Archive for the ‘ஆரியன்’ Category

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

ஒக்ரோபர்17, 2023

பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா, அழிப்பு திட்டமா?

பிள்ளையார் சிலை உடைப்பு முதல், “சனாதன ஒழிப்பு” மாநாடு வரை: பிள்ளையார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப் பட்டிருக்கின்றன; ராமர் படங்களுக்கு செருப்பு மாலைகள் பாடப் பட்டிருக்கின்றன; சிவ-முருக தூஷ்ணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; திக வகையறாக்களின் இந்துவிரோத வெறுப்பு-காழ்ப்பு பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்கின்றன; கருப்புப் பரிவார் கும்பலில் திக-திமுக என்று எல்லா கோஷ்டிகளும் ஒன்றாகத் தான் வேலை செய்து வருகின்றன. அதில் கிருத்துவ-துலுக்க-கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளும் அடக்கம், அது தான், இப்பொழுதைய “சனாதன ஒழிப்பு” மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது, இவர்களது குரூர முகம் இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது. பிள்ளையார் சிலை உடைப்பு, சனாதன ஒழிப்பு, நவராத்திரி விழா துவக்கம் – திராவிட ஆட்சியில், திராவிட ஸ்டாக்குகளின், திராவிட மாடலா அழிப்பு திட்டமா? இப்படியெல்லாம் ஒரு அப்பாவியான, சாதுவான, பயந்தாங்கொள்ளி இந்துக்களுக்கு சந்தேகம் வருகிறது!

திமுக ஆட்சியில் நவராத்திரி கொலு நடப்பது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது[1]. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 14-10-2023 அன்று தொடங்கியது[2]. ஹிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறை, அதன் மந்திரி மற்ற அதிகாரிகள் அதிகமாகவே செயல்படுவது போல காண்பித்துக் கொல்கிறார்கள். முதல்வர் வழக்கம் போல பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத பாணியில் கிருத்துவ-முஸ்லிம் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலையில், மகன் சமீபத்தில் “சனாதனத்தை ஒழிப்போம்,” என்று பேசி மாட்டிக் கொண்டுள்ளார். வழக்குகளும் நிலுவையில் உளளது. இந்து அறநிலையத் துறைறாமைச்சர் சேகர் பாபு, “அல்லேலூயா” என்று கோஷம் எல்லாம் போட்டுள்ளதை மக்கள் அரிவர். இப்பொழுது, நவராத்திரி கொலு என்று அதிலும் இந்த திராவிடக் கூட்டத்தினர் நுழைந்துள்ளனர்ர்.

இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இப்படி ஊடகங்கள் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இதைப் பற்றி இவர்கள் சொல்லித் தானா தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அவை-அவர்கள் இல்லாத காலங்களில் மக்களால் கொண்டாடப் பட்டு வந்த விழாக்கள்-பண்டிகைகள் இவை. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்[3]. அவருடன் அவரது உறவினரும் வந்திருந்தனர்[4]. சந்நிதி-சந்ந்தியாக எல்வதும், சாமி கும்பிடுவதும், அர்ச்சகர் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதும், அதனை அவர் பவ்யமாக வாங்கிக் கொள்வதும்……..வீடியோக்களில் பதிவாகியுள்ளன. தலையில் தெளித்துக் கொண்டு, பரவசமாக கைகூப்பிக்கும்பிடுவதும் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அந்த அம்மணி செய்வதை எதிர்க்கவில்லை என்றாலும், அவரது கணவரின் இந்துவிரோதம் மற்றும் அந்த அமைச்சர் முதலிய கும்பலுடன் செய்வது நிச்சயமாக இந்துக்களுக்கு எதையோ உண்டாக்குகிறது. கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்டார்[5]. பிறகு, மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்[6]. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுய-விளம்பரம் ஏன் என்று புரியவில்லை.

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது[7]. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்[8]. இதில் திருமகள் ஏற்கெனவே கைதாகியுள்ளார். மற்ற அறந் இலைத் துறை அதிகாரிகளின் மீதும் ஊழல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் அத்தகைய அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வதும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் அவர்களுக்கே மனசாட்சி இருக்க வேண்டும்.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது[9]. இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது[10]. ‘சக்தி கொலு’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்[11]. நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது[12]. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம். நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்ற்கெல்லாம் செலவு எப்படி, யார் செய்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. 

ஒரு இந்துவின் பணிவான வேண்டுகோள்!!!: கடந்த 70-100 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட, திராவிடத்துவ, ஈவேராயிஸ, பெரியாரிஸ, பகுத்தறிவு, நாத்திக, இந்துவிரோத பேச்சுகள், எழுத்துகள், கோஷங்கள், தாக்குதல், என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் எந்த இந்துவும் இதைப் பார்த்து, மகிழ்சியடைய மாட்டான்,  மாறாக, ஒருவேளை பயப்படலாம்! சனாத ஒழிப்பு கோஷங்களுக்குப்பிறகு, இவ்வாறு நடப்பது, இந்துக்களுக்கு அந்தேகமும், அச்சமும் ஏற்படுகிறது. இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்து வரும் இவர்கள், விலகி இருப்பதே சாலச் சிறந்தது! கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாம்!! இந்து அறநிலையத்துறை என்று கூடக் குறிப்பிடத் தயங்கும் நிலையிலுள்ள, ஏற்கெனவே ஊழல் புகார், வழக்குகளில் சிக்கியவர்கள், .தார்மீக ரீதியில், இத்தகைய புனித பண்டிகைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலே
இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

16-10-2023


[1] தினத்தந்தி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா, தினத்தந்தி அக்டோபர் 16, 9:55 am.

[2] https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-kapaleeswarar-temple-mylapore-1073802

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மயிலாப்பூரில் அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி கொலு: தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின், WebDesk, Oct 16, 2023 12:11 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-durga-stalin-inaugurates-navratri-golu-festival-1559174

[5] தினமலர், பெண்கள், பள்ளி மாணவர்களை கவர்ந்த நவராத்திரி கொலு, மாற்றம் செய்த நாள்: அக் 16,2023 01:50…; https://m.dinamalar.com/detail.php?id=3458514

[6] https://m.dinamalar.com/detail.php?id=3458514

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின், By Jeyalakshmi C Updated: Monday, October 16, 2023, 8:38 [IST].

[8] https://tamil.oneindia.com/spirtuality/navaratri-kolu-at-raj-bhavan-laxmi-ravi-performed-navaratri-puja-durga-stalin-lighting-the-lamp-at-m-548553.html?story=2

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மயிலாப்பூரில் நவராத்திரி கோலாகலம்.. 10 நாட்கள் கொலு வைத்து கொண்டாடும் இந்து சமய அறநிலையத்துறை, By Jeyalakshmi C Updated: Sunday, October 15, 2023, 14:56 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/10-days-navratri-festival-organized-by-hindu-religious-charities-department-in-mylapore-says-ministe-548393.html

[11] குற்றம்.குற்றமே, நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!, Web Desk, October 16, 2023 .

[12]  https://www.kuttramkuttrame.com/2023/10/16/chief-ministers-wife-durga-stalin-started-the-navratri-festival/

ஶ்ரீபத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப் பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (2)

ஏப்ரல்3, 2023

ஶ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டதும், கும்பாபிஷேகம் நடந்ததும் – 2023ல் பகுத்தறிவு மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதிசயம்! (2)

17-03-2923 – காஞ்சனா மனநிறைவுடன் கூறியது: காஞ்சனா, கும்பாபிஷேகம் நடந்த பிறகு[1], “அந்த காலத்தில் நான் பிரபல நடிகையாக இருந்தாலும் அவருடன் நானும் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். என் தங்கை கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். சில காரணங்களால் பெற்றோர், எனக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் சொத்துக்கள் எல்லாம் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டது. நான் சம்பாதித்த சொத்துக்கள் கூட பறிபோகும் நிலை வந்தது. இந்த சூழலில்தான் தி.நகர் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைக்க நான், என் தங்கை, மைத்துனர் மூவரும் ஒருமனதாக தீர்மானித்து கோவிலுக்கு தானமாக வழங்கினோம். தற்போது அந்த இடத்தில்  பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்களின் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது. என்னை ஒவ்வொரு நொடியும் பெருமாள்தான காப்பாற்றி வருகிறார். வாழ்நாள் முழுவதும் அவர் நினைவு ஒன்றே போதும்…,” இவ்வாறு கூறினார்[2].

காஞ்சனா ஏன் நிலத்தை தானமாகக் கொடுத்தார்?: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திருமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலான வெங்கடேஸ்வராவை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர்[3]. காஞ்சனாவும் அவரது சகோதரி கிரிஜா பாண்டேவும் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை TTD நிர்வாக அதிகாரி I.Y.R-யிடம் ஒப்படைத்ததாக கோயில் வட்டாரங்கள் PTI இடம் தெரிவித்தன[4].. நிலமும் அதில் உள்ள ஒரு பழைய அமைப்பும் ஜி.என். சென்னையில் உள்ள செட்டி தெருவில் உள்ள அந்த இடத்தில் கல்யாண மண்டபம்/திருமண மண்டபம் கட்ட TTDயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன[5]. ஆனால், காஞ்சனா எப்படி திடீரென இறைவனின் இருப்பிடத்திற்கு ஒரு பெரிய காணிக்கையை அளித்தார் என்பது மர்மமாகவே உள்ளது. நடிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்ததை நினைவுகூரலாம், மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் அவரை வெளியேற்றியதால் அவருக்கு வீடு இல்லை என்று செய்திகள் வந்தன. டிடிடிகளின் இணைச் செயல் அலுவலர் டாக்டர் என்.யுவராஜ், எஸ்டேட் அலுவலர் ஸ்ரீ சேஷய்யா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்[6].வழக்கைத் தாக்கல் செய்யும் போது அவருக்கு வயது 41 மற்றும் வழக்கில் வெற்றி பெறும் போது 72 வயது. சொத்து அவர்களின் பெற்றோரால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது, பின்னர், அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் உயில் செல்லாது, அது சட்டப்பூர்வ வாரிசுகளான காஞ்சனா மற்றும் அவரது சகோதரிக்கு வந்தது. இந்த 31 ஆண்டுகளில், இது பலரால் கைப்பற்றப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, சகோதரிகள் வழக்கை வென்றனர், அவர்கள் அதை TTDக்கு நன்கொடையாக வழங்கினர்.

2012 முதல் 2018 வரை ஆக்கிரமிப்பில் இருந்தது: காஞ்சனாவும், கிரிஜா பாண்டேவும் அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்வாமி அறக்கட்டளைக்கு வாடகைக்கு விட்டபோது, 11.7.2012 தேதியிட்ட குத்தகைப் பத்திரத்தை, குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தினசரி பூஜை செய்யும் பூசாரி, அந்த குடியிருப்பில் குடியிருந்ததாகவும் தெரிகிறது. , இது சுமார் 600 சதுர அடி அளவிலான ஒற்றை படுக்கையறை பிளாட் ஆகும். அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் குடியிருப்பில் இருப்பதாக அறக்கட்டளை பத்திரம் காட்டினாலும், அந்த குடியிருப்பை குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு வைத்தது போல் எடுக்க முடியாது. இதனால், அந்த இடம் 11-07-2012 மற்றும் 10-04-2018 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த அறக்கட்டளையால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது[7].

இந்நிலம் ஆக்கிரமிப்பு பற்றிய சரிபார்க்க முடியாத செவிவழி கதைகள்: ஆக்கிரமிப்பு பற்றி சொல்லப் படும் செவிவழி செய்திகள், இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனனில் அவையெல்லாம் மறைக்கப் பட்டு விட்டன போலிருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள் மற்றவர் இத்தகைய கதைகளை அளந்து விடுகிறார்கள்……………நாயுடு டீக்கடை வைத்திருந்தார்……….சசிகலா கூட்டம் அபகரித்துக் கொண்டது……….மூவேந்தர் கட்சி, சேதுராமன் அபகரித்து (மீனாக்ஷி மருத்துவமனை, காஞ்சிபுரம்), மீனாக்ஷி ஹோடல் கட்டினார்……………முன்பே கோவில் இருந்தது…………பிறகு நீதிமன்ற ஆணை மூலம் அது இடிக்கப் பட்டது. இருப்பினும், மீனாட்சி பவன், மற்றும் சம்பந்தப் பட்ட கம்பெனிகள் அவ்விடத்தில் இருந்திருக்கின்றன[8]. ஜூலை 3ம்தேதி, 2011 அன்று, “பொன்னியின் செல்வன்” கூட்டமும் நடந்திருக்கிறடது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம். இது பற்றியும் ஒரு வழக்கு உள்ளது. காஞ்சனா போன்ற நிலை அவருக்கு ஏற்பட்டது போலிருக்கிறது. தியாகராயநகர் தான் சம்பந்தப் படுகிறது.

சேதுராமன் குடும்பம் சம்பந்தப்பட்ட நிலவழக்கு: மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எஸ்.ஆர்.டிரஸ்ட் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக டாக்டர் சேதுராமன் இருந்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மகளும், ரமேஷ், குருசங்கர் ஆகிய மகன்களும் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் டாக்டர் சேதுராமனின் இளைய மகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையின் துணை தலைவராகவும், எஸ்.ஆர் டிரஸ்டின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில், அவர்களது குடும்ப பிரச்சினை தொடர்பாக டாக்டர் சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்பசாய்ராம் ஆகியோர் டாக்டர் சேதுராமனின் கையெழுத்தை தாங்களாகவே போட்டு ஒரு போலி பத்திரத்தை தயார் செய்து பின்பு, அதனை சென்னை தியாகராயநகரில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது[9]. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் சேதுராமன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார்[10]. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை போலீசார், டாக்டர் சேதுராமனின் கையெழுத்து உண்மைதானா என்பதை கண்டறிய அந்த கையெழுத்தை தடய அறிவியல் துறைக்கு பத்திரத்துடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கையெழுத்து போலி என தடய அறிவியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, மகன் ரமேஷ், மகள் பிரதீபா, மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி போலியாக கையெழுத்திட்ட சேதுராமனின் மூத்த மகன் ரமேஷ், மகள் பிரதீபா மற்றும் மருமகன் மாரியப்ப சாய்ராம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் ஒரு திருப்பமாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், டாக்டர் சேதுராமனின் இளையமகன் டாக்டர் குருசங்கர் மருத்துவமனையை நிர்வகிக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்பிடதக்கது.

கோவில் நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்பு முதலியவை தடுக்கப் படுமா அல்லது தொடருமா?: எது எப்படியாகிலும், சமீப காலங்களிலும் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளிக்கும் சேவை தொடர்கிறது. முன்பு கல்வெட்டுகளில் பதிவாகி, பிறகு முகமதியர், கிருத்துவர், விடுதலைக்குப் பிறகு பகுத்தறிவு பெரியாரிஸ்ட், அண்ணாயிஸ நாத்திகர் போன்றோர் ஆக்கிரமிப்புகளையும் கடந்து இருக்கும் நிலங்கள் முறையாகப் பயன்படுத்தினால், அந்நிலங்கள் மூலம் வருவாயும் கிடைக்கும், கோடிக்கணக்கில் மக்கள் பயனடைவ்வார்கள். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்ல்லாம் பேசும் அரசியல்வாதிகள் இவ்விசயத்தைப் பற்றி பேசுவதில்லை. அதாவாது, எங்கெல்லாம் பெரும்பான்மையில் நன்மை பொது மக்களுக்குச் சென்றடையுமே, அங்கெல்லாம் அவர்கள் மட்டும் பலனடைய வேண்டு, சம்பாதிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையில் நடிகை காஞ்சனாவாக இருந்தாலும், ஓய்வு பெற்ற கர்நாடக முதன்மை செயலாளருமான கிரிஜா பாண்டேயாக இருந்தாலும், நீதி மன்றங்களில் போராடத்தான் வேண்டியிருக்கும் போலிருக்கிறது!

© வேதபிரகாஷ்

03-4-2023


[1] பத்திரிக்கை.காம், எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது! பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகை காஞ்சனா உருக்கம், MAR 18, 2023

[2] https://patrikai.com/my-birth-has-come-to-an-end-said-actress-kanchana-at-padmavathi-mother-temple-kumbabishekam/

[3]  Indian Express, Kanchana donates Rs 15 cr land to Tirumala Tirupati Devasthanam, Written by Agencies, Tirupati | First published on: 26-10-2010 at 12:11 IST; October 26, 2010 12:11 IST.

[4]https://indianexpress.com/article/india/india-others/kanchana-donates-rs-15-cr-land-to-tirumala-tirupati-devasthanam/

[5] Times of India, Actor Kanchana donates Rs 15 cr worth land to TTD, TNN / Oct 26, 2010, 03:54 IST.

[6] TTD.News, Donation of land to TTD by Smt. Girija Pandey and Ms Kanchana,

[7] Madras High Court – Mrs.Girija Pandey vs The Commissioner on 10 April, 2018

 In the High Court of Judicature at Madras Dated :  10.4.2018; Coram :

The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM

Writ Petition Nos.7847 & 7848 of 2018 & WMP.Nos.9791 to 9794 of 2018

1. Mrs.Girija Pandey

2. Ms.Vasundhara Devi (a) Kanchana                                                      …Petitioners

Vs

1.The Commissioner, Corporation    of Greater Chennai, Ripon Buildings,    Chennai-3.

2.The Assistant Revenue Officer,     Zone-9, Corporation of Greater    Chennai, No.1, Lake Area, 4th Cross Street, Nungambakkam, Chennai-34.                                    …Respondents

https://indiankanoon.org/doc/39110800/

[8] MEENAKSHI BHAWAN at 44/1 GN Chetty Road, T. Nagar, The Place is located between the Jain Temple and Residency Towers in GN Chetty Road. 3rd July 2011, 28155155

MEENAKSHI HOTELS & ENTERTAINMENT PRIVATE LIMITED’s Corporate Identification Number (CIN) is U55101TN1992PTC022336.- Nalliah Servai Sethuraman and Ramesh Sethuraman – Directors.

Smile Amusement & Hospitality private limited was at the first floor; directors are – Sethuraman Gurushankar, Chandrasekharan Kamini and Nalliah Servai Sethuraman.

[9] தமிழ்.ஒன்.இந்தியா, டாக்டர் சேதுராமனின் மூத்த மகன், மகள், மருமகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!, By Jayachitra Updated: Friday, June 28, 2013, 17:55 [IST]

[10] https://tamil.oneindia.com/news/2013/06/28/tamilnadu-arrest-warrant-son-madurai-meenakshi-hospital-owner-178070.html?story=1

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!

அறநிலையத்துறையில் அதீத ஈடுபாடு கொள்ளும் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –

  • இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
  • தலபுராணங்கள்,
  • கோவில் தொடர்பான ஆகமங்கள் –
  • ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
  • பழமையான அரிய நூல்கள்,
  • கோவில் கட்டிடக்கலை,
  • செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
  • கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
  • அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.

ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….

செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….

நாத்திகபெரியாரிஸ, திராவிடயன் ஸ்டாக் ஸ்டாலின் இப்புத்தகங்களை வெளியிடும் ரகசியம், அர்த்தம் அல்லது தேவை என்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].

ஓலைச் சுவடிகள்கண்டறியப் பட்டனவாஅல்லது ஏற்கெனவே இருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] தினத்தந்தி, 108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், தினத்தந்தி ஜனவரி 20, 5:43 am

[2] https://www.dailythanthi.com/News/State/108-bhakti-texts-reprinted-with-new-editions-published-by-prime-minister-mkstalin-882191

[3] மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm

[4] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-released-108-rare-devotional-books-562418

மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

[5] தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/chief-minister-mkstalin-released-108-rare-devotional-texts-which-have-been-reprinted-881552

[7] தினத்தந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு. ஸ்டாலின், By தந்தி டிவி, 19 ஜனவரி 2023 1:49 PM

[8] https://www.thanthitv.com/latest-news/cm-stalin-released-108-devotional-books-on-the-behalf-of-hindu-religious-endowments-department-162790

[9] தினமலர், 108 பக்தி நுால்கள் வெளியீடு Added : ஜன 20, 2023 00:19 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3221907

[11] தமிழ்.இந்து, புதுப்பொலிவுடன் 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், செய்திப்பிரிவு, Published : 20 Jan 2023 05:49 AM, Last Updated : 20 Jan 2023 05:49 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/931352-108-rare-bhakti-books-with-new-editions.html

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்து வ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! (1)

திசெம்பர்9, 2022

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்துவ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! (1)

திமுக ஆட்சிக்கு வருதல், இந்து அறநிலையத் துறையில் திராவிடத்துவவாதிகளின் தலையீடு அதிகமாதல்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறையில் திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள் முதலியோர்களின் நுழைவு, மூக்கு நுழைப்பு முதலியன அதிகமாகிக் கொண்டு வருகின்றது. “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை” என்று ஆரம்பித்து, தினசரி நடக்கும் பூஜைகள், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றுள் தலையிட ஆரம்பித்துள்ளனர். நீதிமன்றங்களில் பல வழக்குகளில் சிக்கியுள்ள நிலைகளில், அவற்றை நீர்க்க, பர்பல வழிகளில் வேறு விதமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தான், கோவில்கள் பற்றி ஸ்டாலினே பேசி வருவதும் தெரிகிறது. இல்லையெனில் இவர்களுக்ககிதைப் பற்றிப் பேச வேண்டிய தேவை-அவசியம் இல்லை. இந்து அறநிலையத் துறை, அரசு முதலியவற்றின் ஆதரவு, நிதியுதவி போன்றவை இல்லாமல் இருந்தாலும், பக்தர்களின் உதவியுடன் பல காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால், இப்பொழுது, எல்லாவற்றிற்கும் அரசு அனுமதி தேவை, எல்லாமே, முதலமைச்சர் உத்தரவுடன் நடக்கின்றன, இந்து அறநிலையத் துறை அமைச்சரின் தயவில் நடக்கின்றன என்பது போலக் காட்டிக் கொண்டு, விளம்பரம் தேடும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றன.

கோவில் பாதுகாப்பு ஆர்வலர்கள் வழக்குத் தொடுத்தல்: இந்து அறநிலையத் துறை சார்பில்பல குழுக்கள் உருவாக்கப் பட்டு, அவற்றில், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்று இந்துவிரோதிகளும் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். இவ்விசயம் தெரிய வரும் பொழுது, பக்தர்கள் சங்கடமடைகிறார்கள். அத்தகைய நுழைவுகள், சதாய்ப்புகள், அத்துமீறல்கள் எப்படி, ஏன் நடக்கின்றன என்பது திகைப்பாக இருக்கின்றன. எடுத்துக் காட்டும் போது, அரசியல் மயமாக்குகிறார்கள், கம்யூனலிஸமாக்குகிறர்கள், காவிமயம் ஆக்குகிறார்கள் என்றெல்லாம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பிவருகிறார்கள். அந்நிலையில், ஆலயங்கள் சம்பந்தப் பட்ட திருப்பணிகள், சேவைகள், கிரியைகள் முதலியவற்றில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு வருவதால், பக்தர்களுக்கு சந்தேகங்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், “ஆலயம் காப்போம்” போன்ற இயக்கங்களின் சார்பாக, சட்டப்படி செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட அறநிலையத்துறையின் சுற்றறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்[1]. இதுகுறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை[2]:

  1. கோயில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் மற்றும் கோயிலின் பெயர், இறைவன் – இறைவியர் பெயர்,
  2. சைவக் கோயில் எனில் பாடல் பெற்ற கோயிலா, வைப்புத்தலம் பாடிய நாயன்மார்கள் பெயர்/பெயர்கள் யாவை.
  3. கோயில் வைணவக் கோயில் எனில் மங்களாசாசனம் பெற்ற கோயிலா. பாடிய ஆழ்வார்கள் பெயர்கள் யாவை.
  4. கோயில் முருகன் கோயிலா, படைவீட்டில் ஒன்றா திருப்புகழ், பிள்ளைத்தமிழ் போன்ற பாடல்கள்  பாடப்பெற்ற கோயிலா.
  5. கல்வெட்டுச் சான்றுகள் உள்ளனவா. கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது. வரலாற்றுக்கு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா.
  6. கோயில் வழிபாடு எந்த ஆகமத்தின்படி நடைபெறுகிறது. கட்டுமான ஆகமம் எதுவோ அதே ஆகமப்படி தான் வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா.
  7. கோயில் வழிபாடு குறிப்பிட்ட ஆகமப்படி நடைபெறவில்லை என்றால், வேறு ஏதேனும் ஆகமபந்ததியில் நடைபெறுகிறதா. 
  8. கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது? என்றால் எந்த நாளிலிருந்து எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன. அது எதில் தொடங்கி எதில் முடிகிறது.
  9. கோயிலில் தேவியுடன் சுவாமியா அல்லது, பிராட்டிக்குத் தனி சந்நிதி உள்ளதா.
  10. கோயிலில் பாஞ்சராத்ரப்படி பரம் வியூகம், விபவம், அந்தர்யாமித்யம், அரிச்சை ஆகிய இவ்வகை வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா.
  11. கோயில் வடகலையைச் சேர்ந்ததா அல்லது தென்கலையைச் சேர்ந்ததா.
  12. கோயில் வழிபாட்டில் மந்திராசனம், ஸ்நானாசனம், அலங்காராசனம். போசன ஆசனம். புனரி மந்த்ராசனம், பரியங்காசனம் ஆகிய ஆறு ஆசனங்களும் கற்பிக்கப்பட்டு முறைப்படி வழிபாடு நடைபெறுகிறதா.
  13. கோயில் அர்ச்சகர்கள் ஆகமப்படி தாபம் என்கிற வகை தீக்கையால் தோளில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டவர்களா.
  14. எவ்வகைத் தீக்கை பெற்றவர்கள்.  கோயில் அகோபில மடத்தைச் சார்ந்ததா ஜீயர் மடத்தைச் சார்ந்ததா. மார்கழி மாதம் முன்பத்து, பின்பத்து விழா கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும்[3].  

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது[4].

60-70 திராவிடத்துவ ஆட்சி காலத்தில் ஒன்றும் செய்யாமல் 2022ல் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?: ஏதோ இவற்றையெல்லாம் இப்பொழுது தான் புதியதாக அறியப் பட்டவை போல, கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன். உண்மையில், ஆகமங்களின் படி, ஆகம விதிமுறைகளின் படி கட்டப் பட்ட கோவில்களின் நிலை இப்பொழுது ஏன், இவ்வாறு இருக்கின்றன; நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கோவில்கள் ஏன் சிதிலமடைந்து கிடக்கின்றன; கடந்த 60-70 திராவிடத்துவ ஆட்சிகாலத்தில் ஏன் கண்டு கொள்லாவில்லை; நடந்து கொண்டிருந்த பல கிரியைகள், சடங்குகள், பூஜைகள், விழாக்கள் ஏன் நடைபெறாமல் இருக்கின்றன, இப்பொழுது 2022ல் ஏன் இத்தனை கேள்விகளை எழுப்ப வேண்டும், இதன் பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ந்தல், அவர்களது, இந்துவிரோதம் தான் வெளிப்படும். அதை மறைக்கத்தான், இத்தனை வேடம் போட்டு, கோவில்களைப் பற்றி பேசி வருகின்றனர்.

சத்தியவேல் முருகன் மேற்குறிப்பிட்டவை உட்பட, 50 கேள்விகள் தயாரித்ததாகத் தெரிகிறது: கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[5]. தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது[6]. இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு  நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது[7]. இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் மேற்குறிப்பிட்டவை உட்பட, 50 கேள்விகள் தயாரித்ததாகத் தெரிகிறது. தயாரித்த கேள்விளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட நவ.4-ம் தேதியிட்ட சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

08-12-2022


[1] தினகரன், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?: அறிக்கை அளிக்க ஆணையர் குமரகுருபரன் உத்தரவு, 2022-11-28@ 00:48:21

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=817892

[3] தமிழ்.நியூஸ்.18, தமிழகத்தில் கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, NEWS18 TAMIL, LAST UPDATED : NOVEMBER 24, 2022, 14:04 IST, Published by: Vaijayanthi S, First published: November 24, 2022, 14:04 IST.

[4] https://tamil.news18.com/news/spiritual/what-are-the-agamas-followed-in-temples-order-to-file-report-hrnc-843488.html

[5] காமதேனு, ஆகமம் கண்டறிவது தொடர்பான 50 கேள்விகள்: அறநிலையத் துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத்தடை, Updated on : 8 Dec, 2022, 2:13 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/hc-orders-interim-stay-on-circular-issued-by-hindu-religious-charities-department-to-locate-temple-agama

[7] தமிழ்.இந்து, 50 கேள்விகளுடன் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 Dec 2022 03:09 PM; Last Updated : 08 Dec 2022 03:09 PM.

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

தொல்லியல்  துறை நிர்வாகம் சிறப்பாக இருக்குமா?: ”அப்படியும் சொல்ல முடியாது. முன்பெல்லாம் தொல்லியல் துறையில் உள்ள அனுபவம் மிக்க நிபுணர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வேலைகளும் நிதானமாக நடந்தது. ஆனால், தற்போது கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.  ஒதுக்கப்படும் நிதியை, நடப்பு நிதியாண்டுக்குள் செலவழித்து விடவேண்டும் என்பதற்காக வேகவேகமாக வேலை செய்து கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சை பெரியகோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான ஒப்பந்தம் ஆந்திராவில் உள்ள கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ராஜராஜசோழனுடைய நான்கு கல்வெட்டுத் தூண்களை உடைத்துவிட்டனர். இதற்கான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. 

முஸ்லிம்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்: 16 -ம் நூற்றாண்டில், வடஇந்தியாவில் இருந்து படையெடுத்து வந்து நம் கோயில்கள் பலவற்றை இடித்தனர். நம் வரலாறுகளை அழித்தனர். அவர்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்.  நம்முடைய வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவற்றின் நிதர்சனமான சாட்சியங்களாகவும், காப்பகங்களாகவும் திகழும் ஆலயங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் நம் கோயில்களைப் பாதுகாத்து நம் சந்ததியினருக்கும் விட்டுவைக்க முடியும். நம் கலை, கலாசாரம், தொன்மைப் பண்பாடு போன்றவை காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யமுடியும்” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

2019ல் விடுத்த பக்தர்களின் கோரிக்கை: நாகநாதசுவாமி கோயிலில் பழமைமாறாமல் திருப்பணி செய்ய தமிழக தொல்லியல் துறையும், அறநிலையத்துறையும் முடிவு செய்து அதற்கான பணிகளை 2015ம் ஆண்டு ரூ.35 லட்சத்தில் துவங்கியது. விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சை சாலையை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் பணியை துவங்கும்போது இந்த கோயில் சாலையில் இடையூறாக உள்ளதால் இடிக்க வேண்டுமென அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்[1]. அப்போது பழமையான கோயிலை இடிக்காமல் பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசிடம் வரலாற்று ஆய்வாளர்கள், சிவனடியார்கள் முறையிட்டனர். ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளனர். கோயில் திருப்பணியை விரைவில் துவங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்[2]. இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் தலைவர் திருவடிகுடில் சுவாமிகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது[3]: “…………இந்த இடம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், இடையூறாக உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தப்போவதாகவும் அறிகிறோம்.………………… கடந்த முறை இந்த சாலை அகலப்படுத்தப்பட்ட போதும் இதுபோன்ற வகையில் ஏற்கெனவே இருந்த பழமையான மதில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. சாலை ஒப்பந்ததாரர்கள் தான் தனது சொந்த செலவில் மீண்டும் புதிதாக வடக்குப் பகுதி மதிலை கட்டிக் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் மதில் இடிக்கப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக யாரும் தடுக்க முடியாமல் போய்விட்டது. ……… சுமார் 1000 ஆண்டுகளை கடந்தும், நமது பாரம்பரியத்தை பறைசாற்றியும் கல்வெட்டுகளால் பழம்பெருமைமிக்க வரலாறுகளையும் சான்றுகளுடனம் உள்ள இக்கோவிலை பாதுகாக்க வேண்டும் ……………….”  என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

