Archive for the ‘திராவிட நாத்திகம்’ Category

மூன்று கோவில்களையும் இடித்தேன்- என்று டி.ஆர். பாலு பேசியது – ஔரங்கசீப், மாலிகாபூர் பாணியில், திமுகவினரின் கொக்கரிப்பு!

ஜனவரி30, 2023

மூன்று கோவில்களையும் இடித்தேன்என்று டி.ஆர். பாலு பேசியதுஔரங்கசீப், மாலிகாபூர் பாணியில், திமுகவினரின் கொக்கரிப்பு!

மூன்று கோவில்களையும் இடித்தேன்என்று டி.ஆர். பாலு பேசியது: வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பல சமயங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆா்.பாலு[1]. 28-01-2023 அன்று மதுரையில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில்[2], “எனது தொகுதியில் 100 ஆண்டுகள் பழமையான சரஸ்வதி கோவில், லட்சுமி கோவில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள பார்வதி கோவில் என மூன்று கோவில்களையும் இடித்தேன். எனக்கு வாக்கு கிடைக்காது என்று தெரியும். ஆனால். எப்படி வாக்குகளை பெறுவது என்பதும் எனக்கு தெரியும். கோவில்களை இடித்தால் எனக்கு வாக்குகள் கிடைக்காது என கட்சி தோழர்கள் எச்சரித்தனர். ஆனால், வேறு வழியில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன். “கோயில் தேவை என்று கூறினேன். சிறந்த வசதிகளுடன் சிறந்த கோவில்களை கட்டினேன். இதுபோல் பல இடங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்து திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்,” என டி.ஆர் பாலு கூறினார்.

சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு ரயிலை நடுவழியில் திடீரென நிறுத்துவது போன்றது:மேலும், தேசம் வளா்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் கட்சியினா் முன் மொழிந்ததன் பேரில் சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு ரயிலை நடுவழியில் திடீரென நிறுத்துவது போன்றது,” என்றார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கி.வீரமணி, முதலியோர் இருந்தனர். “மத்திய அரசு அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையைப் பயன்படுத்தாமல், மத வழிகளைப் பின்பற்றாமல் ராமா் பாலம் சேதமடைந்து விடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறி சுமார் 23.5 கி.மீ பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையில் திட்டத்தை நிறுத்துகிறது என்று பாலு குற்றம் சாட்டினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆண்டுக்கு ரூ.750 கோடி லாபம் கிடைத்திருக்கும். தென் மாநிலங்கள் வளா்ச்சி பெறும். குறிப்பாக தமிழகம் வளா்ச்சி பெறும். மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் உள்ளனா். அவா்களை மதத்தின் பெயரால் இனி ஏமாற்ற முடியாது,” என்று டி.ஆர். பாலு கூறினார்.

திமுக சேது சமுத்திர திட்டத்தில் திடீரென்று ஆர்வம் காட்டுவது: இம்மாத தொடக்கத்தில், சேதுசமுத்திரத் திட்டத்தை மேலும் தாமதிக்காமல் மத்திய அரசை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், இத்திட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய நீர்வழித் திட்டம், சேதுசமுத்திரம் திட்டம் பால்க் ஜலசந்தியை மன்னார் வளைகுடாவுடன் இணைக்க முன்மொழிகிறது. இந்த திட்டம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பொருளாதார வளத்தை கொண்டுவருவதற்கான முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், இலங்கையை அடைய ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் ‘ராம் சேது’ பாலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறும் வலதுசாரிகளின் எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. சேதுசமுத்திரம் திட்டத்தின் மூலம் கப்பலின் பயணத்தை கிட்டத்தட்ட 650 கி.மீ வரை குறையும். எவ்வித சான்றாவணமும் இல்லாமல், நாட்டின் தென்கோடி முனையான ராமேசுவரத்தில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது: இந்நிலையில், டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், “100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து, கோவிலை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”. வீடியோவில், பாலு நக்கலாகவும், திமிராகவும், பேசியது நன்றாகவே தெரிகிறது. இதைக் கேட்டு திமுகவினர் சிரிப்பதும் தெரிகிறது. அதாவது, அக்காரியத்தை பெரிய சாதனை போலத்தான் பேசியது தெரிகிறது.

100 வருட மசூதியையும் இடித்துள்ளோம்: அதில், நான்கு வழிச்சாலை அமைக்கிற நேரத்தில் 100 வருட கோவில், கொல்கத்தாவில் 100 வருட மசூதியை இடித்து இருக்கேன்[3]. கோவிலை இடித்து இருக்கேன், மசூதியை இடித்து இருக்கேன், மாதா கோவிலை இடித்து இருக்கேன்[4]. வழியில் இருக்கும் வீடுகளை எல்லாம் இடிக்கும் போது மக்கள் வந்தாங்க, இதுகுறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு என்னை அழைத்து, இப்படி 100 வருட மசூதியை எல்லாம் இடித்தால் வாக்கு வங்கி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும். இதெல்லாம் சரியான முடிவா எனக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன், எங்க ஊரில், என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில், லெட்சுமி கோவில் , பார்வதி கோவில், இந்த கோவில்களும் என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி ரோட்டில் கட்டிருப்பாங்க.. இந்த மூன்று கோவிலை நான்தான் இடித்தேன்.

எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும்: எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். ஒட்டு வராது, வராது, தயவு செய்து இடிக்காதீங்க என எனக்கு தோழர்களாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு வேறு வழி கிடையாது. அவர்களுக்கு என்ன வேற கோவில் கட்டி தர வேண்டும், இதை விட சிறந்ததாக, 100, 200 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் செய்து தரேன்னு சொல்லி, அந்த இடத்தில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து விட்டு பக்கத்தில் கோவில் கட்டி கொடுத்தேன்  என்று தான் டி.ஆர்.பாலு பேசியுள்ளதாக அந்த வீடியோவை வெளியிட்டு திமுகவினர் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்[5]. இப்படியாக அவருடைய முழுமையான வீடியோவில் அவர் பேசியுள்ள நிலையில், அதில் சிறு பகுதி மட்டும் எடிட் செய்யப் பட்டு பகிரப்பட்டு வருவது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது[6], என்று புதியதலைமுறை போன்ற ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், கோவில்கள் இடிக்கப் பட்ட உண்மையினை மறுக்கவில்லை.

அண்ணாமலை மறுப்பு: இதற்குள், திமுக அமைச்சர்களும் அந்த வீடியோ எடிட் செய்யப் பட்டது என்று பேசியுள்ளனர். அதற்கும், அண்ணாமலை, பதில் அளித்துள்ளார், “அமைச்சர் கே.என்.நேரு மற்றும் டி.ஆர்.பாலு பேசியவற்றை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார், நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்[7]. எடிட் செய்து வெளியிட்டதாக ..வேலு சொல்லியுள்ளார்[8]. கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர் பாலு பேசிய வீடியோ முழுமையானதுவீடியோ தடவியல் ஆய்வு செய்து டேப் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமானால் அரசியலைவிட்டு விலக தாயார் அவர் சொல்லும் இடத்தில் கே.என்.நேரு, .வி.கே.எஸ் பேசிய ஒரிஜினல் வீடியோவை தரத் தயார் அதனை முதலமைச்சர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளலாம்[9]. தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு., உண்மை நிரூபிக்கப் பட்டால், ஸ்டாலின் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்……” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்[10]. இந்த வீடியோவும் சுற்றில் உள்ளது.

© வேதபிரகாஷ்

30-01-2023.


[1] தினமணி, இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனரா?, By DIN  |   Published On : 29th January 2023 07:23 PM  |   Last Updated : 29th January 2023 07:28 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/jan/29/demolished-temples-knew-wont-get-votes-dmks-tr-baalu-3992030.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், 100 ஆண்டு கால கோயிலை இடித்ததாக பேசினாரா டி.ஆர்.பாலு.? அண்ணாமலையின் வீடியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் திமுக, Ajmal Khan, First Published Jan 30, 2023, 12:29 PM IST.

[4] https://tamil.asianetnews.com/politics/dmk-has-released-a-video-in-response-to-the-video-released-by-annamalai-in-which-tr-balu-spoke-about-the-demolition-of-temples-rpae2z

[5] FackCheck: புதியதலைமுறை, நூற்றாண்டு கோயிலை இடித்த டி.ஆர். பாலு?, இணையத்தில் உலா வரும் வீடியோவின் உண்மை நிலை, ஜனனி கோவிந்தன், Published: 30, Januay 2023 02:13 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/154754/fact-check-over-tr-baalu-speech-about-temple-demolition

[7] தமிழ்.ஏபிபி.லைவ், Annamalai Release Video: டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை வெட்டி ஒட்டவில்லைஅண்ணாமலை, By: செல்வகுமார் | Updated at : 30 Jan 2023 06:08 PM (IST), Published at : 30 Jan 2023 06:08 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/tamil-nadu/t-r-baalu-s-video-was-not-cut-and-pasted-says-bjp-state-president-annamalai-attackdmk-99041

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால்அண்ணாமலை பரபரப்பு பேட்டி, Raghupati R, First Published Jan 30, 2023, 7:16 PM IST.

