ஆடித்திருவிழாவும், நீதிமன்றதீர்ப்பும்உணவுதரம்சோதனையும்: ஆடித் திருவிழா ஜூலை 22ஆம் தேதி 2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருவாதலும், திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளிலும் கோலாகலமாக திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பலர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
உணவுசோதனைஉண்டாக்கியகலவரம்: கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[1]. டீக்கடை, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்டப் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்[2]. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, லேபிள் ஒட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உரிய அனுமதி பெற்று உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளான சுரேஷ் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முறையாக விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததோடு தரமற்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16-12-2023 ஆர்பாட்டம்: தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி கோரி சனீஸ்வரன் கோயிலை பரம்பரை அறங்காவலர்களும் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியும் இந்து முன்னணி சார்பாக குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் கோட்டச் செயலாளர் கோம்பைகணேசன் தலைமையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர். பாலமுருகன், ராம் செல்வா, சசிகுமார் , பாண்டியன், ஆட்டோ முன்னணி ஆச்சி கார்த்திக் உட்பட ஒன்றிய , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்[3]. சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்[4].
23-12-2023 ஆர்பாட்டம்: நீதிமன்றம் உத்தரவின் பேரில் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வெள்ளாளா் அமைப்பு சார்பில் 23-12-2023 சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில மாணவா் அணிச் செயலா் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவா் அண்ணா சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, மாநில மகளிர் அணித் தலைவி தமிழ்செல்வி மணிகண்டன் வரவேற்றார். அதில், குச்சனூா் சனீஸ்வரா் கோயில் முன்பு ஊா்வலமாக சென்றவா்கள், சென்னை உயா்நீதி மன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் குழுவிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வெள்ளாளா் அமைப்பைச் சோ்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்[5]. சின்னமனூா் காவல் சார்பில் ஆய்வாளா் மாயன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனா்[6].
2003 முதல் 2023 வரை: 2003 இல் இருந்து 2020 வரை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்தது. ஆனால் அக்காலகட்டத்தில் என்ன நடந்தது எதற்காக வேண்டி, மறுபடியும் 2023 இல் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில் மீட்கப்பட்டது, தனியார் நிர்வாகத்திற்கு வந்துள்ளது, என்பதை எல்லாம் கவனிக்க வேண்டிய உள்ளது. முன்னர், பரம்பரையாக இக்ககோவிலை பராமரித்து வந்துள்ளனர். அதேபோல இப்பொழுது 20 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் அந்த குழுவிற்கு சென்றுள்ளது என்பது தெரிகிறது. இது அந்த குறிப்பிட்ட கோவிலும் பிரச்சனை ஆக எடுத்துக் கொள்வதால் அல்லது பொதுவாக கோவில்கள் எல்லாம் அறநிலையக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற நடக்கும் போராட்டத்தின் அம்சமாக எடுத்துக் கொள்வதா என்பது கவனிக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இங்கு பக்தர்களின் பலன்கள் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் விவரங்கள் என்பதை பற்றி யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட விசேஷமான நாட்கள், காலம் என்ற வரையறுக்கப் பட்டதாக இருக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் இருக்க மட்டார்கள். ஆகவே, அவர்கள் இதில் தலையிட மாட்டார்கள் மற்றும் அவற்றிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்பது நன்றாக தெரிந்த விஷயம் தான்.
இப்பொழுதெல்லாம் வியாபாரமயப்பாக்கம் என்பது கோவில்களை மையமாக வைத்து பெரும்பாலாக நடந்து வருகின்றன என்பது கவனிக்க முடிகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிடத்துவ சித்தாந்தம் திராவிட கட்சிகள், பெரியாரிஸம் என்று பேசி விடுகின்ற பகுத்தறிவு- நாத்திக கூட்டங்கள் எல்லாமே மதத்திற்கு எதிராக குறிப்பாக கடவுள் மறுப்பு, இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்ற நிலை தான் உள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற லட்சுக்கணக்கான கோவில்கள் மற்றும் அவற்றிற்கு சொந்தமாக இருக்கின்ற பல கோடி ஏக்கர்கள் பரப்புள்ள விளைநிலங்கள், சொத்துகள், மடாலயங்கள் எல்லாம் எடுத்து ஆர்த்தால், அதனுடைய மதிப்பு எங்கோ செல்கிறது. கடந்த 70 ஆண்டுகள் ஆண்டுகள் கோவில் நிலங்களை பலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளன. தெய்வம் நம்பிக்கை இல்லாதவர், மேலும் இந்துக்களே இல்லாதவர் என்று இருப்பவர்களிடம் தான் நிலங்கள் குத்தகைக்கு வாடகைக்கு சென்றுள்ளன. அவர்கள் தொடர்ந்து அனுபவித்து ஆனால், கோவில் நிலங்களுக்கு உண்டான வாடகை மற்றும் குத்தகை பணத்தை கூட கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும், அந்நிலங்கள் தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பட்டா கேட்டும் வருகின்றனர் இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் அவ்வாறு அவர்கள் பட்டாக்களை கூட அதாவது கோவில் நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களை ஆக்கமிருந்து கொண்டு அவர்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக பட்டா போட்டு மாற்றிக் கொண்டுள்ளனர்.
[5] தினமணி, குச்சனூரில்வெள்ளாளா்அமைப்புசார்பில்ஆா்ப்பாட்டம், By DIN | Published On : 26th December 2023 12:00 AM | Last Updated : 26th December 2023 12:00 AM.
குச்சப்புல்உருவம், உருவம்ஆகிவிக்கிரமானது: இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்று கூறுகிறது வரலாறு. குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது[1]. அந்த அனீஸ்வரன், “குச்சனூர் சனீஸ்வரன்” ஆனான். அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது[2]. ஆக, இன்றைக்கு பிரசித்தியாகி விட்டார். கூட்டமும் பெருகி விட்டது. சுற்றிலும் கடைகளும் பெருகி விட்டது. இதனால், வியாபாரம் பெருக, மற்ற விவகாரங்களும் பெரிதாகி விட்டது. ஆக உள்ளூர்வாசிகள் இதை வைத்து எப்படி வியாபாரத்தைப் பெருக்கலாம் என்று பார்த்தால், அதில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. “சாமி காரியம்” என்பதால், எல்லாமே “புனிதமாகி” விடுகிறது.
2,000 கோவில்தொன்மையானது: 2 ஆயிரம் நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்[3]. செண்பகநல்லூர் என்று இருந்த உரை சுயம்பு சனீஸ்வர பகவானுக்கு குச்சிப்புள்ளினால் கோவில் கட்டியதால் இது குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது[4]. இக்கோவிலில் அரூப வடிவ லிங்கமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு கட்டப்பட்டு உள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட வருபவர்கள் தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8 மணிவரை சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிரசாதமானது முதலில் காகத்திற்கு தான் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அது அபசகுனமாக கருதப்பட்டு, பூசாரிகள் சனீஸ்வரபகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பிரசாதத்தை காகத்திற்கு வைப்பார்கள். காகம் பிரசாதத்தை உண்டால் தான் பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம். பின்புதான் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். எள் பொங்கல் வைப்பது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு.