2021ல் பக்தர்களின் கோரிக்கை:  இந்த கோவிலை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மகாமக திருவிழாவின்போது கருங்கற்களை பிரித்தனர்[5]. ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிலைகளை தொல்லியல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து தனிகொட்டகை அமைத்து அங்கு பாதுகாப்பாக வைத்தனர்[6]. அதன் பின்னர் கோவிலில் திருப்பணிகள் செய்ய தொடங்கினர். ஆனால் சில வாரங்களிலேயே அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த கோவில் தற்போது செடி, கொடிகள் மண்டி, புற்கள் முளைத்து புதர்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலில் கோபுரம் மற்றும் மதில் சுவர்களில் செடிகள், மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து பல்வேறு ஆண்டுகள் ஆனதால் திருப்பணி வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த பணிகள் தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் நடைபெற வேண்டும். முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர் திருப்பணி வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் தெரிவித்தனர். உடனடியாக இந்த கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை பாதுகாத்து, வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2014லிருந்து இக்கோவிலில் நடந்தவை[7]: பின்னர், இந்த ஆலயம் அரசு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது என்று பக்தர்கள் மன்றமான ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சுட்டிக்காட்டினார்[8]. இதையடுத்து, சுமார் ₹32 லட்சம் செலவில் கோயிலை புதுப்பிக்க மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கியது மற்றும் HR&CE துறை பணியை மேற்கொண்டது. “2014ல் பாலாலயம் நடத்தப்பட்டு, தெய்வ விக்கிரங்ங்கள் தற்காலிகக் கொட்டகைக்கு மாற்றப்பட்டு, புதுப்பித்தல் தொடங்கியது. ஆனால் ஒப்பந்ததாரருக்கு தேவையான நிபுணத்துவம் இல்லாததால், கோவில் கிட்டத்தட்ட இடிக்கப்பட்டது. அகற்றப்பட்ட கற்களுக்கு சரியான எண்கள் போடப்படவில்லை. அவை சிதறிக் கிடக்கின்றன,” என்று சுவாமிகள் கூறுகிறார். “கோயிலை ஆய்வு செய்த யுனெஸ்கோ குழுவினர் பணியின் மீது அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், 2016 ஆம் ஆண்டு மாநிலத்தில் உள்ள கோவில்களை சீரமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் நிபுணர் குழுவின் வழிகாட்டுதலுடன் கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே. சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இந்தக் கோயிலில் தமிழ்க் கூத்துக்கான தனித்துவம் உட்பட பழமையான கல்வெட்டுகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். சமீபத்தில் திருவடிக்குடில் சுவாமிகள் கேட்ட கேள்விக்கு, கும்பகோணத்தில் உள்ள மனிதவள HR& CE துறை, யுனெஸ்கோ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தொல்லியல் துறை மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. “நாங்கள் சமீபத்தில் கோவிலை சீரமைக்க கோரி நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டினோம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு கூட திட்டமிட்டோம், ஆனால் தொற்றுநோய் காரணமாக அதை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. புதிய அரசாங்கத்தின் மாநில பட்ஜெட்டில் கணிசமான ஒதுக்கீட்டைப் பெற்ற தொல்லியல் துறை, இந்த பழமையான கோவிலை பாதுகாக்க விரைவில் புதுப்பிக்கும் என்று நம்புகிறோம்,” என்று சுவாமிகள் கூறினார்.

2002 வரை இக்கோவில் விவகாரம் மாறாமல் இருப்பது: 2022ல் இப்பொழுது, ஶ்ரீரங்கம் நரசிம்மன், இக்கோவிலுக்குச் சென்று, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கோவில்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல், தொடர்ந்து வழக்குகள் போட்டு, நிலைமையை எடுத்துக் காட்டுதல் என்று சிறப்பான பணியை செய்து வருகிறார். ஆக, இத்தனை ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து, அக்கோவில் மேலும் மோசமான நிலைக்குச் சென்றுக் கொன்டிருப்பதை அவரது விளக்கத்திலிருந்து அறிய முடிகிறது. தமிழகத்தில், சோழர்களைப் பற்றி லவ்-ஹேட் / விருப்பு-வெறுப்பு அரசியல் தான் நடந்து கொன்டிருக்கிறது. ஒரு வகையான அத்தகைய முரண்பாட்டை சித்தாந்தம் ஆக்கி, அதையே அவ்வப்பொழுது பேசுவதும், எழுதுவதும், இப்பொழுது இணைதளங்களில் தமக்கு விருப்பமான வகையில் பதிவுகள் செய்வது,  வீடியோக்கள் போடுவதும் வழக்கமாகி விட்டது. அதையே வியாபாரமாக்கி, வணிகமாகவும் மாற்றி விட்டனர். அத்தகைய நிலையில், ஏதோ டிவி பட்டி மன்றங்கள், வாத-விவாதங்கள் போன்றாகி, பொழுது போக்கு அம்சமாகி விட்டது. படித்து-கேட்டு-ரசித்து மறந்து விடும் நிலைக்கும் போய் விட்டது.

வேதபிரகாஷ்

06-11-2022


[1] தினகரன், உலக புகழ்பெற்ற மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் திருப்பணி துவங்காவிட்டால் போராட்டம், 06:46 am Jun 14, 2019 | dotcom@dinakaran.com(Editor)

[2] https://m.dinakaran.com/article/news-detail/941127

[3] தினமணி, மானம்பாடி நாகநாத சுவாமி கோவிலை அகற்ற ஆட்சேபனை, By dn  |   Published On : 09th May 2013 03:42 PM  |   Last Updated : 09th May 2013 03:42 PM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/may/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-676406.html

[5] மாலைமலர், மானம்பாடி நாகநாதசாமி கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணி செய்ய பக்தர்கள் கோரிக்கை, By மாலை மலர்30 ஜூன் 2021 2:21 PM (Updated: 30 ஜூன் 2021 2:21 PM)

[6] https://www.maalaimalar.com/devotional/worship/2021/06/30142128/2782559/Temple-Renovation-devotees-request.vpf

[7] The Hindu, Heritage activists for resumption of Manambadi temple renovation, SPECIAL CORRESPONDENT,  TIRUCHI AUGUST 18, 2021 20:01 IST; UPDATED: AUGUST 19, 2021 08:28 IST

[8] https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/heritage-activists-for-resumption-of-manambadi-temple-renovation/article35981995.ece

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

ஒக்ரோபர்18, 2022

கோவில் திருப்பணிகளுக்கு இந்து அறநிலையத் துறையினால் அமைக்கப் பட்ட வல்லுநர் குழு நிபுணர், லஞ்சம் கேட்டது, மாட்டிக் கொண்டு, கைதானது!

நாத்திகர் மற்றும் இந்துவிரோத திராவிடத்துவ வாதிகளின் கட்டுப் பாட்டில் கோவில்கள்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அளவுக்கு அதிகமாக, தினம்-தினம் கோவில் பற்றிய செய்திகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், திராவிட ஸ்டாக்குகள், என்றெல்லாம் பறைச் சாட்டிக் கொண்டு, இந்துவிரோதிகளாகத் தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்துக்களுக்கும் இதில் ஒன்று சந்தேகம் இல்லை. கோவில் திருப்பணிகளுக்கு வல்லுநர் குழு அமைத்தது. வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: “ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது”.

அரசு தனது கட்டுப்பாட்டை அதிகமாக்கி, அறிக்கைகள் விடுவது: “திருப்பணிகள் முடிவடைந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில்திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம் வாரியாக கோயில்களைத் தேர்வு செய்து, விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொண்டு, திருப்பணிக்கான வேலைகள் முடிவுற்றபின், குடமுழுக்கு நடத்துவதற்குபக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கலாம்,” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு, எல்லா விசயங்களிலும் தலையிட்டு, திராவிடக் கட்சிக்காரர்கள் தங்களது ஆதிக்கம், அதிகாரம், முதலியவற்றைக் காட்ட் வருகிறார்கள். ஊழலில் கைதான அறநிலையத் துறை அதிகாரிகள் மறுபடியும் பதவியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இதனால், ஊழல் ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்ற மனப்பாங்கும் வளர்ந்து விட்டது.