[10]https://tamil.asianetnews.com/politics/tn-bjp-president-annamalai-challenge-to-dmk-tr-baalu-controversy-video-matter-rpawx2

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், நெற்றியில் ரத்தம் சொரியும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (2)

பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது: ஒரு பக்கம் இந்து-அல்லாதவர்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையில் வேலை செய்கிறார்கள் போன்ற குற்றச் சாட்டுகள் விவரங்களுடன் வெளியாகிக் கொன்டிருக்கின்றன. “இந்து” என்று இல்லாமலேயே சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொன்டிருக்கின்றன. பிறகு, திடீரென்று, இத்தகைய பணி நியமனங்கள் எவ்வாறு அமூல் படுத்தப் படுகின்றன என்ரு தெரியவில்லை[1]. மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இயற்கை எய்திய 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், வேலை கொடுக்க தீர்மானிக்கப் பட்டது[2]. அதனையும், இவ்விழாவுடன் இணைக்கப் பட்டு, இங்கு நடந்தேறியுள்ளது[3]. இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான, பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்[4]. அப்படியென்றால், இதை சாக்காக வைத்து, ஸ்டாலின் இங்கு வந்தார் அல்லது அங்கு வருவதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி / உருவாக்கப் பட்டுள்ளது என்றாகிறது. நாளைக்கு விமர்சனம் எழுந்தாலும், “காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது,” போன்ற நியாயப் படுத்தும், விளக்கமும் கொடுக்கலாம், என்று தீர்மானிக்கப் பட்டது போலும்.

திருமகள், ஹரிபிரியா முதலியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

மற்ற அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றல்…..

பூணூல் போட்ட பார்ப்பனர்களின் பூர்ணகும்ப மரியாதை…………..

இந்நிகழ்ச்சி / நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும், ஊடகங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் வெளியிட்டு வருகின்றன[5]. வழக்கம் போல, தலைப்புகளை மாற்றி-மாற்றி, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. நிருபர் நேரில் செல்லும் பொழுது, விவரங்களை சேகரித்து சொந்தமாக, எந்த விவரத்தையும் கொடுக்க மாட்டாரா அல்லது கூடாதா என்று தெரியவில்லை[6]. டுவிட்டரில் உள்ள வீடியோவில் கலந்து கொண்டவர்களின் சில விவரங்கள் தெரிகின்றன[7]. தினத்தந்தி, மூன்று நேரங்களில், மூன்று முறை செய்திகளை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். சில அச்சு வடிவத்தில் உள்ளது மற்றும் இணைதளத்தில் உள்ளது, இரண்டிற்கு உள்ள வேறுபாட்டையும் கவனிக்கலாம். கீழே, அவை தொகுத்துக் கொடுக்கப் படுகிறது:

  • அமைச்சர் பி.கே.சேகர்பாபு[8],
  • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர்,
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  • பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்,
  • ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்[9],
  • திருவண்ணாமலை ஆதீனம் 46வது குரு மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்[10]
  • சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன்[11],
  • பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன்[12]
  • இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்
  • திருமகள், இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • ஹரிப்பிரியா, இந்து அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சத்தியவேல் முருகனார்.

உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சில எழுத்தாளர்கள் கௌரவிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

“108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் – பின்னணி என்ன?” என்று ஏதோ பெரிய ரகசியத்தை சொல்வது போல, “இ.டிவி.பாரத்” தலைப்பிட்டாலும், உள்ளே, ஒன்றும் விசயத்தைக் காணோம்[13]. மற்ற நாளிதழ்களில் உள்ளது தான் இருக்கிறது[14].

  1. சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா?
  • இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்து வரும், இவர்களுக்கு, இது ஏன்?
  • இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு மிகவும் அதிகமாக அடிக்கடி விளையாடி வரும் இவர்களின் திட்டம் தான் என்ன?
  • பெரியாரிஸம், பகுத்தறிவு, திராவிடியன் ஸ்டாக், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவ்வாறு செய்தால், இது எந்தவிதத்தில் வரும்?
  • முகமதிய, கிறிஸ்தவ கடவுள்கள் இருப்பதற்கு இந்த அளவுகள் வேலை செய்யாமல், இந்து மதத்திற்கு மட்டும் வேலை செய்யும் விதத்தைக் கவனிக்கலாம்!
  • தமிழக வக்ஃப் போர்டுக்குச் சென்று, இதே போல முகமதிய புத்தகங்கள், புராணங்கள் முதலியவற்றை புதுப்பொலிவுடன் வெளியிடுவாரா?
  • கிறிஸ்தவ பேரமைக்குச் சென்று கத்தோலிக்க, புருடெஸ்டென்ட் முதலிய புராணங்களை, பக்தி நூல்களை அப்படியே வெளியிடுவாரா?
  • அதற்கான செலவை, அந்தந்த போர்டுகள் ஏற்குமா? ஏற்றுக் கொண்டு அனுமதிப்பார்களா? அடுத்ததாகச் செய்ய முடியுமா?
  • செக்யூலரிஸம், சமத்துவம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் வேலை செய்யுமா, செய்யாதா என்பதை பார்ப்போம்!
  1. திருமகள், ஹரிப்பிரியா எல்லாம் இருந்தும், எந்த இந்துத்துவவாதிக்கும், எந்த சொரணையும் வரவில்லை, பிறகு ஸ்டாலின் ஜாலிதான்!

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது மத்திய அரசே கை விட்டு விட்டது. அநிலையில், தமிழக அரசு, இதிலும் எதிர்மறையாக செயல்பட இவ்வாறு செய்கிறதா, அல்லது வேறு விவகாரம் உள்ளதா என்று தெரியவில்லை.

[2] பதிரிக்கை.காம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்..!, JAN 19, 2023

[3] https://patrikai.com/chief-minister-m-k-stalin-released-108-devotional-books-on-behalf-of-the-hindu-religious-charities-department/

[4] தினமணி, மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு..ஸ்டாலின் வெளியிட்டார், By DIN  |   Published On : 20th January 2023 03:08 AM  |   Last Updated : 20th January 2023 03:33 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! தூள் கிளப்பும் இந்து சமய அறநிலையத்துறை! By Arsath Kan Published: Thursday, January 19, 2023, 12:44 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-stalin-released-108-rare-devotional-books-494966.html

[7] அறிவாலயம், திமுக-இஐடி-விங்- https://twitter.com/i/status/1616020423535394816

[8]https://www.dinamani.com/tamilnadu/2023/jan/20/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-108-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3986985.html

[9] தினகரன், புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்கள் வெளியீடு: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், 2023-01-20@ 00:33:10.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=831765

[11] மாலைமுரசு, தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்…!, Tamil Selvi SelvakumarTamil Selvi SelvakumarJan 19, 2023 – 14:27038

[12] https://www.malaimurasu.com/posts/tamilnadu/eb-with-adhar-details

[13] இ.டிவி.பாரத், 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்பின்னணி என்ன?, Published on: Jan 19, 2023, 10:48 PM IST

[14] https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/chennai/chief-minister-mk-stalin-published-108-rare-devotional-books-in-chennai/tamil-nadu20230119224805573573653

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை..

அறிக்கையில் விளக்கத்தைக் காணலாம்…

இப்புத்தகங்கள் விற்பனைக்கு…..

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்-விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

ஜனவரி20, 2023

சாத்தான் வேதம் ஓதும், பேய்கள் ஆட்சி செய்யும், சாத்திரங்கள் பிணங்கள் தின்னும், குங்குமம்விபூதி அழித்தவர்கள் பக்தி புத்தகங்கள் வெளியிடுவார்கள்! (1)

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடலா?: சிவபுராணம், கந்தப் புராணக் கதை, பதினெண் புராணங்கள் இவையெல்லாம் ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை நம்புகிறீர்களா? ஆனால், நடந்திருக்கிறது என்பது, சென்னையில் அதிசயமான நிகழ்வு எனலாம். திமுகவினர் இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர் என்று தெரிகிறது. அதனால், அது இந்துக்களுக்கு ஆபத்தாகவும் போகலாம். இந்து மதம், நம்பிக்கைகள், பண்டிகைகள் என்றாலே, அவதூறு, ஆபாசம், தூஷணம் என்று செய்தும், வக்கிரத்துடன் தூற்றும் இவர்களுக்கு, ஏன் இத்தகைய முரண்பாடுகளை செய்து வருகின்றனர் என்று தான் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விஜயங்கள் செய்வது, பூஜை அறை வைத்திருப்பது, பூஜைகள் செய்வது, முதலியவை தொடர்ந்தாலும், ஸ்டாலினின் இந்துவிரோத நாத்திகம் மாறாமல் தான் உள்ளது. அந்நிலையில் இந்த விழாக்கள் எல்லாமே அறநிலையத்துறைக்கு செலவு தான். லட்சக்கணக்கில் செலவைக் காட்டப் போகிறார்கள். ஆனால், எல்லாமே, இவர்களது நாடகங்களுக்கு, விளம்பரங்களுக்கு பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுகின்றன. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது திராவிடியன் மாடல் போலும்!

அறநிலையத்துறையில் அதீத ஈடுபாடு கொள்ளும் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு 2022ல் நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் –

  • இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு,
  • தலபுராணங்கள்,
  • கோவில் தொடர்பான ஆகமங்கள் –
  • ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள்,
  • பழமையான அரிய நூல்கள்,
  • கோவில் கட்டிடக்கலை,
  • செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும்
  • கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும்,
  • அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது[1].

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது[2]. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அறநிலையத் துறையில் கொள்ளும் அதீத ஈடுபாடு, ஆர்வம் முதலியவை திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது, பக்தி புத்தகங்களை ஸ்டாலின் வெளியிடும் வரைக்கு வந்துள்ளது.

ஊடகங்கள் வர்ணித்துத் தள்ளின……….

செய்திகள் முழுவதும் ஸ்டாலின் மயம் தான்…….

நாத்திகபெரியாரிஸ, திராவிடயன் ஸ்டாக் ஸ்டாலின் இப்புத்தகங்களை வெளியிடும் ரகசியம், அர்த்தம் அல்லது தேவை என்ன?: புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்து முடிந்துள்ள வேளையில், இப்புத்தகங்கள் ஏன் இப்பொழுது வெளியிடப் பட்டு, விழா நடத்துகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. ஜீயர்-மடாதிபதிகள் முதலியோரை வைத்து அல்லது வரவழைத்து, நாத்திக-பெரியாரிஸ குறிப்பாக இந்துவிரோத சித்தந்தம் கொண்ட அரசியல்வாதியை வைத்து நடத்த வேண்டிய அவசியம், கட்டாயம் மற்றும் தேவை என்னவென்றும் தெரியவில்லை. இதை திமுகத் தலைவர், “திராவியன் ஸ்டாக்” என்று மார் தட்டி பேசும் ஸ்டாலின், ஏன் ஒப்புக் கொண்டு அல்லது தீர்மானமாக கலந்து கொண்டு அத்தகைய தனக்குத் தேவையில்லாத புத்தகங்களை வெளியிட்டார் என்பதும் புதிராக உள்ளது[4]. இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 9-01-2023 அன்று நடந்தது[5]. அதாவது, அந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்று தெரிகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார்[6]. சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்[7]. பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்[8].

ஓலைச் சுவடிகள்கண்டறியப் பட்டனவாஅல்லது ஏற்கெனவே இருந்தனவா?: அதனைத் தொடர்ந்து, 9 திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 61, 600 சுருணை ஓலைகள், 10 செப்புப் பட்டயங்கள் மற்றும் 20 பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்[9]. பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது[10]. திடீரென்று, “கண்டறியப்பட்டு” என்று குறிப்பிடுவதும் விசித்திரமாக இருக்கிறது. அப்படியென்றால், இவற்றைப் பற்ரிய செய்திகள் வராதது நோக்கத் தக்கது. உண்மையில், பல ஓலைச் சுவடிகள் சரஸ்வதி மஹால் போன்ற ஊலகங்களிலிருந்து காணாமல் போனது, என்று தான் செய்திகள் வந்துள்ளன. செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவும் பல்லாண்டுகளாக உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி தொடர்கிறது[11]. இவற்றை எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டு உள்ளது[12].

© வேதபிரகாஷ்

20-01-2023


[1] தினத்தந்தி, 108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், தினத்தந்தி ஜனவரி 20, 5:43 am

[2] https://www.dailythanthi.com/News/State/108-bhakti-texts-reprinted-with-new-editions-published-by-prime-minister-mkstalin-882191

[3] மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm

[4] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-released-108-rare-devotional-books-562418

மாலைமலர், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார், By மாலை மலர்19 ஜனவரி 2023 3:29 PM.

[5] தினத்தந்தி, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், ஜனவரி 19, 4:32 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/chief-minister-mkstalin-released-108-rare-devotional-texts-which-have-been-reprinted-881552

[7] தினத்தந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு. ஸ்டாலின், By தந்தி டிவி, 19 ஜனவரி 2023 1:49 PM

[8] https://www.thanthitv.com/latest-news/cm-stalin-released-108-devotional-books-on-the-behalf-of-hindu-religious-endowments-department-162790

[9] தினமலர், 108 பக்தி நுால்கள் வெளியீடு Added : ஜன 20, 2023 00:19 …

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3221907

[11] தமிழ்.இந்து, புதுப்பொலிவுடன் 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார், செய்திப்பிரிவு, Published : 20 Jan 2023 05:49 AM, Last Updated : 20 Jan 2023 05:49 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/931352-108-rare-bhakti-books-with-new-editions.html

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (2)

06-12-2022 அன்று பிறப்பிக்க்கப் பட்ட ஆணை – திருச்செந்தூர் ஆக்கிரமிப்பு: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]: “திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்கள், போலி பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியன தாக்கல் செய்யப்பட்டன. திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[3]: ”திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதினத்திற்கு சொந்தமான சொத்துகளுக்கு 1971 வரை வாடகை செலுத்தி வந்தனர். அதன்பிறகு, முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். ….ஆதீன மடத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசமிருக்கும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக மீட்டு ஆதீன மடத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[4]. அதற்குள் இன்னொரு வழக்கு வந்து விட்டது போலும்.

12-12-2022 அன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது: திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்[5]. அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது[6]. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது[7]. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்[8]. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது[9]. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இது சட்டவிரோதமானது[11]. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது[12]. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது[13]. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்[14]. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

2016ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிநாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடிக்கக் கோரி சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது[15]. மதுரை ஆதீனத்தின் மேலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மதுரைஆதீனத்துக்குச் சொந்தமாக மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் உள்ளதாகவும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள பன்னத்தெரு கிராமத்தில் உள்ள நிலத்தில் தங்களிடம் அனுமதி பெறமலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டடிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பன்னத்தெரு பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென குற்றம்சாட்டப்பட்டது. தங்களது நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இடைக்கால விதிப்பதோடு அதனை இடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது,  நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது..

15-11-2022 – கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது[16]. திருச்சி சாவித்ரி துரைசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது[17]: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக பல பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதீனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் வரம் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] தமிழ்.இந்து,திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கி.மகாராஜன், Published : 07 Dec 2022 06:32 PM, Last Updated : 07 Dec 2022 06:32 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911413-lands-of-darumapuram-atheena-mutt-in-tiruchendur-to-be-recovered-high-court-orders-charities-department-1.html

[3] பத்திரிக்கை.காம், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, By A.T.S Pandian, December 7, 2022.

[4] https://patrikai.com/thiruchendur-land-worth-rs-100-crore-belonging-to-dharmapura-aadheena-mutt-encroached-high-court-order-to-recover/

[5] மாலை முரசு, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்…! ரத்து செய்யகோரிய வழக்கு..!, webteam webteam, Dec 13, 2022.,19:26.

[6] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-private-company-illegally-registered-the-land-belonging-to-Madurai-Adheenam–Cancellation-of-the-case

[7] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-14@ 00:11:35

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=822214

[9] தினத்தந்தி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்- அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, தினத்தந்தி டிசம்பர் 14, 1:40 am.

[10] https://www.dailythanthi.com/News/State/madurai-belongs-to-adeena1200-acres-of-land-should-be-recovered-madurai-high-court-orders-the-charities-department-857420

[11] தினகரன், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு, 2022-12-13@ 17:19:26.

[12] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=822113

[13] தமிழ்.ஒன்.இந்தியா, 1191 ஏக்கர் நிலம்.. தனியார் நிறுவனத்திடம் வழங்கிய மதுரை முன்னாள் ஆதீனம்! மீட்க உயர்நீதிமன்றம் ஆர்டர், By Noorul Ahamed Jahaber Ali, Updated: Tuesday, December 13, 2022, 20:14 [IST]

[14] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/high-court-orders-to-seize-1191-acre-land-of-madurai-aadheenam-489467.html

[15] மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்க தொட்டியை இடிக்கக் கோரி வழக்கு, NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 15, 2022, 22:06 IST  , Published by: Raj Kumar, First published: August 15, 2022, 22:06 IST

https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-adeenam-files-case-on-construction-of-water-tank-786692.html

[16] தினமலர், கோவில் நிலத்தை மீட்க ஒத்துழைக்காவிடில் சிறை! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, Updated : நவ 16, 2022  07:12 |  Added : நவ 16, 2022  07:11.

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=3171654

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திசெம்பர்15, 2022

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: கோவில் நிலங்களுக்காக சட்டப்படி போராடும் பிரமிக்க வைக்கும் வீரர்! (1)

திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்: திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில்ருந்து மீட்கப் போராடி வருகிறவர்களில், சமீபத்தில், பல வழக்குகள், தீர்ப்புகள், நீதிபதி ஆணைகள், செய்திகள் என்று பலவற்றை வாசிக்கும் பொழுது, “திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்,” என்று தோன்றும் போது, பிரமிப்பாக இருக்கிறது. திருமூலர் சொல்லியபடி, “கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும், அரசாட்சி வீழும்,” என்பது போல, இவரது வழக்குகளிலிருந்து, நீதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பார்கள், குத்தகையாளர்கள், ஆட்சியாளர்கள் முதலியோர் அஞ்சுவார்களா, இல்லை, “கடவுள் இல்லை,” என்று ஈவேராவை நம்பி, திராவிடத்துவாதிகள் துணை கொண்டு, தொடர்ந்து, சட்டங்களை வளைப்பார்களா என்றெல்லாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக கடவுள் இருக்கிறார், “தெய்வம் நின்றுதான் கொல்லும்”! வாழ்க அவரது பணி!

36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருக்கிறது: இந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது.