2003ல்தமிழகஅரசுகட்டுப்பாட்டில்இக்கோவில்வந்தது: சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது[5]. இந்த திருக்கோவிலில் நிர்வாக பொறுப்பினை ஆரம்ப காலத்தில் அறங்காவலர் குடும்பத்தினர்கள் செய்து வந்தனர்[6]. கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைய துறையினர் கோவில் நிர்வாகப் பொறுப்பினை எடுத்துக்கொண்டு அன்று முதல் இன்று வரை செய்து வருகின்றனர்[7]. இந்நிலையில் மீண்டும் கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உயர் நீதிமன்றம் “தீர்ப்புவெளியான 4 வாரங்களுக்குள், கோயில்நிர்வாகத்தைபரம்பரைடிரஸ்டிகளிடம்ஒப்படைக்கவேண்டும். ஒருவர்மட்டுமேவழக்குதொடர்ந்திருந்தாலும், நிர்வாகத்தைடிரஸ்டிகள்ஏழுபேரிடமும்ஒப்படைக்கஉத்தரவிடப்படுகிறது ,”தீர்ப்பு வழங்கியுள்ளது[8]. கோயில் நிர்வாகங்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி இருக்கும் நிலையில் கோயிலை மீண்டும் கோயில் டிரஸ்ட் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[9]. இது தொடர்பாக, அறநிலைய அதிகாரிகள், “இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது,” என்கிறார்கள்[10].
2023ல்நேர்த்திக்கடனாககொடுக்கப்பட்டஎருமைக்கன்றுகளைகாணவில்லைஎன்றுஒரூவர்கேள்விஎழுப்பியது!: இந்து சமய அறநிலையத் துறையானது தன்வசம் வைத்திருக்கும் ஆலயத்தை மீண்டும் பரம்பரை அறங்காவலர்களிடம் நான்கு வாரத்திற்குள் ஒப்படைப்பு செய்து[11], இத்திருக்கோயிலை பரம்பரை அறங்காவலர்களே நிர்வகிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 03 அன்று உத்தரவிட்டு, அந்த உத்தரவினை மனுதாரருக்கு டிசம்பர் 01 அன்று கொடுக்கப்பட்டுள்ளது[12]. நீதி தேவதை வழங்கிய உத்தரவின்படி, குச்சனூர் திருக்கோயிலில் பொறுப்பேற்க இருக்கும் பரம்பரை அறங்காவலர்களே!!! நீங்களாவது இந்த திருக்கோயிலுக்கு கடந்த 10 வருடங்களாக பக்தர்களால் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட எருமைக்கன்றுகளை காணவில்லை??? இந்த மாடுகள் உண்மையிலேயேஇருக்கின்றதா? இல்லை இதற்கு வேறு எந்த விதமான பதிலும் வைத்து உள்ளீர்களா!!! ஆகவே உடனடியாக இந்த மாடுகளை கண்டுபிடித்து தர வேண்டும்??? என்று பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர்???[13] அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர் – அ.ந.வீரசிகாமணி[14].
2023ல்அறநிலையத்துறையிலிருந்துவிடுபட்டது: இந்தத் தீர்ப்பினை அமல்படுத்தி கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என கூறி இந்து சமய அறநிலைத்துறையினர் அலுவலகத்தை அறங்காவலர் குடும்பத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை செயல் அலுவலரிடம் வழங்கிவிட்டு நாங்கள் பொறுப்பேற்க இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தரவினை பெறுவதற்கு இந்து சமய அறநிலையதுறை செயல் அலுவலர் மறுப்பு தெரிவித்து நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செய்திருப்பதாக தகவல் கூறி வாங்க மறுத்தார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவினை சுவரில் ஒட்டினார்கள். அப்போது அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை சுவரிலிருந்து கிழித்து எரிந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவினை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடுவதாக கூறி அறங்காவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் இரண்டு மணி நேரமாக நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
[7] தமிழ்.சமயம், குச்சனூர்சனிபகவான்கோவிலில்பரபரப்பு! அறங்காவலர்கள், இந்துஅறநிலையத்துறைஅதிகாரிகள்கடும்வாக்குவாதம்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 29 Dec 2023, 5:11 pm.
[13] ஐமம்.மீடியா, கடந்தபத்துஆண்டுகளில்குச்சனூர்கோயிலுக்குபக்தர்களால்வழங்கப்பட்டஎருமைக்கன்றுகள்எங்கே??? எங்கே ???, A N Veerasigamani , Theni, Tamil Nadu (TN) 08/12/2023 08:49 AM
சனி–சனீஸ்வரன்–சனி–பகவான்என்றுமாறிவரும்நிலை: சமீப காலத்தில் சனி படுத்தும் பாடு அதிகமாகவே இருக்கிஅரது போலும், ஏனெனில், எங்கெல்லாம் சனீஸ்வரன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கூட திருநள்ளாரில் சனீஸ்வரனை வழிபடுவதற்காக வரும் கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. ஆனால் பிறகு திடீரென்று கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் சனீஸ்வரன் சிற்பமாக இருந்த நிலையிலிருந்து விக்கிரமாக மாற்றப்பட்டு, அதற்கு தனி சன்னதியும் கட்டப்பட்டு அதுவே தனியான கோவில் போன்று பக்தர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப் பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக அதிகமாக அந்த தனி கோவில் அல்லது பிரகாரம் என்பது விரிவுபடுத்திக் கொண்டே வருவதையும் கவனிக்கிறோம். உண்மையில் அது ஒரு பிரத்தியேகமான சிவன் கோவிலாகும். ஆனால் இப்பொழுது எல்லாம் சிவனை கூட வழிபடாமல் இது ஏதோ பிரயோகமான சனீஸ்வரன் கோவில் என்று நினைத்துக் கொண்டு சனீஸ்வரனை மட்டும் வழிபட்டு சென்று விடுகிறார்கள். இப்படியாகப் சனி “சனீஸ்வரனாகி” விட்டான் – விட்டார்.
