Archive for the ‘வல்லாள தேவன்’ Category

செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

ஓகஸ்ட்21, 2011

செஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?


கனகாம்பாள் என்ற தமிழச்சி மற்றும் வீராங்கனை: கனகாம்பாள் என்ற 70 வயது மூதாட்டி இந்த கோவிலை காத்து வருகிறார் என்றால் மிகையாகாது. விதவையாக ஆதரவின்றி அங்கேயே கோவில் வளகத்தில் வாழ்ந்து வருகிறார். தமக்கு முடிந்த வரையில் கோவிலைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தப்படுத்தி வைக்கிறார். அந்த பாட்டி எப்படி பலமுறை அங்கு ஆக்கிரமிப்புச் செய்ய கிருத்துவர்கள் மற்றும் இதர சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தபோது, தனியாக அவர்களுடன் விவாதித்து, கத்தி, மிரட்டி விரட்டி அனுப்பியுள்ளதை விளக்கினார்[1]. இக்காலத்தில், யார்-யாரோ தம்மை “தமிழச்சி” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். அந்த பகட்டு “தமிழச்சிகள்” எல்லாம் இந்த பாட்டியம்மாவிடம் பிச்சை வாங்கவேண்டும், கால்களில் விழுந்து வணங்க வேண்டும். உண்மையில், இந்த பாட்டி தான் மாபெரும் தமிழச்சி எனலாம். சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை கதிகலங்கி மிரட்டோடி வைத்த வீரப்பெண்மணியை ஒத்தவர் இந்த கனகாம்பாள்! அரசாங்கத்தின் தரப்பில் “வீராங்கனை” என்ற பட்டமும் யார்-யாருக்கோ பரிந்துரைக்கப்படுகிறது, அவ்வாறே கொடுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில், இந்த பாட்டிக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இனிமேல் யாராவது பரிந்ரைத்தால் நன்றாக இருக்கும்.


கிருத்துப் பாதிரியின் பொய் வழக்கு பொய்த்தது: ஏனோ கிருத்துவர்களுக்கு குறிப்பாக, அவ்வூர் கிருத்துவ பாதிரி ஒருவன் பலவழிகளில் பயமுறுத்தி, பீதியைக் கிளப்பி அந்த புராதனமான கோவில் மற்றும் கோவில் நிலத்தை அபகரிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தது அப்பட்டமாகவே தெரிய வந்துள்ளது. ஒருமுறை யாரோ வெடிகுண்டு வைத்து அந்த கோவிலை தகர்க்கப் போகிறார்கள் என்று புரளியையை வேறு அப்பாதிரி கிளப்பி விட்டிருக்கிறான் என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு பயங்கரவாத எண்ணம், கோவிலை ஆக்கிரமிப்பதில் தேவையா அல்லது அந்த கோவிலை முற்றிலுமாக இடித்துத்தள்ளிவிட வேண்டும் என்று “மாலிக்காப்பூர்” எண்ணத்துடன் கிருத்துவர்கள் இருந்திருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.


கோவில் நிலத்தை, கோவிலுடன் விற்கமுடியுமா? செஞ்சி ஶ்ரீ கோதண்டராமர் ஆலயம் மற்றும் கோவில் நிலத்தை, கோவிலுடன் விற்றிருப்பது, அதை ஒரு கிருத்துவ பாதிரியார் மதவெறி, ஆத்திரம், குரோதம் முதலிய இந்தியவிரோத-இந்துவிரோத மிக அதிகமான வெளிப்படையான குற்ற உணர்வுகளுடன் வாங்கியிருப்பது, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (மாநில தாசில்தார், பதிவு சார்பாளர்கள் முதலியோர்) எதையும் கண்டுகொள்ளாமல் மாற்றிக் கொடுத்திருப்பது, வழக்கு ஆரம்பித்தபோது கூட, உள்ளூர் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது, கோவிலைப் பூட்டி வைத்தது போன்ற காரியங்களை நோக்கும்போது, இது ஒரு சாதாரணமான நிலம் விற்றல்-வாங்குதல் என்ற செயல் அல்ல, ஆனால் அதற்கும் மேலாக ஒரு சதிதிட்டம் உள்ளது என்று தெரிய வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், திருவண்ணாமலை முதலிய இடங்களில் அதிக காலமாக தங்கி வாழ்ந்து வரும் அந்நிய பாதிரிகளின் சதிதிட்டமாக இருக்கலாம் என்று தெரிகிறது. திருவண்ணாமலையில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ ரமணாஷ்ரம் கிருத்துவர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக குற்றம் சட்டப் படுகிறது[2]. திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை வழியிலுள்ள இடங்கள் பலவற்றை ஆக்கிரமித்து, மோசடி செய்து வாங்கி சர்ச்சுகளைக் கட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த 30 வருடங்களாக அயல்நாட்டைச் சேர்ந்த கிருத்துவ மிஷனிரிகள் வேலை செய்து வருகின்றன. அதே கும்பல்தான் ஶ்ரீ கோதண்டராமர் ஆலயத்தின் மீது கண்வைத்து கார் இயங்களை ஆரம்பித்தன, ஆனால் சட்டமுறையில் தோல்வியடைந்துள்ளனர்.


