பக்தர்கள் போர்வையில் தனியார் மயக்கமாக்க முடியுமா? திலகவதி ஐ.பி.எஸ் எழுப்பும் கேள்விகள்! திராவிடத்துவத்தை ஆதரித்து எழுதிய போக்கு! (2)
திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை (திலவதியின் கட்டுரை): வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர். இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றி ருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியாளர் இறை நம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகிறதா என்பதுமே முக்கியம். இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்குத் தீங்கானதும் ஆகும், என்று திலகவதி முடித்திருக்கிறார்.
திலவதி முடிவாகக் கொடுத்துள்ள அம்சங்களை, கீழ்கண்டவாறு பட்டியல் இடப் பட்டு, அலசப் படுகிறது:
- வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை.
- அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்.
- இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றிருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது.
- கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது.
- ஆட்சியாளர்கள் இறைநம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோவில் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப் படுகிறதா என்பதும் முக்கியம்.
- இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்கு தீங்கானதும் ஆகும்.
இனி, இந்த குறிப்பிட்ட அம்சங்கள் கீழ்கண்டவாறு அலசப் படுகின்றன.
சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்: சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான், என்று ஒப்புக் கொண்டுள்ளது நல்லது தான். “ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான்”, என்று நியாயப் படுத்த முடியுமா? அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான் சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறது என்பது பெருமை அல்லவே. “பொருளாதாரக் குற்றப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ராஜசேகரன் நாயர் இருந்தபோதும், பிரதீப் வி பிலீப் இருந்தபோதும், ராஜேந்திரன் இருந்தபோதும், நான் இருந்தபோதும் களவு போயிருந்த ஏராளமான சிலைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லையே”, என்று வாதிடும் போது, மற்றவர்களை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. ஐஜி பொன் மாணிக்கவேல் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. துறை சார்ந்தவர் எனும்போது, அவரைக் குறிப்பிடாமல், அவரது பணியைப் போறாமல், அமைதி காத்தது, பாரபட்சத்தைத் தான் காட்டுகிறது. . ஐஜி பொன் மாணிக்கவேல் பொறுபெடுத்த போது, அவரை வேலை செய விடாமல், ஏன் வழக்குக் கூட போடப் பட்டது. ஒருநிலையில், அவரது பதவிக் காலம் முடிந்தவுடன், நீட்டிக்காமல், அப்படியே, அவ்வேலை முடக்கப் பட்டது. அமைதியானது. இப்பொழுது, ஸ்டாலின் என்ன செவார் என்று பார்ப்போம்.
1817 ஆங்கிலேயர் காலம் முதல் திராவிடர் ஆட்சி 2021 வரை கோயில் நிர்வாகத்தில் ஊழல் நடப்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, சுதந்திரம் பெற்ற பிறகு கருணாநிதி ஆட்சிவரை இருந்த கோவில்-மடங்கள் நிர்வாக சட்டங்களைப் பற்றி விவரிப்பதில் எந்த புதிய விசயமும் இல்லை. அப்பொழுது ஊழல் இருந்தது என்றாதால், இப்பொழுதும் ஊழல் இருக்கிறது என்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு, அதைப் பற்றிக் குறிப்பிட்டு, எழுத வேண்டிய அவசியமும் இல்லை. குறிப்பிட்டதால், ஊழல் பிரச்சினை இந்து அறநிலையத் துறையில் அதிகமாகியுள்ளது அவரை உருத்துவது புரிகிறது. அப்பொழுது தர்மகர்த்தாக்கள் ஊழல் செய்தார்கள் என்றால், இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் திக-திமுக-அதிமுக என்றுதான் இருக்கிறார்கள். ஓமந்தூரர் குத்தகையை நிறுத்தினார் என்றால், பிறகு ஏன் வந்தது என்று விளக்கவில்லை. திருச்செந்தூர் வேல், கோவிலில் கொலை, பால் கமிஷன் போன்றவை மறைக்கப் பட்டன. வாடகை-குத்தகைகளில் கோடானு கோடிகள் ஏய்ப்பு, நீதிமன்ற வழக்குகள் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தாலும் குறிப்பிடவில்லை.