நவகிரகக்ஷேத்திரம், சுற்றுலா, வணிகமயமாக்கல்: நவகிரக க்ஷேத்திரம் என்ற ஒரு புதிய முறையை உண்டாக்கி அதன்படி 9 கிரகங்கள் குடிகொண்டுள்ள கோவில்களுக்கு தீர்த்த யாத்திரையாக சென்று வருவது அறிமுக செய்யப்பட்டது. இதன் மூலமாக கார், வேன், பஸ் முதலியவற்றை வைத்திருக்கும் சுற்றுலா வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு ஏற்றபடி அந்த ஸ்தலங்களும் நாளுக்கு நாள் பெரிதாக்கப்பட்டன ஒவ்வொரு புதிதாக ஸ்தலத்திற்கும், புராணம் போன்ற கதைகளும் உருவாக்கப்பட்டன. பிறகு அந்தந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால். இந்த பலன்கள் கிடைக்கும் என்றும் விவரங்கள் சொல்லப்பட்டன. இதற்கு ஜோதிடர்களும் புதிய-புதிய பரிகாரங்கள், பலன்கள் தீர்க்கும் முறைகள் முதலியவற்றை புதியதாக உண்டாக்கி அறிமுகப்படுத்தினர். இவ்வாறு ஒரு நிலையில் கவனிக்கும் பொழுது, இத்தகைய பக்தர்களின் நம்பிக்கைகள் கூட எவ்வாறு வணிகமயமாக்கப்படுகிறது என்பதனை கவனிக்கலாம்.
புதியசனீஸ்வரன்கோவில்கள்உருவாக்கல்: அது மட்டுமல்ல, புதிய சனீஸ்வரன் கோவில்களையும் உண்டாக்கலாம் என்ற திட்டமும் துவங்கியது போலிருக்கிறது. அதாவது திருநள்ளாரில் இருக்கும் சனீஸ்வரன் சன்னதியானது அல்லது அது ஒரு சிவன் கோவிலின் பகுதி என்று இருப்பதனால் சனீஸ்வரனுக்கு மற்ற இடங்களில் பிரகாரங்களுடன் சன்னதிகள் உள்ளன – இல்லை, தனியான கோவில்கள் உள்ளன என்பது போன்ற கருத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றபடி தெற்கில் இருக்கின்ற திருநள்ளாறு கோவிலுக்கு எதிராக அதாவது வடக்கில் ஒரு கோவிலை ஆரம்பித்து அதை வடத்திருநள்ளார் என்றும் கூற ஆரம்பித்தார்கள். அதாவது தெற்கில் இருக்கும் அந்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுமானால், வடக்கில் இருக்கும் மற்ற சனீஸ்வரர் கோவில் வட-திருநள்ளார் என்றும் சொல்லி குறிப்பிடலாம் என்ற திட்டத்தை அமல் படுத்துகிறார்கள் போலும். இருப்பினும் புதிய-திருநள்ளார் கோவில், திருநள்ளாறு கோவில் போன்று பிரசித்தி அடைய முடியவில்லை. ஏனெனில் இக்காலங்களில் புதிதாக கட்டப்படுகின்ற இந்த கோவில்கள் எனது மிகச் சிறியவையாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும், நகருக்குள், ஒரு கோவில் கட்டுவது என்பது மிகக் கடினமானது. திருநள்ளாறு போன்று அத்தகைய பரந்த அளவில் இடமும் கிடைக்காது. அதிலும், பெரிய கோவிலை கட்டுவது என்பதும் சாத்தியமாகாது. அதனால் அந்த புதிதாக உருவாக்கப்படும் சனீஸ்வரன் கோவில் என்பது மிகச் சிறியதாக இருக்கிறது. அந்த அளவில் தான் கோவில்கள் நகருக்கு மத்தியில் அல்லது வீடு பல வீடுகள் இருக்கும் பொழுது அந்த வீடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு தெருவில் சில இடம் கிடைத்தது என்றால் அதனை சனீஸ்வரன் கோவிலாக மாற்றும் முறை நடந்து வருகிறது.
தனியாகசனீஸ்வரன்கோவில்சந்நிதி, கோவில்உருவாகும்முறை: இவ்வாறுதான், இப்பொழுது புதிய சனீஸ்வரன் கோவில்கள் உருவாக்கி வருகின்றன. ஆகவே அந்த கோவில்களுக்கு சென்று பார்த்தால், எப்படி மிக சமீப காலத்தில் அதாவது ஒரு 20-30-40-50 ஆண்டுகளில் அவை மாற்றப்பட்டு, அவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதனை எளிதாக தெரிந்து கொள்ளலாம். திருக்காட்டுப்பள்ளியில் கூட, இவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது முந்தைய ஒரு பதிவில் எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது. அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கோவிலின் மூலையில் தனியாக பிரதிஸ்டை செய்யப்பட்டு அது சன்னிதியாக மாற்றப்பட்டு சனீஸ்வரன் கோவில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிரதானமாக இருப்பது லிங்கம் தான் அதாவது மூலவர் லிங்கம், சிவன் கோவில் தான் உள்ளது. சனீஸ்வரன் சன்னிதி சிறியாதாகயிருக்கிறது. அத்துடன் மீதி அந்த எட்டு கிரகங்களும் தனியாக, “ப” வடிவத்தில், ஒரு சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது நவகிரகங்களில் இருந்த அந்த சனீஸ்வரன் சிலையை தனியாக எடுத்து வைத்து அதனை ஒரு சன்னிதியாக மாற்றி பிறகு, சில வருடங்களிலேயே அது ஏதோ சனீஸ்வரர், பிரத்தியேக சனீஸ்வரன் கோவில் போல உருவாக்கப்பட்டுள்லது. இப்பொழுது பொங்கு-சனீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் எல்லாம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
சனி, ஏழரைசனிமுதலியன: நவகிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் இங்கு நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது. ஏழரை சனி திசை காலத்தை அல்லது சனி திசையின் காலத்தை குறைக்கும் வல்லமைகொண்ட, ஆலயமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது.
தினகரன்மான்மியம்சொல்லும்குச்சனூர்சனீஸ்வரன்புராணம்: தினகரன் மான்மியம் இவ்விவரங்களைக் கொடுக்கின்றன என்று பக்தி ரீதியில் கொடுக்கப் பட்டுள்ளன. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோவில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. தினகரன் மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்கு பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.
குச்சனூர்சனிகோவில்பலன்உண்டானவிதம்: அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் ‘உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார்.
பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?
பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!
திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.
இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.
நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.
நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.
ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான், மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில்கொலு.. மயிலாப்பூரில்சக்தியைபார்த்துபூரித்துப்போனதுர்காஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].
[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில்நவராத்திரிகோலாகலம்.. 10 நாட்கள்கொலுவைத்துகொண்டாடும்இந்துசமயஅறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].
25-09-2023 கிறிஸ்தவர்களுக்குசாதமாக, அரசியல்கட்சிகள்ஆர்பாட்டம்: மேலே குறிப்பிட்டப் படி, இதற்கிடையே கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி 25-09-2023 சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது, என்று தான் ஊடகம் குறிப்பிடுகிறது. பிறகு ஏன் அத்தகைய மறைப்புத் தனம் என்று தெரியவில்லை. இதும் ஊடகங்களின் பாரபட்சத்தை எடுத்துக் காட்டுகிறது.. இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியபோது, இதே கட்சிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
13-10-2023 அறப்போராட்டம் அறிவிப்பு………………………..
