Posts Tagged ‘சுற்றுலா’

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

செப்ரெம்பர்1, 2011

முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்!

 சட்டசபையில் வழக்கமாக நடக்கும் விவாதம்: திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், இதைப் பற்றி “மாற்றித்தான் யோசிப்பார்கள்”, ஏனெனில் அவர்களுக்கும் பங்கு வேண்டுமே என்ற எண்ணத்தில்தானெயொழிய, உண்மையில் ஆண்டவனுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்கள் பேசியுள்ள விதத்திலிருந்தே அதனை அறிந்து கொள்ளலாம். கோவில் நிலம் என்ரு ஆரம்பித்து, சுற்றுலா என்று சென்று, அதில் எப்படி சம்பாதிக்கலாம் என்ற எண்னத்துடன் தான் விவாதம் உள்ளதே  தவிர, கோவில் நிலங்களை மீட்டு, அவை எதற்காக பக்தர்களால் தானமாகக் கொடுக்கப்படது என்று பார்த்து அத்ற்கேற்ற முறையில் செயல்படவேண்டும் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லை எனலாம். “கடந்த ஆட்சியில் முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்[1].

சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த விவாதம்:

கோவிலிலிருந்து ஆரம்பித்து நீலகிரி சென்ற தேமுதிக உறுப்பினர்: உதாரணத்திற்கு தினமலரில் வந்துள்ளபடி, சிலருடைய பேச்சுகளை எடுத்துக் கொள்ளலாம்.

சம்பத்குமார் – தே.மு.தி.க: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மண்டலங்களாக பிரித்து, பக்தர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க பஸ் வசதி செய்ய வேண்டும். ஒரே நாளில் அப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்[2]. நீலகிரியில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்க்கவும், கேபிள் கார் வசதியும் செய்ய வேண்டும். நீலகிரியில் மலைரயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, நடுக்காட்டில் நின்று விடுகிறது. இதனால், வெளிநாட்டு பயணிகள், நம் தமிழகத்தின் நிலையை பற்றி தவறாக பேசுவர்[3].

அமைச்சர் கோகுல இந்திரா: மலை ரயில், மத்திய அரசின் ரயில்வே துறையால் இயக்கப்படுவது. எனினும், இதுபற்றி முதல்வரின் அனுமதியோடு, ரயிலை சீரமைக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்[4]. கேபிள் கார் வசதியை பொறுத்தவரை, அதற்கான முயற்சி அல்லது ஆய்வு செய்யும் போது, அவை வனப்பகுதியில் உள்ள இடங்களாக உள்ளன. அவற்றை கேட்டு மத்திய அரசிடம் அனுமதி பெற நீண்டகாலமாகிறது.

அன்னதானத்திலிருந்து திரைப்பட மான்யத்திற்கு சென்ற அதிமுக உறுப்பினர்: கிருஷ்ணமூர்த்தி – அ.தி.மு.க: இந்த சட்டசபையில், நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், 95 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, முயன்று முயன்று பார்த்தேன் சதம் போட முடியவில்லை என்றார். ஆனால், இன்று ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடிக்கு போட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள திட்டங்களை பார்த்து, இந்திய துணைக் கண்டமே மலைத்துப் போய் இருக்கிறது[5]. பெண்கள் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் படங்களுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்[6]. அன்னதான திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவோடு, புத்துணர்வுடன் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

கோவில் நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்: அதாவது, அப்படி ஆக்கிரமித்துக் கொண்டால், சில காலத்தில் அந்நிலத்தை சட்டப்படி அபேஸ் செய்துவிடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார். இதில் கம்யூனிஸ்ட்டுகள் மிகவும் வல்லவர்கள் தாம்.

உலகநாதன் – இந்திய கம்யூனிஸ்ட்: கோவில் நிலத்தில் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களது இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்[7]. கோவில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்ற பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது[8].

அமைச்சர் சண்முகநாதன்: யார் யார் எந்தெந்த இடத்தில் குடியிருக்கின்றனர் என்று கண்டறிந்து, அவற்றை வரன்முறை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

செஞ்சி கோதண்டராமர் கோவில் ஞாபகம் வரவில்லை[9] ஆனால் கோட்டையைப் பற்றி பேசும் தேதிமுக உறுப்பினர்: பாவம், தேதிமுக உறுப்பினர், அவரே பேசினாரா அல்லது வேறு யாராவது அவ்வாறு பேசச் சொன்னார்களா என்று தெரியவில்லை. முதலில் கோட்டையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அவர் விரட்டியடித்து நிலத்தை மீட்பாரா? இந்திய தொல்துறை அறிப்புப் பலகைகளையும் மதிக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனரே அது ஏன் அவருடைய கண்களுக்குத் தெரியவில்லை அல்லது யாரும் சொல்லவில்லை?