அர்ச்சகரை குறைகூறும் திலகவதி: திலகவதி சொல்கிறார், “பருத்தியூர் நடராஜர் சிலை மாற்றி வைக்கப்பட்டு அசல் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டது. அன்றாடம் அந்தச் சிலையைத் தொட்டு அபிஷேகம் செய்த அர்ச்சகர் அதைச் சொல்லவில்லை. ஆராய்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் (ஒரிஜினல் சிலையின் போட்டோ அவரிடம் இருந்தது) சிலை மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்”. அர்ச்சகருக்கு ஆகமங்களின் படி பூஜை, அபிஷேகம் முதலியவற்றைத் தான் செய்ய முடியுமே தவிர, சிலை மாற்றப் பட்டதா-இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. மாக்ரோ போட்டோ பார்த்து கண்டு பிடிக்கும், தடயவியல் நிபுணர் அல்லர். மேலும், இங்கு பதூர் என்பதனை பருத்தியூர் என்கிறார் போலும். ஏனெனில், பதூர் நடராஜர் சிலை தான், கடத்தப்பட்டு, பிரிடிஷ் மியூஸியத்திற்கு விற்க்கப் பட்டது. டாக்டர் ஆர். நாகசாமி, அப்பொழுது லண்டன் கோர்ட்டுக்குச் சென்று, ஆதாரம் கண்பித்து, 1991ல் அவ்விக்கிரகம் திரும்பக் கொடுக்கப் பட்டது[1].
வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலைத்துறை உருவாக்கப் படவில்லை: இது போல யாரும், எப்பொழுதும் சொன்னதில்லை. 1970லிருந்து 2021 வரை திராவிட-நாத்திக ஆட்சி காலத்தில் கோவில்களில் ஊழல் பெருகியது, சிலைகள் என்பதைத் தான் எடுத்துக் காட்டப் பட்டது. இக்காலகட்டத்தில் வலதுசாரிகள் இல்லை, அதாவது, இப்பொழுது போன்ற பிஜேபி கட்சி-ஆதிக்கம் என்றெல்லாம் இல்லை. இவ்விவரங்கள், விவகாரங்கள், வழக்குகள் பற்றி அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆக, இவ்வாறெல்லாம், திலகவதி வாதிப்பது, அவர்களுக்கு ஆதரித்து, பேசுவது போலிருக்கிறது. “வலதுசாரி ஆதரவாளர்கள்” என்று குறிப்பிட்டுள்ளதும், அரசியலாக்கும் நோக்கு வெளிப்படுகிறது. பிறகு “இடதுசாரி ஆதரவாளர்கள்” நிலை என்ன என்றும் கேட்கலாம்.மறைந்தது, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அத்தகைய மோசடிகளில் ஈடுபட்டது, கைதானது, சஸ்பெண்ட் செய்யப் பட்டது, சிறைக்கு போனது என்பன நடந்துள்ளன
அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்: சட்டப் படி, அரசியல் நிர்ணய சாசனப் பிரிவுகளின் படி நடப்பதை யாரும் எதிர்க்க முடியாது. அதே போல ஆகமசாத்திர நெறிப்படி உள்ளவற்றையும் மாற்ற முடியாது. “இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர்,” என்பது வேறு, கோவில்களில் அர்ச்சகர் வேலைகளுக்கு, “பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்வது,” என்பது வேறு. இது பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பிரச்சினை அல்ல. சிதம்பர தீக்ஷிதர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இருக்கின்ற லட்சக் கணக்கான கோவில்களில் ஆகமங்கள் மற்றும் ஆகமங்கள் அல்லாது செயல்படு கோவில்களில் பிராமணர்-பிராமணர் அல்லலாதோர் பாரம்பரியம்-பரம்பரை வழக்கம்-உரிமைகளோடு பூஜாரிகளாக இருந்து வந்துள்ளனர்-வருகின்றனர். அதையும் யாராலும் மாற்ற முடியாது. இட-ஒதுக்கீடு போர்வையில் இந்துக்கள்-அல்லாதவர்களும் வரமுடியாது. இதெல்லாம் திகவதிக்கு தெரிந்திருக்கும்.
© வேதபிரகாஷ்
17-07-2021
[1] In 1991, Tamil Nadu retrieved a Pathur Nataraja idol, which had ended up at the British Museum, London, for restoration, en route to a private buyer in Canada. The idol is under lock and key in a temple vault in Tiruvarur district. Sand particles sticking to the idol were the clinching evidence to prove that the idol belonged to the Pathur temple. Chandrasekaran said macro photography of idols and careful documentation it with details of age and weight will be the best way to prevent theft. Macro photography captures minute details of the object and is especially useful when trying to differentiate between two similar idols.