அனைத்துசாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்என்றசட்டப்படியிலானபணிநியமனம்நடந்தது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படியிலான பணி நியமனத்தை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தது[1]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது[2]. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பு 6.7.2021ல் வெளியானது[3]. இதில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஜெயபாலன், பிரபு ஆகியோர் 12.8.2021ல் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்[4]. இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை நியமிக்க வேண்டும் என்று கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[5]. இங்கு ஆகமம், பாரம்பரிய பயிற்சி மற்றும் ஆகம பயிற்சி சர்டிபிகேட் போன்றவற்றால், இச்சிக்கல் தொடர்கிறது[6].
புதியசட்டத்தின்படிசெய்யப்பட்டநியமனம்நிறுத்திவைக்கப்பட்டது: இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 24-02-2023 அன்று விசாரித்தார்[7]. அப்போது, கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரைப்போல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல்வேறு அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, தங்களின் பணியை செய்து வருகின்றனர்[8]. அதாவது, அக்கோவிலில் முன்பே அர்ச்சகராக இருந்து வந்ததாலும், பூஜை-கிரியை முதலியவை நன்றாகத் தெரியும் என்பதாலும் அவர்கள் அவ்வாறு தொடர்வது தெரிகிறது. மேலும் புதிய அர்ச்சகர்கள் புதிய சட்டப் படி அர்ச்சாராக அந்து விட்டாலும், பழைய அர்ச்சகர்கள் உடன், ஒரு புரிதலில்-ஒப்புதலில் இருவரும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது. தனிநீதிபதி உத்தரவு எனவே ஆகம விதிகளுக்கு எதிராக ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமித்தது ரத்து செய்யப்படுகிறது[9]. அந்த இடங்களில் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை நியமிப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[10]. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது[11]. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலும் தான் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமித்தது. இதை தனிநீதிபதி பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சர்டிபிகேட் / சான்றிதழ்இருந்தால்எந்தஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்: இடைக்கால தடை அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 11-08-2023 அன்று விசாரணைக்கு வந்தது. இவர்கள் [ஜெயபாலன், பிரபு] அர்ச்சகர்களாக இருந்தாலும் இவர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. காமிக ஆகமத்தின்படி குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடக்கிறது. இங்கு நன்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஆதி வைசர், சிவாச்சாரியார் மற்றும் குருக்கள் தான் அர்ச்சகர்களாக முடியும். கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது என்பதால் அந்த நியமனங்களை ரத்து செய்தும், மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்,’’ என்றும் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட் / சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடுகின்றனர். அதில் ஒரு-சிலரைத் தவிர மற்றவர்களால், அந்தந்த கோவில் ஆகமமுறைப்படி கிரியை-பூஜைகள் செய்ய முடியாத நிலையில், சான்றிதழ்-அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்நிலையில், பக்தர்களே அவர்களின் தரத்தை அறிந்து கொன்டு விடுகின்றனர்.
தடைவிதிக்கக்கோரிமனுதாக்கல்: அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றது. பாகுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் பணியை பெறும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அந்த பதவிகளை பெற முடியும் என்ற ரீதியில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. குமாரவயலுார் கோயில் தக்கார், கார்த்திக், பரமேஸ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டது.
அந்தந்தகோவில்நியமஆகமத்தில்தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்போன்றவைபின்பற்றமுடியுமா?: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. அதே நெரத்தில் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட, அந்தந்த கோவில் நியம ஆகமத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்லா பூஜைகளையும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்றுள்ளது. குறிப்பிட்ட ஒன்று-இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு கோவில் பூஜைகள் அனைத்தையும் கற்றுக் கொள்ல முடியும்? ஏதாவது, “பிராக்டிகல்ஸ்” போன்று வகுப்புகள் நடத்துவார்களா? அதே நேரத்தில், பாரம்பரியமாக அர்ச்சகராக உள்ளவர்களும் தொடரலாம் என்றும் உள்ளது. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவில், தமிழக அரசு “அனைத்து ஜாதீனரும்” அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி, அர்ச்சகர் பயிற்சி பெற்று, சர்டிபிகேட்டுடன் வந்து, அர்ச்சகராகி விடுகின்றனர்.
சுகவனேஸ்வரர்கோவில்தீர்ப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது[12]. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்[13].