கோவில் திருப்பணிக்கு லஞ்சம் வாங்க வேண்டு என்ற மனோதத்துவம் என்ன?: இந்நிலையில் தான், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[1] என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. திருச்சி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்[2]. கோயில் திருப்பணி தொடங்குவதற்கு உரிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டிய குழுவில் உள்ள தொல்லியல் துறை வல்லுநர்,  அதற்காக 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அவரை பொறி வைத்து பிடித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், என்றெல்லாம் விவரிக்கவும் செய்கின்றன. கோவில் திருப்பணி சேவை செய்ய, அரசு மாதம் சம்பளம் கொடுக்கிறது. ஓய்வு பெற்ற இவர்கள் பென்சனும் பெற்று வருகின்றனர். அதனால், பணம் இல்லை என்ற நிலை இல்லை. ஆகையால், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்க வேண்டும், அதிலும், கோவில் சேவைக்கு வாங்க வேண்டும் என்ற இவர்களின் அனோதத்துவம் ஆராய வேண்டியுள்ளது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பணிகள் ஆரம்பம்: கோவில் திருப்பணிகள் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்[3]. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். இந்த கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர்[4]. இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள்[5]. அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்[6]. இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சுமணி ஐயங்கார், இந்து அறநிலையத்துறையில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்[7]. இதில் கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை மாநில அளவிலான நிபுணர் குழு பரிசீலித்து வழங்கி வருகிறது[8]. இந்த குழுவில் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர் தலைமையில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

02-06-2022 மற்றும் 12-10-2022 தேதிகளில் மூர்த்தீஸ்வரி வந்தது: இது தொடர்பாக அந்த நிபுணர் குழு கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி கோவிலில் ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை அதிகாரி இந்த நிபுணர் குழுவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜா நகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி ஆவார். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர். இவர் கடந்த 12-ந்தேதி மீண்டும் கோவிலுக்கு வந்து அறங்காவலர் குழுவினரை சந்தித்து ஆய்வு அறிக்கை வழங்க ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் ரூ.10 லட்சம் அதிகமாக உள்ளது என்றார். இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ரூ.5 லட்சம் தாருங்கள், ஆய்வறிக்கை வழங்குகிறேன் என்று கூறினார். “இதனையடுத்து ஐந்து லட்ச ரூபாய்  குறைத்துக் கொண்டு மீதி ஐந்து லட்ச ரூபாயாவது  கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்று கறார் காட்டிய மூர்த்தீஸ்வரி  முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறு  கேட்டுள்ளார்,” என்கிறது காமதேனு[9]

புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை  கொடுத்தது, மூர்த்தீஸ்வரி மாட்டிக் கொண்டது: போலீசார் அதிரடி கைது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார்[10]. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார்[11]. இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிச்சுமணி ஐயங்காரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதனை மூர்த்தீஸ்வரியிடம்  கொடுக்குமாறு கூறினர்.  அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைபடி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து மூர்த்தீஸ்வரியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார்[12]. அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சேவியர் மேரி உள்ளிட்ட போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்[13]. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூர்த்தீஸ்வரி காரில் ரூ ஐந்து லட்சம் இருந்தது: அவரிடம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோயில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்திருக்கிறது[14].   மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில்  கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது. ஒருவேளை மற்ற இடங்களுக்குச் சென்று வசூல் செய்த பணம் போலிருக்கிறது. எது எப்படியாகிலும், கோவில் என்றும் பார்க்காமல், இவ்வாறு பலர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கோவில் பணத்தை, அதாவது பக்தர்களின் காணிக்கையை இவ்வாறு பலவிதங்களில் கொள்ளையடிப்பது, பங்கு போட்டுக் கொள்வது, முதலியவற்றை நிச்சயமாக, கடவுள் பார்த்துக் கொன்டிருக்கிறார், மற்றும் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பார் என்று ஒவ்வொரு பக்தனும் நம்பிக் கொண்டிருக்கிறான். அது உண்மை.

© வேதபிரகாஷ்

18-10-2022.


[1] தினத்தந்தி, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது, தினத்தந்தி அக்டோபர் 18, 1:40 am.

[2] https://www.dailythanthi.com/News/State/charity-department-woman-officer-arrested-for-accepting-bribe-of-rs1-lakh-817094

[3] நக்கீரன், கோவில் ஆய்வறிக்கைக்கு லஞ்சம்! பிடிபட்ட தொல்லியல் துறை வல்லுநர்!, மகேஷ்,Published on 18/10/2022 (12:34) | Edited on 18/10/2022 (12:51).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bribe-temple-thesis-arrested-archeologist

[5] குணசீலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள லட்ச ரூபாய் லஞ்சம்… பெண் அதிகாரி அதிரடி கைது…, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 18, 2022, 15:50 IST, TIRUCHIRAPPALLI, INDIA

[6] https://tamil.news18.com/news/trichy/female-officer-arrested-for-bribe-lakhs-of-rupees-to-carry-out-repairs-of-gunaselam-temple-820666.html

[7] தினமலர், கோயில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது, Updated : அக் 18, 2022  10:41 |  Added : அக் 18, 2022  10:34.

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=3148843

[9] காமதேனு, 5 லட்சம் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை; பேரம் பேசிய பெண் தொல்லியல் வல்லுநர் கையும் களவுமாக சிக்கினார்!, காமதேனு, Updated on : 18 Oct, 2022, 9:33 am

[10] தினகரன், ரூ1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது, 2022-10-18@ 14:58:17

[11] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=807670

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், திருச்சி கோயில் திருப்பணிக்காக ஆய்வறிக்கை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம்: தொல்லியல் பெண் நிபுணர் கைது, Written by WebDesk, Updated: October 18, 2022 10:30:34 am.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-woman-archaeologist-arrested-for-taking-rs-10-lakh-bribe-for-temple-restoration-527004/?utm_source=newsstand&utm_medium=Referral

[14] https://kamadenu.hindutamil.in/national/archaeologist-arrested-by-anti-bribery-police-for-demanding-bribe-at-gunaselam-temple

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு முரசொலி மூலம் விளக்கம் கொடுத்தது, தினக்கூலி மூலம் பழைய அர்ச்சகர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? (4)

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறதுஅர்ச்சகர் பயிற்சி: அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார். அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது! ‘தினமலர்’ நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே’ என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்’ என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?

19-08-2021 முரசொலி தலையங்கம் –  தொடர்கிறது: ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் – நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்’ சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!

முரசொலியின் விளக்கம் ஏன்?: இது ஏதோ தினமலர், தினமணி, மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்தியாக நினைக்க வேண்டாம்! முரசொலியில், இவ்வளவு பெரிதாக செய்தி வெளிவந்துள்ளது!ன்அப்படியென்ன, ஆசிரியர்-நிறுவனர் ஆவி உருவத்தில் வந்து ஆணையிட்டாரா? இல்லை, விபூதி-குங்குமம் அழித்த தனயனுக்கு மனம் மாறி விட்டதா? பிறகு, எதற்கு இந்த மாயாஜால வித்தைகள், அதிலும் சம்பந்தமே இல்லாத விசயங்கள் முரசொலியில் வருகின்றன? நிச்சயமாக ஒரு திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கும் இந்துவிரோத திராவிட அரசு, வேறொரு உள்நோக்கத்துடன், தனது ஆட்களை உள்ளே நுழைக்கிறது. அதனால், அர்ச்சகர் நியமன விவகாரம், அதற்கு விளக்கம் என்று விவரமாக செய்தி வந்துள்ளது. ஒரு வேளை அரசு தரப்பு விளக்கம் போல, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள் போலும்! “முரசொலியில்” வந்து விட்டதால், கழகக் கண்கமணிகளும் படித்துப் புரிந்து கொள்வார்கள்! ஒருவேளை, இந்துத்துவ வாதிகளும் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் போலும்!

நாத்திகர், ஆத்திக விசயங்களில் தலையிடும் மர்மங்கள்!: திக-திமுக-கம்யூனிஸ்டுகள் இந்துவிரோதிகள் ஆத்திக விசயத்தில் தலையிடுவது மூலம் தான் பிரச்சினைகள் கிளம்புகின்றன:

  1. எல்லா டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மாட்டு டாக்டர் மனிதனுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
  2. எல்லா எம்.எல்.ஏக்கள் / எம்.பிக்களும் அமைச்சர் ஆக முடியுமா? அது-அதற்கு சட்டதிட்டங்களை வைத்திருக்கும் / பாரம்பரியம் இருக்கும் போது, மீறுவது ஏன்?
  3. துப்பாக்கி சுட முடியும், குண்டு வெடிக்கத் தெரியும் என்று தீவிரவாதிகள் ராணுவத்தில் சேர்ந்து விட முடியுமா?
  4. ஆர்.சி கிறிஸ்தவன் புரொடெஸ்ன்டென்ட் சர்ச்சுக்கு பாஸ்டர் ஆக முடியுமா? செவன்த்-டே-அட்வென்டிஸ்ட் சர்ச்-காரன், சிஎஸ்.ஐ பிஷப் ஆகமுடியுமா?
  5. சுன்னி துலுக்கன், ஷியா மசூதி இமாம் ஆக முடியும? போஹ்ரா முஸ்லிம், சுன்னி மசூதி இமாம் ஆகலாமா? அஹ்மதியாக்கள், சுன்னி அல்லது ஷியா மசூதி மௌலானா ஆகமுடியுமா?
  6. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினையே இல்லை. ஏனெனில், இருக்கும் லட்சக்கணக்கிலான கோவில்களில் பாதிக்கும் மேலான கோவில்களில் பிராமணர் அல்லாதவர் தான் அர்ச்சகராக இருக்கின்றனர். அங்கு பிராமணர் சர்டிபிகேட் வாங்கி வந்தாலும், அர்ச்சகராக முடியாது.

சர்டிபிகேட் அர்ச்சகர்களும், பாரம்பரிய அர்ச்சகர்களும்:

  1. 60 வயதான அர்ச்சகர்கள் ஓய்வு கொடுக்கப் பட்டாலும், அவர்கள் கோவிலுக்கு வந்து, இப்பொழுது சேர்க்கப் பட்டுள்ள அர்ச்சகர்களுக்கு உதவ வேண்டுமாம்!
  2. “இருவரும் சேர்ந்து பூஜைகளை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளோம்,” என்றால், பிறகு, அவரது நிலை என்ன?
  3. இவர் தான் ISI / ISO 90002 ரேஞ்சில் சர்டிபிகேட் வாங்கி வந்துள்ளாரே, பிறகு, அவருக்கு, கற்றுக் கொடுக்க வேண்டியது என்ன உள்ளது?
  4. அவருக்கு அத்தகைய பணி நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதா? அவரது சம்பளம் என்ன?
  5. மடாலங்களில் சிறு வயதிலிருந்து, முறைப்படி பயிற்சி பெறுபவர்களை விட, ஓராண்டு படித்து, சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வரும் இவர்கள், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரியும், உடனே அர்ச்சகர் வேலை கொடுக்க வேண்டும் என்பது போல அலைகிறார்கள். நாத்திக-இந்துவிரோத அரசும் அதனை ஆதரிக்கிறது.
  6. எத்தனையோ, லட்சக் கணக்கில் பி.இ / பி.டெக் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
  7. இவர்களுக்கோ, லட்சத்தில் செலவு செய்து, விழா எடுத்து, வேலை கொடுக்கிறார்கள். இது எப்படி என்பது தான் புதிராக இருக்கிறது.
  8. உண்மையாக படித்து அறிகார்களோ, இல்லையோ, சர்டிபிகேட் வாங்கினால், வேலை உறுதி என்பது போன்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
  9. அப்படி என்றால், இனி, இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாம் மூடிவிட்டு, அர்ச்சகர் பயிற்சி கல்லூரி என்று ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.
  10. தமிழகத்தில், அந்த அளவுக்கு, முதலமைச்சரே வேலை நியமணம் பத்திரம் கொடுத்து, விழா நடக்கிறது.

© வேதபிரகாஷ்

21-08-2021

70-100 வருடங்களாக இந்து மதத்தைத் தூஷித்து, சிலைகளை உடைத்து, திருடி, கோவில்களைக் கொள்ளையடித்து, இப்பொழுது, அர்ச்சகர் போர்வையில் உள்ளே நுழைவதேன்?
ஆகமங்கள் பற்றி அறியாமல், சக்திவேல் முருகன் போன்றோரை வைத்துக் கொண்டு, கோவில்களை சூரையாட திட்டம் போடப் பட்டுள்ளதா?
சர்டிபிகேட் வாங்கினவன் எல்லாம் அர்ச்சகர் ஆகி விடலாம் என்றால்,
பிஇ / பிடெக் படித்தவன் ஏன் இஞ்சினியர் ஆவதில்லை?
இவர்கள் சொல்வது உண்மை என்றால், அவ்வாறு செய்தவர்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு விளக்கம் கொடுத்து ஓய்வு பெற்ற அர்ச்சகரை தினக்கூலி முறையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? (3)

அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!: இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி[1], “தமிழ்நாடு அர்ச்சகர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் அர்ச்சகர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்[2]. இதைத்தான், “அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி! ,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் இந்துமதத்தை தூஷித்து, 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி, எழுதி வருகின்றனர். இவற்றை எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறது. இப்பொழுது, அரசியல் ஆட்சி, அதிகாரம், பலம் மற்றும் ஊடக அசுர பிரச்சாரம் எல்லாம் இருப்பதால், இத்தகைய யுக்திகளும் கையாளப் படுகின்றன.

பணியில் உள்ள அர்ச்சகர் வெளியேற்றப் பட்டனர்: பணி ஆணையை பெற்ற அவர்கள் 15-08-2021 அன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது[3]. அதில் பேசும் குருக்கள் ஒருவர், “நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம், நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா[4]. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும், சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது[5]. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா? ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்[6]. இது பிராமணர்-பிராமணர் அல்லாத பிரச்சினை போன்று விவரிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், “இந்துக்கள்” போர்வையில், நாத்திகர்-இந்துவிரோதிகள் “அர்ச்சகர்” போர்வையில் கோவிலுக்குள் நுழைவது தான்.

ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது[7]. அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்[8]. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார். 60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

19-08-2021 – கருணாநிதி –  கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது[9]: முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.  ‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது. இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.

19-08-2021 முரசொலி தலையங்கம்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறதுசேகர் பாபு:. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே,’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது[10].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] கலைஞர் செய்திகள், அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!, Vignesh Selvaraj, Aug 18, 2021 |11:58:20 am.

[2] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/subramanian-swamy-on-dmk-govts-all-castes-become-priest/a83248fd-b108-4bc0-b7f4-a54a8a66bcc7/paytm

[3] தினசரி, திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல், செங்கோட்டை ஶ்ரீராம், 17-08-2021. 12.27 PM.

[4] https://dhinasari.com/latest-news/220137-temple-archagas-unlawfully-evacuated-from-temples-in-tamilnadu-hrnce.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளியேற்றப்படும் பிராமணர்கள்கோயில் குருக்களின் வைரல் ஆடியோகுஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST; Last Updated Aug 16, 2021, 1:04 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/brahmins-to-be-expelled-viral-audio-of-temple-priests-qxx91w

[7] நியூஸ்.7.தமிழ், அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில், by EzhilarasanAugust 19, 2021

[8] https://news7tamil.live/not-the-intention-to-expel-priest-on-duty-minister-sekarbabu.html

[9] கலைஞர் செய்திகள், ஆகமம்பின்னால் இருப்பதுஆரியமே’.. சு.சுவாமி மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது” : முரசொலி!, Prem Kumar – Aug 20, 2021 | 08:58:49 am.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/murasoli-editorial-said-this-is-not-a-government-that-is-afraid-of-all-the-threats-of-subramaniam/24245a8d-23ee-4322-a4bf-1dfdc7d3ca62

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், சுப்ரமணிய சுவாமிக்கு ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? (2)

அரசியல் ஆக்கப் பட்டு விட்டதால் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை: இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது[1], “சமூக நீதியை விரும்பாத சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்தத் திட்டம் எரிச்சலைத் தருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோவில் கருவறையில் கால்வைக்க முடியாது என்ற நிலை நீடித்துவந்தது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம்,” என தெரிவித்துள்ளார்[2]. இதே போலத்தான், பெரியார் திடலில், வீரமணி தலைமையில் இந்துவிரோதிகள் எல்லாம் சேர்ந்து பேசியுள்ளார்கள். அதிலும், இந்த இந்துவிரோதி திருமா இருந்ததும் நோக்கத் தக்கது. அருள்மொழி, சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன். சிகரம் செந்தில்நாதன், கலையரசி நடராசன் இருந்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்துவிரோதிகள் எவ்வாறு சேர்ந்து, இந்துமதத்திற்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளதுசுப்பிரமணியன் சுவாமி: “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் ஸ்டாலின் அவருடைய தந்தை செய்த தவற்றைச் செய்ததால் நான் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை வந்துள்ளது,” என்று ட்வீட் மூலம் தி.மு.க-வுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி[3]. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவம் அறிவித்திருக்கிறார்[4]. கடந்த தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசமிருந்து அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அதை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றவர் சுவாமி. இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தீட்சிதர்கள் வசமே நடராஜர் ஆலயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய முடிவாகியிருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னை வரும் சுவாமி, இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய சர்ச்கைள் கிளம்பும் என்று தெரிகிறது!

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: சுப்ரமணியசாமி சொன்னது, “முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்……..சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்”.

திக சொல்லி செய்யும் ஸ்டாலின்: சுப்ரமணியசாமி சொன்னது, “திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.  இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்”.

இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது: சுப்ரமணியசாமி  சொன்னது, “முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது[5]. கோயிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது[6]. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது:சுப்ரமணியசாமி  சொன்னது, “அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின்வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார்[7]. அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்,” என அவர் தெரிவித்துள்ளார்[8].