சுரேஷ் குமார் – தே.மு.தி.க: சாத்தனூர் அணை பராமரிப்பின்றி உள்ளது. செஞ்சிக்கோட்டைக்கு, மாநில அரசு மூலம் அடிப்படை வசதிகள் செய்து, அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் வகையில் மேம்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில், சுற்றுலா பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏலம் விடப்பட்டது. வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலித்ததால், சுற்றுலா பயணிகளுக்கும், குத்தகைக்காரர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், பயணிகள் வரவே தயங்கினர். நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் பணிகளில் வேகமில்லை.

அமைச்சர் சண்முகநாதன்: திருசெந்தூர் கோவிலில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா பணிகளை துவக்கினார். ஆனால், இதுவரை முடிக்காமல், கடந்த ஆட்சியில் இழுத்தடித்தனர். தற்போது பணிகளை துரிதப்படுத்தியதால், முடியும் நிலையில் உள்ளது. அனைத்து கோவில்களுக்கும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

குத்தகைப் பற்றியுள்ள வேகம், கோவில் ஆக்கிரமிப்பில் இல்லாதது தெரிகிறது: சுரேஷ் குமார்: எங்களது தொகுதியில் கோவில் நிலம் ஒன்று, தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவர் தனது சொந்த நிலம் போல, வணிக வளாகங்கள் கட்டி, கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். கோவில் கோபுரத்தை விட, அவரது கட்டடம் உயரமாக உள்ளது.

அமைச்சர் சண்முகநாதன்: கடந்த ஆட்சியில் கோவில் நிலங்கள் தவறான வழியில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அவற்றை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்[10]. சில நிலங்களின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.

“மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”: தமிழகத்து நாத்திக அமைச்சர் பகுத்தறிவோடு பேசியது, “மீண்டும் நான் வெற்றிபெற்றால் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.பி.சாமி மார்ச் மாதம் திருவொற்றியூர் பஸ்நிலையம், ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், திரு நகர், பாரதி நகர் மற்றும் வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருக்களில் தெருதெருவாக சென்று வாக்கு சேகரிக்கச் சென்றபோது வாக்களித்தார்[11]. ஆறு மாதங்கள் ஆகின்றன, அந்த பழமை வாய்ந்த திருவொற்றியூர் மக்கள் மற்ரும் தமிழக மக்கள், ஏன் இந்தியர்கள் இதை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்களா? செக்யூலரிஸத்துடன், “சர்ச்-மசூதி நிலங்களில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்குவேன்”, என்று பேசவில்லையே? ஆமாம், கோவில் நிலங்களில் கிருத்துவர்களும், முஸ்லீம்களே ஆக்கிரமித்துக் கொண்டு, வாங்கவும் செய்கிறார்களே?

திராவிடக் கட்சிகள் நாத்திகத்தைக் கடைப்பிடிப்பதால் கோவில் நிர்வாகம் செய்ய அவர்களுக்கு அருஜதை இல்லை: முதலில் இதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டே அல்லது இல்லாமலேயோ நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் பேசுபவர்கள் கோவில்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்பது கடந்த 60 ஆண்டு நாத்திக ஆட்சி தெள்ளத்தெளிவாக மெய்ப்பித்து விட்டது. ஆகவே, அவர்கள், உடனடியாக விலகி நிற்க்க வேண்டும், இல்லையென்றால் இருக்கின்ற  கோவில்களும் உருப்படாமல் போய் விடும். திருமூலர் சொன்னது நடந்து விடும்.

திராவிட கட்சிகள் பலவழிகளில் கோவில் நிலங்களைக் கொள்ளையடித்து வருகின்றன.