ஆகமமா, ஆகமபயிற்சியா, பரம்பரைநியமனமா – போன்றவைதொடர்–பிரச்சினைகளாகஇருப்பது: இன்றைக்கு பல படிப்புகளுக்கு, சர்டிபிகேட், டிப்ளோமோ, டிகிரி என்றெல்லாம் படித்தப் பிறகு கொடுக்கப் படுகிறது. ஆனால், அதை வைத்துக் கொண்டு வேலைக்கு போனால், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பலநிலைகளில் சோதிக்கப் பட்டு, உண்மையிலேயே அவ்வேலை செய்ய உகந்தவரா, செய்ய முடியுமா, திறமை உண்டா என்றெல்லாம் சோதனை செய்து தான், தேர்ந்தெடுக்கப் படுவர். ஆக, நிச்சயமாக, சமஸ்கிருதம் தெரியாமல், இந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் குறிப்பிட்ட ஆகமத்தில் தேர்ந்து விட்டேன், வித்வான் ஆகிவிட்டேன், ஆதலால், நான் அந்த ஆகமத்தின் படி, எல்லா கிரியைகள், சடங்குகள், பூஜைகள், சம்பிரதாயங்கல், விழாக்கள் என்று எல்லாமே செய்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், உண்மை தெரிந்து விடும். பி.எல் டிகிரி இருந்தால் எல்லோருமே வக்கீல், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி ஆகி விட முடியுமா என்று கேட்கலாம். MBBS படித்தவர்கள் எல்லோருமே டாக்டகராக / மருத்துவராக வேலை செய்வதில்லை. இன்றைக்கு அந்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற துறைகளுக்கும் பொறுந்தும். அந்நிலையில்,இத்தகைய போக்கு, சட்டப் படி முறையாக அலச வேண்டியுள்ளது.
[12] தமிழ்.நியூஸ்.18,அனைத்துசாதியினரும்அர்ச்சகர்ஆகலாம் – தமிழ்நாடுஅரசின்உத்தரவுக்குதடைவிதிக்கஉச்சநீதிமன்றம்மறுப்பு, First published: August 23, 2023, 00:08 IST: LAST UPDATED : AUGUST 23, 2023, 00:08 IST.
திருவண்ணாமலைகோவில்பிரசாதவிநியோககவரில்கிறிஸ்துவபிரச்சாரமா?: பஞ்சபூத தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்[1]. தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்[2]. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சனி-ஞாயிறுமற்றும் பௌர்ணமி-அமாவாசை முன்பு-பின்பு என்று பக்தர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ப கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகும். இப்பொழுது சித்திரை மாதத்தில் விழாக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. மே.1 விடுமுறை என்பதால், மூன்று நாட்கள் விடுமுறை ஆகிவிட்டது. மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு இறைவனை தரிசிக்கும் பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதம் வழங்கப்படுகிறது[3]. இதில் சாமி சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி பிரசாதத்தை அர்ச்சகர்கள் வழங்குகின்றனர்[4]. இந்நிலையில் திருவண்ணாமலை கோவில் பிரசாத விநியோக கவரில் கிறிஸ்துவ பிரச்சரம் போன்று, தெரசா படம், அன்பின் கரங்கள் என்றெல்லாம் அச்சிட்ட கவர்களில் பிரசாதம் கொடுக்கப் பட்டது.
“மாத்யூ கார்மென்ட்ஸ்” கவரில் பிரசாதம்: இந்த நிலையில் மே 1ம் தேதி, கோவிலில் சாமி சன்னதியில் கொடுக்கப்பட்ட விபூதி பிரசாத கவரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த துணிக்கடை “மாத்யூ கார்மென்ட்ஸ்” பெயருடன், ‘அன்னை தெரசா’ புகைப்படம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. விபூதியை நிரப்பும் கவர்களை ஆன்மிக அன்பர்கள் அச்சடித்து வழங்கி வருகின்றனர்[5]. இந்த கவருடன் விபூதி பிரசாதம் வினியோகிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது[6]. கடை பெயர், முகவரி, கிளைகள், போன் நெம்பர் என்று எல்லா விவரங்களும் இருப்பதால், நிச்சயமாக அக்கடை இதற்கான நன்கொடை கொடுத்திருக்கும். அதனை கோவிலைச் சார்ந்தவர்கள் தான் நிச்சயம் வாங்கியிருக்க வேண்டும். இருப்பினும், கலரில் புகைப் படங்களுடன் அச்சிட்டு கவர்கள் வந்திருந்த போது, அதனை, நன்கொடை பெற்றவர்கள் மற்றும் பிரசாத விநியோகம் செய்பவர்கள், அதனை அவனித்திருக்க வேண்டும். இல்லை பிரசாதத்தை அவருக்குள் அடைத்து, தயாரித்தவர்கள் கவனித்து கூறியிருக்க வேண்டும். ஆகவே இவ்வாறு பலநிலைகளைத் தாண்டி வந்து விட்டது, யாருடைய ஒப்புதல் அல்லது விருப்பத்துடன் நடந்திருக்கிறது என்றாகிறது.
இந்துமுன்னணிமுற்றுகை: இந்நிலையில், கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில், பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதத்தை சிவாச்சாரியார்கள் வழங்கி வந்துள்ளனர்[7]. இதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை இன்று (மே 2) முற்றுகையிட்டு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண் தலைமையிலான இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[8]. கோவிலில் ஏகப் பட்ட இந்துஅறநிலையத் துறை அதிகாரிகள், வேலையாட்கள் என்றிருக்கும் பொழுது, அவர்கள் எல்லாம் இவற்றை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒருவேளை அவர்களில் ஒருவர் கிருத்துவராக இருந்தாலும், இத்தகைய திட்டமிட்டு நடக்கும் செயல் அரங்கேறியிருக்கும். அப்போது அவர்கள், “கிறிஸ்துவமதஅடையாளத்துடன்அச்சிடப்பட்டகவரில்விபூதி, குங்குமம்வழங்கப்பட்டுள்ளன. இதனைகோயில்நிர்வாகம்எப்படிஅனுமதித்தது. கவர்களைதிரும்பபெறவேண்டும். கவரில்அண்ணாமலையாரின்படத்தைதவிர, வேறுஎதுவும்இடம்பெறக்கூடாது. உள்நோக்கத்துடன்செயல்பட்டவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்,” என்றனர்[9]. அவர்களிடம் கோயில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்[10]. அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 1 மணி நேரம் நடைபெற்று வந்த முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது[11].
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில் அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்[12]. விசாரணையில் இக்கோவிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் சோமநாத குருக்கள் மற்றும் முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய கவரில் விபூதி, குங்குமம் பிரசாத கவரினை பக்தர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. மேலே குறிப்பிட்டபடி, இவர்கள் முன்னரே ஏன் கவனிக்கவில்லை என்பது தெரியவில்லை. இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களின் உத்தரவு பெறாமல், நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்க்சைக்குரிய விபூதி, குங்கும பிரசாத கவர்களை, திருக்கோயில் நிர்வாகத்துக்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் மே 1ம் தேதி பக்தர்களுக்கு வழங்கி உள்ளனர்[13]. அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர்[14]. இப்படியெல்லாம் குற்றம் சாட்டும் அளவிற்கு அர்ச்சகர்கள் இருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகும் நிகழ்வாகும். உண்மையிலேயே அவர்கள் அர்ச்சகர்களா அல்லது, திராவிட மாடலில் “சான்றிதழுடன்” உள்ளே நுழைந்த வகையறாவா என்று ஆராய வேண்டும். ஏனெனில், திருவண்ணாமலையிலேயே அத்தகைய “பெரியாரிஸ-நாத்திக” அர்ச்சகக் கூட்டம் ஒன்று வேலை செய்து வருகிறது.
இரண்டுசிவாச்சாரியார்கள் / அர்ச்சகர்பணியிடைநீக்கம்: இதையடுத்து அவர்கள் இருவரையும் கோவில் இணை ஆணையர் குமரேசன் 6 மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்[15]. இதனிடையே சர்ச்சைக்குரிய விபூதி கவர் குறித்து திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையிலானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்[16]. பின்னர் அவர்களிடம் போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்[17]. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது[18]. ஆனால், அந்த இருவரின் பின்னணி என்ன, உண்மையிலேயே அவர்கள் அவ்வாறு செய்தனரா, இல்லை பகடைகளாகப் பயன்படுத்தப் பட்டனரா என்று தெர்யவில்லை. உண்மையில், கிருத்துவ கைகூலிகள் என்றால், அத்தகையோர் எவ்வாறு உள்ளே நுழைந்தனர்?
