தில்லை நடராஜர் கோவில் கனக சபை நுழைவு போராட்டம், போலீஸார் குவிப்பு, பூணூல் அறுப்பு – கோவில் கையகப் படுத்த முடிவு முதலியன (2)
தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யா வாதத்தில் ஈடுபட்டது; சிதம்பரம்-கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்யும் பிரச்னையில், இரு கோஷ்டியினர் போராட்டம் நடத்தியதால், சிதம்பரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் புகாரின் பேரில், 25ம் தேதி அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யாவிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர். இந்த பெண் அதிகாரியும் திட்டமிட்டு பிரச்சினை பெரிதாக்க, தீக்ஷிதர்களுடன் வாதம் புரிவது ஈடியோ மூலம் தெரிகிறது. ஆனி மஞ்சன விழா நேரத்தில் அமைதியாக, கோவில் இருக்க வேண்டிய நிலையில் இவ்வாறாக, அமைதி குலைந்து, கோவிலில் ஏதோ நடந்து விட்டது போல கூச்சல், குழப்பம், போலீஸார் குவிப்பு என்றிருந்தால், பக்தர்கள் எப்படி மன-அமைதியுடம் சாமி தரிசனம் செய்ய முடியும். சிறுவர் முதலியோர் அச்சப்படவும் நீரிடும். அதனை தொடர்ந்து 26ம் தேதி மாலை தரிசன விழா முடிந்த பின், 100க் கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறையினர் அதிரடியாக கோவிலுக்குள் சென்று, நடராஜர் சன்னதியில் மாட்டப்படிருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கனக சபையுள் நுழைய போராட்டம்: அறநிலையத்துறை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் பொது தீட்சிதர்களிடம் பக்தர்களை கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தீட்சிதர்கள் அதனை ஏற்காமல், நடராஜ சன்னதியின் உள்ள இரண்டு நுழைவு வாயிலையும் மூடினர். இந்நிலையில், கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வேண்டி போலீசில் புகார் அளித்த ராதாகிருஷ்ணன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் நடை கதவை திறக்க கோரி கனகசபை வாயிற்படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கோவிலுக்குள் வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லோருமே இந்துக்கள் என்றால், அவர்களே பேசி, பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும், கனக சபைக்கு செல்வது குறித்து கோவிலுக்குள்ளேயே போராட்டம் நடத்துவது, அமைதி குலைப்பதாகத் தான் இருந்தது.,
இன்னொரு கதவு வழியாக உள்ளே நுழைதல்: பக்தர்கள் ஏறி செல்லும் படி அருகே போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென மற்றொரு கதவு மூலமாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிரடியாக கனகசபை மீது ஏறி சென்று, நடராஜரை தரிசனம் செய்தனர்[1]. இச்சம்பவத்தால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்[2]. இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: .நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர்.
கணேச தீக்ஷிதர் தாக்கப் படுதல்: பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சிதரை அவரது வேட்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர், அத்து மீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சதர் மற்றும் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது: நடராஜர் சன்னதியின் கீழ் பக்கம் உள்ள நுழைவு வாயிலின் ஆறு கால பூஜையின் போது நடக்கும் அபிஷேகத்தை பார்க்கும் இடத்தில் உள்ள கதவை திறந்து கொண்டு, அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அதிரடியாக நுழைந்தனர். பூஜை செய்து கொண்டிருந்த கற்பக கணேச தீட்சதரை தள்ளிவிட்டு அவரது வேஷ்டி, பூணூல் கீழே விழும் வகையில் தள்ளி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இது போல் செய்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது. தமிழக முதல்வர் அத்துமீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்பது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மறுத்தது: இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், “தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் அமைதியான முறையில் கனகசபையில் ஏறி வழிபாடு செய்துவிட்டு உடனே கீழே இறங்கிவிட்டனர்[3]. அப்போது தீட்சிதர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர்[4]. காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினரின் விரல் கூட தீட்சிதர்கள் மீது படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது[5]. தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன.‘கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறக்கூடாது’ என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால், தீட்டு என கருதி[6], அந்த தீட்சிதர் அணிந்திருந்த உடைகளை மாற்றிவிட்டு, புது துணியை போட்டுக் கொண்டு, மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை,” என்று கூறினர்[7].
ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்: முன்னதாக சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொந்த நிறுவனமாக நினைக்கின்றனர். ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். “ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்பதிலும் ஏதோ பொடி வைத்துப் பேசியுள்ளது தெரிகிறது, என்ன ஆவணங்கள் தயாரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆக இவர் எப்படி கோவிலை கையகப் படுத்தாலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. மற்ற விவரங்களைப் பற்றி கண்டுகொள்ளாதது கவனிக்கத் தக்கது.
© வேதபிரகாஷ்
04-07-2023
[1] தினமலர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு கோஷ்டி போராட்டத்தால் பரபரப்பு,பதிவு செய்த நாள்: ஜூன் 28,2023 04:02; https://m.dinamalar.com/detail.php?id=3360242
[2] https://m.dinamalar.com/detail.php?id=3360242
[3] https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/chidambaram-nataraja-temple-deekshithar-attack-poonal-is-cut-rx02m2
[4] சிதம்பரம் கனகசபை விவகாரம்: தீட்சிதரின் பூணூல் அறுப்பு? அறநிலையத் துறை மறுப்பு, Written by WebDesk, June 29, 2023 09:40 IST.
[5] https://tamil.indianexpress.com/tamilnadu/chidambaram-dikshitharas-accused-officials-allegadely-cutting-poonool-sacred-threat-709568/
[6] விகடன், கனகசபை விவகாரம்: மறுக்கும் சிதம்பரம் தீட்சிதர்கள் – அரசு ‘நிதானம்’ காட்டுகிறதா?!, லெ. ராம்சங்கர், Published:26 Jun 2023 4 PMUpdated:26 Jun 2023 4 PM
[7] https://www.vikatan.com/government-and-politics/governance/chidambaram-temple-issue-why-government-is-showing-restraint