இந்துக்களின் வெற்றி: செஞ்சியில் (விழுப்புர மாவட்டம்) ஶ்ரீ கோதண்டராமர் ஆலயம் அறக்கட்டளை என்றதை விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவி சட்டப்படி போராட்டி கடந்த மே மாதம் 2011ல் தான் இந்த கோவிலை மீட்டுள்ளது. கிருத்துவர்கள் இந்த வழக்கில் பற்பல மோசடிகள் செய்துள்ளனர். உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார், பதிவு அலுவலகம் முதலியோர், குறிப்பாக கிருத்துவர்களாக இருந்தவர்கள், பலமுறை சட்டத்திற்கு புறம்பாக, அதாவது, இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன. தில்லியில் ஆவணங்கள் சரிபார்த்தபோது கூட, தில்லியில் இருக்கும் அதிகாரக் கிருத்துவர்கள் தடுக்க தமது தாக்கத்தை, அழுத்தத்தை உபயோகித்துள்ளனர். ஆனால், அதற்கும் மேலாக பழைய ஆவணங்கள் உண்மையை எடுத்துக் காட்டியதால், இந்த எல்லா கிருத்துவர்களின் முகமூடிகளையும் கிழித்து, அவர்களது தீய சதிதிட்டத்தை வெளிப்படையாக காட்டியுள்ளது[3]. ஆனல் இங்கும் ஊடகங்களில் இந்த விஷயம் வெளிவராமல் செய்துள்ளது.


ஒருவருடம் கோவில் போலீஸ் பாதுகாப்பில் இருந்தது: ஒருவருடம் பிரச்சினையில் இருந்தபோது, கோவிலுக்குப் பூட்டுப் போட்டு வைத்தனர். இந்துக்கள் கோவிலுள் வரமுடியாதபடி தடுக்கப்பட்டனர். அதாவது அவர்கள் உரிமைகள் தடுக்கப்பட்டு, பறிக்கப்பட்டிருந்தன. கோவில் பாதுகாப்பும் இருந்தது. இப்பொழுது வழக்கு ஹிந்துக்களின் சார்பாக முடிவாகியுள்ளதால், போலீஸார் சென்று விட்டனர். அக்கோவில் சிதலமடைந்துள்ள நிலையில், பற்பல சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். அப்பொழுது, போலீஸ் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வளவு நடந்த பின்னரும், அரசிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று உணரவில்லை. இப்பொழுதுகூட, இறந்தவர்களுக்குக் கிரியைகள் செய்ய (கீழே குறிப்பிட்டுள்ளபடி), குறுக்குவழியாக இக்கோவில் வளாகத்தின் வழியாக சென்று வருகின்றனர். வாகனங்களுடன் வந்து செல்கின்றனர். சென்ற ஒரு வருட காலத்தில் பிப்ரவரி 2010 முதல் பிப்ரவரி 2011 வரை, கோவிலில் போலீஸ் பாதுகாப்பு இருந்தபோது, அவ்வாறு அவர்கள் செல்லாமல் இருந்தார்களா இல்லை செல்ல அனுமதித்தார்களா என்று தெரியவில்லை!