இந்துக்கள்கைது, ஆனால்கிறிஸ்துவர்களின்மீதுநடவடிக்கைஇல்லை: இதற்குள் புகார் கொடுத்ததின் அடிப்படையில், தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ஜான் பீட்டர் கொடுத்த புகாரின்படி, சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இதை தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அரச்சலுார், அண்ணா நகர் பூபதி, 38; தமிழரசன், 30, ஆகியோரை, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்[2]. போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆக, இவையெல்லாமே இந்துக்களுக்கு எதிராகவே நடந்த் கொண்டிருக்கின்றன, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதால், செக்யூலரிஸ ரீதியில் பாரபட்சம் இருப்பது வெளிப்படுகிறது.
தானாகக் கூடியக் கூட்டம்…
இந்துக்களின் எழுச்சி……
13-10-2023 அன்றுகண்டனஆர்பாட்டம்நடத்தமுடிவு: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம்’ என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பினரின் மிரட்டல் பேச்சை கண்டித்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 13-10-2023 அன்று மாலை சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்கப் பட்டது[3]. போலீசாரும் அனுமதி கொடுத்துள்ளனர்[4]. அதனால், திட்டமிட்டப் படி, 13-10-2023 அன்று அற-போராட்டம் நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகவே சேர்ந்து விட்டது. முருக பக்தர்கள், இந்துக்கள் என்ற ரீதியில் தாமாகவே ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. முருகன் வரவேற்றார். மற்றும் அரச்சலூர் புலவர். கி. தமிழரசன், விவசாயி பேச்சாளர் தூரன் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது சென்னிமலையை பற்றி தவறாக பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானின் புகழ் குறித்து பெண்கள் பாடல்கள் பாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்[5].
கட்டுப்பாட்டுடன் அமைதியாக நடந்துள்ள அறப்போராட்டம்: சுமார் 25,000 வந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸாரும் உடனடியாக, பாதுகாப்பு ஏற்பாட்டில் இறங்கினர். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்[6]. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், பள்ளி வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்ல முடியாது என சென்னிமலை பகுதியில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன[7]. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டதால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது[8]. இருப்பினும், இந்துக்கள் அமைதியாக, அறவழி சத்தியாகிரக போராட்டமாக நடத்தியுள்ளனர். அத்தனை கூட்டத்திலும், கட்டுப்பாட்டுடன், செயல்பட்டுள்ளர். கூட்டத்திற்கு வேண்டிய நீர் முதலிய ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நிச்சயமாக, இக்கூட்டம் இந்து மக்களின் எழுச்சியாகக் காணப் படுகிறது.
இந்து முன்னணி தலைவர்கள்……
மக்களின் – இந்துக்களின் எழுச்சிக் கூட்டம்
இந்த இந்து எழுச்சி-விழிப்புணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும்; இது வரை நமக்கு எதற்கு இப்பிரச்சினை, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் இருந்து வந்த இந்துக்களுக்கு இப்பொழுது விழிப்ப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அத்தகைய உணர்வுகளை அவர்கள் தொட்ர்ந்து கடைபிடித்தால், அவர்களது உரிமைகளை யாரு பறிக்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் சமம் என்று செக்யூலரிஸ ரீதியில் பேசினால் மட்டும் போதாது, அதன் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, ஆளும் பொழுது, அத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ஆனால், 1970களிலிருந்து, திராவிட, திராவிடத்துவ, பெரியாரிஸ, நாத்திக கட்சிகள் அத்தகைய சட்ட-ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை. அரசியல் தலைவர்களே, இந்துக்களுக்கு எதிராக பேசி வந்துள்ளனர். அவையெல்லாம் இந்துவிரோதமாகவும் இருந்து வந்துள்ளன. அங்குதான் பிரச்சினை எழுகிறது.
25,000 இந்துக்கள் பங்கு கொண்டனர்……………………
கிறிஸ்தவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்: கிறிஸ்தவர்களின் வக்கிர எதிர்ப்பு, பலாத்கார ஆக்கிரமிப்பு, வன்முறை அபகரிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களை அரசு முறைப்ப் படி தண்டிக்க வேண்டும். அவற்றை ஏதோ “சிறுபான்மை” சமாசாரம் போல அணுகக் கூடாது. இந்த சட்டவிரோத காரணங்களுக்கு பல வழக்குகள் நிலுவைகள் உள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவை கிடப்பில் போடப் பட்டிருக்கலாம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தலாம். ஆனால், சில நேரங்களில் அவை நிச்சயமாக விசாரிக்கப் படும், அப்பொழுது நியாயமான தீர்ப்புகள் அளிக்கப் படும். ஆகவே, கிறிஸ்தவர்களும் இத்தகைய அடாவடி, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மதவிவகாரங்களில் ஒழுக்கம்-கட்டுப்பாடு இருக்கவேண்டும். அவர்களிடையே பற்பல சீர்கேடுகள் இருக்கும் பொழுது, முதலில் அவற்றை சரிசெய்து கொள்ளாமல், இந்துக்களை சதாய்ப்பதில் எந்த பலனும் ஏற்படப் பொவதில்லை. எத்ர்மறை விளைவுகள் தாம் ஏற்படும்.
[3] தினமணி, இந்துமுன்னணிசார்பில்அக்டோபா் 13 இல்ஆா்ப்பாட்டம், By DIN | Published On : 01st October 2023 11:37 PM | Last Updated : 01st October 2023 11:37 PM
அனைத்துசாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்என்றசட்டப்படியிலானபணிநியமனம்நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].
புதியசட்டத்தின்படிசெய்யப்பட்டநியமனம்நிறுத்திவைக்கப்பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சர்டிபிகேட் / சான்றிதழ்இருந்தால்எந்தஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.
தடைவிதிக்கக்கோரிமனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.
அந்தந்தகோவில்நியமஆகமத்தில்தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்போன்றவைபின்பற்றமுடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.
சுகவனேஸ்வரர்கோவில்தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].
ஆகமமா, ஆகமபயிற்சியா, பரம்பரைநியமனமா – போன்றவைதொடர்–பிரச்சினைகளாகஇருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.
[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்துசாதியினரும்அர்ச்சகர்ஆகலாம் – தமிழ்நாடுஅரசின்உத்தரவுக்குதடைவிதிக்கஉச்சநீதிமன்றம்மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.