02-05-2023 தேதியிட்டகோயில்இணைஆணையர்வெளியிட்ட கடிதம்: இது தொடர்பாக, கோயில் இணை ஆணையர் குமரேசன் வெளியிட்டிருக்கும் உத்தரவு நகலில்[19], ‘‘நீதிமன்றத்தின்மூலமாகவோ, இந்துசமயஅறநிலையத்துறையின்உயர்அலுவலர்கள்உத்தரவோஎனஎதுவும்பெறாமல், கோயில்நிர்வாகத்துக்குஅவப்பெயரைஏற்படுத்தும்வகையில், உபயதாரர்மூலம்வழங்கப்பட்டசர்ச்சைக்குரியவிபூதி, குங்குமப்பிரசாதகவரைசோமநாதகுருக்கள்மற்றும்முத்துகுமாரசாமிகுருக்கள்இருவரும்வாங்கியிருக்கிறார்கள். அதைத்திருக்கோயில்நிர்வாகத்திடம்தெரிவிக்காமலும், அனுமதிபெறாமலும் 01-05-2023 அன்றுபக்தர்களிடமும்வழங்கியிருக்கிறார்கள். தன்னிச்சையாகச்செயல்பட்டபுகாரையடுத்து, இருவரும்அர்ச்சகர், ஸ்தானீகம்பணியிலிருந்துஆறுமாதகாலத்துக்குத்தற்காலிமாகப்பணிநீக்கம்செய்யப்படுகிறார்கள்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்[20].
[1] தினமணி, அன்னைதெரசாபடத்துடன்விபூதிபிரசாதம்விநியோகம்: அருணாசலேஸ்வரா்கோயில்குருக்கள்இருவா்பணியிடைநீக்கம், By DIN | Published On : 03rd May 2023 12:00 AM | Last Updated : 03rd May 2023 12:00 AM
[3] மாலை மலர், அன்னைதெரசாபடம்பொறித்தவிபூதிபாக்கெட்டுகள்– அண்ணாமலையார்கோவில்அர்ச்சகர்கள்சஸ்பெண்ட், By மாலை மலர், 2 மே 2023 5:56 PM, (Updated: 3 மே 2023 12:56 PM)
[9] NEWS18 TAMIL, திருவண்ணாமலைகோவில்விபூதிபாக்கெட்டில்அன்னைதெரசாபடம்… இந்துமுன்னணிபோராட்டம்– சிவாச்சாரியார்கள்சஸ்பெண்ட், Reported By : சதிஷ்.Editor; Published By :Karthick S, LAST UPDATED : MAY 02, 2023, 19:49 IST.
[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அண்ணாமலையார்கோயில்விபூதிபாக்கெட்டில்அன்னைதெரசாபடம்.. 2 அர்ச்சகர்கள் 6 மாதம்சஸ்பெண்ட்..!, , vinoth kumar, First Published May 3, 2023, 7:36 AM IST; Last Updated May 3, 2023, 8:15 AM IST
ஆகம தந்திரமும் ஜாதி மந்திரமும் இல்லை, திராவிடத்துவ வன்மமும், நாத்திக இந்துவிரோதமும், தான் வெளிப்படுகின்றன (1)
2015ல்அனைத்துசாதியினரும்அர்ச்சகராகலாம்என்றதமிழகஅரசின்சட்டத்தைரத்துசெய்தஉச்சநீதிமன்றம்: கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது[1]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2]. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
2015 முதல் 2021 வரை: இரட்டை வேடம் போட்டு வரும் திராவிட கட்சிகள், ஒரு வருட அர்ச்சகர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அர்ச்சகர் வேலை கொடுக்கிறோம் என்று, விளம்பரத்திற்காக அரசியல் செய்து வருகின்றன. அதிமுக சட்டப் பிரச்சினையை அறிந்து, ஆகமங்கள் இல்லாத கோவில்களுக்கு இருவரை அர்ச்சகராக நியமித்து அமைதியானது. இப்பொழுது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வேண்டுமென்றே, சட்டமீறலைச் செய்ய, இவ்வாறு செய்துள்ளது. நீதிமன்றங்களுக்குச் சென்று, வருவதற்குள் ஆண்டுகள் ஆகிவிடும், அதுவரை பார்த்துக் கொள்ளலாம் என்ற வீம்புடன் வேலைக்கு வைத்துள்ளது தெரிகிறது. அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மாநிலத்தில் உள்ள 38 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது[3]. இது தொடர்பான வேறு வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதால், இம்மனுவை அவற்றோடு சேர்த்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இந்த சமர்ப்பித்தலைப் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை முதல் பெஞ்சிற்கு அனுப்புமாறு பதிவகத்திற்கு உத்தரவிட்டது[4].
ஸ்டாலின்அவருடையதந்தைசெய்ததவற்றைச்செய்ததால்நீதிமன்றத்துக்குச்செல்லவேண்டியநிலைவந்துள்ளது – சுப்பிரமணியன்சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[5]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[6]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!
முதல்வர்ஸ்டாலினுக்குயார்அதிகாரம்கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.
திகசொல்லிசெய்யும்ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார். இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.
[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முறையாகபயிற்சிபெற்றவர்கள்அர்ச்சகர்கள்ஆகலாம்; உயர்நீதிமன்றத்தில்அரசுவிளக்கம், Written By WebDesk, Updated: August 17, 2021 11:51:03 am.
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது – அர்ச்சகர்பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?
19-08-2021 முரசொலிதலையங்கம் – தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!
முரசொலியின்விளக்கம்ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!
நாத்திகர், ஆத்திகவிசயங்களில்தலையிடும்மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:
எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.
60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
“இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.
இந்துவிரோததிமுகவின்அனைத்துஜாதிஅர்ச்சகர்நியமனநாடகம், சுப்ரமணியசுவாமிக்குவிளக்கம்கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ளவேண்டியஅவசியம்என்ன? (3)
அவதூறுகளுக்குநெத்தியடிபதில்கொடுத்தமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்… பின்வாங்கியசுப்பிரமணியன்சுவாமி!: இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி[1], “தமிழ்நாடுஅர்ச்சகர்தொடர்பானபிரச்சினைதீர்க்கப்பட்டதாகத்தெரிகிறது. முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்இன்றுதமிழகசட்டசபையில்அர்ச்சகர்கள்யாரும்பணிநீக்கம்செய்யப்படவில்லை. அகற்றும்திட்டம்எதுவும்இல்லை. 60 வயதைகடந்துஓய்வுபெறும்அர்ச்சகர்களுக்குதகுந்தபணிவழங்கப்படும்என்றுதெளிவுபடுத்தியுள்ளார். இதன்மூலம், பிரச்சினைதீர்க்கப்பட்டதாகத்தெரிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்[2]. இதைத்தான், “அவதூறுகளுக்குநெத்தியடிபதில்கொடுத்தமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்… பின்வாங்கியசுப்பிரமணியன்சுவாமி! ,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் இந்துமதத்தை தூஷித்து, 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி, எழுதி வருகின்றனர். இவற்றை எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறது. இப்பொழுது, அரசியல் ஆட்சி, அதிகாரம், பலம் மற்றும் ஊடக அசுர பிரச்சாரம் எல்லாம் இருப்பதால், இத்தகைய யுக்திகளும் கையாளப் படுகின்றன.
பணியில்உள்ளஅர்ச்சகர்வெளியேற்றப்பட்டனர்: பணி ஆணையை பெற்ற அவர்கள் 15-08-2021 அன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது[3]. அதில் பேசும் குருக்கள் ஒருவர், “நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம், நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா[4]. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும், சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது[5]. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா? ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்[6]. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினை போன்று விவரிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், “இந்துக்கள்” போர்வையில், நாத்திகர்-இந்துவிரோதிகள் “அர்ச்சகர்” போர்வையில் கோவிலுக்குள் நுழைவது தான்.
ஏற்கனவேபணியில்இருக்கின்றஓய்வுபெறாதஎந்தஅர்ச்சகரையும், எந்ததிருக்கோயில்களிலிருந்துவெளியேற்றவில்லை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது[7]. அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்[8]. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார். 60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
19-08-2021 – கருணாநிதி – கோவில்கள்ஆகமவிதிப்படிநடக்கவேண்டும்என்பதைப்போலவேவர்ணாசிரமத்துக்குவழிவகைசெய்வதாகஇருந்துவிடவும்கூடாது[9]: முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். ‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது. இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.
19-08-2021 முரசொலிதலையங்கம் – அனைத்துச்சாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்என்றநியமனமேஉச்சநீதிமன்றத்தின்அங்கீகாரத்தால்தான்நடந்திருகிறது – சேகர்பாபு:. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே,’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது[10].
[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளியேற்றப்படும்பிராமணர்கள்… கோயில்குருக்களின்வைரல்ஆடியோ… குஷியில்பெரியாரிஸ்ட்மற்றும்இடதுசாரிகள்.!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST; Last Updated Aug 16, 2021, 1:04 PM IST.
அரசியல்ஆக்கப்பட்டுவிட்டதால்கூட்டணிகட்சிகள்ஆதரவுதெரிவிப்பதில்எந்தஆச்சரியமும்இல்லை: இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது[1], “சமூகநீதியைவிரும்பாதசுப்ரமணியன்சுவாமிபோன்றோருக்குஇந்தத்திட்டம்எரிச்சலைத்தருகிறது. மனிதன்நிலவில்கால்வைத்தாலும்கோவில்கருவறையில்கால்வைக்கமுடியாதுஎன்றநிலைநீடித்துவந்தது. அனைத்துச்சாதியினரும்அர்ச்சகராகலாம்திட்டம்அகிலஇந்தியஅளவில்பெரியதாக்கத்தைஏற்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தில்முதல்வர்ஸ்டாலினுக்குஉற்றதுணையாகஇருப்போம்,” என தெரிவித்துள்ளார்[2]. இதே போலத்தான், பெரியார் திடலில், வீரமணி தலைமையில் இந்துவிரோதிகள் எல்லாம் சேர்ந்து பேசியுள்ளார்கள். அதிலும், இந்த இந்துவிரோதி திருமா இருந்ததும் நோக்கத் தக்கது. அருள்மொழி, சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன். சிகரம் செந்தில்நாதன், கலையரசி நடராசன் இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்துவிரோதிகள் எவ்வாறு சேர்ந்து, இந்துமதத்திற்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.
ஸ்டாலின்அவருடையதந்தைசெய்ததவற்றைச்செய்ததால்நீதிமன்றத்துக்குச்செல்லவேண்டியநிலைவந்துள்ளது – சுப்பிரமணியன்சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[3]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[4]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!
முதல்வர்ஸ்டாலினுக்குயார்அதிகாரம்கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.
திகசொல்லிசெய்யும்ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார். இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.
[7] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்துஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம்சட்டத்தைவாபஸ்பெற்றால்ஸ்டாலின்தப்பிப்பார். சு.சாமிகடும்எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.
அனைத்துஜாதியினரும்அர்ச்சகர்ஆகலாம் – உண்மை–பொய்மை; தமிழகசட்டம்–அரசியநிர்ணயசட்டம்மற்றும் திராவிடகட்சிகளின்இந்துவிரோதவேடங்கள் – நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அறநிலையத் துறை அமைச்சர் செயல்படுவாரா? (3)
ரங்கநாதனின் முரண்பட்ட வேடங்கள், தோற்றங்கள்: இவரது வேடங்களும் திகைப்படையச் செய்கின்றன. புகைப்படங்களில் தாராளமாக போஸ் கொடுக்கும் இவர், பிள்ளையாருக்கு மற்றும் அச்சிலைகளை உடைத்த பெரியார் சிலைக்கும் மாலை போடும் போது பூணூல் போட்டுக் கொண்டு, பட்டை-கொட்டைகளுடன் காட்சியளிக்கிறார். போராட்டம், ஆர்பாட்டம் என்று வரும் போது பூணூலை கழற்றி வைத்து விட்டு வருகிறார். கிருதா-மீசை சகிதம் வெறியோடு கத்தும் தோற்றம் காணப் படுகிறது. அத்தகைய நடத்தைகளை யார் அர்ச்சகப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள் அல்லது எந்த ஆகமம் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. பெரியாருக்கு மாலை போடும் போது, இவர் வலது பக்கமாகவும், இன்னொருவர் இடப் பக்கமாகவும் (மாலை போல) பூணூல் போட்டிருப்பதை கவனிக்கலாம். அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது போன்ற விளம்பர யுக்திகளில் ஈடுபட்டுள்ளார் அல்லது ஊடகங்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்றாகிறது.
உச்சநீதிமன்றதீர்ப்பைமீறிதிமுகஅரசுஒன்றும்செய்துவிடமுடியாது: இந்து அறநிலைச் சட்டப் பிரிவை மாற்றித் தான், திமுக அரசு 2006ல் அத்தகைய அரசாணை [(No. 5 /2006) dated 14.07.2006] பிறப்பித்தது[1]. ஆனால், பிரச்சினை அறிந்தவுடன், மறுபடியும் மாற்றி [The Tamil Nadu Act No. 15 of 2006], இன்னொரு ஆணையை வெளியிட்டது. அதற்கு கவர்னர் 29.08.2006 அன்று ஒப்புதல் அளித்தார். ஆனல், ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் வழக்கு தொடுத்தது[2]. உச்சநீதி மன்றம் 16-12-2015 அன்று தீர்ப்பு அளித்தது[3]. “மேற்காணும்விவரமானவாத–விவாதங்களுக்குப்பிறகுஅர்ச்சகர்நியமனம்ஆகமசாத்திரவிதிமுறைகளுக்குஏற்பசெய்யப்படவேண்டும். அவைஅரசியல்நிர்ணயசட்டத்தின்பிரிவுகள்மற்றும்கொள்கைளுக்குஇயைந்தவகையில்இருக்கவேண்டும். இதுசேஷம்மாள்தீர்ப்பின்படியும்பொறுந்தும். அதன்படியே, எல்லாமனுக்களும்தள்ளுபடிசெய்யப்படுகின்றன,” என்று ஆணையிட்டது[4]. இதை எதிர்த்து தமிழக அரசோ, எந்ஹ சங்க்சமோ மேல்முறையீடு செய்யப் படவில்லை.அதாவது ஒப்புக் கொண்டனர் என்றாகிறது. பிறகு இப்பொழுது, 100 நாட்களில் அர்ச்சகராக நியமிப்பேன் என்று அமைச்சர் பேசுவது வேடிக்கையான விசயம் தான். நீதிமன்ற தீர்ப்பின் மகத்துவம் அறிந்து தான் பேசுகிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. உள்ள பல பிரச்சினைகளைத் திசைத் திருப்ப, இவ்வாறு கூறியிருக்கலாம் என்றாலும், இவர்களுக்கு கோவில்கள், கோவில் சொத்துகள் முதலியவற்றின் மீது ஒரு கண் இருப்பதனால், பக்தர்கள் பொறுட்திருந்து தான் கவனிக்கபேண்டும், பார்க்க வேண்டும்.
திக-திமுக-நாத்திக-இந்துவிரோத சக்திகள் ஒன்றாக இணைந்து வேலை செய்வது தெரிகிறது
அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் என்ற தீவிர-வாத-விவாதங்களில், அரசியல் தான் அதிகமாக இருக்கிறதே தவிர, ஆகம நியதிகள் இல்லை.
ஈவேரா சொன்னார், கருணாநிதி சட்டம் போட்டார், அரசு ஆணை வெளியிடப் பட்டது போன்ற திரும்ப-திரும்ப செய்யும் வாதங்கள் சட்டமுறைப்படி இல்லை.
உச்சநீதி / உயர்நீதி மன்ற தீர்ப்புகள், ஏற்கெனவே இருக்கும் சட்டம், நீதிமுறை, வரையறை, முதலியவற்றைக் கொண்டு வழங்குபவை.
அரசியல் 25-சாசனப் பிரிவை நீக்க வேண்டும் என்றால், அம்பேத்கரை எதிர்ப்பதாகாதா, சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை எதிர்ப்பதாகாதா, என்பதையும் யோசிக்க வேண்டும்.
2008ல் தீட்சை பெற்ற பிறகு, சிறிய தனியார் கோவில்களில் பணியாற்றுவது, வேறு வேலைகளைச் செய்வது என்றிருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது, அவர்களது அரசியலை, விருப்பத்தைக் காட்டுகிறது.
அதாவது, பொருளாதார ரீதியில் சம்பளம் பெற்று திருப்தியாக, வசதியாக, 12 ஆண்டுகள் இருந்து வந்திருக்கிறார்கள் வருகிறார்கள், என்று உறுதியாகிறது.