  1. இந்து அறநிலையத்துறைக்குப் பிறகு குடிசை மாற்றுவாரியம் மூலம்[12] கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் நாத்திக அரசு!
  1. இப்பொழுதுள்ள ஆட்சியிலும் கொள்ளை தொடர்கிறது[13]. அதன் மர்மங்களை யார் விலக்குவார்கள் / விளக்குவார்கள்?
  1. மிரட்டப்படும் மடாதிபதிகள் – அதன் மூலம் அவர்களது / மடங்களது நிலம் அபகரிக்கப் படுவது[14].
  1. இந்து அறநிலையத் துறையே கோவில் நிலங்களைக் கொள்ளையடிப்பது[15].
  1. அறநிலைய மந்திரி ஒத்துப் போவது[16].

இப்படி அடுக்குக் கொண்டு போகலாம். அவர்கள் மாறா விட்டால் மக்கள் மாற்ற வேண்டும், மக்களும் அவர்களோடு ஒத்துழைத்தல் மக்களைத்தான் மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் தம்மையே மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், மாலிக்காபூர்,-ஔரங்கசீப் போன்று இவர்களே இருக்கின்ற கோவில்களை இடித்து விடலாம், ஒரேயடியாக பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

வேதபிரகாஷ்

01-09-2011


[1] தினமலர், முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=304950

[2] அதாவது “பிக்னிக்” ஏற்பாடு செய்ய பேசுகிறாரே தவிர, கோவிலைப் பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. அப்படி செய்தால், கோவில்கள் எப்பொழுதுமே திறந்து வைத்திருப்பார்களா அல்லது அதே மாதிரி ஆகம முறைகளை மீறி செயல்படுவர்களா?

[3] கோவில்களை சீரழிக்கின்றனரே, அதைப் பற்றி வெளிநாட்டவர் கவலைப் படமாட்டார்கல் போலும். கோவில் சிலைகளை, விக்கிரங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க்கின்ரனரே, அதற்கு தமிழர்கள் வெட்கப்படவில்லையே?

[4] ஆமாம், இதுவும் தூக்குத் தண்டனை விவாதம் போல ஆகிவிட்டது.

[5] நக்கல் அடிக்கிறாரா இல்லை பெருமை பேசுகிறாரா என்று தெரியவில்லை, அம்மாவிற்குத் தெரிந்தால், அதோகதிதான்!

[6] அதென்ன அப்படி “பெண்கள் முன்னேற்றத்தை”ப் பற்றி இப்படி கவலை படுகிறார் என்று தெரியவில்லை. சினிமா எடுப்பதினால், பல பெண்களின் கற்பு தான் விலைபோகிறது, சமுதாயம் சீரழிகிறது. அதைத் தெரிந்தும் தெரியாதது போல பேசியுள்ளது வேடிக்கைத்தான்! ஒருவேளை, இவரே படங்களை எடுப்பார் போலும்!

[7] சேர-சோழ-பாண்டியர்கள் எல்கோரையும் வென்று விடுவார்கள் இவர்கள். அயல்நாட்டு சித்தாந்த்தை வைத்துக் கொண்டு செயல்படும், இவர்களது தாய்ப்பாற்றே வினோதமானது தான். ஆகையால் தான் இப்படி தாறுமாறாக பேசுகிறார் போலும்!

[8] அதாவது அவ்வாறு செய்யாதே, அவர்களுக்கே பட்டா போட்டுக் கொடுத்து விடு என்கிறார், தாராளப் பிரபு!

[9] https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/

https://atheismtemples.wordpress.com/2011/08/21/gingee-temple-liberated-duties-of-hindus/

http://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-https://atheismtemples.wordpress.com/2010/02/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

http://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A/

[10] இவர் என்ன செய்யப்போகிறார் என்று ஒன்றும் சொல்லவில்லை. தலையாட்டி அமைச்சர்கள் இப்படியிருந்தால், என்ன வேலை நடக்கும்?

[15] திராவிட ஆட்சியில் அவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை – “இந்து” அறநிலைத்துறையே அத்தகைய அநியாயத்தைச் செய்துள்ளது: இதோ இங்கு படிக்கவும்:

http://vedaprakash.indiainteracts.in/2008/08/27/tenants-of-mutt-and-temple-lands-seek-ownership-rights-the-tn-government-scam-to-grab-the-temple-lands/

இவ்வாறு விற்பது, சங்கம் உருவாக்குவது, கோர்ட்டுக்குச் செல்வது, இடைக்காலத் தடை வாங்குவது, காலம் கடத்துவது, அதற்குள் கட்டிடங்கள் கட்டி அனுபவிப்பது….இருக்கும் அதிகார வர்க்கமெல்லாம் நாத்திகவாதிகள்தாமே? எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை!