Posts Tagged ‘மடம்’

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை சுமார் 6000 ஏக்கர் நிலம்: துலுக்கர் சொந்தம் கொண்டாடுவது எப்படி? (1)

ஒக்ரோபர்29, 2020

திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை சுமார் 6000 ஏக்கர் நிலம்: துலுக்கர் சொந்தம் கொண்டாடுவது எப்படி? (1)

“சிவன் சொத்து, குலம் நாசம்,” – திராவிடத்தால் மறைந்தது: மடம்-கோவில் சொத்துக்களை, நிலங்களை இந்துமதம் அல்லாத துலுக்கர், கிருத்துவர் முதலியோர் ஆக்கிரமித்துக் கொண்டு, நளடைவில் தமதாக்கிக்கிக் கொள்ளும் நிலை, அதிர்ச்சியடையச் செய்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக, இந்துவிரோத, நாத்திக திராவிட ஆட்சியால், இவ்வாறு நடக்கிறது என்றால் மிகையாகாது. 1970ல் ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள், அதிகாரத்திற்கு வந்த சித்தாந்த அதிகாரிகள், ஊழியர்கள் தங்களை “இந்துக்கள்” அல்லது “சைவர்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டால் கூட, அவர்கள் தான் பலநிலைகளில், பலதுறைகளில் வேலைகளில் இருந்து கொண்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக, சட்டங்களை வளைத்து, தெய்வத்திற்குப் புறம்பான நியாயமற்ற-தர்மமற்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  என்னத்தான், “சிவன் சொத்து, குலம் நாசம்,” என்றெல்லாம் அறிந்திருந்தாலும், திராவிடத் தலைவர்களின் வெளிப்படையான, இந்து-சைவ விரோத காரியங்களினால், மடாதிபதிகளே, சிவனை மறந்து, சொத்துக்களுக்கு-பணத்திற்கு ஆசைப் பட்ட நிலயில், சாதாரண பக்தர்கள் என்னாவது. ஆகவே, பக்தர்கள் இல்லாத, இதுவிரோதிகளைப் பற்றி சொல்ல வேண்டியே அவசியமே இல்லையே? அதனால் தான், “சிவன் சொத்து,” கூறு போடப் படுகிறது.

24-10-2020 சனிக்கிழமை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆதின அதிகாரியைச் சந்தித்தது[1]: கடையநல்லூர் தொகுதி அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரையில் திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை சுமார் 6000 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு பரம்பரை பரம்பரையாக அடைவோலை தாரர்களாகவும், குத்தகைதாரர்களாகவும், விவசாயம் செய்தும் மற்றும் வீடுகள் அமைத்தும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆதீன மடத்தின் நிர்வாகம் விதித்த நியாயமான குத்தகைக்குண்டான வரித்தொகையை புன்செய்க்கு பணமாகவும், நன்செய்க்கு மகசூல் இடுபொருளாகவும் விவசாயிகள் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது, மடத்தின் நிர்வாகம் வரிதொகையை பலமடங்கு உயர்த்தி உள்ளதாகவும் அதனை முறைப்படுத்தி தருமாறு கடையநல்லூர் எம்.எல்.ஏ அபூபக்கரிடம் மனு அளித்தனர். இதனடிப்படையில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ 24-10-2020 சனிக்கிழமை பகல் 4 மணியளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு நேரில் சென்று தென்மண்டல மேலாளர் இராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முஸ்லிம் எம்.எல்.ஏ கூறியது: சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பின் முடிவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ கூறியதாவது:- “மேக்கரையில் உள்ள விவசாயிகள் அளித்த மனுவின் அடிப்படையில் திருவாடுதுறை ஆதீன மடத்தின் மேலாளரை நேரில் சந்தித்தேன். அன்போடு வரவேற்றார். விவசாயிகளின் கோரிக்கையான வரித்தொகை உயர்வை பரிசீலினை செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். பரம்பரையாக வாழும் விவசாய மக்களுக்கு சலுகை வழங்குவதாக கூறினார். மேலும் அவர்களின் வாரிசுகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கினால் புதிய வீடு, மின்சார இணைப்பு பெற தடை இல்லா சான்றிதழ் வழங்குவதாகவும் உறுதி அளித்தார். திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்கின்றனர். சமய நல்லிணத்திற்கு எடுத்து காட்டாக விளங்கும் மடத்திற்கும்,, நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்,” இவ்வாறு கூறினார். இச்சந்திப்பின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, தென் மண்டல முஸ்லிம் யூத் லீக் அமைப்பாளர் பாட்டப்பத்து எம்.கடாபி, செங்கோட்டை ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வாசுதேவன், மேக்கரை ஷாகுல் ஹமீது, ராஜா ஷெரிப், இ.யூ. முஸ்லிம் லீக் நெல்லை டவுன் பிரிமரி தலைவர் குலாம் மொய்தீன், பிரைமரி செயலாளர் கரிக்காதோப்பு சௌதுராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