ஒவ்வொரு முறையும் பளிச்சென்று ஆடைகள் அணிந்து, ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கின்ற நிலையில் அவர்களது நிலையும் வெளிப்படுகிறது.
M.B.B.S, B.E, B.Tech, Bio-Tech என்றெல்லாம் படித்தவர்களுக்கு அத்தகையத் துறை வேலைகள் கிடைப்பதில்லை. சான்றிதழ் உள்ளது வேலைக்கு உத்திரவாதம் என்பது பொலித்தனம்!
இவர்கள் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு, வேலை கொடு என்று உட்கார்ந்திருந்தால், யாரும் அவர்களை மதிக்க மாட்டார்கள்!
சான்றிதழ் வைத்துக் கொண்டு 12 வருடங்களாகக் காத்துக் கிடக்கிறோம் என்பதும், வேறு வேலை செய்கிறோம் என்பதும், வேலை-சம்பளம் இவற்றையும் மீறியதாக உள்ளது.
அதாவது, அர்ச்சராக வேண்டும் என்பதில் அரசியல் தான் உள்ளதே தவிர, அதில் உண்மையான பக்தி, சிரத்தை, லயம் முதலியவை இல்லை.
அத்தகைய பக்தியுடன் கடவுளிடம் உருகி வேண்டியிருந்தால், நிச்சயம் வேலை கிடைத்திருக்கும். ஆனால், பெரியார் சிலைக்கு மாலை போடுவேன் என்ற ரீதியில் இருந்து வருவது, நாத்திக-இந்து விரோத அரசியலை ஆதரிப்பது புலப்படுகிறது.
மேலும், இவர்களை அவ்வாறு ஊக்குவித்து வருவதும் புலனாகிறது. நீதிமன்ற வழக்குகளுக்கு ஆதாரங்களாக, அத்தாட்சியாக தயாரிக்கப் பட்டிருக்கின்றனர்!
இவ்வாறு உள்நோக்கத்துடன், நாத்திக அரசியல் செய்யும் இவர்கள் எவ்வாறு ஆகம சாத்திரங்களுக்கு உகந்தவர்களாக இருப்பார்கள்?
படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற ரீதியில் செயல் பட்டால், ரகளை செய்தால் என்ன செய்ய முடியும்?
நாத்திகன், பெரியாரிஸ்ட், திராவிடத்துவ வாதி, இந்து-விரோதி, சான்றிதழ் வைத்துக் கொண்டு அர்ச்சகர் ஆனால், என்னாகும்?
[1] An Ordinance (No. 5 /2006) dated 14.07.2006 followed the aforesaid G.O. seeking to further amend sub-section (2) of Section 55 of the Tamil Nadu Act. The said provision of the Act i.e. Section 55(2), by virtue of the 1971 amendment referred to above and the 2006 Ordinance, read as follows.
“(2) No person shall be entitled to appointment to any vacancy referred to in sub-section (1) merely on the ground that he is next in the line of succession to the last holder of office.” [Change brought about by amendment of S.55(2)] “or on the ground of any custom or usage”. [Change brought about by Ordinance 5/2006).
The Ordinance was replaced by The Tamil Nadu Act No. 15 of 2006 which received the assent of the Governor on 29.08.2006. The Act, however, did not contain the amendment to Section 55 as was made by the Ordinance. In other words, the said amendment brought by the Ordinance was dropped from the Amending Act 15 of 2006.
[2]Supreme Court of India- Adi Saiva Sivachariyargal … vs Govt. Of Tamil Nadu & Anr on 16 December, 2015; Author: ……………….…………………J.
Bench: Ranjan Gogoi, N.V. Ramana
REPORTABLE
IN THE SUPREME COURT OF INDIA
CIVIL ORIGINAL JURISDICTION
WRIT PETITION (CIVIL) NO. 354 OF 2006
ADI SAIVA SIVACHARIYARGAL NALA SANGAM & ORS. …PETITIONER (S)
VERSUS
THE GOVERNMENT OF TAMIL NADU & ANR. …RESPONDENT (S)
WITH
W.P. (C) No. 355 of 2006, W.P. (C) No.383 of 2006 AND W.P. (C) No. 384 of 2006.
[4] “Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above.