ஜூன் 24 முதல் 27 வரைஅனுமதிஇல்லைஎன்றது: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது[1]. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி, ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நாள்களில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர்[2]. ஆனால், அறநிலையத்துறை பெண் அதிகாரி தீக்ஷிதர்களுடன் வாதிக்கும் வீடியோ ஊடகங்களில் காண்பிக்கப் பட்டது. சுற்றிலும் போலீசார் பலர் இருந்தனர். இத்தகைய சாதாரண தரிசன விசயங்களுக்கு இத்தனை போலீஸார் ஏன் என்று தெரியவில்லை. 24-06-2023 அன்றே, வாதிக்கும் பொழுதே, ஒருவர், சட்டை இல்லாமல், மேலே ஏறி, அப்பலகையை எடுத்து விட்டார், பிறகு, போலீஸார் துணையும் அது எடுத்துச் செல்லப் பட்டது. அதை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த 2022 மே 17 என்றுதமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
17-05-2023 அரசாணைஎதிர்த்துவழக்குதொடர்ந்தது: இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘சிதம்பரம்கோயிலில்உள்ளகனகசபையில் 7 முதல் 10 பேர்வரைமட்டுமேதரிசனம்செய்யமுடியும். ஆனால்தினமும்ஆயிரக்கணக்கானோர்சுவாமிதரிசனத்துக்காககோயிலுக்குவரும்சூழலில் 300 முதல் 500 பேரைமட்டும்கனகசபையில்தரிசனம்மேற்கொள்ளஅனுமதித்தால்அதுபாரபட்சம்பார்ப்பதுபோலாகிவிடும். கோயிலில்அன்றாடம்நடைபெறும்காலபூஜைகள், அபிஷேகங்கள்கனகசபையில்நடைபெறும்சூழலில்பக்தர்களைதரிசனத்துக்காகஅனுமதித்தால்வழிபாட்டுநடைமுறைகள்பாதிக்கப்படும். எனவேதமிழகஅரசின்அரசாணைஉச்சநீதிமன்றதீர்ப்புகளுக்குமுரணாகஉள்ளது. கோயில்வழிபாட்டுமுறைகளில்தலையிடஅரசுக்குஅதிகாரம்இல்லை. எனவேஇந்தஅரசாணைசட்டவிரோதமானதுஎன்பதால்அதற்குதடைவிதிக்கவேண்டும்,” என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
26-06-2023 திங்கட்கிழமை – சரண்யாகொடுத்தபுகார்: கோவிலில், அதிலும், விஷேசமான நாட்களில் எதற்க்கா பிரச்சினை என்று இத்தனை போலீசார் கோவிலில் நுழைவது, இருப்பது, நிச்சயமாக பக்தர்களுக்கு சங்கடமாக, தொந்தரவாக, திகைப்பாகத்தான் இருக்கும். ஏதோ குற்றம் நடந்தது போல போலீசார் குவிக்கப் பட்டிருப்பது, கோவில் ஆன்மீக நிலையினையே பாதிக்கும் முறைக்கு கொண்டு சென்றுள்ளது. 26-06-2023 திங்கட்கிழமை – சரண்யா கொடுத்த புகாரின் பேரில் 11 தீக்ஷிதர்களின் மீது போலீஸார் வழக்குத் தொடுத்துள்ளனர்[3]. இதற்கு மட்டும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தது போலும். தீக்ஷிதர்கள் அவரை தொந்தரவு செய்தனர் என்று புகார் கொடுத்துள்ளார். 19-06-2023 முதல் கனகசபையில் தரிசனம் அனுமதிக்கப் பட்டு வந்தது. 24-27 தேதிகளில் கூட்டம் அதிகம் என்பதனால் தடுக்கப் பட்டது. இதனை பிரச்சினை ஆக்கியிருக்கிறார்கள். 27-06-2023 செவ்வாய்கிழமை ஆனித்திருமஞ்சனம் பலகை எடுத்த பிறகு, படிகளில் பெண் போலீஸார் பலர் வேக-வேகமாக படிகட்டுகள் ஏறிச் செல்வது போன்று வீடியோ காட்டப் பட்டன. பிறகு அவர்கள் இறங்குவதும் தெரிந்தது. பிறகு என நடந்தது என்று தெரியவில்லை. பலகை எடுத்த பிறகு எத்தனை பேர் தரிசனத்திற்குச் சென்றனர்[4], என்னவாயிற்று என்றெல்லாமும் தெரியவில்லை. தீக்ஷிதர் சம்பிராதத்தை மீறியது தான் தெரிகிறது[5].
27-06-2023 கற்பககணேசதீக்ஷிதர்புகார்: இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் கற்பக கணேச தீட்சிதர், பூஜையில் இருந்த தன்னை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகள் தள்ளிவிட்டு நிலைகுலையச் செய்ததாக, நகர காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியுள்ளார்[6]. அதில் அவர் கூறியிருப்பதாவது[7]: “சிதம்பர்நடராஜர்கோயிலில்நான்கடந்த 27-ம்தேதிசெவ்வாய்கிழமை, பூஜைக்காரராகதினப்படிகோயில்பூஜைசெய்யும்பணியில்இருந்தேன். மாலை 6.45 மணிஅளவில்இந்துசமயஅறநிலையத்துறைஅதிகாரிகள், பெண்காவலர்கள்உள்ளிட்டகாவல்துறையினர்திடீரெனகனகசபையில்அத்துமீறிநுழையமுயன்றனர். அப்போது, எனதுஆடைமற்றும்பூணூல்அறுந்துபோகும்வகையில்என்னைதள்ளிவிட்டு, நிலைகுலையவைத்து, கனகசபைக்குள்நுழைந்து, என்பூஜைபணிக்குஇடையூறுசெய்துஎதிர்பாராதவகையில்என்மீதுதாக்குதல்நடத்தினர். என்தந்தைஎஸ்.எஸ்.ராஜாதீட்சிதர்உள்ளிட்டசிலர்எனக்குஉதவமுன்வந்தனர். எதிர்பாராததாக்குதலால்மயக்கமாகிவிட்டேன். பூஜைபணியைதொடர்ந்துசெய்யவேண்டியகடமைஉள்ளதால், உடல்வலி, மனவலியைபொறுத்துக்கொண்டு, தெய்வபணியைஇரவு 10 மணிக்குமுடித்தேன். மறுநாள்காலையில்வலியுடன்பொறுப்பைஅன்றையபூஜைக்காரரிடம்ஒப்படைத்து, மருத்துவரிடம்சிகிச்சைபெற்றேன். என்மீதுதாக்குதல்நடத்தியஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம்ஆகியோர்மீதுவழக்குபதிவுசெய்துநடவடிக்கைஎடுக்கவேண்டும். எனக்குஅதிர்ச்சி, உடல்வலிஉள்ளதாலும், நேரில்வந்துபுகார்கொடுக்கமனதைரியம்இல்லாததாலும், புகாரைபதிவுதபாலில்அனுப்பியுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்[8]. புகார் மனுவின் நகல்களை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்.பி., சிதம்பரம் ஏஎஸ்பி ஆகியோருக்கும் அவர் அனுப்பியுள்ளார்[9].ஆனால், இதனை தீட்சிதர்கள் தெரிவித்த புகாரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்[10].
28-06-2023 – அனுமதிக்கப்பட்டது. தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது[11]., என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இதெல்லாம் முன்னர் ஆறுமுகசாமி என்ற ஒருவர் போராட்டம் என்றெல்லாம் செய்து வந்தது ஞாபகம் இருக்கலாம். 2017ல் அவர் காலமாகியப் பிறகு அத்தகைய பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்பொழுது, இந்த கனக சபை தரிசனம் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது போலும். தெய்வத் தமிழ் பேரவையும் ஆறுமுகசாமி போல பிரச்சினை உண்டாக்க தோற்றுவிக்கப் பட்ட இயக்கம் போலிருக்கிறது.
[1] தமிழ்.இந்து, சிதம்பரம்நடராஜர்கோயில்விவகாரம்: பூணூலைஅறுத்ததாகபோலீஸில்தீட்சிதர்புகார், செய்திப்பிரிவு, Published : 30 Jun 2023 08:00 AM; Last Updated : 30 Jun 2023 08:00 AM
[3] On Monday night, police filed a case against 11 dikshithars based on a complaint received from Saranya. The case was filed under four sections of the IPC and section 4 of the Tamil Nadu Prohibition of Harassment of Women Act. However, the officials’ attempt to negotiate with the dikshithars for permission to allow devotees to Kanagasabai failed.
[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நடராஜர்கோவில்தீட்சிதரின்பூணூல்அறுக்கப்பட்டுதாக்கப்பட்டாரா? நடந்ததுஎன்ன? மறுக்கும்அறநிலையத்துறை.!, vinoth kumar, First Published Jun 29, 2023, 11:14 AM IST, Last Updated Jun 29, 2023, 11:18 AM IST
[11] தமிழ்.ஒன்.இந்தியா, கனகசபைகலாட்டா.. நடராஜர்கோவில்தீட்சிதரின்பூணூல்அறுக்கப்பட்டதா? நடந்ததுஎன்ன?, By Jeyalakshmi C Published: Thursday, June 29, 2023, 10:09 [IST]
ஆரணி–செய்யாறுநெடுஞ்சாலையில்விநாயகர்கோவில்இடிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.வி., நகரத்திலிருந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன[1]. மேலும், சாலை மையத்தில் விநாயகர் கோவிலும் இருந்தது. மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்[2]. மேலும் விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கபட்டது[3]. விநாயகர் கோவிலை இடித்து தரை மட்டமாக்கினார்கள்[4]. இதனால், ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில், வருவாய்த்துறையினர் சாலையின் மையத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்[5]. பழமை வாய்ந்த கோவிலை இடித்து தரைமட்டாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதட்டத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்[6].
18ம்நூற்றாண்டுகோவில்இந்தியதொல்லியல்துறைஅனுமதிஇல்லாமல்இடிக்கமுடியுமா?: 300 ஆண்டுகளாக இருக்கும் கோவில் எனும்பொழுதே, அந்த சாலைகள், பேரூந்து நிலையம், வீடுகள் எல்லாமே பிறகு தான் வந்துள்ளன. அப்படியென்றால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தான், அவை கட்டப் பட்டிருக்க வேண்டும். கோவில் மதிற்சுவற்றை நீக்கித் தான், ஆக்கிரமிப்பே ஆரம்பிக்கிறது. எனவே, கோவில் ஆக்கிரமிக்கப் பட்டது என்பது பொய்யாகிறது. முன்பு செய்யாறில் இதே போன்று ஒரு கோவிலை இடிக்க சில ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற போது, கைது செய்யப் பட்டனர். இவர்கள் எல்லோரும் இந்துக்கள் தான் எனலாம். ஆமாம், ஆனால், திராவிடத்துவத்தால், நாத்திகத்தால், ஊறிப்போன, இந்துவிரோதிகளாகச் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் என்றால், 18ம் நூற்றாண்டு கோவில் என்றாகிறது. பிறகு, அதனை இவர்கள் எப்படி இடிக்க முடியும். 100 ஆண்டு காலம் தொன்மை என்றால் இந்திய தொல்லியல் சட்டத்தின் கீழ் புராதனமானது என்றாகிறது. பிறகு, இந்திய தொல்லியல்துறை அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஆனால், 300 ஆண்டுகளாக, ரோடு போடுவது என்றெல்லாம் நடந்தேறியுள்ளன.
கோவில்கள் இடிப்பது சட்டப்படி அல்லது திட்டப் படியான செயலா?: இப்பொழுது தான் கோவில் இடைஞ்சலாக இருப்பது தெரிகிறது போலும் தொடர்ந்து இப்படி கோவில்களை இடித்து வருவது, ஏதோ ஒரு அசாதாரணமான செயல் போலத்தான் தென்படுகிறது. முன்பு திமுக ஆரம்ப காலத்தில் ஈவேரா / பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்து வந்தது, ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டது, ஊர்வலம் சென்றது முதலியவை ஊக்கப்படுத்தப் பட்டது எனலாம். அதே போல, இப்பொழுதும், திமுக ஆட்சிக்கு வந்ததும், இத்தகைய செய்திகள் தினம்-தினம் வருகின்றன. இந்து அறநிலையத் துறை என்பது கூட அறநிலையத் துறை என்று தான் குறிப்பிடப் படுகிறது. ஏதோ, இது செக்யூலரிஸ ரீதியில் பொதுவானது, அனைவருக்கும் பொதுவானது போன்ற விதத்தில் குறிப்பிடப் படுகிறது. அதே போல கோவில் ஊழியர் சங்கங்களும் பெயர் வைத்துக் கொண்டு செயல்படுகின்றன.
திமுகஆட்சியில்கோவில்கள்இடிக்கப்படுவதுதற்செயலானவிசயமா, அசாதரணமானநிகழ்வா?: திமுக ஆட்சியில் இடிக்கப் பட்டது எத்த்னை கோவில் என்ற பேச்சு எழுந்த போது, 100, 120, 150 என்றெல்லாம் கணக்குப் போட்டு, பிறகு குறைக்கப் பட்டது. ஆனால், கோவில்களை இடித்தது ஒப்புக் கொள்ளப்பட்டது. கோவில் இடிக்கப் பட்ட விவரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்[7]. இதில் அக்கிரமித்துக் கட்டப் பட்டது, நூறாண்டுகளுக்கு முன்னரே கட்டப் பட்டது என்பதை சுலபமாகப் பிரித்துக் காணலாம்[8]. நிச்சயமாக 1947-க்கு முன்னர் இப்பிரச்சினை வராது-வரக்கூடாது. பிறகு எப்படி 100-ஆண்டுகளுக்கு மேலான கோவில்களையும் இடிக்கின்றனர் என்பது புரியவில்லை. செம்மொழி மாநாட்டின் போதும் சில கோவில்கள் இடிக்கப் பட்டன[9]. செந்தமிழ் மாநாட்டிற்காக சாலை அகலப் படுத்த வேண்டும் என்று கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின[10].