முஸ்லிம்கள் எப்படி கோவில் நிலத்தைக் கேட்க முடியும்?- இந்த மோசடியில் எழும் கேள்விகள்: இப்படி துலுக்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள், திமுகவினர் என்று எல்லோரும், ஏதோ அவர்கள் பிரச்சினைப் போன்று, ஆதீன அலுவலத்திற்குச் சென்று பேச்சு வார்த்தைப் போன்ற மிரட்டல்களை விடுவதை கவனிக்க வேண்டும். ஏனெனில், இது ஏதோ எம்.எல்.ஏக்கு உண்டான பிரச்சினை போன்று ஜோடிக்கப் பட்டுள்ளது.

  1. மடத்திற்கு / கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு எப்படி முஸ்லிம்கள்/ துருக்கர்/ துலுக்கர் குத்தகைகாரர்களாக வர முடியும்?
  2. இந்துக்கள் குத்தகைகாரர்களாக இருந்தாலும், குத்தகை காலம் முடிந்தாலோ, குத்தகைக் காரர் இறந்தாலோ, சட்டப் படி அவ்வுரிமை போய் விடுகிறது.
  3. பரம்பரை பரம்பரையாக அடைவோலை தாரர்களாகவும், குத்தகைதாரர்களாகவும், விவசாயம் செய்தும் மற்றும் வீடுகள் அமைத்தும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதே சட்டவிரோதமானது.
  4. வீடுகள் அமைத்தும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது முழுவதுமான சட்டவிரோதம் மற்றும் குற்றமாகும்
  5. மேலும் அவர்களின் வாரிசுகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கினால் புதிய வீடு, மின்சார இணைப்பு பெற தடை இல்லா சான்றிதழ் வழங்குவதாகவும் உறுதி அளித்தார்..” என்று கூறுவது, சட்டத்தை வளைக்கும் வேலையாகும்.
  6. ஆகவே, கோவில் / மடம் இவற்றிற்கு எதிராக இவர்கள் செயல்படுகின்றனர் என்றாகிறது. அதில், துலுக்கர் நுழைவது மிகமோசமானது.
  7. மடத்திற்கு / கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இவ்வாறு மாற்றுவது, ஆதீனத்திற்கே கேவலமானது. இந்துக்கள் இவ்வாறு செய்வது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால், நடந்து வருகிறது.