வெற்றிக்குப் பிறகு கோவில் சுத்தப்படுத்தப் பட்டு வருகிறது: ஹிந்துக்கள் கோவிலைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆற்றுக்குச் செல்லும் வழியில், குவிந்திருந்த மண்ணை அப்புறப்படுத்தியதில், படிகட்டுகள் தெரிந்துள்ளன. இதனால், மிக்க பரவசத்துடன் படிகட்டு பூஜையினையும் நடத்தியுள்ளனர். பல கற்தூண்கள், குறுக்குத்தூண்கள்,  கூரை கற்பலகைகள் என சுற்றிலும் கிடந்தவற்றை, வலது பக்கத்தில் குவித்து வைத்துள்ளனர்.


இந்துக்களே கோவில் நிலத்தை அசுத்தப் படுத்துவது, அமங்கலப் படுத்துவது: இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் போது, உள்ளூர் இந்துக்கள் ஆற்றங்கரைக்குச் சென்று இறப்பு-கிரியைகள் செய்ய, “குறுக்கு வழி” என்று கோவில் வளாகம் வழியாக சென்று வருகின்றனர். 04-08-2011 அன்று ஆற்றில், இறந்தவர்களுக்குக் கிரியைச் செய்ய, இக்கோவில் வழியாகத்தான் செல்கிறார்கள். கிரியைக்கு வேண்டிய பச்சை தென்னம் ஓலை முதலியவற்றையும் அந்த வழியாகத்தான் எடுத்டுச் செல்கின்றனர். அவர்களின் கார்கள் மற்ற வாகனங்கள் தாராளமாக உள்ளே நுழைந்து வந்து, ஆற்றங்கரையில் நிறுத்திவிட்டு, ஆற்றின் நடுவேயுள்ள மண்டபத்திற்குச் செல்கின்றனர்.


முகமதியர்களின் கோவில் இடிப்பு, சிற்பங்கள் உடைப்பு வன்முறைகள்: கோவிலின் இடது பக்கத்தில், முகமதியர்கள் இங்கு வந்து இக்கோவிலை இடித்து துவம்ஷம் செய்து, அருகில் ஒரு நினைவிடம் போன்று கட்டப்பட்யுள்ளனர். ஆனால், அதற்குள் சென்று பார்த்தால், அது ஒரு பழைய இந்து மண்டபத்தை அப்படியே மேலாக மாற்றிக் கட்டி அந்தகைய கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. சுமார் 10 x 10 அளவில் உள்ள அம்மண்டபத்தில் நுழைந்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதன் உள்ளே ஏறிச் செல்ல கற்படிகட்டுகள் போல போடப்பட்டிருப்பது, பழைய இந்து கோவில் தூண்களே. அவற்றில் கடவுளர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. அதன் மீது காலை வைத்து ஏறி உள்ளே செல்ல வேண்டும். வட இந்தியாவில் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டுள்ளபோது, கடைபிடித்த அதே முறை இங்கும் கையாளப்பட்டுள்ளது. நடுவில் அல்லது ஒரு மூலையில் நின்று கொண்டு உயரே பார்த்தால், அந்த கட்டுமானத்தைப் பார்த்தால், எண்கோண வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ள தூண்கள் அதன் மீது படிப்படியாக, கோபுரத்திற்கு வேண்டிய உள்கட்டுமான அமைப்பைப் பார்க்கலாம்.


இந்துக்கள் வழக்கில் வெற்றிப் பெற்றப் பிறகு முஸ்லீம்கள் செய்யும் குறும்புத்தனமான ஆனால் விஷமத்தனமாக பிரச்சினை: இப்பொழுது, யாரோ ஒரு முஸ்லீம் அவ்வப்போது மதியம் வந்து, ஊதுவத்தியைக் கொளுத்தி வைத்து, தொழுகை நடத்தி விட்டுச் செல்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் 04-08-2011 அன்று அங்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தபோது யாரும் வரவில்லை. நிச்சயமாக, இந்துக்கள் இந்த வழக்கில் வென்றுவிட்ட நிலையில், மறுபடியும் விஷமத்தனமாக பிரச்சினை ஏற்படுத்தவே, அவ்வாறு அந்த முஸ்லீம் செய்வதாகத் தெரிகிறது[4]. கிருத்துவர்களுக்குப் பிறகு, முஸ்லீம்கள் அடாவடித்தனத்தில் இறங்கியிருப்பது தெரிகிறது. முதலில்தாவர்கள் தமிழகத்தில் இப்படி பல கோவில்கள் இடிக்கப்பட்டதற்கு, கொள்ளையடிப்பதற்கு வெட்கப்படவேண்டும், பிராயசித்தம் செய்யவேண்டும். ஏன், இப்பொழுதும் பல்லாவரம் (சென்னை), கீழக்கரை, காரைக்கால், நாகப்பட்டனம், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை முதலிய இடங்களில் உள்ள தர்கா-மசூதிகள் அகற்றப்பட்டு, இந்துக்களுக்குத் திரும்ப அளிக்கப்பட வேண்டும். இன்றும் அந்த தர்காக்கள்-மசூதிகளுக்குள் கோவில் தூண்கள், சுவர்கள் மற்ற கட்டுமான அமைப்புகள் காணப்படுகின்றன.

