Archive for the ‘மாணிக்கவாசகர் சிலை’ Category

மாணிக்கவாசகர் கட்டிய சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? தமிழகத்தில் ஏன் இப்படி நடக்கிறது? (2)

திசெம்பர்31, 2021

மாணிக்கவாசகர் கட்டிய சின்ன ஆவுடையார் கோவில் கோவில் சிதிலமடைந்து விழும் நிலையில் விடப் பட்டது ஏன்? தமிழகத்தில் ஏன் இப்படி நடக்கிறது? (2)

சின்ன ஆவுடையார் கோவி ல் ஒரு முக்கியமான இடத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது.
சின்ன ஆவுடையார் கோவி ல் ஒரு முக்கியமான இடத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. வடக்கில் கும்பகோணம், தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் கடல் மற்றும் இலங்கை, மேற்கில் மதுரை என்றுள்ளது.
கொள்ளுக்காடு (Kollukkadu) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள கிராமமாகும். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் உப்பளங்கள் அதிகமாக உள்ளன.
கோவில் இருப்பிடம் – கூகுள் மேப் – நன்றி

அதிகளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டுபோல் காட்சியளிக்கிறது: சேதுபாவாசத்திரம்[1] அருகே அக்னியாறு முகத்துவாரத்தில் அடிக்கடி மணல் திட்டுகள் உருவாவதால் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மணல் திட்டுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கொள்ளுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரம், அம்பேத்கர் நகர் மற்றும் சின்ன ஆவுடையார் கோயில் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து 80 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அக்னியாற்றில் இருந்து வரும் நீரோட்டத்தின் காரணமாக அதிகளவில் மணல் தேங்கி கடலின் முகத்துவாரத்தை அடைத்து விடுவதால் திட்டுபோல் காட்சியளிக்கிறது. இதனால் படகுகளை கடலுக்குள் செலுத்தவும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரை திரும்பும்போது துறைமுக வாய்க்காலுக்கு படகுகளை எடுத்து வருவதிலும் மீனவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கூரை இடிந்துள்ள நியையில் பண்டபம்……
கூரை இடிந்து கீழே விழுந்துள்ள கற்களைப் பார்க்கலாம்..

மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: இதனால் மிக குறைந்த நாட்களே அதாவது மாதத்துக்கு 10 நாட்களுக்கு மட்டுமே தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாரத்துக்கு ஒருமுறை உடல் உழைப்போடு அதிகப்படியான தொகை செலவு செய்து மணல் திட்டுகளை மீனவர்களே அகற்றி வருகின்றனர். இதனால் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது[2]. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன் பிடிக்க செல்ல ஏதுவாக மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்[3]. போலி மதுபான விற்பனை முதலியவையும் இங்கு நடைபெறுவதாகத் தெரிகிறது[4]. சம்பந்தப் பட்ட நபர்கள் அழுத்தம் கொண்டவர்களுடன் தொடர்புடைவர்கள் மற்றும் வித்தியாசமான பெயர்களைக் கொண்டுள்ளனர்[5].

தூண்களுடன் உள்ள இன்னொரு மண்டபம்…….
இக்காலத்தில் வண்ணம் பூசியடாக தெரிகிறது……

சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்திற்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு[6]: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சட்டமன்றத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதியை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கீடு செய்தார்[7]. உண்மையில் மத்திய அரசின் பிரதான மந்திரி திட்டங்களின் கீழ் நிதி பெற்று அதிலிருந்து கொடுப்பது[8]. பிறகு அருகில் இருக்கும் அந்த கோவிலுக்கு சில லட்சங்கள் கூட ஒதுக்க முடியாதா? கொரோனா காலத்தில் இந்து அறநிலையத் துறை பணத்தில் ஆஸ்பத்திரிகளில் “அன்னதானம்” கொடுக்கப் பட்டது. ஆகவே, இந்த துறைமுகத்தால் யார் பலனடையப் போகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது.

இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……….அவற்றில் சிற்பங்களைக் காணலாம்……
இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……….அவற்றில் சிற்பங்களைக் காணலாம்……இதில் மீன்………
இடிந்து விழுந்துள்ள பாகங்கள்……இதில் ஒரு கல்வெட்டு வரிவடிவங்கள் காணப் படுகின்றன…. உடைந்துள்ளதாகத் தெரிகிறது……

யார் கோவில்களைக் காக்கப் போகின்றனர்?: தமிழ்-தமிழ் என்று பேசுகின்றவர்களுக்கு மாணிக்கவாசகர் கட்டிய கோவில் மீது ஏன் கரிசனம் வரவில்லை. அப்படியே உடைந்து விழுந்து மறைந்து விடவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்களா? உழவாரப் பணி செய்யும் குழுக்களும் அறிக்கைகள் விட்டு மௌனமாக இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை நாளைக்கு கோவில் சிறக்க ஆரம்பித்தால், சுற்றியுள்ளவர்கள் வியாபாரத்திற்காக, கடைகள் வைக்க வந்து விடுவார்கள் போலும். “கோவிலை காப்போம்,” “ஆலயங்களை விடுவிப்போம்” என்றே சமூக ஊடகங்களில் நிறைய பேர், இயக்கங்கள் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். சிலர் உண்மையான சேவை செய்தாலும், பலர் திடீரென்று தோன்றி மறைந்து விடுகிறார்கள்! “கோவில் அடிமை நிறுத்து” என்று ஆரம்பிக்கப் பட்டது, இப்பொழுது என்னவாயிற்று என்று தெரியவில்லை, ஒரு சில மாதங்களிலேயே மறைந்து விட்டது.

நாத்திக புற்றுநோயா, ஆத்திக புது நோயா?: தமிழகத்தில் அடிக்கடி இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பொதுவாக 60 ஆண்டுகால நாத்திக திகவினர் ஆட்சியினால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று சொல்லிவந்தாலும், ஏன் “இந்துக்கள்,” என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் மற்றவர்கள் இவ்விவகாரங்களில் ஈடுபடவில்லை என்று தெரியவில்லை. லட்சங்களைக் கொட்டி, நிதி வாங்கிக் கொண்டு, கலை ஆராய்ச்சியாளர்கள்,  சிற்பக்கலை வல்லுனர்கள், சித்திரங்கள் ஆய்வு வல்லுனர்கள் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டு,  புகைப்படங்களைப் பிடித்துச் சென்று, சொற்பொழிவுகள் நடத்தி, பிரபல ஆங்கில நாளிதழ்களில் எழுதி,  ஏன் புத்தகங்களையும் வெளியிட்டு புகழ், பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,  சிதிலமடையும் இக்கோவில்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அழகை ரசிக்கிறேன், கலையை ஆராதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே அழகு-கலை முதலியன மற்ற கொடுங்கோலர்களால் கற்பழிக்கப்படும் போது, “நமக்கேன் வம்பு” என்று இருந்து விடுகிறார்கள்.  ஆனால், இவ்விவகாரங்களிலும் ஒரு அமைப்பு தென்படுகிறது. அதாவது கோவில்கள் இவ்வா றுகாணமல் போனால்,  சிலைகளை விற்றுப் பிழைத்துக் கொள்கின்றனர்;  குளங்களைத் தூர்த்து நிலங்களைப் பட்டாப் போட்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆகின்றனர்; கோவில் நிலங்களை தரிசு நிலங்கள் என்று சொல்லி விற்று கொள்ளை அடிக்கின்றனர்.  இதனால், மற்றவர்களும் கண்டு கொள்ளவில்லை, கண்டு கொள்கிறவர்கள் அமுக்கப் படுகின்றனர்.

© வேதபிரகாஷ்

31-12-2021


[1]  மன்னார்குடியில் இருந்த அனந்தமௌனி சுவாமிகளின் இரு சீடர்களில் ஒருவரான மேரு சுவாமிகளுக்கு சியாமராசர், சேது சுவாமிகள் ஆகிய இரு சீடர்கள் இருந்தனர். சேது சுவாமிகள் சேதுபாவா சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றார். தஞ்சையை 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அங்கிருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு அருளும்படி வேண்டியபோது அவர் தான் உலக வாழ்க்கையில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளதாகவும், மன்னார்குடியில் இருக்கும் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெறவும் கூறினார். அதன்படி மன்னர் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெற்று, தன் குருவிற்குத் தஞ்சாவூரின் கீழ ராஜவீதியில், தன் அரண்மனைக்கு எதிரில் ஒரு மடம் கட்டிக்கொடுத்து தங்கச் செய்து, குரு காணிக்கையாக பொன்னும், பொருளும் கொடுத்து கௌரவித்தார். சுவாமிகளின் நினைவாக மன்னார்குடியில் அன்ன சத்திரமும், அரித்ரா நதி என்னும் குளமும், அக்குளத்தின் கரையில் உள்ள கோயிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் சேதுபாவா சத்திரம் என்னும் ஊரும், தஞ்சாவூர் பிரதாபவீர அனுமார் (மூலை அனுமார்) கோயிலும் விளங்கி இவரது பெயரையும், புகழையும் இன்றும் நிலைநிறுத்தி வருகின்றன. இவரது சமாதி கும்பகோணம் அருகேயுள்ள குத்தாலத்தில் உள்ளது.