மார்ச் 2020 – கட்டளைத் தம்பிரானாக இருந்த சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யப் பட்டார்: வெள்ளை வேட்டிகளின் பிடியில் ஆதீனம் இருப்பதாக, கட்டளைத் தம்பிரானாக இருந்த சுவாமிநாதன் கருத்துத் தெரிவித்தார்[2]. திருவாவடு ஆதினத்தின் நிலங்கள் சட்டத்திற்குப் புறம்பாக, குத்தகைக்கு விட்டவர்களுக்கு விற்பதாக, பட்டா பதவி செய்து கொள்வதாக, ஏகப் பட்ட புகார்கள் எழுந்துள்ளன. அத்தகைய வழக்குகள் நீதிமன்றங்களுக்கும் சென்றுள்ளன. இந்நிலையில், கருத்து சொன்ன சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யப் பட்டார்[3]. அவர் பேச்சுத் திறனற்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்பது தான், பதவி நீக்கம் செய்யப்பட காரணம் என்று சொல்லப் பட்டது, வியப்பாக இருந்தது. இதெல்லாமும் சரியில்லை. ஏற்கெனவே முன்பு, கொலை திட்டம் போட்ட விவகாரங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆகவே, முதலில் இவர்கள் ஆன்மீகத்தை விட்டு மற்ற விவகாரங்களில் ஈடுபடக் கூடாது. ஈடுபட வைப்பது, திராவிட அரசியல்வாதிகளின் தலையீடு, அவர்களைச் சார்ந்த கான்ராக்டர்களின் அடாவடித்தனம், கொள்ளையெடுக்கும் நோக்கம் முதலியன. இவற்றில் மடாதிபதிகள் ஒத்துழைப்பது தெய்வம் பொறுக்காது.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம் உள்ளது என்ற தம்பிரான் நீக்கம்[4]: திருவாவடுதுறை ஆதீனத்துக் குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் கட்டளைத் தம்பிரானாக கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சுவாமிநாத தம்பிரான், திருவாவடு துறை ஆதீனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதால், கடந்த 16-ம் தேதி செப்டம்பர் காசி யாத்திரை சென்றார். இந்நிலையில், சுவாமிநாத தம்பிரான் காசியில் இருந்து தொலைபேசி மூலம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது[5]: “ஆன்மிக பற்றால் நான் குடும்ப உறவைத் துறந்து திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்தேன். தம்பிரானாக நியமிக்கப்பட்டேன். மகாலிங்கசுவாமி கோயில் கட்டளை தம்பிரானாக இருந்து எந்த செயலையும் ஆதீன குருமகா சந்நிதானத்தின் உத்தரவு பெற்றுத்தான் முறையாக செய்தேன். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி செப்டம்பர் தலைமை மடத்துக்கு வர உத்தரவு வந்தது. அதன்படி, மடத்துக்குச் சென்றபோது, குருமகாசன்னி தானம் என்னை தம்பிரான் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக கூறினர். அதை குருவின் உத்தரவாக எண்ணி ஏற்றுக்கொண்டேன். அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, தம்பிரான் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தந்தேன். நான் ஆன்மிகம், ஆதீன சம்பிரதாயத்துக்கு புறம்பாக என்றும் நடந்து கொண்டதில்லை. என்னை விடுவித்த விதம் தான் சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. மடத்தில் உள்ள ஒருசிலவெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம்தான் அதற்கு காரணம். நான் மீண்டும் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் என்று கூறி உரிமை கோர மாட்டேன். யாருக்கும் எவ்வித அச்சமும் வேண்டாம். வெள்ளை உடையுடன் காசிக்கு வந்த நான் கங்கையில் புனிதநீராடி மீண்டும் காவி உடையை அணிந்து கொண்டேன். நான் தொடர்ந்து சந்நியாச வாழ்க்கையைத்தான் வாழ்வேன்.சுவாமிநாத பரதேசியாக பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்கிறேன். பரதேசி என்பவர் யாசித்து வாழ்பவர். யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல,” என்றார்.

© வேதபிரகாஷ்

28-10-2020


[1] மணிச்சுடர், திருவாடுதுறை ஆதீன மேலாளருடன் கே..எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல். சந்திப்பு, 27/28 அக்டோபர் 2020.

[2] விகடன், சூழ்நிலைக்கைதியாக ஆதீனகர்த்தர்சொத்துகளை அபகரிக்க முயற்சி, மு.இராகவன்பா; பிரசன்ன வெங்கடேஷ், Published: 28 Mar 2020 5 AM; Updated: 28 Mar 2020 5 AM.

[3] https://www.vikatan.com/spiritual/news/thiruvavaduthurai-adheenam-issue-april-01-2020

[4] இந்து.தமிழ், திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வெள்ளை வேட்டிகள் ஆதிக்கம்: காசி யாத்திரை சென்ற சுவாமிநாதன் தகவல், Published : 19 Sep 2019 10:13 AM; Last Updated : 19 Sep 2019 10:13 AM.

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/516268-swaminathan-interview-about-aathinam.html