முடிவுக்கு வந்தது சர்ச்சை: செஞ்சி கோதண்டராமர் ஆலயம் திறப்பு[5]First Published : 09 Feb 2010 01:17:59 AM IST

செஞ்சி,​ பிப்.8, 2010 :​ ​ சர்ச்சைக்குள்ளான செஞ்சி கோதண்டராமர் கோயில் திங்கள்கிழமை திறக்கப்பட்டு,​​ வழக்கம்போல் வழிபாடு நடைபெற்றது.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கோதண்டராமர் ஆலயம் உள்ளது.​ இதில் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில்,​​ கடந்த டிசம்பர் 7-ம் தேதி கோதண்டராமர் ஆலயம் அமைந்துள்ள இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும்,​​ 1878-ம் ஆண்டு மயிலம் ஆதீனம் பரம்பரையில் இருந்து ரூ.500-க்கு வேடந்தாங்கல் எப். டாரூஸ் என்பவர் கிரையம் வாங்கியதாக கிறிஸ்தவர்கள் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.  இதையடுத்து கோயிலில் பூஜை செய்யக்கூடாது என்று கூறி வட்டாட்சியர் மூலம் கோயிலை பூட்டி விட்டனர்.

இது தொடர்பாக செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் கோயிலுக்கு சீல் வைக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து இந்து முன்னணியினர்,​​ கோதண்டராமர் ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும்,​​ அனுமதி மறுத்தால் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.​ ​

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கோதண்டராமர் ஆலயத்தில் வழிபாடு நடத்த கோயில் சாவியை ஊர் பொது மக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதன் பேரில்,​​ செஞ்சி வட்டாட்சியர் ஊர் பொது மக்கள் மற்றும் இந்து முன்னணியிடம் சாவியை திங்கள்கிழமை ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்து முன்னணியினர் மற்றும் பொது மக்கள் செஞ்சி கூட்டுசாலையில் இருந்து கோதண்டராமர் ஆலயதுக்கு ஊர்வலமாக சென்றனர்.​

பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் கோயில் சாவியை ஊர் பொது மக்கள் மற்றும் இந்து முன்னணியினரிடம் வழங்கினார். இதையடுத்து கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.​ இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாககுழு உறுப்பினர் காஞ்சி கண்ணன்,​​ மாவட்டச் செயலர் எஸ்.வி.சுப்பரமணியம்,​​ விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலர் சி.துரைரங்கராமானுஜதாசர்,​​ பழனி,​​ கணேசன்,​​ தமிழ்ச்செல்வி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

200 ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருந்த கோதண்டராமர் கோயில் தீர்த்தவாரி படித்துறை (பிப்ரவர் 2011): இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த கோதண்டராமர் கோயில் தீர்த்தவாரி படித்துறை, சீரமைப்பினால் வெளிப்பட்டுள்ளது[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் கோதண்டராமர் கோயில் உள்ளது. தற்போது, இடிபாடுகளுடன் காணப்படும் இக்கோயிலைச் சுற்றி மிகப் பெரிய சுற்றுச் சுவரும், ஏராளமான மண்டபங்களும், சந்நிதிகளும் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன[7]. இக்கோவிலை 1714ம் ஆண்டில் ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நவாப்பிற்கும் நடந்த படையெடுப்பின் போது உடைத்து சேதப்படுத்தினர். இதன் பிறகு, இந்து மன்னர்கள் ஆட்சி இல்லாமல் போனதுடன், பிரெஞ்சு, ஆங்கிலேயர்களின் பிடியிலும் நீண்ட நாள் செஞ்சி இருந்தது. இதனால் இக்கோயிலை புனரமைக்கவும், வழிபாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனாலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள இக்கோவில் மண்டபத்தில் மாசி மக தீர்த்தவாரி மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது, கோதண்டராமர் கோவில் பகுதியை புதுப்பித்து, திருப்பணிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த தீர்த்தவாரி படித்துறையில் மண்ணை அகற்றியுள்ளனர். இதுவரை சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த இப்பகுதி, தற்போது கலையம்சத்துடன் படித்துறையாக அழகுடன் காட்சி தருகிறது. இந்த படித்துறையில் 18ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடத்த உள்ளனர். இதில் சிங்கவரம் ரங்கநாதர் செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் செஞ்சி பகுதியில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவர்கள் கலந்துகொள்கின்றனர்.