[2] தினகரன், கடலுக்குள் படகுகளை செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு, 3/11/2020 5:49:53 AM.

[3] https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=992895

[4] Consumer Complaints , sale of illegal and duplicate liquor, JeevanR from Attingal, Kerala, Apr 12, 2019.

[5] The person jaisankar s/o nagooran chinna avudayar koil, kollukkadu panjayat, rajamadam po, pattukkottai tk, thanjavur dt, tamilnadu, pin: 624701 who is selling illegal sales of duplicate liquor on 24/7 with local person name edin s/o sourimuthu, andivayal, rajamadam po, pattukottai tk thanjavur dt. Please take severe action and stop this illegal act.The person Edin is supporting this illegal act and he is doing lot of illegal act by giving brief to local administration and He has earned lot of assets regardless of his legal income and he never have legal income. Due to his local influence he is threatening to public peoples. Then number of people died since having this duplicate liquor Illegal Trade Of Duplicate Alcohol…— sale of illegal and duplicate liquor, JeevanR from Attingal, Kerala, Apr 12, 2019.

https://www.consumercomplaints.in/illegal-trade-of-duplicate-alcohol-sale-of-illegal-and-duplicate-liquor-c2298287

[6] தினமணி, சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ 10 கோடியில் மேம்பாடு அமைச்சா் அறிவிப்புக்குமீனவா்கள் மகிழ்ச்சி, By DIN  |   Published on : 29th August 2021 01:53 AM.

[7] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/aug/29/sethupavasathiram-fishing-landing-site-at-rs-10-crore-3689094.html

[8]துறைமுகம், மீந்துறை பற்றி வெட்டுவேன், புரட்டுவேன் போன்று கொடுக்கப் பட்டுள்ள விவரங்களை, இங்கே படிக்கலாம். கடந்த 50 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர், ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

ஜூலை16, 2010

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு: செம்மொழி மக்களின் அனுக்கிரகம்!

தமிழன்ம, செம்மொழி தமிழன் சிலை திருருவது, கோவிலைக் கொள்ளையெடிப்பது ஏன்? தமிழ், செம்மொழி தமிழ் பேசும் தமிழ் மக்களின் இப்படிப்பட்ட திருட்டுகள், கொள்ளைகள், கோவில் இடிப்புகள் முதலியவற்றை தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, அந்த முகமது கோரி, முகமது கில்ஜி, ஔரங்கசீப், மாலிக்காஃபூர்………………பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இப்படி செம்மொழி தமிழ் பேசிக்கொண்டு, கடவுள் நம்பிக்கையில்லாமல், பெரியார் நாத்திகம் பேசிக்கொண்டு, கருணாநிதி வழியில் கோவில் கொள்ளையடிக்கும் திராவிடத் தமிழர்களை என்னசெய்வது என்றே தெரியவில்லை.

கோவில் கொள்ளைக்கு சான்றிதழ் தேவையா? இப்பொழுது கோவில்களுக்கெல்லாம் ISO சான்றிதழ் வேறு வாங்குகிறார்கள், நாத்திக-கேடுகெட்டவர்கள். இப்படி கொளை, திருட்டு, நம்பிக்கையின்மை, நாத்திகம்………….என்றெல்லாம் வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் சான்றிதழ் வாங்குகிறார்கள்? அல்லது தாங்கள் இப்படியெல்லாம் கொள்ளையேடிக்கலாம் என்று அந்த சான்றிதழில் உள்ளதா?

மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது: மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இருந்தது. இச்சிலை, ஒரு அடி ஏழு அங்குல உயரம், 11.5 கிலோ எடை கொண்டது. கோவிலில் தனி இடத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இச்சிலை, நேற்று காலை மாயமாகி இருந்தது, கோவில் நடை திறந்து பார்த்தபோது தெரிந்தது. இக்கோவிலில் உள்ள கதவுகள், பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. மர்மமான முறையில் சிலை திருடப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின்படி குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ., நடராஜன் ஆகியோர் விசாரிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, திருக்களம்புதூர் என இப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் படிகலிங்கம், மரகத லிங்கம், பஞ்சலோகச் சிலைகள் தொடர்ந்து திருட்டுப் போகின்றன. இங்குள்ள பழமையான, பாதுகாப்பற்ற கோவில் சிலைகளை காக்க அறநிலையத்துறை மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.