இந்துக்களால்என்னசெய்யமுடியும்?: ஒரு பக்கம் கோவில் கும்பாபிஷேகம், இன்னொரு பக்கம் கோவில் இடிப்பு. இந்துக்கள் என்ன செய்ய முடியும்?
தினமும் பேப்பரை / டிவியைப் பார்த்தால், ஏதோ கோவில்களில் தான் பிரச்சினை என்பது போல செய்திகள் வெளியிடப் படுகின்றன.
கோவிலில் தகராறு, போலீஸார் நுழைந்தனர், பக்தர்கள் அவதி, அறநிலைத் துறையினர் தலையீடு, அமைச்சர் எச்சரிக்கை,
கோவிலில் சிலைகள் உடைப்பு, உண்டியல் திருட்டு, அம்மன் நகைகள் காணோம், கோவில் கொள்ளை, திருட்டு, இப்படி……
கோவில் இடிப்பு, ஜேசிபி / பொக்லைன் எந்திரம் வைத்து இடிப்பு, கோவில் தரை மட்டம், பக்தர்கள் எதிர்ப்பு, போலீஸார் குவிப்பு…..
பக்தர்களுக்குள் சண்டை, கலவரம் எற்படும் நிலை, கோவிலுக்கு பூட்டு, அதிகாரிகள் சீல் வைப்பு,…..கோர்ட் ஒப்புதல்..
300 வருட பழமையான கோவில் என்றாலே, ஏ.எஸ்.ஐ.யிடம் (இந்திய தொல்லியல்) அனுமதி தேவையே, பெற்றார்களா?
எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், ஆகமம் இல்லையென்றால் சாதகம் தான், பாதகம் இல்லை, சோதனை காலம் தான்!
நாத்திகர்களுக்குத் தான் கோவில் மீது, எவ்வளவு அக்கரை, அல்லேலூயா என்று கத்தி, இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுகிறான்!
கோவிலுக்குள் கக்கூஸ், பாத்ரூம் கட்டிக் கொண்டு வாழவா அறநிலையத் துறை? பிறகு உள்ளே வராதே என்று ஏன் கத்துகிறாய்?
எந்தவிதத்திலும், உனக்கும், கோவிலுக்கும் ஒத்துப் போவதில்லையே, பாவம் பெண்டாட்டி தான் சாம் கும்பிடவும் தேவையாகிறது!
நாத்திகனே, பெரியாரிஸ இந்து விரோதிகளே, பிள்ளையார் சிலை உடைத்தவர்களே, வெளியேறு என்ற கோஷம் செயலாகும்!
நகரமயமாக்கம் போர்வையில் கோவில்களை குறிவைத்து இடிப்பது என்ன?: நகரமயமாக்கம் நோக்கில், ரீதியில், சாலைகளை விரிவு படுத்துதல், புதிய சாலைகளை போடுதல், இடையில் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகள் கடந்த 30-35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தனியார் வீடுகள், நிலங்கள் என்று வரும்பொழுது, அவற்றிற்கு இழப்பீடு கொடுத்து, கையகப் படுத்தப் படுகிறது. புராதன கட்டிடங்கள், கோவில்கள் போன்றவை வரும் பொழுது, பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்து, திட்டம் போடுவது, வேலை செய்வது பணிக்கப் பட்டுள்ளது. இல்லை, அவை இடம் மாற்ற வேண்டும். அதாவது, அப்படியே கட்டித்தரவேண்டும். இவ்வாறு தான் ஒப்பந்தம் போடப் படுகிறது. இருப்பினும், பெருவாரியாக, இச்சரத்துகள் மீறப் படுகின்றன. ஒப்பந்தக் காரர்கள் அரசியல்வாதிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்-நண்பர்களாக இருக்கும் பொழுது மீறப் படுகின்றன. நகர்ப்புறப் பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் கோவில்களுடைது தான். அவற்றை அபகரித்து தான், ரோடுகள், பேரூந்து நிலையங்கள், கட்டிடங்கள் எல்லாம் கட்டப் படுகின்றன. ஆகவே, கோவில்கள் என்றும் இடைஞ்சலாக இருப்பதில்லை. அவற்றின் நிலங்கள் ஆக்கிரமிக்கப் படும் பொழுது, அவை அவ்வாறு காணப் படும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. யாரும் நடுத்தெருவில் கோவிலைக் கட்ட மாட்டார்கள். ஆகவே, அத்தகைய பேச்சு, வாதம், முழுப்பொய்யாகிறது. எனவே, கடைசியில் இவையெல்லாம் என்ன அன்று ஆராயும் பொழுது, இந்துவிரோதம் தான் வெளிப்படுகிறது.
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும் – சத்தியவேல் முருகன், சுகி.சிவம் முதலியோர் இந்து-தூஷணம் செய்வது ஏன்?
.
திராவிடத்துவஆட்சியில், திராவிடமாடலில், திராவிடஸ்டாக்குகளின்இந்துவிரோதசெயல்பாடுகள்அதிகமாகவேவெளிப்பட்டுவருகின்றன:. பெயருக்கு “சமத்துவம்” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தாலும், நாத்திகம் / பகுத்தறிவு போர்வையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விசயமே. பெரியாரிஸம் பேசிக் கொண்டும், இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர். செக்யூலரிஸம் போர்வையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில், எப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு ஜால்றா அடித்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களைத் தான் தமிழகத்தில் காணப் படுகிறது. இத்தகைய நிலையில், தொடர்ந்து இந்து அறநிலையத் துறையில் நுழைந்து, எப்படியாவது, கோவில்கள், கோவில் சொத்துகள், முதலியவற்றை முழுமையாக அபகரிக்க, பாரம்பரிய கோவில் கிரியைகள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள், முதலியவற்றில் இடையூறு செய்ய, அத்தகைய சித்தாந்தவாதிகளை நியமித்து, தங்களது திட்டத்தை நிறைவேற்ற சட்டமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தெரிகிறது. ஒரு புறம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, தொட்ர்ந்து நியமனங்கள் செய்யப் படுவது, அத்தகைய அத்துமீறல்கள் மற்றும் சட்டத்தை வளைக்க முற்படும் செயல்களாகத் தான் தெரிகிண்ரன.