2018ல் திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கு: இந்தச் சூழலில் அண்மைக் காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப் படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்[1]. அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது[2]… “தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்கஉத்தரவிட்டது: இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க’ உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.   

மனுதாரர் ராதாகிருஷ்ண சொன்னது: இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்… “உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீனத்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வாங்கும் நடுத்தர மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம் சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்…,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.

`சிவன் சொத்து குல நாசம்என்றாலும், விற்கிறார்கள், வாங்குகிறார்கள்: `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

18-10-2022 அன்று விசாரணைக்கு வந்தது, 28-10-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 18, 2022 அன்று  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது[3]. அப்போது நீதிபதிகள், “ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, ” என கேள்வி எழுப்பினர்[4]. தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

15-12-2022.


[1] விகடன், கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்துகளை வாங்கலாமா?, சி.வெற்றிவேல், Published:12 Jun 2018 4 PM;; Updated:12 Jun 2018 4 PM.

[2] https://www.vikatan.com/news/agriculture/customers-are-on-the-waiting-list-for-our-ghee-amazing-youth-in-ghee-production?pfrom=latest-infinite

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டவைஉயர் நீதிமன்ற மதுரை கிளை, Written by WebDesk, Updated: October 20, 2022 7:20:27 am.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/pil-plea-to-protect-and-safeguard-properties-of-madurai-adheenam-527641/

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்துவ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! இந்துமதத்தைக் காக்கவா? (2)

திசெம்பர்9, 2022

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்துவ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! இந்து மதத்தைக் காக்கவா? (2)

யார் இந்த சத்தியவேல் முருகனார்?: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அன்னைத் தமிழ் வழிபாடு குறித்து கோவில்களில் பணிபுரியும் புலவர்களுக்கான பயிலரங்கத்தில் சுகிசிவம், சத்தியவேல் முருகனார் ஆகியோர் புலவர்களுக்கு பயிற்சி அளித்தனர். தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் பராமரிப்புகளை செம்மைப்படுத்தவும் ஏற்படுத்தப் பட்ட, 17 பேர் இக்குழுவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் செயல்படுவர் மற்றும், பதவிவழி அலுவல் வழி உறுப்பினர்களாக இந்து சமய அறநிலையத்துறை செயலர், ஆணையர் ஆகியோர் செயல்படுவர். இந்தக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்[1]. இவ்வாறு இவர் திராவிடத்துவவாதியாக “தமிழ்,” “சைவம்” போர்வையில் ஆதிக்கம் செல்லுத்தி வருகிறார். வள்ளலார் போர்வையில், நாத்திகத்தை ஆதரிப்பது போல, ஈவேராவைத் தூக்கிப் பிடித்து, திரிபு விளக்கம் கொடுத்தார். சுகிசிவமும் அதே பாணியில் இருக்கிறார். சமஸ்கிருத எதிர்ப்பு, வேதங்கள் மறுப்பு முதலியவை அவற்றுடன் சேர்ந்து வருகின்றன. இவர்களது யூ-டியூப் உரைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

காசுக்காகப் பேசுபவர்களை இந்து அறநிலையத் துறையில் இருக்கக் கூடாது: கட்டண பேச்சாளர், காசுக்காக பேசுபவர் மற்றும் இருக்கின்ற கூட்டத்தைத் திருப்தி படுத்தும் வகையில் சொற்பொழிவு செய்பவர் என்பது பொதுவாக அந்த பார்வையாளர்களுக்கு பொருத்தமான ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மக்கள் குழுக்களுடன் பேசுவதற்கு பணம் பெறுபவர் ஆவார். அதில் சித்தாந்தங்களில் ஊறியவர் பதவி, அந்தஸ்து, பிரபலம் போன்றவற்றிற்கும் ஆசை, பேராசை, மோகம் கொண்டு, தமது கொள்கைகளை மறந்து, எந்த நியாமும் இல்லாமல் மேடைக்கு ஏற்றபடி திரித்துப் பேசவும் தயாராகி விடுவர். தமிழகத்தைப் பொறுத்த வரையில் பெரும்பாலான பேச்சாளர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். 2013ல், “இனி, வரும் காலங்களில், கோவிலுக்குச் சொந்தமான திருமண மண மண்டபங்கள், கோவிலை சுற்றியுள்ள வளாகத்தில், இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை உடையவர்களுக்கும், நாத்திகவாதத்தை கொள்கையாக கொண்டவர்களுக்கும் இடம் அளிக்க கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங் களுக்கும் இது பொருந்தும். மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீக தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே, அனுமதிக்க வேண்டும்; வாடகைக்கு கொடுக்க வேண்டும்,” என்று, சுற்றறிக்கை விடப்பட்டது. அதே போல பேச்சாளர்களுக்கும் பொறுந்தும் வகையில் வரைமுறை இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அறங்காவலலாக நியமிக்கக் கூடாது: சுப வீரபாண்டியன், அருணன், சத்தியவேல் முருகன் ஆகியோர் அறங்காவலர் பொறுப்பின் எல்லை கோயில் வருமானத்தையும் செலவுகளையும் மேற்பார்வை செய்யும் நிதி நிர்வாகத்தோடு மட்டுமே தொடர்புடையது என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை உடையவரா இல்லையா என்பதற்கும் அவரது பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவர் நேர்மையானவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருந்தால் போதும் என்றும் அதனால் இந்தச் சட்டத் திருத்த முன்வடிவு தேவையற்றது என்ற கருத்தை சத்தியவேல் முருகன் சொன்னது நினைவில் கொள்ளவேண்டும். இத்தகைய பிழைப்பிற்காக ஆன்மீகப் போர்வையில் பேசுபவர் தான், பெரியாரையும் நியாயப் படுத்தி, ஏதோ சீர்திருத்தவாதி போன்று திரிபு விளக்கம் கொடுத்து வருகிறார்கள். திராவிடத்துவவாதிகள் ஆட்சி, அதிகாரம், முதலிய பதவிகளில் வந்த பிறகு தான் சமூகம் சீரழிந்து, பற்பல குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்து அறநிலைத் துறையை விட்டு விலக வேண்டும் அல்லது தாம் அப்பதவிகளுக்கு ஒவ்வாதவர்கள் என்றதால் ஏற்றக் கொள்ளவே கூடாது: இன்றுள்ள அறங்காவலர்களில் பெரும்பாலானோர் பரம்பரை அறங்காவலர்கள். அவர்களிலும் பாதிக்கு மேல் அரசியல் சார்புடையவர்கள். ஏதோ ஒரு வகையில் ஒரு கட்சியின் சார்புடையவர்களாகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநகராட்சி, வட்டார ஆட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தாம். வேறு சிலர் கட்சி சார்பில்லாமல் பரம்பரை செல்வாக்கு காரணமாக அறங்காவலராகப் பணியாற்றுபவர்கள். பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத அல்லது அமையாத இடங்களில் அரசாங்கம் புதிதாக அறங்காவலர்களை நியமிக்கிறது. அதுவும் அநேகமாக ஆளுங் கட்சியின் சார்பானவர்களாகவே அமைந்து விடுகிறது. ஆகையால், இவர்களால் கோவில்களுக்கு தொடர்ந்து கேடு தான் விளையும். நாத்திகர், பெரியாரிஸவாதிகள் பகுத்தறிவுவாதிகள் வந்ததாலும் இதே சீர்கேடுகள் தான் 1970லிருந்து ஏற்பட்டு வருகிறது. உண்மையில் அவர்கள் தான் இந்து அறநிலைத் துறையை விட்டு விலக வேண்டும் அல்லது தாம் அப்பதவிகளுக்கு ஒவ்வாதவர்கள் என்றதால் ஏற்றக் கொள்ளவே கூடாது. மீறி வருவதால் தான் கொள்ளை, கொலை, சிலை கடத்தல் என்று எல்லாவித குற்றங்களும் நடந்து வருகின்றன. 

மேற்கண்ட அறிக்கையை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு: இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்[2]. அவரது மனுவில், கோயில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது[3], உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது[4].  இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது[5]. ஆகமங்கள் பற்றி ஏதும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும்[6], ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும்  அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சத்தியவேல் முருகன் ஏன் ஐவர் குழுவில் இருக்கக் கூடாது?: உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இந்த சுற்றறிக்கை உள்ளது. ஆகமம் பற்றி கூறவும் கேள்விப் பட்டியலை தயாரிக்கவும் சத்தியவேல் முருகனுக்கு தகுதி இல்லை[7]. குழுவில் உறுப்பினராக அவரை நியமிக்கவும் தகுதி இல்லை. சமஸ்கிருதம் குறித்து சத்தியவேல் முருகனுக்கு தெரியாது[8]. சமஸ்கிருதத்தில் தான் ஆகமம் இருக்கும். ஆகமத்தையும் ஹிந்து பாரம்பரியத்தையும் நீர்த்து போகும் விதமாக விஷமத்தனமாக கேள்விகளை சத்தியவேல் முருகன் கேட்டுள்ளார். எனவே சத்தியவேல் முருகன் தயாரித்த கேள்வி பட்டியலையும் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும். ஐவர் குழுவில் சத்தியவேல் முருகனை நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும்.

ஆகமங்களைக் கண்டறிவது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவு: இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது[9].  “உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கடந்த நவ. 4-ம் தேதி சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது[10]. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களைக் கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

09-12-2022


[1] இந்தக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி, ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கருமுத்து கண்ணன், இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், ஸ்ரீமதி சிவசங்கர், மல்லிகார்ஜூன சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/911921-interim-stay-on-circular-sent-by-hr-ce-department-with-50-questions-high-court.html

[3] இ.டிவி.பாரத், அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை, டிசம்பர் 8, 2022.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/madras-high-court-granted-an-interim-stay-on-the-circular-of-the-department-of-charities/tamil-nadu20221208143021430430154

[5]  தினகரன், கோயில்களில்ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை, 2022-12-08@ 13:30:33

[6]  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=820711

[7] தினமலர், ஆகமம் தொடர்பாக 50 கேள்விகள்,  Added : டிச 09, 2022  02:05.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3189738

[9] தினமணி, ஆகம விதிகள் தொடா்பான அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை, By DIN  |   Published On : 09th December 2022 12:52 AM  |   Last Updated : 09th December 2022 12:52 AM

[10]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/09/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3963778.html

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்து வ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! (1)

திசெம்பர்9, 2022

ஆகமங்கள் பற்றி திடீரென்று கேள்விகள் கேட்கும் திராவிடத்துவ அரசு, அதன் சார்புடைய பெரியாரிஸ முருகனார், சிவனார், நந்தியார் முதலியோர்! (1)

திமுக ஆட்சிக்கு வருதல், இந்து அறநிலையத் துறையில் திராவிடத்துவவாதிகளின் தலையீடு அதிகமாதல்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்து அறநிலையத் துறையில் திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள் முதலியோர்களின் நுழைவு, மூக்கு நுழைப்பு முதலியன அதிகமாகிக் கொண்டு வருகின்றது. “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை” என்று ஆரம்பித்து, தினசரி நடக்கும் பூஜைகள், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றுள் தலையிட ஆரம்பித்துள்ளனர். நீதிமன்றங்களில் பல வழக்குகளில் சிக்கியுள்ள நிலைகளில், அவற்றை நீர்க்க, பர்பல வழிகளில் வேறு விதமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தான், கோவில்கள் பற்றி ஸ்டாலினே பேசி வருவதும் தெரிகிறது. இல்லையெனில் இவர்களுக்ககிதைப் பற்றிப் பேச வேண்டிய தேவை-அவசியம் இல்லை. இந்து அறநிலையத் துறை, அரசு முதலியவற்றின் ஆதரவு, நிதியுதவி போன்றவை இல்லாமல் இருந்தாலும், பக்தர்களின் உதவியுடன் பல காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால், இப்பொழுது, எல்லாவற்றிற்கும் அரசு அனுமதி தேவை, எல்லாமே, முதலமைச்சர் உத்தரவுடன் நடக்கின்றன, இந்து அறநிலையத் துறை அமைச்சரின் தயவில் நடக்கின்றன என்பது போலக் காட்டிக் கொண்டு, விளம்பரம் தேடும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றன.

கோவில் பாதுகாப்பு ஆர்வலர்கள் வழக்குத் தொடுத்தல்: இந்து அறநிலையத் துறை சார்பில்பல குழுக்கள் உருவாக்கப் பட்டு, அவற்றில், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவுவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்று இந்துவிரோதிகளும் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். இவ்விசயம் தெரிய வரும் பொழுது, பக்தர்கள் சங்கடமடைகிறார்கள். அத்தகைய நுழைவுகள், சதாய்ப்புகள், அத்துமீறல்கள் எப்படி, ஏன் நடக்கின்றன என்பது திகைப்பாக இருக்கின்றன. எடுத்துக் காட்டும் போது, அரசியல் மயமாக்குகிறார்கள், கம்யூனலிஸமாக்குகிறர்கள், காவிமயம் ஆக்குகிறார்கள் என்றெல்லாம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பிவருகிறார்கள். அந்நிலையில், ஆலயங்கள் சம்பந்தப் பட்ட திருப்பணிகள், சேவைகள், கிரியைகள் முதலியவற்றில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு வருவதால், பக்தர்களுக்கு சந்தேகங்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், “ஆலயம் காப்போம்” போன்ற இயக்கங்களின் சார்பாக, சட்டப்படி செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட அறநிலையத்துறையின் சுற்றறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்[1]. இதுகுறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை[2]:

  1. கோயில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் மற்றும் கோயிலின் பெயர், இறைவன் – இறைவியர் பெயர்,
  2. சைவக் கோயில் எனில் பாடல் பெற்ற கோயிலா, வைப்புத்தலம் பாடிய நாயன்மார்கள் பெயர்/பெயர்கள் யாவை.
  3. கோயில் வைணவக் கோயில் எனில் மங்களாசாசனம் பெற்ற கோயிலா. பாடிய ஆழ்வார்கள் பெயர்கள் யாவை.
  4. கோயில் முருகன் கோயிலா, படைவீட்டில் ஒன்றா திருப்புகழ், பிள்ளைத்தமிழ் போன்ற பாடல்கள்  பாடப்பெற்ற கோயிலா.
  5. கல்வெட்டுச் சான்றுகள் உள்ளனவா. கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது. வரலாற்றுக்கு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா.
  6. கோயில் வழிபாடு எந்த ஆகமத்தின்படி நடைபெறுகிறது. கட்டுமான ஆகமம் எதுவோ அதே ஆகமப்படி தான் வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா.
  7. கோயில் வழிபாடு குறிப்பிட்ட ஆகமப்படி நடைபெறவில்லை என்றால், வேறு ஏதேனும் ஆகமபந்ததியில் நடைபெறுகிறதா. 
  8. கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது? என்றால் எந்த நாளிலிருந்து எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன. அது எதில் தொடங்கி எதில் முடிகிறது.
  9. கோயிலில் தேவியுடன் சுவாமியா அல்லது, பிராட்டிக்குத் தனி சந்நிதி உள்ளதா.
  10. கோயிலில் பாஞ்சராத்ரப்படி பரம் வியூகம், விபவம், அந்தர்யாமித்யம், அரிச்சை ஆகிய இவ்வகை வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா.
  11. கோயில் வடகலையைச் சேர்ந்ததா அல்லது தென்கலையைச் சேர்ந்ததா.
  12. கோயில் வழிபாட்டில் மந்திராசனம், ஸ்நானாசனம், அலங்காராசனம். போசன ஆசனம். புனரி மந்த்ராசனம், பரியங்காசனம் ஆகிய ஆறு ஆசனங்களும் கற்பிக்கப்பட்டு முறைப்படி வழிபாடு நடைபெறுகிறதா.
  13. கோயில் அர்ச்சகர்கள் ஆகமப்படி தாபம் என்கிற வகை தீக்கையால் தோளில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டவர்களா.
  14. எவ்வகைத் தீக்கை பெற்றவர்கள்.  கோயில் அகோபில மடத்தைச் சார்ந்ததா ஜீயர் மடத்தைச் சார்ந்ததா. மார்கழி மாதம் முன்பத்து, பின்பத்து விழா கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும்[3].  

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது[4].

60-70 திராவிடத்துவ ஆட்சி காலத்தில் ஒன்றும் செய்யாமல் 2022ல் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?: ஏதோ இவற்றையெல்லாம் இப்பொழுது தான் புதியதாக அறியப் பட்டவை போல, கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன். உண்மையில், ஆகமங்களின் படி, ஆகம விதிமுறைகளின் படி கட்டப் பட்ட கோவில்களின் நிலை இப்பொழுது ஏன், இவ்வாறு இருக்கின்றன; நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கோவில்கள் ஏன் சிதிலமடைந்து கிடக்கின்றன; கடந்த 60-70 திராவிடத்துவ ஆட்சிகாலத்தில் ஏன் கண்டு கொள்லாவில்லை; நடந்து கொண்டிருந்த பல கிரியைகள், சடங்குகள், பூஜைகள், விழாக்கள் ஏன் நடைபெறாமல் இருக்கின்றன, இப்பொழுது 2022ல் ஏன் இத்தனை கேள்விகளை எழுப்ப வேண்டும், இதன் பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ந்தல், அவர்களது, இந்துவிரோதம் தான் வெளிப்படும். அதை மறைக்கத்தான், இத்தனை வேடம் போட்டு, கோவில்களைப் பற்றி பேசி வருகின்றனர்.

சத்தியவேல் முருகன் மேற்குறிப்பிட்டவை உட்பட, 50 கேள்விகள் தயாரித்ததாகத் தெரிகிறது: கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[5]. தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது[6]. இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு  நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது[7]. இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் மேற்குறிப்பிட்டவை உட்பட, 50 கேள்விகள் தயாரித்ததாகத் தெரிகிறது. தயாரித்த கேள்விளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட நவ.4-ம் தேதியிட்ட சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

08-12-2022


[1] தினகரன், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?: அறிக்கை அளிக்க ஆணையர் குமரகுருபரன் உத்தரவு, 2022-11-28@ 00:48:21

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=817892

[3] தமிழ்.நியூஸ்.18, தமிழகத்தில் கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, NEWS18 TAMIL, LAST UPDATED : NOVEMBER 24, 2022, 14:04 IST, Published by: Vaijayanthi S, First published: November 24, 2022, 14:04 IST.