 

ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி  நடைபெற்றது: செஞ்சி, பிப். 18, 2011: செஞ்சி சங்கராபரணி நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது[8].  விழாவை முன்னிட்டு சிங்கவரம் அரங்கநாதர் ஊர்வலமாக புறப்பட்டு கோதண்டராமர் ஆலயத்துக்கு வருகை புரிந்தார். பின்னர் சிறப்பு வழிபாடுகளுடன் சங்கராபரணி நதிக்கரை படித்துறையில் அரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் நதியில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் சிறப்புப் பூஜைகளுடன் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்த காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், செஞ்சி பெரியகரம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, மாரியம்மன். லட்ச தீப செல்வவிநாயகர், இல்லோடு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பகல் 1 மணிக்கு செஞ்சி சங்கராபுரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் வசந்த மண்டபத்தில் சிறப்புப் பூஜையும், இதைத் தொடர்ந்து செஞ்சி நகர வீதிகளில் திருவீதியுலாவும் நடைபெற்றது. விழாவை ஸ்ரீகோதண்டராம சுவாமி அறக்கட்டளை விழா குழுவினரும் பொது மக்களும் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி. விநாயகம் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவில் இப்பொழுதும் அதே நிலையில் உள்ளது: இந்திய தொல்துறைத் துறை அல்லது தமிழக தொல்துறைத் துறைகள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அக்கோவிலின் பழையகாலம் பற்றிய விவரங்கள் வெளிவந்தால், மேலும் பிரச்சினகள் வரும் என்றதற்காக மௌனமாக இருக்கிறார்களா? இந்துக்களிடம் உள்ள அக்கோவிலை புனர்-நிர்மாணம் செய்யவேண்டியது அவர்களுடைய கடமையாகும். உழவாரப்பணி செய்யும் குழுக்கள்[9], “ரீச்” போன்ற இயக்கங்கள், மாதம் ஒருமுறையாவது, இங்கு வந்து, இருக்கும் கலைப்பொக்கிஷங்களைக் காக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எங்கெங்கோ சுற்றுலா செல்கிறார்கள், அதற்கு பதிலாக இங்கு ஒருமுறை வந்தால், பழமையை அறிந்து பாராட்ட முடியும். உள்ளூர் அன்பர்கள் சிலர், அங்கு வந்து செல்கின்றனர். தங்களது செலவில் பராமரிப்பு வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், அரசு எடையும் செய்வதில்லை. ஆனால், கோவில் நன்றாக வளர்ந்தவுடன், அறநிலைத்துறை மூலம் உள்ளே நுழைந்து விடும்[10]. ஆகவே இந்துக்கள் இதனை தகுந்த முறையில் நிர்வகித்து, புனர்-நிர்மாணம் செய்து, கும்பாபிஷேகம் செய்யவேண்டும்.

வேதபிரகாஷ்

21-08-2011


[1] 04-08-2011 அன்று நேர்காணலில் அந்த வீராங்கனையிடமிருந்து பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

[3] தில்லியிலுள்ள சில ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, முடிவிற்கு அதிகாரிகள் வந்துள்ளதாகத் தெரிகிறது. நல்லவேளை, அவற்றையும் மாற்றாமல் விட்டுவைத்தார்களே என்று சந்தோஷப்படவேண்டும்.

[4] செஞ்சியில் உள்ள நல்ல முஸ்லிம் அன்பர்கள், இந்த வேலையை முதலில் தடுத்து நிறுத்தவேண்டும். அந்த முஸ்லீமிற்கு தகுந்த அறிவுரைக்கூறி அத்தகைய கலவர வேலைகளை செய்யவேண்டாம் என்று கூறித்தடுக்கப்படவேண்டும்.