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] நக்கீரன், சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இது எரிச்சலை தருகிறது” – திருமாவளவன் கருத்து!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 18/08/2021 (15:13) | Edited on 18/08/2021 (15:44).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/it-irritates-people-subramanian-swamy-thirumavalavan-comment

[3] விகடன், ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் சுவாமி’ – ஆகஸ்ட் 26-க்குப் பிறகு வெடிக்குமா சர்ச்சை?,  அ.சையது அபுதாஹிர், Published: 18 Aug 2021 7 AM; Updated:18 Aug 2021 7 AM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-vs-swamy-will-the-temple-priest-issue-will-spark-upcoming-days

[5] இந்து.தமிழ், அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்; இந்து மதத்தில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு கொடுத்தது யார்?- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி, Published : 18 Aug 2021 03:12 am, Updated : 18 Aug 2021 05:39 am.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/706252-subrmaniyan-swamy.html

[7] ஏசியா.நெட்.நியூஸ், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை வாபஸ் பெற்றால் ஸ்டாலின் தப்பிப்பார். சு.சாமி கடும் எச்சரிக்கை..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Aug 17, 2021, 9:20 AM IST; Last Updated Aug 17, 2021, 6:57 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/subramaniam-swamy-issued-a-stern-warning-to-stalin-qxytbo

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

ஓகஸ்ட்21, 2021

இந்துவிரோத திமுகவின் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன நாடகம், கோவில்களை மேம்படுத்தவா, சீரழிக்கவா? (1)

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது:  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் 14-08-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு அரசியல் விழா போன்று தான் இருந்தது, பேச்சாளர்களும் அவ்வாறே பேசினார்கள். அந்த மடாதிபதிகள் மடத்தின் நிலங்களை விற்றது போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், அவர்களில் சிலர் நாங்கள் “இந்துக்கள் அல்ல,” என்றும் பேசியிருக்கிறார்கள். சுகி சிவம் பற்றியும் நிலைமை மாறி விட்டது. ஏனெனில், காசு வாங்கிக் கொண்டு, மேடைக்கு ஏற்றபடி பேசுகின்ற ஆளாகி விட்டதால், அவரை ஆன்மீகத்தில் சேர்க்க முடியாது. ஒரு அரசியல் ஏஜென்டாக செயல்பட ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது.முன்பு, இவரது புத்தகத்தை திக வெளியிட்டது, இப்பொழுது, திமுக, இந்நிகழ்ச்சிக்கு வரவேற்று பேச அனுமதித்துள்ளது.

19-08-2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை: கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது[1]. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன் 19-08-2021 வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை[2]: “கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் விடுவிக்கப் படமாட்டார்கள் என்பதை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம். புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதுகுறித்த பரிந்துரைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். பணிவரன்முறைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் உடனடியாக அனுப்பலாம். இது தொடா்பாக தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவது விரும்பத்தக்கதல்ல. வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால் அதற்கு இணை ஆணையா்கள் அல்லது உதவி ஆணையா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம். இதுகுறித்து கோயில் அலுவலா்களுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினைவேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள்: “தினக்கூலி அர்ச்சகர் பிரச்சினை”யில் வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாகும் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அந்த போர்வையிலும், ஆட்களை கூட்டி வந்து உள்ளே நுழைத்து விடுவார்களா? அடுத்தது, “தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,” என்றால், இதில் என்ன தேவையற்ற சிக்கலான செய்திகள்அவை எப்படி உருவாகும், அவற்றை உருவாக்க யார் இருக்கின்றனர் போன்ற கேள்விகளும் எழும்.  “உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம்,”  அத்தகையோர் உள்ளதை ஆணையர் அறிந்துள்ளார் போலும். ஐ.ஏ.எஸ் அதிகாரி இவ்வாறு சொதப்பலாக ஆணையிடுவதிலிருந்தே, இவர் அரசியல்வாதிகள் / ஆட்சியாளர்கள் / சித்தாந்தவாதிகள் சொல்வதைக் கேட்டு நடக்கிறார் என்பதும் தெரிகிறது. சட்டப் படி நடக்கிறது என்றால், சட்டப் படி நடக்காமல் இருக்கும்போது, இவர் தாராளமாக எடுத்துக் காட்டலாம். இதே போல “தினக்கூலி” முறையில் மற்றவர்களை, மற்ற துறையில் ஓய்வு பெற்றவர்களை, மூப்படைந்தவர்களை நியமிக்க முடியுமா?

கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்: கோவில் அர்ச்சகர் பணியில் ஓய்வு, மூப்பைத் தாண்டியோர் போன்றவை உள்ளனவா என்று தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், ஏதோ கூலிக்கு வேலை செய்யும் தொழில் போன்று அர்ச்சகர் சேவையை மாற்றி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏதோ, நாட்கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போன்று 40-60 வருடங்களாக சேவை செய்து வரும் அர்ச்சகர்களைக் கேவலப் படுத்தும் வகையில் ஆணையிட்டிருப்பது, மிக மோசமாக இருக்கிறது. “கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்,” என்றதில், அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. விடியற்காலையில் எழுந்து, குளித்து, பூஜைக்கு ஏற்பாடு செய்து, காலை 4 மணி, 4 மணி என்று பூஜை செய்து வருபவர்கள், எதையும் பொருட்படுத்தாமல் செய்து வருகின்றனர். இனிமேல், புதியதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அத்தகையோர், வேலை செய்யும் போது, இவர்கள், அவர்களிடம் தினக் கூலிக்கு வேலை செய வேண்டும் என்றால், என்ன அது? இங்கு தான் இந்துவிரோதிகளின் திட்டம் வெளிப்படுகிறது. அந்த புதிய பூஜாரிகளின் நிலையும் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான பூஜை, சேவை என்றால், இத்தகைய, ப்ரித்துக் காட்டும் கீழ்த்தரமான எண்ணங்கள் வராது.

17-08-2021 – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தது: ஸ்டாலின் கூறியது, “அமைச்சர் தெளிவாக விளக்கம் சொல்லி உள்ளார். அது குறித்து, நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். .வெ.ரா., நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்என, கருணாநிதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அது நடைமுறைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை வழங்கி இருக்கிறோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, சில காரியங்களை செய்கின்றனர்[3]. கோயில்களில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தால் அரசு அதில் உரிய நடவடிக்கை எடுக்கும். ஆனால் தேவையில்லாமல், சமூகநீதியைப் பாழ்படுத்தும் வகையில் விஷம பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது[4]. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்திட்டத்தை சீர்குலைக்க சிலர் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர்[5]. சமூக நீதியைப் பாழ்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்[6]. அமைச்சர் பேசும் போது, ‘சில ஊடகத்தில்என சொன்னார். நான் ஊடகத்தினரை குறை சொல்ல மாட்டேன். ஆனால், அதை பயன்படுத்தி, சமூக வலைதளத்தில் சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். யாரையும் எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து, புதிதாக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை[7]. அப்படி எங்காவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை அசு நிச்சயமாக எடுக்கும்[8]; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.எனவே, வேண்டுமென்றே அதை கொச்சைப்படுத்தி, அரசியலுக்காக அல்லது சமூக நீதியை பாழடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவர்”.

© வேதபிரகாஷ்

21-08-2021


[1] தினமணி, கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக் கூலி அடிப்படையில் பணி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு, By DIN  |   Published on : 20th August 2021 06:48 AM.

[2]https://www.dinamani.com/tamilnadu/2021/aug/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3683294.html

[3] விகடன், `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தைச் சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்’ – ஸ்டாலின், ஜூனியர் விகடன் டீம், Published:17 Aug 2021 9 AMUpdated:17 Aug 2021 2 PM

[4] https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-17-08-2021-just-in-live-updates

[5] கலைஞர் செய்திகள், சமூக நீதியை சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்; இது உண்மையில்லை” : தெளிவுபடுத்திய முதல்வர் மு..ஸ்டாலின்!, Vignesh Selvaraj, Updated on : 17 August 2021, 01:11 PM

[6] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/17/some-people-trying-to-sabotage-all-caste-priest-scheme-says-cm-mk-stalin

[7] தினமலர், அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளைஆதாரத்தோடு சொல்லுங்கள்!, Updated : ஆக 18, 2021  01:28 |  Added : ஆக 17, 2021

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2825317