[4] https://tamil.news18.com/news/spiritual/what-are-the-agamas-followed-in-temples-order-to-file-report-hrnc-843488.html

[5] காமதேனு, ஆகமம் கண்டறிவது தொடர்பான 50 கேள்விகள்: அறநிலையத் துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத்தடை, Updated on : 8 Dec, 2022, 2:13 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/hc-orders-interim-stay-on-circular-issued-by-hindu-religious-charities-department-to-locate-temple-agama

[7] தமிழ்.இந்து, 50 கேள்விகளுடன் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 Dec 2022 03:09 PM; Last Updated : 08 Dec 2022 03:09 PM.

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (4)

தொல்லியல்  துறை நிர்வாகம் சிறப்பாக இருக்குமா?: ”அப்படியும் சொல்ல முடியாது. முன்பெல்லாம் தொல்லியல் துறையில் உள்ள அனுபவம் மிக்க நிபுணர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வேலைகளும் நிதானமாக நடந்தது. ஆனால், தற்போது கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.  ஒதுக்கப்படும் நிதியை, நடப்பு நிதியாண்டுக்குள் செலவழித்து விடவேண்டும் என்பதற்காக வேகவேகமாக வேலை செய்து கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சை பெரியகோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான ஒப்பந்தம் ஆந்திராவில் உள்ள கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ராஜராஜசோழனுடைய நான்கு கல்வெட்டுத் தூண்களை உடைத்துவிட்டனர். இதற்கான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. 

முஸ்லிம்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்: 16 -ம் நூற்றாண்டில், வடஇந்தியாவில் இருந்து படையெடுத்து வந்து நம் கோயில்கள் பலவற்றை இடித்தனர். நம் வரலாறுகளை அழித்தனர். அவர்கள் செய்ததை விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்.  நம்முடைய வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவற்றின் நிதர்சனமான சாட்சியங்களாகவும், காப்பகங்களாகவும் திகழும் ஆலயங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் நம் கோயில்களைப் பாதுகாத்து நம் சந்ததியினருக்கும் விட்டுவைக்க முடியும். நம் கலை, கலாசாரம், தொன்மைப் பண்பாடு போன்றவை காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யமுடியும்” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

2019ல் விடுத்த பக்தர்களின் கோரிக்கை: நாகநாதசுவாமி கோயிலில் பழமைமாறாமல் திருப்பணி செய்ய தமிழக தொல்லியல் துறையும், அறநிலையத்துறையும் முடிவு செய்து அதற்கான பணிகளை 2015ம் ஆண்டு ரூ.35 லட்சத்தில் துவங்கியது. விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சை சாலையை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் பணியை துவங்கும்போது இந்த கோயில் சாலையில் இடையூறாக உள்ளதால் இடிக்க வேண்டுமென அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்[1]. அப்போது பழமையான கோயிலை இடிக்காமல் பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசிடம் வரலாற்று ஆய்வாளர்கள், சிவனடியார்கள் முறையிட்டனர். ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளனர். கோயில் திருப்பணியை விரைவில் துவங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்[2]. இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் தலைவர் திருவடிகுடில் சுவாமிகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது[3]: “…………இந்த இடம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், இடையூறாக உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தப்போவதாகவும் அறிகிறோம்.………………… கடந்த முறை இந்த சாலை அகலப்படுத்தப்பட்ட போதும் இதுபோன்ற வகையில் ஏற்கெனவே இருந்த பழமையான மதில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. சாலை ஒப்பந்ததாரர்கள் தான் தனது சொந்த செலவில் மீண்டும் புதிதாக வடக்குப் பகுதி மதிலை கட்டிக் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் மதில் இடிக்கப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக யாரும் தடுக்க முடியாமல் போய்விட்டது. ……… சுமார் 1000 ஆண்டுகளை கடந்தும், நமது பாரம்பரியத்தை பறைசாற்றியும் கல்வெட்டுகளால் பழம்பெருமைமிக்க வரலாறுகளையும் சான்றுகளுடனம் உள்ள இக்கோவிலை பாதுகாக்க வேண்டும் ……………….”  என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

2021ல் பக்தர்களின் கோரிக்கை:  இந்த கோவிலை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மகாமக திருவிழாவின்போது கருங்கற்களை பிரித்தனர்[5]. ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிலைகளை தொல்லியல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து தனிகொட்டகை அமைத்து அங்கு பாதுகாப்பாக வைத்தனர்[6]. அதன் பின்னர் கோவிலில் திருப்பணிகள் செய்ய தொடங்கினர். ஆனால் சில வாரங்களிலேயே அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த கோவில் தற்போது செடி, கொடிகள் மண்டி, புற்கள் முளைத்து புதர்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலில் கோபுரம் மற்றும் மதில் சுவர்களில் செடிகள், மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து பல்வேறு ஆண்டுகள் ஆனதால் திருப்பணி வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த பணிகள் தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் நடைபெற வேண்டும். முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர் திருப்பணி வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் தெரிவித்தனர். உடனடியாக இந்த கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை பாதுகாத்து, வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2014லிருந்து இக்கோவிலில் நடந்தவை[7]: பின்னர், இந்த ஆலயம் அரசு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது என்று பக்தர்கள் மன்றமான ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சுட்டிக்காட்டினார்[8]. இதையடுத்து, சுமார் ₹32 லட்சம் செலவில் கோயிலை புதுப்பிக்க மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கியது மற்றும் HR&CE துறை பணியை மேற்கொண்டது. “2014ல் பாலாலயம் நடத்தப்பட்டு, தெய்வ விக்கிரங்ங்கள் தற்காலிகக் கொட்டகைக்கு மாற்றப்பட்டு, புதுப்பித்தல் தொடங்கியது. ஆனால் ஒப்பந்ததாரருக்கு தேவையான நிபுணத்துவம் இல்லாததால், கோவில் கிட்டத்தட்ட இடிக்கப்பட்டது. அகற்றப்பட்ட கற்களுக்கு சரியான எண்கள் போடப்படவில்லை. அவை சிதறிக் கிடக்கின்றன,” என்று சுவாமிகள் கூறுகிறார். “கோயிலை ஆய்வு செய்த யுனெஸ்கோ குழுவினர் பணியின் மீது அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், 2016 ஆம் ஆண்டு மாநிலத்தில் உள்ள கோவில்களை சீரமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் நிபுணர் குழுவின் வழிகாட்டுதலுடன் கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே. சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இந்தக் கோயிலில் தமிழ்க் கூத்துக்கான தனித்துவம் உட்பட பழமையான கல்வெட்டுகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். சமீபத்தில் திருவடிக்குடில் சுவாமிகள் கேட்ட கேள்விக்கு, கும்பகோணத்தில் உள்ள மனிதவள HR& CE துறை, யுனெஸ்கோ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தொல்லியல் துறை மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. “நாங்கள் சமீபத்தில் கோவிலை சீரமைக்க கோரி நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டினோம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு கூட திட்டமிட்டோம், ஆனால் தொற்றுநோய் காரணமாக அதை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. புதிய அரசாங்கத்தின் மாநில பட்ஜெட்டில் கணிசமான ஒதுக்கீட்டைப் பெற்ற தொல்லியல் துறை, இந்த பழமையான கோவிலை பாதுகாக்க விரைவில் புதுப்பிக்கும் என்று நம்புகிறோம்,” என்று சுவாமிகள் கூறினார்.

2002 வரை இக்கோவில் விவகாரம் மாறாமல் இருப்பது: 2022ல் இப்பொழுது, ஶ்ரீரங்கம் நரசிம்மன், இக்கோவிலுக்குச் சென்று, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கோவில்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல், தொடர்ந்து வழக்குகள் போட்டு, நிலைமையை எடுத்துக் காட்டுதல் என்று சிறப்பான பணியை செய்து வருகிறார். ஆக, இத்தனை ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து, அக்கோவில் மேலும் மோசமான நிலைக்குச் சென்றுக் கொன்டிருப்பதை அவரது விளக்கத்திலிருந்து அறிய முடிகிறது. தமிழகத்தில், சோழர்களைப் பற்றி லவ்-ஹேட் / விருப்பு-வெறுப்பு அரசியல் தான் நடந்து கொன்டிருக்கிறது. ஒரு வகையான அத்தகைய முரண்பாட்டை சித்தாந்தம் ஆக்கி, அதையே அவ்வப்பொழுது பேசுவதும், எழுதுவதும், இப்பொழுது இணைதளங்களில் தமக்கு விருப்பமான வகையில் பதிவுகள் செய்வது,  வீடியோக்கள் போடுவதும் வழக்கமாகி விட்டது. அதையே வியாபாரமாக்கி, வணிகமாகவும் மாற்றி விட்டனர். அத்தகைய நிலையில், ஏதோ டிவி பட்டி மன்றங்கள், வாத-விவாதங்கள் போன்றாகி, பொழுது போக்கு அம்சமாகி விட்டது. படித்து-கேட்டு-ரசித்து மறந்து விடும் நிலைக்கும் போய் விட்டது.