சத்தியவேல்முருகனைநியமித்ததைஎதிர்த்துவழக்கு: கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[1]. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது[2]. ஆகம கோவில்களை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது[3]. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து, செயல்பட்டு வரும் கோவில்களின் நுலையை இப்பொழுதும் அறியப் படாத நிலையுள்ளதா என்பதே வியப்பிற்குரியதாக உள்ளது. குழு தலைவருடன் ஆலோசித்து, இருவரை குழுவில் நியமிக்க, அரசுக்கும் உத்தரவிட்டது[4]. இதையடுத்து, குழு உறுப்பினராக, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து, அறநிலையத்துறை பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது[5]. சத்தியவேல் முருகன் என்பவர் “தமிழ்” போர்வையில், கோவில் வழிபாடு, முறை முதலியவற்றைத் திரித்து சமஸ்கிருத எதிர்ப்பு-விரோதம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, “திராவிட மாடல்” ஆட்சி வந்தவுடன் இவரைப் போன்றோரைத் தேர்ந்தெடுத்து, “திராவிட ஸ்டாக்கினர்” பற்பல குழுக்களில் உறுப்பினராக நியமித்து வருகின்றனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் முத்துகுமார் மனு தாக்கல் செய்தார்[6]. ஆளும் திமுகவினர் வேண்டுமென்றே, சுகி.சிவம், சத்தியவேல் முருகன் போன்றோரை அறநிலையத் துறையில் நியமிப்பதை பொது மக்களும் கவனித்து வருகிறார்கள். ஏனெனில், அவர்களால் இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. முரண்பாடுகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், அவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை எனலாம்.
தாக்கல்செய்தமனுவில்உள்ளது[7]: “ஆகமகோவில்களைகண்டறிவதற்காகஅமைக்கப்பட்டகுழுவின்தலைவருடன்ஆலோசித்து, உறுப்பினரைநியமிக்கவேண்டும்என, உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைமீறும்வகையில், சத்தியவேல்முருகனைநியமித்து, உத்தரவுபிறப்பிக்கப்பட்டுஉள்ளது. உத்தரவில், குழுதலைவருடன்ஆலோசித்ததாகஎதுவும்இல்லை. ஆலோசனைநடத்தியிருந்தால், உத்தரவில்குறிப்பிடப்பட்டுஇருக்கும். எந்தஅடிப்படையில், குழுஉறுப்பினராகநியமிக்கசத்தியவேல்முருகன்தகுதிபெறுகிறார்என்பதைவெளிப்படுத்தவில்லை. ஆகமவிதிகளைபற்றிபொய்தகவலைபரப்புவதுதான், அவரதுநோக்கம். இதை, அரசுபரிசீலிக்கதவறிவிட்டது. சமஸ்கிருதம்பற்றிசத்தியவேல்முருகனுக்குதெரியாது. ஆகமங்கள், சமஸ்கிருதமொழியில்தான்உள்ளன. எனவே, நியமனஉத்தரவுக்கு, தடைவிதிக்கவேண்டும்; ரத்துசெய்யவேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[8]. சத்தியவேல் முருகன் பேசிவருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இவ்விசயத்தில் அவர் வாயை மூடிக் கொன்டு இருப்பதையும் கவனிக்கலாம்.
விசாரணையில் நீதிமன்றம் தடைவிதித்தது[9]: மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது[10]. குழுவில், சத்தியவேல்முருகனை நியமிக்கக் கூடாது என கோரிய வழக்கு, நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை நியமித்திருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11]. ஆகம விதிகளுக்கு எதிராக, அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது[12]. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் குழுவில், சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு, முதல் பெஞ்ச் தடை விதித்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இப்படியாக, இவ்வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடரும் எனலாம். மேலும், நீதிபதிகள் கட்சிகள் அதாவது அரசியல் கட்சிகளின் சிபாரிசுகள் மூலம் நியமிக்கப் பட்டு வரும் முறை இருக்கும் பொழுது, அத்தகையோர், ஆளும் கட்சியினரை மீறி, அவர்களது விருப்பங்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழலாம்.
சத்தியவேல்முருகன்யார்? – தற்சிறப்புக்குறிப்பு[13]: விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் – காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1400-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 3000-க்கு மேலும் ஆற்றியுள்ளார். அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர், இவ்வாறு இவரது இணைதளம் கூறுகிறது. தவிர 66-பக்கம் “தற்குறிப்பு” புத்தகத்தை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்[14].
சைவர் இந்து இல்லை என்று தூஷணங்களை செய்து வருவது: இவ்வளவு தம்மைப் பற்றி தற்புகழ்ச்சி செய்து விளம்பரப் படுத்திக் கொள்பவர் ஏன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும், இந்து விரோதிகளுக்குத் துணை போக வேண்டும்? இங்கு தான் ஏதோ விசயம் இருக்கிறது. அரசியல், அதிலும் திராவிட அரசியல், திராவிட நாத்திக அரசியல், திராவிட நாத்திக பெரியாரிஸம் பேசும் அரசியல், அப்படியே பார்ப்பன-விரோதம் என்றெல்லாம் சென்று, வேத எதிர்ப்பு, சனாதன அழிப்பு, கோவில் இடிப்பு, கோஇல் சொத்து கொள்ளை என்றெல்லாம் வளரும் பொழுது, இத்தகையோர் அத்தகைய குழுக்களில், கூட்டங்களில் சேர்கிறார்கள். திக-போன்றோர்களுடன் சேர்ந்து தூஷணங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய போலித்தனத்தைக் கண்டுகொள்லவேண்டும். பட்டை-கொட்டைகளுடன், “நமசிவாய” என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு இந்து விரோதியாக இருக்க முடியும். அதனால் தான், ஒருநிலையில், “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்,” என்று கூட சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். கிறிஸ்துவ-முஸ்லிம் கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, லட்சக் கணக்கான சிவாலங்களை துலுக்கர் இடித்துத் தள்ளியதையும் மறந்து, திப்பு ஜெயந்தியை கொண்டாட தயாரக இருக்கின்றனர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் தான் உயிர்த்தெழுந்து வந்து, இந்த போலி சைவர்கள மாற்றவேண்டும்.
பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.
திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..
இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:
பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12],
இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
சத்தியவேல் முருகனார்.
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.
“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].
சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!
[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.
[2] பதிரிக்கை.காம், இந்துசமயஅறநிலையத்துறைசார்பில் 108 பக்திநூல்களைவெளியிட்டார்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்..!, JAN 19, 2023
[4] தினமணி, மறுபதிப்புசெய்யப்பட்ட 108 அரியபக்திநூல்கள்: முதல்வா்மு.க.ஸ்டாலின்வெளியிட்டார், By DIN | Published On : 20th January 2023 03:08 AM | Last Updated : 20th January 2023 03:33 AM.
[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரியபக்திநூல்களைவெளியிட்டமுதலமைச்சர்ஸ்டாலின்! தூள்கிளப்பும்இந்துசமயஅறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]