, கோயில்களில்வயதுமூப்பைத்தாண்டியோருக்குதினக்கூலிஅடிப்படையில்பணி: இந்துசமயஅறநிலையத்துறைஉத்தரவு, By DIN | Published on : 20th August 2021 06:48 AM.