வேதபிரகாஷ்

06-11-2022


[1] தினகரன், உலக புகழ்பெற்ற மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் திருப்பணி துவங்காவிட்டால் போராட்டம், 06:46 am Jun 14, 2019 | dotcom@dinakaran.com(Editor)

[2] https://m.dinakaran.com/article/news-detail/941127

[3] தினமணி, மானம்பாடி நாகநாத சுவாமி கோவிலை அகற்ற ஆட்சேபனை, By dn  |   Published On : 09th May 2013 03:42 PM  |   Last Updated : 09th May 2013 03:42 PM 

[4] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/may/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-676406.html

[5] மாலைமலர், மானம்பாடி நாகநாதசாமி கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணி செய்ய பக்தர்கள் கோரிக்கை, By மாலை மலர்30 ஜூன் 2021 2:21 PM (Updated: 30 ஜூன் 2021 2:21 PM)

[6] https://www.maalaimalar.com/devotional/worship/2021/06/30142128/2782559/Temple-Renovation-devotees-request.vpf

[7] The Hindu, Heritage activists for resumption of Manambadi temple renovation, SPECIAL CORRESPONDENT,  TIRUCHI AUGUST 18, 2021 20:01 IST; UPDATED: AUGUST 19, 2021 08:28 IST

[8] https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/heritage-activists-for-resumption-of-manambadi-temple-renovation/article35981995.ece

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (2)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (2)

2017 – கோவில்களில் யுனெஸ்கோ மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வுஅறிக்கை[1]: 2006ல் இவ்வழக்கு தொடரப் பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு, ஜூலை, 2016ல், ஒரு உத்தரவின் வாயிலாக, அறநிலையத்துறை திருப்பணி வேலைகள் செய்த, 10 கோவில்களில், ‘யுனெஸ்கோ’ ஆய்விற்கு வழிவகை செய்தது. அப்போது கோவில்களில் செய்துள்ள திருப்பணிகள், வர்ணங்கள் அழிந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்[2]. அப்போது அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன், தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.  இந்த ஆய்வை விரிவாக செய்த, யுனெஸ்கோ நிறுவன வல்லுனர்கள், விரிவான அறிக்கையை, 2017 ஆகஸ்டில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

யுனெஸ்கோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்: அந்த அறிக்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை பற்றி, யுனெஸ்கோ கூறியுள்ளவை சில, நமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பவை[3]:

* பெரிய அளவில் தொன்மை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, அறநிலையத்துறைக்கு திறனும் இல்லை; தகுதி படைத்த வல்லுனர்களும் இல்லை.

* இத்தகைய வேலைகள் மேற்கொள்ள, இவர்களிடம் முறையான வழிமுறைகள் இல்லை. தொன்மை பராமரிப்பு அறிந்த ஒப்பந்தக்காரர்களும் இல்லை.

* வேலை நடக்கும் இடங்களை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான ஸ்தபதிகள் திறனற்றவர்களாக இருந்தனர். அவர்களின் தகுதி, சந்தேகத்துக்கு இடமாக இருந்தது.இதை, தலைமை ஸ்தபதியும் ஒப்புக் கொண்டார்.

*சில அதிகாரிகளிடம் தொன்மை குறித்து, சிறிது உணர்வு காணப்பட்டது போல் தெரிந்தது. அவர்களுக்கு, எதிர்காலத்தில் தொன்மை குறித்த பயிற்சி அளிக்கலாம். ஆனால், பெரும்பாலான அதிகாரிகள், சிறிது கூட அடிப்படை தகுதி இல்லாமலும், திறமை இல்லாமலும், அத்தகைய பொறுப்பிற்கு பொருந்தாதவர்களாகவும் காணப்பட்டனர்.

*எந்த தொன்மையான கோவில் திருப்பணியிலும், இவர்கள் ஆகம வல்லுனர்களை கலந்து ஆலோசித்ததாகவே தெரியவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர, பல கோவில்களில், திருப்பணி என்ற பெயரில் நடந்த மோசமான செயல்களை, யுனெஸ்கோ சுட்டிக் காட்டியுள்ளது.

குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளத்தை ஒட்டி செய்யப்பட்ட வேலைகள், மிகுந்த குறைபாடுகள் உள்ளவை. மானம்பாடி நாகநாத சுவாமி கோவில், எந்த காரணமும், யோசனையும் இல்லாமல் இடித்து தள்ளப்பட்டது. மிகுந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, பழவேற்காடு ஆதி நாராயண பெருமாள் கோவில், ஆகம, தொல்லியல் கொள்கை களுக்கு விரோதமாக இடிக்கப்பட்டது.

2017ல் நாத்திக ஸ்டாலின் வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டது[4]: திக, திக வழி திமுக, ஈவேரா-அண்ணா, கருணாநிதி போன்றோரின் நாத்திகம், இந்துவிரோதம் அறிந்ததே. அதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது, கோவில்கள் பற்றி வக்காலத்து வாங்கியது போல அறிக்கை விட்டது தமாஷாக உள்ளது. அதிமுக அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்[5]. இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான .தி.மு.. அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோவில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை .நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது[7]………..திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பகுத்தறிவு வழியில் நடைபோடுகின்ற இயக்கம். கோவில்கள்சிற்பங்கள் உள்ளிட்டவற்றை வரலாற்றுப் பார்வையுடன் அணுகுகின்ற இயக்கம்[8]. நீதிக்கட்சி ஆட்சியாளர்களின் மக்கள் நலச் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோவில்கள் பாதுகாப்புச் சட்டத்தினால் அமைந்த அறநிலையத்துறை வாயிலாக பாரம்பரியம்மிக்க கோவில்கள் சீரமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகள் நிலைநாட்டப்பட்டன[9]………

ஸ்டாலின் திமுக சாதனைகளைப் பட்டியல் இட்டது: திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் மயிலாப்பூர் கோவில் குளம் முறையாகத் தூர்வாரப்பட்டது. திருவாரூர் கோவிலின் ஆழித்தேர் பழமைத்தன்மை மாறாமால் நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்டது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. பழந்தமிழரின் கட்டடக் கலை இலக்கணங்களை அறிவியல் வளர்ச்சிக்கேற்ற வகையில் பயன்படுத்தி, குமரி முனையில் 133 அடியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு உயர்ந்து நிற்கிறது. உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.…,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அட்சிக்கு வந்தவுடன், எத்தனை கோவில்கள் இடிக்கப் பட்டன என்பதை நினைவுகூற வேண்டும்.

வேதபிரகாஷ்

06-11-2022


[1] தினமலர், உண்மையை உணர்வோம்; கோவில்களின் தொன்மை காப்போம், Updated : மார் 11, 2020  03:32 |  Added : மார் 10, 2020  01:34

தமிழ்.வணக்கம், புனரமைப்பு பெயரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் சிடைப்பு: தமிழக அரசு மீது உனெச்கோ குற்றச்சாட்டு, அண்ணன், ஆகஸ்ட்.9, 2017.

[2] https://www.vikatan.com/arts/literature/133609-unesco-report-about-traditional-temples-destroys

[3]https://tamilvanakkam.com/2017/08/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

[4] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களை தமிழக அரசு சிதைத்து வருகிறது: மு. ஸ்டாலின், Written by Ganesh Raj, August 16, 2017 6:51:39 pm

[5] https://tamil.indianexpress.com/tamilnadu/unesco-mentioned-tamilnadu-government-destroys-historical-symbols-says-mk-stalin/

[6] தமிழ்.இந்து,  அதிமுக அரசு திருக்கோயில்களை சிதைப்பது வரலாற்றை அழிக்கும் செயல்: ஸ்டாலின் தாக்கு, செய்திப்பிரிவு, Published : 16 Aug 2017 03:07 PM, Last Updated : 16 Aug 2017 03:07 PM.

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/232482-.html

[8] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயல்அரசுக்கு ஸ்டாலின் கண்டனம், By Mayura Akilan Published: Wednesday, August 16, 2017, 17:58 [IST].

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-condemns-historic-tn-temples-fallinginto-decay-292962.html

ஸ்ரீநாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (1)

நவம்பர்6, 2022

ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், மானம்பாடி, கும்பகோணம் –  இடிக்கப் பட்டதும், மிஞ்சியதும், மற்றும் இப்பொழுதைய நிலையும் (1)