[7] அவையெல்லாம் இருந்த நிலையில் தான், கிருத்துவர்கள் அக்கோவில் நிலமே எங்களுடையது என்று கேட்டு, ஒருவருடமாக கோவிலைப் பூட்டிவைத்து புண்ணியத்தைத் தேடிக்கொண்டுள்ளனர். கர்த்தர் அவர்களை நன்றாகவே ஆசிர்வதிக்கக் கூடும்!

[9] உழவாரப்பணிக் குழுக்கள் இங்கு வந்து பணி செய்வதற்கு அதிகமாகவே உள்ளது எனலாம். ஒருவேளை ராமர் கோவில் என்று வரமாட்டார்களா என்று தெரியவில்லை. அப்படியெனில், வைணவர்களும் அத்தகைய பணிக்குழுக்களை ஆரம்பித்து திருப்பணி செய்யவேண்டும்.

[10] இரவோடு இரவாக வந்து, உண்டியலை வைத்து விடுவார்கள்! பிறகு, உள்ளே கட்டிடம் கட்டிக் கொண்டு, திருவண்ணாமலை கோவிலுள் உள்ளதைப் போன்று, “ஃபைவ்-ஸ்டார்” பாணியில் அலுவலகத்தையும் கட்டிக் கொள்வர்கள்!

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

ஓகஸ்ட்15, 2011

திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ  மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது!

 

109 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் மடம்: கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் (1890-1994), சென்ற மடாதிபதி 109 ஆண்டுகள் வாழ்ந்த பெருமைப் பெற்றவர். இதைப் பற்றி யாரும் கவனம் கொண்டதாகத்தெரியவில்லை. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம்.  கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் தோன்றியது இம்மடம். சுமார் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக அது கும்பகோணத்திற்கு மற்றப்பட்டது.  நீலகண்ட சாரங்கதேசிக சுவாமி கடக் மடத்தில் சில வருடங்கள் இருந்தார்[1]. இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன[2].

 

1989லிருந்து இருக்கும் வழக்கு[3]: சாரங்க தேசிகேந்திர மகாசுவாமிகள் மடாதிபதியாக இருக்கும் போது, 1989ல் நிலத்தை விற்றதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 1994ல் சுவாமிகள் தனது 109 வயதில் காலமானார். அப்பொழுது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கை, சிறிய தவறு நிமித்தம் தள்ளுபடி செய்தது. 1989ம் ஆண்டு மறுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது மடாதிபதி அல்லது அவர் தரப்பில், யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் இல்லாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு, முதன்மை துணை நீதிபதியிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், மடத்தின் மடத்தின் தேர் காணப்படவில்லை என்று அறநிலையத்துறை புகார் கொடுத்ததாக போலீஸார் வந்தனர். பூஜை செய்து கொண்டிருந்ததால், மடாதிபதி வரவில்லை. இதனால், உள்பக்கமாக போலீஸார் கதவைப் பூட்டினர். இதிலிருந்தே, எந்த அளவிற்கு, அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர் என்ரு தெரிகிறது. இருப்பினும் சைவர்கள் கூட ஒன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவரவில்லை.

 

வீரசைவ பெரிய மடத்து சுவாமிகள் அரசு நடவடிக்கையை குறைகூறினார்: சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்படி வலுக்கட்டாயமாக, பூஜை செய்து கொண்டிருந்த மடாதிபதியை வெளியேற்றியதற்காக கண்டித்து பேசினார். பூஜை செய்து கொண்டிருக்கும்போதே 15 அதிகாரிகள் உள்ளே நுழைந்து தம்மை வெளியேறுமாறு கட்டளையிட்டனர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நிலம் விற்கப்பட்டுள்ளது என்ரும், அதில் முறைகேடு எதுவும் இல்லையென்றும், மேலும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்ரும் எடுத்துக் கட்டினார்.

நிதி முறைகேடுகள் – அரசு குற்றச்சாட்டு: மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாக அமல்படுத்தப்படவில்லை.

வெளியேற மடாபதிக்கு உத்தரவு: இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.

போர்டு தொங்குகிறது:  தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

நான் பெங்களூர் போறேன்: மடாதிபதி :  மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுத்துக் கொண்டது நியாயமற்ற செயல். என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்? நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார். (வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)

அவராகவே வெளியேறினார்: ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய  மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாக ஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார். அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத், பிஜேபி எதிர்ப்பு: இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார். இல. கணேசன் பிஜேபி தலைவரும் இதே கருத்தைச் சொல்லிருக்கிறார்[4].

வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்: இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார்.  அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

 

இந்து மடங்களுக்கு எதிராக நாத்திக / திராவிட அரசு செயல்பட்டது என்பதுதான் உண்மை: அரசியல் ரீதியில், ஏதாவது ஒரு வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடலாம் அல்லது பொய் வழக்குப் போட்டு உண்மையினை மறைத்து விடலாம் என்ற போக்கு இதில் தெரிந்துள்ளது. 109 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீரசைவ மடாதிபதிக்கு மரியாதை செய்ய, இந்த தமிழகத்திற்கு, திராவிட நாட்டிற்குத் தெரியவில்லை. ஆனால், நேற்று வந்த அதிகாரிகள் அவர் நிலமோசடி செய்து விட்டார் என்று வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், அவரது அடுத்த மடாதிபதியையும் விரட்டியடித்துள்ளனர். இதுதான், தமிழர் பண்பாடு போலும். 1342ம் ஆண்டு, இதேபோல, வீரவல்லாளன்[5], வல்லாள தேவன், பல்லாளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட, திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய, முகமதியர்களின் தாக்குதல்களினின்று தென்னகத்தை, குறிப்பாக தமிழகத்தைக் காத்த, அந்த அரசன் மதுரையில் தோலுரித்து, தனது என்பதாவது வயதில் கொல்லப்பட்டபோது, எந்த வீரம், மானம், சூடு, சொரணையுள்ள மன்னனும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது வீரமுடன் திருவண்ணாமலை கோவிலைக் காத்த அருள்திரு தெய்வசிகாமணி தேசிகர் (1291-1348) தான் மனம் நொந்து வருந்தினார்[6].

 

தமிழர்கள், தமிழ்-இந்துக்கள் விழித்துக் கொள்ளவேண்டும்: இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்பேசும் இந்துக்கள், தமிழகத்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் என்றேகூட சொல்லலாம். இருப்பினும், அவ்வாறு சொன்னால் விழித்துக் கொள்வார்களா என்ற சபலம் தான். சைவமடங்கள் அல்லது வைணவ மடங்கள் எதுவாக இருந்தாலும், இந்து நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு கருணாநிதி-ஜெயலலிதா என்ற தனிமனிதரை நாம் குற்றஞ்சாட்டவில்லை, ஆனால், அவர்கள் தமிழகத்தில் உள்ள எட்டுகோடுக்கும் மேலாக உள்ள இந்துக்களுக்கு எதிராக கடந்த 50-60 ஆண்டுகளாக செயல்பட்டு வௌகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டப்படுகிறது. “ஆட்சியாளர்” என்ற முறையில், இத்தனை கொவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, வெள்ளையெடிக்கப்பட்டது என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கொடுப்பதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏனெனில் அவற்றை மக்களே செய்து கொள்வார்கள். அப்படித்தான் கோவில்கள் வளர்ந்துள்ளன. ஆனால், மடங்களையும், கோவில்களையும், சட்டத்தின் பிடியில் வைத்துக் கொண்டு, சீரழித்து வருவதுதான் திராவிட ஆட்சியின் வேலையாக இருந்ர்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

வேதபிரகாஷ்

15-08-2011


[3] The Hindu, Official takeover Veerasaiva mutt in Kumbakonam, January 19, 2005, http://hindu.com/2005/01/19/stories/2005011908140400.htm

[5] ஹொய்சள அரசன் வீர வல்லாளன் (1291-1342) திருவண்ணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, முகமதியர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் செய்திய மாஒஎரும் வீரன். தனது எண்பதாவது வயதில் முகமதியர் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு, குரூரமாக தோலுரித்து மதுரையில் கொல்லப்பட்டார். இதேபோல 90 வயதில் 1565ல் ராமராயர் போரில் கொல்லப்பட்டார். அப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

[6] அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்சைப் பெற்ற ஆதிசைவ மரபில் தோன்றிய, திருவண்ணாமலை மடத்தை நிறுவிய வீரசைவர் ஆவர். அதாவது உண்மையிலேயே வீரம் மிக்க சைவ மடாதிபதி ஆவர்.