தமிழகத்தில் கோவில்களின் நிலை: தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது, ஆனால், பெரியாரிஸ-நாத்திக-திராவிடத்துவ அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பதால், திருப்திகரமாக அது நடப்பதாக இல்லை[1]. இந்திய தொல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்துறைகளும் கோவில்களின் பராமரிப்பு, மராமத்து, சரிபார்த்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது[2]. கோவில் சர்வே துறை என்று தனியாக இந்திய தொல்துறையில் உள்ளது. இவ்வாளவு இருந்தும், லட்சகணக்கான தமிழக கோவில்கள் முறையாக பராமரிக்கப் படாமல், இடிந்து விழும், இடிந்து விழுந்த, நிலைகளில் இருக்கின்றன. அவற்றில் இருந்த புராதன விலை மதிமற்ற விக்கிரங்கள், சிலைகள், சிற்பங்கள் முதலியனவும் மறைந்து வருகின்றன. பக்தர்கள், விவரங்கள் தெரிந்தவர், விழிப்புணர்வு கொண்டவர்கள் அவ்வப்பொழுது, புகார் கொடுப்பது, எச்சரித்தல் போன்றவற்றை செய்து வருகிறார்கள். இருப்பினும், சில வாரங்களில், மாதங்களில் மறக்கப் பட்டு விடும். பல சோழர் காலத்து கோவில்களைப் போல, மானம்பாடியில் உள்ள, சிவன் கோவிலுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி, முன்னேற்றம் போர்வையில் நடக்கும் வேலைகளில் சரித்திர புராதன  கட்டிடங்கள் இடிக்கப் படுதல், மறைந்து விடுதல்: உள்கட்டமைப்பு [infrastructure] மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி [infrastructure developmet] முன்னேற்றம் பெயரில், முதலில் அணைகள் கட்டுவது, பிறகு நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மற்றும் இப்பொழுது, நான்கு வழி, ஆறு வழி நெடுஞ்சாலைகள் ஓடுவது-விரிவாக்கம் என்ற ரீதியில், சாலைக்கு இருபுறங்களிலும் உள்ள பழங்கால மண்டபங்கள், கட்டிடங்கள் கோவில்கள் முதலியவை இடித்துத் தள்ளப் பட்டன, படுகின்றன. சரித்திர காலத்திற்கு முந்தைய [pre-historic], பழங்கற்கால [paleolithic], பெருங்கற்கால [megalithic], புதிய கற்கால [neolithic] சின்னங்கள் முற்ரிலுமாக மறைந்து வருகின்றன[3]. பொதுவாக, டென்டெர்-கான்ட்ரேக்டுகளில் அத்தகைய புராதன சின்னங்கள், கட்டிடங்கள் பாதிக்கப் படக் கூடாது, இடிக்கப் படக்கூடாது, அவ்வாறு பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டால், அவை இடம் பெயர்க்கப் பட்டு கட்டித் தரப்பட வேண்டும் என்றெல்லாம் சரத்துகள் போடப் படுகின்றன. ஆனால், பெயருக்கு, சில இடங்களில் எதையோ ஒப்புக்கு செய்து விட்டு பல இடங்களில் அவற்றை காணாமல் போக செய்து விடுகின்றனர். நாளடைவில் மக்களும் மறந்து விடுகின்றனர்.

விக்கிரவாண்டி தஞ்சாவூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொண்ட போது, கோவிலின் வடபகுதியும் இடிக்கும் நிலைக்கு ஆளானது: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, மானம்பாடி நாகநாத சுவாமி கோவில், சாலை விரிவாக்க பணிகளுக்காக, இடிக்கப்பட இருந்தது. இந்நிலையில், கோவிலை தமிழக தொல்லியல் துறை ஏற்பதற்கான, நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ஆறு மாத காலமாக, பக்தர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் நடத்திய போராட்டத்துக்கு, வெற்றி கிடைத்துள்ளது[4]. நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பனந்தாளை அடுத்த மானம்பாடி எனும் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில், ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில், திருப்பணி செய்யப்பட்டதாக, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், போதிய பராமரிப்பின்றி காணப்பட்டது. விக்கிரவாண்டி தஞ்சாவூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொண்ட போது, கோவிலின் வடபகுதியும் இடிக்கும் நிலைக்கு ஆளானது. இதுகுறித்து, தினமலர் நாளிதழி“ல் விரிவான கட்டுரைகள் வெளியாகின.

2013ல் தொல்துறை ஏற்கும் என்ற அறிவிப்பு: அதன் பின், சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கோவிலை இடிப்பது குறித்து, பொதுமக்களிடமிருந்து, கருத்து கேட்டது. அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, தொல்லியல் ஆர்வலர்களும், பொதுமக்களும், பக்தர்களும், கோவில் இடிப்புக்கு எதிராக, குரல் கொடுத்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தஞ்சாவூர் கலெக்டருக்கு மின்னஞ்சல் அனுப்பினர். பல்வேறு இந்து ஆன்மிக அமைப்புகள் போராட்டம் நடத்தின. இத்தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, சாலை விரிவாக்க திட்டம், மாற்றப்பட்டு வேறு பாதையில், செயல்படுத்தப்படும்’ என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது[5]. கோவில் இடிக்கப்படாது’ என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவாதம் அளித்தாலும், அக்கோவிலை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து வந்தது. இதைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, அக்கோவிலை தமிழக தொல்லியல் துறை ஏற்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அத்துறையின் அதிகாரிகள் கூறுகையில், ‘கூடிய விரைவில், அதற்கான பணி துவங்கும். தொல்லியல் துறை ஏற்பதன் மூலம், அதன் தொன்மை மாறாமல் பாதுகாக்கப்படும்’ என்றனர்.

2006ல் பொதுநல வழக்கு தொடர்ந்ததுயுனெஸ்கோ அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது: ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) பரிந்துரைகளின்படி, பாரம்பரிய கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR&CE) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[6]. ஆகஸ்ட் 2016ல் PIL மனு விசாரணைக்கு வந்தபோது, பூட்டான், இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு இயக்குநரும் யுனெஸ்கோ பிரதிநிதியும் எழுதிய கடிதத்தின் நகல், ஜூலை 15 தேதியிட்ட HR&CE ஆணையருக்கு அனுப்பப்பட்டது, அதில் கோவில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் உள்ளன. அது நீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டன[7]. தகவல்தொடர்பு படி, UNESCO நிறுவனம் HR&CE துறையால் முன்மொழியப்பட்ட பாதுகாப்பு கையேட்டைப் பரிசீலிப்பது கடினம் என்று கூறியது, ஏனெனில், பொதுவான தொழில்முறை புரிதலின் படி, அத்தகைய கையேட்டின் அடிப்படைக் கொள்கைகளை அது கவனிக்கத் தவறிவிட்டது. யுனெஸ்கோ அறநிலையத் துறையின் தற்போதைய நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவும், ஆகம சாஸ்திரத்தின் கொள்கை மற்றும் சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளை சமரசம் செய்யவும், அதன் மூலம் பாதுகாப்பு பயிற்சியாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது..

2017ல் யுனெஸ்கோ குழு ஆய்வு செய்தது: திருப்பணி என்ற பெயரில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள் சேதப்படுத்தப்படுவதாகவும், வர்ணங்கள் அழிக்கப்படுவதாகவும், Sand blast மூலம் சிற்பங்களின் தன்மை அழிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் சென்னை ஐகோர்ட்டில் 2006ல்  பொது நல வழக்கு தொடர்ந்தனர்[8]. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில்களில் நடைபெற்றுள்ள திருப்பணிகள் பாரம்பரிய முறைப்படி நடந்துள்ளதா? என்றும், கோவில்களின் சிற்பங்கள், பழங்காலத்து ஓவியங்கள், கல்வெட்டுகள் பாதிக்கப்பட் டுள்ளதா? என்று ஆய்வு செய்ய யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு) மற்றும் தொல்லியல் துறையும் இணைந்து அறநிலையத்துறையுடன் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தர விட்டது[9]. இந்த உத்தரவை தொடர்ந்து கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில், மேலக்காவேரி பிரம்மேஷ்டிபுர பகுதியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில், திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி நாகநாதர் கோவில் ஆகிய கோவில்களை யுனெஸ்கோ பிரதிநிதி தேவாசெயிக் ஜெயின், அவரது மாணவர் அபூர்வா மற்றும் தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் பகவான்சாரதி, திருச்சி தொல்லியல்துறை பராமரிப்பு அலுவலர் சங்கரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்[10].

வேதபிரகாஷ்

06-11-2022


[1]  திமுக மற்றும் அதிமுக மாறிமாறி ஆட்சி செய்தாலும், இந்து அறநிலைஅத் துறை பொறுத்த வரையில், ஊழலை ஒன்றும் செய்ய முடியாத இலை தான் ஏற்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் வழக்குகளில் சிக்குவது, கைதாவது, இறைக்குச் செல்வது என்றெல்லாம் இருந்தாலும்,வெளியே இருந்தாலும், இப்பிரச்சினையும் இருந்து கொண்டுதான் உள்ளது

[2]  இதில் 1960களிலிருந்தே ஊழல் இருந்துவௌவதாலும், நாத்திகம் எல்லா துறை அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவரையும் நோய் பொன்று பீடித்துள்ளது.

[3]  குவாரிகளால் இவை எல்லாமே அழிந்து வருகின்றன, பாறை கலைச் சின்னங்கள், ஓவியங்கள் எல்லாமும் மறைந்து விடுகின்றன. அகழாய்வு, தொல்லியல், தொல்துறை அதிக்ரிகள், விற்பனர்கள், முதலியோரும் கண்டுகொள்வதில்லை.

[4] தினமலர், மானம்பாடி நாகநாதசாமி கோவிலை தொல்லியல் துறை ஏற்கிறது : நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது வெற்றி, நமது நிருபர், Added : செப் 29, 2013  01:01

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=814841

[6] The Hindu, Go by UNESCO suggestions on temples, HC tells State, CHENNAI: AUGUST 25, 2016 00:00 IST; UPDATED: AUGUST 25, 2016 06:22 IST

[7] https://www.thehindu.com/news/cities/chennai/Go-by-UNESCO-suggestions-on-temples-HC-tells-State/article14588568.ece

[8] தினத்தந்தி, கோவில்களில் யுனெஸ்கோ மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு தினத்தந்தி மே 3, 2017, 4:15 am (Updated: மே 3, 2:59 am).

[9] https://www.dailythanthi.com/News/Districts/2017/05/03025944/The-temples-of-the-UNESCO-and-Archaeologists-in-the.vpf

[10] விகடன், அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!, இ.லோகேஷ்வரி, Published:12 Aug 2017 5 AMUpdated:12 Aug 2017 5 AM.